என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பாலூட்டும் தாய் தனது குழந்தைக்கும் சேர்த்து உணவை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பாலூட்டும் தாய் தனது குழந்தைக்கும் சேர்த்து உணவை சாப்பிட வேண்டும். சத்தான உணவே ஆரோக்கியமான குழந்தைக்கு வழிவகுக்கும். தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    * ஓட்ஸ், முழு கோதுமை, கீன்வா, பார்லி, ரை மற்றும் இதுபோன்ற பல முழு தானியங்கள் வைட்டமின் பி மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்களின் முக்கியமான ஆதாரமாக இருக்கின்றன. குழந்தையைப் பராம ரிப்பதில் உடலுக்கு ஏற்படும் ஆற்றல் இழப்புகளை ஈடுசெய்ய உதவும். இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றமும் மேம்படும். அவை, ரத்த சர்க்கரை அளவுகளைக் குறைத்து, குடல் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதிசெய்யும் - இவை எல்லாமே நல்ல தரமான பால் உற்பத்திக்கு வழி வகுக்கும்.

    * பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளில் விதைகள் மிகவும் சிறந்தவையாகும். இந்திய பாரம்பரிய மரபு வழிமுறைகளில், பால் உற்பத்தியை மேம்படுத்த விதைகள் தலைமுறை தலைமுறையாக முக்கியமான விஷயமாகக் கூறப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில், வெந்தயம், சீரகம், எள் மற்றும் கசகசா போன்றவையும் அடங்கும்.

    இவற்றை உங்களுடைய காலைநேர கஞ்சி, கறி வகைகளின் டாப்பிங்காக சேர்த்து அல்லது தினசரி ஒரு ஸ்பூன் அளவுக்கு அப்படியே சாப்பிட்டு வரலாம். வறுத்துப் பொடியாக்கிக் கொண்டும், மற்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்து குடிப்பது, நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுவதோடு, உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தையின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவக்கூடியது.

    சோம்பு, சீரகம் அல்லது வெந்தயத்தைப் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை இரண்டு டீஸ்பூன்கள் எடுத்துக்கொண்டு, அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து அதன் நிறமும் சுவையும் மாறும் வரை கொதிக்க வைக்கவும். தண்ணீரை ஆற வைத்து, வாட்டர் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு குடிக்கலாம். சிறந்த முடிவுகளைப் பெற, இந்த விதைகளை தினமும் ஒருமுறையாவது குடிக்க வேண்டும்.



    * தண்ணீரில் எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல காரணங்களுக்காகத் தண்ணீர் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு அத்தியாவசியமானது. முதலில், நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும், உங்கள் உடலின் ஆற்றல் குறைந்துப்போகாமல் இருக்கவும் தண்ணீர் தேவை. இரண்டாவதாக, உடலின் பால் உற்பத்தியை தண்ணீர் அதிகரிக்கும். தாகம் எடுத்தால் உடனடியாகத் தண்ணீர் குடித்திடுங்கள், சோம்பல் காரணமாக ஒத்திப்போடவோ, வேறுவேலைகளால் குடிக்காமல் இருக்கவே கூடாது. ஃப்ரெஷ் சூப்கள், பழங்கள், காய்கறிகளின் ஜூஸ்கள் மற்றும் தேங்காய் தண்ணீர் போன்றவற்றையும் நிறைய எடுத்துக் கொள்ளலாம்.

    * சிக்கன் மற்றும் வான்கோழி போன்ற இறைச்சிகள், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு புரதச்சத்தை அதிகரிக்க உதவும். ஆனாலும், சிக்கனை அதன் தோல்நீக்காமல்தான் நீங்கள் சமைக்க வேண்டும். சிக்கன் தோலில் நிறையவே நல்ல விஷயங்கள் இருக்கின்றன. பார்ஸ்லே, பூண்டு, ஆலிவ் ஆயில் போன்றவற்றால் அதை ஃப்ளேவர் கூட்டி சாப்பிடலாம்.

    புரதத்தின் நல்ல மூலமாக இருப்பதில் முட்டைகளும் மற்றொரு சிறந்த பொருள், புரதத்தைத் தவிர அதில், ஃபோலேட், வைட்டமின் பி12 ஆகியவையும் அதிக அளவில் உள்ளன. உங்கள் டயட்டில் போதுமான அளவு பி12 இல்லையென்றால், குழந்தைக்கும் அதேபோல குறைவு ஏற்படும் என்பதை மறக்காதீர்கள். இதை சரிசெய்ய முட்டைகள் சரியான வழிமுறையாகும்.

    * முழுக்கொழுப்பு பால் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்தது. தினமும் இரண்டு கிளாஸ் பாலைக் குடிப்பதால், புரதம் மற்றும் கால்சியம் போன்றவை அதிகரிக்கும். மேலும் இதில் “நல்ல கொழுப்பு” இருப்பதால், உடலில் ஏற்படும் ஆற்றல் குறைபாடுகளை ஈடுசெய்ய மிகவும் உதவுகிறது. மிகவும் சூடான அல்லது குளிர்ந்த பாலை விட, இதமான சூட்டில் உள்ள பால் எப்போதுமே சிறந்தது.

    உங்களுக்கு மாட்டுப்பாலைச் செரிமானம் அடைவதில் சிக்கல் இருந்தால், ஆட்டுப்பாலை முயற்சி செய்து பாருங்கள். வீகன் உணவுமுறையில் இருப்பவர்கள், சோயா பால் அல்லது நட் மில்க் போன்றவற்றை முயற்சி செய்யலாம். இவற்றில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்கும். குழந்தைப் பிறப்பும், பாலூட்டுதலும் எலும்புகளை பலவீனமாக்கும், அதனால் போதுமான அளவு பால் குடிப்பதால், எலும்புகளும் பற்களும் வலிமையாக இருக்கும்.

