என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    40 முதல் 49 வயதிலிருந்து பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பெண்கள் மாதந்தோறும் சுய மார்பக பரிசோதனை செய்தல் நலம்.
    மாதவிலக்கு ஏற்பட்ட 7 முதல் பத்து நாட்களுக்குள் மார்பகத்தை பரிசோதித்து கொள்ளலாம். மார்பில் கட்டிகள், தடித்த பகுதிகள், வீக்கங்கள் இருக்கிறதா என கூர்ந்து கவனித்தல் வேண்டும். மார்பகங்களில் ஏதேனும் முடிச்சுகள் உள்ளதா என கவனித்தல் வேண்டும். இரு மார்பகங்களின் அளவு வடிவ மாற்றங்களை கவனித்தல் வேண்டும்.

    இவை அனைத்தும் பரிசோதித்த பின்னர் படுக்கையில் படுத்தபடி பரிசோதிப்பது அவசியம். ஒரு கையை தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு மறு கையை வைத்து எதிர் மார்பகத்தை ஒரு வட்ட சுழற்சிபோல் தடவி பார்க்க வேண்டும். இப்பரிசோதனையில் மார்பக காம்பு மற்றும் அக்குள் பகுதியையும் தடவி பார்த்தல் வேண்டும். மார்பக கட்டி அழுத்தமாகவும் ஓரங்கள் ஓழுங்கற்றும் வலியின்றியும் இருக்கிறதா என கவனித்தல் வேண்டும்.

    மறையாத கட்டிகளையும் மாற்றமின்றி காணப்படும் கட்டிகளையும் நன்கு தடவி பார்த்து கண்டுபிடிக்க வேண்டும். சில கட்டிகள் திடீரென தோன்றி அளவில் பெரிதாக காணப்படும். தாய் அல்லது சகோதரிகளுக்கு புற்றுநோய் இருத்தல். கர்ப்பம் தரிக்காதவர்கள். 35 வயதுக்கு மேலே முதலாவதாக கர்ப்பம் தரித்தவர்கள். சிறு வயதிலே மாதவிலக்கு நின்று போனவர்கள். மாதவிலக்கு முற்று பெற்றவர்கள். இவர்களுக்கெல்லாம் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.



    மார்பில் இயல்புக்கு மாறான குழியோ அல்லது தோல் தடித்து வட்டமாகவோ காணப்படுதல். மார்பின் தோல் ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள மிகச்சிறிய குழிகள் போன்று காணப்படுதல். வலியுடனோ அல்லது வலியில்லாமலோ அக்குகளில் காணப்படும் வீங்கிய நீணநீர் முடிச்சுகள். குணமாகாத சிவந்த தோலோ அல்லது புண்னோ தென்படுதல்.

    முலைகாம்பிலிருந்து இயல்புக்கு மாறான கசிவுகள் வெளிப்படுதல். ஆரம்ப நிலையில் வலியோ எரிச்சலோ இருக்காது. பிற்பட்ட நிலைகளில் வலி ஏற்படும். பரிசோதித்தல் மாமோகிராம் என்பது மார்பகத்தை சிறப்பு முறையில் கதிர்வீச்சு மூலம் மிகச் சிறிய கட்டிகளைக் கூட எளிதில் கண்டறிய இயலும். இப்பரிசோதனை மூலம் புற்றுநோயின் ஆரம்பகால கட்டத்திலே கண்டறிந்து குணமாக்க முடியும்.

    40 முதல் 49 வயதிலிருந்து பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பெண்கள் மாதந்தோறும் சுய மார்பக பரிசோதனை செய்தல் நலம். 3 வருடங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனையும் செய்தல் வேண்டும்.

    50 வயதுக்கு மேல் ஓராண்டுக்கு ஒரு முறை மாமோகிராம் பரிசோதனை செய்வது நலம். மாமோகிராம் பரிசோதனை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனைகளுக்கு பின்பே புற்று கட்டி என்பது உறுதிசெய்யப்படும். மார்பகத்தில் கட்டி ஏற்பட்டால் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக அவசியம்.
    பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் இவைகளை கொண்டு பெண்களின் உடல் ஆரோக்கியத்தை அறியலாம்.
    பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் எனப் பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்.

    அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுத்தும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometeriosis)

    மாதவிடாயின் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவிலும் வெளியேறினால், கருப்பையின் எண்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறுகின்றன எனக் கொள்ளலாம். இதற்கு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். மருந்துகளிலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். சரியாகாவிட்டால், திசுக்களை பயாப்ஸி செய்து நோயின் தீவிரத்தன்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

    மாதவிடாய் மாயமாகும் அமனோரியா (Amenorrhoea)

    சிலருக்குக் கர்ப்பம் தரிக்காமலேயே மாதவிடாய் நின்று போகலாம். சீரான சுழற்சியின்றிப் பின்னர் வெளியேறலாம். இதனை ‘செகண்டரி அமனோரியா’ என்கிறோம். ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு இருக்கலாம். அவர்கள் ஹார்மோன் டெஸ்ட் எடுத்துப் பிறகு சிகிச்சை பெறுவது அவசியம். சிலருக்குப் பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி பெறாமல் இருக்கும். இதை ‘பிரைமரி அமனோரியா’ என அழைப்போம். இவர்கள் தக்க வயது வந்த பின்னரும் பூப்படையாமல் இருப்பார்கள். இவர்கள் ‘இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாம்’ என்று நினைக்காமல், மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.

    பயமுறுத்தும் பிசிஓடி (PCOD – PolyCystic Ovarian Syndrome)

    சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிந்துவிடுவது, தொடர்ச்சியான மாதவிடாய் நாள்கள் இவையெல்லாம் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனையின் அறிகுறிகள். இளம் பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்கும் பெண்கள் வரை பாதிக்கக்கூடிய இப்பிரச்னைக்கு காலம் தாழ்த்தாத மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.



    வலிதரும் ஃபைப்ராய்டு (Fibroid)

    சிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். இதற்குக் கர்ப்பப்பையில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாகலாம். இதனால் மாதவிடாய் ஒழுங்கற்று 20 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இந்தக் கட்டிகள் பெரிதாகும்போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டிகளை அகற்றச் சிகிச்சை பெற வேண்டும்.

