என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசியை இன்னும் 2 லட்சத்து 98 ஆயிரத்து 382 பேர் செலுத்தி கொள்ளவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் மூலம் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் பெரும்பாலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் போடப்பட்டு வருகிறது. இது தவிர 18 கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று, இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.
மாவட்டத்தில் மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 5 ஆயிரத்து 936 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 88.77 சதவீதமாகும்.
இதேப்போல் கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 11 லட்சத்து 76 ஆயிரத்து 538 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 65.03 சதவீதமாகும்.
முதல் மற்றும் இரண்டாம் தவணைத் தடுப்பூசியை மொத்தம் இதுவரை 27 லட்சத்து 82 ஆயிரத்து 474 பேர் செலுத்திக்கொண்டு உள்ளனர். மாவட்டத்தில் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 3 ஆயிரத்து 164 பேர் செலுத்தி கொள்ளவில்லை. அதைப்போல் இரண்டாம் தவணை தடுப்பூசியை இன்னும் 2 லட்சத்து 98 ஆயிரத்து 382 பேர் செலுத்தி கொள்ளவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் மூலம் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் பெரும்பாலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் போடப்பட்டு வருகிறது. இது தவிர 18 கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று, இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.
மாவட்டத்தில் மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 5 ஆயிரத்து 936 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 88.77 சதவீதமாகும்.
இதேப்போல் கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 11 லட்சத்து 76 ஆயிரத்து 538 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 65.03 சதவீதமாகும்.
முதல் மற்றும் இரண்டாம் தவணைத் தடுப்பூசியை மொத்தம் இதுவரை 27 லட்சத்து 82 ஆயிரத்து 474 பேர் செலுத்திக்கொண்டு உள்ளனர். மாவட்டத்தில் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 3 ஆயிரத்து 164 பேர் செலுத்தி கொள்ளவில்லை. அதைப்போல் இரண்டாம் தவணை தடுப்பூசியை இன்னும் 2 லட்சத்து 98 ஆயிரத்து 382 பேர் செலுத்தி கொள்ளவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story






