என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில் குடியிருப்பு பகுதியில் இறந்து கிடந்த முதியவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் வெளிச்செம்மண்டலம் ராஜீவ்காந்தி நகரில் நேற்று மாலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த முதியவரின் உடலை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த முதியவர், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சுற்றித்திரிந்து, பொதுமக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டு வந்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் யார்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடியிருப்பு பகுதியில் இறந்து கிடந்த முதியவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    திட்டக்குடி நகராட்சியில் மறுவரையறை செய்யுமாறு நகராட்சி ஆணையர் ஆண்டவன் அவர்களிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி நகராட்சியில் மறுவரையறை செய்யுமாறு நகராட்சி ஆணையர் ஆண்டவன் அவர்களிடம் பொதுமக்கள் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது.

    திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கோழியூர் ஊர் பகுதியில் தற்போது நடைபெற்ற வார்டு மறுவரையறையின் போது கோழியூர் ஊர்த்தெருவில் உள்ள தெருக்கள் இரண்டு வார்டுகளாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு வார்டு கீழ்க்கண்ட தெருக்களை உள்ளடக்கியதாக 1. கோழியூர் ரோட்டுத்தெரு , 2. கோழியூர் தெற்கு தெரு , 3. கோழியூர் மேலத்தெரு இவற்றுடன் தருமக்குடிக்காடு ரோட்டுத்தெரு என்ற தெருவை உள்ளடக்கிய பகுதிகள் புதிதாக ஒரு வார்டாக உருவாக்கப்பட்டுள்ளது .

    இதில் உள்ள 2011 ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆதிதிராவிட மக்கள் தொகை 343. இந்த மக்கள் தொகை இந்த வார்டில் இடம்பெற்றுள்ள தெரு அருந்ததியர் தெருவைச்சேர்ந்தது . இந்நிலையில் தற்பொழுது திட்டக்குடி நகராட்சியில் வார்டு வரையறை செய்யப்பட்டதில் 2011 ன் கணக்கெடுப்பின்படி வார்டு எண் .13 ல் இடம்பெற்ற 1. வதிட்டபுரம் காலணி பாட்டைத்தெருவும் , 2. தருமக்குடிக்காடு ரோட்டுத்தெருவும் வெவ்வேறு வார்டில் இடம்பெற்றுள்ளது . 

    இதில் வதிட்டபுரம் காலணி பாட்டைத்தெரு முழுவதும் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியாகும் . தருமக்குடிக்காடு ரோட்டுத்தெரு ஆதிதிராவிட ( அருந்ததியர் ) இன மக்கள் வசிக்கும் சிறு பகுதியாகவும் உள்ள நிலையில் 2011 ன் கணக்கெடுப்பின்படி ஆதிதிராவிட இன மக்கள் 343 பேர் இடம் பெற்றுள்ள தற்போது வார்டு எண் .19 ஐ ஆதிதிராவிட தொகுப்பிற்கு வழங்காமல் தருமக்குடிக்காடு ரோட்டுத்தெரு இடம்பெற்றுள்ள வார்டு எண் 24 ஐ ஆதிதிராவிட தொகுப்பில் இணைப்பது சட்ட விரோதமாகும் சட்டப்படி தற்போது வரையறை செய்யப்பட்ட வார்டில் 2011 ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டு வரையறையை மீண்டும் சட்டத்திற்கு உட்பட்டு மறுவரையறை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும் நாங்கள் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகிற 11 .1 .2022 அன்று காலை கோழியூர் பேருந்து நிறுத்தம் விருத்தாசலம்- திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

    திட்டக்குடியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து வணிகர்களும் கடைகள் மூடப்பட்டுள்ளன. உணவகங்கள் பார்சல் சர்வீஸ் மட்டும் செய்து வருகின்றனர்.
    திட்டக்குடி:

    கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) முழு ஊரடங்கு தமிழகம் பிறப்பிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது உணவு விடுதிகள் மற்றும் சிற்றுண்டிகள் தங்களது சொந்த வாகனத்தில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி திட்டக்குடியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து வணிகர்களும் கடைகள் மூடப்பட்டுள்ளன. உணவகங்கள் பார்சல் சர்வீஸ் மட்டும் செய்து வருகின்றனர். போக்குவரத்து முற்றிலும் முடங்கியது, திட்டக்குடி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. திட்டக்குடி போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறி வரும் வாகனங்களை தடுத்து அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கு மட்டும் கொரோனா இருந்து வந்த நிலையில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு உள்ளது.
    கடலூர்:

    தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான், கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டுத்தலங்கள் மூடுவது, பஸ், தியேட்டர், ஓட்டல்கள், சலூன் கடைகள், நகைக்கடைகள், துணிக்கடைகளில் 50 சதவீதம் பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும்.

    இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகஅரசு விதித்து உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கு மட்டும் கொரோனா இருந்து வந்த நிலையில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு உத்தரவு என தமிழக அரசு அறிவித்து உள்ள நிலையில் பொதுமக்கள் இன்று அதிகாலை முதல் கடலூர் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போட்டிபோட்டுக்கொண்டு மீன் வாங்கி சென்றதைக் காண முடிந்தது.

    இதனால் முன்பு இருந்தது போல் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் எந்தவித அரசு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் வழக்கம்போல் பொதுமக்கள் செயல்பட்டது கடலூர் மாவட்டத்தில் தொற்று நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் நிலவி உள்ளது.

    இருந்தபோதிலும் பொதுமக்கள் மீன் வாங்குவது மிக அதிகமாக இருந்ததால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்கள் போக்கில் இருந்து மாறாமல் அலட்சியமாக இருந்து வந்ததை காண முடிந்தது. 
    வெண்கரும்பூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்து, அரசின் சாதனைகள் குறித்து விளக்கிப்பேசினார்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அடுத்த வெண்கரும்பூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது . இதில் தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் நடந்த முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் துவக்கி வைத்து, அரசின் சாதனைகள் குறித்து விளக்கிப்பேசினார் . 

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.
    கடலூர் மாநகராட்சி நிர்வாகம் சேதமடைந்த சிமெண்ட் கட்டைகளை உடனுக்குடன் சரிசெய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகரின் முக்கிய பகுதியாக திருப்பாதிரிப்புலியூர் பகுதி உள்ளது. இங்கு வணிக வளாகங்கள், துணிக் கடைகள், நகைக்கடைகள், மார்க்கெட் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மேலும் கடலூரில் இருந்து திருவந்திபுரம் வழியாக பண்ருட்டிக்கு செல்லக் கூடிய அனைத்து வாகனங்களும் சுப்பராய செட்டி தெரு வழியாக சென்று வருகின்றன. இதன்காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் இவ்வழியாக சென்று வருகின்றன.

    இந்த சாலையில் பாதாள சாக்கடையில் மூடப்பட்டுள்ள சிமெண்டு கட்டைகள் சேதமடைந்தது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பாதாள சாக்கடை மீது சென்றால் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு உயிர்பலி அபாயம் நிலவி வருகிறது. தற்போது பாதாள சாக்கடை மீது வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாத வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் இந்த சாலையில் எப்போதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வரும். இந்த நிலையில் சாலையில் இரும்பு தடுப்பு கட்டை வைத்துள்ளதால் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    ஆகையால் கடலூர் மாநகராட்சி நிர்வாகம் சேதமடைந்த சிமெண்ட் கட்டைகளை உடனுக்குடன் சரிசெய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அதிகாரிகள் எந்த வகையிலும் விவசாயிகளை வஞ்சிக்காமல் போதிய வழிகாட்டுதல்படி இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என விவசாயிகளும் விவசாய சங்கங்களும் எதிர்பார்க்கின்றனர்.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் முழுவதும் வேளாண்மை பொறியியல் துறையான சிதம்பரம், விருத்தாசலம், கடலூர் ஆகிய அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும் என கடலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளனர். அதில் ஆன்லைன் மூலம் விவசாயிகள் பதிவு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். தங்கள் பெயரை வேளாண் உபகரண வெப்சைட்டில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஏப்ரல் 2021 மாதத்தில் அதற்கான இணைய தளத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். மீண்டும் பதிவு செய்யுங்கள் என்று தெரிவித்திருப்பது விவசாயிகள் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் பார்க்கின்றனர் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் சர்க்கரை ஆலை உள்ளது. அந்த ஆலைகளுக்கு ஏராளமான விவசாயிகள் அந்தந்த சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து கரும்பு பயிரிட்டு வருகின்றனர். கரும்பு வெட்டிய பின் அந்த தோகையை விவசாயிகள் தீ வைத்து கொளுத்துவதால் காற்று மாசுபடுவதுடன் வயலுக்கு உரமாவதும் தடுக்கப்படுகிறது.

