என் மலர்
அழகுக் குறிப்புகள்
கூந்தல் உதிர்வு, இளம்நரை, பொடுகு போன்ற பல்வேறு கூந்தல் பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் நிரந்தரமாக தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
* வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும்.
* ஒரு பிடி வேப்பிலையை எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து மறுநாளும் வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், முடிகொட்டுவது நின்று விடும். பேன் இருந்தாலும் ஒழிந்து போகும்.
* நரை முடி கொண்டவர்கள், இயற்கையான முறையில் நரை முடியைக் கறுப்பாக்கிக் கொள்ள விரும்புபவர்கள் அவுரி இலையையும், மருதாணி இலையையும் இடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டித் தலையில் தடவலாம். முடியின் நிறம் மாறும்.
* தலைமுடி நன்கு வளர செவ்வந்திப்பூவை எண்ணெயில் கலந்து தடவி வரவேண்டும்.
* கூந்தல் நரை மறைய வேண்டுமானால், தினமும் வெண் தாமரைப்பூ கஷாயம் செய்து, அரை டம்ளர் வீதம் 40 நாள்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.
* தேவையான அளவு மருதாணி இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, நன்கு அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி மிருதுவாக இருக்கும். உடல் சூடும் குறையும்.
* நெல்லி இலையையும், இலந்தை இலையையும் மை போல் அரைத்து தலையில் தடவி பத்து நிமிடம் காயவிட்டு குளித்தால், தலைமுடி நரைப்பது நிற்கும்.
* கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேவையான தேங்காய் எண்ணெய் யில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தாலும் கூந்தல் செழித்து வளரும்.
* நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இள நரை கருமை நிறத்திற்கு மாறும். முடியும் செழுமை பெறும்.
* முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வர, நரை நீங்கும். முளைக்கீரையை நன்கு உலர்த்திப் பொடி செய்து தினசரி அரை ஸ்பூன் சாப்பிட்டும் வரலாம். நரை விலகும்.
* இருபது செம்பருத்திப் பூக்களைப் பறித்து வந்து, காம்பை நீக்கி சுத்தம் செய்து தேவையான தேங்காய் எண்ணெயில் கசக்கிப் போட்டு, சடசடப்பு நின்றதும் இறக்கி வைத்து, ஆறிய பின் பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொண்டு தினமும் தடவி வந்தாலும் முடி செழித்து வளரும். முடி உதிர்வதும் நின்றுபோகும்.
* ஒரு பிடி வேப்பிலையை எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து மறுநாளும் வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், முடிகொட்டுவது நின்று விடும். பேன் இருந்தாலும் ஒழிந்து போகும்.
* நரை முடி கொண்டவர்கள், இயற்கையான முறையில் நரை முடியைக் கறுப்பாக்கிக் கொள்ள விரும்புபவர்கள் அவுரி இலையையும், மருதாணி இலையையும் இடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டித் தலையில் தடவலாம். முடியின் நிறம் மாறும்.
* தலைமுடி நன்கு வளர செவ்வந்திப்பூவை எண்ணெயில் கலந்து தடவி வரவேண்டும்.
* கூந்தல் நரை மறைய வேண்டுமானால், தினமும் வெண் தாமரைப்பூ கஷாயம் செய்து, அரை டம்ளர் வீதம் 40 நாள்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.
* தேவையான அளவு மருதாணி இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, நன்கு அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி மிருதுவாக இருக்கும். உடல் சூடும் குறையும்.
* நெல்லி இலையையும், இலந்தை இலையையும் மை போல் அரைத்து தலையில் தடவி பத்து நிமிடம் காயவிட்டு குளித்தால், தலைமுடி நரைப்பது நிற்கும்.
* கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேவையான தேங்காய் எண்ணெய் யில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தாலும் கூந்தல் செழித்து வளரும்.
* நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இள நரை கருமை நிறத்திற்கு மாறும். முடியும் செழுமை பெறும்.
* முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வர, நரை நீங்கும். முளைக்கீரையை நன்கு உலர்த்திப் பொடி செய்து தினசரி அரை ஸ்பூன் சாப்பிட்டும் வரலாம். நரை விலகும்.
* இருபது செம்பருத்திப் பூக்களைப் பறித்து வந்து, காம்பை நீக்கி சுத்தம் செய்து தேவையான தேங்காய் எண்ணெயில் கசக்கிப் போட்டு, சடசடப்பு நின்றதும் இறக்கி வைத்து, ஆறிய பின் பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொண்டு தினமும் தடவி வந்தாலும் முடி செழித்து வளரும். முடி உதிர்வதும் நின்றுபோகும்.
பெண்கள் தங்கள் முகத்தை அழகாக்க கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றி பயன்பெறவும்.
தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.
உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும்.
பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.
2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
1 ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.
உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும்.
பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.
2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
1 ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் உலர்த்தி பொடியாக அரைத்து அத்துடன் சில பொருட்களை கலந்து வெயில் காலத்திலும் சருமத்தை பளபளப்பாக வைப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
ஆரஞ்சுப்பழத்தோலில் அடங்கியுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் காரணமாக பாகடீரியாக்கள் உருவாக்கும் நோய்த்தொற்று தடுக்கப்படுகிறது. ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் உலர்த்தி பொடியாக அரைத்து அத்துடன் சில பொருட்களை கலந்து வெயில் காலத்திலும் சருமத்தை பளபளப்பாக வைப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
பாதாம் ஸ்க்ரப்
ஆரஞ்சுப்பழத்தோல் பொடியுடன் 20 பாதாம் பருப்புகளை சேர்த்து ரவை பக்குவத்தில் அரைத்து அதை தினமும் சிறிதளவு பாலுடன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவிக்கொள்ளலாம்.இந்த கலவை சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி பொலிவை ஏற்படுத்துகிறது.
தயிர் கலவை
ஆரஞ்சு பழத்தோல் பொடியுடன் தயிர் கலந்து தயாரிக்கப்படும் கலவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதுடன் சருமத்தில் இறந்த செல்களையும் அகற்றவும் உதவி புரிகிறது. இந்த கலவையை முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
சர்க்கரை ஸ்க்ரப்
வறட்சியான மற்றும் ஈரப்பதமற்ற சருமம் கொண்டவர்கள் இந்த முறையை கடைப்பிடிப்பதன் மூலம் புத்துணர்ச்சி மற்றும் தூய்மையான சருமத்தை பெறலாம்.ஆரஞ்சு தோலை துருவி அதனுடன் சர்க்கரை கலந்து கிண்ணத்தல் எடுத்து கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும். இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவி விட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
பால் ஃபேஸ் மாஸ்க்
இந்த முறை சருமத்தை ஈரப்பதம் மற்றும் புத்துணர்ச்சி கொண்டதாக பராமரிக்கவும், மாநிறம் கொண்ட தோற்றத்தை அளிக்க உதவுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இரண்டு ஸ்பூன் அரஞ்சுத்தோல் பொடியுடன் பால் அல்லது பால் கிரீம் மற்றும் 1ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.இந்த கலவையை நன்றாக முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். அதன் பின்னர் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளலாம்.
வேப்பிலை பொடி கலவை
இந்த ஸ்கின் பேக் பருவால் உருவாகும் தொல்லையை அகற்ற உதவுகிறது. ஆரஞ்சுத்தோல் பவுடர் மற்றும் வேப்ப இலை பவுடர் ஆகிய இரண்டையும் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேவையானஅளவு தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவிக்கொள்ளலாம்.
