என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
    பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

    அதிலும் பலர் பிறப்புறுப்பில் அழுக்கு சேர கூடாது என்றும், துர்நாற்றமின்றி இருக்க வேண்டுமென்றும் நல்ல நறுமணமிக்க சோப்பைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு பல முறை கழுவுவார்கள்.

    ஆனால் பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. பிறப்புறுப்பின் அருகே உள்ள சருமமானது மிகவும் சென்சிடிவ். அவ்விடத்தில் கெமிக்கலைப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

    சோப்புக்களை பிறப்புறுப்புக்களில் பயன்படுத்தினால், ஏற்கனவே சருமத்தின் மேல் பகுதியில் உள்ள நல்ல பாதுகாப்பு தரும் இயற்கையான எண்ணெய் படலம் நீங்கி, அவ்விடத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.



    இயற்கையாகவே பிறப்புறுப்பில் பாதுகாப்பை வழங்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அப்படி இருக்க, சோப்பை போட்டு நன்கு தேய்த்து கழுவினால், அப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கி, எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்பட வழிவகுக்கும்.

    சோப்புக்களை பிறப்புறுப்பில் பயன்படுத்தி கழுவும் போது, அது அவ்விடத்தில் உள்ள pH அளவை பாதித்து, கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சலையும் உண்டாக்கும்.

    பிறப்புறுப்பிற்கு சோப்பு போடவே கூடாது என்பதில்லை. தினமும் குளிக்கும் போது ஒருமுறை சோப்பை அதுவும் அளவாக பயன்படுத்தி கழுவலாம். இதனால் எவ்வித பிரச்சனையும் நேராது.

    வேண்டுமெனில் பிறப்புறுப்பை வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கழுவலாம். இதனால் அவ்விடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
    நீரிழிவு நோயின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து வருவது, நீரிழிவுடன் கூடிய கருத்தரிப்பின்மையையும் அதிகரிக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ‘கருத்தரிப்பின்மை என்பது ஒரு வருடம் முழுவதும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்ட போதும், கருத்தரிக்க இயலாமல் போவதைக் குறிக்கிறது. இந்த கருத்தரிப்பின்மை, கணவர் மனைவி இருவரையும் பாதிக்கலாம். அதனால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து, பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சரியான தீர்வைப் பெற்று பலனடைவது மிகவும் அவசியம்.

    கருத்தரிப்பின்மைக்கான சரியான காரணம் கண்டுபிடிக்கப்பட்டால், அப்பிரச்னைக்குரிய சரியான சிகிச்சை மேற்கொள்ள முடியும். ‘டைப் 1’ மற்றும் ‘டைப் 2’ நீரிழிவு நோய், தற்போது உலகளவில் அதிகரித்து வரும் வேளையில், நவீன வாழ்க்கை முறையால் ஆரோக்கியமில்லாத உணவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் உண்டாகும் ‘டைப் 2’ நீரிழிவு நோய் ஒரு நவீன நோயாக கூறப்படுகிறது. இந்த நீரிழிவு கருத்தரிப்பின்மைக்கும் காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ‘டைப் 1’ நீரிழிவு நோய் பொதுவாக இளம் வயதுடையவர்களுக்கு உண்டாவது. தற்போதுள்ள நிலவரப்படி, நீரிழிவு நோயானது இன்னும் சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. சில ஆய்வுகளில் டைப் 1 நீரிழிவு நோயானது, இளைஞர்களை பெருமளவில் பாதிக்கிறது என்றும், இன்னும் 10 ஆண்டுகளில் இதன் பாதிப்பு 50% ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றன.

    நீரிழிவு நோயின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து வருவது, நீரிழிவுடன் கூடிய கருத்தரிப்பின்மையையும் அதிகரிக்கும். மேலும் நீரிழிவு நோயானது ஆண்கள் மற்றும் பெண்களிடம் இனப்பெருக்கத்துக்கான ஆரோக்கியத்தையும் அதிகம் பாதிக்கும்.

    நீரிழிவு நோயின் பாதிப்புள்ள ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் குறைவாகவும் இருக்கலாம். காரணம், அவர்களது விந்துவின் அடர்த்தி குறைவாகவும், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கக்கூடும்.



    மேலும் இவர்களுக்கு நீரிழிவு நோயின் காரணமாக விறைப்பு குறைபாடும், பாலுணர்வு குறைவாகவும் இருக்கும். ஆணின் விந்தணுக்கள், பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளை அடையாமல், சிறுநீரகத்துக்குள் சென்றுவிடுகின்றன. மேலும், நீரிழிவை கட்டுப்படுத்த எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் ஆணின் விறைப்பு செயலிழப்புக்குகாரணமாகிறது’ என்று குறிப்பிடுகிறது.’’

    ‘‘பெண்களைப் பொறுத்தவரை நீரிழிவு நோயானது ஹார்மோன்களின் சரிவிகித குறைபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்த ஹார்மோன் சரிவிகித குறைபாடு பிசிஓஎஸ்(PCOS) என்று அழைக்கப்படுகிறது.

    அதிக எடையுள்ள பெண்களுக்கு பிசிஓஎஸ் மற்றும் நீரிழிவு வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இது பல்வேறு புதிய பிரச்சனைகளை உருவாக்கும். அதிக உடல் எடை அல்லது பருமன் அதிகமுள்ள பெண்கள் இயற்கையாக கருத்தரிக்க மிகவும் கடினமாக இருப்பதாக உணர்கிறார்கள்.  

