என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • இந்த ஆண்டு நவராத்திரி விழா 26-ந்தேதி தொடங்குகிறது.
    • 27-ந்தேதி முதல் 5 -ந்தேதி வரை ஸ்ரீ சக்கரத்திற்கு நவ ஆபரண பூஜை நடைபெறும்.

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

    நவராத்திரி விழாவினை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படும். அதேபோன்று கோவில் வளாகத்தில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் உற்சவர் காமாட்சி அம்மன் மாலை நேரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    நவராத்திரி மண்டபத்தில் தினந்தோறும் மாலையில் சிறப்பு இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது. பாட்டு, மாண்டலின், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை, சிறப்பு தவில், நாதஸ்வரம் போன்ற கச்சேரிகள் புகழ்பெற்ற இன்னிசை கலைஞர்களால் நாள்தோறும் நடைபெறுகிறது.

    வருகிற 26-ந்தேதி தொடங்க உள்ள நவராத்திரி விழாவில் 27-ந்தேதி முதல் 5 -ந்தேதி வரை தினந்தோறும் காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ சக்கரத்திற்கு நவ ஆபரண பூஜை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெறும்.

    அந்த நேரத்தில் கோவில் கருவறை மூடப்பட்டிருக்கும். பின்னர் ஒரு மணிக்கு கோவில் நடை திறந்து நவாபரண பூஜையின் சிறப்பு பிரசாதமான சங்கு தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படும். இது மிகவும் சக்தி வாய்ந்த பிரசாதம் ஆகும்.

    • நெல்லூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கடந்த 2021-ம் ஆண்டு, ராஜாமோகனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா்.
    • சிங்கப்பூரில் இருந்து, விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

    ஆலந்தூர்:

    ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் ராஜா மோகன் (35). இவர் மீது கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இவருடைய மனைவி, நெல்லூா் மகளிர் போலீஸ் நிலையத்தில், வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தார்.

    இதையடுத்து நெல்லூர் மகளிர் போலீசார், ராஜாமோகன் மீது வரதட்சணை கொடுமை பிரிவில் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். ஆனால் இவர் போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தாா்.

    நெல்லூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கடந்த 2021-ம் ஆண்டு, ராஜாமோகனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா்.

    இந்தநிலையில், சிங்கப்பூரில் இருந்து, விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

    அப்போது ராஜாமோகன் வந்திருப்பதும் அவர் தேடப்படும் குற்றவாளி என்றும் தெரிய வந்தது. இதையடுத்து ராஜா மோகனை கைது செய்து நெல்லூா் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

    நெல்லூா் மகளிர் போலீஸ் தனிப்படையினா், ராஜாமோகனை அழைத்து செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    • ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த என்ஜினியரான வாசுதேவன்.
    • வாசுதேவன் மோட்டார் சைக்கிளில் அவ்வழியே சென்றபோது நிலை தடுமாறு மழைநீர் கால்வாய் தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் மோட்டார் சைக்கிளோடு தலைகுப்புற விழுந்தார்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், கக்கன் நகர் மெயின் ரோடு, சிட்டி லிங்க் ரோடு ஆகிய சாலைகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த என்ஜினியரான வாசுதேவன்(33) என்பவரது வீட்டின் அருகேயும் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. குடியிருப்புகள் அதிகம் உள்ள அப்பகுதியில் போதுமான தடுப்புகள் அமைக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் என்ஜினீயர் வாசுதேவன் மோட்டார் சைக்கிளில் அவ்வழியே சென்றபோது நிலை தடுமாறு மழைநீர் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் மோட்டார் சைக்கிளோடு தலைகுப்புற விழுந்தார்.

    இதில் அதில் இருந்த இரும்பு கம்பிகள் வாசுதேவனின் கை தோள்பட்டை மற்றும் வலது தொடையில் குத்தியதில் படுகாயம் அடைந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அவருக்கு 35 தையல்கள் போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 9 அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.
    • மதுக்கடைகள் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுபாட்டில் வாங்க வந்த குடிமகன்கள் திண்டாடினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 9 அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதில் செவிலிமேடு ஜெம் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடைக்கு நேற்று இரவு வாலிபர்கள் சிலர் வந்தனர். அவர்கள் மதுபாட்டில்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டனர்.

    இதனை கடையின் விற்பனையாளர்கள் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பீர் பாட்டிலால் விற்பனையாளர்கள் தேவராஜ் மற்றும் முனுசாமி ஆகியோர்ரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த தேவராஜ், முனுசாமி ஆகிய இருவரும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மதுக்கடை விற்பனையாளர்கள் தாக்கப்பட்டது பற்றி அறிந்ததும் காஞ்சிபுரம் நகரில் இயங்கி வரும் 3 மதுக்கடைகள், செவிலிமேடு பகுதியில் 3 மதுக்கடைகள், கலியனூர், வேடல், வையாவூர், உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 3 கடைகள் என மொத்தம் 9 டாஸ்மாக் கடைகளும் உடனடியாக மூடப்பட்டது.