பாதாம் ஸ்க்ரப்
ஆரஞ்சுப்பழத்தோல் பொடியுடன் 20 பாதாம் பருப்புகளை சேர்த்து ரவை பக்குவத்தில் அரைத்து அதை தினமும் சிறிதளவு பாலுடன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவிக்கொள்ளலாம்.இந்த கலவை சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி பொலிவை ஏற்படுத்துகிறது.
தயிர் கலவை
ஆரஞ்சு பழத்தோல் பொடியுடன் தயிர் கலந்து தயாரிக்கப்படும் கலவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதுடன் சருமத்தில் இறந்த செல்களையும் அகற்றவும் உதவி புரிகிறது. இந்த கலவையை முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
சர்க்கரை ஸ்க்ரப்
வறட்சியான மற்றும் ஈரப்பதமற்ற சருமம் கொண்டவர்கள் இந்த முறையை கடைப்பிடிப்பதன் மூலம் புத்துணர்ச்சி மற்றும் தூய்மையான சருமத்தை பெறலாம்.ஆரஞ்சு தோலை துருவி அதனுடன் சர்க்கரை கலந்து கிண்ணத்தல் எடுத்து கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும். இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவி விட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
பால் ஃபேஸ் மாஸ்க்
இந்த முறை சருமத்தை ஈரப்பதம் மற்றும் புத்துணர்ச்சி கொண்டதாக பராமரிக்கவும், மாநிறம் கொண்ட தோற்றத்தை அளிக்க உதவுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இரண்டு ஸ்பூன் அரஞ்சுத்தோல் பொடியுடன் பால் அல்லது பால் கிரீம் மற்றும் 1ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.இந்த கலவையை நன்றாக முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். அதன் பின்னர் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளலாம்.
வேப்பிலை பொடி கலவை
இந்த ஸ்கின் பேக் பருவால் உருவாகும் தொல்லையை அகற்ற உதவுகிறது. ஆரஞ்சுத்தோல் பவுடர் மற்றும் வேப்ப இலை பவுடர் ஆகிய இரண்டையும் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேவையானஅளவு தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவிக்கொள்ளலாம்.
எல்லா வகை எண்ணெய்யும் எல்லோருடைய கூந்தலுக்கும் ஒத்துக்கொள்ளாது. பொதுவாக கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள் எதுவென்று பார்ப்போம்!
கூந்தலின் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் நாம் பயன் படுத்தும் எண்ணெய் பக்க பலமாக இருக்கிறது. முடி உதிர்வு, பொடுகு பிரச்சினை, முடி வளர்ச்சி போன்றவற்றை கவனத்தில் கொண்டு பல விதவிதமான எண்ணெய்வகைகளை சிலர் உபயோகிக்கிறார்கள். எல்லா வகை எண்ணெய்யும் எல்லோருடைய கூந்தலுக்கும் ஒத்துக்கொள்ளாது. பொதுவாக கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள் எதுவென்று பார்ப்போம்!
ஆலிவ் எண்ணெய்: கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய் ஏற்றதுதான். ஆனால் மிருதுவான, நேரான முடியை கொண்டவர்கள் ஆலிவ் எண்ணெய்யை தவிர்த்துவிடலாம். அதனை தடவினால் கூந்தல், எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மையுடன் காட்சியளிக்கும். மேலும் ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் ஒலிரோபெயின் எனும் மூலக்கூறு அப்படிப்பட்ட கூந்தல் கொண்டவர்களின் முடி வளர்ச்சியை நேரடியாகவே பாதிக்கும். மேலும் ஆலிவ் எண்ணெய் சரும துளைகளை அடைத்து முகப்பருவை தூண்டக்கூடியது. அதனால் ஆலிவ் எண்ணெய் தேய்த்த பிறகு முகப்பரு தோன்றுவதாக உணர்ந்தால் அதனை கூந்தலுக்கு பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிட வேண்டும்.
விளக்கெண்ணெய்: முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் துணைபுரிந்தாலும் சிலருக்கு ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கூந்தலில் தடவியதும் முடிகளில் சிக்கு ஏற்பட்டாலோ, முடி உதிர்ந்தாலோ விளக்கெண்ணெய்யை தவிர்த்துவிடலாம்.
மினரல் ஆயில்: இதில் பெரும்பாலும் பாரபின் மெழுகு, பெட்ரோலியம் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். இவை கூந்தலில் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தி முடி உதிர்வை அதிகப்படுத்தும். உச்சந்தலையில் எரிச்சல், அரிப்பு, சொறி, வீக்கம், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.
கற்பூர எண்ணெய்: இது முடி உதிர்தலை தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், இது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். உச்சந்தலையில் வறட்சி ஏற்படவும் வழிவகுக்கும். முகப்பரு, தடிப்பு, பூஞ்சை தொற்றுகளையும் எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக இதில் நன்மையைவிட தீமையே அதிகம்.
எலுமிச்சை எண்ணெய்: எலு மிச்சை சாறையோ, எலுமிச்சை எண்ணெய்யையோ சிலர் தலையில் தடவு வார்கள். எலுமிச்சை எண்ணெய்யில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் சரியாக கலக்கப்படவில்லை என்றால் தீங்கு விளைவிக்கும். மேலும் அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் மயிர்க்கால்களை சுருங்கவும் செய்துவிடும்.
சரும டாக்டரின் ஆலோசனைப்படி கூந்தலுக்கு பொருத்தமான எண்ணெய்யை தேர்ந்தெடுப்பதே சிறந்தது.
ஆலிவ் எண்ணெய்: கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய் ஏற்றதுதான். ஆனால் மிருதுவான, நேரான முடியை கொண்டவர்கள் ஆலிவ் எண்ணெய்யை தவிர்த்துவிடலாம். அதனை தடவினால் கூந்தல், எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மையுடன் காட்சியளிக்கும். மேலும் ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் ஒலிரோபெயின் எனும் மூலக்கூறு அப்படிப்பட்ட கூந்தல் கொண்டவர்களின் முடி வளர்ச்சியை நேரடியாகவே பாதிக்கும். மேலும் ஆலிவ் எண்ணெய் சரும துளைகளை அடைத்து முகப்பருவை தூண்டக்கூடியது. அதனால் ஆலிவ் எண்ணெய் தேய்த்த பிறகு முகப்பரு தோன்றுவதாக உணர்ந்தால் அதனை கூந்தலுக்கு பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிட வேண்டும்.
விளக்கெண்ணெய்: முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் துணைபுரிந்தாலும் சிலருக்கு ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கூந்தலில் தடவியதும் முடிகளில் சிக்கு ஏற்பட்டாலோ, முடி உதிர்ந்தாலோ விளக்கெண்ணெய்யை தவிர்த்துவிடலாம்.
மினரல் ஆயில்: இதில் பெரும்பாலும் பாரபின் மெழுகு, பெட்ரோலியம் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். இவை கூந்தலில் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தி முடி உதிர்வை அதிகப்படுத்தும். உச்சந்தலையில் எரிச்சல், அரிப்பு, சொறி, வீக்கம், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.
கற்பூர எண்ணெய்: இது முடி உதிர்தலை தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், இது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். உச்சந்தலையில் வறட்சி ஏற்படவும் வழிவகுக்கும். முகப்பரு, தடிப்பு, பூஞ்சை தொற்றுகளையும் எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக இதில் நன்மையைவிட தீமையே அதிகம்.