    கருத்தரிப்புக்கான சிகிச்சை முறைகளின் வெற்றி வாய்ப்புகளையும் நீரிழிவு மற்றும் உடல்பருமன் பாதிக்கிறது. சாதாரண குளுக்கோஸ் அளவைவிட அதிகமாக இருக்கும் ஒரு பெண் கருத்தரிக்கும் மாதம் தள்ளிப்போகிறது.

    துரதிர்ஷ்டவசமாக கருவானது கருப்பைக்குள் செல்வதை நீரிழிவு நிலை தடுக்கிறது. அவள் கர்ப்பமாக இருப்பதை உணரும் முன்னே ஒரு கருச்சிதைவு ஏற்பட்டுவிடுகிறது.

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    தாய்ப்பால் குடிப்பது ஒவ்வொரு குழந்தையின் கடமை. அதைக்கொடுப்பது தாயின் கடமை. அன்னையை நடமாடும் தெய்வம் என்று சொல்கிறோம். ஒரு குழந்தைக்கு தாயார் 6 மாதம் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அவ்வாறு 6 மாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் சதவீதம் தமிழகத்தில் 50 சதவீதம்தான் இருக்கிறது.

    இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலை போன்ற காரணங்களால் குழந்தை பெற்ற தாய்மார்கள் காலையில் சீக்கிரமே வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது தடைபடுகிறது. இதனால் டப்பா பால், பவுடர் பால் போன்றவற்றை குழந்தைகளுக்கு புகட்டும் நிலை உருவாகிறது.

    தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள்தான் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். தடிமன் குறைவாக இருக்கும். டப்பா பால், பவுடர் பால் கொடுத்து குழந்தைப் பருவத்தில் தடிமனாக இருக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ரத்தக்குழாய் அடைப்பு, சர்க்கரை வியாதி போன்றவை வர வாய்ப்புள்ளது. தாய்ப்பால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாதது.



    தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு தொற்றுநோய், வாந்தி-பேதி, நிமோனியா, ஆஸ்துமா, உடல் பருமன் போன்ற நோய்கள், பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அதேபோல தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மேலும் அவர்களது உடல் வாகு, மனது இலகுவாகும். பெண்களின் அழகும் அதிகரிக்கும்.

    அரசு துறைகளில் பணிபுரியும் தாய்மார்களுக்கு பிரசவ கால விடுப்பாக முதலில் 6 மாதம் வழங்கப்பட்டது. தற்போது 10 மாதம் விடுப்பு அளிக்கப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    வேலைக்கு செல்லும்போதும் இடைவேளை நேரங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். தாய்ப்பாலை எடுத்து 6 முதல் 8 மணி நேரம் வரை சாதாரண தட்ப-வெப்ப நிலையில் வைத்திருந்தும் குழந்தைகளுக்கு புகட்டலாம்.

    பிரசவத்துக்குப்பிறகு பதற்றம், இனம்புரியாத பயம், மன அழுத்தம், சந்தேகம் போன்றவற்றின் காரணமாக பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பது குறைவாக இருக்கிறது. அதனால் பிரசவமான பெண்கள் மன அழுத்தம், பயம் போன்றவற்றுக்கு உள்ளாகாமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.

    சில அவசிய பரிசோதனையை பெண்கள் பலர் கடைபிடிக்கத் தவறி விடுகின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரவர் வயதிற்கேற்ப, உடல் பாதிப்பிற்கு ஏற்ப மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுகின்றது.
    நிறைய உடல் நல செய்திகளை இன்று பத்திரிகைகளும், ஊடகங்களும் தரும் காரணத்தினால் நிறையவே தெரிந்து கொள்கிறோம். ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி இவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றோம். ஆனால் சில அவசிய பரிசோதனையை பெண்கள் பலர் கடை பிடிக்கத் தவறி விடுகின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரவர் வயதிற்கேற்ப, உடல் பாதிப்பிற்கு ஏற்ப மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுகின்றது.

    அவரவர் உயரம், எடைக்கு ஏற்ப body man index BMI) வேண்டும். இதனை தமிழில் உடல் நிலை குறியீட்டெண் என்று சொல்வார்கள். உயரம், எடைக்கேற்ப இந்த குறியீட்டெண் சரியாக இருக்க வேண்டும். கூடுதலாக இருப்பது பல நோய்களில் குறிப்பாக Etatolic Syndrome எனப்படும் சரக்கரை நோய், ரத்தக் கொதிப்பு, அதிக கொலஸ்டிரால், அதிகமாக வயிற்றில் கொழுப்பு.

    இதன் காரணமாக இருதய பாதிப்பு, பக்க வாதம் எனும் பிரச்சினைகளை எளிதில் கூட்டி வந்து விடும். இவை இந்தியர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாகவே ஏற்படுகின்றன. கர்ப்பமாக திட்டமிடும் மணமான பெண்கள் முதலிலேயே நல்ல மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உடலில் நல்ல கொழுப்பு இருந்து கெட்ட கொழுப்பு நீங்க நல்ல உடற்பயிற்சி, நடை பயிற்சி மட்டுமே கை கொடுக்கும்.