    கருக்கலைதல் (Miscarriage) கவலை

    சிலருக்குச் சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட சில நாள்களில் உதிரம் கொஞ்சம் கொஞ்சமாக வலியோடு வெளியேறும். இவ்வாறு இருந்தால் மருத்துவ ஆலோசனையின் படி ஸ்கேன் செய்து கருவானது வளர்ச்சி நிலையில் இருக்கிறதா அல்லது கலைந்துவிட்டதா என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தொடரும் கர்ப்பக்காலத்தில் ஓய்வு முதல் மருந்து வரை மருத்துவ ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கரு கலைந்திருந்தால், அதற்கான காரணம் அறிந்து, சிகிச்சையையும் எடுக்க வேண்டும்.

    துர்நாற்றமா? கவனம் தேவை!


    மாதவிடாய் ரத்தம் சிலருக்குத் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள வேண்டும். எண்டோமெட்ரியல் கேன்சர் இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். இவர்களுக்கு மாதவிடாய் முறையற்று 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை என ஏற்படும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.

    மெனோபாஸுக்குப் பின்னர், அதாவது மாதவிடாய் நின்ற பின்னரும் உதிரம் வெளியேறுவதாக உணர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (Cervical Cancer) அறிகுறியாக இருக்கலாம். அதை அசட்டை செய்யாமல் ஆரம்பத்திலேயே பரிசோதனையில் உறுதிப்படுத்திச் சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்.
    பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்களை பாதிக்கும் உடல் பிரச்சனைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. சிறுநீர் கசிவு பிரச்சனைக்கு, உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பதே, பெரும்பாலான பெண்களுக்கு தெரிவதில்லை.

    இரு காரணங்களால், பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படலாம். முதல் வகை, இருமல், தும்மல் வரும் போது, வேகமாக நடந்தால், சிரித்தால், குனியும் போது, சிறுநீர் கசிவு ஏற்படும். சிறுநீர் பையில் உள்ள தசைகளில் ஏற்படும் அழுத்தத்தினால் வரும் இந்த பிரச்சனை, ‘ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ்’ எனப்படும். இதற்கு பயந்து, நிறைய பெண்கள், நடைபயிற்சி செய்வது இல்லை; உடல் பருமன் ஆகிவிடும்.

    அதன் தொடர்ச்சியாக, பல பிரச்சனைகள் வரும். அதன்பின், டாக்டரை பார்ப்பர். காரணத்தை அலசும் போது, சிறுநீர் கசிவின் தொடர்ச்சியாகவே இவை இருக்கும். பள்ளி மற்றும் வங்கிகளில் பணிபுரியும் பெண்கள், இந்த பிரச்சனைக்கு பயந்து, வேலையை விட்டு விடுவதும் உண்டு. வெளியில் போவதற்கு பயந்து, வீட்டிலேயே முடங்கி விடுவர்; இதனால், மன அழுத்தம் ஏற்படும்.



    சிறுநீர் கசிவிற்கான இன்னொரு காரணம், பிரசவத்தின் போது, இடுப்புத் தசை வலுவிழந்து விடும். பிரசவத்திற்குப் பின், தசைகளை வலுப்படுத்துவதற்கான, ‘பெல்விக் புளோர் எக்சர்சைஸ்’ செய்யச் சொல்வோம். இந்த உடற்பயிற்சியை செய்யாவிட்டால், வயது ஆக ஆக, தசைகள் மேலும் வலுவிழக்கும். இதுதான், கசிவிற்கு மூலக் காரணம்.

    கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கசிவது தெரிந்தால், உடனே, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இடுப்புத் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் மூலம், பிரச்சனையை சரி செய்து விடலாம். பிரச்சனை பெரிதான பின், உடற்பயிற்சி மட்டும் செய்வதால், பலன் இல்லை. இடுப்புத் தசைகளுக்கு, ‘சப்போர்ட்’ செய்வதற்கு, ‘ஸ்லிங்’ வைக்க வேண்டும்.

    அறுபது சதவீத சிறுநீர் கசிவு பாதிப்பு உள்ள பெண்களில், 45 சதவீதம் பேர், சிறுநீர் பை, கூடுதலாக வேலை செய்யும், ‘ஓவர் ஆக்டிவ் பிளாடர்’ பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், இரவில் துாக்கம் கெடுவதுடன், நீர்ச்சத்தும் குறையும். 
    பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது எத்தனை நாட்கள் பெண்ணின் கருப்பைக்குள் உயிர்வாழும் என்பதை பொறுத்துதான் பெண்கள் கர்ப்பமடைவது உறுதிசெய்யப்படுகிறது.
    பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது எத்தனை நாட்கள் பெண்ணின் கருப்பைக்குள் உயிர்வாழும் என்பதை பொறுத்துதான் பெண்கள் கர்ப்பமடைவது உறுதிசெய்யப்படுகிறது. விந்தணுக்களின் ஆயுட்காலம் என்பது மிகவும் முக்கியமானது. அது எந்த இடத்தில வெளிப்படுகிறது என்பதை பொறுத்து அதன் ஆயுட்காலம் மாறுபடும்.

    உதாரணத்திற்கு ஆண்கள் சுயஇன்பம் காணும்போது வெளிப்படும் உயிரணுக்கள் வெளியேறிய உடனே இறந்து விடும். உயிரணுக்கள் பெண்களின் உடலுக்குள் சென்றாலும் கூட அவற்றின் ஆயுட்காலம் என்பது நிர்ணயிக்க இயலாத ஒன்று. இந்த பதிவில் உயிரணுக்களை பெண்கள் உடலில் எவ்வளவு காலம் உயிரோடு இருக்கும் என்பதை பார்க்கலாம்.

    ஒரு பெண் கர்ப்பமடைய ஒரே ஒரு உயிரணு போதும். கோடிக்கணக்கான உயிரணுக்கள் வெளியே வரும்போது அதில் எத்தனை உயிரணுக்கள் பெண்களின் கருமுட்டையை சென்று அடைகிறதோ அதனை பொறுத்தே கர்ப்பமும், குழந்தைகளின் எண்ணிக்கையும் இருக்கும். ஒவ்வொரு முறையும் உயிரணுக்கள் வெளியேறும்போது அதில் கிட்டத்தட்ட 100 மில்லியன் உயிரணுக்கள் வெளியேறுகிறது. இந்த கோடிக்கணக்கான உயிரணுக்களில் இருந்து ஆரோக்கியமான ஒன்றோ அல்லது இரண்டு உயிரணுக்கள் தான் பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக பாலோப்பியன் குழாயை கடந்து பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருவாக உருவாகிறது.