    மேலும் குழந்தைக்கும் நல்லது. சீஸில் நல்ல கொழுப்புகள் இருக்கின்றன. தினமும் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்க, நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றும் ஒரு பால் தயாரிப்பு நெய் ஆகும். வீட்டில் தயாரிக்கும் நெய்யில், ஒமெகா 3 கொழுப்பு அமிலமான டிஎச்ஏ இருக்கிறது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. இயற்கையான,கலப்படம் இல்லாத வெண்ணெயையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 
    கருத்தடை என்றாலே கருத்தடை மாத்திரைகளும் ஆணுறையும் மட்டுமே நமக்கு நினைவில் வரும். ஆனால் கருத்தடை மாத்திரைகளால் பெண்கள் உடல்நிலையில் பக்க விளைவுகளை உண்டாக்கும்.
    கருத்தடை என்றாலே கருத்தடை மாத்திரைகளும் ஆணுறையும் மட்டுமே நமக்கு நினைவில் வரும். ஆனால் கருத்தடை மாத்திரைகளால் பெண்கள் உடல்நிலையில் பக்க விளைவுகளை உண்டாக்கும்.

    அதனால் ஆணுறையைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைத்துக் கொண்டிருப்போர் இந்த விஷயங்களைப் பின்பற்றினால், உங்கள் கவலைக்குத் தீர்வு கிடைக்கும்.

    ஆணுறையைப் பயன்படுத்தாமல், எப்படி கருத்தரிப்பை தள்ளிப் போடுவது என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் அதற்கு வழிகள் உண்டு. இவை நூறு சதவீதம் பயன்தராது என்றாலும் 90 சதவிதம் கைக்கொடுக்கும்.

    சரியான நாட்களைத் தேர்ந்தெடுத்து உறவு கொள்ளுதல். அதாவது மாதவிலக்கு ஆரம்பிக்கப் போகும் முன் நான்கு நாட்களுக்குள்ளும், மாதவிலக்கு முடிந்து நான்கு நாட்கள் வரையும் எத்தனை முறை வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். இந்த காலகட்டங்களில் கரு பலவீனமுடையதாக இருக்கும். அதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

    காப்பர் - டி என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்பில் பொருத்தும் கருவி. மருத்துவரின் உதவியுடன் இதைப் பொருத்திக் கொள்ளலாம். இதுவும் கருத்தரிப்பதைத் தடுக்கும்.

    உடலுறவின் போது, ஆண்கள் கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும். உறவு கொள்ளும் போது, விந்தை பெண்ணுடைய உடலுக்குள் செலுத்தாமல், விந்து வெளியேறும் முன், ஆணுறுப்பை வெளியே எடுத்துவிட வேண்டும். இந்த முறைப்படி, 80 சதவீதம் வரை கருத்தரிப்பை தடுக்க முடியும்.

    குழந்தை பெற்ற தம்பதிகளாக இருந்தால், குழந்தை போதும் என்று நினைத்தால், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

    இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், ஆணுறையைப் பயன்படுத்தாமலே கருத்தரிப்பதைத் தவிர்க்க முடியும்.

    திருமணமான புதிதில் தம்பதிகளின் மத்தியில் இருக்கும் பொதுவான பயம் இந்த கருத்தரிப்பு விஷயம் தான். ஏனெனில் அவர்கள் சிறிது காலம் மகிழ்ச்சியாக வாழ்க்கை அனுபவிக்க வேண்டுமென நினைப்பதுண்டு.
    முப்பத்தைந்து மற்றும் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்திருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
    வாழ்வின் ஒரு அங்கம் தான் உடலுறவு. பெரும்பாலும் பெண்கள் கணவரிடம் அன்பு மற்றும் பாசத்தையே எதிர்பார்ப்பார்கள். பகலில் எந்த நெருக்கமும் இல்லாமல் இருந்து விட்டு இரவில் மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. அவர்கள் உடலுறவிற்கு ஒத்துழைத்தாலும், அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது. என்ன செய்தாலும் எந்த உணர்வும் இன்றி இருப்பார்கள்.

    பொதுவாக முப்பத்தைந்து மற்றும் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்திருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இங்கு மனைவிக்கு உடலுறவில் விருப்பம் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?...

    அடிக்கடி தலைவலி, வயிற்றுவலி போன்ற வெளியே தெரியாத காரணங்கள் சொல்லி தவிர்க்க பார்ப்பார்கள். தூக்கம் வருகிறது, சோர்வாக இருக்கிறது, குழந்தைகள் தூங்கவில்லை, காலை அலுவலகம் செல்ல வேண்டும் என்றெல்லாம் காரணம் சொல்வார்கள்.

    குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களாகவே இருந்தாலும், ஆணுறை அணிய செய்து உடலுறவு கொள்ள சொல்வார்கள். அந்தரங்க உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்று கூறுபவர்களும் உண்டு.



    நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்று சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவரின் வெறுப்புக்கு ஆளாகிவிடுவோமா என்கிற பய உணர்வு இருக்கும். மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால், கணவருக்கு அளவிற்கு அதிகமாக கோபம் ஏற்படும். மனைவியை எல்லையின்றி நேசிக்கும் கணவரும் கூட, மனைவி இதற்கு மறுப்பு தெரிவித்தால் கட்டுக்கடங்காத கோபத்தை காட்டுவார்கள். ஏன் எதற்காக மறுக்கிறாள் என்பதை பொறுமையாக யோசிக்க மாட்டார்கள். அந்த தருணத்தில் உடலுறவை பற்றிய உந்துதல் மட்டுமே இருக்கும்.

    அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், காரணமில்லாமல் எரிந்து விழுவது, திட்டுவது அவர்களை நிராகரிப்பது போன்றவற்றை செய்வார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், மனைவியின் நடத்தையை சந்தேகிப்பார்கள். இதனால் கணவன் மீது இருக்கும் அன்பும், அந்நியோன்னியமும் குறையுமே தவிர அவர்களிடம் கட்டாயம் மாற்றத்தை காண முடியாது. சந்தேகம் என்பது உங்கள் குடும்பத்தையே அழித்து குழந்தைகளின் வாழ்வை கேள்விக் குறியாக்கிவிடும்.