எலுமிச்சை எண்ணெய்: எலு மிச்சை சாறையோ, எலுமிச்சை எண்ணெய்யையோ சிலர் தலையில் தடவு வார்கள். எலுமிச்சை எண்ணெய்யில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் சரியாக கலக்கப்படவில்லை என்றால் தீங்கு விளைவிக்கும். மேலும் அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் மயிர்க்கால்களை சுருங்கவும் செய்துவிடும்.
சரும டாக்டரின் ஆலோசனைப்படி கூந்தலுக்கு பொருத்தமான எண்ணெய்யை தேர்ந்தெடுப்பதே சிறந்தது.
மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது அதில் இருக்கும் அதிக ஈரப்பதம் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரித்துவிடும். மேலும் முகத்தின் இயற்கையான அழகை குறைத்துவிடும்
பெரும்பாலானோர் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்வதற்காக மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துகிறார்கள். அவை சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. இருப்பினும் மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.
மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தும்போது அவை சருமத்தில் முழுமையாக உறிஞ்சப்பட வேண்டும். சருமத்திற்குள் ஊடுருவுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளவும் கூடாது. மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது உருவாகும் கூடுதல் ஈரப்பதம் சருமத்திற்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக சரும செல்கள் பலவீனமடையும். சரும துளைகள் முழுவதும் அடைபடும் அபாயமும் உண்டாகும். அதனால் முகப்பரு மற்றும் வறண்ட சரும பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடலாம்.
மேலும் தேவைக்கு அதிகமாக மாய்ஸ்சுரைசரை உபயோகிக்கும்போது சருமம் புத்துணர்ச்சியை இழந்துவிடும். சோர்வு எட்டிப்பார்க்கும். சருமத்தில் தென்படும் ஒருசில அறிகுறிகளை கொண்டே மாய்ஸ்சுரைசரை அதிகம் தடவி இருப்பதை அறிந்து கொள்ளலாம். சருமத்தில் கருப்பு புள்ளிகள் தென்படுவது, சரும துளைகள் அடைப்பட்டிருப்பது, அதிக எண்ணெய் பசைத்தன்மை தென்படுவது, சருமத்தில் புள்ளிகள், தடிப்புகள் எட்டிப்பார்ப்பது, இறந்த செல்கள் வெளிப்படையாக தெரிவது போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். மாய்ஸ்சுரைசரை அதிகம் தடவும்போது சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்களும் தோன்றும். அதனை பயன்படுத்திய பிறகு முகத்தில் ஏதேனும் மேக்கப் பொருட்களை பயன்படுத்தினால் அது சருமத்தில் ஒட்டிக்கொள்ளாது.
மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது அதில் இருக்கும் அதிக ஈரப்பதம் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரித்துவிடும். மேலும் முகத்தின் இயற்கையான அழகை குறைத்துவிடும். ஒப்பனை செய்யும்போது அது சரியாக சருமத்தில் கலப்பதற்கும் அனுமதிக்காது. முகத்தில் புள்ளிகள், திட்டுகளை ஏற்படுத்தும். மாய்ஸ்சுரைசரை சரியான அளவில் பயன்படுத்தினால் மட்டுமே குளிர்காலத்தில் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க முடியும். மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கான சரியான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
* பட்டாணி அளவிலோ அல்லது அதை விட சற்று அதிகமாகவோ மாய்ஸ்சுரைசரை எடுத்து உள்ளங்கையில் நன்றாக தேய்த்து கைகளை சூடாக்க வேண்டும். பின்பு கன்னங்களில் வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். பிறகு நெற்றி, தாடை பகுதியில் தடவ வேண்டும். கழுத்தில் தேய்க்கும்போது கீழிருந்து மேல்நோக்கி தடவ வேண்டும்.
* காலையில் எழுந்ததும் முகம் கழுவிய பிறகு லேசாக டவலில் துடைத்துவிட்டு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே சருமம் ஈரப்பதமாக இருப்பதால் அதிக அளவில் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு அது வழிவகுக்கும்.
* இரவில் தூங்க செல்வதற்கு முன்பும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண் டும். அது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும்.
* சருமம் ஏற்கனவே வறண்டு போய் இருந்தால் அதற்கேற்ப மாய்ஸ்சுரைசரை சற்று அதிகமாக பயன்படுத்தலாம். ஆனால் சருமம் எண்ணெய் தன்மையுடன் இருந்தால் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.
* வாரத்திற்கு ஒரு முறை இறந்த செல்களை அகற்றவும் வேண்டும். இதனால் சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு மாய்ஸ்சுரைசரை சரியாக செயல்பட வைக்கும். இதன் மூலம் தேவையற்ற சரும பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தும்போது அவை சருமத்தில் முழுமையாக உறிஞ்சப்பட வேண்டும். சருமத்திற்குள் ஊடுருவுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளவும் கூடாது. மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது உருவாகும் கூடுதல் ஈரப்பதம் சருமத்திற்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக சரும செல்கள் பலவீனமடையும். சரும துளைகள் முழுவதும் அடைபடும் அபாயமும் உண்டாகும். அதனால் முகப்பரு மற்றும் வறண்ட சரும பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடலாம்.
மேலும் தேவைக்கு அதிகமாக மாய்ஸ்சுரைசரை உபயோகிக்கும்போது சருமம் புத்துணர்ச்சியை இழந்துவிடும். சோர்வு எட்டிப்பார்க்கும். சருமத்தில் தென்படும் ஒருசில அறிகுறிகளை கொண்டே மாய்ஸ்சுரைசரை அதிகம் தடவி இருப்பதை அறிந்து கொள்ளலாம். சருமத்தில் கருப்பு புள்ளிகள் தென்படுவது, சரும துளைகள் அடைப்பட்டிருப்பது, அதிக எண்ணெய் பசைத்தன்மை தென்படுவது, சருமத்தில் புள்ளிகள், தடிப்புகள் எட்டிப்பார்ப்பது, இறந்த செல்கள் வெளிப்படையாக தெரிவது போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். மாய்ஸ்சுரைசரை அதிகம் தடவும்போது சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்களும் தோன்றும். அதனை பயன்படுத்திய பிறகு முகத்தில் ஏதேனும் மேக்கப் பொருட்களை பயன்படுத்தினால் அது சருமத்தில் ஒட்டிக்கொள்ளாது.
மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது அதில் இருக்கும் அதிக ஈரப்பதம் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரித்துவிடும். மேலும் முகத்தின் இயற்கையான அழகை குறைத்துவிடும். ஒப்பனை செய்யும்போது அது சரியாக சருமத்தில் கலப்பதற்கும் அனுமதிக்காது. முகத்தில் புள்ளிகள், திட்டுகளை ஏற்படுத்தும். மாய்ஸ்சுரைசரை சரியான அளவில் பயன்படுத்தினால் மட்டுமே குளிர்காலத்தில் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க முடியும். மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கான சரியான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
* பட்டாணி அளவிலோ அல்லது அதை விட சற்று அதிகமாகவோ மாய்ஸ்சுரைசரை எடுத்து உள்ளங்கையில் நன்றாக தேய்த்து கைகளை சூடாக்க வேண்டும். பின்பு கன்னங்களில் வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். பிறகு நெற்றி, தாடை பகுதியில் தடவ வேண்டும். கழுத்தில் தேய்க்கும்போது கீழிருந்து மேல்நோக்கி தடவ வேண்டும்.
