என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக டாக்டர் படுகொலை"

    • எம்.பி.பி.எஸ். முடித்து உள்ள டாக்டர் மதன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
    • கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார்.

    ராஞ்சி:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு மதன்குமார் (வயது 28) என்கிற மகனும், ஜனனிஸ்ரீ (24) என்கிற மகளும் இருந்தனர். ஜனனிஸ்ரீ தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.

    எம்.பி.பி.எஸ். முடித்து உள்ள டாக்டர் மதன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    அவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக்கல்லூரியில் தடயவியல் மருத்துவ மேற்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார். இந்தநிலையில் திடீரென அவர் மாயமானார்.

    சக மாணவர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொடூரமாக கொலை செய்த மர்மநபர்கள், அவரது உடலை தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் பாதி எரிந்த உடலை கீழே தூக்கி போட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் வந்து விழுந்து கிடந்தது. சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    மேலும் கொலை நடந்த விடுதியை சோதனை செய்த போலீசார், அங்கிருந்து செல்போன் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சில கைரேகைகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    இதுதவிர சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே டாக்டர் மதன்குமார் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, மதன்குமார் இறந்த தகவல் நாமக்கல் அருகே புத்தூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். உடனடியாக டாக்டரின் உடலை வாங்க விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டு சென்றனர்.

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மருத்துவக்கல்லூரிக்கு மேற்படிப்பு படிக்க சென்ற டாக்டர் ஒருவர் விடுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
    • கொலை நடந்த விடுதியை சோதனை செய்த போலீசார் அங்கிருந்த மதன்குமார் செல்போன் ஒன்றையும் கைப்பற்றினர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன் காண்டிராக்டர். இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு மதன்குமார் (29)என்ற மகனும், ஜனனிஸ்ரீ (24) என்ற மகளும் இருந்தனர். இவர் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    எம்.பி.பி.எஸ். படித்துள்ள டாக்டர் மதன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எம்.பி.பி.எஸ். படித்த இவர் 2 ஆண்டுகள் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றினார். தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய அவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுவியல் மேற்படிப்பில் சேர்ந்தார்.

    தற்போது 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் திடீரென மதன்குமார் மாயமானார். சக மாணவர்கள் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணையில், விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது உடலை தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் பாதி எரிந்த நிலையில் உடலை தூக்கி கீழே போட்டதில் அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் விழுந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.

    சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் கொலை நடந்த விடுதியை சோதனை செய்த போலீசார் அங்கிருந்த மதன்குமார் செல்போன் ஒன்றையும் கைப்பற்றினர்.

    மேலும் அங்கு பதிவாகி இருந்த சில கை ரேகைகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். விடுதியின் மேற்கூரையில் பதிவாகி இருந்த கால் தடங்களையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    இது தவிர சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் விடுதியில் இருந்த மாணவர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    கடந்த 31-ந் தேதி இரவு மதன்குமார் அவரது செல்போனில் இருந்து கடைசியாக பேசி உள்ளார். அவர் யாரிடம் பேசி உள்ளார் என்பது குறித்தும், என்ன பேசினார் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே டாக்டர் மதன்குமார் இறப்புக்கு உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் ஏதாவது போட்டியில் கொலை செய்திருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதன்பேரிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே டாக்டர் மதன்குமார் இறந்த தகவல் நாமக்கல் அருகே புத்தூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டு கதறி துடித்த அவர்கள் உடனடியாக கோவைக்கு சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி சென்றனர்.

    தற்போது டெல்லியில் இருந்து ஜார்கண்டிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையிலும் போலீசார் விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறார்கள். மேலும் பெற்றோரிடம் ஒப்புதல் பெற்றதும் மதன்குமார் உடல் பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

    தொடர்ந்து மதன்குமார் உடலை நாமக்கல் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகளும், மதன்குமாரின் பெற்றோர்களும் இறங்கி உள்ளனர். இதையொட்டி அவரது சொந்த ஊரில் உறவினர்கள் திரண்டு உள்ளனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

    ×