    இது போன்ற விஷயங்களை பொறுமையாகவும், அமைதியாகவும் கையாள்வதே நன்மையை தரும். உடலுறவு கொள்ளும் போது ஆண்களை விட பெண்களுக்கே அதிக இன்பம் கிடைக்கும். உடலுறவினால் அவர்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண்களே அதிகம் விரும்புவார்கள். எனவே, பெண்கள் ஏன், எதனால் தவிர்க்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது கணவரின் கடமை. இதுவே, சிறந்த இல்லற வாழ்விற்கு வழிவகுக்கும். 
    பெண்கள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.
    கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாக இருந்த போதும் பெண்களை பொறுத்தமட்டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுவது கூடுதல் கொஸ்ட்ரால் காரணமாகத் தான். முக்கியமாக சாதாரண மெலிந்த தேகத்துடன் இருக்கும் பெண்கள் கூட, திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து கூடுதல் உடல் பருமனை பெற்று விடுகிறார்கள்.

    சந்தோஷமான சூழ்நிலை, விசேடமான விருந்து உபசரிப்பு முதலியவை காரணமாக பெண்கள் திருமணத்திற்கு பின் உடல் பருமனை பெறுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது. இதனை தடுத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு கூடிய உணவு பழக்கவழக்கங்கள் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். அத்துடன் உடலில் கொழுப்பு சேரக்கூடிய உணவு பதார்த்தங்களை பெரிதும் தவிர்த்தலும் வேண்டும்.

    முதல் பிரசவத்திற்கு முன்பாக உடல் பருமன் அதிகமாவதால் பெண்கள் பலவிதத்திலும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் ஒரே சீரான உடல் பருமன் கொண்டு விளங்குவதற்கும் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக மிக அவசியமாகும்.

    உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்சனை அல்ல. நம் மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற மாவுச்சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணமாகலாம். கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல. சிறு உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம்.

    விட்டமின்கள் A, D, E, K போன்ற முக்கியமான விட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடியவை. இதனாலும், கொழுப்பு மிக முக்கியமானது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை.



    கொழுப்பில் கரையும் விட்டமின்களை விட்டமின் D என்று கூறுவார்கள். இவை குறைந்தால் பலவித சரும நோய்கள், பித்தப்பை கல், தலைமுடி உதிர்தல், வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரக ப்ராஸ்டேட் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் உருவாகும்.

    குடலில் விட்டமின் B உருவாவதற்கும் கொழுப்புச்சத்து அவசியம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம்.

    ஆனால் இவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது, ஏனென்றால் அதிகப் படியான கொழுப்பு சேரும் போது அது தொடர்பான பலவித உடல் உபாதைகளும் தொற்றிக் கொள்ளும். ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம்.

    துரித உணவு (Fast Food), வாரக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாமல் இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவு (Frozen Food), ஹொட்டேல் உணவுபோலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள் ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவுமுறையிலும் ஊடுருவி விட்டது.

    இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.

    ஒவ்வொரு நாள் உணவிலும் 5 சத விகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம். மிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும் தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொ திப்பு, சர்க்கரை நோய், சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.

    நோய் என்று வருமுன்பே பூமியிலே கால் பதியுங்கள். சுத்தமான காற்றைச் சுவாசித்து, மற்ற மனிதர்களையும் நேரில் கண்டு, உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் அசைவே உயிர்! இது உடற்பயிற்சியினால் மட்டுமே சாத்தியம். உணவினாலோ, மருந்தின் மூலம் மட்டுமோ சாத்தியமில்லை!
    கர்பப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து.
    செம்பருத்தி செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது. செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
     
    கர்பப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.
     
    மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.
     
    இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.
     
    அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
    பெண்கள் மாதவிடாய் காலத்தில் வைட்டமின் சி, இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை அதிக ரத்த இழப்பு, திரவ இழப்புகளை ஈடு செய்யும்.
    பெண்கள் மாதவிடாய் காலத்தில் வைட்டமின் சி, இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை அதிக ரத்த இழப்பு, திரவ இழப்புகளை ஈடு செய்யும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் துணை புரியும்.

    அதிக வலி, தசைப் பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணமாகவும் அமையும். முளைகட்டிய தானியங்கள், கீரை, வெல்லம், பழங்கள், நட்ஸ்கள், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். சமையலில் மஞ்சள் பொடி, இஞ்சி, சீரகம், லவங்கப்பட்டை போன்றவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஒருசில வகை உணவுகளை மாத விடாய் காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.

    காபி பிரியர்கள் அதனை தவிர்ப்பது அவசியமானது. அது ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்திவிடும். அதனால் இதயத்துடிப்பும் அதிகரிக்கும். வீண் டென்ஷன், கவலை போன்ற பாதிப்புகள் உருவாக்கும். காபிக்கு பதிலாக கிரீன் டீ, தக்காளி, கேரட் ஜூஸ் அல்லது சூப் பருகலாம்.

    பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பன்றி இறைச்சி, ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக காய்கறி சாலட், கஞ்சி போன்றவற்றை சாப்பிடலாம். வெளி உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.

    கொழுப்பு நிறைந்த உணவுகள், பர்கர்கள், கிரீம் சார்ந்த இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். மாதவிடாய் நாட்களில் தவறான உணவுகளை சாப்பிடுவது நீரிழப்பு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக கோதுமை ரொட்டி, சால்மன் மீன்கள், பருப்பு குழம்பு வகைகளை சாப்பிடலாம்.

    பால், பாலாடை கட்டி போன்ற பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக மோர் பருகலாம்.

