என் மலர்tooltip icon

    ஈரோடு

    • போலீசார் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தவர்களை கைது செய்தனர்.
    • அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆசாரி மேடு பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி மற்றும் போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கோபி பச்சைமலை ரோடு பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கார்த்திகேயன் (வயது 29), காசிபாளையம் சந்தை கடை புதூரை சேர்ந்த வெங்கடசாமி மகன் செல்வன் (51), கோபி புதுப்பாளையம் லோகு நாதன் மகன் சபாபதி (57), சத்தியமங்கலம் ரெங்க சமுத்திரம் மணி மகன் குப்புசாமி (40), கோபியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தம்பி யாணன் (50), கதிர்வேல் மகன் கோபால் (47), கோபி வண்டிப்பேட்டை ராஜூ மகன் பிரகாஷ் (50), அதே பகுதியை சேர்ந்த பொன்னு ச்சாமி கவுண்டர் மகன் சக்தி என்ற சுரேஷ்குமார் (49), கோபி அங்குவிலாஸ் தெரு ராமசாமி மகன் குமார் (48), செல்லப்பா நகர் சுப்பிரமணி மகன் கணேஷ் குமார் (46), புது ஹாஸ்பிடல் ரோடு சையது முஸ்தபா மகன் ஜெபர் (59), பாரதி தெரு இப்ராஹிம் மகன் ஜெபர் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் வைத்திருந்த 5 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.30 ஆயிரத்து 100 போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழ க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    • இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட த்தில் செப்டம்பர் 2023-ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும்.

    11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சி னைகள் குறி த்து கருத்துக்கள் தெரிவி க்கலாம்.

    மதியம் 12.30 முதல் 1.30 முடிய அலுவ லர்களின் விளக்கங்க ளும் தெரிவி க்க ப்படவு ள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் மிலாடிநபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு மது கடைகளுக்கு விடுமுறை.
    • அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மிலாடிநபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு 'மது விற்பனை இல்லாத நாளாக" அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து வரும் 28-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ஆகிய 2 நாட்கள் முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

    அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளைபொருட்கள் ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.98 லட்சத்து 29 ஆயிரத்து 953-க்கு விளைபொருட்கள் விற்பனையாகின.

    கொடுமுடி:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 1 ஆயிரத்து 455 மூட்டைகள் கொண்ட 68 ஆயிரத்து 75 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.75.98 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.80.19 காசுகள், சராசரி விலையாக ரூ.77.89 காசுகள் என்ற விலை களிலும், 2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.60.89 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.72.89 காசுகள், சராசரி விலையாக ரூ.70.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.51 லட்சத்து 36 ஆயிரத்து 903-க்கு விற்பனையானது.

    இதேபோல கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு, நிலக்கடலை விற்பனை க்கான ஏலம் நடந்தது.

    இதில் 14 ஆயிரத்து 600 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 398 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக 16 ரூபாய் 39 காசுகள், அதிகபட்ச விலையாக 23 ரூபாய் 70 காசுகள், சராசரி விலையாக 22 ரூபாய் 59 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 026-க்கு விற்பனையானது.

    இதனையடுத்து நடந்த தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 1 ஆயிரத்து 79 மூட்டைகள் கொண்ட 51 ஆயிரத்து 123 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்ப னை யானது.

    விற்பனை யான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.72.71 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.80.19 காசுகள், சராசரி விலையாக ரூ.77.19 காசுகள் என்ற விலை களிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.60.99 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.74.99 காசுகள், சராசரி விலையாக ரூ.70 .19 காசுகள் என்ற விலை களிலும் மொத்தம் ரூ.37 லட்சத்து 31 ஆயிரத்து 012-க்கு விற்பனையானது.

    இவற்றையடுத்து நடந்த நிலக்கடலை விற்பனை க்கான ஏலத்தில் 399 மூட்டைகள் கொண்ட 11 ஆயிரத்து 649 கிலோ எடையுள்ள நிலக்கடலை கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.63.13 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.86, சராசரி விலை யாக ரூ.84.30 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்து 012-க்கு விற்பனையானது.

    எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மொத்தம் ரூ.98 லட்சத்து 29 ஆயிரத்து 953-க்கு விளைபொருட்கள் விற்பனையாகின.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 72.10 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடி 781 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணை யின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லா ததால் பவானிசாகர் அணை க்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நேற்று பவானிசாகர் அணைக்கு 3,851 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இன்று மழைப்பொழிவு இல்லாததால் மீண்டும் நீர் வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 72.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 781 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.71 அடியா கவும், பெரும்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 11.81 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.98அடியாகவும் உள்ளது.