* காலையில் எழுந்ததும் முகம் கழுவிய பிறகு லேசாக டவலில் துடைத்துவிட்டு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே சருமம் ஈரப்பதமாக இருப்பதால் அதிக அளவில் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு அது வழிவகுக்கும்.
* இரவில் தூங்க செல்வதற்கு முன்பும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண் டும். அது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும்.
* சருமம் ஏற்கனவே வறண்டு போய் இருந்தால் அதற்கேற்ப மாய்ஸ்சுரைசரை சற்று அதிகமாக பயன்படுத்தலாம். ஆனால் சருமம் எண்ணெய் தன்மையுடன் இருந்தால் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.
* வாரத்திற்கு ஒரு முறை இறந்த செல்களை அகற்றவும் வேண்டும். இதனால் சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு மாய்ஸ்சுரைசரை சரியாக செயல்பட வைக்கும். இதன் மூலம் தேவையற்ற சரும பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
ஆடை முதல் காலணிகள் வரை விதவிதமாக எதிர்பார்க்கும் இளைஞர்களிடம் தற்போது ஃபங்கி கலாசாரம் பிரபலமாகி வருகிறது. இதன் மீதுதான் இளைஞர்களின் கவனம் திரும்பியுள்ளது.
ஆடை முதல் காலணிகள் வரை விதவிதமாக எதிர்பார்க்கும் இளைஞர்களிடம் தற்போது ஃபங்கி கலாசாரம் பிரபலமாகி வருகிறது. அதென்ன ஃபங்கி கலாசாரம் என்று யோசிக்காதீர்கள். கண்களைப் பறிக்கும் வகையிலான பளீர் வண்ண ஆடைகளுக்குத்தான் இந்தப் பெயர். இதன் மீதுதான் இளைஞர்களின் கவனம் திரும்பியுள்ளது.
வழக்கமாக பளீர் ரக ஆடைகளை அணிந்தால், ராமராஜன் ஸ்டைல் உடை எனக் கிண்டால் செய்வார்களே, அதுபோன்ற உடைதான் ஃபங்கி டிரெஸ். எப்படி ஒரு காலத்தில் ராமராஜன் மூலம் பளீர் ஆடைகள் பரிச்சயமானதோ, அதுபோலவே அண்மைக் காலமாக இந்த ஆடைக்கு மவுசுகூட, சினிமாக்கள்தான் காரணம்.
இந்த ஆடைகள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக, எங்கும் தனித்து தெரிய வேண்டும் என்ற அவர்களின் இளமையின் துடிப்பே காரணம். அந்த வகையில் இந்த ஃபங்கி கலாசாரம் முதலில் ஆடையில் தொடங்கி இப்போது இளைஞர்கள் விரும்பி பயன்படுத்தும் பொருட்கள் வரை வந்துவிட்டது.
ஆப்பிரிக்க பாப் பாடகர் பாப் மார்லி இந்த பங்கி கலாசாரத்தை மேடை தோறும் தொடங்கிவைத்தார். அப்படி அவர் மேடைகளில் தனித்துவத்தோடு தோன்றி தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். அது இளைஞர்களைக் கவர்ந்திழுக்கவே, பல இளைஞர்கள் இந்த ஆடைகளில் ஈர்ப்பு கொண்டு பயன் படுத்த ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த ஃபங்கி கலாசாரம் முடிவில்லாமல், உலகை வலம் வந்துகொண்டிருக்கிறது. நம்மூரிலும்கூட இளைஞர்கள் பலர் ஃபங்கி கலாசாரத்துக்கு மாறிவருகிறார்கள்.
வெளிநாடுகளிலிருந்து ஃபங்கி கலாச்சாரம் தற்போது வந்திருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஃபங்கி உடைகளின் குருநாதர் நடிகர் ராமராஜன்தான் என்பதை மறுக்க முடியுமா? சொல்லுங்க..
வழக்கமாக பளீர் ரக ஆடைகளை அணிந்தால், ராமராஜன் ஸ்டைல் உடை எனக் கிண்டால் செய்வார்களே, அதுபோன்ற உடைதான் ஃபங்கி டிரெஸ். எப்படி ஒரு காலத்தில் ராமராஜன் மூலம் பளீர் ஆடைகள் பரிச்சயமானதோ, அதுபோலவே அண்மைக் காலமாக இந்த ஆடைக்கு மவுசுகூட, சினிமாக்கள்தான் காரணம்.
இந்த ஆடைகள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக, எங்கும் தனித்து தெரிய வேண்டும் என்ற அவர்களின் இளமையின் துடிப்பே காரணம். அந்த வகையில் இந்த ஃபங்கி கலாசாரம் முதலில் ஆடையில் தொடங்கி இப்போது இளைஞர்கள் விரும்பி பயன்படுத்தும் பொருட்கள் வரை வந்துவிட்டது.
ஆப்பிரிக்க பாப் பாடகர் பாப் மார்லி இந்த பங்கி கலாசாரத்தை மேடை தோறும் தொடங்கிவைத்தார். அப்படி அவர் மேடைகளில் தனித்துவத்தோடு தோன்றி தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். அது இளைஞர்களைக் கவர்ந்திழுக்கவே, பல இளைஞர்கள் இந்த ஆடைகளில் ஈர்ப்பு கொண்டு பயன் படுத்த ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த ஃபங்கி கலாசாரம் முடிவில்லாமல், உலகை வலம் வந்துகொண்டிருக்கிறது. நம்மூரிலும்கூட இளைஞர்கள் பலர் ஃபங்கி கலாசாரத்துக்கு மாறிவருகிறார்கள்.
வெளிநாடுகளிலிருந்து ஃபங்கி கலாச்சாரம் தற்போது வந்திருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஃபங்கி உடைகளின் குருநாதர் நடிகர் ராமராஜன்தான் என்பதை மறுக்க முடியுமா? சொல்லுங்க..
கருப்பு உப்பு சருமத்திற்கு பளபளப்பு தன்மையை உண்டாக்குவதோடு இளமையான தோற்றப்பொலிவையும் தக்கவைக்கும். இறந்த செல் அடுக்குகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.
வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் இந்து உப்பைவிட சற்று அடர் நிறத்துடன் காணப்படும் கருப்பு உப்பையும் அழகு சாதன மூலப்பொருளாக உபயோகிக்கலாம். இது சருமத்திற்கு பள பளப்பு தன்மையை உண்டாக்குவதோடு இளமையான தோற்றப்பொலிவையும் தக்கவைக்கும். இறந்த செல் அடுக்குகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். இளமையான சரும ரகசியத்திற்கு கருப்பு உப்பை பயன்படுத்தும் விதம் குறித்து பார்ப்போம். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு ஈரப்பதத்தைதக்கவைக்க, கருப்பு உப்புடன் தேனை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் தேனுடன் அரை டீஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு அந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரம் 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல மாற்றம் ஏற்படும். வறண்ட சருமம் கொண்டவர்கள் பாதாம் எண்ணெய்யுடன் கருப்பு உப்பை உபயோகிக்கலாம். பாதாம் எண்ணெய்க்கு ஈரப்பதமூட்டும் தன்மை இருப்பதால் வறண்ட சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி தரும். மூன்று டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு உப்பை கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். பாதாம் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யும் பயன்படுத்தலாம். எண்ணெய் பசை தன்மை கொண்ட சருமம் கொண்டவர்கள் ஓட்ஸுடன் கருப்பு உப்பை உபயோகிக்கலாம்.