    நொறுக்கு தீனிகள், பிஸ்கட், சிப்ஸ் போன்ற வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றில் கொழுப்பு அதிகமாக இருக்கும். அவை ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்தி மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு பதிலாக கேரட், வெள்ளரிக்காய்கள் சாப்பிடலாம்.

    ரொட்டி, பீட்சா போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அவை மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். செரிமான செயல்பாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    பதப்படுத்தப்பட்ட பவுடர்களில் தயாராகும் சூப்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவற்றுள் உப்பு அதிகமாக இருக்கும். அதற்கு பதிலாக தயிரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    திருமணம் ஆன புதிதில் குழந்தை பிறப்பை தள்ளிப்போட பல்வேறு வழிகள் இருந்தாலும் எந்த முறையை பயன்படுத்தினால் பிரச்சனை வராது என்பதை பற்றி பார்க்கலாம்.
    திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இருவருக்கும் மனக்கட்டுப்பாடெல்லாம் சரிப்பட்டு வராது. திருமணமான புதிதில் பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளையும் ஆண்கள் ஆணுறையையும் பயன்படுத்தலாம். கர்ப்பத்தடை மாத்திரைகளை உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உபயோகிக்கலாம். இதைச் சரியாக உபயோகித்தால் கருவுறாமல் இருக்கலாம். ஆனால், இந்த மாத்திரைகளை ஒன்றிரண்டு வருடத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

    இந்த மாத்திரைகள் சிலருக்கு சில அசௌகரியங்களை உண்டுபண்ணலாம். அப்படியிருந்தால் ஆண் ஆணுறையையும், பெண், விந்து நாசினி கிரீமையும் சேர்த்து உபயோகிக்கலாம்.



    இப்போது இந்தியாவில் பெண்களுக்கான “பெண்ணுறை“ விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றையும் பெண்கள் உபயோகிக்கலாம். திருமணமாகி, குழந்தைகளும் பிறந்து விட்டிருந்தால் அப்போது பயன்படுத்த வேறுபல கருத்தடை முறைகள் உள்ளன. இரண்டு குழந்தைகளுக்கு நடுவே இடைவெளி விட நினைப்பவர்கள் காப்பர்-டி மாதிரியான சாதனத்தை மருத்துவரின் ஆலோசனைப்படி பொருத்திக் கொள்ளலாம்.

    குழந்தை பெற்றது போதும், இனி “நோ பேபீஸ்“ என்பவர்கள் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

    இப்போதெல்லாம் லாப்ரோஸ்கோபி முறைப்படி மிகத்துரிதமாக இந்தக் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சைகைளை செய்துகொள்ள முடிகிறது. அதிலும் ஆண்களுக்கான வாசக்டமி எனும் அறுவை சிகிச்சை ரொம்பச் சுலபம் என்பதால் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 
    உலகத்திலேயே கலப்படம் இல்லாத பால் தாய்ப்பால். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வாழ்நாள் முழுவதும் சத்து குறைபாட்டில் கஷ்டப்படுகிறார்கள்.
    உலகத்திலேயே கலப்படம் இல்லாத பால் தாய்ப்பால். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வாழ்நாள் முழுவதும் சத்து குறைபாட்டில் கஷ்டப்படுகிறார்கள். ஆண்டுக்கு 2 1/2 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 40 சதவீத குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. 8 சதவீத குழந்தைகள் மிகவும் மெலிந்தும், எலும்பும் தோலுமாக பிறக்கின்றன. 30 சதவீத குழந்தைகள் உயரம் குறைவாக பிறக்கின்றன.

    தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. தாய்ப்பால் அவசியம் அதன் நன்மைகள் குறித்து கூடுதல் பேராசிரியரும், குழந்தைகள் நல மருத்துவருமான டி.குணசிங் விளக்கம் அளித்துள்ளார். அவை வருமாறு:

    தாய்ப்பாலூட்டுவது என்றால் முதல் 6 மாதத்திற்கு (180 நாட்கள்) தாய்ப்பால் மட்டுமே தருவதும் பின் இணை உணவுகளுடன் இரண்டு வயது வரை அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து தாய்ப்பாலூட்டுவதுமேயாகும். தாய்ப்பால் எல்லா சத்துக்களும் உடைய ஒரு முழுமையான உணவாகும். தாய்ப்பாலில் நோயை எதிர்க்க கூடிய சக்தி உள்ளதால் குழந்தையை எந்த நோயும் நெருங்காது. தாய்ப்பாலில் மூ­ளை வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் உள்ளன. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் அறிவுள்ள குழந்தைகளாக விளங்குகிறது.

    தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிப்பது எப்போது?

    குழந்தை பிறந்தவுடன் ஈரத்தை துணியால் துடைத்து விட்டு தாயிடம் கொடுக்க வேண்டும். தாய் குழந்தையை உடலோடு சேர்த்து அனைத்து பிறந்தவுடன் பால் தர வேண்டும். பிறந்தவுடன் தாய்ப்பால் தர முடியாத சூழ்நிலையில் அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் தரவேண்டும். பிறந்தவுடன் குழந்தையை குளிப்பாட்டக்கூடாது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னரே குளிப்பாட்ட வேண்டும்.

    ஏன் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?


    குழந்தை பிறந்தவுடன் சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும், பால் சப்புவதற்கு ஆவலாகவும் இருக்கும். எனவே குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது எளிதாகிறது. பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் குழந்தை தூங்கி விடும். அதன்பின் பால் கொடுப்பதற்கு சிரமம் ஏற்படும்.

    குழந்தை பிறந்தவுடன் குளுக்கோஸ் தண்ணீர், தேன், கழுதைப்பால் போன்றவை கொடுக்கலாமா?