    * முழு ரத்த பரிசோதனை
    கொழுப்பு பரிசோதனை
    சிறு நீரக பரிசோதனை
    கல்லீரல் பரிசோதனை
    சர்க்கரை அளவு பரிசோதனை

    ஆகியவை இன்றைய கால சூழ்நிலையில் பல நேரங்களில் அவசியமாகின்றது.

    கிட்டத்தட்ட 60-75 சதவீத பெண்கள் ரத்த சோகை பாதிப்பு உடையவர்களாகவே இருக்கின்றனர். மேலும் பரம்பரையாக குடும்ப நபர்களுக்கு பாதிப்பு இருப்பின் அடுத்த தலைமுறை கண்டிப்பாய் அதற்கான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம்.

    அதிக கார்போ ஹைடிரேட் அதாவது மாவு சத்து உணவுகளைக் குறைத்து விடுங்கள். சர்க்கரை, கொழுப்பு எல்லாம் இதிலிருந்து வந்து விடும். பெண்ணே எந்த வயதிலும் ஆரோக்கியமாய் வாழலாமே!
    குடும்பத்தை தூக்கி சுமக்கும் அம்மாக்களுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனாலும் அவர்கள் அழகு, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
    அம்மாக்களுக்கு அழகும் அவசியம். ஆரோக்கியமும் அவசியம். குடும்பத்தை தூக்கி சுமக்கும் அம்மாக்களுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். கழுத்தைப் பிடிக்கிற அளவுக்கு குடும்ப பொறுப்புகளும் இருக்கவே செய்யும். ஆனாலும் அவர்கள் அழகு, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். ஏன்என்றால் அம்மா ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும். அம்மாக்களுக்கான சில அழகான ஆலோசனைகள்!

    தினமும் காலையில் எழுந்ததும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, கணவருக்கும், குழந்தைகளுக்குமான மதிய உணவு தயார் செய்வதில்தான் முழு கவனமும் இருக்கும். அதுவே மன நெருக்கடிக்கும் உள்ளாக்கும். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் அவசரகதியில் கிளம்பும்போது கவனச் சிதறல்கள் ஏற்படும். அதனால் முன்தினம் இரவே மறுநாளுக்காக திட்டமிடவேண்டும். ‘நாளை என்ன சமைக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எந்த மாதிரி அலங்காரம் செய்ய வேண்டும்’ என்று திட்டமிட 10 நிமிடங்கள் செலவிட்டால் போதும். இது காலை நேர பரபரப்பை குறைக்கும். அவசரத்தில் முக்கியமான விஷயங்களை தவறவிடுவதையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.

    இரவில் எல்லா வேலை களையும் முடித்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் அவசர குளியல் போடலாம். மனதை வருடும் இசை தொகுப்புகளை ரசித்து கேட்டபடி தூங்க செல்லலாம். இவை பெண்களை ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும். மறுநாள் உற்சாகத்துடன் இயங்கவும் உதவி புரியும்.

    கூந்தலை இறுக்கமாக பின்னியிருந்தால், தூங்க செல்வதற்கு முன்னால் அதை தளர்வாக்கிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் காலையில் எழுந்திருக்கும்போது கூந்தல் சிக்காகுவதை தவிர்த்துவிடலாம். விரைவாக கூந்தல் அலங்காரத்தை முடித்துவிடலாம். சிகை அலங்காரம் செய்வதற்கு போதுமான நேரம் இல்லாவிட்டால் அதற்கான லோஷனை சிறிதளவு கூந்தலில் தடவினால், அலங்காரத்தை விரைவாக முடித்துவிடலாம். தூக்கமின்ைமயால் அவதிப் படுபவர்களின் கண்களை சுற்றி கருவளையத்திற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். ‘ஐ லைனர்’ உபயோகித்து அவைகளை போக்க முயற்சிக்கலாம்.

    பெண்களின் அழகு என்பது அவர்களது ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது. ஆரோக்கியத்திற்காக பெண்கள் தினமும் சமச்சீரான சத்துணவை உண்ணவேண்டும். அளவோடு சாப்பிட்டு, தினமும் உடற்பயிற்சியும் மேற்கொள்ளவேண்டும். நல்ல தூக்கமும், மன அமைதியும் மிக அவசியம். 
    சிலருக்கு மெடிக்கல் முறைப்படி கருக்கலைப்பு செய்யாமல் தாமாகவே கருக்கலைந்துவிடும். கருத்தரித்த இருபது வாரங்களுக்குள் கரு தானாகவே கலைந்து விடுவதற்கான காரணங்களை பார்க்கலாம்.
    சிலருக்கு மெடிக்கல் முறைப்படி கருக்கலைப்பு செய்யாமல் தாமாகவே கருக்கலைந்துவிடும். இதை மிஸ்கேரேஜ் என்போம். இந்த கேஸ்களில் கருத்தரித்த இருபது வாரங்களுக்குள் கரு தானாகவே கலைந்துவிடும். பொதுவாக, மிஸ்கேரேஜ் ஏற்படக்கூடிய காரணங்கள் சில…

    * நாற்பது வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பது.

    * ஏற்கெனவே மிஸ்கேரேஜ் ஏற்பட்டிருப்பது.

    * டயாபடீஸ், ஹைபோதைராய்டிஸம் போன்ற கேஸ்களில்.

    * உடல் ஹார்மோன்களில் கோளாறுகள்.

    * தாய்க்கு புகை, மது போன்ற பழக்கங்கள் இருந்தால்.

