என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    பெண்களின் சரும பராமரிப்பு பொருட்களில் இடம் பிடித்திருக்கும் ரோஸ் வாட்டரை கோடை காலத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும். அதற்கான காரணங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கோடை காலத்தில் சரும பிரச்சினைகள் தலைதூக்குவது தவிர்க்கமுடியாதது. ஏனெனில் நீர்ச்சத்துதான் சரும பராமரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கோடையில் நிலவும் வெப்ப தாக்கத்தின் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறையும்போது சருமமும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக சிவத்தல், எரிச்சல், தடிப்புகள் போன்ற பிரச்சினைகளை சருமம் எதிர்கொள்ள நேரிடும்.

    இந்த பிரச்சினைக்கு ‘ரோஸ் வாட்டர்’ எனப்படும் ரோஜா நீர் தீர்வு தரும். ரோஜா இதழ்களை நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர், பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. பெண்களின் சரும பராமரிப்பு பொருட்களில் இடம் பிடித்திருக்கும் ரோஸ் வாட்டரை கோடை காலத்தில் தவறாமல் பயன் படுத்த வேண்டும். அதற்கான காரணங்கள்:

    ரோஸ் வாட்டரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தை பாதுகாக்கவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு தண்ணீர் பருகுவது அவசியம் என்றாலும் சருமத்தின் உள் அடுக்குகளை நீரேற்றத்துடன் வைத் திருப்பதற்கு அது போதுமானதல்ல. ரோஸ் வாட்டர் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படும் தன்மை கொண்டது. அதனால் தினமும் மாய்ஸ்சரைசருடன் ரோஸ்வாட்டரையும் கலந்து சருமத்தில் தடலாம். அது சருமத்தில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுவதுடன் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் அளிக்கும்.

    ரோஸ் வாட்டர் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. மேலும் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது. சரும எரிச்சல், தடிப்புகளை போக்கக்கூடியது. கண்கள் சிவத்தல், வீக்கம் அடைதல் போன்ற பிரச்சினைகளுக்கு ரோஸ் வாட்டர் நிவாரணம் தரும். காட்டன் பஞ்சுவில் ரோஸ் வாட்டரை முக்கி கண்களின் புருவம், அடிப் பகுதியில் தடவுவதன் மூலம் கண் சோர்வை போக்கலாம். வெண் படல அழற்சி, உலர்ந்த கண், கண்புரை போன்ற பிற கண் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ரோஸ் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. ரோஸ் வாட்டரில் கிருமி நாசினி பண்புகளும் உள்ளன. இது தவிர பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    வெட்டு காயங்கள், வடுக்கள், தீக்காயங்கள் போன்ற பிற காயங் களுக்கு சிகிச்சை அளிக்கவும் ரோஸ் வாட்டர் உதவும். ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுவதன் மூலம் சரும செல்கள் வலுப்பெறும். சரும திசுக்களை மீண்டும் உருவாக்கவும் ரோஸ் வாட்டர் உதவும். ரோஸ் வாட்டரின் வாசம் மன நிலையை மேம்படுத்த உதவும். நன்றாக தூங்கவும் உதவும். ஒப்பனையை நீக்கிய பிறகு ரோஸ் வாட்டரை உபயோகிக்கலாம். அது சருமத்தை குளிர்விக்க துணைபுரியும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசைத்தன்மையை கட்டுப்படுத்தி சருமத்தின் பி.எச். சமநிலையை பராமரிக்கவும் ரோஸ் வாட்டர் உதவும்.
    பெண்களுக்கு முகத்தில் வளரக்கூடிய தேவையற்ற ரோமத்தை நிரந்தரமாக லேசர் சிகிச்சை முறைபடி எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் எந்தவிதமான பக்க விளைவும் கிடையாது.
    முடிமாற்று அறுவை சிகிச்சை (Hair Transplantation)

