என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • வேடசந்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார்
    • ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கைரேகை பதிவுகளில் சில நேரங்களில் சிரமங்கள் ஏற்படுவதால் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது,

    திண்டுக்கல் மாவட்ட த்தில் 10 வட்டங்களிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்கள் உள்ளன. குஜிலியம்பாறை மற்றும் திண்டுக்கல் மேற்கு வட்டங்களில் மட்டும் குடோன்கள் இல்லாமல் இருந்தது. அங்கும் குடோ ன்கள் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 300 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களை சீரமைக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி குடோன்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேடசந்தூர் குடோனில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 36,000 ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தரமானதாக வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து ரேசன் கடைகள் மூலம் தரமான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெல் அரவை செய்வதற்காக 700 அரவை ஆலைகள் தேர்வு செய்யப்பட்டு கருப்பு, பழுப்பு நிற அரிசி இல்லாத வகையில் கலர்சாப்டர் பொருத்தப்பட்ட எந்திரங்கள் மூலம் தரமான அரிசி உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

    ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கைரேகை பதிவுகளில் சில நேரங்களில் சிரமங்கள் ஏற்படுவதால் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத பணிகள் முடிக்கவும், இன்னும் 9 மாதங்களில் பணிகள் முழுமையாக முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • தீபாவளி சீசன் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்கள் கவரிங் நகைகளை திருடி மறைத்து வைத்தனர்.
    • கையும் களவுமாக பிடித்த உரிமையாளர் நிலக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் 3 பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்தவர் கணேஷ்பாண்டி (34). இவர் போலீஸ் நிலையம் அருகே கோல்டு, கவரிங் நகைக்கடை வைத்துள்ளார். தற்போது தீபாவளி சீசன் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்கள் கவரிங் நகைகளை திருடி மறைத்து வைத்தனர். அவர்களை கையும் களவுமாக பிடித்த கணேஷ்பாண்டி நிலக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசா ரணையில் அந்த பெண்கள் மதுரை மாவட்டம் விக்கிர மங்கலம் வடகாட்டுப்ப ட்டியை சேர்ந்த போயாண்டி மனைவி ராக்கம்மாள் (60), விக்கிரமங்கலத்தை சேர்ந்த ஜெகன் மனைவி விஜயா (58), உசிலம்பட்டி கீழபுதூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி நதியா (38) என தெரியவந்தது.

    3 பெண்களையும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் மீது மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்துவருகிறது.
    • தடியன்குடிசையில் இருந்து குப்பம்மாள்பட்டி செல்லும் சாலையில் 3-வது வளைவில் பாறைகள் உருண்டு விழுந்தன.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, தடியன்குடிசை, குபப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்துவருகிறது. அதோடு காற்றும் சுழன்று அடித்தது.

    இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுகிறது. மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    தடியன்குடிசையில் இருந்து குப்பம்மாள்பட்டி செல்லும் சாலையில் 3-வது வளைவில் பாறைகள் உருண்டு சாலையில் கிடக்கின்றன. இதனால் பஸ், லாரி, கார், ஜீப், போன்ற வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றன.

    எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்தி, அந்தரத்தில் தொங்கும் மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது.
    • 1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் அதிக அளவில் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 3 மணி முதல் சந்தை வியாபாரம் தொடங்கியது. வழக்கமாக வரும் வியாபாரிகளை விட நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.

    10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது. சந்தைக்கு அதிக அளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்த நிலையில் வெள்ளாடுகள் குறைந்த அளவே வந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

    கடந்த வாரம் வரை ரூ.6500க்கு விற்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் இன்று ரூ.8,000 மட்டும் அதற்கும் மேலும் விற்பனையாகியது. இதே போல் கிராமங்களில் தீபாவளி பண்டிகை சமயங்களில் வீடுகளுக்கு வரும் உறவினர்களுக்கு நாட்டுக்கோழி சமையல் சமைத்து விருந்தளிப்பது முக்கியமான ஒன்றாகும். இதனால் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்தது.

    1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது. கேட்ட விலைக்கு நாட்டுக்கோழிகள் விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று மட்டும் ரூ.3 கோடிக்கு மேல் ஆடு, கோழிகள் விற்பனையானது.

    அய்யலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்த நிலையிலும் ஆட்டுச்சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சந்தை அமைந்துள்ள பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாரம் தோறும் சந்தை நடைபெறும் நாளில் இது போன்ற சூழல் நிலவுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • அலுவலகத்தில் இருந்த 3 சேர்கள் உள்பட ஏராளமான பொருட்கள் எரிந்தன.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள கோட்டையூரில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வி.ஏ.ஓ.வாக முருகவேல் என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை அந்த அலுவலகத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வி.ஏ.ஓ. முருகவேலுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் நத்தம் போலீசாருக்கும் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயை பரவ விடாமல் அணைத்தனர். இருந்தபோதும் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட வேட்டி, சேலைகள் எரிந்து சேதமாகின. மேலும் அலுவலகத்தில் இருந்த 3 சேர்கள் உள்பட ஏராளமான பொருட்கள் எரிந்தன.

    இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் இருந்த ஒரு ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்தது. எனவே அதன் வழியாக மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதே பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீ வைத்த நபர்கள் யார் என தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆட்டோ டிரைவர் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் நட்பாக பழகி பலாத்காரம் செய்தார்.
    • புகாரின் பேரில் வெளியூருக்கு தப்பிச்சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் மகன் உதயராயன் (23). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் நட்பாக பழகி வந்தார். பின்னர் காதலிப்ப தாகக் கூறி எல்லை மீறினார். பல இடங்களில் வெளி யிடங்களுக்கு அழைத்துச் சென்று 2 பேரும் உல்லாச மாக இருந்துள்ளனர்.

    இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார். அவரது பெற்றோர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்த போது அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு யார் காரணம் என விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி அறிவுரையின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உதயராயன் தனது காதலியான மாணவியை உல்லாசம் அனுபவித்ததோடு மட்டுமின்றி தனது நண்பர்களுக்கும் அவரை விருந்தாக்கி உள்ளார்.

    மாணவியான சிறுமி தனக்கு என்ன நடக்கிறது என்றேதெரியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்த போதுதான் உண்மை வெளிவந்தது. இதனையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உதயராயனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவ த்தில் ஈடுபட்ட மேட்டுப்பட்டி கொல்லபட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான திரவிய கோடீஸ்வரன் (29) என்பவரை தேடி வந்தபோது அவர் தலைமறைவானார்.

    வெளியூரில் இருந்து ஊருக்கு வந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவ த்தில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால் அவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வல்லம்பட்டியிலிருந்து வலசு கிராமம் வரை பஸ் வசதியை நீட்டித்திடக் கோரி குரும்பபட்டியில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து பஸ் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி ஊராட்சி வல்லம்பட்டியிலிருந்து வலசு கிராமம் வரை பஸ் வசதியை நீட்டித்திடக் கோரி குரும்பபட்டியில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

    ஆனால் பஸ் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன்,வி.ஏ.ஓ செல்வம்,இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன்,ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் வருகிற 14-ந்தேதி போக்குவரத்து கழக அதிகாரிகளோடு அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து பஸ் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    • ரவுண்டுரோடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 1½கோடி மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது.
    • மேலும் 2 இடங்களில் நவீன கழிப்பறைகள், மனதை கவரும் பூந்தோட்டம், அமைதி சூழல் ஏற்படுத்தும் வகையில் சீரமைக்கப்பட உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரவுண்டு ரோடு எனப்படும் வட்டச் சாலை நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். 1½ கி.மீ சுற்றளவு கொண்டது. குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி. குண்டும் குழியுமாக இருந்த ரவுண்டு ரோடு சாலையை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அப்போதைய திண்டுக்கல் நகராட்சி சேர்மனாக இருந்த நட ராஜன் முயற்சியில் சிமெண்ட் சாலை அமைக்க ப்பட்டு நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாக மாற்றப்பட்டது.

    தற்போது 1000க்கும் மேற்பட்டோர் இங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 1½கோடி மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது. இந்நிலை யில் ரவுண்டு ரோடு பகுதி மேலும் தரம் உயர்த்தப்பட்டு மிளிரும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ள தாக கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது,

    தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் நடப்போம், நலம் பெறு வோம் என்ற இயக்கத்தின் மூலம் நடைபயிற்சி திட்டத்தை தொடங்கி உள்ளது. திண்டுக்கல்லில் ஆர்.எம்.காலனி பகுதியில் இந்த இயக்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதேபோல் திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே அதிகளவு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இரவிலும் நடைபயிற்சி செய்யும் வகையில் தரம் உயர்த்தப்பட உள்ளது.