    புகைப்பழக்கத்தை தவிர்த்தல் மற்றும் போதைப்பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது உங்களுடைய உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்க கூடும். மேலும் அளவாக மது அருந்துவது, சத்தான உணவுகளை சாப்பிட்டு எடையை சீராக பராமரிப்பது, இறுக்கமான உடைகளை அணியாமல் இருப்பது போன்றவை உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்கும்.



    உயிரணுக்கள் பெண்ணுறுப்புக்குள் சென்ற பிறகு 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வாய் உயிருடன் இருக்கும். பல அணுக்கள் ஆரம்ப நிலையிலேயே இறந்துவிடும். மீதமுள்ள உயிரணுக்களில் ஒன்றே கர்ப்பம் உண்டாக்கும் ஆற்றல் உடையதாக உள்ளது.

    இது கருப்பைக்குள் போதுமான அளவு வெப்பமும், திரவமும் உள்ளபோது நடக்க கூடியது. சொல்லப்போனால் கர்ப்பப்பை திரவம் கருமுட்டை உற்பத்தியாவதற்கான அறிகுறியாகும். இதுபோன்ற சூழ்நிலையில் உயிரணுக்கள் 5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்.

    வெளிப்புறம் என்று வரும்போது உயிரணுக்களின் ஆயுட்காலம் என்பது மிகவும் குறைவுதான். மனித உடலில் உள்ள வெப்பநிலை இல்லாத இடங்களில் உயிரணுக்களால் நீண்ட நேரம் உயிருடன் இருக்க இயலாது. அவை வெளியே வந்தவுடனேயே இறந்துவிடும். இல்லையெனில் சூழ்நிலை மற்றும் இடத்தை பொறுத்து சில நிமிடங்கள் உயிருடன் இருக்கும்.

    பெண்களின் உடலில் உயிரணுக்களின் ஆயுளை அதிகரிப்பது என்பது இயலாது என்று. அதற்கு பதிலாக ஆண்கள் தங்கள் உயிரணுக்களின் ஆரோக்கியத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்க முயலலாம். ஆரோக்கியமான உயிரணுவிற்கு ஆயுள் அதிகம். உயிரணுவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க பின்வருவனற்றை முயற்சி செய்து பார்க்கவும்.

    இயற்கை மூலிகையான அஸ்வகந்தா உயிரணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடியது. ஆய்வுகளின் படி இது உயிரணுக்களின் உற்பத்தியையும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதை தொடர்ந்து உபயோகித்து வரும்போது உயிரணுவின் உற்பத்தி மட்டுமின்றி அவற்றின் தரமும் உயர்வதை காண்பீர்கள்.

    லேப்டாப்பை உங்கள் மடியில் வைத்து உபயோகிப்பதை தவிருங்கள். அதிலும் வைபை இயக்கத்தில் உள்ள லேப்டாப் உங்கள் மடியில் இருக்கும்போது அதிக ரேடியோ அலைகளால் உங்கள் உயிரணுக்கள் வெகுவாக பாதிக்கப்படும். அதேபோல உங்கள் செல்போனையும் பேண்ட் பக்கத்திற்குள் வைப்பதை தவிருங்கள்.

    உயிரணுக்களை பொறுத்த வரையில் சூடான நீரை காட்டிலும், குளிர்ந்த நீர் குளியல் அதிக நன்மையை வழங்கக்கூடியது. குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களுக்கு நல்ல மனநிலையை வழங்குவது மட்டுமின்றி உங்களுடைய உயிரணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.

    பிரசவ நேரத்தில் சிலருக்கு ‘பொய் வலி’ வந்து கண்ணாமூச்சி காட்டும். ‘பிரசவ வலிக்கும், பொய் வலிக்குமான வித்தியாசத்தைச் சில குறிப்புகளால் அறியலாம்’
    கர்ப்பிணிகள் பிரசவத் தேதி நெருங்க நெருங்க, பரவசம், பயம் இரண்டும் கலந்ததோர் உணர்வில் இருப்பார்கள். வலி வந்ததும், அந்தப் பெருநிகழ்வைச் சந்திக்கப்போகும் திடத்துடன் அவர்கள் அதற்குத் தயாராவார்கள். ஆனால், சிலருக்கு ‘பொய் வலி’ வந்து கண்ணாமூச்சி காட்டும். ‘பிரசவ வலிக்கும், பொய் வலிக்குமான வித்தியாசத்தைச் சில குறிப்புகளால் அறியலாம்’. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    நிஜ வலி: முதுகுப்புறத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றின் முன்பக்கம்வரை வந்து அடிவயிற்றில் இறங்கி வலிக்க ஆரம்பிக்கும்.

    பொய் வலி: வயிற்றின் முன்பக்கம் மட்டுமே வலி வரும்.

    வலி நேர இடைவேளை!

    நிஜ வலி: குறிப்பிட்ட நேர இடைவேளையில் வலிக்க ஆரம்பிக்கும். உதாரணமாக, ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வலிக்க ஆரம்பிக்கும். பின்னர் அந்த நேர இடைவேளை குறைந்து, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை வலிக்க ஆரம்பிக்கும். தொடர்ந்து, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, பிறகு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை என நேர இடைவேளை சுருங்கும். இப்படிச் சுருங்கச் சுருங்க, வலியின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கும். இப்படியாக நேரம் குறைந்தும், வலியின் அளவு அதிகரித்துக்கொண்டும் வந்து, 10, 5 நிமிடங்களுக்கு ஒருமுறை வருகிற வலிகள், தாங்கமுடியாத அளவுக்கு இருக்கும்.

    பொய் வலி: பொய் வலி சீரான இடைவேளையின்றி, தன் போக்குக்கு வந்துபோகும்.

    டிஸ்சார்ஜ்!

    நிஜ வலி: பெண்ணுறுப்பில் சளிபோன்ற திரவம் கசியும். இதனுடன் இரண்டு, மூன்று ரத்தத்துளிகளும் வெளியேறும்.

    பொய் வலி: டிஸ்சார்ஜ் எதுவும் இருக்காது.



    வயிற்றின் அசைவு!


    நிஜ வலி: வயிற்றின் மேல் கைவைத்துப் பார்த்தால், கருப்பை இறுக்கமாகி இறுக்கமாகித் தளர்வதை உணரமுடியும். இந்த இயக்கமும்கூட சீரான நேர இடைவேளையில் நடைபெறும். எழுந்து நடந்து பார்த்தாலும் வலியில் மாற்றமில்லாமல் இருக்கும்.