    இதனை தவிர்க்க அரசு மானிய விலையில் மல்சர் என்ற கரும்பு தோகை தூளாக்கும் எந்திரத்தை இதுவரை ஒன்று கூட விவசாயிகளுக்கு வழங்கவில்லை. தற்பொழுதும் ஒதுக்கீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கடலூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர். தற்போது அறிவிப்பில் ஒரு நடவு எந்திரம் கூட ஒதுக்கப்படவில்லை. வைக்கோல் கட்டும் எந்திரம் ஒன்றுகூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதிகளவில் பயிர் செய்யும் விவசாயிகள் அந்த வைக்கோலை ஆள் வைத்து வீட்டிற்கு கொண்டு வர அதிக பொருள் மற்றும் நிதி சுமை ஏற்படுகிறது.
    இதனால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படுகிறது.

    தற்பொழுது ஆதிதிராவிடர் என்று தனி ஒதுக்கீடாக டிராக்டர் ரோட்டவேட்டர். பவர்டிரில்லர் ஒதுக்கீடு செய்கின்றனர். ஆனால் மற்ற பிரிவினருக்கு மட்டும் ஏன் ஒதுக்கீடு செய்யபடவில்லை இதனால் பெரும்பாலானோர் அதிருப்தியில் உள்ளனர்.

    தற்பொழுது 38 டிராக்டர்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மினி டிராக்டர் எத்தனை 2வீல்டிரைவ், 4வீல்டிரைவ் எத்தனை டிராக்டர் உள்ளது என்று தெரிவிக்காமல் ரகசியம் காக்கப்படுகிறது. இதனுடைய ரகசியம் என்ன என்று விவசாயிகள் கேள்விக்குறி வைத்துள்ளனர்.

    ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் எந்தெந்த கருவிகள் எந்தெந்த கருவிகள் என்று தெரிவிக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட ஒன்றியங்களுக்கு அதிகப்படியான கருவிகள் ஒதுக்க இருப்பதாக தெரியவருகிறது. அனைத்து ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு பாரபட்சம் இல்லாமல் சமமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    மேலும் கடலூர் டெல்டா மாவட்ட பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கடந்த முறை பதிவு செய்து தேர்ந்தெடுத்தவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு உபகரண கருவிகள் வழங்கப்படுமா? இல்லையா? அதை ரத்து செய்யப்படுமா? என்று கடலூர் மாவட்ட வேளாண் பொறியியல்துறை தெரிவிக்க வேண்டும் என பதிவு செய்த விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    டெல்டா மாவட்டத்தில் பெருமளவில் சம்பா நெல் சாகுபடி செய்து அறுவடை செய்த பின்பு அந்த வயலில் உளுந்து பச்சைப்பயிறு இதுபோன்ற பருப்பு வகைகள் பெரிய அளவில் பயிர் செய்து வருகின்றனர்.

    இதனை அறுவடை செய்து அடித்து சுத்தம் செய்ய பல தானிய அடிக்கும் கருவியும் மானிய விலையில் வழங்க வேண்டும். இதற்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தற்போது கடலூர் மாவட்டத்தில் 38 பெரிய டிராக்டர்கள் வழங்கப்பட உள்ளது. இதனை பெரு விவசாயிகள் மட்டும்தான் பயனடைய முடியும்.

    குறிப்பாக ஒரு டிராக்டர் விலை சுமார் ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.11 லட்சம் வரை எந்திரத்தின் தன்மைக்கேற்ப விற்கப்படுகிறது. ஒரு டிராக்டர் ரூ.11 லட்சம் என்றால் சிறிய விவசாயிகளுக்கு 5 பவர் டில்லர் வழங்கலாம். இதனால் சிறு விவசாயிகள் நூற்றுக்கணக்கான பேர் பயன் அடைவார்கள்.

    அதிகாரிகள் எந்த வகையிலும் விவசாயிகளை வஞ்சிக்காமல் போதிய வழிகாட்டுதல்படி இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என விவசாயிகளும் விவசாய சங்கங்களும் எதிர்பார்க்கின்றனர்.
    தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு சார்பில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற கல்லூரி மாணவி பங்களாதேஷில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பெண்கள் கபடி போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊருக்கு திருப்பியவருக்கு ராமநத்தம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் மேளதாளத்துடன் மலர் தூவியும் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு. 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த வேலு விவசாயி. லெட்சுமி இவர்களது மகளான மினாட்சி (20) இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் வேதியியல் 3 ஆண்டு படித்து வருகின்றார். இவர் பங்காலதேஷ் டாக்கா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் கபடி போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 7 பேர் கலந்து கொண்டனர். 