    இதற்காக ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது . சாலை ஓரத்தில் வண்ண பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட உள்ளது. மின் விளக்குகள், அலங்கார விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் 2 இடங்களில் நவீன கழிப்பறைகள், மனதை கவரும் பூந்தோட்டம், அமைதி சூழல் ஏற்படுத்தும் வகையில் அழகு செடிகள், தன்னம்பிக்கை வரிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உத்தரவு வந்தவுடன் பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அறையை யார் சுத்தம் செய்வது என்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • வீரபாபு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் கிளை சிறைச்சாலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வடமதுரை திடீர்நகரை சேர்ந்த வீரபாபு (வயது 25) என்பவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருடன் மதுரையை சேர்ந்த செல்வக்குமார் (25) என்ற கைதியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    அறையை யார் சுத்தம் செய்வது என்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சாப்பாட்டு தட்டால் வீரபாபு தலையில் செல்வக்குமார் பயங்கரமாக தாக்கினார். இதனையடுத்து வீரபாபு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து நகர் மேற்கு போலீசார் செல்வக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் சிறையில் இதுபோன்ற மோதல் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க செல்வக்குமார் உள்ளிட்ட 10 கைதிகளை மதுரை மத்திய சிறைக்கு மாற்றினர்.

    • பண்டிகை மற்றும் முக்கிய விழாக்கள் நடைபெறும் நாட்களில் அதிக அளவு காய்கறிகள் விற்பனையாகும்.
    • சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களு க்கும், கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது.

    தினசரி ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் நிலையில் பண்டிகை மற்றும் முக்கிய விழாக்கள் நடைபெறும் நாட்களில் அதிக அளவு காய்கறிகள் விற்பனையாகும். வழக்கமாக சனிக்கிழமை மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்படும்.

    தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் சந்தை செயல்படாது என்றும் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • மரக்கிளைகள் பஸ்களின் கண்ணாடிகள் மீது மோதி நொறுங்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து பெரும்பாறை, தடிய ன்குடிசை, குப்பம்மா ள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர் வழியாக பன்றிமலைக்கு அரசு பஸ் காலை, மாலை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் மலைத் தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்க ளில் மரங்கள் முறிந்து சாலையில் விழுவதும் பின்னர் ஊழியர்கள் அதனை அகற்றுவதும் நடந்து வருகிறது.

    இது மட்டுமின்றி உயர்ந்த மரங்களில் இருந்து மரக்கிளைகள் முறிந்து சாலையில் தொங்கியபடி உள்ளன. இந்த மரக்கிளைகள் பஸ்களின் கண்ணாடிகள் மீது மோதி நொறுங்கி விழுந்து விடுகின்றன. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் மரக்கிளைகளை கவனிக்கா விட்டால் அவர்கள் முகத்தை பதம்பார்த்து விடுகிறது. தடியன்குடிசை யில் இருந்து குப்பம்மா ள்பட்டி வரை 13 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

    இந்த மலைச்சாலைகளில் பல்வேறு இடங்களில் இது போன்று மரக்கிளைகள் அந்தரத்தில் தொங்கி விபத்தை ஏற்படுத்தி வருகின்றன. இரவு நேரங்களில் மழை பெய்து வந்தாலும் பகல் நேரங்களில் வெயில் அடிப்பதால் அது போன்ற சமயங்களில் அந்தரத்தில் தொங்கும் மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழனி இடும்பன் கோவிலில் 26 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    பழனி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை பகுதியில் இடும்பன் கோவில் அமை ந்துள்ளது. அறநிலை யத்துறைக்கு உட்பட்ட இக்கோவிலில் இடும்பன், கடம்பன், முருகப்பெரு மானுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. பழனிக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளத்தில் புனிதநீராடிவிட்டு இடும்பனை தரிசிப்பது வழக்கம். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் 26 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. எனவே பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை முடிவு செய்தது.

    முதற்கட்டமாக கோவி லில் சிதிலம் அடைந்த கட்டிடம், கோபுரம் ஆகியவை சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணி நடை பெற்றது. திருப்பணிகள் அனைத்தும் ஏறக்குறைய முடிவடைந்ததை அடுத்து கோவில் வெளிப்பகுதியில் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை அமைக்க ப்பட்டது. முதல் நாள் காலை 8.15 மணிக்கு மங்கல இசையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. திருவிளக்கு ஏற்றுதல், விநாயகர் பூஜை, தீபாராதனை, திருமுறை விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, கும்பத்தில் சக்தி எழ செய்தல், முதற்கால யாகம் நடைபெற்றது. யாக முடிவில் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சி நடை பெற்றது. பின்னர் இரவு 9 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமான கலசங்கள் பொருத்தப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு மங்கல இசை, 7.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 9 மணிக்கு மருந்து சாத்துதல், 9.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகம், தீபாராதனை, திருவடி விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சி நடந்தது.

    இன்று மங்கல இசை, திருப்பள்ளி எழுச்சியுடன் 4-ம் கால யாகம் தொடங்கியது. பின் யாகம் நிறைவு பெற்று, திருமுறை விண்ணப்பம், திருவடி விண்ணப்பம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு யாகசாலையில் இருந்து திருக்குடங்கள் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின் அவை கோவில் விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு களை கோவில் நிர்வா கத்தினர் செய்திருந்தனர்.

    ×