    * கருப்பையின் ஷேப் சரியாக இல்லையென்றாலும், பொதுவாக கருப்பை வீக்காக இருந்தாலும் தானாகவே கர்ப்பம் கலையலாம்.

    * தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், எதிர்பாராத விபத்துகளாலும் ஏற்படலாம்.

    வெஜைனல் பிளீடிங், வயிற்றுப் பகுதியில் சதைப் பிடிப்பு, முதுகுத் தண்டின் அடிபாகத்தில் வலி போன்றவை மிஸ்கேரேஜ் ஏற்படுவதற்கு முன்பு தெரியும் சில அறிகுறிகள்.

    வைட்டமின் பி சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், கருத்தரித்த பெண்ணின் உடல் நிலை சரியில்லையென்றால் ரொம்ப கவனமாக, ஸ்பெஷலாகப் பார்த்துக்கொள்வதன் மூலமும் தானாகவே கருக்கலைப்பு ஏற்படுவதை ஓரளவுக்குத் தடுக்கலாம்.

    கருக்கலைப்பு செய்துகொள்வதில் குழப்பம் ஏற்பட்டால், கவுன்சிலிங் மையங்களை அணுகி தகுந்த கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால், கருக்கலைப்புப் பற்றி ஒரு தெளிவு கிடைக்கும். மருத்துவர்களும் பெரும்பாலும் கருவை தக்கவைத்துக் கொள்வதில்தான் கவுன்சிலிங் அளிப்பார்கள். இதையும் தாண்டி கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டால், கருக்கலைப்புக்கு அரசு அங்கீகரித்து, லைஸென்ஸ் பெற்ற மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துகொள்வதே சட்டப்படி சரியான முறை!
    பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும்.
    நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் என்று நினைக்கலாம். ஆனால், இது பெண்களுக்கான ஒன்று. பெண்களுக்கு மட்டுமல்ல. வருங்கால சந்ததிகளை ஆரோக்கியமாக உருவாக்க அவசியமான ஒன்று. நமது நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 3 சதவீதத்தினர் பிறவிக் கோளாறுடன் பிறக்கின்றனர்.

    மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, மூளையில் நீர் கோர்ப்பது, குடல் வெளியில் இருப்பது, சிறுநீரகங்கள் இல்லாமல் பிறப்பது, கை, கால் எலும்பு வளராமல் இருப்பது. இப்படிப்பட்ட குழந்தைகள் நீண்ட நாள் உயிர்வாழ முடியாது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற அதிநவீன மருத்துவக் கருவிகள் கூட 70 சதவீத குறைகளை மட்டுமே கண்டுபிடிக்க உதவுகின்றன. மீதி 30 சதவீத குறைகளை கண்டுபிடிக்கவே முடியாது. காது கேளாமல் இருப்பது போன்ற பிறவிக் கோளாறுகள் வளரவளரத்தான் தெரியும். ஸ்கேன் என்பது உயிரைப் பாதிக்கும் பிரச்சினைகளை மட்டுமே கண்டுகொள்ள முடியும் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.

    சரி, பிறவிக் கோளாறு எப்படி வருகிறது? அதற்கு மரபு ரீதியிலான, சுற்றுச்சூழல் என்று ஏகப்பட்ட காரணங்களை மருத்துவம் சொன்னாலும், மனக் கோளாறு, முதுகுத் தண்டு பிரச்சினைகளுடன் பிறக்கும் குழந்தைகள்தான் அதிகம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இந்தப் பிறவிக் கோளாறை பெண்கள் நினைத்தால் தங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க முடியும் என்கிறது, மருத்துவம். இந்தக் குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்க போலிக் ஆசிட் குறைவாக இருப்பதே காரணம்.



    மிகக் குறைவான விலையில் கிடைக்கும் போலிக் ஆசிட் மாத்திரைகளை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே பிறவிக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளை 60 சதவீதம் தவிர்க்க முடியும். இந்தியா தவிர உலகம் முழுவதும் பெண்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்கிறார்கள். நமது நாட்டில் கூட பருவமடைந்த வளரிளம் பெண்களுக்கு அரசுப் பள்ளிகளில் இரும்புச் சத்து முத்திரையுடன் சேர்த்து போலிக் ஆசிட் மாத்திரையும் இலவசமாக கொடுக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு திருமணம் என்பது 20 வயதுக்கு மேல்தானே நடக்கிறது.

    கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு போலிக் ஆசிட் மாத்திரையை மருத்துவர்கள் கொடுப்பார்கள். ஆனால், அதற்கு முன்பே கர்ப்பத்திற்கு தயாராகும் போதே பெண்ணின் உடலில் போலிக் ஆசிட் போதுமான அளவு இருந்தால் பிறவிக் கோளாறுடன் குழந்தை பிறப்பதை தவிர்க்க முடியும். அதனால்தான் வெளிநாட்டுப் பெண்கள் திருமணத்துக்கு தயாராகும்போதே போலிக் ஆசிட்டை எடுத்து கொள்கிறார்கள்.

    அதனால்தான் போலிக் ஆசிட் மாத்திரைக்கு ‘என்கேஜ்மெண்ட் பில்’ என்ற பெயரை மேலைநாட்டினர் வைத்தார்கள். நமது நாட்டிலும் பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும்.

