என் மலர்
உள்ளூர் செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரி
தாளவாடி:
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்-கணக்கான வாகனங்கள் பயணிக்-கின்றன.
தமிழகம் கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வனவிலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக பிப்10-ந் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் க்கு சென்ற கண்டெய்னர் லாரி திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் காலை 7 மணியளவில் திரும்பும்போது குறுகிய வளைவில் திரும்ப முடியாமல் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிறிய வாகனங்கள் சென்று வந்தன மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. பின்னர் அவ்வழியாக வந்தவேறு லாரி ஓட்டுநர் லாரியை குறுகிய வளைவில் இருந்து மீட்டர் பின்னர் 9 மணி-யளவில் போக்குவரத்து சீரானது.
இதனால் திம்பம் மலைப்பாதையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