    பொய் வலி: பொய் வலியில் கருப்பையின் இயக்கம் இருக்காது என்பதால், வயிற்றில் கைவைத்துப் பார்த்தால் எந்த அசைவும் இருக்காது. வலி வரும் சமயம் எழுந்து நடந்துபார்த்தால் வலி மறைந்துவிடும். ஒருவேளை உண்மையான பிரசவ வலி ஏற்பட்டிருந்தால், அதை எதிர்கொள்ளத் தயாராகச் செய்ய வேண்டியவை இவை…

    * காற்றை மூக்கு வழியாக முடிந்தளவு உள்ளிழுத்து, பிறகு வாயைக் குவித்து வாய்வழியாக வெளியேற்றவும். இது பிரசவ வலியின் வேதனையில் இருந்து கவனத்தைத் திசைத்திருப்பும்.

    * நடக்கலாம் அல்லது பிடித்தப் படத்தைப் பார்க்கலாம். இவையும் வலியின் வேதனையிலிருந்து மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும்.

    * மிதமான வெந்நீரில் குளித்தால் வலிக்கு இதமாக இருக்கும்.

    * வலி ஆரம்பித்ததும், அடுத்த வலி வரும் இடைவேளைக்குள் ஓய்வெடுக்கலாம், குட்டித் தூக்கம் போட்டுக்கொள்ளலாம். எதிர்கொள்ளவிருக்கிற பெரிய வலியைச் சமாளிக்க இந்த ஓய்வு உடலுக்குத் தேவை.

    * 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வலி வருகிறபோது தாமதிக்காமல் பாதுகாப்பான பயணத்தில் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.’’

    உண்மையான பிரசவ வலி வரும்போது, வயிறு கல் போல இறுக்கமாகும். அந்த வலி வராத நேரத்தில், வயிறு கல் போல இல்லாமல் நார்மலாக இருக்கும். ஆனால், பொய் பிரசவ வலி வரும்போது, இறுக்கமாகிற வயிறானது, அரைமணி நேரமோ அல்லது அதற்கும் அதிகமான நேரமோ அப்படியே இருந்தால், கருப்பையின் உள்ளே குழந்தையுடன் இணைந்திருக்கிற நஞ்சுக்கொடி பிரிந்துவிட்டது என்று அர்த்தம். இந்தச் சமயத்தில் கருப்பைக்குள்ளேயே ரத்தப் போக்கு ஏற்பட ஆரம்பித்திருக்கும். அது வெளியில் தெரியாது. குழந்தையின் அசைவுகளும் தெரியாது. இந்தச் சமயத்தில் உடனடியாக மருத்துவமனைக்குக் கிளம்பி விடுங்கள். இல்லையென்றால், வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட வாய்ப்பிருக்கிறது, கவனம்.

    சில பெண்களுக்கு 7 அல்லது 8-ம் மாதங்களிலேயே நிஜப் பிரசவ வலி வந்து விடும். இந்த வலியை, ‘இன்னும்தான் நாளிருக்கே’ என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள். அலட்சியப்படுத்தினால், வயிறு இறங்கி, பனிக்குடம் உடைவது, குழந்தைக்கு மூச்சுத்திணறுவது எனப் பிரச்சனையில் கொண்டுபோய் விட்டுவிடும்.
    நவீன காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. வயதுதான் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம்.
    இப்போது குழந்தையின்மைப் பிரச்சனை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதற்கான மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனாலும், குழந்தையின்மை சிகிச்சை குறித்து பல தயக்கங்களும் சந்தேகங்களும் ஏற்படுகின்றன.

    நவீன காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. வயதுதான் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம். நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் வேண்டும் என்றெல்லாம் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். திருமணம் ஆனதும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால், குழந்தை பிறந்தால் யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற குழப்பம். பொருளாதாரரீதியாகத் தயாராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதமாகிவிடுகிறது.

    கருமுட்டை முதிர்ச்சியடைந்து சூலகத்திலிருந்து வெளியேறாதது, நீர்க்கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரீஸ்), நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்), கர்ப்பப்பையின் சதையில் உருவாகும் கட்டிகள் போன்றவை பெண்கள் கர்ப்பம் தரிக்காததற்கு முக்கியக் காரணங்கள். நார்த்திசுக் கட்டிகள் 20, 30 சதவிகிதம் பேருக்கு காணப்படும். சிறிய அளவிலான கட்டிகளை அகற்ற வேண்டியதில்லை. கர்ப்பப்பையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு பெரிய அளவிலான கட்டிகள் இருந்து, கர்ப்பப்பை பெரிதாக இருந்தால், அவை கர்ப்பத்தை பாதிக்கும். அவற்றை அகற்ற வேண்டும். இந்தப் பிரச்னை பரம்பரையாக வரக்கூடும். அம்மாவுக்கு நார்திசுக்கட்டிகள் இருந்திருந்தால், மகளுக்கும் வரக்கூடும். கர்ப்பப்பையை அடைத்துக் கொண்டிருக்கும் கட்டிகளை நீக்கினால்தான் குழந்தை தங்கும்.

    மற்றொரு பொதுவான பிரச்னை ‘ஓவரியன் சிஸ்ட்’ எனப்படும் சாக்லேட் கட்டிகள். மாதவிடாய் சுழற்சியின்போது வெளியேறும் ரத்தத்தின் சில துளிகள் கர்ப்பப்பையின் முன்னாலும் பின்னாலும் தேங்கிவிடும். அந்த ரத்தம் உறைந்து, பழுப்பு நிறத்தில் பார்ப்பதற்கு சாக்லேட் நிறத்தில் இருக்கும். அதனால்தான் `சாக்லேட் கட்டி’ என்கிறோம். சிலருக்கு இந்தக் கட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பெரிதாக ஆகிவிடும்.



    பக்கத்திலிருக்கும் பகுதிகளுடன் ஒட்டிக்கொள்வதால், கருக்குழாய் தடைப்படும். இந்தக் கட்டிகளால் சிலருக்கு தாம்பத்யமே வலி நிறைந்ததாக மாறிவிடும். கருக்குழாய் அடைப்பு, கர்ப்பப்பைக்குள் சிறிய சதை வளர்தல், கருக்குழாய் சூலகம், அதிலுள்ள சிறிய ரத்தக்குழாய்கள் என ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டிருத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் சிகிச்சையளிக்கலாம்.

