என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வாய்க்காலில் குளித்த மாற்றுத்திறனாளி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் குளித்த போது தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பிணமாக மீட்கப்பட்டார்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் குளித்த போது தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பிணமாக மீட்கப்பட்டார்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பிள்ளையார் கோவில்வீதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52). மாற்றுத்திறனாளி. இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். 

    ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அக்கம் பக்கம் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று சோழம்மாதேவி கரை தடப்பள்ளி வாய்க்காலில் ஒருவர் இறந்து கிடப்பதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் காசிபாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பதும், அவர் வாய்க்காலில் இறங்கி குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×