    • கனி மார்க்கெட்டில் உள்ள தற்காலிக கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.
    • தீபாவளி வரை கடை நடத்தி கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி கடைகள் செயல்பட்டன. இங்கு 200-க்கும் மேற்பட்ட நிரந்தரக் கடைகளும், 730 வார சந்தை கடைகளும் இயங்கி வந்தன. இந்த வளாகத்தில் ரூ. 54 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய வணிக வளாகத்தில் ஏற்கனவே கனி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் மாத வாடகையாக ரூ. 31,500-ம், வாய்ப்புத்தொகையாக ரூ.8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை செலுத்த வேண்டும் என கூறியதால் யாரும் கடைக்கு செல்லவில்லை. இதனால் ஒருங்கிணைந்த வணிக வளாகம் செயல்படாமலேயே உள்ளது.

    இதற்கிடையே கனி மார்க்கெட்டில் உள்ள தற்காலிக கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. தீபாவளி வரை கடை நடத்தி கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    இதை எதிர்த்து வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை பழைய இடத்தில் தற்காலிக கடைகள் செயல்பட சென்னை நீதிமன்றத்தில் வியாபாரிகள் உத்தரவு பெற்றனர்.

    இதையடுத்து சுமார் 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் அனுமதி பெற்று கனி மார்க்கெட் பகுதியில் பழைய இடத்தில் மீண்டும் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கு 86 கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரம் முதல் பழைய இடத்தில் மீண்டும் ஜவுளி சந்தை முழுமையாக செயல்படும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • செல்போன், சிம் கார்டு, பேட்டரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் மாவட்ட சிறை உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்கு தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சிறை கண்காணிப்பாளர் சிவகுமாருக்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகளை கண்காணித்த போது கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்குபதிவு செய்யப்பட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட கோவை காமராஜபுரத்தை சேர்ந்த கவுதம் (29), போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதம் முன்பு சிறையில் அடைக்கப்பட்ட கணபதி சிங் (45) ஆகியோர் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தது.

    இருவரிடம் இருந்த செல்போன்களை சிறைக் காவலர்கள் எடுக்க முயன்ற போது செல்போன் தர மறுத்து அவர்களிடம் 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவுதமிடம் இருந்து ஒரு பட்டன் செல்போன், சிம் கார்டு, 2 பேட்டரிகள், இயர் போன் ஆகியவற்றையும், கணபதி சங்கிடமிருந்து ஒரு சிம் கார்டையும் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து கண்காணிப்பாளர் சிவகுமார் அளித்த புகாரின் பெயரில் கோபி போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோபி சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், சிம் கார்டு, பேட்டரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இதில் சிறை காவலர்கள் யாரேனும் இவர்களுக்கு உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
    • சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சத்திமங்கலம்:

    தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மாண்டியாவில் கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் மறியல், ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கர்நாடகா நீர் பாதுகாப்பு குழு அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி தமிழக அரசு கர்நாடகா மாநிலத்துக்கு பஸ்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. அதே போல் சரக்கு வாகனங்களும் கர்நாடக மாநிலத்துக்கு செல்ல வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூர், சாம்ராஜ் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பண்ணாரி, தாளவாடி வழியாக தினமும் 9 தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழியாக தினமும் சரக்கு வாகனங்கள், கார், வேன் என பல வாகனங்களும் சென்று வருகிறது.

    ஆனால் பெங்களூருவில் முழு அடைப்பு காரணமாக சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு செல்லக்கூடிய தமிழக அரசு பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பஸ்கள் சத்தியமங்கலம் அரசு பணி மனையிலேயே நிறுத்தப்பட்டது. இது பற்றி தகவல் அறியாமல் பொதுமக்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையத்துக்கு வந்தனர். ஆனால் நீண்ட நேரம் பஸ்கள் வராததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதே போல் கர்நாடாகவுக்கு சென்ற சரக்கு வாகனங்களும் தமிழக எல்லையான பண்ணாரி, புளிஞ்சூர் சோதனை சாவடிகள் வரை மட்டும் சென்றன. அந்த வாகனங்கள் ஆங்காங்கே ரோட்டோரங்களில் நிறுத்தப்பட்டன. மேலும் பல சரக்கு லாரிகள் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் நிறுத்தப்பட்டன. லாரி ஓட்டுனர்கள் ஆங்காங்கே சமையல் செய்தும் சாப்பிட்டனர். ஆனால் மருந்து உள்பட அத்தியவசிய பொருட்கள் எடுத்து வந்த வாகனங்கள் மட்டுமே சென்றன.