    தோல் மருத்துவ முறையின் பல நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் நிரந்தரமாக முடி வளர வைப்பதற்கு FUE (Follicular Unit Extraction) என்ற முறையில் தழும்புகள் இல்லாமல் மயக்க மருந்து இல்லாமல் எளிய முறையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். இந்த முறையில் வளரக்கூடிய முடியும் அதன் அமைப்பும் இயற்கையான தோற்றம் அளிக்கும். காண்பவருக்கு எந்த விதமான வித்தியாசமும் தெரியாமல், உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத எளிமையான அறுவை சிகிச்சை முறையாகும். இந்த அறுவை சிகிச்சை OP (புறநோயாளி) சிகிச்சை முறையில் செய்து கொள்ள லாம். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசிய மில்லை. இந்த அறுவை சிகிச்சைக்கு எந்த விதமான பக்க விளைவும் கிடையாது. இந்த முறையில் வளரக்கூடிய முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இது ஆண் பெண் இருபாலருக்கும் செய்யலாம். இது சிலருக்கு முகத்தில் வளரக்கூடிய தாடி யின் அமைப்பு முறையையும் சரி செய்யலாம்.

    லேசர் முடிநீக்கம்:

    பெண்களுக்கு முகத்தில் வளரக்கூடிய தேவையற்ற ரோமத்தை நிரந்தரமாக லேசர் சிகிச்சை முறைபடி எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் எந்தவிதமான பக்க விளைவும் கிடையாது.

    இந்த சிகிச்சை முறை 4 முதல் 6 முறை மாதம் ஒரு முறை எடுத்துக்கொள் ளலாம். இது நிரந்தரமாக முடிநீக்கும் முறையாகும்். இது ஆண் பெண் இரு பாலருக்கும் செய்யகூடிய சிகிச்சையாகும். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறைகள் முகத்தில் மற்றும் உடம்பில் இருக்க கூடிய தேவையற்ற முடிகளை எடுக்க உதவும். இந்த லேசர் முடிநீக்கம் முறையில் வலி மற்றும் பக்க விளைவுகள் எதுவும் கிடை யாது. இந்த சிகிச்சை முறை எல்லா வயதினருக்கும் ஏற்றது.

    பரு தழும்பு நீக்குதல்:

    முகத்தில் வரக்கூடிய பரு தழும்புகள் இளம் வயதினருக்கு பெரும் கவலை அளிக்ககூடிய ஒரு பிரச்சனையாகும். (Fraxel 1550nm Erbium Glass) என்ற அதிநவீன சிகிச்சை முறைபடி முழுமையாக பரு தழும்புகளை நீக்கி விடலாம். இதற்கு 3 முதல் 5 முறை சிகிச்சை செய்ய வேண்டும். இந்த சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானது. வலி மற்றும் பக்கவிளைவுகள் இல்லாதது. மயக்க மருந்து தேவையில்லை.

    நரம்பு முடிச்சு நீக்குதல்:

    Varicose vein என்ற காலில் தோற்றும் தடித்த நரம்பு முடிச்சு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிகுந்த உபாதை அளிக்க கூடிய ஒரு பிரச்சினையாகும்.

    இதற்கு எளிமை யான நிரந்தர தீர்வு லேசர் மூலமாக செய்யப்படும். இந்த லேசர் சிகிச்சை முறையானது அறுவை சிகிச்சை முறையில் நரம்பு முடிச்சுகளை நீக்குவதை விட பல வழிகளில் உயர்ந்த சிகிச்சை முறையாகும்.

    இந்த சிகிச்சை முறைக்கு Endovenous Laser Ablation என்ற பெயர் உண்டு. இந்த முறையில் நிரந்தரமாக பக்க விளைவுகள் இன்றி நீக்கிவிடலாம். இந்த சிகிச்சை முறைக்கு மருத்துவ மனையில் தங்க வேண்டியதில்லை. அறுவை சிகிச்சை முறையில் செய்யும்போது மருத்துவமனையில் தங்க வேண்டிய கட்டாயம் மற்றும் வலி, விடுப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. OP (Out patient) முறையில் இந்த சிகிச்சை செய்து கொள்ளலாம். சில மணி நேரங்களே ஆக கூடிய இந்த சிகிச்சை முடிந்ததும் வீட்டிற்கு செல்லலாம்.