அது சருமத்தில் எண்ணெய் சுரப்பை சமன் செய்ய உதவும். ஓட்ஸ் மற்றும் கருப்பு உப்பை சிறிதளவு கலந்து அதனுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் உலரவிடவும். பின்பு கைகளால் மென்மையாக துடைத்து மசாஜ் செய்துவிட்டு நீரில் கழுவி விடலாம்.
வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல மாற்றம் தென்படும். சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால் முகத்தை கழுவிய பிறகு ரோஸ் வாட்டரை தடவலாம். முகத்தில் கரும்புள்ளி, வெண் புள்ளி, முகப்பரு போன்ற பிரச்சினைகள் இருந்தால் எலுமிச்சை பழத்துடன் கருப்பு உப்பை பயன்படுத்தலாம்.
இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு உப்பை கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நீரில் கழுவி விடலாம்.
மணப்பெண்தான் தனது உடலையும், மனதையும் பேணிக் கொள்ள வேண்டும். மனம் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருந்தால்தான் அந்த அழகு முகத்தில் பிரதிபலிக்கும்.
திருமணத்திற்கு தேதி குறித்ததும் மணப்பெண்கள் உடனே நகைகளை தேர்வு செய்தல், நவநாகரிக உடைகளை தேர்ந்தெடுத்தல் என்று களத்தில் இறங்கிவிடுவார்கள். அதைவிட முக்கியமான விஷயங்கள் சில இருக்கின்றன. திருமண கனவுகள் மணப்பெண்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி தருமென்றாலும், அவர்களுக்குள் பலவித தயக்கங்களும், தடுமாற்றங்களும் இருக்கத்தான் செய்யும். அவைகளில் தெளிவு ஏற்படுத்திக்கொண்டால்தான், திருமணத்தை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள முடியும்.
திருமணம் என்றதுமே மணமகள் வீடு களைகட்டிவிடும். பத்திரிகை தயார் செய்வது, அலங்காரத்திற்கு, பந்தலுக்கு, மண்டபத்திற்கு பதிவு செய்வது என அடுக்கடுக்கான பணிகள் இருக்கும். பெண்ணின் பெற்றோரும், சகோதரரும் அவரவர் பொறுப்பு களில் மூழ்கிவிடுவார்கள். மணப்பெண்ணின் மன நலம், உடல்நலம் பற்றி அதிகம் யோசிக்கமாட்டார்கள். ‘சந்தோஷமாக திருமணத்திற்கு தயாராகு’ என்று மட்டும் கூறிவிட்டு அவரவர் வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள். மணப்பெண்தான் தனது உடலையும், மனதையும் பேணிக் கொள்ள வேண்டும். மனம் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருந்தால்தான் அந்த அழகு முகத்தில் பிரதிபலிக்கும்.
திருமண நாள் நெருங்க நெருங்க கடைசிகட்ட பரபரப்பு ஒன்று தொற்றிக்கொள்ளும். அப்போது உணவுப் பழக்கம் மாறும். உணவு சாப்பிடும் நேரத்திலும் மாற்றம் ஏற்படும். அவை உடல்நலத்தில் மாற்றத்தை விளைவிக்கக் கூடியதாகும். அதனால் உணவு விஷயத்தில் மணப்பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது, திருமணத்திற்கு மட்டுமல்லாது எப்போதுமே அழகையும், நலத்தையும் தரும்.
வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொள்ளாத பெண்கள்கூட எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். திருமணத்திற்கு 2 முதல் 3 மாத இடைவெளி இருந்தால் உடற்பயிற்சி நல்ல பலன்தரும். உடலில் ஏற்படும் மாற்றங்களையும் உணரலாம். ஒவ்வொரு வாரத்திற்கும் இலக்கு நிர்ணயித்து பயிற்சிகளை மேற்கொண்டால் அதிக பலன்களை பெறலாம்.
சைக்கிளிங் பயிற்சி உடலை உறுதிப்படுத்தும், தேவையற்ற கொழுப்புகளையும், அதிக எடையையும் குறைக்கும். ஸ்கிப்பிங் பயிற்சி செய்வது கர்ப்பப்பையை பலமாக்கும். டிரெட்மில்லில் பயிற்சி செய்வதும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும். வேலைக்கும் செல்லும் பெண்களாக இருந்தாலும் இத்தகைய பயிற்சிகளில் கவனம் செலுத்தவேண்டும்.
நல்ல பியூட்டிசியன் கிடைத்தால் மட்டும் உங்கள் உடல் அழகாகிவிடாது. சருமம், முடி, நகம், பல் எல்லாவற்றையும் அழகாக மாற்றக்கூடியது உணவுப் பழக்க வழக்கம்தான். திருமணம் நிச்சயமான பெண்கள் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்த உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது மினுமினுப்பான தேகம் மற்றும் ஆரோக்கியமான உடலுக்கு உறுதுணையாக அமையும். கர்ப்பகால சத்துத் தேவைகளையும் இது ஈடுகட்டும். அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்புச்சத்து கொண்ட உணவுகளை உண்பது தேகத்தை பொலிவாகவும், உடலை நலமாகவும் மாற்றும்.
மணப்பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை எளிதில் அறிய வேண்டுமா? சிறிது தூரம் ஓடிப்பார்க்கவேண்டும். அப்போது களைப்பாகவும், சோர்வாகவும் உணர்ந்தால், போதிய இரும்புச்சத்து உடலில் இல்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்.
19 முதல் 50 வயது வரை பெண் களுக்கு தினமும் 18 மில்லிகிராம் இரும்புச்சத்து உடலுக்குத் தேவை. இதுதான் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை கட்டுக்குள் வைக்கக்கூடியது. அதுவே சருமப் பொலிவுக்கும் காரணமாக அமையும். இந்தச்சத்து குறைவாக இருப்பது சருமத்தை மட்டுமல்ல கூந்தலையும், நகத்தையும் பாதிக்கும். மென்மையான செந்நிற நகங்களும், மினுக்கும் கருங்கூந்தலும் தேவையானால் இரும்புச்சத்து அவசியம்.
பருப்பு வகைகள், கீரை வகைகள் இந்த சத்துத் தேவையை ஈடுகட்டும். பீட்ரூட் மற்றும் சோயாபீன் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்தது. இது மட்டுமே உடலுக்குத் தேவையான சத்து என்பதல்ல. சோயாவில் கால்சியம் மற்றும் மக்னீசியம், செலினியம் தாதுக்களும் மிகுந்துள்ளது. முந்திரி, பாதாம் போன்றவற்றிலும் உடலுக்கு அவசியமான அனைத்து தாதுக்களும் அடங்கி உள்ளன. அதிக அளவு மெலிந்த மற்றும் குண்டான தேகம் கொண்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு வகைகளை பின்பற்றலாம்.
