என் மலர்tooltip icon

    ஈரோடு

    தற்கொலை செய்வதாக கூறி சென்ற பெண் இன்ஸ்பெக்டர் நீலாவதி மீண்டும் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு திரும்பினார்.
    ஈரோடு:

    ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் நீலாவதி.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நீலாவதி திடீரென மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக உயர் அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு சோலாரில் உள்ள தனது தோழி வீட்டிற்கு சென்று மயங்கி விழுந்தார்.

    பின்னர் அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து குணமடைந்த அவர் பணிக்கு வராமல் விடுமுறையில் இருந்து வந்தார். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் நீலாவதி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில் தனது நிலைமைக்கு ஒரு உயர் அதிகாரியும், தனிப்பிரிவு ஏட்டுவும் தான் காரணம் என்று குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமாருக்கு போலீஸ்சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து புகாருக்கு ஆளான தனிப்பிரிவு ஏட்டு, இன்ஸ்பெக்டர் நீலாவதியிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை மேற்கு மண்டல ஐ.ஜி.க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் விடுமுறையில் இருந்த இன்ஸ்பெக்டர் நீலாவதி மீண்டும் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு திரும்பினார். 
    சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 

    இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகிய வைகளை உள்ளடக்கியதாகும். இவ்விருது பெற 15 வயது முதல் 35 வயதிக்குட்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.

    ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க கூடாது. தகுதி உள்ள இளைஞர்கள் இணையதளம் மூலம் மே மாதம் 10-ந் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in அல்லது http://www.sdat.tn.gov.in  ஆகிய இணைய தளங்களில் உள்ளது. பூர்த்தி செய்ய ப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

    இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    மொடக்குறிச்சி அருகே குரங்கன்பள்ளம் கசிவுநீர் திட்ட வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே குரங்கன்பள்ளம் கசிவுநீர் திட்ட வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.

    மொடக்குறிச்சி அருகே உள்ள புஞ்சைக் காளமங்கலம்  அடுத்த இந்திராகாந்திபுரம் பகுதியில் குரங்கன்பள்ளம் கசிவுநீர் திட்ட வாய்க்கால் செல்கிறது.

    இந்த வாய்க்கால் சேமூர் முருங்கன்காடு முதல் சாக்க வுண்டன்பாளையம் வரை செல்கிறது. குரங்கன்பள்ளம் கசிவுநீர் வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த 2013&ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராம லிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் உள்பட 28 ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தர விட்டது. இதனையடுத்து கடந்த 2014&ம் ஆண்டு 23 ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.

    மேலும் அந்த பகுதியில் இருந்த 5 ஆக்கிரமிப்புகள் அகற்ற படாமல் இருந்தது. அதனையும் அகற்ற வேண்டும் என கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது. இதை தொடர்ந்து உடனடி யாக மற்ற ஆக்கிரமிப்புகளையும் அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 

    இதனையடுத்து  பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் உதவி செயற்பொறி யாளர் சுப்பிரமணி, ஜெக தீஷ், முருகேசன் மற்றும் மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை 2 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.
    பெருந்துறை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    பெருந்துறை:

    பெருந்துறை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி  மற்றும் அவரது அக்கா ஆகியோர் பெருந்துறை பகுதியில் தங்கி வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    இவர்கள் 2 பேரும் வேலை முடிந்து அந்த நிறுவனத்தின் பஸ்சில் வருவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று  வேலைக்கு சென்ற இருவரும் இரவு அவர்கள் பஸ்சில் வந்தனர். ஆனால்  சிறுமி அறைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. சிறுமி மாயமாகி விட்டார்.

    அவர் எங்கு சென்றார் என தெரிய வில்லை. இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மாயமான சிறுமி கோவை சூலூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பெருந்துறை சப்& இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

    அப்போது அந்த சிறுமியை வாலிபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டனர். தொடர்ந்து அந்த வாலிபரை பெருந்துறைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் பவானி ஆனந்தம் பாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமி (27) என்பதும் சிறுமியுடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய போது பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது. 

    மேலும் முத்துசாமி ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று சென்னிமலை அடிவாரத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு கோவை சூலூர் சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் முத்துசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதை தொடர்ந்து முத்துசாமி பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.
    நீலகிரி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    ஈரோடு:

    நீலகிரி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

    கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப் பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. 

    மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளி யேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று நீலகிரி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.35 அடியாக உள்ளது. நேற்று வினாடிக்கு 182 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 2812 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத் திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

    கீழ்பவானி பாசனத்திற்காக  2,100 கன அடி என மொத்தம் 2 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    பெண் இன்ஸ்பெக்டர் நீலாவதி மீது புகார்கள் இருந்ததை அடுத்து அவரிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நீலாவதி (44). இவர் தனது குடும்பத்துடன் சூரம்பட்டி வலசு, காந்திஜி வீதியில் வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த இன்ஸ்பெக்டர் நீலாவதி கடந்த 14-ந் தேதி பணியில் இருந்தபோது திடீரென உயர் அதிகாரிகளின் செல்போனிற்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பினார்.

    மேலும் அதில் தனது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் அனுப்பி இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உயர் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் நீலாவதியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இந்நிலையில் சோலார் பகுதியில் உள்ள தனது தோழி வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் நீலாவதி மொபட்டில் சென்றார். அப்போது அவர் திடீரென கீழே மயங்கி விழுந்தார்.

    இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் நீலாவதி பேசிய பரபரப்பு ஆடியோ வெளியானது. அதில் உயரதிகாரிகள் திட்டியதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்யப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான். எனது இந்த முடிவுக்கு ஒரு போலீஸ் உயர் அதிகாரி மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஒருவரும் தான் காரணம்.

    அந்த உயர் அதிகாரி சமுதாய ரீதியில் அரசியல் செய்கிறார். அந்த ஏட்டுவை ஒரு முறை நான் திட்டியதால் என்னை பழி வாங்குவதற்காக என்னை பற்றிய தவறான தகவலை உயர் அதிகாரிகளிடம் சொல்லி வருகிறார்.

    இவர்களின் செயலால் தான் என்னை ஆயுதப்படைக்கு போக சொன்னார்கள். மேலும் எனக்கு வழங்கப்பட்ட வாகனத்தையும் பறித்துக் கொண்டனர். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தான் நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று அதில் கூறி இருந்தார்.

    இதனால் இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இதுகுறித்து விசாரணை நடத்த டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் விசாரணைக் குழுவினர் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதேப்போல் இன்ஸ்பெக்டர் நீலாவதியிடமும் விசாரணை நடத்தினர்.

    இரண்டு தரப்பினரிடமும் விசாரணையை முடித்து அதன் அறிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் தாக்கல் செய்தனர்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:-

    பெண் இன்ஸ்பெக்டர் நீலாவதி தெரிவித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.

    இதேபோல் பெண் இன்ஸ்பெக்டர் நீலாவதி மீதும் புகார்கள் இருந்ததை அடுத்து அவரிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து அந்த அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள். அது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உயர் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு மீது புகார் தெரிவித்த இன்ஸ்பெக்டர் நீலாவதி இதுவரை பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    கொடுமுடி அருகே கிணற்றின் சுற்றுச்சுவரில் படுத்திருந்த டிக் வண்டி தொழிலாளி தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியாக சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே கிணற்றின் சுற்றுச்சுவரில் படுத்திருந்த டிக் வண்டி தொழிலாளி தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியாக சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி அருகே உள்ள கொளத்துப் பாளையம் நாடார் காலனி பருதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (55). இவரது மனைவி லட்சுமி. சுப்பிரமணி ரிக் வண்டிக்கு வேலைக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று சுப்பிரமணி ஆராம்பாளையத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவரில் படுத்து இருந்தார். அப்போது நிலை தடுமாறி கிணற்றின் உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் கொடுமுடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் சுப்பிரமணி உடலை மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த கொடுமுடி போலீசார் சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்கு முடிந்து சுப்பிரமணியின் மனைவி லட்சுமியிடம் உடலை ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    ஈரோட்டில் குடிபழக்கத்தை மனைவி தட்டிகேட்டதால் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் குடிபழக்கத்தை மனைவி தட்டிகேட்டதால் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு ரோடு எம்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் மகா கிருஷ்ணன் (வயது 42). இவரது மனைவி கலைச்செல்வி.  இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.  மகாகிருஷ்ணன் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் கூறப் படுகிறது. கலைச்செல்வி தனது கணவரிடம் குடிப் பழக்கத்தை கைவிடுமாறு பலமுறை சொல்லியும் அவர் கேட்காமல்  தொடர்ந்து குடித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத் தன்று வழக்கம்போல் மகாகிருஷ்ணன் குடித்து கொண்டிருந்தார். இதனை கலைச்செல்வி கண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த மகா கிருஷ்ணன் மனைவியிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்றுவிட்டார். கலைச்செல்வியும் கணவர் தூங்க சென்று விட்டார் என நினைத்து வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.

    நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த கலைச்செல்வி அறை கதவை தட்டியுள்ளார். அறை உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. ஆனால் பதில் எதுவும் வரவில்லை.

    இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மகாகிருஷ்ணன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மகா கிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    அந்தியூர்:

    அந்தியூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

     அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. 

    மழைக்காலங்களில் மலையை சுற்றியுள்ள பகுதி களில் பெய்யக்கூடிய மழை நீரை தேக்கி வைத்து பின்பு பாசனத்திற்கும், கோடை காலங்களில் வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் நீராகவும் இந்த அணையின் தண்ணீர் பயன்படுகிறது.

    கடந்த 14-ந் தேதி 70 மி.மீ. அளவிற்கும், 15-ந் தேதி 8 மி.மீ., 18-ந் தேதி 44 மி.மீ. மழை வரட்டுப்பள்ளம் அணை சுற்றியுள்ள பகுதியில் மழை பெய்தது. இந்த 3 நாட்களில் மட்டும் 122 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    அணையின் முழு கொள்ளளவான 33.5 அடி உயரமுள்ள அணையில் கடந்த வாரம் 27 அடியாக இருந்தது. கடந்த 3 நாட்களில் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பெய்த மழையினால் 27.5 அடியாக தற்போது உள்ளது.

    இதனால் அணையை சுற்றியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கீழ்பவானி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியரை போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் இன்று 2-வது நாளாக தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    சத்தியமங்கலம்:

    கீழ்பவானி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியரை போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் இன்று 2-வது நாளாக தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). இவர் மேட்டுப் பாளையம் அரசு மருத்துவ மனையில் லேப் டெக்னீசி யனாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் பவானிசாகர் அணை பகுதிக்கு வந்தார். தொடர்ந்து அவர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பண்ணை அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார்.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க் காலில் 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் வாய்க்காலின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரை புரண்டு சென்று கொண்டு இருந்தது.

    இந்த நிலையில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டு இருந்ததால் வாய்க்காலில் குளித்து கொண்டு இருந்த ராஜேந்திரன் நிலை தடுமாறி வாய்க்காலில் மூழ்கி  தத்தளித்து கொண்டு இருந்தார். தொடர்ந்து அவர் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

    இதையடுத்து பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் உதவியுடன் வாய்க்காலில் இறங்கி அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து ராஜேந்திரனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி இன்று 2-வது நாளாக ராஜேந்திரனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே பெண்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பழைய ராசா குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் சரிவர வருவதில்லை எனவும் இதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று இன்று காலை அந்தியூர் ராசா குளம் பிரிவு ஆதி ரெட்டியூர் பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    இதனைத் தொடர்ந்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் அந்தப் பகுதி மக்கள் இடத்தில் பேச்சு-வார்த்தை செய்து உடன-டியாக தண்ணீர் வருவதற்கு உண்டான வழிவகை செய்து கொடுப்-பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இதனால் அந்தியூர்,  வெள்ளித்-திருப்பூர் சாலையில் 30 நிமிடம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் க்கு சென்ற கண்டெய்னர் லாரி திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் காலை 7 மணியளவில் திரும்பும்போது குறுகிய வளைவில் திரும்ப முடியாமல் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

     தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்-கணக்கான வாகனங்கள் பயணிக்-கின்றன.

    தமிழகம் கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு  ஏற்படுகிறது.

    இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வனவிலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக பிப்10-ந் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர தடை விதிக்கப்பட்டது. 

    இந்நிலையில் கோவையில்   இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் க்கு சென்ற கண்டெய்னர் லாரி  திம்பம் மலைப்பாதை 9-வது  கொண்டை ஊசி வளைவில் காலை 7 மணியளவில்  திரும்பும்போது குறுகிய வளைவில் திரும்ப முடியாமல்  நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சிறிய வாகனங்கள் சென்று வந்தன மற்ற  வாகனங்கள்  ஏதும் செல்ல முடியவில்லை. பின்னர் அவ்வழியாக வந்தவேறு லாரி ஓட்டுநர் லாரியை குறுகிய வளைவில் இருந்து மீட்டர் பின்னர் 9 மணி-யளவில்   போக்குவரத்து சீரானது.

    இதனால் திம்பம் மலைப்பாதையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    ×