என் மலர்
செங்கல்பட்டு
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 435 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 450 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 462 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,637 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட் டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 391 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 25 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். மற்றவர்களுக்கு கொரோனா பாதித்தவர்களுடன் உள்ள தொடர்பால் நோய் தாக்கி உள்ளது.
கடந்த வாரம் 6-ந்தேதி நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வெறும் 145 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது. ஒரு வாரத்தில் 246 பேருக்கு நோய் பரவி உள்ளது. கோயம்பேடு சந்தையுடன் உள்ள தொடர்பே நோய் தொற்றுக்கு காரணம் ஆகும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துவிட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று தொற்று உறுதியான 32 பேரில் 25 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் ஆவர். இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 388ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்ட 388 பேரில் 150 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்திலும் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் இன்று ஒருநாளில் மட்டும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நசரத்புரத்தில் 18 பேர், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரத்தில் 4 பேர், பம்மலில் 3 பேர், திருநீர்மலையில் 2 பேர் ரங்கநாதபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிழக்கு தாம்பரத்தில் 2 பேர், ஜமீன் பல்லாவரத்தில் ஒருவருக்கு இன்று கொரோனா உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 133 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருப்போரூர் அருகே கோனேரிக்குப்பம் கிராமத்துச் சாலை....
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படர்ந்து கிடக்கும் பூசணி கொடிகள். அதில் உருண்டு திரண்டு காய்த்து காட்சி தரும் பூசணிக்காய்கள்....
பார்ப்போருக்கு பரவசம் அளிக்கிறது. ஆனால் அதை பயிரிட்ட விவசாயி ராஜகோபால் பரிதாபத்தோடு வயல்கரையிலேயே கண்ணீருடன் காத்திருக்கிறார். பொழுது புலர்ந்ததும் வயல்கரைக்கு வந்து விடுகிறார். அந்த வழியாக யாராவது வியாபாரிகள், புதுமுகங்கள் சென்றால் அய்யா, இது என் தோட்டம் 10 டன் அளவுக்கு பூசணிக்காய் உள்ளது.
கிலோ 4 ரூபாய்க்கு கூட தர தயாராக உள்ளேன். யாராவது இதை வாங்கி என்னை காப்பாற்றுங்கள் அய்யா என்று அவர் கெஞ்சுவதை பார்க்க பரிதாபமாக உள்ளது. ராஜகோபாலும் அவரது மனைவியும் 3 மாதங்களுக்கு முன்பு 2 ஏக்கர் பரப்பளவில் வழக்கம் போல் பூசணி பயிரிட்டுள்ளார்கள். இதற்காக உரம், பூச்சி மருந்து வாங்குவது, வேலை செய்வது என்று ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ளார்.
எப்படியாவது பூசணிக்காய் நமக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு வயற்காட்டில் கணவன்-மனைவி இருவரும் கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு நல்ல பலனும் கிடைத்தது. பூசணிக்காய் அற்புதமாக காய்த்து விளைந்தது. ஆனால் எங்கிருந்தோ வந்த கொரோனா ராஜகோபாலின் விவசாயத்தோடும் விளையாடி விட்டது. வழக்கமாக கிலோ 10 ரூபாய் முதல் 12 ரூபாய்க்கு விற்பனை செய்வார். ஆனால் இப்போது வாகன போக்குவரத்து இல்லாமலும், வாங்குவதற்கு ஆட்கள் இல்லாமலும் அப்படியே செடியில் கிடக்கிறது.
குறைந்த விலைக்காவது விற்று வாங்கிய கடன் 50 ஆயிரம் ரூபாயையும் கொடுத்து விட வேண்டும் என்று தவித்துக்கொண்டிருக்கிறார். வழக்கமாக பூசணிக்காய் கொடுக்கும் கோயம்பேடு சந்தைக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் வியாபாரிகளோ விவசாயியின் வயிற்றில் அடித்து அடிமாட்டு விலைக்கு அதாவது கிலோ 1 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறேன்.
ஆனால் கோயம்பேட்டுக்கு உன் செலவில்தான் அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள். லாரி வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி, இதர செலவுகள் அனைத்தையும் கணக்கிட்டால் விற்ற காசை விட கூடுதலாக அவர் கையில் இருந்துதான் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது கோயம்பேட்டில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கிறது.
கொரோனா தாக்கத்தில் சிரமப்படும் ஒவ்வொருவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்பவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் மரணம் துரத்தும் இந்த நேரத்திலும் பணத்துக்காக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
யாராவது கை கொடுப்பார்களா? என்று ராஜகோபால் காத்துக் கொண்டிருக்கிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக சொல்வதுண்டு. ஆனால் இந்த பரிதாபத்துக்குரிய விவசாயி தன் முழு சோகத்தை மறைக்காமல் சொல்லி விட்டார். நல்ல மனம் படைத்த வியாபாரிகள் அல்லது நிறுவனங்கள் இவருக்கு கை கொடுப்பார்களா? தொடர்புக்கு-98844 82094.