    மதுக்கடை விற்பனையாளர்களை தாக்கியவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    மதுக்கடைகள் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுபாட்டில் வாங்க வந்த குடிமகன்கள் திண்டாடினர்.

    இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, அரசு மதுபான கடையில் வேலை செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே மதுக்கடை ஊழியர்களை தாக்கியதாக காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்த சுமன், பிரதாப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • மக்கள் தினந்தோறும் இரவு நேரங்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
    • விமான நிலையத்துக்காக பசுமையான எங்கள் கிராமத்தை அழிக்க வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் என்ற இடத்தில் அமைப்பதற்கான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    விமான நிலையத்திற்கு பரந்தூர் அருகே ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து 13 கிராமங்களில் நிலம் எடுப்பதாக தகவல் பரவியது. அதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தினந்தோறும் இரவு நேரங்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

    53வது நாளான இன்று 600க்கும் மேற்பட்ட மக்கள் ஏகனாபுரம் பகுதியில் விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது .

    இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாநில விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஏகனாபுரம் கிராமத்தை நோக்கி வந்த பொழுது செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சுங்கசாவடி அருகே கைது செய்யப்பட்டு பெருநகர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

    இருந்தாலும் இந்த உண்ணாவிரதத்தை அமைதியான முறையில் வழிநடத்தி செல்ல இந்த மக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து இந்த கிராம மக்கள் கூறுகையில், பசுமையான எங்கள் கிராமத்தை அழிக்க வேண்டாம். குடியிருப்பு பகுதிகளையும், விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் எடுக்கக் கூடாது. அதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் ஒரு குழு அமைத்து எங்களிடம் கருத்து கேட்டு 80 சதவீத மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நிலம் எடுக்க அரசு முன்வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் விமான நிலையம் அமைவதற்கு எங்கள் கிராமத்தை தேர்வு செய்யாமல் மாற்று இடத்தை அரசு முன்வந்து தேர்வு செய்ய வேண்டும், என வேண்டுகோள் விடுத்தனர்.

    • தொல்பொருள் ஆய்வுத்துறை ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை மூலம் உப்பு படிமங்களை அகற்றி வருகிறது.
    • கோவில் சிற்பங்களில் உள்ள உப்பு படிமங்களை அகற்ற காகித கூழுடன் சிலிகன் பாலிமர் ரசாயன கலவை கலந்து பூசப்பட உள்ளது.

    மாமல்லபுரம்:

    சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் நகரம், சர்வதேச அளவில் தலைசிறந்த சுற்றுலா மையமாக திகழ்கிறது. இங்கு பல்லவ மன்னர்களின் கலைத்திறனால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது. மேலும் மாமல்லபுரம் என்றதும் அனைவருடைய நினைவுக்கும் வருவது அங்குள்ள புகழ்பெற்ற கடற்கரை கோவில் ஆகும்.

    யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னமாக இந்த கடற்கரை கோவில் திகழ்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது ராட்சத அலை தாக்கியும் இந்த கோவிலுக்கு சிறு சேதாரம் கூட ஏற்படவில்லை. இந்த கோவிலை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரித்து வருகிறது.

    25 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் 3 புறமும் கடல் உட்புகும் நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கோவிலை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் பாறாங்கற்கள் கொட்டப்பட்டு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. அந்த கற்கள் கடல் உட்புகாமல் கோவிலை பாதுகாத்து வருகின்றன. கடற்கரையில் இந்த கோவில் அமைந்திருப்பதால் உப்பு காற்றால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடற்கரையில் பலத்த காற்று வீசுவதால் காற்றின் மூலம் உப்புத்துகள்கள் கோவில் முழுவதும் பரவி கோவிலை அரிக்கிறது. உப்பு அரித்த இடங்களில் சிறு சிறு துளைகள் ஏற்பட்டு மழை நீர் மற்றும் அசுத்தங்கள் சேர்ந்து பாதிப்பு அதிகரிக்கிறது. அதேபோல் காக்கை, குருவி எச்சங்கள் மூலமும் பாதிக்கப்படுகிறது.

    இதை தவிர்க்க தொல்பொருள் ஆய்வுத்துறை ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை மூலம் உப்பு படிமங்களை அகற்றி வருகிறது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் வேதியியல் பிரிவு வல்லுனர்கள் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். தற்போது முதல் கட்டமாக சுத்தமான நீரில் ரசாயன கலவை கலக்கப்பட்டு அந்த நீரால் உப்பு படிமங்கள் படிந்துள்ள கடற்கரை கோவில் சிற்பம் மீது பீய்ச்சி அடிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கோவில் சிற்பங்களில் உள்ள உப்பு படிமங்களை அகற்ற காகித கூழுடன் சிலிகன் பாலிமர் ரசாயன கலவை கலந்து பூசப்பட உள்ளது.

    உப்பு படிமங்கள் படிந்திருக்கும் தன்மையை பொறுத்து அதிகபட்சமாக 15 நாட்கள் வரை இந்த கலவை பூசப்பட்டு உப்பு படிமங்கள் அகற்றும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசாயன கலவை கலந்த நீரால் இந்த கோவிலில் படிந்துள்ள உப்பு துகள்களை அகற்றும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

    • தேவாலயத்தில் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு உண்டியலை பெயர்த்து எடுத்துச்சென்றவர்களை தேடி வருகின்றார்.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தில் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அந்த உண்டியலை மர்ம நபர்கள் பெயர்த்து திருடி சென்று விட்டனர். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு உண்டியலை பெயர்த்து எடுத்துச்சென்றவர்களை தேடி வருகின்றார்.

    இந்த தேவாலயத்தின் திருவிழா கடந்த வாரம் முடிவுற்றது. 2 மாதமாக இந்த உண்டியல் திறக்கப்படவில்லை என்று தேவாலய பாதிரியார் நேவிஸ் ராயர் தெரிவித்தார். மேலும் இதில் எந்த அளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை திருவிழா நடந்து முடிந்திருப்பதால் கண்டிப்பாக அதிக அளவில் பணம் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கு முன்பும் இந்த தேவாலயத்தில் இதே போன்ற சம்பவம் 2 முறை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் மனைப்பிரிவு, கட்டிடம் மற்றும் நில உபயோக மாற்றம் குறித்த அனுமதி.
    • நிலப்பயன் மாற்றம் மற்றும் திட்ட அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம்:

    நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லை வரம்பிற்குள் அமையும் காஞ்சிபுரம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் மனைப்பிரிவு, கட்டிடம் மற்றும் நில உபயோக மாற்றம் குறித்த அனுமதி பெறும் வகையில் இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது. எனவே, இத்திட்டத்தின் கீழ் மனைப்பிரிவு கட்டிடம் மற்றும் நிலப்பயன் மாற்றம் அனுமதி பெறுபவர்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பம் பதிவு செய்து கட்டிட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் நிலப்பயன் மாற்றம் மற்றும் திட்ட அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    காஞ்சிபுரம்:

    வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கி செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான முகாம் நாளை (18-ந் தேதி) மற்றும் 25-ந் தேதியில் நடைபெற உள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • உத்திரமேரூரில் இருந்து அகரம்தூளி கிராமம் வரை செல்லும் அரசு பஸ் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படுகிறது.
    • வேடபாளையம் கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்து பஸ் படிக்கட்டில் தொங்கியவர்களை தாக்கியுள்ளனர்.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து அகரம்தூளி கிராமம் வரை செல்லும் அரசு பஸ் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் தினந்தோறும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். தற்போது இந்த கிராமங்களுக்கிடையே இந்த அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. நேற்று மாலை 5 மணியளவில் உத்திரமேரூரில் இருந்து புறப்பட்ட பஸ் அகரம்தூளி நோக்கி சென்று கொண்டிருந்தது. வேடபாளையம் கிராமம் அருகே சென்றபோது வேடபாளையம் கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்து பஸ் படிக்கட்டில் தொங்கியவர்களை தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது.

    தகவலறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இதனால் அந்த வழித்தடத்தில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த கடலூரைச் சேர்ந்த முருகன்.
    • ரூ.25 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள 580 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த கடலூரைச் சேர்ந்த முருகன் (வயது 36) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவரது பேண்டில் அணிந்து இருந்த பெல்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.25 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள 580 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    அதுபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில் கேட்பாரற்று கிடந்த பார்சலில் தங்கம் இருந்ததை கண்டனர். ரூ.9 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 220 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.35 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டுமானபணி கட்டிடத்தில் தேங்கியிருக்கும் தண்ணீர் மற்றும் கட்டுமான பொருள்களில் டெங்கு நோய் பரப்பும் கொசுகள் இருப்பது தெரியவந்தது.
    • 3 கட்டிடங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர் மண்டல சுகாதார அதிகாரி சுதா தலைமையில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஆலந்தூர் ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மணப்பாக்கம், முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதில் ஆலந்தூர், ஆதம்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய பகுதகளில் புதிதாக நடைபெறும் கட்டுமானபணி கட்டிடத்தில் தேங்கியிருக்கும் தண்ணீர் மற்றும் கட்டுமான பொருள்களில் டெங்கு நோய் பரப்பும் கொசுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 கட்டிடங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ×