search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GDP"

    • இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு வெறும் 5 சதவீதம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது.
    • 2023-24-ம் நிதியாண்டில் குடும்பங்களின் செலவீனங்கள், முதலீடுகள் கணிசமாக பலவீனமடைந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்திய குடும்பங்களின் கடன் மதிப்புகள் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

    அதேசமயம் குடும்பங்களின் நிகர நிதிச் சேமிப்புகளும் குறைந்துள்ளது.

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால், இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்புகள் வெறும் 5 சதவீதம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது.

    2023-24-ம் நிதியாண்டில் குடும்பங்களின் செலவீனங்கள் மற்றும் முதலீடுகள் என இரண்டும் கணிசமாக பலவீனமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
    • இது இந்திய பொருளாதாரத்தின் வலிமையையும், திறனையும் காட்டுகிறது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2-வது காலாண்டில் 7.6 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. 2023-24 நிதியாண்டின் 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

    இது இந்தியப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்ச்சியை காட்டுகிறது. கட்டுமானத்துறை, உற்பத்தித் துறையில் கண்டுள்ள வளர்ச்சி விகிதங்களே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில், 2023-24 மூன்றாம் காலாண்டில் பதிவாகியுள்ள 8.4 சதவீத ஜிடிபி வளர்ச்சி என்பது இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும் அதன் திறனையும் காட்டுகிறது. 140 கோடி இந்தியர்கள் சிறந்த வாழ்க்கை வாழவும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கவும் உதவும் என பதிவிட்டுள்ளார்.

    • ஜப்பானிய மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது
    • ஜப்பானில் அனைத்து துறைகளிலும் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது

    கிழக்கு ஆசியாவில் வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு, ஜப்பான்.

    உலக பொருளாதாரத்தில், உள்நாட்டு மொத்த உற்பத்தி (Gross Domestic Product) அடிப்படையில், ஜப்பான், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளுக்கு பிறகு 3-ஆம் இடத்தில் இருந்து வந்தது.

    ஆனால், கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களால் ஜப்பானின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது.

    தற்போது, ஜப்பானிலிருந்து வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வ தகவல்களின்படி, ஜப்பானிய பொருளாதாரம், கடந்த ஆண்டை விட 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இருந்தும், இதுவரை தக்க வைத்திருந்த 3-ஆம் இடத்திலிருந்து நகர்ந்து, 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதன் மூலம், ஜெர்மனி, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.

    அதிகாரபூர்வ தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க டாலர் மதிப்பில் 2023க்கான ஜப்பானிய ஜிடிபி, $4.2 டிரில்லியன் எனும் அளவில் உள்ளது. $4.5 டிரில்லியன் எனும் மதிப்பில் ஜெர்மனி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    ஒரு தசாப்தத்திற்கு முன் 2-வது இடத்தை சீனாவிடம் பறி கொடுத்தது ஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.

    2022 மற்றும் 2023 ஆண்டுகளில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய "யென்" (Yen) கரன்சியின் மதிப்பு முறையே 18 சதவீதம் மற்றும் 7 சதவீதம் என சரிந்தது.

    ஜப்பானின் மத்திய ரிசர்வ் வங்கியான பேங்க் ஆஃப் ஜப்பான் (Bank of Japan), வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளதால், கரன்சியின் மதிப்பு பெரிதும் குறைந்தது.


    மேலும், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாட்டு பொருளாதாரமும் ஏற்றுமதியை சார்ந்தவை.

    "சூரியன் முதலில் உதிக்கும் பூமி" (Land of Rising Sun) என அழைக்கப்படும் ஜப்பானில், அண்மைக்காலமாக, மக்கள் தொகை எண்ணிக்கை குறைவதாலும், வயதானவர்கள் அதிகரிப்பதாலும், தம்பதியர் குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பாததாலும், அனைத்து துறைகளிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தி பெரிதும் குறைந்துள்ளது.

    இந்த சூழ்நிலையில், அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையாலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளாலும், இந்தியா, இந்த தசாப்தத்திற்குள் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3-ஆம் இடத்தை பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    • இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2023 இல் கணிக்கப்பட்ட 6.3 சதவீதத்தை விட சற்று குறைவாகும்.
    • வலுவான உள்நாட்டு தேவையுடன் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும்.

    2023-ம் ஆண்டில் உலகளாவிய சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு, உலகின் அதிவேக வளர்ச்சி விகிதத்துடன் பொருளாதாரமாகத் தொடர்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2023 இல் கணிக்கப்பட்ட 6.3 சதவீதத்தை விட சற்று குறைவாகும். ஐ.நா. அறிக்கையின்படி, வலுவான உள்நாட்டு தேவையுடன் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்று இந்த ஆண்டு வளர்ச்சியைத் தொடரும்.

    பலவீனமான சொத்துச் சந்தையிலிருந்து சீனா சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால் தனியார் முதலீட்டின் பற்றாக்குறை அரசாங்கம் தலைமையிலான உள்கட்டமைப்பு திட்டங்களால் ஓரளவு ஈடுசெய்யப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, அரசாங்க உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் 2023-ல் இந்தியாவின் வலுவான முதலீட்டு செயல்திறனுக்கு சக்தி அளித்தன.

