என் மலர்
ஜார்கண்ட்
- ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம் என ஹேமந்த் சோரன் குறிப்பிட்டிருந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்டவிரோத சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை ஏழு முறை சம்மன் அனுப்பியது. ஏழு முறையும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.
இதனால் அமலாக்கத்துறை 8-வது முறையாகவும் சம்மன் அனுப்பியது. அப்போது அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்து பதில் அளிக்க முடியாது. என்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்த முடியும் என்றால், அதற்கு ஒத்துழைப்பு தருவதாக ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறைக்கு பதில் தெரிவித்திருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை கடந்த வாரம் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியது. பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதன்பின் கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அதிரிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வருகிற 27 முதல் 31-ந்தேதிக்குள் ஆஜராகி கேள்விளுக்கு பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை விசாரணை நடைபெற்ற பின் ஹேமந்த் சோரன் தனது கட்சி தொண்டர்களை சந்தித்தார். அப்போது "எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம். அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்போம். ஹேமந்த் சோரன் எப்போதும் உங்களுடன் இருப்பான். உங்களுடைய தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொண்டு, உங்களுடைய மனஉறுதியை உயர்த்துவான்" ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.
- எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம்.
- அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்ட விரோத சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகவில்லை.
8-வது முறையாக அனுப்பியபோது, என்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்தினால் ஒத்துழைப்பதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப்பின் அவரது வீட்டின் முன் குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் "எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம். அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்போம். ஹேமந்த் சோரன் எப்போதும் உங்களுடன் இருப்பான். உங்களுடைய தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொண்டு, உங்களுடைய மனஉறுதியை உயர்த்துவான்" என்றார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த சோரன் கைது செய்யப்படலாம். இதனால் அவரது மனைவியை முதலமைச்சாராக்க முயற்சி செய்து வருகிறார் என செய்திகள் பரவிய நிலையில், இந்த செய்தியை திட்டவட்டாக மறுத்து வந்தார் ஹேமந்த் சோரன்.
- சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளால் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
- முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை சார்பில் அடுத்தடுத்து 8 சம்மன்கள் அனுப்ப பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கம் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு 7 முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், 8 வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு, தனது வீட்டிலேயே வைத்து தன்னை விசாரிக்கலாம் என பதிலளித்தார்.
அதனடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளால் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக-வினர், " ஏழாவது சம்மன் வரை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த ஹேமந்த் சோரனின் ஆணவம், எட்டாவது சம்மனில் மறைந்தது" என விமர்சித்தனர். இதற்க்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியினர், "பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல்வரை துன்புறுத்துவதற்காகவே இந்த விசாரணை செய்யப்படுகிறது. இதற்கு முன்பே ஹேமந்த் சோரன் இதுபோன்ற விஷயங்களை சந்தித்துள்ளார். விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை, இன்றும் அப்படித்தான் நடக்கப் போகிறது" என கூறினர்.
- ஒரு பிக்கப் வேன் சேதமடைந்துள்ளது.
- திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பர்ம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல்வேறு இருசக்கர வாகனங்கள், பிக்கப் வேன், 15-க்கும் அதிக பட்டாசு கடைகள் தீயில் கருகியதாக காவல் துறை தெரிவித்து இருக்கிறது.
தீ விபத்தை ஒட்டி தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் 14 பட்டாசு கடைகள், 13 இருசக்கர வாகனங்கள், ஒரு பிக்கப் வேன் சேதமடைந்துள்ளது. தீ விபத்து காரணமாக ரூ. 15 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
வார சந்தை நாள் மற்றும் திங்கள் கிழமை அன்று துசு பண்டிகை வர இருப்பதை அடுத்து பொது மக்கள் அதிகம் கூடிய நிலையில், திடீர் தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
- ஹேமந்த் சோரன் கட்சியை சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் பதவி விலகினார்.
- ஹேமந்த் சோரன் மீது பிடியை இறுகச்செய்து இருக்கும் அமலாக்கத்துறை அடுத்தகட்ட விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் சட்ட விரோதமாக சுரங்கம் நடத்தி பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பும், முறைகேடுகளும் செய்து இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து நடந்த விசாரணையில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது.
