என் மலர்
நீங்கள் தேடியது "விற்பனை"
- ஒரு ஜோடி மஞ்சள் கொத்து அதிகபட்சமாக ரூ.40-க்கு விற்பனை ஆனது.
- மஞ்சள் கொத்து விற்பனையும், விலையும் நல்ல நிலையில் இருக்கும்.
பூதலூர்:
பொங்கல் பண்டிகை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும்.
இந்நாளில் புதிய மண் பானையில் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து கட்டி மண் அடுப்பில் புத்தரிசி, வெல்லம் போட்டு பொங்கலிடுவர்.
பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து ஆகியன முக்கியமானவை ஆகும். அதன்படி, திருக்காட்டுப்பள்ளி அடுத்த வளப்பகுடியில் மஞ்சள் கொத்து பயிர் செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
மஞ்சள் கொத்து பசுமையாக கட்ட வேண்டும் என்பதற்காக பொங்கலுக்கு முதல் நாளில் இருந்து விற்பனைக்கு வரும்.
கடந்த ஆண்டு ஒரு ஜோடி மஞ்சள் கொத்து அதிகபட்சமாக ரூ.40-க்கு விற்பனை ஆனது.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் மஞ்சள் கொத்து விற்பனையும், விலையும் நல்ல நிலையில் இருக்கும் என்பதால் பயிரிட்ட விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது.
- 1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் அதிக அளவில் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 3 மணி முதல் சந்தை வியாபாரம் தொடங்கியது. வழக்கமாக வரும் வியாபாரிகளை விட நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.
10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது. சந்தைக்கு அதிக அளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்த நிலையில் வெள்ளாடுகள் குறைந்த அளவே வந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
கடந்த வாரம் வரை ரூ.6500க்கு விற்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் இன்று ரூ.8,000 மட்டும் அதற்கும் மேலும் விற்பனையாகியது. இதே போல் கிராமங்களில் தீபாவளி பண்டிகை சமயங்களில் வீடுகளுக்கு வரும் உறவினர்களுக்கு நாட்டுக்கோழி சமையல் சமைத்து விருந்தளிப்பது முக்கியமான ஒன்றாகும். இதனால் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்தது.
1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது. கேட்ட விலைக்கு நாட்டுக்கோழிகள் விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று மட்டும் ரூ.3 கோடிக்கு மேல் ஆடு, கோழிகள் விற்பனையானது.
அய்யலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்த நிலையிலும் ஆட்டுச்சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சந்தை அமைந்துள்ள பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாரம் தோறும் சந்தை நடைபெறும் நாளில் இது போன்ற சூழல் நிலவுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.






