என் மலர்tooltip icon

    ஈரோடு

    தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் விடு முறை விடப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட் டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர்.

    கோபி:-

    தமிழ்புத்தாண்டு, புனிதவெள்ளி, சனிக்கிழமைமற்றும்ஞாயிற்றுக்கிழமைஎனதொடர்ந்து 4 நாட்கள்விடுமுறை  விடப்பட்டது. இதையொட்டிஈரோடுமாவட்டத்தில்உள்ளசுற்றுலாதலங்களில்மக்கள்குவிந்தனர்.

    ஈரோடுமாவட்டத்தில்சுற்றுலாதலங்களில்மிகமுக்கியமானதுகொடிவேரிஅணை.  கோபிசெட்டிபாளையம்மற்றும்அதன்சுற்றுவட்டாரபகுதிகளில்பசுமைநிறைந்துகாணப்படுவதாலும், கொடிவேரிஅணையில்நீர்அருவிபோல்கொட்டுவதாலும், தமிழகத்தில்பல்வேறுபகுதிகளிலிருந்துவரும்சுற்றுலாபயனிகள்இயற்கைகாட்சிகளைரசிப்பதுடன்அணையில்தங்கள்குடும்பத்துடன்குளித்துமகிழ்ந்துசெல்வதுவழக்கம்.

    இந்தநிலையில்கொடிவேரிதடுப்பணைக்குஈரோடுமாவட்டபொதுமக்கள்மட்டுமின்றிதிருப்பூர், கோவை, கரூர், நாமக்கல்சேலம்உள்படதமிழகத்தின்பல்வேறுமாவட்டங்களில்இருந்தும்கடந்த 4 நாட்களாக  ஆயிரக்கணக்கானசுற்றுலாபயணிகள்வந்துகுவிந்தனர்.

    மேலும்  அணைக்குவந்தசுற்றுலாபயனிகள்அருவிபோல்கொட்டும்தண்ணீரில்குளித்து  மகிழ்ந்தனர். மேலும்பலர்செல்பிஎடுத்துகொண்டனர். மேலும்பலர்தங்கள்குழந்தைகள்மற்றும்குடும்பத்துடன்வந்துநீராடியும், பரிசல்பயணம்மேற்கொண்டனர்.

    நேற்றுஞாயிற்றுக்கிழமைஎன்பதால்வழக்கத்தைவிடஅதிகமானசுற்றுலாபயணிகள்அணைக்குவந்துகுளித்துமகிழ்ந்தனர். இதனால்அணைபகுதியில்மக்கள்கூட்டம்அலைமோதியது.

    பொதுமக்கள்தங்கள்கொண்டுவந்தஉணவுவகைகளைஅங்கேகுடும்பத்துடன்அமர்ந்துசாப்பிட்டனர். தொடர்ந்துஅணைபகுதியில்விற்கப்படும்பொறித்தமீன்வகைகள், தின்பண்டங்கள்ஆகியவற்றை  சுற்றுலாபயணிகள்வாங்கிஉண்டும்மகிழ்ந்தனர்.

    இதனால்கடந்த 4 நாட்களில்மட்டும் 33 ஆயிரத்து 300 பேர்அணைக்குவந்திருந்தனர். இதன்மூலம்ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 525 வசூலானதாகஅதிகாரிகள்தெரிவித்தனர்.

    இதேபோல்பவானிசாகர்பூங்காவுக்குதொடர்விடுமுறைகாரணமாககடந்த 4 நாட்களாகஏராளமானசுற்றுலாபயணிகள்வந்துகண்டுகளித்தனர். நேற்றுமுன்தினம்மற்றும்நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான  மக்கள்வந்திருந்தனர்.

    அவர்கள்பூங்காவில்குடும்பத்துடன்ஊஞ்சல்விளையாடிமகிழ்ந்தனர். மேலும்சிறுவர்மற்றும்சிறுமிகள்சறுக்குவிளையாடினர்.

    தொடர்ந்துபொதுமக்கள்அணைபகுதிக்குவந்துஅங்குகொட்டும்தண்ணீரைகண்டுகளித்தனர். இதனால்பவானிசாகர்பகுதியில்மக்கள்கூட்டம்அலைமோதியது.

    மேலும்பவானிகூடுதுறையிலும்கடந்த 4 நாட்களாகஏராளமானபொதுமக்கள்மற்றும்பக்தர்கள்வந்துஆற்றில்புனிதநீராடி  சங்கமேஸ்வரரைவழிபட்டனர்.