    லேசர் முறையில் பச்சை குத்தியது நீக்குதல்:

    கருப்பு மற்றும் பல நிறங்களில் இருக்ககூடிய பச்சை குத்தியதை Q-Switched Nd Yag (Revlite, Spectra) சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். 2 மற்றும் 3 முறை இந்த சிகிச்சையை எடுப்பதன் மூலம் முழுமையாக பச்சை குத்தியதை நீக்கலாம். இந்த சிக்சைக்கு பக்க விளைவுகள் எதுவும் கிடையாது.

    வலி கிடையாது மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறையாகும்.

    பிறப்பு மச்சம் நீக்குதல்:

    இரத்த குழாயில் உருவாகக் கூடிய சிகப்பு மச்சத்தை (Hemangioma) இதனை Pulsed dye Laser (V-beam) சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். இந்த சிகிச்சையை 1 அல்லது 2 முறை எடுக்கவேண்டும். இந்த சிகிச்சை பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த சிகிச்சை முறைக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறையாகும்.

    Stretch marks மற்றும் ஆபரேஷன் தழும்பு நீக்குதல்

    ஆபரேஷன் தழும்புகள் மற்றும் உடலில் தோன்றும் Stretch marks பெண்களுக்கு டெலிவரிக்கு பின் ஏற்படக் கூடிய தழும்புகள் (டெலிவரி மார்க்ஸ்) இவற்றை Fraxel 1550nm Erbium Glass சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

    இந்த சிகிச்சையை 4 முதல் 5 முறை எடுக்கவேண்டும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் வலி கிடையாது. இ்ந்த சிகிச்சை முறை பாதுகாப்பான, பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை முறையாகும்.

    அழகிய உடலமைப்பு மற்றும் உடல் கொழுப்பு நீக்குதல்

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலில் தோன்றும் தேவையற்ற கொழுப்பு மற்றும் உடலமைப்பு பெற Cryolipolysis சிகிச்சை முறையில் சிறந்த பலனை பெறலாம்.

    அறுவை சிகிச்சை இல்லாத அதிநவீன லேசர் சிகிச்சையின் மூலமாக வயிறு மற்றும் கை கால்களில் பகுதிகளில் உள்ள கொழுப்பு மற்றும் உடல் பருமனையும் அகற்றலாம். இந்த லேசர் சிகிச்சையின் மூலம் அழகிய உடலமைப்பு பெறலாம்.

    இந்த லேசர் சிகிச்சைக்கு மருத்துவமனையில் தங்க அவசியமில்லா இந்த சிகிச்சையை OP (Out patient) சிகிச்சை முறையில் செய்து கொள்ளலாம் . வலி இல்லாத பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாத லேசர் சிகிச்சை முறையாகும்.

    மேலும் தொடர்புக்கு:-

    AKJN SKIN & LASER CENTRE, வண்ணார்பேட்டை திருநெல்வேலி. 0462- 2502718, 2501730.
    வளையல்கள் வட்ட வடிவமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லாமல் பல அற்புதமான வடிவங்களில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட வளையல்களை பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.
    பெண்களால் விரும்பி அணியப்படும் அணிகலன்களில் முக்கியமான இடத்தை பிடிப்பவை வளையல்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வளையல்கள் வட்ட வடிவமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லாமல் பல அற்புதமான வடிவங்களில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட வளையல்களை பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள். பதினெட்டு, இருபத்திரெண்டு மற்றும் இருபத்தி நான்கு கேரட் தங்கத்தில் வளையல்கள் தயாரிக்கப்படுகின்றன.

    * கடாஸ்:- இவ்வகை வளையல்கள் மிகவும் சிக்கலான வடிவம் மற்றும் பாணியில் மிகவும் அழுத்தமாகவும், உறுதியாகவும் இருப்பது போல் தயாரிக்கப்படுகின்றன. இவை முழுவதுமே தங்கத்தால் மட்டுமல்லாம் வைரம், ரூபி, புஷ்பராகம், முத்து மற்றும் எமரால்டு போன்ற விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு பார்வைக்கு கம்பீரமான தோற்றத்தை தருவதாகவும் பாரம்பரிய மற்றும் நவநாகரீக பாணியின் கலவையாகவும் காட்சியளிக்கின்றன.