    குழந்தை பிறந்தவுடன் சுரக்கும்பால் “சீம்பால்” என்று கூறுகிறோம். இது மஞ்சள் நிறத்தில், கட்டியாக இருக்கும். இதில் குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் முழுமையாக உள்ளது. முதல் 3 அல்லது 4 நாட்களுக்கு சுரக்கும் சீம்பால் குழந்தைக்கு போதுமானதாகும். குளுக்கோஸ், தேன் போன்றவைகள் கொடுப்ப தால் குழந்தைக்கு தொற்று நோய் வருவதற் கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. மேலும் குழந்தைக்கு பசி அடங்கி பால் சப்பிட மறுத்து விடும். இதனால் தாய்க்கு பால் கட்டி பிரச்சினைகள் ஏற்பட்டு தாய்ப்பால் கொடுப்பதற்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றது. ஆகவே பிறந்தவுடன் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

    சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு எப்படி பால் கொடுப்பது?

    தாய் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து அறைக்கு வந்தவுடன் மயக்கம் தெளிந்த நிலையில் தாய் படுக்கையில் படுத்த நலையிலேயே செவிலியர், உறவினர்கள் குழந்தையை மார்போடு அனைத்து தாய்ப்பால் கொடுக்க உதவி செய்ய வேண்டும். அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்குள் கட்டாயம் கொடுக்க வேண்டும். வேறு எந்தவித உணவும், பாலும் கொடுக்கக்கூடாது.

    குழந்தைக்கு தண்ணீர், கிரைப்வாட்டர் கொடுக்கலாமா?


    குழந்தை பிறந்த 6 மாதங்கள் முடியும்வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பாலிலே குழந் தைக்கு வேண்டிய தண்ணீர் உள்ளது. ஆகவே குழந்தைக்கு கோடை காலத்தில் கூட தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கிரைப்வாட்டர் ஜீரணத்திற்காக கொடுக்க வேண்டும் என்று ஒரு நம்பிக்கை மக்களிடையே உள்ளது. தாய்ப்பால் மிகவும் எளிதில் ஜீரணமாகின்ற ஒரு உணவாகும். ஆகவே கிரைப்வாட்டர் கொடுப்பதால் எந்த பயனும் கிடையாது. மேலும் அது கொடுப்பதால் பாக்டீரியா தொற்று வருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.



    குழந்தைக்கு தாய்ப்பால் எப்பொழுதெல்லாம் தர வேண்டும்?

    குழந்தைக்கு குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு முறையாவது தாய்ப்பால் தரவேண்டும். அழும்போதெல்லாம் மற்றும் இரவு பகல் எல்லா நேரத்திலும் தர வேண்டும். இரவில் குறைந்தது 2 முறையாவது தர வேண்டும். குழந்தை 4 மணி நேரத்திற்கு மேல் தூங்கிக் கொண்டிருந்தால் அதை எழுப்பி பால் கொடுக்க வேண்டும். சில குழந்தைகள் குறைவான முறைகளும் சில குழந்தைகள் 15 தைல் 20 முறைகளும் பால் குடிக்கும்.

    குழந்தை தேவையான அளவு தாய்ப் பால் குடிக்கிறதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

    ஒரு நாளில் குழந்தைக்கு குறைந்தது 8 முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை குறைந்தது ஆறு முறையாவது சாதாரண நிறத்தில் சிறுநீர் கழித்தால், தாய்ப்பால் போதிய அளவு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். குழந்தை மாதா மாதம் குறைந்தது 500 கிராம் எடை கூடினாலும் குழந்தைக்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    குறைமாத குழந்தை, எடை குறைவான குழந்தைக்குக்கூட 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானதா?

    ஆம், குறை மாத குழந்தை மற்றும் எடை குறைவான குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானதாகும்.

    தாய் நோய்வாய் பட்டிருக்கும் போது மற்றும் மருந்துகள் சாப்பிடும் போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

    பெரும்பான்மையான சமயங்களில் தாய்ப்பால் கொடுக்கலாம். அதுதான சமயங்களில் (உதாரணம்: தாய் புற்று நோய்க்கு மருந்து சாப்பிடுதல்) மட்டுமே தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம். இச்சமயங்களில் தாய்ப்பாலூட்டு பயிற்சி பெற்ற மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று நடந்து கொள்ள வேண்டும்.

    குழந்தைக்கு பேதி ஏற்படும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

    கட்டாயம் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தையை பேதியிலிருந்து காப்பாற்றும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்றால் என்ன செய்வது?

    தாய்ப்பால் போதவில்லை என்பது பேதைமையே. தைலில் தாய்ப்பால் கிடைக்கிறதா என சரி பார்க்க வேண்டும். சரியான அளவில் (500 கிராம் மாதம்) எடை கூடி உள்ளதா என சரிபார்க்க வேண்டும். குறைந்தது 6 முறையாவது சிறுநீர் கழிக்கிறதா என சரிபார்க்க வேண்டும். (வேறு எந்த உணவோ, பாலோ, தண்ணீரோ கொடுக்காத நிலையில்) தாய்ப்பால் சரியான அளவு கிடைக்கவில்லை எனில், கீழ்க்கண்டவற்றை சரிபார்க்க.

    * குறைந்தது 8 முறையாவது சப்புகிறதா?
    * பகல்-இரவு எல்லா நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறதா?
    * புட்டிப்பால், சூப்பான் உபயோகிக்கப்படுகிறதா?
    * வேறு பாலோ, உணவோ கொடுக்கப்படுகிறதா?



    * குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது சரியான நிலையில் சப்பும் நிலை மற்றும் ஒட்டுதல் உள்ளதா?

    மேற்கூறியவற்றில் பிரச்சனை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். தாய்க்கு ஒரு சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும். தாய்க்கு தன்னம்பிக்கை கொடுப்பது குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது கடமையாகும்.

    தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு என்ன செய்வது?