    கரு, உருப்பெறும் போதே போதிய அளவு போலிக் ஆசிட் பெண்ணின் உடலில் இருக்க வேண்டும் என்பதை ஆண்களும் தங்களின் வருங்கால மனைவிக்கு சொல்லி சாப்பிட வைப்பது, பின்னாளில் ஏற்படும் பல பிரச்சினைகளை தீர்த்து வைக்கும். 
    தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு அடைவதில் உண்டாகும் தடைகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஏ.ஆர்.சி. சர்வதேச கருத்தரிப்பு மையமானது நவீன செயற்கை முறை கருத்தரித்தலுக்காக அனைவராலும் நம்பிக்கையுடன் அணுகப்படும் மருத்துவமனையாக விளங்கி வருகிறது. தம்பதிகளின் பிரச்சினையை கச்சிதமாக கண்டறிந்து, அதற்கான தக்க ஆலோசனைகள் மற்றும் முறையான சிகிச்சைகளை அளித்து குழந்தை பேறு அடைய செய்வதே எங்கள் குறிக்கோள் என்று அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் சரவணன் லட்சுமணன் தெரிவித்தார்.

    சமீபத்தில் சென்னை ஏ.ஆர்.சி. மருத்துவமனை நிர்வாகிகள் டாக்டர். சரவணன் லட்சுமணன் மற்றும் டாக்டர் மகாலட்சுமி சரவணன் ஆகியோர் சாதனை நிகழ்த்தி உள்ளனர். அதாவது, குழந்தைப்பேறு அடைவதில் ஆண்களுக்கு உள்ள குறைபாடுகள், அவர்களது ஆரோக்கியம், அதற்கான விழிப்புணர்வு ஆகியவை குறித்து வீடியோ காட்சி பதிவுகளில் பல்வேறு அரிய ஆலோசனைகளை வழங்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

    மேற்கண்ட கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய ‘யூ-டியூப்’ வீடியோ காட்சிகளை உலக அளவில் நூற்றுக்கணக்கான நாடுகளில், 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்கள். அந்த வீடியோ பதிவுகளுக்காக ஏ.ஆர்.சி மருத்துவமனை நிர்வாகிகள் டாக்டர் சரவணன் லட்சுமணன் மற்றும் டாக்டர் மகாலட்சுமி சரவணன் ஆகியோருக்கு ‘ஏசியா புக் ஆப் சாதனை’ விருதும் அளிக்கப்பட்டுள்ளது.

    தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு அடைவதில் உண்டாகும் தடைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் பற்றி டாக்டர் சரவணன் லட்சுமணன் அளித்த ஆலோசனைகள் வருமாறு :

    திருமணமான தம்பதிகள் இயற்கையான குழந்தைப்பேறு கிடைக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்..?

    30 வயதுக்குள் திருமணமான தம்பதிகள் இயற்கையான குழந்தைப்பேறுக்காக ஒரு வருட காலம் காத்திருக்கலாம் என்பது பொதுவானது. அதுவே, தம்பதிகளுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருந்தால் அவர்கள் ஆறு மாதங்கள் வரை பார்த்து விட்டு அதன் பின்னர் தக்க மருத்துவ ஆலோசனைகளை நாடலாம். ஆனால், தம்பதிகளுக்கு 35 வயதுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் தக்க மருத்துவ ஆலோசனையை நாடுவதே பாதுகாப்பான முறையாகும்.

    இன்றைய காலகட்டத்தில் நிறைய தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு கிடைப்பதில் ஏன் காலதாமதம் உண்டாகிறது..?

    முன்பெல்லாம் திருமணம் என்பது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 25 முதல் 30 வயதுக்குள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இன்றைய நாகரிக வளர்ச்சிகள் காரணமாக, இன்றைய சூழலில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் 30 முதல் 35 வயதுக்குள் திருமணம் செய்வது வழக்கமாகி விட்டது. குழந்தைப்பேறு என்பது வயது சார்ந்து செயல்படக்கூடிய காரணியாக உள்ள நிலையில், தக்க வயது கடந்த தாமத திருமணங்கள் குழந்தைப்பேறுக்கு முக்கியமான தடையாக அமைகிறது. குறிப்பாக, கல்வி, தொழில் மற்றும் உத்தியோகம் போன்றவற்றால் ஏற்படும் மனோ ரீதியான பாதிப்புகள் உடல் சார்ந்த சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உணவுப்பழக்கம் போன்ற காரணங்களும் தடைகளாக அமைந்திருக்கின்றன.

    பழைய காலத்தை ஒப்பிடும்போது இப்போது, இயற்கையான குழந்தை பிறப்பில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மருத்துவ ரீதியான காரணங்கள் எவை..?

    இன்றைய காலகட்டத்தில் சராசரியை விடவும் கூடுதலாக உடல் எடை உள்ள பெண்கள் குழந்தைப்பேறு தாமதம் காரணமாக எளிதில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் உருவாவது, மாதவிடாய் கோளாறுகள், கருமுட்டை போதிய வளர்ச்சி அடையாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களும் காரணங்களாக உள்ளன. ‘பிரி மெரிட்டல் கவுன்சிலிங்’ என்று சொல்லப்படும் திருமணத்துக்கு முன்பு தக்க மருத்துவ ஆலோசனைகளை பெற்று அவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த சிக்கலுக்கு எளிதாக தீர்வு காண இயலும்.

    இன்றைய மருத்துவ ரீதியான செயற்கை கருத்தரித்தல் முறைகள் பற்றி ..?