    * பழங்கால வளையல்கள்:- இவ்வகை வளையல்கள் அணிவதையே பெருமையாகவும் கெளரவமாகவும் நினைக்கும் பெண்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. பழங்கால ஆன்டிக் வளையல்களின் விலையானது மிக மிக அதிகம் என்பதால் அதைப்போலவே ஆன்டிக் வளையல்களை மிகவும் திறமையான பொன்நகை கைவினைக்கலைஞர்களை கொண்டு இப்பொழுது மிகப்பெரிய நகைக்கடைகள் தயாரித்து விற்பனை செய்கின்றன. பழங்கால வளையல்களின் வடிவமைப்பு வேலைப்பாடு மற்றும் அதில் பதித்திருக்கும் விலையுயர்ந்த கற்கள் இவற்றை கருத்தில் கொண்டு அவை உண்மையான ஆன்டிக் நகைகளா என்பதை அத்துறையில் பல வருடங்கள் அனுபவம் மிக்க நிபுணர்களால் மட்டுமே கண்டறிய முடியும்.

    * பாரம்பரிய வளையல்கள்:- திருமணங்கள், விழாக்கள் என்று வந்து விட்டால் பாரம்பரிய வடிவங்களில் வரும் வளையல்களையே பெண்கள் அணிந்து கொள்கிறார்கள். இவை நேர்த்தியான தோற்றத்தை தருகின்றன. வளையல் முழுவதும் பெரிய பெரிய ஒற்றை கற்களைப் பதித்தும், சிறிய கற்கள் இரண்டு மூன்று வரிசைகளாக பதித்தது போன்றும், ரூபி மற்றும் மரகத கற்கள் பதித்து பூக்கள் டிசைனிலும், வளைவு டிசைன்களிலும் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. மயில்கள் இரண்டு இணைந்தும் அன்னப்பறவைகள் இரண்டு இணைவது போலவும் வரும் வளையல்கள் இன்றளவும் பெண்களிடையே விரும்பி வாங்கப்படும் பாரம்பரிய வளையல்களாகும்.

    * கங்கணங்கள்:- இன்றளவும் யார் கையில் அணிந்திருந்தாலும் ஒரு நிமிடம் அவர்கள் கைகளை திரும்பி பார்க்கத் தூண்டுபவை கங்கன்கள் என்று சொல்லலாம். மணிக்கட்டில் அழகாகப் பொருத்தி பெரும்பாலும் திருகு கொண்டு இரண்டு முனைகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

    கம்பி வளையல்கள், பட்டை வளையல்கள், மெஷின் கட்டிங் வளையல்கள், கெட்டி வளையல்கள், முழுவதும் வைரம், ரூபி மற்றும் மரகதக்கற்கள் பதிக்கப்பட்ட வளையல்கள் முழுவதும் ரூபி மட்டுமே பதிக்கப்பட்ட வளையல்கள் முழுவதும் பச்சை மற்றும் வெள்ளைக்கற்கள் பதிக்கப்பட்ட வளையல்கள், முத்து வளையல்கள், பவள வளையல்கள், நவரத்தினம் பதித்த வளையல்கள், விலையுயர்ந்த வண்ணக்கற்கள் பதித்த வளையல்கள், அலுவலகம் செல்லும் பெண்கள் அணிவதற்கென்றே பிரத்யேகமாக வந்திருக்கும் வளையல்கள், சிமெட்ரிகல் வடிவ வளையல்கள் என்று வளையல் வகைகளை சொல்லி கொண்டே போகலாம்.

    இது போன்ற நகைகளை வாங்கும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய குறிப்புகள்:

    * நகையின் தரத்தை பரிசோதித்த பின்பு வாங்குவது சிறந்தது.

    * நகை வாங்கும் கடையானது நம்பிக்கையான கடையாகவும், மக்களின் நம்பிக்கையை பெற்ற கடையாகவும் இருக்க வேண்டும்.

    * ஹால்மார்க் நகைதானா என்பதை கடைக்காரரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள்.