சுவை கருதி செயற்கை பானங்களை பருகுவதை குறைத்துக் கொள்ளுங்கள். காபி மற்றும் டீ போன் றவைகூட தூக்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. சோடா மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்களையும் தவிர்க்கலாம். குளிர்பானங்களை விலக்கிவைப்பது நல்லது. அவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. கருவளையங்கள் மற்றும் சருமப் பொலிவை பாதிக்க இவை காரணமாகலாம். சில வேதிப்பொருட்கள் தூக்கத்தைக் கெடுக்கும். மனநிலையில் கிளர்ச்சியையும், தடுமாற்றத்தையும் உருவாக்கும். தொடர்ந்து செயற்கை பானங்களைப் பருகுவது சில வியாதிகளுக்கும், அஜீரண கோளாறுகளுக்கும் வழி வகுக்கும்.
பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் திகழ இயற்கை பானங்களை பருகுங்கள். தினமும் 8 டம்ளர் நீர் பருகுங்கள். காய்கறி, ஜூஸ்கள், சிறந்த உணவுக்கட்டுப்பாட்டிற்கு ஏற்றது. இவை உடல் எடையை ஏற்றாமல், உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கக்கூடியவை.
மணப்பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் உண்டாகலாம். திருமணம் மற்றும் முதலிரவு பற்றிய பயம், கவலை பலருக்கும் மன அழுத்தம் தரக்கூடியது. சிலருக்கு ஆண் நண்பர்களாலும், ஒருதலைக் காதலர்களாலும் மன வருத்தங்கள் ஏற்படலாம். மணம் பேசியவருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் சஞ்சலம் தரலாம். திருமணத்தில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத காரணங்களாலும் மணப்பெண் மன அழுத்தங்களை எதிர்கொள்ளலாம்.
மன அழுத்தம் உடலில் தேவையற்ற நச்சுப்பொருட்கள் சுரக்க காரணமாகின்றன. அவை கவலை மற்றும் பல்வேறுவிதமான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. மன அழுத்தங்களை கட்டுக்குள் வைக்க பிரச்சினை களின் தன்மைக்கேற்ப பெற்றோர் மற்றும் தோழிகளுடன் ஆலோசனை பெறுங்கள். தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல கவுன்சலிங் பெறலாம்.
மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள யோகா மற்றும் தியான பயிற்சிகள் கைகொடுக்கும். இதில் பழக்கம் இல்லாதவர்கள் அருகில் உள்ள பூங்காக் களுக்கு சென்று சிறிது தூரம் நடக்கலாம். மனதை அமைதிப்படுத்தியவாறு உட்கார்ந்திருக்கலாம். விரும்பிய புத்தகத்தை படிக்கலாம். நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். நிம்மதியாக தூங்கி எழுந்தால் பல பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள் மூளையில் உதயமாகும். நல்ல தூக்கம் மனஅழுத்தத்திற்கு தீர்வாகவும், புத்துணர்ச்சிக்கு சிறந்த வழியாகவும் அமைகிறது.
திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள், முதலில் இருந்தே தங்கள் உடல் நலனிலும் மன நலனிலும் அதிக அக்கறை காட்டவேண்டும். அவைதான் மண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
திருமணம் என்றதுமே மணமகள் வீடு களைகட்டிவிடும். பத்திரிகை தயார் செய்வது, அலங்காரத்திற்கு, பந்தலுக்கு, மண்டபத்திற்கு பதிவு செய்வது என அடுக்கடுக்கான பணிகள் இருக்கும். பெண்ணின் பெற்றோரும், சகோதரரும் அவரவர் பொறுப்பு களில் மூழ்கிவிடுவார்கள். மணப்பெண்ணின் மன நலம், உடல்நலம் பற்றி அதிகம் யோசிக்கமாட்டார்கள். ‘சந்தோஷமாக திருமணத்திற்கு தயாராகு’ என்று மட்டும் கூறிவிட்டு அவரவர் வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள். மணப்பெண்தான் தனது உடலையும், மனதையும் பேணிக் கொள்ள வேண்டும். மனம் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருந்தால்தான் அந்த அழகு முகத்தில் பிரதிபலிக்கும்.
திருமண நாள் நெருங்க நெருங்க கடைசிகட்ட பரபரப்பு ஒன்று தொற்றிக்கொள்ளும். அப்போது உணவுப் பழக்கம் மாறும். உணவு சாப்பிடும் நேரத்திலும் மாற்றம் ஏற்படும். அவை உடல்நலத்தில் மாற்றத்தை விளைவிக்கக் கூடியதாகும். அதனால் உணவு விஷயத்தில் மணப்பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது, திருமணத்திற்கு மட்டுமல்லாது எப்போதுமே அழகையும், நலத்தையும் தரும்.
வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொள்ளாத பெண்கள்கூட எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். திருமணத்திற்கு 2 முதல் 3 மாத இடைவெளி இருந்தால் உடற்பயிற்சி நல்ல பலன்தரும். உடலில் ஏற்படும் மாற்றங்களையும் உணரலாம். ஒவ்வொரு வாரத்திற்கும் இலக்கு நிர்ணயித்து பயிற்சிகளை மேற்கொண்டால் அதிக பலன்களை பெறலாம்.
சைக்கிளிங் பயிற்சி உடலை உறுதிப்படுத்தும், தேவையற்ற கொழுப்புகளையும், அதிக எடையையும் குறைக்கும். ஸ்கிப்பிங் பயிற்சி செய்வது கர்ப்பப்பையை பலமாக்கும். டிரெட்மில்லில் பயிற்சி செய்வதும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும். வேலைக்கும் செல்லும் பெண்களாக இருந்தாலும் இத்தகைய பயிற்சிகளில் கவனம் செலுத்தவேண்டும்.
நல்ல பியூட்டிசியன் கிடைத்தால் மட்டும் உங்கள் உடல் அழகாகிவிடாது. சருமம், முடி, நகம், பல் எல்லாவற்றையும் அழகாக மாற்றக்கூடியது உணவுப் பழக்க வழக்கம்தான். திருமணம் நிச்சயமான பெண்கள் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்த உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது மினுமினுப்பான தேகம் மற்றும் ஆரோக்கியமான உடலுக்கு உறுதுணையாக அமையும். கர்ப்பகால சத்துத் தேவைகளையும் இது ஈடுகட்டும். அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்புச்சத்து கொண்ட உணவுகளை உண்பது தேகத்தை பொலிவாகவும், உடலை நலமாகவும் மாற்றும்.
மணப்பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை எளிதில் அறிய வேண்டுமா? சிறிது தூரம் ஓடிப்பார்க்கவேண்டும். அப்போது களைப்பாகவும், சோர்வாகவும் உணர்ந்தால், போதிய இரும்புச்சத்து உடலில் இல்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்.
19 முதல் 50 வயது வரை பெண் களுக்கு தினமும் 18 மில்லிகிராம் இரும்புச்சத்து உடலுக்குத் தேவை. இதுதான் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை கட்டுக்குள் வைக்கக்கூடியது. அதுவே சருமப் பொலிவுக்கும் காரணமாக அமையும். இந்தச்சத்து குறைவாக இருப்பது சருமத்தை மட்டுமல்ல கூந்தலையும், நகத்தையும் பாதிக்கும். மென்மையான செந்நிற நகங்களும், மினுக்கும் கருங்கூந்தலும் தேவையானால் இரும்புச்சத்து அவசியம்.