    குழந்தை எவ்வளவு சப்புகிறதோ அந்த அளவு பால் ஊறும். ஆகவே குழந்தை அதிக அளவு சப்ப வைத்தால் அதிக அளவு ஊறும். மேலும் தாய் நம்பிக்கையுடன் கொடுத்தால் தாய்ப்பால் கட்டாயம் தேவையான அளவு சுரக்கும்.

    குழந்தை பால் போதாமல் அழுது கொண்டே இருக்கிறதே?

    குழந்தை பசிக்காக மட்டுமே அழுவதில்லை. வேறு பல காரணங்களுக்காகவும் அழுகின்றது. ஆகவே ஏற்கனவே கூறியபடி தாய்ப்பால் போது மானதாக கிடைக்கிறதா என சரி பார்க்கவும். தாயிடம் குழந்தை எடை தேவையான அளவு கூடியிருப்பதை கூறி தாய்ப்பால் தேவையான அளவு கிடைப்பதை சொல்லி நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

    குழந்தை அழுகையை நிறுத்துவதற்கு குழந்தை தாலாட்டவும், தோளில் போட்டு தட்டி கொடுக்கவும், வயிற்றில் கையால் சிறிதாக அழுத்தவும், உடை மாற்றவும், மற்றும் இடத்தை மாற்றி பார்க்கவும் அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் வயிற்றுவலி மருந்து கொடுக்கலாம்.

    புட்டிபால் கொடுக்கலாமா?

    கட்டாயம் கொடுக்க கூடாது. இதனால் குழந்தைக்கு சப்புவதில் குழப்பம் ஏற்பட்டு சிறிது நாளில் தாய்ப்பால் குடிப்பதை படிப்படியாக குறைத்து நிறுத்தி விடும். குழந்தை சப்பாத நிலையில் தாய்ப்பால் சுரப்பது படிப்படியாக குறைந்து நின்று விடும். மேலும் புட்டிபால் கொடுப்பதால் கிருமி தொற்று, பேதி, நிமோனியா ஏற்படவும் வாய்ப் புள்ளது. ஆகவே புட்டிப்பால் வேண்டவே வேண்டாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பாலாடையோ, கரண்டியோ உபயோகிக்கலாம்.

    தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்து விடுமா?

    தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு அழகு குறையாது. அழகு கூடத்தான் செய்யும். உடல் மெலிந்து ‘சிலிம்’ஆக காணப்படுவார்கள். தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்தால் மார்பக புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் நோய் பாதிப்பில் இருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழலாம்.
    பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.
    உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், நாம் அவற்றை காட்டி மருத்துவரிடம் பரிசோதிப்போம். அதற்கான மருந்துகளை உபயோகிப்போம். ஆனால், அந்தரங்க பகுதியில் ஏற்படும் நோய் தொற்றை பற்றி மற்றவரிடமோ அல்லது மருத்துவரிடமோ கூற தயக்கம் ஏற்படும். பெண்கள் தங்களின் பிறப்புறுப்பை பகுதியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அந்தரங்க பகுதியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தை பாதித்து, பிரச்சனையை ஏற்படுத்தும்.

    பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருக்கும். அதனால் எளிதில் கிருமிகளால் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் அழகை மேம்படுத்த பலவற்றை செய்யும் பெண்கள், அவர்களின் அந்தரங்க பகுதி சுத்தத்தை மறந்துவிடுகிறார்கள்.

    பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

    முழு தானியங்களில் உள்ள சத்துக்கள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டி, தொற்றுகள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.



    எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்திருப்பதால் நோய் தொற்றை தவிர்க்கும். எலுமிச்சை டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியத்திற்குத் அவசியமான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கின்றன.

    தயிரில் உள்ள புரோபயோடிக்குகள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும். உடலை குளிச்சியுடன் வைக்கவும் உதவுகிறது.

    சால்மன் மீனில், உடலுறவின் போது யோனியின் சுவர்கள் வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்கத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும், இது மூளை வளர்ச்சிக்கும், அறிவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

    முட்டையில் புரதம் மற்றும் வைட்டமின் டி சத்து உள்ளது. இது பிறப்புறுப்பில் ஏற்படும் பல நோய்த்தொற்றுகளைத் தடுக்க பெரிதும் உதவுகின்றன.

    அவகேடோ பழத்திலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதுவும் அந்தரங்க உறுப்பில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கவும், வளர்ச்சி அடையாமல் தவிர்க்கவும் உதவுகின்றன.

    ஸ்ட்ராபெர்ரியில் அந்தரங்க உறுப்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை மைக்ரோபியல் தொற்றுகள், ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் வறட்சியை தவிர்க்க உதவுகிறது. 
    குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக்கூடாது பக்கவாட்டில் தான் படுக்கவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? இதோ சில உண்மைகள்..!
    கர்ப்ப காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. பக்கவாட்டில் தான் தூங்கவேண்டும் என்பது தான் அது. இது பற்றி அறிவியல் என்ன கூறுகிறது

    * முதல் மூன்று மாதங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 4 ஆம் மாதத்தில் இருந்து தாய்க்கும் சேய்க்கும் தொப்புள் கொடி வலிமை பெற்று இருக்கும்.

    * மல்லாந்து படுத்தால், கருப்பையில் இருக்கும் நீரில் மிதந்துக்கொண்டிருக்கும் தொப்புள் கொடி கருவின் மீது சுற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.



    * 4 மாதங்களுக்கு பிறகு குழந்தையின் எடை கூடும் நிலையில் மல்லாந்து பார்த்தபடி படுத்தால் தாயின் குடல் மீது அழுத்தத்தை கொடுக்கும். இதனால் அஜீரணம் ஏற்படும். அசவுகரியமாக உணர்வார்கள்.

    * அதிக எடை வயிற்று பகுதியில் இருக்கும் நிலையில் மேல் பார்த்தபடி படுத்தால் இடுப்பு மற்றும் முதுகு எலும்பிலும் அழுத்தம் ஏற்படும். இதனால் தாயின் உடலில் ரத்த ஓட்டமும் பாதிக்கும்.