    அதேபோல்ஈரோடு, ..சி. பூங்கா, கொடிமுடி  உள்படமாவட்டத்தில்உள்ளசுற்றுலாதலங்களில்பொது  மக்கள்குவிந்தனர்.

    பலத்த மழை காரணமாக ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் பகுதியில் பழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதேநேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    ஈரோடு மாநகரில் நேற்று இரவு 7 மணி அளவில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு 11 மணி வரை மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் பஸ் நிலையம், மணிக்கூண்டு, பன்னீர் செல்வம் பார்க், கருங்கல்பாளையம், வெண்டிபாளையம், வீரப்பன்சத்திரம் உள்பட நகரின் பல பகுதிகளில் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    பலத்த மழை காரணமாக ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் பகுதியில் பழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் மழை வெள்ளத்தை வெளியேற்றினார். பலத்த மழை காரணமாக காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது.

    இதனால் இன்று காலை காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களும் அவதி அடைந்தனர்.

    இதேபோல் சத்தியமங்கலம், பண்ணாரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

    மேலும் கவுந்தப்பாடி, சலங்கபாளையம், அய்யம் பாளையம், பொம்மம்பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நேற்று இரவு 9 மணிக்கு திடீரென இடி- மின்னலுடன் பலத்த சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து பலத்த மழை கொட்டியது.

    இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டே இருந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் ரோட்டோரங்களில் நிறுத்தப்பட்டன. மழை இரவு 12 மணி வரை சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் விவசாய நிலங்கள் பசுமையாக காணப்பட்டன.

    அந்தியூர், பர்கூர் மற்றும் தட்டக்கரை, தாமரைக்கரை உள்பட மலை பகுதிகளிலும் இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் மலை பகுதிகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மொடக்குறிச்சி, அவல்பூந்துறை மற்றும் பல பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    அம்மாபேட்டை, நெரிஞ்சி பேட்டை, சித்தார் பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் 12 மணி வரை பரவலாக மழை பெய்தது.

    தாளவாடி, கேர்மாளம் மற்றும் திங்களூர் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. திங்களூர், காடட்டி, பேடர் பாளையம், மந்தைதொட்டி, சிக்கநந்தி மலைகிராமங்களில் இடி- மின்னலுடன் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது

    இந்த மழையால் பேடர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளப்பா என்பவரின் 2 கன்று குட்டிகள் மின்னல் தாக்கி பலியானது.

    பவானி, சித்தோடு, ஆப்பகூடல், பெருந்துறை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-27, கொடுமுடி-4.8, பெருந்துறை-20, பவானி-56, கோபி-25, சத்தியமங்கலம்-7, நம்பியூர்-9, சென்னிமலை-21, மொடக்குறிச்சி-38, கவுந்தப்பாடி-41.4, எலந்தகுட்டை-8.2, அம்மாபேட்டை-44, கொடிவேரி-5, குண்டேரிபள்ளம்-15.2. மாவட்டம் முழுவதும் 321.6 மி.மீட்டர் மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
    சென்னிமலை அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் அடுத்த பாலப் பாளையம், திட்டுகாடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (78).

    இவர் தனது தோடத்து ஆட்டுபட்டியில் செம்மறி ஆடுகள் உள்பட 45 ஆடுகள் வளர்த்து வருகிறார். 

    இதற்காக பட்டியை சுற்றி முள்வேலி அமைத்து உள் ளார். இரவு வழக்கம் போல் பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் அதிகாலை பட்டிக்கு சென்று பார்த்த போது மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    மேலும் 5 ஆடுகளை கடித்து குதறியதில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது. காயம் அடைந்த ஆடுகளுக்கு ஈங்கூர், அரசு கால்நடை மருத்துவ மனை மருத்துவர் அருண் சிகிச்சை அளித்தார்.

    இது குறித்து வனத்துறை, கால்நடை துறை, வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். 

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ஆடுகள் நாய்கள் கடித்து இறந்ததா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றனர்.
    தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் மீன்களின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் மீன்களின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது.

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது.

    கடல் மீன்கள் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் மீன்களின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது.

    கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் மீன்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.

    ஈரோட்டில் தினமும்  80 டன் மீன்கள் வரத்து ஆகி வந்தது. தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்கள் வரத்து குறைந்துவிட்டது. இதனால் இன்று 30 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி உள்ளது.

    இன்று காலை முதலே ஸ்டோனி பாலம் மீன் மார்க் கெட்டில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. 

    மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால் விலையும் எகிறியுள்ளது. வஞ்சரம் மீன் போனவாரம் கிலோ ரூ.800-க்கு விற்பனையானது. இந்த வாரம் மேலும் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.900 முதல் ரூ.950 வரை விற்பனையானது.

    இன்று விற்கப்பட்ட மீன்கள் விலை கிலோவில் வருமாறு: உளி-ரூ.450, வஞ்சரம்-ரூ.900 முதல் ரூ.950, வாவல்-ரூ.500, அயிலை-ரூ.180, சங்கரா-ரூ.350, ராட்டு-ரூ.150, மத்தி-ரூ.450, தேங்காய் பாறை-ரூ.350, டுயானா-ரூ.300, நண்டு-ரூ.350, நெத்திலி-ரூ.250.

    இதேபோல் ஈரோடு காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் இன்று குறைந்த அளவில் மீன்கள் வர ஆகியிருந்தன. ஆனால் காலை முதலே மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    மீன்கள் விலை உயர்ந்தாலும் இன்று விற்பனை விறுவிறுப்பாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    ஈரோடு:

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி இன்று ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.முக. சார்பில் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சுதந்திரபோராட்ட மாவீரர் தீரன் சின்னமலை 266-வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் கொரோனா மற்றும் தேர்தல் விதிமுறைகள் காரணமாக இந்த நிகழ்வில் பங்கு பெற இயலவில்லை.

    இந்த ஆண்டு கொரோனோ வைரஸ் தொற்று இருந்தாலும், அரசு இன்று கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கியுள்ளது.

    அதன் காரணமாக இன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்ன மலைக்கு புரட்சித்தலைவி அம்மா அமைத்த ஓடாநிலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
    ஈரோடு:

    ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளினை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

    ஈஸ்டர் பண்டியை முன்னிட்டு கடந்த மாதம் 2&ந் தேதி முதல் கிறிஸ்த வர்கள் 40 நாட்கள் தவக்காலம் (உபவாசம்) கடைபிடித்தனர்.

    கடந்த 10-ந் தேதி குருத்தோலை ஞாயிறும், 14-ந் தேதி பெரிய வியாழனும், 15-ந் தேதி புனித வெள்ளியையொட்டி சிலுவை வழிபாடு நடந்தது.

    இந்நிலையில் ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையை யொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில் ஈரோடு புனித அமல அன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு ஒளி வழிபாடும், திருமுழுக்கு (ஞானஸ்நானம்) புதுப்பித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

    முன்னதாக ஏசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிர் தெழும் காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டது.

    ஈஸ்டர் பண்டிகையொட்டி புனித அமல அன்னை ஆலய பங்குதந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான்சேவியர் குழந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. 

    இதேபோல், சி.எஸ்.ஐ. தேவாலயம், ஈரோடு ரெயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயத்திலும், பி.பெ.அக்ரஹாரம் லூர்து மாதா ஆலயத்திலும், பெரியசேமூர் செபஸ்தியார் ஆலயத்திலும் ஈஸ்டர் பண்டிகையொட்டி இன்று அதிகாலை வரை சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

    மேலும், கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
    தீ விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு அடங்கி துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் பெருந்துறையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு வழங்கினர்
    பெருந்துறை:

    தீ விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு அடங்கி துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் பெருந்துறையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு வழங்கினர்

    தமிழகம் முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பாக தீ தொண்டு நாள் வார விழா ஏப்ரல் 14-ந் தேதி  முதல் 20-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    1944 வருடம் ஏப்ரல் 14 அன்று விக்டோரியா துறைமுகத்தில் நின்ற போர்ட் சிட்னி என்ற வெடிமருந்து கப்பலில் இருந்த வெடிமருந்துகள் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டபோது,

    தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களில் 66 தீயணைப்பு வீரர்களும் மற்றும் ஏராளமான பொதுமக்களும் தங்களுடைய உயிர்களை இழந்தனர்.

    இந்த சோக நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14-ந் தேதி இந்தியா முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீ தொண்டு நாளாக அனுசரித்து வருகின்றனர்.