    மருந்துகள் மூலம் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது, ஆரம்ப கட்ட சிகிச்சை முறையான ஐ.யு.ஐ (I.U.I Intra Uterine Insemination), பாதிப்புகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் IVF மற்றும் ICSI போன்ற நவீன சிகிச்சை முறைகள் உள்ளிட்ட அணுகுமுறைகள் மருத்துவ உலகில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

    தாய்மை கனவை நனவாக்கும் நவீன மருத்துவம்

    கருத்தரித்தலில் உள்ள குறைகளை அகற்றும் 3D லேப்ரோஸ்கோபி சிகிச்சை முதலில் சென்னை பிரசாந்த் ஆராய்ச்சி மையத்தில் உபயோகப்படுத்தப் பட்டது என்று தெரிவித்த மருத்துவர் கீதா ஹரிப்பிரியா, கருத்தரித்தல் குறைபாடுகளுக்கான பல்வேறு அதிநவீன சிகிச்சை முறைகள் பற்றி தெரிவித்ததாவது ERA இந்த முறையின் மூலம் கர்ப்பப்பையின் உள் சுவருக்கு, கருவை எந்த நாட்களில் ஏற்றுக்கொள்ளும் தன்மை அதிக அளவில் உள்ளது என்ற தகவலை துல்லியமாக கண்டறிய முடிகிறது.

    CYSTOPLASMIC TRANSPER_ இந்த பிரத்தி யேக வழிமுறையை வயதான பெண்கள் அல்லது பல தடவைகள் I----VF முறையில் தோல்வியுற்ற பெண்கள் ஆகியோருக்கு தானமாக பெறப்படும் கருமுட்டையிலிருந்து MITOCHONDRIA என்ற ஊக்க பொருட்களை மட்டும் பெற்று, தங்களுடைய மரபணுக்களைக்கொண்ட குழந்தைகளையே பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    PRP இந்த முறையின் மூலமாக மாதவிடாய் நின்றுபோகும் காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கும்கூட, தக்க கருமுட்டையினை உருவாக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்படி செய்ய முடியும். குறிப்பாக, இந்த முறையில் கர்ப்பப்பை உள்புற சுவர் வளரவும், விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. 
    கடலை எண்ணெயில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. கர்ப்பிணிகள் தினமும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் மகப்பேறில் சிரமம் இருக்காது.
    பொதுவாக ‘கடலை எண்ணெய்’ எனப்படும் வேர்க்கடலை எண்ணெயில் கணக்கற்ற நன்மைகள் அடங்கி இருக்கின்றன. போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. அவர்கள் தினமும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் மகப்பேறில் சிரமம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

    கடலை எண்ணெய், நீரிழிவு நோயைத் தடுக்கும். நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்கனீஸ் முக்கியப் பங்காற்றுகிறது.

    நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருக்கிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது.



    நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நமக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன், இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள வைட்டமின் 3 நியாசின், மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா 6 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

    பெண்களுக்கு மார்பகக் கட்டி உண்டாவதை வேர்க்கடலை தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் போன்றவை இதில் நிறைந்துள்ளன. பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் வேர்க்கடலை தடுக்கிறது. 
    சில தவறான அணுகுமுறை அல்லது நீங்கள் முயன்ற கருத்தடை முறையில் ஏற்பட்ட தவறினால் கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    கருத்தரிப்பதை தடுக்க தான் கருத்தடை முறைகள் கையாளப்படுகின்றன. ஆயினும் சிலமுறை எதிர்பாராத வகையில் கருத்தரிப்பு ஏற்படுவது உண்டு. சில தவறான அணுகுமுறை அல்லது நீங்கள் முயன்ற கருத்தடை முறையில் ஏற்பட்ட தவறினால் கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும்பாலும் தம்பதியர் மத்தியில் பொதுவான சில தவறுகள் தான் கருத்தடை முறையில் எழுகின்றன.

    அது மீண்டும் வராமல் இருக்க என்ன வழிகள் இருக்கின்றன. பாதுகாப்பான முறையில் உடலுறவுக் கொண்டு கருத்தரிப்பதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கு காணலாம்…

    உங்களுக்கு ஏற்ற கருத்தடை மாத்திரை உட்கொள்ள வேண்டியது அவசியம். பிறப்புறுப்பில் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு சில கருத்தடை மாத்திரைகள் சரியான பலன் தராது. எனவே, மருத்துவரிடம் ஆலோசித்து உங்களுக்கு ஏற்ற மாத்திரைகள் பயன்படுத்துவது அவசியம்.

    வேசிலின் அல்லது பேபி ஆயில் போன்றவை பயன்படுத்துவது ஆணுறையின் தன்மையை பாதிக்கிறது. அதனால் கூட கருத்தரிக்க வாய்ப்பிருப்பதாய் கூறப்படுகிறது. இதற்கு சிலிகான் எண்ணெய் பயன்படுத்துவது நல்ல தீர்வளிக்கும்.

    சீரான முறையில் அல்லது சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்ள தவறுவதும் கூட கருத்தரிக்க வாய்ப்பாக அமையும்.

    மாதவிடாய் சுழற்சியில் பாதுகாப்பான நாட்களில் உடலுறவுக் கொள்வதன் மூலம் நீங்க கருத்தரிப்பதை தவிர்க்க முடியும்.

