என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 920575 முதல் தவணையும், 736058 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    • கொரோணா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 920575 முதல் தவணையும், 736058 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸால் BA4, BA5 strain மூலம் மக்களுக்கு கொரோணா காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் தமிழக முதல்வரின் ஆணையின்படி, இன்று 12 ம் தேதி சிறப்பு மாபெரும் ஒருநாள் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

    இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 2118 நடமாடும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோணா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மின்மாற்றி அருகே குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து அலரியடித்துக் கொண்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
    • தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்னயங்குளம் பகுதியில் மின்மாற்றியில் பிற்பகலில் லேசான பழுது ஏற்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக மின் மாற்றியில் தீ பொறி ஏற்பட்டுள்ளது அப்போது பொதுமக்கள் மின்சாரதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் ஆனால் மின்சாரதுறை அதிகாரிகள் யாரும் இந்த சம்பவம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    காஞ்சிபுரம் சின்னயங்குளம் பகுதியில் உள்ள மின்மாற்றி தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது. மின்மாற்றி அருகே குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து அலரியடித்துக் கொண்டு வெளியேறி ஓட்டம்பிடித்தனர்.

    உடனே காஞ்சிபுரம் தீயணைப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியபடுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த 5 தீயனைப்புதுறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினர். மின்சாரதுறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இந்த விபத்திற்கான காரணம் என இப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • நிலம் விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து செல்வத்திற்கும், ராஜ்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனைவி கண்முன்பே கணவரை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது பெயரில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் முன் தொகை பெற்றுள்ளார்.

    மேலும் நிலம் விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து செல்வத்திற்கும், ராஜ்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு செல்வம் தனது மனைவியுடன் நந்தம்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்து ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கோதண்டன், சந்திரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து செல்வத்தை அவரது மனைவியின் கண்முன்னே கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

    இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றமான விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் சத்தியமூர்த்தி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.இளங்கோவன் செல்வத்தை கொலை செய்த ராஜ்குமார் கோதண்டன், சந்திரன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • மனிதகுரங்கு குட்டி தனது தாயுடன் சேர்ந்து செய்யும் சேட்டை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    • ஆதித்யா குட்டியை, தாய் குரங்கு எப்போதும் தன்னுடனே வைத்து கவனித்து வருகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளுக்கு பிறகு பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.

    பூங்காவில் உள்ள மனித குரங்கு ஜோடியான கொம்பி-கவுரிக்கு கடந்த ஆண்டு குட்டி பிறந்தது. இதற்கு பூங்கா ஊழியர்கள் ஆதித்யா என்று பெயர் வைத்து உள்ளனர்.

    இந்த மனிதகுரங்கு குட்டி தனது தாயுடன் சேர்ந்து செய்யும் சேட்டை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆதித்யா குட்டியை, தாய் குரங்கு எப்போதும் தன்னுடனே வைத்து கவனித்து வருகிறது.

    இந்த நிலையில் ஆதித்யா மனிதகுரங்கு குட்டிக்கு நேற்று முதல் பிறந்த நாள் ஆகும். இதனை பூங்கா ஊழியர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.

    மனித குரங்கு உள்ள இருப்பிடம் அருகே பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா மற்றும் ஊழியர்கள், பார்வையாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். அந்த கேக்கில் " முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதித்யா..." என்று எழுதப்பட்டு இருந்தது.

    பின்னர் மனிகுரங்கு குடும்பத்துக்கு ஆதித்யாவின் பிறந்த நாள் பரிசாக அதற்கு பிடித்தமான உலர் பழங்கள் நிறைந்த கேக் கொடுக்கப்பட்டது.

    அந்த கேக்கை ஆதித்யா குட்டியுடன் சேர்ந்து மனித குரங்குகள் ருசித்து சாப்பிட்டன. இந்த வீடியோ காட்சியை வண்டலூர் பூங்கா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.

    • குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
    • கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (11-ந் தேதி) அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் வட்டத்தில் தென்னேரி, திருப்பெரும்புதூர் வட்டத்தில் கொளத்தூர், குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் முகவரி மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும்.

    மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிகுறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

    முகாம் நடைபெறும் இடங்களில், கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணிமங்கலம் அருகே உள்ள கரசங்கால் பகுதியில் வசிப்பவர் பால் (வயது 84).ஓய்வு பெற்ற விஞ்ஞானி.
    • ஓய்வு பெற்ற விஞ்ஞானி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மணிமங்கலம் அருகே உள்ள கரசங்கால் பகுதியில் வசிப்பவர் பால் (வயது 84).ஓய்வு பெற்ற விஞ்ஞானி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 2மகள்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் பால், தனது வீட்டில் இருந்த 100 பவுன் தங்க நகை, மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் வீட்டில் உள்ள பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை.

    இதுகுறித்து அவர் மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். நகை கொள்ளை போன வீட்டில் விலை உயர்ந்த 2நாய்கள் காவலுக்கு உள்ளன. மேலும் வீட்டின் கதவு, பீரோ உடைக்க படவில்லை என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறும்போது, பால் குடும்பத்தாரிடம் முதல் கட்டமாக விசாரணையை தொடங்கி உள்ளோம் என்றனர். ஓய்வு பெற்ற விஞ்ஞானி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செம்பரம்பாக்கம் ஏரியை பொருத்தவரையில் முழு கொள்ளளவை எட்டும் அளவுக்கு மேல் நீர் சேமிக்கப்படுவதில்லை.
    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது 7 ஆயிரத்து 900 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், 3 ஆயிரத்து 291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1,018 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 132 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3 ஆயிரத்து 76 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் 439 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 120 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

    இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 115 மில்லியன் கன அடி மட்டும் இருப்பு உள்ளது.

    இதில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 460 கன அடி வீதம் நீா் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் மொத்தம் 22 அடி நீர் உள்ளது. மாநகரின் குடிநீர் தேவைக்காக 180 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தினசரி 23 மில்லியன் கன அடி உயர்ந்து வருகிறது. தொடர்ந்து 40 நாட்கள் இதே அளவு நீர் வந்தால் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது.

    தற்போது 85 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியை பொருத்தவரையில் முழு கொள்ளளவை எட்டும் அளவுக்கு மேல் நீர் சேமிக்கப்படுவதில்லை.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது 7 ஆயிரத்து 900 மில்லியன் கன அடி (7.9 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் 6 ஆயிரத்து 959 மில்லியன் கன அடி (6.9 டி.எம்.சி.) நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது என்று பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும் என கலெக்டர் ஆர்த்தி கூறினார்.
    • தொழில் முனைவோர்களுக்கு அதிக கடன்களை கொடுத்து மாவட்டத்தில் அதிகமான வேலை வாய்ப்பை பெருக்க உதவ வேண்டும். மேலும் கடன் வழங்கும் பரிசீலனை முறைகளை எளிதாக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வங்கிகளின் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார்.

    முகாமில் விவசாயம், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர் கடனாக 5,353 பயனாளிகளுக்கு ரூ.344.53 கோடி கடனுதவிகளையும், வங்கிகளுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்கிகள் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும்.

    தொழில் முனைவோர் களுக்கு அதிக கடன்களை கொடுத்து மாவட் டத்தில் அதிகமான வேலை வாய்ப்பை பெருக்க உதவ வேண்டும். மேலும் கடன் வழங்கும் பரிசீலனை முறைகளை எளிதாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பரிசோதனையில் மேற்கொண்டதில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவர்கள் வீடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

    அங்குள்ள மொத்தம் 235 மாணவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவர்கள் வீடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து துணைப்பதிவாளர் கூறியதாவது:-

    கொரோனா பரவலால் ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும்வரை பயிற்சி நிறுவனம் மூடப்படும்.

    விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் விடுதியை உடனே காலி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வரும் 13-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்பு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-அமைச்சர் தினந்தோறும் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
    • லேசான தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் உரிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

    இங்குள்ள சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் இந்த மையத்தில் படிக்கும் 235 மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்தனர்.

    இதில் 2 மாணவர்களுக்கு முதலில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்கிடையே மேலும் 29 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தனியார் மற்றும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 மாணவர்கள் அந்த மைய வளாகத்திலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மாணவர்களின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

    அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மருத்துவ வல்லுனர்கள் கூறுகையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு தற்போது உள்ள உருமாறிய வைரசால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்று தெரிவித்து உள்ளனர்.

    தற்போது தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பிற மாநில மாணவர்கள் என்பதும் குறிப்பாக கேரளா பகுதிகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு இந்த தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே நாம் கடைபிடித்த முகக்கவசம், தனிமனித இடைவெளி, கூட்டங்களை தவிர்த்தல் உள்ளிட்ட நடைமுறைகளை தொடர்ச்சியாக கடைபி டித்தால் ஆரோக்கியமான உடல் நலம் காக்கப்படும்.

    முதல்-அமைச்சர் தினந்தோறும் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

    தற்போது முற்றிலும் கொரோனாவை தமிழ்நாட்டில் இருந்து முடிவுக்கு கொண்டு வரும் நேரத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. கொரோனாவை முடிவுக்கு கொண்டு வந்து கரை ஒதுங்கும் நேரத்தில் தமிழக மக்கள் கவனக் குறைவாக இருந்து மூழ்கும் நிலைக்கு போகக் கூடாது.

    மேலும் பொதுமக்கள் லேசான தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் உரிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் பிரிய ராஜ் உடன் இருந்தனர்.

    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் தேவையை மனுவாக அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்தல், சிறு தொழில் செய்ய விரும்பும் முனைவோர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 பஞ்சாயத்துக்களில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துக்களில் சிறப்பு முகாம் இன்று (7-ந் தேதி) நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம் சிறுகாவேரிப்பாக்கம், கோனேரிக்குப்பம், ஆசூர், தாமல், திம்மசமுத்திரம், அத்திவாக்கம், ஏனாத்தூர், வாரணவாசி, இலுப்பப்பட்டு, பழையசீவரம், ஐமச்சேரி, கட்டவாக்கம், கொட்டவாக்கம், முத்தியால்பேட்டை, அரும்புலியூர், திருவானைக்கோவில், பெருநகர், காரனை, ஒழையூர், சாலவாக்கம், சிறுதாமூர், கம்மாளம்பூண்டி, ராவத்தநல்லூர், மொளச்சூர், பிச்சிவாக்கம், சந்தவேலூர், கிளாய், மேல்மதுரமங்கலம், செங்காடு, துளசாபுரம், வெங்காடு, கொளத்தூர், வரதராஜபுரம், ஐயப்பந்தாங்கல், கோவூர், ஆதனூர், கெருகம்பாக்கம் ஆகிய பஞ்சாயத்துக்களில் நடைபெறுகிறது.

    முகாமில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் தேவையை மனுவாக அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பட்டா மாறுதல், சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்குதல், பி.எம்.கிசான் கடன் அட்டை (கே.சி.சி.) விண்ணப்பம் பெறுதல், பயிர் காப்பீடு பதிவுகள் மேற்கொள்ளுதல், பயிர் கடன் விண்ணப்பம் பெறுதல், நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்தல், சிறு தொழில் செய்ய விரும்பும் முனைவோர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 987 ரொக்கமாக கிடைத்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் புகழ் பெற்ற ஆதிகாமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் நிரம்பின.

    இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் முன்னிலையில் கோவிலில் உள்ள 5 உண்டியல்கள் திறக்கப்பட்டது.

    கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 987 ரொக்கமாக கிடைத்தது. மேலும் 50 கிராம் தங்கம், 85 கிராம் வெள்ளியும் இருந்தது. இந்த தகவலை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஸ்ரீதர் தெரிவித்து உள்ளார்.

    ×