என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார்
சிதம்பரத்தில் அதிரடி- 5 வாகனங்கள் பறிமுதல்
போக்குவரத்து அல்லாத காரில் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் சென்றதால் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது.
சிதம்பரம்:
சிதம்பரம் மற்றும் சேத்தியாதோப்பு பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா வாகன சோதனை மேற்கொண்டார்.
அப்போது அதிக பாரம் ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களுக்கு இணக்க கட்டணம் மற்றும் வரி பெறப்பட்டது. அவற்றில் 2 லாரிகள் தகுதிச் சான்று பெறாமலும் அரசுக்கு வரி செலுத்தாமலும் இருந்தது தெரியவந்து. உடனே 2 லாரிகள், 2 கார்கள் தகுதிச்சான்று இல்லாமல் சிறை பிடிக்கப்பட்டது.
போக்குவரத்து அல்லாத காரில் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் சென்றதால் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. மொத்தம் 5 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மேல் நடவடிக்கைகாக நிறுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாட்டு வரி ரூ.45 ஆயிரமும், இணக்க கட்டணம் ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில் அரசுக்கு ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரூ வசூலிக்கப்பட்டது என வாகன ஆய்வாளர் விமலா தெரிவித்தார்.
சிதம்பரம் மற்றும் சேத்தியாதோப்பு பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா வாகன சோதனை மேற்கொண்டார்.
அப்போது அதிக பாரம் ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களுக்கு இணக்க கட்டணம் மற்றும் வரி பெறப்பட்டது. அவற்றில் 2 லாரிகள் தகுதிச் சான்று பெறாமலும் அரசுக்கு வரி செலுத்தாமலும் இருந்தது தெரியவந்து. உடனே 2 லாரிகள், 2 கார்கள் தகுதிச்சான்று இல்லாமல் சிறை பிடிக்கப்பட்டது.
போக்குவரத்து அல்லாத காரில் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் சென்றதால் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. மொத்தம் 5 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மேல் நடவடிக்கைகாக நிறுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாட்டு வரி ரூ.45 ஆயிரமும், இணக்க கட்டணம் ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில் அரசுக்கு ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரூ வசூலிக்கப்பட்டது என வாகன ஆய்வாளர் விமலா தெரிவித்தார்.
Next Story