அதன் அடிப்படையில் ஹேமந்த்சோரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. என்றாலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அடுத்தடுத்து 7 தடவை சம்மன் அனுப்பினார்கள்.
இதனால் கோபம் அடைந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். தன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தால் அது ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கட்சியை சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் பதவி விலகினார். ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் அவரது மனைவியை முதல்-மந்திரியாக்க வழிவகை செய்யும் வகையில் அந்த எம்.எல்.ஏ. பதவி விலகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இதை ஹேமந்த் சோரன் மறுத்தார். பாரதிய ஜனதாவின் கற்பனை நாடகம் இது என்று கூறினார். என்றாலும் ஜார்க்கண்ட் மாநில அரசியலில் எம்.எல்.ஏ. விலகலால் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே இன்று (புதன்கிழமை) அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தலைநகர் ராஞ்சியில் 10 இடங்களில் சோதனை நடந்தது. ராஜஸ்தான் மாநிலத்திலும் சோதனை நடந்து வருகிறது. இன்று சோதனை நடந்து வரும் இடங்கள் அனைத்தும் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு தொடர்புடைய இடங்கள் ஆகும். எனவே ஹேமந்த் சோரனை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் இன்றைய சோதனையை அமலாக்கத்துறை மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஹேமந்த் சோரன் மீது பிடியை இறுகச்செய்து இருக்கும் அமலாக்கத்துறை அடுத்தகட்ட விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளது. ராஞ்சியில் இன்று ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகர் அபிஷேக் பிரசாந்தும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கசரிபாக் நகரில் உள்ள போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர துபே என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் முறையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள். கலெக்டர் ராம்நிவாஸ் வீட்டிலும் சோதனை நடக்கிறது.
இன்று சோதனை நடக்கும் இடங்களில் பெரும்பாலான இடங்கள் ஜார்க்கண்ட் சுரங்கத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர்களின் வீடுகளாகும். இவர்கள் அனைவரும் ஹேமந்த் சோரனுக்கு மிக மிக நெருக்கமானவர்கள்.
இவர்களது வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது ஹேமந்த் சோரனை மேலும் சிக்கலுக்கு கொண்டு செல்லும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
- நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹேமந்த் சோரனுக்கு ED பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது.
- இந்த நிலையில்தான் பத்திரிகை ஆலோசகர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்ட விரோத சுரங்க வழக்கில் இவரை விசாரணைக்கு அழைத்து அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. இருந்தபோதிலும் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் உள்ளார்.
இந்த நிலையில் இன்று ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகரான அபிஷேக் பிரசாத் என்ற பிந்து வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அபிஷேக் பிராசாத் வீடு உள்பட 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சகேப்கஞ்ச் துணை கமிஷனர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அபிஷேக் பிரசாத் என்ற பிந்து
மத்திய அமைப்பின் விசாரணையை எதிர்கொள்ள இருக்கும் ஹேமந்த் சோரன், தனது மனைவியை முதலமைச்சராக்க இருக்கிறார் என பா.ஜனதா கூறி வந்தது. ஆனால் ஹேமந்த் சோரன் இதை முற்றிலும் மறுத்துள்ளார்.
- பழங்குடி மரபுகளின் படி புத்னி பழங்குடியினர் அல்லாதவரை திருமணம் செய்ததாக கூறி அவர் சந்தாலி சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.
- ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பஞ்சேட் பகுதியில் மகள் ரத்னா வீட்டில் வசித்து வந்த புத்னி கடந்த 17-ந்தேதி காலமானார்.
தன்பாத்:
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றுக்கு 1959-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவர்ஹலால் நேரு அணை திறப்பு விழா ஒன்றிற்காக சென்றிருந்தார்.
தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் நடந்த நிகழ்ச்சியில் நேருவை வரவேற்பதற்காக 15 வயதான பழங்குடியின பெண் புத்னி மஞ்சியான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
திறப்பு விழாவின் போது நேருவின் வேண்டுகோளின் பேரில் சிறுமி புத்னி மஞ்சியான் அணையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் போது நேரு புத்னிக்கு மாலை அணிவித்தார். ஆனால் இந்த சம்பவம் புத்னியின் வாழ்க்கையை மாற்றியது.
