என் மலர்
ஈரோடு


டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் குமரன்கோவில் வீதியை சேர்ந்தவர் ரவி. இவர் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி தமிழ் அமுது (வயது 15) என்ற மகளும், தமிழ்வாணன் என்ற மகனும் உள்ளனர். தமிழ் அமுது அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்த வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழ் அமுது வீட்டில் இருந்த மாத்திரையை எடுத்து சாப்பிட்டார். இது குறித்து மாணவியிடம் அவரது தந்தை ரவி கேட்டார். அப்போது எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் மாத்திரை சாப்பிட்டதாக கூறினார். இதை தொடர்ந்து தமிழ் அமுது பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீரென வீட்டின் பின்புறம் ஓடிச்சென்று அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அவர் அலறி துடித்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை ரவி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இதில் தமிழ் அமுது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். தமிழ் அமுதுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் டி.என்.பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கோபி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ் அமுது பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் மூலம் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் பெரும்பாலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் போடப்பட்டு வருகிறது. இது தவிர 18 கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று, இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.
மாவட்டத்தில் மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 5 ஆயிரத்து 936 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 88.77 சதவீதமாகும்.
இதேப்போல் கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 11 லட்சத்து 76 ஆயிரத்து 538 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 65.03 சதவீதமாகும்.
முதல் மற்றும் இரண்டாம் தவணைத் தடுப்பூசியை மொத்தம் இதுவரை 27 லட்சத்து 82 ஆயிரத்து 474 பேர் செலுத்திக்கொண்டு உள்ளனர். மாவட்டத்தில் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 3 ஆயிரத்து 164 பேர் செலுத்தி கொள்ளவில்லை. அதைப்போல் இரண்டாம் தவணை தடுப்பூசியை இன்னும் 2 லட்சத்து 98 ஆயிரத்து 382 பேர் செலுத்தி கொள்ளவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள், போலீசார் பலர் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இத்துடன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றும் சேர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி முதல் கொரோனா தினசரி மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 613 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகர் பகுதியில் மட்டும் 300 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் போலீஸ்காரர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டருக்கு கடந்த சில தினங்களாக சளி தொந்தரவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதேப் போல் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டருக்கு திடீரென சளி தொந்தரவு ஏற்பட்டது. இதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கடம்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர், முதல் நிலை காவலர், பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் ஏட்டு, என 3 பேருக்கும் சளி காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவர்கள் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் 3 பேரும் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கருமாண்டி செல்லி பாளையம் பேரூராட்சி ஊழியர்கள் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்தனர்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போலீசார் அனைவரும் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளதால் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. லேசான அறிகுறிதான் ஏற்பட்டது உள்ளது.






