என் மலர்
வணிகம் & தங்கம் விலை
- பைபிட் (Bybit) நிறுவனம் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது.
- திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து வெவ்வேறு வாலட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைபிட் (Bybit) மிகப்பெரிய கிரிப்டோ ஹேக்கிங் திருட்டுக்கு இரையாகி உள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) பைபிட் நிறுவனம், அதன் ஆஃப்லைன் ஹாட் வாலட்களில் ஒன்றிலிருந்து Ethereum (ETH) திருடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் அறிக்கைப்படி, 401,346 ETH டோக்கன் (1.13 பில்லியன் டாலர் மதிப்பு) பைபிட்டின் ஹாட் வாலட்டில் இருந்து அடையாளம் தெரியாத வாலட் முகவரிக்கு மாற்றப்பட்டது.
பரிமாற்றத்தைத் தொடர்ந்து, திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து வெவ்வேறு வாலட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் விசாரித்து வருகிறோம். இதனால் மற்ற பரிமாற்றங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பைபிட் தலைமை நிர்வாக அதிகாரி பென் சோவ் தெரிவித்துள்ளார்.
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து சவரன் ரூ.64,200-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து சவரன் ரூ.64,200-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,045-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,360-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200
20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560
19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280
18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760
17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-02-2025- ஒரு கிராம் ரூ.109
20-02-2025- ஒரு கிராம் ரூ.109
19-02-2025- ஒரு கிராம் ரூ.108
18-02-2025- ஒரு கிராம் ரூ.108
17-02-2025- ஒரு கிராம் ரூ.108
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400-ம், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.240-ம் நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.520-ம் நேற்று சவரனுக்கு ரூ.280-ம் உயர்ந்தது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,560-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,025-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560
19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280
18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760
17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-02-2025- ஒரு கிராம் ரூ.109
19-02-2025- ஒரு கிராம் ரூ.108
18-02-2025- ஒரு கிராம் ரூ.108
17-02-2025- ஒரு கிராம் ரூ.108
16-02-2025- ஒரு கிராம் ரூ.108
- நாள்தோறும் உயர்ந்து வரும் தங்கம் விலையால் மக்கள் கவலையில் உள்ளனர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400-ம், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.240-ம் நேற்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,280-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,070-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,560-க்கும் விற்பனையாகிறது. நாள்தோறும் உயர்ந்து வரும் தங்கம் விலையால் மக்கள் கவலையில் உள்ளனர். கடந்த திங்கட்கிழமையில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடக்கத்தக்கது.

கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280
18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760
17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120
15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
19-02-2025- ஒரு கிராம் ரூ.108
18-02-2025- ஒரு கிராம் ரூ.108
17-02-2025- ஒரு கிராம் ரூ.108
16-02-2025- ஒரு கிராம் ரூ.108
15-02-2025- ஒரு கிராம் ரூ.108
- வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் எல்.ஐ.சி.க்கு ரூ.18,385 கோடி இழப்பு ஏற்பட்டது.
- அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
இந்திய பங்குச் சந்தை தொடர்ச்சியான சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களில் மட்டும் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளனர்.
தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
இந்நிலையில், எல்.ஐ.சி. முதலீடு செய்த 330 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் அந்நிறுவனத்துக்கு கடந்த ஒன்றரை மாதத்தில் ரூ.84,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில், ITC மூலம் ரூ.11,863 கோடியும் லார்சன் & டூப்ரோ மூலம் ரூ.6,713 கோடியும் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் ரூ.5,647 கோடியும் எல்.ஐ.சி.க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.18,385 கோடியும், தகவல் தொழில்நுட்ப பங்குகளின் மூலம் ரூ. 8,981 கோடியும், உள்கட்டமைப்பு பங்குகளின் மூலம் ரூ. 8,313 கோடியும், மின் உற்பத்தி பங்குகளின் மூலம்(ரூ. 7,193 கோடியும் மருந்துப் பொருட்கள் பங்குகளின் மூலம் (ரூ. 4,591 கோடியும் எல்.ஐ.சி.க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
- இன்றைய நாளின் தொடக்கத்தில் சரிவுடன் காணப்பட்டது.
- தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 38.60 புள்ளிகள் அதிகரித்தது.
பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (புதன் கிழமை) காலை சரிவுடன் தொடங்கியது. எனினும், புளூ சிப் பேங்க் பங்குகள் மற்றும் சர்வதேச நிதி வரத்து காரணமாக உயர்ந்து காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தை குறியீடான பி.எஸ்.இ. சென்செக்ஸ் இன்று காலை 386.01 புள்ளிகள் சரிந்து 75,581.38 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. தேசிய குறியீடான நிஃப்டி 130.45 புள்ளிகள் சரிவடைந்து 22,814.85 ஆக இருந்தது.
இன்றைய நாளின் தொடக்கத்தில் சரிவுடன் காணப்பட்ட போதிலும், பி.எஸ்.இ. சென்செக்ஸ் 134.16 புள்ளிகள் அதிகரித்து 76,120.85 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 38.60 புள்ளிகள் அதிகரித்து 22,983.90 ஆகவும் உள்ளன.
சென்செக்ஸ்-இல் ஜொமாட்டோ, டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோட்டக் மஹிந்திரா பேங்க், டைட்டன், ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
சன் ஃபார்மா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல். டெக், நெஸ்ட்லே மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்டவை சரிவுடன் காணப்பட்டன.
- நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760-க்கும் கிராம் ரூ.7,970-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.400-ம் நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,035-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,280-க்கும் விற்பனையாகிறது. நாள்தோறும் உயர்ந்து வரும் தங்கம் விலையால் மக்கள் கவலையில் உள்ளனர்.
கடந்த 5 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760
17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120
15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120
14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
18-02-2025- ஒரு கிராம் ரூ.108
17-02-2025- ஒரு கிராம் ரூ.108
16-02-2025- ஒரு கிராம் ரூ.108
15-02-2025- ஒரு கிராம் ரூ.108
14-02-2025- ஒரு கிராம் ரூ.108
- 8 நாட்களுக்கு பிறகு நேற்று (பிப்ரவரி 17) பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது
- ஐடி தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (பிப்ரவரி 18) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 385 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 75,611 புள்ளிகளாக உள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 129 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கி 22,829 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது.
பங்குச்சந்தைகள் 10வது நாளாக வீழ்ச்சியில் தொடங்கியுள்ளது.
முன்னதாக 8 நாட்களுக்கு பிறகு நேற்று (பிப்ரவரி 17) பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.
டெக் மஹிந்திரா, அப்பல்லோ மருத்துவமனை, விப்ரோ, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை நிஃப்டியில் லாபம் ஈட்டி வருகின்றன.
அதே நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், எச்டிஎஃப்சி லைஃப், டாடா ஸ்டீல் ஆகியவை நஷ்டமடைந்தன. ஐடி தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
- நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் கிராம் ரூ.7,940-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் கிராம் ரூ.7,940-க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,970-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120
15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120
14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920
13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-02-2025- ஒரு கிராம் ரூ.108
16-02-2025- ஒரு கிராம் ரூ.108
15-02-2025- ஒரு கிராம் ரூ.108
14-02-2025- ஒரு கிராம் ரூ.108
13-02-2025- ஒரு கிராம் ரூ.107
- ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 75,468 புள்ளிகளாக உள்ளது.
- கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 17) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 75,468 புள்ளிகளாக உள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22,800 புள்ளிகளுக்குக் கீழ் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் 9வது நாளாக வீழ்ச்சியில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.
- தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.
தங்கம் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,890-க்கும் ஒரு சவரன் ரூ.63,120-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63, 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,120
15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,120
14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920
13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840
12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
16-02-2025- ஒரு கிராம் ரூ.108
15-02-2025- ஒரு கிராம் ரூ.108
14-02-2025- ஒரு கிராம் ரூ.108
13-02-2025- ஒரு கிராம் ரூ.107
12-02-2025- ஒரு கிராம் ரூ.107
- கடந்த எட்டு வர்த்தக அமர்வுகளில் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 3% சரிந்துள்ளது.
- அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
இந்திய பங்குச் சந்தை தொடர்ச்சியான சரிவைச் சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்கள் கடந்த 8 வர்த்தக அமர்வுகளில் ரூ.27 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 5 அன்று ரூ.42,80,3611.66 கோடியாக இருந்த மொத்த சந்தை மூலதனம், அடுத்த 8 வர்த்தக அமர்வுகளில் சரிவுக்கு பிறகு இப்போது ரூ.40,09,9281.11 கோடியாகக் குறைந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் சந்தை ரூ.27 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளது. கடந்த எட்டு வர்த்தக அமர்வுகளில் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 3% சரிந்துள்ளது.
தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.