இந்த சம்பவம் குறித்து விவாதிக்க இரவில் சந்தாளி சமுதாயத்தின் பஞ்சாயத்து கூடியது. மலர்மாலை அணிவிக்கப்பட்டதால் பழங்குடி மரபுகளின் படி புத்னி இப்போது ஜவர்ஹலால் நேருவை திருமணம் செய்து கொண்டதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் பழங்குடி மரபுகளின் படி புத்னி பழங்குடியினர் அல்லாதவரை திருமணம் செய்ததாக கூறி அவர் சந்தாலி சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அவர் வேலை பார்த்து வந்த தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் வேலையில் இருந்தும் 1962-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு ஜார்கண்ட் சென்ற அவர் சுதின் தத்தா என்ற தொழிலாளியை மணந்தார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தனர்.
இந்நிலையில், 1985-ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலம் புத்னியை பற்றி அறிந்த ராஜீவ்காந்தி அவரை சந்தித்தார். அப்போது புத்னி தனக்கு நேர்ந்த துயரத்தை ராஜீவ் காந்தியிடம் விவரித்தார்.
இதைத்தொடர்ந்து புத்னிக்கு தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் மீண்டும் வேலை வழங்கப்பட்டது. அதில் பணியாற்றி 2005-ம் ஆண்டு புத்னி ஓய்வுபெற்றார்.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பஞ்சேட் பகுதியில் மகள் ரத்னா வீட்டில் வசித்து வந்த புத்னி கடந்த 17-ந்தேதி காலமானார். 80 வயதான அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
அப்போது உள்ளூர் பூங்காவில் இருக்கும் நேருவின் சிலைக்கு அருகில் புத்னி மஞ்சியானுக்கு ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் அவரது மகளான ரத்னாவுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுபற்றி பஞ்சேட்டில் உள்ள தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் தலைமை பொறியாளர் சுமேஷ்குமார் கூறுகையில், நினைவு சின்னம் அல்லது பிற கோரிக்கைகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்.
- பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக ஜார்க்கண்ட் சென்றிருந்தார்.
- 10 கி.மீ. சாலை நடைபயணம் மேற்கொண்டு, பிர்சா முண்டா சிலைக்கு மாலை அணிவித்தார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ஜார்க்கண்ட் மாநிலம் சென்றிருந்தார். நேற்று அவர் பகவான் பிர்சா முண்டா நினைவு மியூசியத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்த பாதையில் திடீரென பெண் ஒருவர் ஓடினார். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பெண் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது துணை சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள் ஆகியோர் பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர் மாவட்டத்தை சேர்ந்த நபரை கடந்த 2012-ல் திருமணம் செய்ததாகவும், இருவருக்கும் இடையில் 2016-ல் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கணவரிடன் சம்பளம் தன்னுடைய கணக்கில வரவு வைக்க விரும்பியுள்ளார். இதனை பிரதமர் மோடியிடம் வலியுறுத்த டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமரை சந்திக்க முடியவில்லை. 10 நாட்கள் தங்கிருந்தும் பலன் அளிக்கவில்லை. அதன்பின் ஜனாதிபதியை சந்திக்க முயற்சி செய்துள்ளார். அனைத்து முயற்சிகளும் தோல்வியடைய தியோகர் வந்துள்ளார்.
இங்கேயும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைக்காததால், பிரதமர் பாதுகாப்பு வாகனத்தை மறித்து தன் மீது கவனம் செலுத்துவதற்கு இவ்வாறு செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
- 14-வது தவணையான ரூ.17,000 கோடி கடந்த ஜூலை மாதத்தில் விடுவிக்கப்பட்டு 8.5 கோடி விவசாயிகள் பயனடைந்தனா்.
விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் 'பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம்', பிரதமா் நரேந்திர மோடியால் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, விவசாயிகளின் கடனைக் குறைக்க மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
இத்திட்டத்தில் இதுவரை 14 தவணைகள் மூலம் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.2.59 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 14-வது தவணையான ரூ.17,000 கோடி கடந்த ஜூலை மாதத்தில் விடுவிக்கப்பட்டு 8.5 கோடி விவசாயிகள் பயனடைந்தனா்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி சமூக போராளி பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் பழங்குடிகள் பெருமை தினத்தையொட்டி (புதன்கிழமை) நடைபெறும் கூட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 15-வது தவணைத் தொகையான ரூ.18,000 கோடியை பிரதமா் நரேந்திர மோடி விடுவித்தார்.
- இன்றும், நாளையும் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
- ஜார்க்கண்டில் சுமார் ரூ.7200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ராஞ்சி:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முனைப்புடன் செயலாற்றி வருகிறது. தேர்தலை எதிர்கொள்ளும் முன்பாக பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து புதிய திட்ட ப்பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.
அதன்படி இன்றும், நாளையும் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று ஜார்க்கண்ட் செல்லும் பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) காலை 9:30 மணிக்கு ராஞ்சியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் லார்ட் பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார். அதன்பிறகு அவர் பிர்சா முண்டா பிரபுவின் பிறந்த இடமான உலிஹட்டு கிராமத்துக்கு செல்கிறார்.
காலை 11:30 மணியளவில் குந்தியில் 3-வது பழங்குடியின பெருமை தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நிகழ்ச்சியின்போது, பிரதமர் 'விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா' மற்றும் 'பிரதமரின் சிறப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் இயக்கம்' ஆகியவற்றைத் தொடங்குகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் மோடி சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினருக்கான சிறப்பு திட்டத்தை தொடங்குகிறார். தொடர்ந்து கிசான் திட்டத்தின் கீழ், அவர் 15வது தவணையாக சுமார் 18 கோடி ரூபாயை வழங்குகிறார். இத்திட்டத்தின் கீழ், இதுவரை, 14 தவணைகளில், 2.62 லட்சம் கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜார்க்கண்டில் சுமார் ரூ. 7200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். முன்னதாக பழங்குடியினரின் பெருமை தினமான நாளை அரசின் முக்கிய திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரை பிரசார வேனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் இருந்து தொடங்கும் இந்த வேன் பயணம் ஜனவரி 25-ந் தேதிக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- எம்.பி.பி.எஸ். முடித்து உள்ள டாக்டர் மதன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
- கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார்.
ராஞ்சி:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு மதன்குமார் (வயது 28) என்கிற மகனும், ஜனனிஸ்ரீ (24) என்கிற மகளும் இருந்தனர். ஜனனிஸ்ரீ தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.
எம்.பி.பி.எஸ். முடித்து உள்ள டாக்டர் மதன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
அவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக்கல்லூரியில் தடயவியல் மருத்துவ மேற்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார். இந்தநிலையில் திடீரென அவர் மாயமானார்.
சக மாணவர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொடூரமாக கொலை செய்த மர்மநபர்கள், அவரது உடலை தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் பாதி எரிந்த உடலை கீழே தூக்கி போட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் வந்து விழுந்து கிடந்தது. சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மேலும் கொலை நடந்த விடுதியை சோதனை செய்த போலீசார், அங்கிருந்து செல்போன் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சில கைரேகைகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
இதுதவிர சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே டாக்டர் மதன்குமார் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மதன்குமார் இறந்த தகவல் நாமக்கல் அருகே புத்தூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். உடனடியாக டாக்டரின் உடலை வாங்க விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டு சென்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மருத்துவக்கல்லூரிக்கு மேற்படிப்பு படிக்க சென்ற டாக்டர் ஒருவர் விடுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கார் பாலத்தில் இருந்து சிக்கியா தடுப்பணையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- செல்பி எடுப்பதற்காக காரை ஓட்ட தொடங்கிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் இன்று காலை பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.
கார் பாலத்தில் இருந்து சிக்கியா தடுப்பணையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த குடும்பத்தை சேர்ந்த என்ஜினீயரான ஒருவர் செல்பி எடுப்பதற்காக காரை ஓட்ட தொடங்கிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கார் டிரைவர் காயத்துடன் தப்பினார்.






