என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோபிசெட்டிபாளையம் அருகே தந்தை இறந்த சோகத்தில் பிளஸ்-2 மாணவி தற்கொலை
Byமாலை மலர்10 May 2022 3:58 AM GMT (Updated: 10 May 2022 3:58 AM GMT)
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தந்தை இறந்த சோகத்தில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் பூஜா (17). இவர் மொடச்சூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சிவசங்கர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை இறந்ததால் பூஜா மன வேதனையில் இருந்து வந்தார்.
மேலும் தந்தை இல்லாததால் நானும் இறந்து விடுகிறேன் என பூஜா தனது தாயிடம் கூறி புலம்பி கொண்டு இருந்தார். அதற்கு அவரது தாய் பூஜாவுக்கு ஆறுதல் கூறி வந்தார்.
இந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்த பூஜா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் பூஜா (17). இவர் மொடச்சூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சிவசங்கர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை இறந்ததால் பூஜா மன வேதனையில் இருந்து வந்தார்.
மேலும் தந்தை இல்லாததால் நானும் இறந்து விடுகிறேன் என பூஜா தனது தாயிடம் கூறி புலம்பி கொண்டு இருந்தார். அதற்கு அவரது தாய் பூஜாவுக்கு ஆறுதல் கூறி வந்தார்.
இந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்த பூஜா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X