என் மலர்
காஞ்சிபுரம்
- திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.
- வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாளின் பிறந்த நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.
திருவடிகோவில் புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் வரதராஜ பெருமாள் நிற பட்டு உடுத்தி,தங்ககாசு மாலை, திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, பஞ்ச வர்ண மலர் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி சன்னதி தெருவில் வீதியுலா வந்து, திருவடி கோவிலுக்கு எழுந்தருளி பின்னர் திருக்கோவிலுக்கு திரும்பினார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
- தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- இந்திய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உணவு பாதுகாப்பு துறையில் மனித வளம் மற்றும் நிறுவனங்களை பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவு பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, 2021-2022- ம் ஆண்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட சரியான உணவு சாப்பிடும் சவால் எனும் போட்டியில் இந்தியா முழுவதும் 150 மாவட்டங்கள் பங்கேற்றன. 75 மாவட்டங்கள் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்றுள்ள 75 மாவட்டங்களில் காஞ்சீபுரம் 5-வது மாவட்டமாக சிறந்த செயல்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளது. இவ்விருதினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
- நீர் பிடிப்பு பகுதி மற்றும் நீர் தேக்க பகுதி ஆழப்படுத்தப்படும்.
- வெள்ள தடுப்பு, வறட்சி தடுப்பு, பல்லுயிர் இனப்பெருக்கம் போன்றவற்றிற்கு வழி வகுக்கும்.
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லம் வடிகால் பகுதியில் உள்ள காரணிபேட்டை ஏரி மற்றும் பெரியதாங்கல் ஏரியை அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ஏரி தூர் வாரி புனரமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை மூலம் ரூ.16 லட்சம் மதிப்பில் நடைபெறும் புனரமைப்பு பணிகளால் ஏரிகள் தூர் வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு, வரத்து வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்படும்.
நீர் பிடிப்பு பகுதி மற்றும் நீர் தேக்க பகுதி ஆழப்படுத்தப்படும். இதனால் நீர்த்தேக்கம் அதிகரிக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
மேலும் வெள்ள தடுப்பு, வறட்சி தடுப்பு, பல்லுயிர் இனப்பெருக்கம் போன்றவற்றிற்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் அருண், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சீனிவாசன், பவானி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- ஓரிக்கை துணை மின் நிலையத்தில் வருகிற 18-ந்தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
காஞ்சிபுரம்:
ஓரிக்கை துணை மின் நிலையத்தில் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள் காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்னகாஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் காஞ்சிபுரம்/வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.
- சதீஷ் தனது புதிய மோட்டார் சைக்கிளை, புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அடகு நகை கட்டிடம் முன்பு நிறுத்தி இருந்தார்.
- கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது விலை உயர்ந்த புதிய மோட்டார் சைக்கிளை, புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அடகு நகை கட்டிடம் முன்பு நிறுத்தி விட்டு முதல் மாடிக்கு சென்றார்.
பின்னர் கீழே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. கல்பாக்கம் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
- கந்துவட்டி வசூல் செய்பவர்ள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.
காஞ்சிபுரம்:
கந்துவட்டி புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இது போன்று கந்துவட்டி வசூல் செய்பவர்ள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மாணவர் சேர்க்கை அதிகரித்திட பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு, தினசரி சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரித்திட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் காலனி அருகில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக பள்ளியில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார். அப்போது மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு முதல் பருவ புத்தகங்களை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி, மாணவர்களுக்கான உதவித்தொகை, இலவச உபகரணங்கள், பாட புத்தகங்கள் அனைத்தும் வழங்கி பாதுகாப்பாக மாணவர்கள் இருந்து வரும் சூழ்நிலையில், இதனை பொதுமக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு செய்து அரசு பள்ளிகளில்
மாணவர் சேர்க்கை அதிகரித்திட பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், அரசு சார்பில் மாணவர் களுக்கு வழங்கப்படும் இலவச உபகரணங்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு, தினசரி சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரித்திட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் Animal Handler and Animal Handler cum Driver பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது.
- இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:
இணையதளங்களில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல் பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் Animal Handler and Animal Handler cum Driver பணியிடங்களுக்கு சம்பளம் முறையே ரூ.15,000/- மற்றும் ரூ.18,000/- எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் அதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் புலனம் (Whatsapp) செயலி மற்றும் முகநூல் மூலம் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானவை.
இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்
- கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற தகுதி உள்ளவர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான "கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது.
இந்த விருதுடன் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் ஒரு பதக்கமும் வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற தகுதி உள்ளவர்.
2022 ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள் விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ 30.6.2022-க்கு முன்பாக வரவேற்கப்படுகிறது.
மேலும் உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கோவூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
- கஞ்சா விற்பனை கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து மாங்காடு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் கோவூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோவில் இருந்த கோவூரை சேர்ந்த மணி, சிலம்பரசன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் உள்ள கஞ்சா விற்பனை கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதிய வகை கொரோனா வைரஸால் மக்களுக்கு கொரோனா காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 2,118 நடமாடும் முகாம்கள் நடத்தப்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. 2,118 நடமாடும் முகாம்கள் இதற்காக அமைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 20 ஆயிரத்து 575 பேருக்கு முதல் தவணையும், 7 லட்சத்து 36 ஆயிரத்து 58 பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸால் மக்களுக்கு கொரோனா காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 2,118 நடமாடும் முகாம்கள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாகன ஓட்டிகளின் கோரிக்கை குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உடனடியாக காவல்துறையினர் மூலம் பழுதான சாலையை சீரமைக்க உத்தரவிட்டார்.
- வாகன ஓட்டிகளின் கோரிக்கையை அறிந்து உடனடியாக சாலையை சீரமைக்க பிறந்த மாவட்ட காவல் துறைக்கு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும், மக்களும் நன்றி தெரிவித்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றங்கரை மேம்பாலம் அருகே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி வாகன விபத்தில் சிக்கி காயம் அடைந்து அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும்மாவட்ட நிர்வாகமோ, மாவட்ட காவல் துறையோ, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் சேதமான சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும்கோரிக்கை விடுத்தனர்.
வாகன ஓட்டிகளின் கோரிக்கை குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உடனடியாக காவல்துறையினர் மூலம் பழுதான சாலையை சீரமைக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து ஜேசிபி உதவியுடன் காவல் துறையினர் விரைந்து வந்து பழுதான சாலையை தற்காலிக சீரமைத்து தந்தனர்.
வாகன ஓட்டிகளின் கோரிக்கையை அறிந்து உடனடியாக சாலையை சீரமைக்க பிறந்த மாவட்ட காவல் துறைக்கு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும், மக்களும் நன்றி தெரிவித்தனர்.






