என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு பொ துமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    X
    அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு பொ துமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    குடிநீர் கேட்டு சாலை மறியல்

    அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே பெண்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பழைய ராசா குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் சரிவர வருவதில்லை எனவும் இதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று இன்று காலை அந்தியூர் ராசா குளம் பிரிவு ஆதி ரெட்டியூர் பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    இதனைத் தொடர்ந்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் அந்தப் பகுதி மக்கள் இடத்தில் பேச்சு-வார்த்தை செய்து உடன-டியாக தண்ணீர் வருவதற்கு உண்டான வழிவகை செய்து கொடுப்-பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இதனால் அந்தியூர்,  வெள்ளித்-திருப்பூர் சாலையில் 30 நிமிடம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×