    * அதே போல் வாங்கும் நகைகளை உபயோகப்படுத்தியபின் அதற்குரிய பெட்டிகளில் வைத்து எடுத்தால் அவை உடைந்து, வளைந்து போகாமல் வைத்து கொள்ள முடியும். குளிக்கும் பொழுது விலையுயர்ந்த நகைகளை கழற்றி வைத்து விட்டு குளித்தால் எண்ணெய், சோப்பு போன்றவை படியாமல் வைத்திருக்க முடியும். ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நகைகளை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
    கலாச்சார விழாக்கள், குடும்ப நிகழ்வுகள், திருமணம், பிறந்தநாள் விழா, கோவிலுக்குச் செல்லும் நிகழ்ச்சி என அனைத்திற்கும் அணிந்து செல்லக்கூடிய ஆடைகளின் வரிசையில் முதலிடத்தில் பட்டுப்பாவாடைகள் இருக்கின்றன.
    பட்டுத்துணிகளால் வடிவமைக்கப்படும் பாரம்பரியத் தென்னிந்திய உடை என்று இவற்றைச் சொல்லலாம். சிறிய பெண் குழந்தைகளுக்கும் பட்டுப் பாவாடைகளை அணிவித்து அழகு பார்ப்பது பொதுவாகவே தென்னிந்தியாவில் வழக்கமான ஒரு நிகழ்வாகும்.

    கலாச்சார விழாக்கள், குடும்ப நிகழ்வுகள், திருமணம், பிறந்தநாள் விழா, கோவிலுக்குச் செல்லும் நிகழ்ச்சி என அனைத்திற்கும் அணிந்து செல்லக்கூடிய ஆடைகளின் வரிசையில் முதலிடத்தில் பட்டுப்பாவாடைகள் இருக்கின்றன.

    முழுநீளப் பாவாடை மற்றும் ஸ்கர்ட் போன்றவை பட்டுத்துணிகளில் பெண் குழந்தைகளுக்காகத் தைக்கப்படும் பிரபலமான ஆடைகளாகும். பிறந்த குழந்தைகளுக்கு பட்டுப்பாவாடையை அணிவிக்க முடியாது என்பதால் பட்டுத்துணியை ப்ராக் பாணியில் தைத்து விற்பனை செய்கிறார்கள்.

    நடக்கும் வயதிலிருக்கும் குழந்தைகளுக்கும் பட்டுப் பாவாடை துணியாகவோ அல்லது ரெடிமேடாகவோ கிடைக்கின்றன. பட்டுப் பாவாடைகளுக்கு மேல் கையில்லாத குட்டைச் சட்டை அல்லது சோளி மற்றும் தாவணி அணிவதும் வழக்கத்தில் உள்ளது. முழுக்கை, முக்கால் கை மற்றும் குட்டைக் கைகளுடனும் சட்டைகளானது பட்டுப் பாவாடைகளின் மேல் அணிய்ப படுகின்றன. குழந்தைப் பருவம் முதல் திருமணமாகும் வரை பெண்கள் பட்டுப் பாவாடைகளை அணிகிறார்கள்.

    தமிழகத்தில் பட்டுப்பாவாடை என்ற பெயருடனும், கர்நாடகத்தில் லங்கா தாவணி என்றும், ஆந்திராவில் லங்காவோனி என்றும் மக்கள் இந்த ஆடையை அழைக்கிறார்கள்.

    அடர்த்தியான வண்ணங்களில் செல்ப் பார்டர்கள், கான்ட்ராஸ்ட் பார்டர்கள், பெரிய பார்டர், சின்ன பார்டர், பாவாடையின் புற த்தில் ஜரிகை புட்டாக்கள், பாவாடை முழுவதுமே ஜரிகைக் கோடுகள் அல்லது கட்டங்கள் என மிகவும் அருமையாக வடிவமைக்கப்படுகின்றன.

    அடர் பச்சை நிறத்திற்கு மெரூன் பார்டர், மாம்பல நிறத்திற்கு பச்சை பார்டர், சிவப்பு நிறத்திற்கு நீல வண்ண பார்டர், மயில் கழுத்து நிறத்திற்கு மெஜந்தா பார்டர், வெண் பட்டு நிறத்திற்கு சிவப்பு பார்டர், கத்தரிப்பு வண்ணத்திற்கு ஆரஞ்சு பார்டர் போன்றவை பட்டுப் பாவாடைகளில் காலம் காலமாக பிரபலமாக இருக்கும் நிறங்களாகும்.