    இதே போல் அந்தியூர் மற்றும் பர்கூர் வழியாக வரட்டுபள்ளம் சோதனை சாவடி, பர்கூர் போலீஸ் நிலைய சோதனை சாவடி, கர்கே கண்டி அருகே உள்ள சோதனை சாவடிகள் உள்ளன. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கர்நாடகா மாநிலம் மைசூர், சாம்ராஜ் நகர் பகுதிகளுக்கு சென்று வருகிறது.

    மேலும் அந்தியூர் இருந்து மைசூர் உள்பட பல பகுதிகளுக்கு தமிழகத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் சென்று வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக அந்தியூர், பர்கூர் வழியாக மைசூர், சாம்ராஜ் நகர் செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் அனைத்து பஸ்களும் கர்நாடகாவுக்கு செல்லவில்லை.

    மேலும் அந்தியூர் பகுதியில் இருந்து ஒரு சில சரக்கு வாகனங்கள் மற்றும் கார், வேன் உள்பட பல வாகனங்கள் சென்றன.

    ஆனால் பர்கூர் அடுத்த கர்கேகண்டி சோதனை சாவடி வழியாக கர்நாடகாவுக்கு சென்ற வாகனங்கள் அனுமதிக்கப்பட வில்லை. அந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டன. இதனால் ரோட்டோரங்களில் சரக்கு வானங்களில் அணிவகுத்து நிற்கிறது.

    ஆனால் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

    மேலும் சத்தியமங்கலம், அந்தியூர் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து விசாரித்தனர்.
    • போதைப்பொருளான கஞ்சா 2 கிலோ இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு;

    ஈரோடு வெண்டி பாளையம் கதவணை மின் நிலைய பாதையில் ஈரோடு டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து விசாரித்தனர். அதில் அவர் ஈரோடு கருங்கல்பாளையம், கமலா நகரை சேர்ந்த சக்தி (31) என்பது தெரியவந்து.

    அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா 2 கிலோ இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா மற்றும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆகிவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வாலிபர் சக்தியின் மீது ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஸ் இருசக்கரவாகனத்தின் மேல் மோதாமல் இருக்க டிரைவர் திருப்பினார்.
    • பஸ் ரோட்டோரம் சிறிது தூரம் சென்று மோதி நின்றது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வழியாக நல்லூர் சத்திய மங்கலம் ரோட்டில் ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்திய மங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். தொடர்ந்து அவர் ரோட்டின் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பஸ் இரு சக்கர வாகனத்தின் மேல் மோதாமல் இருக்க டிரைவர் திருப்பினார்.

    அப்போது கட்டுப பா ட்டை இழந்த பஸ் எதிர்பா ராத விதமாக ரோட்டை விட்டு கீழே இறங்கி இழுத்து சென்றது. இதையடுத்து அந்த பஸ் ரோட்டோரம் சிறிது தூரம் சென்று மோதி நின்றது. இதை கண்டு பஸ்சில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். இதில் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

    மேலும் விபத்தில் பஸ்சின் முன் பகுதி மற்றும் பின் பகுதி சேதம் அடை ந்தது. இது குறித்து போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    இதையடுத்து கிரைன் எந்திரங்கள் வரவழைக்க ப்பட்டு அதன் மூலம் பஸ்வை மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தப்பட்டு இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டது.
    • அதில் 32 கிராம் தங்கம், 495 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலின் பின்னால் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி பவானி கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடன் உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

    அவ்வப்போது சங்கமேஸ்வரர் கோவிலில் பல்வேறு இடங்களில் உள்ள உண்டியல்கள் இந்து அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் திறந்து சமூக ஆர்வலர்கள் மூலம் உண்டியல்களில் உள்ள பணம் எண்ணப்பட்டு வருகிறது.

    அதேபோல் பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதிகேசவர் பெருமாள் சன்னதி மண்டபத்தில் சங்கமேஸ்வரர் கோவில் அதிகாரிகள் முன்னிலையில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தப்பட்டு இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டது.

    அதில் ரூ.15 லட்சத்து 83 ஆயிரத்து 616 ரொக்க பணமாகவும், 32 கிராம் தங்கம், 495 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்று சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


    • பெண்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • லாட்டரி எண்களை பெற்று ஏமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள மைலம்பாடி, காட்டூர் பஸ் நிறுத்தத்தில் பவானி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பெண்கள் 2 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் மைலம்பாடியை சேர்ந்த சந்தியா (37), பவானியை சேர்ந்த சித்ரா (37) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது உடைமைகளை சோதனையிட்டபோது ஒரு ரோஸ் கலர் பேப்பரில் எண்கள் எழுதப்பட்டிருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் என கூறி விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றி வந்ததும், வாட்ஸ்-அப் மூலமாக லாட்டரி எண்களை பெற்று ஏமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×