    இந்தியாவைத் தவிர, உலகின் அனைத்து முக்கியப் பொருளாதாரங்களும் 2023-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உற்பத்தி கொள்முதல் நிர்வாக குறியீட்டில் வீழ்ச்சியைக் கண்டன.

    தொழில்மயமான நாடுகளுடன் ஒப்பிடுகையில், வளரும் பொருளாதாரங்களில் முதலீடு மிகவும் நெகிழ்ச்சியுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2023-ல் தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் முதலீடு வலுவாக இருக்கிறது.

    காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகள் 2023-ம் ஆண்டில் இப்பகுதியில் தொடர்ந்து மோசமான தாக்கத்தை ஏற்படுத்தின. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வறட்சி கணிசமாக தீவிரமடைந்தது, இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசத்தின் பெரும்பகுதியை பாதித்தது. அதே நேரத்தில் பாகிஸ்தானில் சராசரிக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் நாற்பது ஆண்டுகளில் ஆகஸ்டு மிகவும் வறட்சியான மாதங்களில் ஒன்றாகும், இது மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முக்கியமான பிரதான பயிர்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தியது.

    2023 இல் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் மோசமான சூழ்நிலை தவிர்க்கப்பட்டாலும், மெதுவான வளர்ச்சியின் நீடித்த காலம் இன்னும் சாத்தியமாகத் தெரிகிறது.

    பல்வேறு காரணிகளால் 2024-ல் உலகளாவிய உள்நாட்டு மொத்த உற்பத்தி 2023-ம் ஆண்டு மதிப்பீட்டை (2.7) விட 2.4 சதவீதமாக இருக்கும் எனக் கண்கீடப்பட்டுள்ளது.

    2025 ஆம் ஆண்டில் உலகளாவிய உள்நாட்டு மொத்த உற்பத்தி படிப்படியாக 2.7 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இது கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சி விகிதமான 3 சதவீதத்தை விடக் குறைவாகவே இருக்கும்.

    • 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • உற்பத்தி துறையின் மோசமான செயல்பாடு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நடப்பு நிதியாண்டின் (2022-2023) அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

    உற்பத்தி துறையின் மோசமான செயல்பாடு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 11.2 சதவீதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என தனது சமீபத்திய கணிப்பில் தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது. இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதத்தில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இது 7.8 சதவீதம் அதிகம் ஆகும். இத்தகவலை மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது

    ஜி.டி.பி எனப்படும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவிகிதம் என கணக்கிடப்பட்டுள்ளது. #GDP
    புதுடெல்லி:

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவிகிதமாக உள்ளது என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 5.59 சதவிகிதம் மட்டுமே ஜிடிபி வளர்ச்சி இருந்தது. அதன்பின் 2017 இறுதி காலாண்டில் 7.7 சதவிகிதமாக உயர்ந்த ஜி.டி.பி தற்போது 8.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

    நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த நான்காண்டுகளில் மிகவும் அதிகமான ஜி.டி.பி வளர்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. #GDP
    2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர்களாக உயர்த்தும் வகையில் அரசு முயற்சித்து வருவதாக ஜனாதிபதி ராம் நாத்கோவிந்த் தெரிவித்துள்ளார். #RamNathKovind #GDP
    ஏதென்ஸ் :

    கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 16-ம் தேதி கிரீஸ் சென்றடைந்தார். அந்நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் உள்ள புலம்பெயர் இந்தியர்களிடையே இன்று உரையாற்றும்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    பழங்கால பண்பாடு மற்றும் கலச்சார கொள்கைகளை இந்தியா மற்றும் கிரீஸ் நாடுகள் இந்த உலகிற்கு வழங்கியுள்ளன. மிகவும் தொன்மையானதும் ஆழமானதுமான உறவு இவ்விரண்டு நாட்டுக்கும் இடையே நிலவுகின்றது. கிரேக்க வரலாற்று அறிஞர் மெகஸ்தேன்ஸ் ‘இண்டிகா’ எனும் புத்தகத்தின் வாயிலாக இந்தியாவை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவராவார்.

    புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சாதனைகளை பார்த்து நாங்கள் பெருமைப்படுகிறோம். தற்போது இந்தியாவில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் உகந்த சூழல் நிலவுகிறது. இதை பயன்படுத்தி தாய் நாட்டின் வளர்ச்சிக்காக புலம்பெயர் இந்தியர்கள் உதவுவார்கள் என நான் நம்புகிறேன்.

    இந்தியாவின் வளர்ச்சி சீரான வேகத்தில் அதிகரித்து செல்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், வரும் 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 5 டிரில்லியன் டாலர் எனும் அளவிற்கு இருக்கும். அதாவது உலகின் மூன்றாவது மிகப்பெரிய நுகர்வோர் சந்தையை உடைய நாடாக இந்தியாவை முன்னேற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் தற்போதைய பொருளாதார மதிப்பு 2.5 டிரில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #RamNathKovind #GDP
    ×