    * தாய் பக்கவாட்டில் படுத்திருக்கும் போது வயிற்றில் வளரும் குழந்தை அசைந்து விளையாடும். நடமாடும் போது, அசைவின்றி இருக்கும். இது ஏனென்றால், பக்கவாட்டில் படுத்திருக்கும் போது குழந்தை விளையாட அதிக இடம் கிடைக்கும். நின்றுக்கொண்டிருக்கும் போதும், மேல்நோக்கி பார்த்தபடி படுத்திருக்கும் போதும் கருப்பை சுருங்கி இடுப்பு எலும்பில் தாங்கியபடி இருக்கும். (தண்ணீர் பலூனின் இயல்பை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்).

    அதனால் கர்ப்பிணிகள் பக்கவாட்டில் படுத்து உறங்குவது தாயுக்கும் சேய்க்கும் மிகவும் நல்லது.

    பெண்கள் அணிவும் பிரா வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் அதில் அடங்கியிருக்கிறது.
    பெண்களின் ஆடைகளில், குறிப்பாக உள்ளாடைகளில் பிரா மிக அத்தியாவசியமான ஒன்று. பிரா தான் பெண்களின் உடலை நல்ல வடிவமைப்புடனும் கவர்ச்சியாகவும் காட்டக்கூடியது. அந்த பிராக்கள் எப்போது தங்களுடைய பொலிவை இழக்கிறதோ அப்போது பெண்களின் உடல் அழகையும் பொலிவிழக்கச் செய்யும்.

    பிராக்களைப் பார்த்துப் பார்த்து அழகாக வாங்கினால் மட்டுமே போதாது. அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சிலருக்கு தங்களுடைய பிராக்களை எப்போது தூக்கி எறிந்துவிட்டு, புதியதை மாற்ற வேண்டுமெனத் தெரியாது. சிலர் தங்களுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான உள்ளாடை இருப்பின் அதை அவ்வளவு எளிதாக மாற்றிவிட மனது வராது. ஆனால் அது முற்றிலும் தவறான பழக்கம். அடுத்து புதிதாக வாங்கும் ஏதேனும் ஒன்றை நம்முடைய மனதுக்குப் பிடித்த ஒன்றாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

    பிராக்கள் விஷயத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா? அவை வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னையும் அதில் அடங்கியிருக்கிறது.



    நாம் அஜாக்கிரதையாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆரோக்கிய பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

    நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவது போல, நிச்சயம் 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்கள் பழைய பிராக்களைத் தூக்கியெறிந்துவிட்டு புதிய பிராக்களை வாங்குங்கள்.

    மெட்டல் ஹூக் உள்ள பிராக்களை 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தினால், அது சருமத்தில் உராய்ந்து அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும்.

    ஃபிட்டான பிராக்களை அணிவது மிக முக்கியம். அது உங்கள் வடிவழகை கூட்டும். தளர்வான, ஃபிட் இல்லாத பிராக்கள் உங்கள் உடல் வடிவைக் கெடுப்பதுடன் மார்புகளை மிக அதிகமாகத் தளர்வாக்கிவிடும்.



    நன்கு கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும், நிச்சயம் உங்களின் பிராக்களின் கப் சைஸ் ஒரு வருடத்துக்கு ஆறு முறையாவது மாற்றமடையும். அதனால் குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மார்பளவை அளவெடுத்து, அதற்கேற்றாற் போல் பிராக்களை அணிந்திடுங்கள்.

    அளவுக்கு அதிகமாக இறுக்கமுடைய பிராக்களை அணிவதும் தவறு தான். அதனால்  வியர்வை வெளியேற முடியாமல் போகும். அது பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கிவிடும்.

    பிராக்களின் தோள் பட்டையில் உள்ள ஸ்ட்ரிப் லேசாக தளர்ந்தாலும் உங்களுடைய அளவில் மாற்றம் உண்டாகும். மார்பகம் தளர்ந்து போகும். அதனால் ஸ்ட்ரிப் தளர ஆரம்பிப்பது உங்களுடைய பிராக்களை நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டியதற்கான அறிகுறிகளில் ஒன்று.

    தாய்மைக் காலத்தில் ஆண், தன் மனைவிக்கு இன்னொரு தாயாக வேண்டும். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு, என்பது இருவருக்கும் விருப்பம் இருக்கும் சூழலில் உறவு வைத்துக் கொள்ளலாம்.
    ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து இன்னொரு உயிர் கருவான பின் அது செல்ல மழலையாக பூமியை எட்டிப் பார்க்கும் வரை தாம்பத்திய உறவை சில கட்டுப்பாட்டுடன் தொடர வேண்டியுள்ளது.  தாய்மைக் காலத்தில் ஆண், தன் மனைவிக்கு இன்னொரு தாயாக வேண்டும். தாம்பத்திய நேரத்திலும் ஆண் அத்தகைய பரிவுடனே பெண்ணைக் கையாள வேண்டும்.

    தாய்மை காலத்தில் கணவனின் அருகாமை அவளுக்கு முன்பை விட அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால், தாம்பத்திய உறவில் அவளது விருப்பங்கள் மாறுகிறது. வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் டென்ஷனானால் கூட அது நெருக்கமான நேரத்தில் விருப்பமின்மையாக வெளிப்படும். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு, என்பது இருவருக்கும் விருப்பம் இருக்கும் சூழலில் உறவு வைத்துக் கொள்ளலாம்.

    பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் ஆண் வற்புறுத்தக் கூடாது. நெருக்கம் இறுக்கமான அணைப்பு, அன்பு முத்தம் என பெண் விரும்பும் விளையாட்டுக்களாக இருக்கலாம். அவளுக்குப் பிடித்ததெல்லாம் கேட்டுக் கேட்டுத் தரலாம். செக்ஸ் வைத்து கொள்ளும் பொஷிசனை பெண்ணுக்கு வசதியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்ணைக் கஷ்டப்படுத்தாமல், அவளது வயிற்றை அழுத்தாமல், தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்தாமல் ஆண் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் 6 வாரம் முதல் 12 வாரம் வரை தாம்பத்தியம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். முதல் மூன்று மாதங்களை தம்பதியர் கவனத்துடன் கடக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெண்ணுக்கு வாந்தி, மயக்கம், உடலில் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் பெண்ணுக்கு ஏற்படும் மூட் மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு அவள் அதிலிருந்து வெளியில் வர ஆண் அன்பு செய்ய வேண்டும்.

    கர்ப்ப காலத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு மூன்று மாதமும் ஒரு பிரிவாக எடுத்துக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் பெண்ணின் தாய்மை High risk pregnency, No risk pregnency என இரண்டு வகையாக இருக்க முடியும். லோ ரிஸ்க் பிரக்னன்சியாக இருந்தாலும் முதல் மூன்று மாதங்களில் உடலுறவில் ஆண் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் கரு கலைந்திட வாய்ப்புள்ளது. ஆண் மிகவும் மென்மையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    தாய்மைக் காலத்தில் பெண்ணிடத்தில் ஆண் இன்பம் தேடுவதை விட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்வதில் முழுமை காண வேண்டும்.

    இரண்டாவது மூன்று மாதங்களில் கட்டாயம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியில் ரத்த ஓட்டம் நன்றாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு கொள்ளும்போது பெண்ணால் அதிகளவு இன்பத்தை உணர முடிகிறது.

    பெண்ணின் வயிற்றை அழுத்தாமல் அவளுக்கு உடலுறவின் போது எந்தக் கஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு கொள்வதால் தாயின் மகிழ்ச்சி ஹார்மோன் அதிகமாகச் சுரந்து தாய்க்கும் சேய்க்கும் நன்மை அளிக்கும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கச் செய்து டென்ஷன் குறைக்கிறது.



    தாய்மைக்கு முன் உடலுறவு கொள்ளும் போது கருத்தரித்து விடுமோ என்ற டென்ஷன் இருக்கும். அதற்காக கருத்தடை முறைகளை உபயோகிப்பார்கள். கரு உருவானதில் இருந்து குழந்தைப் பிறப்பு வரை பெண்ணுக்கு மாதவிடாய் நாட்கள் இல்லை என்பதைப் பெண் மகிழ்ச்சியாகவே உணர்கிறாள். உடலுறவின் போது பெண்ணுறுப்பிலேயே ஆண் எந்த வித சந்தேகம், தயக்கம் இன்றி விந்தைச் செலுத்தலாம்.

    உடலுறவின் போது இருவரும் அதிகபட்ச இன்பத்தை அடையலாம். பிரசவத்துக்கு சில வாரங்கள் வரையும் கூட பாதுகாப்புடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். மூன்றாவது மூன்று மாதங்களில் பெண் வயிறு பெரிதாகியிருக்கும். உடலுறவு கொள்ளும்போது பெண்ணுக்கு சில அசௌகரியங்கள் இருக்கும். குழந்தையை சுமப்பதும் பெற்றுக் கொள்வது பெண்ணுடைய வேலை மட்டுமே என ஆண் எண்ணக் கூடாது.

    தான் தகப்பன் என்ற பொறுப்பில் இருப்பதாக ஆண் உணர வேண்டும். உணர்வு ரீதியாக அவளுக்கு எந்த நிலையிலும் நான் உறுதுணையாக இருப்பேன் என்ற நம்பிக்கையை ஆண் தன் செயலால் உண்டாக்க வேண்டும். உடலளவில் மன அழுத்தங்கள் இன்றி உடலுறவின் வழியாக மகிழ்வுறுவதால் பெண்ணின் பிரசவம் எளிதாகும்.

    தாய்மைக் காலத்தில் உறவுக்கு முன்பும் பின்பும் பிறப்புறுப்புக்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நம் செயல்களால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதிலும் கவனம் அவசியம். பிரசவத்தை நெருங்கும் போது உடலுறவு கொள்வதால் பிரச்னைகள் ஏற்படுமா என்பதை மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது அவசியம்.

    குழந்தைப் பிறப்புக்குப் பின் சில நாட்களிலேயே ஏதாவது ஒரு வகையில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆணுக்கு விருப்பம் ஏற்படும். ஆனால் பெண்ணுக்கு குழந்தைப் பிறப்பினால் ஏற்பட்ட உடல் மாற்றங்கள், சோர்வு, தூக்கமின்மை என்று பல விஷயங்களும் அவளை பலவிதமான மனக்குழப்பங்களுக்கு ஆளாக்க நேரும். சுகப்பிரசவம் என்றால் கூட பிறப்புறுப்புப் பகுதியால் சிறிதாக தையல் போட்டிருப்பார்கள்.

    அந்தக் காயம் ஆறும் வரை பெண்ணுடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள முடியாது. அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்திருந்தால் சில மாதங்கள் பெண்ணுக்கு ஓய்வு தேவைப்படும். குழந்தை பிறந்த பின் பெண்ணின் மார்பில் பால் சுரப்பு இருக்கும். அடிக்கடி குழந்தை பசிக்கு அழும் போதெல்லாம் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

    பெண் தனது மார்பகத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டியிருக்கும். குழந்தைப் பிறப்புக்கு முன்னும், பின்னும் வரை பெண்ணுக்கு பிறப்புறுப்பில் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு இதனால் அரிப்பு ஏற்படலாம். எனவே இது போன்ற பிரச்னைகள் இருப்பின் மகப்பேறு மருத்துவரிடம் தெரிவித்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தாம்பத்தியத்தால் பெண்ணுறுப்பில் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். பனிக்குட சிசுவுக்கு பாதிப்பின்றி தாய்மைக் காலத்திலும் தாம்பத்தியம் தொடரலாம். 
    ×