search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கபடி போட்டியை பார்க்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி
    X

    கபடி போட்டியை பார்க்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

    • மவுலிவாக்கத்தில் நடைபெற்ற கபடி போட்டியை பார்ப்பதற்காக மாணவன் ரித்திக் சென்றான்.
    • மாணவன் உயிரிழப்பு குறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் ரித்திக் (வயது 15), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் கபடி போட்டி நடந்து கொண்டிருந்தது. அதனை பார்க்க ரித்திக் சென்றான்.

    அப்போது அங்கு இருந்த மின்சாரவயரின் மீது எதிர்பாராதவிதமாக கை பட்டதில் மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தான். இதை பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் ரித்திக்கை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரித்திக் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×