என் மலர்
வணிகம் & தங்கம் விலை
- மாதத்திற்கு இரண்டு முறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.5.50 காசுகள் உயர்ந்து ரூ.1,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.
- ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது.
- 2024-2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2024-2025-ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதம் என இந்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 2023-2024 நிதியாண்டில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.5 சதவீதமாக இருந்தது. தற்போது 2024-25 நிதியாண்டில் அதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதமாக குறைந்துள்ளது. தயாரிப்பு மற்றும் சுரங்கத்துறையின் மோசமான செயல்பாடு இந்த குறைவுக்கு காரணம் ஆகும்.
2024-2025-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது. 2024-2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
முதலில் 6.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 2-வது கட்டமாக 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டில் முதலில் 8.2 சதவீதமாக இருக்கும் நிலையில், பின்னர் 9.2 சதவீதம் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்தது குறிப்பிடத்தக்கது.
- மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் கடந்த ஒரு மாதத்தில் 4302.47 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.
- சென்செக்ஸின் 30 நிறுவனங்களில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு மட்டும் உயர்வை சந்தித்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 74,612.43 புள்ளிகளில் நிறைவடைந்திருந்தது.
நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எதிராக 10 சதவீத வரி விதிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் இன்று காலை வர்த்தகம் சுமார் 200 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 74,201.77 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் தொடர்ந்து இறங்குவதாகவே இருந்தது. இன்று அதிகபட்சமாக 74,282.43 புள்ளிகளில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக 73,141.27 புள்ளிகளில் வர்த்தகமானது.
இறுதியாக வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 1414.33 புள்ளிகளில் சரிந்து மும்பை பங்குச் சந்தை 73198.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. சுமார் 1.90 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் மோசமான சரிவால் முதலீட்டார்கள் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளனர். மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் இன்று காலை 7.46 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.85 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 556.56 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
டெக் மஹிந்திரா, இந்துஸ்இந்த் வங்கி, மாருதி, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்போசிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டைடன் பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு மட்டும் இன்று 1.86 சதவீதம் (31.70 ரூபாய்) உயர்ந்துள்ளது. தற்போது இதன் பங்கு 1732.40 ஆக உள்ளது.
சென்செக்ஸ் கடந்த ஐந்து நாட்களில் 2236.16 புள்ளிகளும், ஒரு மாதத்தில் 4302.47 புள்ளிகளும், 6 மாதத்தில் 9361.74 புள்ளிகளும் சரிந்துள்ளன.
இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தகத்தில் 22545.05 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை 22433.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 22,450.35 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22,104.85 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
இறுதியாக 420.35 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 22124.70 புள்ளிகளில் நிறைவடைந்தது.
- சென்செக்ஸ் 1000 புள்ளிகள் 73,738.11 சரிவுடன் தொடங்கியது.
- ஐடி, டெலிகாம், மெட்டல் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவன பங்குகள் மிகவும் வீழ்ச்சியடைந்தன.
வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப்ரவரி 28) மும்பை பங்குச் சந்தை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது.
காலை நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் 73,738.11 சரிவுடன் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 22,300-க்கு கீழ் சென்றதால் வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஐடி, டெலிகாம், மெட்டல் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவன பங்குகள் மிகவும் வீழ்ச்சியடைந்தன. இந்த தொடர் சரிவு இன்னும் சில தினங்களுக்கு தொடரும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கத்தின் விலை சந்தையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 21-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 25-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து, கடந்த 25-ந்தேதி, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மறுநாளே, அதாவது 26-ந்தேதி, விலை குறைந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, முறையே ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 10-க்கும், ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,960-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.63,680-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 105 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
26-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,400
25-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,600
24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440
23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
27-02-2025- ஒரு கிராம் ரூ.106
26-02-2025- ஒரு கிராம் ரூ.106
25-02-2025- ஒரு கிராம் ரூ.108
24-02-2025- ஒரு கிராம் ரூ.108
23-02-2025- ஒரு கிராம் ரூ.108
- மீதமுள்ள பங்குகள் பொது பங்குகளாக இருக்க வேண்டும்.
- பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு அதிக அளவு பங்குகளை தன்வசம் வைத்துள்ளது.
5 பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றிலும் தனது 20 சதவீத பங்கை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் விதிமுறைகளை பின்பற்றும் விதமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின், புரோமோட்டார் வசம் 75 சதவிகித பங்குகள்தான் இருக்க வேண்டும் என்பதே செபியின் விதிமுறை.
மீதமுள்ள பங்குகள் பொது பங்குகளாக இருக்க வேண்டும். ஆனால் பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு அதிக அளவு பங்குகளை தன்வசம் வைத்துள்ளது.
எனவே மகாராஷ்டிரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆகியவற்றின் 20 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்க விரைவில் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்படுகிறது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான நாட்கள் ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 20-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர், விலை குறைவதும், ஏறுவதுமாக விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,010-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,080-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,400
25-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,600
24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440
23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-02-2025- ஒரு கிராம் ரூ.106
25-02-2025- ஒரு கிராம் ரூ.108
24-02-2025- ஒரு கிராம் ரூ.108
23-02-2025- ஒரு கிராம் ரூ.108
22-02-2025- ஒரு கிராம் ரூ.108
- கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான நாட்கள் ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 20-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி புதிய உச்சத்தை தொட்டது.
அதன் பின்னர், விலை குறைந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 55-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,050-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,600
24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440
23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-02-2025- ஒரு கிராம் ரூ.108
24-02-2025- ஒரு கிராம் ரூ.108
23-02-2025- ஒரு கிராம் ரூ.108
22-02-2025- ஒரு கிராம் ரூ.108
21-02-2025- ஒரு கிராம் ரூ.109
- நிஃப்டி புள்ளிகள் 0.01% சதவீதம் சரிவுடன் 22,550 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது.
- தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தைகளுக்கு நாளை விடுமுறையாகும்.
வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (பிப்ரவரி 25) பங்குச்சந்தை சற்று தட்டையாக தொடங்கியுள்ளது. காலை நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 290 புள்ளிகள் உயர்வுடன் 74,743 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி புள்ளிகள் 0.01% சதவீதம் சரிவுடன் 22,550 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. எல்என்டி, பவர் கிரிட் ஆகியவற்றின் பங்குகள் இதில் அடிவாங்கின.
ஆனால் சிறிது நேரத்தின் பின், நிஃப்டி புள்ளிகள் 0.24 சதவீதம் உயர்ந்து தற்போது 22,610 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மஹிந்திரா, பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை நிஃப்டி50 இல் லாபத்தைக் கண்டுள்ளன.
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தில் 5 நாட்கள் இயங்கும். இந்நிலையில் நாளை (பிப்ரவரி 26 - புதன்கிழமை) மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தைகளுக்கு நாளை விடுமுறையாகும்.
- சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் விற்பனையாகிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பெரும்பாலும் உயர்ந்த வண்ணமே உள்ளது. நேற்று தங்கம் விலை சற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,055-க்கும் ஒரு சவரன் ரூ.64,440-க்கும் விற்பனையாகிறது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,075-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440
23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200
20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-02-2025- ஒரு கிராம் ரூ.108
23-02-2025- ஒரு கிராம் ரூ.108
22-02-2025- ஒரு கிராம் ரூ.108
21-02-2025- ஒரு கிராம் ரூ.109
20-02-2025- ஒரு கிராம் ரூ.109
- நிஃப்டி 165 புள்ளிகள் (0.73 சதவீதம்) வீழ்ச்சியுடன் தொடங்கி
- ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன
வாரத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 24) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
இன்று காலை 9.15 நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 536.05 புள்ளிகள் (0.71 சதவீதம்) சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 74,775 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 165 புள்ளிகள் (0.73 சதவீதம்) வீழ்ச்சியுடன் தொடங்கி 22,630 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஐடிசி, சன் பார்மா, மாருதி, சிப்லா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன.
கோட்டக் மஹிந்திரா,ஆக்சிஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஏசியன் பெயிண்ட், டைட்டன், ஹிந்துஸ்தான் லீவர், ஹீரோ மோட்டார்ஸ், பிரிட்டானியா, டாடா ஸ்டீல், அப்பல்லோ மருத்துவமனை பங்குகள் சரிவில் உள்ளன.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பெரும்பாலும் உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,055-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,440-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200
20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560
19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-02-2025- ஒரு கிராம் ரூ.108
22-02-2025- ஒரு கிராம் ரூ.108
21-02-2025- ஒரு கிராம் ரூ.109
20-02-2025- ஒரு கிராம் ரூ.109
19-02-2025- ஒரு கிராம் ரூ.108






