என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் கைதான ஆறுமுகம் என்கிற ராஜா.
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோபி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோபி:
கோபி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கரூர் மாவட்டம் பெருக்கிபாளையம் அடுத்த ஏலூரை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற ராஜா (வயது 44).
இவர் கடந்த வருடம் கோபியில் உள்ள திருமண மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடியுள்ளார். இதைப்போல் கோபி மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று உள்ளார்.
கோபியில் உள்ள ஒரு வீட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த பணத்தையும் திருடியுள்ளார்.
இவ்வாறாக கோபி போலீஸ் நிலையத்தில் மட்டும் 3 வழக்குகளும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கோபி போலீசார் ஆறுமுகம் என்கிற ராஜாவை கைது செய்து கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருவதால் இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் நேற்று இரவு ஆறுமுகம் என்கிற ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.
இதனையடுத்து போலீசார் இதற்கான உத்தரவு நகலை கோபி போலீசாரிடம் வழங்கினர்.
Next Story