    தரமற்ற ஆணுறை உபயோகிப்பதன் காரணமாக கூட கருத்தரிப்பு ஏற்படுகின்றன. எனவே, தரமான ஆணுறைப் பயன்ப்படுத்த வேண்டியது அவசியம்.
    போதைப் பொருட்கள் ஆண்களைவிட பெண்களின் ரத்தத்தில் வேகமாக கலக்கிறது. அதனால் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.
    மது அருந்துவது இப்போது ‘பேஷன்’ ஆக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் தன்னை உயர்ந்தவராக காட்டிக்கொள்ள விரும்பும் பெண்கள் குடிக்கிறார்கள். குடிக்க மறுப்பவர்கள் பழமைவாதிகள் என்று கேலி செய்யப்படுகிறார்கள். குடிப்பதன் மூலம் சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். இந்த நிலை தொடருமானால் பெண்கள் பல இழப்புகளுக்கு ஆளாவார்கள். குடிப்பதில் எந்தப் பயனுமில்லை. அதனால் பெண்களின் உடல்நிலைதான் கெடுகிறது.

    குடிக்கும் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘ராஜீவ் காந்தி கேன்சர் இன்ஸ்ட்டிட்யூட்’ சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், டாக்டர் இந்து அகர்வால் என்பவர் ‘போதைப் பொருட்கள் ஆண்களைவிட பெண்களின் ரத்தத்தில் வேகமாக கலக்கிறது. அதனால் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு பாதிப்பிற்குள்ளாகிறார்கள்’ என்கிறார்.

    மது குடிக்கும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட என்னென்ன காரணங்கள் தெரியுமா?

    பெண்கள் மென்மையான உடல்வாகு கொண்டவர்கள். ஆண்களின் உடலில் தண்ணீர் அதிகம். பெண்கள் உடலில் கொழுப்பு அதிகம். தண்ணீரில் கலக்கும் மதுவின் தீவிரம் குறைகிறது. ஆனால் கொழுப்பில் கலக்கும் மதுவின் தீவிரம் வெகுநேரம் நீடிக்கிறது. மது அருந்தும் பெண்களால் சீக்கிரம் தெளிவு நிலைக்கு வர முடியாது.

    பெண்களின் உடலில் இருக்கும் ‘என்சைம்’களின் அளவு குறைவு. அதனால் ஆல்ஹகால் ரத்தத்தில் அதிக அளவு கலந்து, உடல் போதையை சமன்படுத்த முடியாமல் தவிக்கும். போதையின் விளைவுகள் அதிகமாகி, மூளையையும் வெகுவாக பாதிக்கும்.



    பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் சுரப்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். அப்போது அவர்கள் மது அருந்தினால், போதையின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களது மனநிலையில் சீரற்றநிலை உருவாகி, தன்னை மீறிய செயல்களில் ஈடுபடுவார்கள். இதனால் சமூக அந்தஸ்து குறையும். குடும்ப வாழ்க்கை பாதிக்கும். நட்பு, சுற்றம், அலுவலகத்திலும் கெட்டபெயர் ஏற்படும்.

    மது அருந்தும் பெண்களுக்கு கல்லீரல் வெகுவாக பாதிக்கும். வீக்கம், வலி தோன்றும். பின்பு அவர்கள் மது அருந்துவதை விட்டுவிட்டு முறையான சிகிச்சை பெறாவிட்டால் கல்லீரல் முழு அளவு பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும். ஆண்களைவிட பெண்களுக்கு கல்லீரல் பாதிப்பு அதிகமாக உருவாகும்.

    பெண்களில் மது அருந்துபவர்களுக்கு அளவுக்கு அதிகமான சோர்வு ஏற்படும். குடிக்காத நேரங்களிலும் அந்த சோர்வு நீடிக்கும். மது அருந்தும் பெண்களின் உடலில் வைட்டமின் பி12 சத்து மிகவும் குறைந்து போகும். அதனால் மயக்கம், தலைசுற்றல், ஞாபக மறதி போன்றவை ஏற்படும்.

    மது உடலில் அதிகமான பசியை தோன்றுவிக்கும். அதனால் பெண்கள் நிறைய சாப்பிடுவார்கள். அதுவும் கலோரி அதிகம் கொண்ட ருசியான உணவுகளை கண்டபடி சாப்பிடுவார்கள். உடல் எடை அதிகரிக்கும். அப்போது பல்வேறு நோய்கள் உடலில் குடிகொள்ளத் தொடங்கிவிடும்.

    மது உள்ளே போனதும் அதிக அளவு ரத்தத்தில் கலந்து, ரத்த அழுத்தத்தை உயர்த்தும். அதனால் அவர்களிடம் பதற்றமும், பரபரப்பும் தோன்றும். செயல்திறன் குறைந்துபோகும்.



    மது அருந்தும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை உருவாகும். கர்ப்பிணிகள் மது அருந்தினால் கருச்சிதைவு தோன்றும். கருமுட்டையையும் பாதிக்கும். ஒருவேளை அவர்கள் கர்ப்பம்தரித்து குழந்தையை பெற்றெடுத்தாலும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். கடந்த 5 வருடத்தில் 30 சதவீதம் அளவுக்கு பெண்களிடம் மலட்டுத்தன்மை அதிகரித்திருக்கிறது. அதற்கு மதுப்பழக்கமும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

    விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்கும் மதுப்பழக்கம் பெண்களை அலைக்கழித்து, அவர்களை வாழ்க்கையின் எல்லைக்கே துரத்திச் சென்றுவிடும். தூக்கமின்மை அவர்களிடம் தோன்றும். வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தி தற்கொலைக்குகூட தூண்டும்.

