search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டல் வேலாயுதசாமி கோவில் நடை சாத்தப்பட்டு உள்ளதால் வெளியே நின்று பொதுமக்கள் சாமிதரிசனம் செய்தனர்.
    X
    திண்டல் வேலாயுதசாமி கோவில் நடை சாத்தப்பட்டு உள்ளதால் வெளியே நின்று பொதுமக்கள் சாமிதரிசனம் செய்தனர்.

    ஈரோட்டில் தைப்பூசவிழா பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடந்தது

    ஈரோட்டில் இன்று தைப்பூச விழா எளிமையான முறையில் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று தைப்பூச விழா எளிமையான முறையில் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

    சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூசவிழா கட்டுப்பாடுகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த-து. இதையொட்டி தைப்பூச விழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி முருகனுக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    கோவிலில் இன்று நடக்க வேண்டிய தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தைப்பூசத்திருவிழா சென்னிமலை நகரில் உள்ள கிழக்குராஜாவீதி கைலாசநாதர்கோவிலில் நேற்று இரவு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 

    தைப்பூச நாளான இன்று அதிகாலை 4 மணி அளவில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெற்றது. 

    அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமானுக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கைலாசநாதர் கோவிலில் உள்பிரகாரத்தில் சாமிஉலா நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

    ஈரோடு அடுத்த திண்டல்மலை வேலாயுதசாமி கோவிலில் தைப்பூசவிழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் வழக்கம் போல் இன்று காலை முருகனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனைதிரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். 

    ஆனால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோவில் நுழைவுவாயில் அடைக்கப்பட்டு அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு கோட்டை முத்துகுமாரசாமி மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    ஆனால் திண்டல்மலை முருகன் கோவிலுக்கு இன்று அதிகாலை ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் நடைபாதையாக  வந்தனர். அவர்கள் கோவில் அடைக்கப்பட்டு இருந்ததால்  அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நின்று கற்பூரம் ஏற்றி சாமிதரிசனம் செய்தனர். மேலும் கோவில் மலை அடிவாரம் படிகாட்டுகளில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். 

    காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்ற முருக பக்தர்கள்.

    மேலும் பலர் பால்குடம் எடுத்து வந்தனர்.   கோபி அருகே உள்ள பச்சமலை, பவளமலை முருகன் கோவில், பார்க் ரோடு முருகன் கோவில், கருங்கல்பாளையம் சுப்பிரமணியசாமி கோவில், ஈரோடு காசிபாளையம் மலைமலேசிய முருகன் கோவில், கோட்டை முத்துகுமாரசாமி கோவில், முனிசிபல் பாலமுருகன் கோவில், பவானி பழனியாண்டவர் கோவில் உள்பட அனைத்து  முருகன் கோவில்களிலும் இன்று காலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

    Next Story
    ×