பருப்பு வகைகள், கீரை வகைகள் இந்த சத்துத் தேவையை ஈடுகட்டும். பீட்ரூட் மற்றும் சோயாபீன் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்தது. இது மட்டுமே உடலுக்குத் தேவையான சத்து என்பதல்ல. சோயாவில் கால்சியம் மற்றும் மக்னீசியம், செலினியம் தாதுக்களும் மிகுந்துள்ளது. முந்திரி, பாதாம் போன்றவற்றிலும் உடலுக்கு அவசியமான அனைத்து தாதுக்களும் அடங்கி உள்ளன. அதிக அளவு மெலிந்த மற்றும் குண்டான தேகம் கொண்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு வகைகளை பின்பற்றலாம்.
சுவை கருதி செயற்கை பானங்களை பருகுவதை குறைத்துக் கொள்ளுங்கள். காபி மற்றும் டீ போன் றவைகூட தூக்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. சோடா மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்களையும் தவிர்க்கலாம். குளிர்பானங்களை விலக்கிவைப்பது நல்லது. அவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. கருவளையங்கள் மற்றும் சருமப் பொலிவை பாதிக்க இவை காரணமாகலாம். சில வேதிப்பொருட்கள் தூக்கத்தைக் கெடுக்கும். மனநிலையில் கிளர்ச்சியையும், தடுமாற்றத்தையும் உருவாக்கும். தொடர்ந்து செயற்கை பானங்களைப் பருகுவது சில வியாதிகளுக்கும், அஜீரண கோளாறுகளுக்கும் வழி வகுக்கும்.
பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் திகழ இயற்கை பானங்களை பருகுங்கள். தினமும் 8 டம்ளர் நீர் பருகுங்கள். காய்கறி, ஜூஸ்கள், சிறந்த உணவுக்கட்டுப்பாட்டிற்கு ஏற்றது. இவை உடல் எடையை ஏற்றாமல், உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கக்கூடியவை.
மணப்பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் உண்டாகலாம். திருமணம் மற்றும் முதலிரவு பற்றிய பயம், கவலை பலருக்கும் மன அழுத்தம் தரக்கூடியது. சிலருக்கு ஆண் நண்பர்களாலும், ஒருதலைக் காதலர்களாலும் மன வருத்தங்கள் ஏற்படலாம். மணம் பேசியவருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் சஞ்சலம் தரலாம். திருமணத்தில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத காரணங்களாலும் மணப்பெண் மன அழுத்தங்களை எதிர்கொள்ளலாம்.
மன அழுத்தம் உடலில் தேவையற்ற நச்சுப்பொருட்கள் சுரக்க காரணமாகின்றன. அவை கவலை மற்றும் பல்வேறுவிதமான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. மன அழுத்தங்களை கட்டுக்குள் வைக்க பிரச்சினை களின் தன்மைக்கேற்ப பெற்றோர் மற்றும் தோழிகளுடன் ஆலோசனை பெறுங்கள். தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல கவுன்சலிங் பெறலாம்.
மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள யோகா மற்றும் தியான பயிற்சிகள் கைகொடுக்கும். இதில் பழக்கம் இல்லாதவர்கள் அருகில் உள்ள பூங்காக் களுக்கு சென்று சிறிது தூரம் நடக்கலாம். மனதை அமைதிப்படுத்தியவாறு உட்கார்ந்திருக்கலாம். விரும்பிய புத்தகத்தை படிக்கலாம். நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். நிம்மதியாக தூங்கி எழுந்தால் பல பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள் மூளையில் உதயமாகும். நல்ல தூக்கம் மனஅழுத்தத்திற்கு தீர்வாகவும், புத்துணர்ச்சிக்கு சிறந்த வழியாகவும் அமைகிறது.
திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள், முதலில் இருந்தே தங்கள் உடல் நலனிலும் மன நலனிலும் அதிக அக்கறை காட்டவேண்டும். அவைதான் மண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை. இரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் அதுவே பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டுவிடும்.
பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூந்தலை அலங்கரிப்பதற்கு காண்பிக்கும் அக்கறையை வீட்டில் இருக்கும்போது காண்பிப்பதில்லை. அதிலும் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை.
இரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் அதுவே பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டுவிடும். இரவு நேரத்தில் கூந்தல் பராமரிப்பில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை சரிசெய்யும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
* பெண்கள் நிறைய பேர் இரவில் தூங்கும்போது கூந்தலை இறுக்கமாக கட்டிக்கொள்ளும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். அது தவறானது. அப்படி இறுக்கமாக கூந்தலில் கொண்டை போட்டுக்கொள்வது மயிர்கால்களை கடுமையாக பாதிக்கும். கூந்தலின் அடிப்பகுதியில் இருக்கும் வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்காது. அதனால் கூந்தல் முடிகள் பாதிப்புக்குள்ளாகும்.
* இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக சீவுவதும் நல்லது. அப்படி செய்தால் கூந்தல் முடியில் சிக்கல் விழாமல் இருக்கும். இரவில் தூங்கும்போது சிக்கல்கள் விழுந்தாலும் எளிதில் சரிப்படுத்திவிடலாம். அதைவிடுத்து சிக்கல் முடியுடன் தூங்க சென்றால் அதன் பாதிப்பு அதிகமாகி விடும். அதனால் முடியின் அடர்த்தியும், வலிமையும் குறையும். முடி கொட்டுதல் பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும்.
* இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பின்னந்தலையில் வியர் வையோ, ஈரப்பதமோ படிந்திருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியமானது. ஏனெனில் அப்படி ஈரப்பதம் இருந்தால் அது மயிர்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பொடுகு தொல்லை, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். இரவில் குளித்தால் கூந்தலை நன்றாக உலரவைத்துவிட்டுத்தான் தூங்க வேண்டும்.
* இரவு நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்த்து மயிர்கால்களுக்கு மசாஜ் செய்துவிடுவது நல்லது. அதன் மூலம் மயிர்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். மயிர்கால்கள் வலுப்படுவதால் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். இரவில் மசாஜ் செய்துவிட்டு தூங்கினால் காலை யில் எழுந்ததும் தலைக்கு குளித்துவிடுவது நல்லது.
* தலையணை உறைகளை வாரத்திற்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும். ஏனெனில் தினமும் அதில் தலையை வைத்து படுக்கும்போது அதில் அழுக்குகள் சேர்ந்துவிடும். தலையில் இருக்கும் எண்ணெய்யும் தலையணை உறையில் படிந்து அழுக்குடனும் சேர்ந்துவிடும். அதில் தொடர்ந்து தலைவைத்து படுப்பது முடிக்கு பாதிப்பாகிவிடும்.
காதணி, கழுத்தணி என்று ஆரம்பித்து தற்போது நகங்களில் கூட நகைகள் அணிவிக்கப்படுகின்றன. நகங்களில் ஓவியங்கள் வரைந்து துளையிட்டு சலங்கைகள் அணிவது போன்றவை தான் ட்ரெண்டில் இருந்தன.
பெண்களையும் நகைகளையும் பிரிக்கவே முடியாது. பண்டைய காலம் முதல் இன்றைய நவநாகரிக காலம் வரை பெண்களின் ரசனைக்கேற்ப நகைகள் பல்வேறு விதங்களில் மாற்றம் பெற்று வந்திருக்கின்றன.