    சமீப காலங்களில் இரண்டு மூன்று வண்ணங்கள் இணைந்து வருதும், மென்மையான வண்ணங்களுக்கு அடர்ந்த நிறத்தில் பார்டர்கள் வருவதும் பிரபலமாகி வருகிறது.

    பட்டுப் பாவாடை என்றாலே காஞ்சிபுரம் பட்டு என்பதுதான் நமக்கு முதலில் தோன்றும். அதுபோல் தர்மாவரம் பட்டு, இளம் பிள்ளைபட்டு, சிறு முகை பட்டு, பனாரஸ் பட்டுத் துணிகளிலும் பட்டுப் பாவாடைகளைத் தைத்து அணிகிறார்கள்.

    காஞ்சிப் பட்டில் இருப்பது போலவே பனாரஸ் பட்டிலும் பலவிதமான டிசைன்கள் உள்ளன. பூ டிசைன்கள், ஜ்யாமெட்ரிகல் டிசைன்கள், யானை, மான், அன்னம், மயில் என அனைத்தும் அழகான ஜரி வேலைப்பாட்டுடன் பாவாடைகள் அலங்கரிக்கின்றன.

    பட்டுப் பாவாடைகளின் பார்டர்கள் இரண்டு விரல் அகலத்திலிருந்து முழங்கால் வரை உயரமான பார்டர்களாகவும் கிடைக்கின்றன.

    கை நெசவு செய்யப்படும் பட்டுப் பாவாடைகளுக்கு தனி மவுசு என்றே சொல்லாலம்.

    ஆரி வேலைப்பாடு, ஜரி வேலைப்பாடு மற்றும் பாவாடைகளில் கற்கள் பதிப்பது, முத்துக்கள், ஜர்தோஸி வேலைப்பாடுகளுடனும் பட்டுப் பாவாடைகள் அணியப்படுகின்றன.

    பாவாடைகளுக்குத் தைக்கும் ஜாக்கெட்டுகளானது புது வித டிசைன்களுடன் அழகாக வடிவமைக்கப்படுகின்றன.

    “பட்டோலா பட்டு, சந்தேரி பட்டு, டிசைனர் பட்டு என பட்டுப் பாவாடைகளில் அட்டகாசமான கலெக்‌ஷன்கள் வந்துள்ளன.

    தென்னிந்தியப் பெண்களிடம் ஒரேயொரு பட்டுப் பாவாடைத் தாவணி செட் என்பது கட்டாயம் இருக்கும். பட்டுப் பாவாடைத் துணிகளை எடுக்கும் பொழுது அத்துடன் இணைந்த பட்டுச் சட்டைகளும் வருகின்றன.

    குட்டிப் பெண் குழந்தைகள் வண்ணமயமான பட்டுப் பாவாடைகளை அணிந்து கொண்டு தத்தித் தத்தி நடந்து செல்வது வண்ணத்துப் பூச்சியானது இங்கும் அங்கும் பறப்பது போலத் தோன்றுகிறது.

    பட்டுப் பாவாடைகளைத் தைப்பதிலும் பல புதிய பாணிகள் வந்து விட்டன.

    நாகரீக மாற்றங்கள் எவ்வளவு வந்தாலும் பட்டுச் சேலைகளும், பட்டுப் பாவாடைகளும் அணிந்து கொள்வதில் மாற்றம் இருக்காது.

    பட்டுப் பாவாடைகள் பராமரிப்பு:

    பட்டு பாவாடைகளை வெளியில் அணிந்து சென்று வந்த பிறகு கொடிகளில் காற்றாட உலர்த்த வேண்டும்.

    பட்டுப் பாவாடையை துவைப்பதாக இருந்தால் முதல் முறை ட்ரை வாஷ் கொடுப்பது நல்லது.

    வீட்டில் துவைப்பதாக இருந்தால் ஒரு பக்கெட் நீரில் மென்மையான ஷாம்புவைக் கலந்து அதை நுரை வரும்வரை கலந்து பின்பு பட்டுப் பாவாடையை அந்த நீரில் ஊற வைக்க வேண்டும். அதேபோல் இரண்டு மூன்று பாவாடைகள் அல்லது பாவாடைச் சட்டை இரண்டையும் ஒரே சமயம் ஊற வைக்காமல் தனித்தனியாக ஊற வைத்துத் துவைப்பது நல்லது.