    இது போன்ற தீ விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    இதையொட்டி பெருந்துறை தீயணைப்பு நிலையத்தின் சார்பாக நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பெருந்துறையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது எப்படி, தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வுகளை பொது மக்களுக்கு அதிகாரிகள் எடுத்து கூறினர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலில் கடந்த 2020 வருடம் மார்ச் 22-ந் தேதி தாய்லாந்து நாட்டில் இருந்து வந்திருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர்கள் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    அதில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வந்தது. இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 2-ம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத் தியது. தினசரி பாதிப்பு அதிக பட்சமாக 1,764 வரை பதிவாகியது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் சிலர் சிகிச்சை பலனின்றி இறந் தனர். இதன் பின் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக 2&ம் அலை கட்டுக்குள் வரத் தொடங்கியது.

    இதனால் மாவட்டத்தில் பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மாவட்டத்தில் 3-ம் அலை உருவாக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

    தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டதால் 3&ம் அலையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு லேசான அறிகுறியே இருந்ததால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று குணமடைந்தார். 3-ம் அலையில் தினசரி பாதிப்பு 1,400 வரை பதிவாகி இருந்தது.

    பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக 3-ம் அலை பாதிப்பு குறைய தொடங் கியது. இந்நிலையில் மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி ஒற்றை இலக்கில் பதிவாகி வந்தது.
     
    கடந்த 2-ந்  தேதி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினார்.  

    இதனால் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார். 

    இந்நிலையில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்குப் பிறகு நேற்று ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளனர்.  சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
    பவானி தேவபுரம் கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    பவானி:

    பவானி தேவபுரம் கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    பவானி தேவபுரம் கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

    விழாவையொட்டி ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம் தலைமையில் திரு விளக்கு பூஜை நடைபெற்றது.  இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் 100&க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.

    திருவிளக்கு பூஜைக்கு தேவையான எண்ணை, மஞ்சள், குங்குமம், திரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கோவில் சார்பில் வழங்கப்பட்டது. 

    பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் குத்து விளக்கு, தட்டு, டம்ளர் போன்றவற்றை கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டனர்.

    இது குறித்து அந்த பகுதி பக்தர்கள் கூறும் போது, நோய் நொடியின்றி ஆரோக் கியத்துடன் வாழலாம், திருமண தடை நீங்கும்.

    குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்புகள் மற்றும் இயற்கை வளங்கள் செழித்து விளங்கவும் இந்த திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது என்றனர்.
    நசியனூர் அடுத்த வேட்டுவபாளையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அப்புசாமி என்பவர் தோட்டத்தில் நிலக்கடலை விதைப்பண்ணை அமைத்துள்ளார். இந்த பண்ணையை ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னச்சாமி ஆய்வு செய்தார்.
    நசியனூர் அடுத்த வேட்டுவபாளையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அப்புசாமி என்பவர் தோட்டத்தில் நிலக்கடலை விதைப்பண்ணை அமைத்துள்ளார். இந்த பண்ணையை ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னச்சாமி ஆய்வு செய்தார்.

    ஈரோடு அருகே உள்ள நசியனூர் அடுத்த வேட்டுவபாளையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அப்புசாமி என்பவர் தோட்டத்தில் நிலக்கடலை விதைப்பண்ணை அமைத்துள்ளார். இந்த பண்ணையை ஈரோடு மாவட்ட வேளாண் மை இணை இயக்குநர் சி.சின்னச்சாமி ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது: இந்த பகுதியில் நிலக் கடலை கதிரி லெப் பாக்சி (மு.1812) என்ற ரக ஆதார நிலை விதைப் பண்ணை 2 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.

    நிலக்கடலை விதைப்பு, விதை உருளை மூலம் செய்யப்பட்டது. சொட்டு நீர்ப் பாசன முறையில் நீர்ப் பாசனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    மேலும் இந்த தோட்டத்தில் வேளாண்மை துறையால் பரிந்துரைக்கப்பட்ட உரங்கள் இடப்பட்டன. வழக்கமாக நிலக்கடலை செடியில் 30-40 காய்கள் இருக்கும்.

    இந்த விதைப்பண்ணையில் செடிக்கு 100-120 காய்கள் வரை உள்ளது. களைகளை கட்டுப்படுத்த களைகளை நீக்கும் கருவி, ஜிப்சம் வயலில் இட்டு மண் அணைக்க சிறிய வகை கருவியையும் பயன்படுத்தினார்.

    மேலும் நிலக்கடலையை அறுவடை செய்த பின்னர் செடிகள், காய்களை பிரிக்க எந்திரத்தினை பயன்படுத் தினார். எனவே ஆட்கள் பற்றாக்குறை நிலவும் காலங்களில் இவர் பலவகை எந்திரங்களை பயன்படுத்தி உள்ளார். 