காதணி, கழுத்தணி என்று ஆரம்பித்து தற்போது நகங்களில் கூட நகைகள் அணிவிக்கப்படுகின்றன. நகங்களில் ஓவியங்கள் வரைந்து துளையிட்டு சலங்கைகள் அணிவது போன்றவை தான் ட்ரெண்டில் இருந்தன. தற்போது அவற்றுக்கெல்லம் ஒருபடி மேலே போய் நகங்களை அலங்கரிப்பதற்கென நகைகள் வந்து விட்டன. அவை தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் சாதாராண உலோகங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. சில நூறு ரூபாய்களில் ஆரம்பித்து பல லட்சங்கள் வரை அவற்றின் விலை உள்ளது.
முழுமையாக நகத்தை மறைக்கும் கவசம் போலவும், விரலையும் நகத்தையும் இணைக்கும் சங்கிலி போலவும், நகங்களில் ஒட்டிக்கொள்ளும் வகையிலும் விதவிதமாக அவை கிடைக்கின்றன. சந்தையில் புதிதாக வந்திருக்கும் நகங்களுக்கான நகைகளை கல்லூரி மாணவிகளும், மணப்பெண்களும் விரும்பி அணிகின்றனர்.
காதணி, கழுத்தணி என்று ஆரம்பித்து தற்போது நகங்களில் கூட நகைகள் அணிவிக்கப்படுகின்றன. நகங்களில் ஓவியங்கள் வரைந்து துளையிட்டு சலங்கைகள் அணிவது போன்றவை தான் ட்ரெண்டில் இருந்தன. தற்போது அவற்றுக்கெல்லம் ஒருபடி மேலே போய் நகங்களை அலங்கரிப்பதற்கென நகைகள் வந்து விட்டன. அவை தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் சாதாராண உலோகங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. சில நூறு ரூபாய்களில் ஆரம்பித்து பல லட்சங்கள் வரை அவற்றின் விலை உள்ளது.
முழுமையாக நகத்தை மறைக்கும் கவசம் போலவும், விரலையும் நகத்தையும் இணைக்கும் சங்கிலி போலவும், நகங்களில் ஒட்டிக்கொள்ளும் வகையிலும் விதவிதமாக அவை கிடைக்கின்றன. சந்தையில் புதிதாக வந்திருக்கும் நகங்களுக்கான நகைகளை கல்லூரி மாணவிகளும், மணப்பெண்களும் விரும்பி அணிகின்றனர்.
பொருத்தமான ஆடைகள் நமது தன்னம்பிக்கையை மேலும் அதிகப்படுத்துகின்றன. அந்த வகையில் சற்றே உயரம் குறைந்த பெண்கள் அணிவதற்கு ஏற்ற ட்ரெண்டி உடைகளை பற்றி ஒரு சிறிய தொகுப்பு உங்களுக்காக...
ஆள் பாதிஆடை பாதிஎன்பதற்கேற்ப ஒருவரின் தோற்றத்தை மட்டுமின்றி ஆளுமையையும் அவர் அணியும் ஆடைகள் நிர்ணயிக்கின்றன. பொருத்தமான ஆடைகள் நமது தன்னம்பிக்கையை மேலும் அதிகப்படுத்துகின்றன என்பது உளவியல் ரீதியாக அறிப்பட்ட உண்மை. அந்த வகையில் சற்றே உயரம் குறைந்த பெண்கள் அணிவதற்கு ஏற்ற ட்ரெண்டி உடைகளை பற்றி ஒரு சிறிய தொகுப்பு உங்களுக்காக...
* நீண்ட குர்தாவுடன் கணுக்கால் வரை உயரமுள்ள பேண்ட் அணியும் போது உங்கள் கால்கள் சற்றே நீளமாக தெரியும்.
* கருப்பு மற்றும் அடர் நிற புடவைகள், சுடிதார்கள் உயரம் குறைந்தவர்களை ஒல்லியானவர்களாகவும், உயரமானவர்களாகவும் காட்டும்.
* புடவையை பொறுத்தவரை செங்குத்துக்கோடுகள் போட்ட புடவைகள் உங்களை உயரமாக காட்டும்.
* பாலஸ்ஸோ எனப்படும் பேண்ட்டோடு கூடிய நீளமான குர்த்தாக்கள் உங்களை உயரமானவர்களாக காட்டும்.
* நீளம் குறைந்த குர்தியுடன் கூடிய சல்வாரும், உயரம் குறைவான பெண்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
* நீண்ட குர்தாவுடன் கணுக்கால் வரை உயரமுள்ள பேண்ட் அணியும் போது உங்கள் கால்கள் சற்றே நீளமாக தெரியும்.
* கருப்பு மற்றும் அடர் நிற புடவைகள், சுடிதார்கள் உயரம் குறைந்தவர்களை ஒல்லியானவர்களாகவும், உயரமானவர்களாகவும் காட்டும்.
* புடவையை பொறுத்தவரை செங்குத்துக்கோடுகள் போட்ட புடவைகள் உங்களை உயரமாக காட்டும்.
* பாலஸ்ஸோ எனப்படும் பேண்ட்டோடு கூடிய நீளமான குர்த்தாக்கள் உங்களை உயரமானவர்களாக காட்டும்.
* நீளம் குறைந்த குர்தியுடன் கூடிய சல்வாரும், உயரம் குறைவான பெண்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
கோடை காலத்தில் (summer) எல்லாருக்குமே உடலில் வியர்வை வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் விளைவாக துர்நாற்றம் ஏற்படும்.
கோடை காலத்தில் தோல் பராமரிப்பு குறித்து கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவ்ஆனந்த் கூறியதாவது:-
கோடை வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியம். இந்த வெயிலில் முதலில் பாதிக்கப்படுவதும் நம்முடைய தோல்களே. இதை பராமரிப்பது மிக முக்கியம். இதற்கு முக்கியமாக தினமும் 2 முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும். கருப்பு நிற ஆடைகளை தவிர்க்க வேண்டும். வாசனை திரவியங்கள், பவுடர்களை தவிர்க்க வேண்டும். காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
அப்படி செல்ல வேண்டுமானால் குடை, தொப்பி, ஹெல்மெட் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும். கோடை காலத்திற்கேற்ற உணவுகளான கீரைகள், இளநீர், நுங்கு, மோர் மற்றும் பழச்சாறு, நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தகுந்த சோப்பு மற்றும் ஷாம்புகளை உபயோகப்படுத்த வேண்டும். குறிப்பாக மதுபானங்களை தவிர்த்தல் நல்லது.
இவ்வாறு டாக்டர் தேவ்ஆனந்த் கூறினார்.
கோடை வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியம். இந்த வெயிலில் முதலில் பாதிக்கப்படுவதும் நம்முடைய தோல்களே. இதை பராமரிப்பது மிக முக்கியம். இதற்கு முக்கியமாக தினமும் 2 முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும். கருப்பு நிற ஆடைகளை தவிர்க்க வேண்டும். வாசனை திரவியங்கள், பவுடர்களை தவிர்க்க வேண்டும். காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
அப்படி செல்ல வேண்டுமானால் குடை, தொப்பி, ஹெல்மெட் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும். கோடை காலத்திற்கேற்ற உணவுகளான கீரைகள், இளநீர், நுங்கு, மோர் மற்றும் பழச்சாறு, நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தகுந்த சோப்பு மற்றும் ஷாம்புகளை உபயோகப்படுத்த வேண்டும். குறிப்பாக மதுபானங்களை தவிர்த்தல் நல்லது.
இவ்வாறு டாக்டர் தேவ்ஆனந்த் கூறினார்.