    இதில் மீனாட்சியும் ஒருவர் ஆவர் இவர் கடந்த 27-10-2021 முதல் 30-10-2021 வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பெண்கள் அணியின் கேப்டனாக இருந்து விளையாடி வெள்ளி பதக்கம் வென்றார். இப்பொழுது 29-12-2021முதல் 31-12-2021வரை பங்களாதேஷ் டாக்காவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பெண்கள் கபடி போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளனர். 

    தங்கம் வென்ற மீனாட்சி கூறுகையில் இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட அனைவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு சார்பில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    போக்குவரத்து அல்லாத காரில் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் சென்றதால் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் மற்றும் சேத்தியாதோப்பு பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா வாகன சோதனை மேற்கொண்டார்.

    அப்போது அதிக பாரம் ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களுக்கு இணக்க கட்டணம் மற்றும் வரி பெறப்பட்டது. அவற்றில் 2 லாரிகள் தகுதிச் சான்று பெறாமலும் அரசுக்கு வரி செலுத்தாமலும் இருந்தது தெரியவந்து. உடனே 2 லாரிகள், 2 கார்கள் தகுதிச்சான்று இல்லாமல் சிறை பிடிக்கப்பட்டது.

    போக்குவரத்து அல்லாத காரில் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் சென்றதால் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. மொத்தம் 5 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மேல் நடவடிக்கைகாக நிறுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாட்டு வரி ரூ.45 ஆயிரமும், இணக்க கட்டணம் ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில் அரசுக்கு ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரூ வசூலிக்கப்பட்டது என வாகன ஆய்வாளர் விமலா தெரிவித்தார்.

    முக கவசம் அணிவதின் கட்டாயம் குறித்து அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் டி.எஸ்.பி., சிவா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் அறிவுறுத்தலின் பேரில் திட்டக்குடி டி.எஸ்.பி., சிவா தலைமையிலான போலீசார் நேற்று திட்டக்குடி பேருந்து நிறுத்தத்தில் அங்கு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர்களை அழைத்து முக கவசம் அணிவதின் கட்டாயம், தடுப்பூசியின் பலன்கள், தனிமனித இடைவெளி குறித்து அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் டி.எஸ்.பி., சிவா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    அதுசமயம் டி.எஸ்.பி., சிவா பொதுமக்களிடம் பேசும்போது தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் வைரஸால் மிக வேகமாக பரவி வருகிறது எனவே பொதுமக்கள் அரசு அறிவிப்புகளை பின்பற்றவேண்டும் மேலும் ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் திட்டக்குடி காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட சின்னக்கடை தெரு, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் தரமற்ற சாலை அமைத்ததாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புவனகிரி:

    புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட சின்னக்கடை தெரு, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 99 லட்சம் மதிப்பில் தார்சாலை போடப்பட்டது.

    தார்சாலை போட்டு சில தினங்களுக்கு உள்ளே பெயர்ந்து விட்டது என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் இதுநாள் வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் இன்று காலை திடீர் என்று பெருமத்தூர் பஸ் நிலையம் அருகில் சிதம்பரம் விருத்தாசலம் சாலையில் சாலை மறியல் செய்தனர். 

    இதனை அறிந்த பேரூராட்சி நிர்வாகம் மற்றும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    தியேட்டர் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து, கையுறை அணிந்து தின்பண்டங்கள், உணவுப் பொருட்கள் வழங்க வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
    கடலூர்:

    தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருவதால் தியேட்டர்கள், பஸ்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    மேலும் சமூக இடைவெளியை பயன்படுத்தி முகக்கவசம் அனைவரும் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தனர்.

    அதன்படி நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 40 தியேட்டர்களிலும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து 50 சதவீதம் மக்கள் மட்டுமே தியேட்டர் உரிமையாளர்கள் அனுமதித்து வருகின்றனர்.

    இன்று காலை தாசில்தார் பலராமன், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் கடலூர் நகர் பகுதியில் உள்ள தியேட்டர்களில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சமூக இடைவெளியை பயன்படுத்தி பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக திரையரங்கில் அனுமதிக்கப்படுகிறார்களா? மேலும் 50 சதவீதம் பொதுமக்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்களா? என்பதனையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் அவ்வப்போது தியேட்டர் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து, பாதுகாப்பாக பொருட்கள், முறையாக கையுறை அணிந்து தின்பண்டங்கள் உணவுப் பொருட்கள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.

    ×