    அதேபோல் பாவாடையையும் அதிக நேரம் வரை ஷாம்பூ நீரில் ஊற வைக்கக்கூடாது. பாவாடையை மிகவும் மென்மையாக கசக்கி பின்பு மற்றொரு தண்ணீர் நிரப்பிய பக்கெட்டுகளில் ஐந்தாறு முறை ஷாம்பூ நுரை போகும் வரை அலச வேண்டும்.

    மற்ற துணிகளை இறுக்கிப் பிழிவது போல் பட்டுப் பாவாடையை இறுக்கிப் பிழியக்கூடாது.

    சுருக்கம் இல்லாமல் நிழலில் பட்டுப் பாவாடையைக் காய வைக்க வேண்டும்.

    உலர்ந்த பட்டுப் பாவாடைகளை சாதாரணமாக மடித்து பருத்தித் துணிகளில் சுற்றி வைக்க வேண்டும்.

    எப்பொழுது பட்டுப் பாவாடையை உபயோகிக்கப் போகிறோமோ அப்பொழுது இஸ்திரி செய்வது நல்லது.
    சரியான மேக்கப் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கினால் மட்டும் போதாது. அவற்றை எந்த அளவில், எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிந்திருக்கவேண்டும்.
    பெண்கள் அழகை ஆராதிப்பவர்கள். அவசரமாக எங்கே கிளம்பிப்போனாலும், அதற்குள் ஒருமுறை கண்ணாடி முன்பு நின்று ‘முகத்தில் கிரீம் சரியாக பூசப்பட்டிருக்கிறதா? துல்லியமாக கண்மை இட்டு, பொட்டு பொருத்தமாக அமைந்திருக்கிறதா?’ என்றெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான், வெளியே கிளம்புகிறார்கள். எல்லாம் சரியாக இருந்தால்தான் முகத்தில் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் தவழும்.

    அழகில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அதைத் தேடி செல்லும்போது சில நேரங்களில் அபத்தங்களும் ஏற்படத்தான் செய்கின்றன. சில பெண்கள் முகத்திற்கான கிரீமை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். எது நன்றாக அமையுமோ அதை தேர்ந்தெடுத்துவிடலாமே என்று நினைப்பார்கள். ஆனால் எதுவும் சரியாக அமையாமல், இருக்கிற அழகையும் கெடுத்துக்கொள்வதுண்டு. சரியான மேக்கப் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கினால் மட்டும் போதாது. அவற்றை எந்த அளவில், எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிந்திருக்கவேண்டும். இளம் பெண்கள் ‘ஓவர் மேக்அப்’ செய்துவிட்டால் அதுவும் சரிவராது.

    கலரான பெண்களை பார்க்கும்போது நாமும் அதுபோல் ஆகவேண்டும் என்ற ஆசை சில பெண்களுக்கு ஏற்படும். அந்த ஆசை தவறானதல்ல. ஆனால் அதற்காக கடைப்பிடிக்கும் வழிமுறை தவறாகிவிடக் கூடாது. கலராக தோன்ற விரும்புகிறவர்கள் இளம் நிறத்திலான பவுண்ட்டேஷனை முகத்தில் நிறைய பூசிவிடுவார்கள். அந்த நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்களை பார்க்கும்போதுதான் அதிகம் பூசியிருப்பது தெரியவரும்.

    பவுண்ட்டேஷன் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை. சருமத்திற்கு பொருத்தமானதை பரிசோதனை செய்து பார்த்து வாங்கவேண்டும். கை மணிக்கட்டில் புரட்டிப்பார்த்து சோதிக்காமல், முகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பூசிப்பார்த்து வாங்குவதே சரியானது.

    சிலர் முகத்தில் நிறைய பவுடர் பூசிக்கொள்வார்கள். அது சிறிது நேரத்தில் முகத்தில் ஒட்டிக்கொள்ளும். எண்ணெய்த்தன்மை கொண்ட சருமம் உடையவர்கள்தான் முகத்திற்கு அதிகம் பவுடர் பூசுவார்கள். அளவுக்கு அதிகமாக பவுடர் பூசும்போது சருமம் வறண்டு, பார்க்க அழகற்றதாகிவிடும். காலப்போக்கில் இயல்பான ஜொலிப்பும் மங்கிவிடும். அதனால் பெண்கள் பவுடருக்கு பதில் காம்பாக்ட் பயன்படுத்தலாம்.