    ஆண்களைப் பொறுத்தவரை குடிப்பழக்கம், தொடர்ச்சியாக மருந்து உட்கொள்ளுதல், சிறிய வயதில் அம்மைக்கட்டு வந்தவர்கள், ஹெர்னியா அறுவை சிகிச்சை, விரைப் பகுதியில் ஏதேனும் அறுவை சிகிச்சை,  பந்து போன்ற பொருள்களால் ஏற்படும் காயங்கள், விந்தணுக்கள் வெளியேறும் பாதைகளில் அடைப்பு போன்ற காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படலாம். அதிக நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், அதிக நேரம் தோல் இருக்கையில் உட்கார்ந்திருப்பவர்கள், சுரங்கங்கள், உலைகள், கொதிகலன்களில் பணியாற்றுபவர்கள், தொடர்ந்து அடுப்பருகில் நின்று சமைப்பவர்களுக்கு விந்தணுக்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.

    இவை தவிர ஆண், பெண் இருவருக்குமே பொதுவானவை ஹார்மோன் பிரச்சனைகள். தைராய்டு குறைபாடு, மூளையிலிருந்து சுரக்கும் `புரோலாக்டின்’ என்ற ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தடைப்படும். இந்த ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருந்தால், சிலருக்கு மார்பில் நீர் கசியும். புரோலாக்டின் சுரப்பு அதிகரித்தால், மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும். அதன் காரணமாக கருமுட்டை முதிர்ச்சியடைந்து வெளியே வருவது கடினமாகிவிடும். ஆண்களுக்கும் தைராய்டு குறைபாடு, விந்தணுக்கள் உற்பத்திக்குக் காரணமான ஹார்மோன் சுரப்பில் குறைபாடு இருக்கலாம். பொதுவாக ஹார்மோன் குறைபாடுகளை எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.

    சுயஇன்பத்துக்கும் குழந்தையின்மைக்கும் தொடர்பில்லை. மாதவிடாய் சுழற்சி போன்று விந்தணுக்கள் உருவாவதும் சுழற்சிதான். விந்தணுக்கள் சிறிய அளவில் உருவாகி முதிர்ச்சியடைய மூன்று மாதங்கள் ஆகும். அப்படி முதியர்ச்சியடையும்போது பழைய விந்தணுக்கள் வெளியேறி, புதியவை உற்பத்தியாகிக்கொண்டே இருக்க வேண்டும்.

    தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மகிழ்ச்சியான காலக்கட்டம். எனவே கர்ப்ப காலத்தில் பெண் எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி பல்வேறு மருத்துவ தகவல்கள் கூறுகின்றன.
    தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மகிழ்ச்சியான காலக்கட்டம். எனவே கர்ப்ப காலத்தில் பெண் எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி பல்வேறு மருத்துவ தகவல்கள் கூறுகின்றன. அவற்றில் ஒன்று இது...

    வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நலன், தாயின் மகிழ்ச்சியோடு நேரடித் தொடர்பில் உள்ளது. அதனால் தாய் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தால், கருவில் இருக்கும் குழந்தையும் வளத்தோடு இருக்கும். மன அழுத்தம் குழந்தைக்கு நல்லதல்ல. தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும். அதனால் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மன அழுத்தம் தரும் வி‌ஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

    மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து சத்துள்ள உணவுகளையும் தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

    கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.

    தண்ணீரும் முக்கியமானது. அதனை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்து நீர்ச்சத்தோடு இருக்க வேண்டியதும் அவசியம். கர்ப்ப காலத்தில் பல மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் தாமாகவே எந்த மருந்தையும் வாங்கி சாப்பிடக்கூடாது. எப்போதும் மருந்தை உட்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

    நடைபோன்ற எளிதான உடற்பயிற்சி, குழந்தைக்கு நன்மை தரும். ஆனால் உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
    பெண்களை அதிகம் தாக்கும் பிசிஓடி என்றால் என்ன… அதன் அறிகுறிகள், அது ஏற்படுத்தும் பாதிப்புகள், பரிசோதனைகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் அறிந்து கொள்ளலாம்.
    `பிசிஓடி’ எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிற `பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’தான் இன்று பெரும்பான்மை பெண்களின் பிரச்சனையாக இருக்கிறது. முறை தவறிய மாதவிலக்கு, முகமெல்லாம் ரோம வளர்ச்சி, பயமுறுத்தும் பருமன், குழந்தையின்மை… இப்படிப் பல பிரச்சனைகளின் பின்னணியிலும் `பிசிஓடி’யைக் காரணம் காட்டுகிறார்கள் மருத்துவர்கள். பிசிஓடி என்றால் என்ன… அதன் அறிகுறிகள், அது ஏற்படுத்தும் பாதிப்புகள், பரிசோதனைகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் அறிந்து கொள்ளலாம்.

    இது ஒருவகையான ஹார்மோன் தொந்தரவு. பிறவிக்குறைபாடாகப் பெண்களைப் பாதிக்கிற பிரச்சனை. 14 வயது முதல் 40 வயது வரை எப்போது வேண்டுமானாலும் இதற்கான அறிகுறிகள் தோன்றலாம். சினைப்பைகளின் செயல் திறனில் பிரச்சனை ஏற்படுவதைத்தான் `பாசிஸ்டிக் ஓவரிஸ்’ என்கிறோம். அதாவது சினைப்பைகளை இயங்கச்செய்கிற ஹார்மோன்கள் சரியாக வேலை செய்யாததுதான் காரணம்.

    சினைப்பையில் குட்டிக்குட்டி கொப்புளங்கள் போன்று இருக்கும். இந்தக் கொப்புளங்களைக்கண்டு பயப்படத் தேவையில்லை. ஆனால், இவர்களுக்கு ஹார்மோன் கோளாறுகள் இருக்கும் என்பதால், அதில் கவனம் அவசியம். பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஆகிய பெண் ஹார்மோன்களும் டெஸ்டோஸ்டீரான் என்கிற ஆண் ஹார்மோனும் இருக்கும். இவற்றின் சமநிலையில் பிரச்சனை வருவதைத் தான் `ஹார்மோனல் இம்பேலன்ஸ்’ என்கிறோம். சிலருக்கு ஆண் ஹார்மோன் அதிகமிருக்கும். அதற்கேற்ற அறிகுறிகளை உணர்வார்கள்.

    அறிகுறிகள்

    *  முறையற்ற மாதவிலக்கு சுழற்சி (40, 50 நாள்களுக்கொரு முறை வரும் அல்லது மாத்திரைகள் எடுத்துக்கொண்டால்தான் மாதவிலக்கு வரும்).
    *  அதிகளவில் பருக்கள் வரும்.
    *  முடி உதிரும்.
    *  எடை அதிகரிக்கும்.

    எப்படி உறுதிபடுத்துவது?



    *  குழந்தை பிறக்கும்போதே இந்தப் பிரச்சனை இருந்தாலும், அவர்கள் பூப்பெய்தும் வயதில்கூட இதை உறுதிபடுத்த முடியாது. சாதாரணப் பெண்களுக்கே அந்தப் பருவத்தில் மாதவிடாய் முறைதவறி வரும். 20 வயதுக்கு மேலும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் முறையின்றித் தொடர்ந்தால் பிசிஓடி இருக்கிறதா எனப் பார்க்கலாம்.

    *  முறையற்ற மாதவிடாய், குழந்தையின்மைப் பிரச்சனை, அதிகரித்துக்கொண்டே போகும் எடை என குறிப்பிட்ட பிரச்சனைகளுடன் வருபவர்களுக்கு பிசிஓடி இருக்கிறதா எனப் பரிசோதிக்க வேண்டும். எந்த வயதில் பூப்பெய்தினார்கள், எத்தனை நாள்களுக்கொரு முறை மாதவிடாய் வருகிறது என்கிற தகவல்களைக் கேட்டறிய வேண்டும்.

    *  கழுத்துக்குப் பின்பகுதியிலும் முழங்கைகளிலும் கருமை இருக்கிறதா எனப் பார்ப்போம். Acanthosis nigricans  எனப்படுகிற அது ஹார்மோன் தொந்தரவின் அறிகுறி.

    *  அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தால் சினைப்பைகளில் கொப்புளங்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஹார்மோன்களின் அளவுகளை அறியும் ரத்தப் பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படும். இது மாதவிலக்கான இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் செய்யப்படும்.

    * அல்ட்ரா சவுண்டில் பிசிஓடி இருப்பது, உடல்ரீதியான அறிகுறிகள் இருப்பது, ரத்தப் பரிசோதனையில் அசாதாரணம் என இந்த மூன்றில் இரண்டு இருந்தால் அதை `பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்’ என்கிறோம்.

    தீர்வுகள்?

    முறையற்ற மாதவிலக்கு, பருக்கள், குழந்தையின்மை என எந்தப் பிரச்சனைக்காக சிகிச்சைக்கு வந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது தீர்வு. எடை அதிகரிக்க, அதிகரிக்க, ஹார்மோன் தொந்தரவுகள் தீவிரமாகும். அதனால் சினைப்பைகளின் செயல்திறன் பாதிக்கப்படும். பிசிஓடி உள்ளவர்களுக்கு மிக எளிதில் எடை அதிகரிக்கும். எனவே, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வீட்டுவேலைகளைச் செய்வது, சாக்லேட், இனிப்பு போன்ற அதிக கலோரி உணவுகளைத் தவிர்ப்பது எனத் தீவிர முயற்சிகளில் இறங்க வேண்டும்.

    பிசிஓடி இருந்தால் கர்ப்பம் தரிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். குழந்தையின்மைக்கான பிரத்யேக சிகிச்சையிலும் எடைக் குறைப்புதான் பிரதானமாக இருக்கும். பிறகு கருமுட்டை உருவாக மாத்திரைகள் தரப்படும். அவை உதவாதபட்சத்தில் ஊசிகள் போடவேண்டியிருக்கும். அதிலும் முட்டை வளர்ச்சி இல்லாவிட்டால் லேப்ராஸ்கோப்பி செய்ய வேண்டும். கடைசித் தீர்வாக ஐவிஎஃப் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். மற்றபடி பிசிஓடி பிரச்சனையும் சர்க்கரை நோய் மாதிரிதான் இதுவும். முற்றிலும் குணப்படுத்த முடியாது. கட்டுப்பாட்டில் மட்டுமே வைக்க முடியும்.

    மெனோபாஸை நெருங்கும்போது பிசிஓடி பிரச்சனையின் அறிகுறிகள் குறையத் தொடங்கும். மெனோபாஸை நெருங்கும்போது சிலருக்கு அதீத ரத்தப்போக்கு இருக்கும். அவர்களுக்கு டி அண்டு சி செய்து புற்றுநோய் அபாயம் ஏதுமிருக்கிறதா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    டைப் 2 டயாபடிஸ், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவற்றுக்கும் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

    சரியான எடையைப் பராமரிக்க வேண்டும். பிசிஓடி இருக்கும் சிலர் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மூலம் எடையைக் குறைத்து விடுவதால் கர்ப்பம் தரித்துவிடுவார்கள். அதே நபர் மீண்டும் எடை அதிகரித்தால் மறுபடி மாதவிலக்கு சுழற்சி முறைதவறிப் போகும்.
    மார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால், தெரிந்து கொள்ள செய்யப்படுவது, ‘டயாக்னாஸ்டிக் மேமோகிராம்!’. இந்த பரிசோதனை எந்த வயதில் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    உடலுக்கு எக்ஸ் - ரே போன்று, மார்பக பரிசோதனை செய்ய பயன்படும் பிரத்யேக கருவி, ‘மேமோகிராம்!’ மார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால், தெரிந்து கொள்ள செய்யப்படுவது, ‘டயாக்னாஸ்டிக் மேமோகிராம்!’ ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகத்தில், டாக்டரிடம் வருபவர்களுக்கு, செய்யப்படுவது, ‘ஸ்கிரீனிங் மேமோகிராம்!’

    எந்தப் பிரச்சனையும் இல்லாத போது, 35 வயதிற்கு முன், ‘மேமோகிராம்’ பரிசோதனையை செய்யக் கூடாது. காரணம், இந்தப் பரிசோதனையில், கதிர்வீச்சை உடலினுள் செலுத்தியே பரிசோதிக்கிறோம்; கதிர் வீச்சால் பாதிப்புகள் ஏற்படலாம்.

    நாற்பது வயதிற்கு மேல், மரபியல் ரீதியில், அதிக, ‘ரிஸ்க்’ உள்ள பெண்கள், ஆண்டிற்கு ஒருமுறை எக்ஸ் - ரே செய்து கொள்ளலாம்; மற்றவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யலாம்.

    இந்தப் பரிசோதனையை, நன்கு தேர்ச்சி பெற்ற, பெண் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமே செய்ய முடியும்.

    பயிற்சி பெற்றவர்கள் உள்ள மையத்தில், இதை செய்து கொள்ளும் போது தான், பிரச்னை உள்ளதா, இல்லையா என்பதை சரியாக சொல்ல முடியும்.
    அப்படி இல்லாத பட்சத்தில், இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருக்கிறது என்றும் தவறாக சொல்லி விடும் அபாயம் உள்ளது.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
    20% பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நீர்க்கட்டிகள் தானாக மறைவதில்லை. இவற்றைப் போக்க அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது., அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகளாக இவை மாறுகிறது. அல்லது உடல் நலத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. சில நேரங்களில் இந்த நீர்க்கட்டிகள், கருப்பை பைப்ராய்டு, அல்லது மாதவிடாய்க்கு முந்தைய பாதிப்பு(வயிறு மந்தம் மற்றும் இடுப்பு வலி) ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு பாதிப்பைத் தருகிறது.

    “மாதவிடாய் வருவதும் போவதும் இயல்பு என்பது போல் இந்த கட்டியும் அதனால் உண்டாகும் வலியும் மறைய வேண்டும் இல்லையா?. ஒருவேளை இந்த வலி மறையாமல் இருந்தால் குறைந்த பட்சம் அல்ட்ரா சவுண்ட் செய்து பார்ப்பது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    * இடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது கருப்பை நீர்க்கட்டி இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும். இந்த பகுதியில் அல்லது வேறு இடத்தில் திடீரென்று பாரமாக இருப்பது போல் நீங்கள் உணரலாம். உடற்பயிற்சியின் போது அல்லது பாலியல் தொடர்பின் போது இந்த கனத்தை உங்களால் உணர முடியும்.

    கனமாக இருக்கும் அந்த பகுதியில் ஒருவித வலி தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். மாதவிடாய் முடிந்த பின்னும் அந்த வலி நீடித்து இருக்கும். இந்த வலி மிகவும் அதிகமாகும்போது நீங்கள் கருப்பை முறுக்கத்தால் பாதிக்கப்படுவீர்கள். இந்த கட்டி வளர்ச்சியுற்று பெரிதாகும் போது தானாக முறுக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் வலி இன்னும் தீவிரமடைகிறது. இந்த நிலை ஏற்படும்போது அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்வது மிகவும் நல்லது.



    * வயிறு வீக்கமடைவது என்பது ஒரு தெளிவற்ற அறிகுறி. அதன் அளவைச் சார்ந்து கருப்பை நீர்க்கட்டியுடன் இதனை தொடர்பு படுத்தலாம். பெரும்பாலான பெண்கள் 10செமீ க்கு குறைவான அளவு நீர்க்கட்டிகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் சில கட்டிகள் ஒரு தர்பூசணி அளவிற்கு பெரிதாக வளரும் தன்மை கொண்டவை. பல பெண்கள் இதனை எடை அதிகரிப்பு என்று கூறுவார்கள். ஆனால் அடிவயிற்று வலி மற்றும் வீக்கம் என்பது வயிறில் வேறு ஏதோ ஒன்று உருவாவதன் காரணமாக இருக்கலாம். வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கை மணி அடிப்பது போன்றதாகும்.

    * கருப்பை பைப்ராய்டு கட்டியைப் போல் கருப்பை நீர்க்கட்டியும் வயிறு கனமான உணர்வைத் தரும். “ஒரு நீர்க்கட்டி வயிற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து ஒரு அழுத்தத்தை தரும் உணர்வாகும்”. இது மலச்சிக்கல் போன்ற உணர்வைத் தரும். இரண்டு கருப்பையிலும் கட்டிகள் உள்ளவரை, இடுப்பின் ஒரு பக்கம் மட்டுமே இத்தகைய உணர்வு தோன்றும். சிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

    * தொற்று (ஆனால் சிறுநீர் வெளியேறாது). கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை வெளிப்படுத்தும் மற்றொரு அறிகுறி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவது. உங்கள் சிறுநீர்ப்பையை ஒட்டி கட்டி தோன்றியிருந்தால், உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். சில பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். நீர்க்கட்டி சிறுநீர் பாதையை தடுப்பதால் இந்த பாதிப்பு உண்டாகும். சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் தோன்றும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

    * கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம். ஆகவே உடனடியாக பெண் மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்சனைக்கு தீர்வு பெறலாம்.

    * உங்கள் இடுப்பு பகுதியில் அதிக இடமில்லாத காரணத்தால், கட்டி வளர்ந்து பெரிதாகும்போது, இடுப்பில் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து முதுகு அல்லது கால் வலி உண்டாகலாம். அதாவது, இந்த கட்டிகள், இடுப்பின் பின்புறம் ஓடும் நரம்பை சுருக்கி விடுவதாக அவர் கூறுகிறார். உங்கள் இடுப்பு வலிக்கான காரணத்தை மருத்துவரால் அறிய முடியாவிட்டால், அது நீர்கட்டியின் ஆதாரமாக இருப்பதற்கான வாய்ப்புகளாக இருக்கலாம்.
    மற்ற நாள்களை விடவும் மாதவிலக்கு நாள்களில் அதிகபட்ச சுத்தம் அவசியம். மாதவிலக்கு நாள்களில் ஒவ்வொரு பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகளை அறிந்து கொள்ளலாம்..
    மற்ற நாள்களை விடவும் மாதவிலக்கு நாள்களில் அதிகபட்ச சுத்தம் அவசியம். மாதவிலக்கின்போது குளிக்கக் கூடாது என்றொரு நம்பிக்கை அந்த நாள்களில் இருந்தது. அப்போது குளங்களில் குளிப்பார்கள் என்பதால் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம். மாதவிலக்கின்போது இருவேளை குளிப்பது உடலைச் சுத்தமாக்குவதுடன், ரிலாக்ஸும் செய்யும்; வலிகளையும் குறைக்கும்.

    சுகாதாரமான நாப்கின்கள் உபயோகிப்பது, சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, மன அழுத்தமின்றி இருப்பது போன்றவையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தினமும் இருவேளை குளிப்பது, ரத்தப் போக்கு இருக்கிறதோ, இல்லையோ குறிப்பிட்ட இடைவெளிகளில் நாப்கின்களை மாற்றுவது, சிறுநீர், மலம் கழிக்கும் ஒவ்வொரு முறையும் அந்தரங்க உறுப்புகளை (சோப் உபயோகிக்காமல்) சுத்தமான தண்ணீர்கொண்டு கழுவுவது, தொடைப் பகுதியையும் அந்தரங்க உறுப்பையும் ஈரமின்றி வைத்துக்கொள்வது… இவை அனைத்தும் மாதவிலக்கு நாள்களில் ஒவ்வொரு பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள்.

    பிறப்புறுப்புக்குத் தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் தன்மை இயல்பிலேயே உண்டு என்பதால், அதற்கெனப் பிரத்யேக சோப் அல்லது திரவம் உபயோகிக்கத் தேவையில்லை. உபயோகித்ததும் தூக்கியெறியக்கூடிய சானிட்டரி நாப்கின்கள், துவைத்து மீண்டும் உபயோகிக்கும் காட்டன் பேடுகள், டாம்பூன்கள், மென்ஸ்ட்ருவல் கப் என எதை வேண்டுமானாலும் அவரவர் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம். எதை உபயோகிப்பதானாலும், அதிகபட்ச சுகாதாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். குறிப்பாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய காட்டன் பேடுகள், கப் போன்றவற்றை முறையாகச் சுத்தப்படுத்தியே உபயோகிக்க வேண்டும்.

    ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கொரு முறையும் நாப்கினை மாற்ற வேண்டும். மீண்டும் உபயோகிக்கும் காட்டன் பேடுகளை லேசான உப்பு கலந்த குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். வெந்நீரில் ஊறவைத்தால் ரத்தக் கறைகள் அப்படியே நாப்கினில் படிந்து நிரந்தரமாகிவிடும். ஊறியதும் நன்கு அலசி வெயிலில் உலர்த்தியே பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளியானது இயற்கையான கிருமிநாசினியாகச் செயல்பட்டு, பாக்டீரியாவையும் துர்நாற்றத்தையும் நீக்கிவிடும்.



    டாம்பூன்களை ஆறு மணி நேரத்துக்கு மேல் அந்தரங்க உறுப்பினுள் வைத்திருக்கக் கூடாது. நீண்ட நேரம் உபயோகிப்பதன் விளைவாக `டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்’ என்கிற அரிய வகை பிரச்சனை ஏற்படலாம். இது ஒருவகையான பாக்டீரியா தொற்று. காய்ச்சல், சரும அலர்ஜி, குறை ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது.

    மாதவிலக்கின் பயன்படுத்தும் நாப்கின்கள், டாம்பூன்களை உபயோகிப்பதில் இருக்க வேண்டிய அதிகபட்ச கவனமானது அவற்றை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எந்த இடத்திலும் அவற்றை டாய்லெட்டினுள் போட்டு ஃப்ளஷ் செய்யக் கூடாது. உபயோகித்ததும் அவற்றை வேஸ்ட் பேப்பரில் சுற்றிக் குப்பைத் தொட்டியில் போடவும். அந்தக் குப்பைத் தொட்டியை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். நீண்ட நேரம் குப்பைத் தொட்டியில் கிடக்கும் உபயோகித்த நாப்கின்கள் கிருமித் தொற்றை ஏற்படுத்தும். அது வேறுவிதமான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். ஈக்களும் கொசுக்களும் அவற்றை மொய்த்தால் தேவையற்ற நோய்கள் பரவும்.

    நாப்கின் உபயோகிப்பதால் சிலருக்கு அலர்ஜி வரலாம். கடுமையான அரிப்பு, அதன் காரணமாகச் சருமம் சிவந்து புண்ணாவது போன்றவை ஏற்படலாம். அலர்ஜிக்கான காரணத்தைச் சரும மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சையின் மூலம் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.
    முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.
    பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு விஷயம் அழகு. அதிலும் முக அழகுக்கு ரொம்ப அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.முக அழகை பாதிக்கும் சில வியாதிகள் பற்றி பார்க்கலாம்.

    Bells Palsy or Facial palsy

    நம் மூளையில் இருந்து முகத்திற்கு செல்லும்12 நரம்புகளில் முகத்தசைகளுக்குச் செல்லும் 7வது நரம்பு பாதிக்கும்போது இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை ஏற்பட்டவர்களுக்கு எந்தப் பக்கத்து நரம்பு பாதிக்கப்படுகிறதோ அந்தப் பக்க தசைகள் செயல்படாது. இதனால் ஒரு பக்கம் கண் திறந்தே இருக்கும். சிரிக்கும் போது வாய் ஒரு பக்கம் கோணலாக போகும். காரணம் சிரிப்பின்போது வாய்க்கு இரண்டு பக்கமும் உள்ள தசைகளும் விரிய வேண்டும். ஆனால் ஒரு பக்கம் உள்ள நரம்பு பாதிக்கப்படும் போது அந்த பக்கம் உள்ள முகத்தசைகள் செயல்படாது.

    இதனால் சிரிக்கும்போது ஒரு பக்கம் மட்டும் முகத்தசைகள் விரிவடையும் இன்னொரு பக்கம் அப்படியே இருக்கும். அதனால் சிரித்தால் முகம் கோணலாக இருக்கும். இந்தப் பிரச்சனை சில சமயம் கடுமையான வியாதிகளாலும் வரலாம். அல்லது சாதாரணமாகவும் வரலாம். சாதாரணமாக இந்தப் பிரச்சனை ஏற்படும் போது இதனை முழுவதுமாக சரி செய்துவிட முடியும். அதற்கு சரியான வைத்தியமும், முகத்திற்கான பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். முறையாக இவ்விரண்டையும் செய்யும்போது குறைந்தபட்சம் இரண்டு வாரத்தில் இந்தப் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.

    வலிப்புக்காக எடுக்கும் மாத்திரைகள்

    நரம்பு வியாதியான வலிப்புக்கு மருந்தாக பயன்படும் PHENYTOIN என்ற மருந்தினை உட்கொள்பவர்களுக்கு உடல் முழுவதும் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். அவ்வாறு முகத்திலும் முடிவளர்ச்சி அதிகம் இருக்கும் போது பெண்களுக்கு அது அவர்களின் அழகை பாதிக்கும். சிலருக்கு பல் ஈறுகளில் வீக்கம் உண்டாகும். அதுவும் அவர்களின் முகத்தோற்றத்தில் வித்தியாசத்தை உருவாக்கும். அதனாலேயே இந்த மாத்திரையை இளம் பெண்களுக்கு பெரும்பாலும் நரம்பு மருத்துவர்கள்பரிந்துரைப்பதில்லை. 
    ×