    இந்த ரகமானது  பூச்சி, நோய் தாங்கும் திறன் கொண்டது. இதனால் பூச்சி மருந்துகளை பயன்படுத்து வதை தவிர்க்கலாம். மேலும் அறுவடை சமயத்தில் செடிகள் பச்சை யாக உள்ளதால் கால்நடைகள் இதை மிகவும் விரும்பும் வகையில் உள்ளது.

    எனவே இந்த கதிரி மு.1812  என்ற புதிய நிலக் கடலை ரகமானது அனைத்து நல்ல சிறப்பு இயல்புகளையும் கொண்டுள்ளது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் அதிக விதைப் பண்ணைகள் அமைத்து விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    மொடக்குறிச்சி போலீசார் சுயேச்சை கவுன்சிலர் தண்டபாணி மற்றும் மேஸ்திரி பொன்னுசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு வெண்டிபாளையம் குப்பைக்காடு பகுதியில் 60-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் தண்டபாணிக்கு சொந்தமான வீடு கட்டுமான பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

    இந்த கட்டுமான பணியின் மேஸ்திரியாக வெண்டிபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் மேற்கொண்டு வந்தார். இந்த கட்டுமான பணியில் ஈரோடு வெண்டிபாளையம் பாலதண்டாயுத பாணி வீதியை சேர்ந்த ராஜேந்திரன் (50), அதே பகுதியை சேர்ந்த மாதேஸ்வரி (50), ராஜு (42), சாந்தி (44) ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

    இந்நிலையில் நேற்று முன்தினம் 6 அடி உயரத்திற்கு ஹாலோ பிளாக் கற்களால் சுவர் வைத்துள்ளனர். தொடர்ந்து அடுத்த நாள் (நேற்று) கட்டுமான பணியில் ராஜேந்திரன், மாதேஸ்வரி, ராஜு, சாந்தி ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சுவர் காயாமல் ஈரபதத்துடன் இருப்பதாக ராஜேந்திரன், மேஸ்திரி பொன்னுசாமியிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர் இது குறித்து உரிமையாளரிடம் பேசி விட்டதாகவும் இன்றைக்கு முழு சுவரையும் வைக்கனும் என கூறி விட்டு சென்றார்.

    இதையடுத்து ராஜேந்திரன், ராஜூவும் மரச்சாரத்தின் மீது மீதமுள்ள சுவர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுவர் முழுவதும் சரிந்து சாரத்தின் மீது விழுந்தது. இதில், கட்டிட வேலை செய்து வந்த ராஜேந்திரன், ராஜு, மாதேஸ்வரி ஆகியோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில், ராஜேந்திரனுக்கு தலையிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மாதேஸ்வரிக்கு வலது கை விரல்களிலும், ராஜூவுக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

    இதையடுத்து 3 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார். காயம் அடைந்த மாதேஸ்வரி, ராஜூ 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் சுயேச்சை கவுன்சிலர் தண்டபாணி மற்றும் மேஸ்திரி பொன்னுசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பயிரிட்டுள்ள மக்காச்சோளத்தை மீண்டும் யானை வந்து சேதப்படுத்தி விடுமோ என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள காடகநல்லி கிராமத்தை சேர்ந்தவர் பத்மா (வயது 30). இவர் வனப்பகுதியையொட்டி தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் பத்மா நேற்று அதிகாலை வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.

    அப்போது யானையின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது யானை ஒன்று மக்காச்சோள பயிரை தின்று நாசப்படுத்தி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் பத்மா யானையை விரட்ட முயற்சித்தார்.

    அப்போது யானை அவரை தாக்கி உள்ளது. இதில் பத்மா படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து யானையை காட்டுக்குள் விரட்டி விட்டனர். பின்னர் படுகாயமடைந்த பத்மாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் காடகநல்லி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    இதேப்போல அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தாங்கள் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்தை மீண்டும் யானை வந்து சேதப்படுத்தி விடுமோ என்ற கவலையில் இருக்கின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி யானை ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. தற்போது நாங்கள் மக்காச்சோளத்தை பயிரிட்டு உள்ளோம். யானை போன்ற வன விலங்குகள் சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இரவு காவலில் இருந்து வருகிறோம்.

    இருந்தாலும் யானைகள் வனத்தை விட்டு வெளியேறி தோட்டத்துக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. எனவே வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து சேதப்படுத்தி வரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் ஊருக்கு வெளியே பெரிய அகழிகள் அமைக்க நடவடிக்கை வேண்டும் என்றனர்.

    ×