என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது
    X

    வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது

    • நெல்லூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கடந்த 2021-ம் ஆண்டு, ராஜாமோகனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா்.
    • சிங்கப்பூரில் இருந்து, விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

    ஆலந்தூர்:

    ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் ராஜா மோகன் (35). இவர் மீது கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இவருடைய மனைவி, நெல்லூா் மகளிர் போலீஸ் நிலையத்தில், வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தார்.

    இதையடுத்து நெல்லூர் மகளிர் போலீசார், ராஜாமோகன் மீது வரதட்சணை கொடுமை பிரிவில் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். ஆனால் இவர் போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தாா்.

    நெல்லூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கடந்த 2021-ம் ஆண்டு, ராஜாமோகனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா்.

    இந்தநிலையில், சிங்கப்பூரில் இருந்து, விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

    அப்போது ராஜாமோகன் வந்திருப்பதும் அவர் தேடப்படும் குற்றவாளி என்றும் தெரிய வந்தது. இதையடுத்து ராஜா மோகனை கைது செய்து நெல்லூா் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

    நெல்லூா் மகளிர் போலீஸ் தனிப்படையினா், ராஜாமோகனை அழைத்து செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    Next Story
    ×