என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் மாநகரின் முக்கிய பகுதியாக திருப்பாதிரிப்புலியூர் பகுதி உள்ளது. இங்கு வணிக வளாகங்கள், துணிக் கடைகள், நகைக்கடைகள், மார்க்கெட் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் கடலூரில் இருந்து திருவந்திபுரம் வழியாக பண்ருட்டிக்கு செல்லக் கூடிய அனைத்து வாகனங்களும் சுப்பராய செட்டி தெரு வழியாக சென்று வருகின்றன. இதன்காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் இவ்வழியாக சென்று வருகின்றன.
இந்த சாலையில் பாதாள சாக்கடையில் மூடப்பட்டுள்ள சிமெண்டு கட்டைகள் சேதமடைந்தது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பாதாள சாக்கடை மீது சென்றால் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு உயிர்பலி அபாயம் நிலவி வருகிறது. தற்போது பாதாள சாக்கடை மீது வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாத வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த சாலையில் எப்போதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வரும். இந்த நிலையில் சாலையில் இரும்பு தடுப்பு கட்டை வைத்துள்ளதால் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.
ஆகையால் கடலூர் மாநகராட்சி நிர்வாகம் சேதமடைந்த சிமெண்ட் கட்டைகளை உடனுக்குடன் சரிசெய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிதம்பரம் மற்றும் சேத்தியாதோப்பு பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா வாகன சோதனை மேற்கொண்டார்.
அப்போது அதிக பாரம் ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களுக்கு இணக்க கட்டணம் மற்றும் வரி பெறப்பட்டது. அவற்றில் 2 லாரிகள் தகுதிச் சான்று பெறாமலும் அரசுக்கு வரி செலுத்தாமலும் இருந்தது தெரியவந்து. உடனே 2 லாரிகள், 2 கார்கள் தகுதிச்சான்று இல்லாமல் சிறை பிடிக்கப்பட்டது.
போக்குவரத்து அல்லாத காரில் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் சென்றதால் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. மொத்தம் 5 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மேல் நடவடிக்கைகாக நிறுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாட்டு வரி ரூ.45 ஆயிரமும், இணக்க கட்டணம் ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில் அரசுக்கு ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரூ வசூலிக்கப்பட்டது என வாகன ஆய்வாளர் விமலா தெரிவித்தார்.
தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருவதால் தியேட்டர்கள், பஸ்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மேலும் சமூக இடைவெளியை பயன்படுத்தி முகக்கவசம் அனைவரும் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தனர்.
அதன்படி நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 40 தியேட்டர்களிலும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து 50 சதவீதம் மக்கள் மட்டுமே தியேட்டர் உரிமையாளர்கள் அனுமதித்து வருகின்றனர்.
இன்று காலை தாசில்தார் பலராமன், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் கடலூர் நகர் பகுதியில் உள்ள தியேட்டர்களில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சமூக இடைவெளியை பயன்படுத்தி பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக திரையரங்கில் அனுமதிக்கப்படுகிறார்களா? மேலும் 50 சதவீதம் பொதுமக்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்களா? என்பதனையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் அவ்வப்போது தியேட்டர் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து, பாதுகாப்பாக பொருட்கள், முறையாக கையுறை அணிந்து தின்பண்டங்கள் உணவுப் பொருட்கள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.