    இன்றைய இளம்பெண்கள் தங்கள் கண்களை அழகு படுத்துவதற்குதான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். முதலில் புருவத்தில் கவனம் செலுத்துகிறார்கள். புருவ முடிகள் எளிதாக ஒரு அமைப்புக்குள் வருவதில்லை. புருவ முடிகள் கட்டுக்குள் வராவிட்டால் புரோஷேப்பர், புரோ ஜெல், வாஸ்லின் போன்ற ஏதாவது ஒன்றை பயன்படுத்தி அதை சரிசெய்யலாம். வளர்ந்து நிற்கும் சிறிய ரோமங்களை ட்ரிம் செய்யவோ டீசர் மூலம் நீக்கவோ செய்யலாம். அடர்த்தியான புருவமாக இருந்தால் அதே நிறத்திலான ஐபுரோ பென்சில் மூலம் லைட் ஷேடு கொடுத்தால் போதும்.

    உதடுகள் இயற்கையிலே அழகு கொண்டவை. அதை பேரழகாக்க விரும்புகிறவர்கள் ஒரு சொட்டு லிப்குளோஸ் போட்டால் போதும். கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மேக்அப் செய்திருந்தால் உதடுகளுக்கு இளம் நிற லிப்குளோஸ் பொருத்தமாக இருக்கும். இளம் வயதுகொண்டவர்கள் கிளீயர் கோட் பூசி உதட்டு அழகை மேம் படுத்தலாம். லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறவர்கள் அதே ஷேடு கொண்ட லிப்லைனர் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அளவுக்கு உதடுகள் அமையும்.
    பெண்கள் விழாக்கள், பண்டிகைகளுக்கு நகைகளை அணிவதற்கு தோற்றம், செழிப்பு மற்றும் அந்தஸ்து ஆகியவை மட்டுமல்லாமல் பல நல்ல ஆரோக்கியமான காரணங்களும் கூறப்படுகின்றன.
    தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பல மரபுகளைக் கொண்டுள்ள நாடு என்ற கண்ணோட்டத்திலேயே இந்த உகம் முழுவதும் உள்ள மக்களால் இந்தியாவானது பார்க்கப்படுகிறது. இந்தியாவை அடையாளம் காண அதன் வாழ்க்கை முறை, ஆடைகள், உணவு, மொழிகள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஆபரணங்களும் ஒரு காரணமாகும்.

    இந்திய ஆபரணங்களானவை பாரம்பரியம் மிக்க ஆபரணங்கள், நவீன காலத்திய பலவிதமான வடிவமைப்பு மற்றும் பாணியைக் கொண்டுள்ள ஆபரணங்களாகும். இந்தியப் பெண்கள் விழாக்கள், பண்டிகைகள் மற்றும் சடங்குகள் என அனைத்திற்குமே நகைகளை அணிவதை விரும்புகிறார்கள். இவ்வாறு அவர்கள் நகைகளை அணிவதற்கு தோற்றம், செழிப்பு மற்றும் அந்தஸ்து ஆகியவை மட்டுமல்லாமல் பல நல்ல ஆரோக்கியமான காரணங்களும் கூறப்படுகின்றன.

    நாம் ஏன் நகைகளை அணிந்து கொள்கிறோம் என்று எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா? அறிவியல் ரீதியாக நிரூபணமாகாவிட்டாலும் மருத்துவ மற்றும் மன ரீதியாக நகைகள் அணிவதற்கு கூறப்படும் காரணங்களைப் பார்ப்போம்.

    காதணிகள்: காதுகளில் கம்மல்களை அணிந்து கொள்வதை ஆண், பெண் இருபாலருமே விரும்புகிறார்கள். பெண்கள் தோடுகள், தொங்கட்டான்கள், ஜிமிக்கிகள், வளையங்கள், பாலிகள் போன்ற வெவ்வேறு காதணிகளை அணிகிறார்கள். ