என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 58 பவுன் நகை திருட்டு போன சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    கோபி:

    ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 58 பவுன் நகை திருட்டு போன சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்லகவுண்டன் பாளையம் மலர் நகரை சேர்ந்தவர் டேவிட்சூசை மாணிக்கம் (63).ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி இசபெல்லா ஜான்சி ராணி (60). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை .

    கணவன் மனைவி இருவரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உறவினர்களை பார்ப்பதற்காக கோவை சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து டேவிட் சூசை மாணிக்கத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து ேடவிட் சூசை மாணிக்கம் கோபி ெசட்டிபாைளயம போலீ சாருக்கு தகவல் கொடுதத் தார். ேமலும் அவர் மனைவியுடன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    ேமலும் பீரோவில் வைத்திருந்த 58 பவுன் நகைகள், மற்றும் ரூ.30 ஆயிரம் பணத்தை காணவில்லை.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். 

    இதில் கொள்ளையர்கள் வீட்டில் யாரும் இல்லாததை நோட்ட மிட்டு வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அவர்கள் வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

    இது குறித்து கோபிெசட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

    இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை பேரில் கோபிசெட்டி பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், சுபாஷ் மற்றும் 10 போலீசார் கொண்ட தடைப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து தொடர்ந்து  தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்.
    சென்னிமலை:

    பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்.

    சென்னிமலையில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் நடந்தது. இதில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாசலம், செயலாளர் செங்கோட்டையன் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி, இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் பொடாரன் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசினார். 

    இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். 
    கூட்டத்தின் முடிவில்  விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழலை பாதிக்கும் எல்.பி.பி வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் இத்திட்டத்தை ரத்து செய்யுமாறு  அரசை வலியுறுத்த வேண்டும்.

    65 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள பாசன வாய்க்கால்களை பாதுகாக்க நமக்கு நாமே திட்டத்தில் ரூபாய் ஒரு கோடி பாசன பாதுகாப்பு சபை சார்பில் அரசுக்குச் செலுத்தி ரூ. 3 கோடியில் தூர் வாரும் பணிகளை செய்ய  நடவடிக்கை தொடங்க வேண்டும்.

    வாய்க்கால்களில் கரைகளில் பனை விதைகளை நட்டு கரையை பலப்படுத்த வேண்டும். நீர் மேலாண்மைக்கான நிரந்தரமான பணியா–ளர்களை நியமிக்க வேண்டும். 

    மேற்கு மண்டலத்தை பாதுகாக்க பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    மேலும், இந்த கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்வதற்கு செய்ய வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தினர்
    பெரிய ெகாடிவேரியில் திருமணமான 3 ஆண்டில் பட்டதாரி இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
    டி.என்.பாளையம்:

    பெரிய கொடிவேரியில் திருமணமான 3 ஆண்டில் பட்டதாரி இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேலம் மாவட்டம் மேட்டூர்  அணை அருகே உள்ள நாட்டாமங்கலம் நவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சந்தியா (23). பி.எஸ்.சி பட்டதாரி. இவருக்கும்   ஈரோடு மாவட்டம் பெரியகொடிவேரி பகுதியை சேர்ந்த சக்திதாசன் (36) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    சக்திதாசன் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.சந்தியா வீட்டில் இருந்து கொண்டு பி.எட் படித்து வருகிறார் திருமணமாகி குழந்தை இல்லாத ஏக்கம் சந்தியாவுக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வெளியில் சென்று வீடு திரும்பிய சக்திதாசன் கதவு திறந்து இருப்பதை கண்டு சந்தியாவை கூப்பிட்டு உள்ளார். 

    பதில் ஏதும் வராததால் வீட்டின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது சந்தியா மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சந்தியாவின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு சக்திதாசன் தகவல் கொடுத்தார். 

    பின்னர் சந்தியாவின் உடலை மின் விசிறியில் இருந்து இறக்கிய உறவினர்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தியா இறந்து விட்டதாக கூறினர்.

    சந்தியாவுக்கு திருமணமாகி மூன்று வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும், சந்தியாவின் இன்று உடல் பிரேத பரிசோதனை நடக்க இருப்பதாகவும் பங்களாபுதூர் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் இன்று பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று தொடங்கி வரும் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    ஈரோடு:

    தமிழகத்தில் இன்று பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று தொடங்கி வரும் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. 

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் -1 பொதுத் தேர்வை மாணவ-மாணவிகள் எழுதுவதற்காக மொத்தம் 107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 மையங்கள் தனித்தேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

    மாவட்டத்தில் 321 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 27 ஆயிரத்து 656 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வை எழுதுகின்றனர். 

    மாணவர்கள் தேர்வை எந்த ஒரு சிரமமுமின்றி எழுதும் வகையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்ய ப்பட்டிருந்தன.

    தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டு இருந்தன. 

    மேலும் தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    இன்று காலை நேரமாகவே அந்தந்த தேர்வு நடக்கும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் வந்து விட்டனர். மாணவ, மாணவிகள் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று தேர்வை நல்லபடியாக எழுத வேண்டும் என்று சாமி கும்பிட்டனர். 

    பின்னர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சிறிது நேரம் படித்தனர். தேர்வு எழுத செல்லும் மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்களுக்கு வினாத்தாள் கொடுத்ததும் முதல் 15 நிமிடம் வினாத்தாள்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.
     
    அதைத்தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

    மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 107 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் என மொத்தம் 220 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தேர்வை தீவிரமாக கண்காணித்தனர்.

    கோபிசெட்டிபாளையத்தில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி செட்டிபாளையம் சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (29). இவர் அரசு போக்குவரத்து கழகம் கோபிசெட்டிபாளையம் கிளையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று வழக்கம் போல் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று  அங்கு இருந்த பூரோவையும் உடைத்து பார்த்துள்ளனர்.

    அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். பணிமுடிந்ததும் வீடு திரும்பிய நந்தகுமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து நந்தகுமார் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  கொள்ளை நடந்த இடத்துக்கு துப்பறியும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 

    மேலும் கொள்ளை நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    சத்தியமங்கலம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை பகுதியை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தேவி (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    முருகனுக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    இதையடுத்து முருகன் மீண்டும் மது குடித்து விட்டு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏறபட்டது. 

    இதனால் தேவி மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தேவி சாணி பவுடர் (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். 

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆப்பக்கூடல் அருகே கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரிப்புதூர் பகுதியில் ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. 

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோவில் திறக்க சென்ற பூசாரி கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து கோவில் நிர்வாகிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே அதே பகுதியில் உள்ள சின்ன ஓங்காளியம்மன் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு உள்ளது. 2 கோவில் உண்டியலில்  ரூ.1 லட்சம் காணிக்கை இருக்ககூடும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் ஒரிச்சேரி பகுதியில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள பத்தரகாளியம்மன் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலில் கொள்ளை முயற்சியும் நிகழ்ந்துள்ளது. 

    அடுத்தடுத்து 3 கோவில்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓரே கிராமத்தில் அடுத்தடுத்து 3 கோவில்களில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்து இருப்பது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமிரா இல்லாததால் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலக்குவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    அதே சமயம் விரல்ரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரிக்க தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
    தாளவாடி, தொட்டகாஜனூர், அருள்வாடி, திகினாரை, கெட்டவாடி, சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி ஆகிய இடங்களிலும் கனமழை கொட்டியது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்தும் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்தும் சேதமானது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் மின்தடை நிலவி வருகிறது. மேலும் காற்றின் காரணமாக சுமார் 20 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமானதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை 6மணி அளவில் தாளவாடி பகுதியில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல அது கனமழையாக மாறியது. தாளவாடி, தொட்டகாஜனூர், அருள்வாடி, திகினாரை, கெட்டவாடி, சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி ஆகிய இடங்களிலும் கனமழை கொட்டியது.

    சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. காலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த மழை காரணமாக தாளவாடி பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    இதே போல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மாயாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் பொதுமக்கள் ஆற்றைக் கடக்க வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர். மேலும் மாயாற்றை கடக்க முடியாததால் தெங்குமரஹடாவில் விளையும் வாழை, மிளகாய், கத்திரிக்காய் போன்ற விளைபொருட்களை கொண்டு வரமுடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து உள்ளனர். சிலர் பரிசல் மூலம் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.

    வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சேசன் நகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (55) என்பவரின் வீட்டில் இருந்த காவல் நாயை அங்கு வந்த சிறுத்தை கடித்தது. இதை பார்த்த காளிப்பன் சத்தம் போடவே சிறுத்தை நாயை விட்டுவிட்டு பக்கத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி கொண்டது.

    இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தந்தை இறந்த சோகத்தில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் பூஜா (17). இவர் மொடச்சூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    சிவசங்கர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை இறந்ததால் பூஜா மன வேதனையில் இருந்து வந்தார்.

    மேலும் தந்தை இல்லாததால் நானும் இறந்து விடுகிறேன் என பூஜா தனது தாயிடம் கூறி புலம்பி கொண்டு இருந்தார். அதற்கு அவரது தாய் பூஜாவுக்கு ஆறுதல் கூறி வந்தார்.

    இந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்த பூஜா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வாக்களித்த மக்களுக்கு தி.மு.க துரோகம் செய்திருக்கிறது. மக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்கள் முடிவை மாற்றி வாக்களிப்பார்கள் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகே த.மா.கா. சார்பில் சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில துணை தலைவர் ஆறுமுகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்டி.சந்திரசேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், இளைஞரணி தலைவர் யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சொத்து வரி, வீட்டு வரி உயர்வை திரும்ப பெறவும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தியும் ஜி.கே.வாசன் தலைமையில் நிர்வாகிகள் கோஷமிட்டனர். அப்போது அவர் பேசியதாவது:

    தமிழக மக்களின் சுப, துக்க நிகழ்வுகளில் பங்கேற்கும் கட்சியாகவும், தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கும் கட்சியாகவும் த.மா.கா. செயல்பட்டு கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

    தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் 5வது பெரிய போராட்டம் இது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. தி.மு.க.வின் வாக்குறுதிகளை நம்பி் மக்கள் ஏமாந்துள்ளனர். கிடப்பில் போடப்பட்ட வாக்குறுதிகள் செயல்படுத்துவார்கள் என மக்கள் காத்து கொண்டிருந்தபோது மக்கள் தலையில் பேரிடியாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிசை முதல் மாளிகை வரை 20 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைப்பு காட்டவில்லை. மாறாக வரியை உயர்த்தி சுமையை உயர்த்திய அரசாக உள்ளது.

    திராவிட மாடல் அடிப்படையில் சொத்து வரியை குறைத்திருக்கலாமே. கூட்டணி கட்சிகள் சொத்து வரி உயர்வை பற்றி வாய் திறக்கவில்லை. கூட்டணி கட்சிகளை கட்டுப்படுத்தலாம், ஆனால் தமிழக மக்களை கட்டுப்படுத்த முடியாது.

    ஆட்சி பொறுப்பு ஏற்ற பின் தேர்தல் வாக்குறுதியை மீறுவது சரியா என கேட்கிறோம். வாக்களித்த மக்களுக்கு தி.மு.க துரோகம் செய்திருக்கிறது. மக்கள், வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்கள் முடிவை மாற்றி வாக்களிப்பார்கள்.

    மின்வெட்டு தி.மு.க. ஆட்சியில் அதிகரித்துள்ளது. படிப்படியாக தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுங்கள். வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்.

    அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட 6 மாவட்டங்களை சேர்ந்த தமாகா.வினர் கலந்து கொண்டனர்.

    மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் மீது லாரி ஏறியதால் பலியானார்.
    ஈரோடு:

    மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் மீது லாரி ஏறியதால் பலியானார்.


    ஈரோடு காளைமாடு சிலை அருகே கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு மேம்பாலம் உள்ளது. இந்த வழியாக கரூர், மதுரை திருச்சி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய பஸ்கள் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன.
     
    தினமும் நூற்று க்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. 

    இங்கு எப்போதும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த சாலை  தற்போது குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது.

    இந்நிலையில் மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவு நேரம் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் நுழைவு பாலம் வழியாக செல்லும் சாலையில் ரோடுகள் குண்டும் குழியுமாக தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. 

    இந்நிலையில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மொபட்டில் காளைமாடு சிலையை தாண்டி ரெயில்வே நுழைவு பாலம் கீழே உள்ள சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது குண்டும், குழியுமான சாலையால் நிலைகுலைந்த அவர் மோட்டார் சைக்கிளில்  இருந்து கீழே விழுந்தார். 

    அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. 

    இந்த விபத்தை கண்டு வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகன பதிவு எண்ணைக் கொண்டு அவர் யார் என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    மோசமான சாலையால் தான்  இந்த விபத்து ஏற்பட்டதாகவும், உடனே குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    ×