    மது பெண்களின் மூளையையும் எளிதாக பாதிக்கும். நினைவாற்றலை குறைக்கும். மூளை நரம்புகளை செயலிழக்கச் செய்வதால் காக்காய் வலிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. நரம்புகள் பலவீனமாகி ரத்த ஓட்டம் குறையும். அப்போது வெயிலில் நிற்க வேண்டி வந்தால் மயக்கம் ஏற்படும்.

    கர்ப்பகாலத்தில் பெண்கள் மது அருந்துவது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு விஷத்தைக் கொடுப்பதற்கு சமமாகிறது. தாயின் தொப்புள் கொடி வழியாக மது குழந்தைக்குள் பிரவேசிக்கும். இளம் ரத்தத்தில் கலந்து வெகுநேரம் சஞ்சரிக்கும். குழந்தையின் ஜீரண உறுப்பு வளர்ச்சியடையும் நேரத்தில் ஆல்ஹகால் உள்ளே சென்றால், அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.

    மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு தலை, கழுத்து, ஜீரண உறுப்புகள், குடல், மார்பகம், கல்லீரல் போன்றவைகளில் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
    50 வயதுக்கு மேற்பட்டப் பெண்களுக்கு அதிக அளவில் இதய நோய் வர முக்கியமான காரணங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்களுக்கு மாதவிடாயின்போது சுரக்கும் ஹார்மோன்கள் இதய நோய் வராமல் தடுக்கிறது. மாதவிடாய் நின்றுவிட்டால் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். பொதுவாக பெண்களுக்கு 50 வயதுக்குள்ளே மாதவிடாய் நின்றுபோய்விடுகிறது. அப்போது பெண்கள் உணவு உட்கொள்வதில் கவனமின்றி இருக்ககூடாது.

    முக்கியமாக இறைச்சி உணவைத் தவிர்த்து அதிகம் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இறைச்சியில் அதிகம் கொழுப்புச் சத்து இருக்கிறது. ருசிக்காக அதிக அளவில் எண்ணெய், காரம் சேர்த்து சமைப்பதால் கலோரியின் அளவையும் அதிகரிக்கச் செய்துவிடுகிறது. உதாரணத்துக்கு, ஒரு கப் சாதத்தோடு சமைத்த இறைச்சி சேர்த்துக்கொண்டால் மூன்று கப் அளவிற்கு மாறிவிடுகிறது. இதனால் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதயத்தைப் பாதிக்கச் செய்யும்.

    கொழுப்புச் சத்து அதிகம் உடலில் சேர்வதற்குக் காரணம் இறைச்சி மட்டும் அல்ல. எண்ணெய்க்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 15மி.லி ((3 டீ-ஸ்பூன்) எண்ணெய் மட்டும் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். ஹோட்டலில் சாப்பிடுவதாலும் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. வெளியே சமைக்கும் உணவில் எவ்வளவு எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதனால் உணவகங்ளில் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

    கொலஸ்ட்ரால் இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் எனில், காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிடலாம்.



    அசைவம் சாப்பிட விரும்பினால் மாதத்தில் ஒரு முறை ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். அதுவும் 75 கிராம் முதல் 100 கிராம் அளவுக்குள் இருக்கவேண்டும். இதை பகல் நேரத்தில் மட்டுமே சாப்பிடவேண்டும். ஆட்டு இறைச்சியை விரும்பாதவர்கள், வாரத்தில் ஒருமுறை நாட்டுக் கோழி (பிராய்லர் கோழி சாப்பிடக்கூடாது) அல்லது மீன் சாப்பிடலாம். இதுவும் 75 முதல் 100 கிராம் அளவுக்குள் இருக்கவேண்டும். இவற்றை வறுத்து சாப்பிடக் கூடாது. குறிப்பாக மதிய உணவின்போது மட்டுமே அசைவ உணவுகளைச் சாப்பிட வேண்டும். அசைவ உணவு செரிமாணமாக அதிக நேரமாகும் என்பதால் இரவில் சாப்பிடுவதை  தவிர்க்கவும்.

    பிட்சா, பர்கர், ஃப்ரென்ச் ஃப்ரை, பப்ஸ், கேக் போன்ற பேக்கரி உணவுப்பொருட்கள் மற்றும் சமோசா, பரோட்டா போன்றவற்றையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதேபோல் இனிப்பு வகைகளையும் தவிர்க்கலாம். இதில் எல்லாமே வனஸ்பதி (டால்டா) சேர்க்கப்படுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்து உடல் பருமன் மற்றும் இதய நோய் வர காரணமாகிறது.

    எல்லாப் பெண்களுக்கும் 40 வயது தாண்டியதும் உடல் ரீதியான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும் என்பதால் உணவு விஷயத்தில் மட்டுமல்ல உடற்பயிற்சி செய்வதிலும் கவனம் செலுத்தவேண்டும். தினமும் 45 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொண்டாலே போதும். உணவு விஷயத்திலும், உடற்பயற்சியிலும் தவறாமல் கவனம் செலுத்தி வந்தாலே இதய நோய் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
    ×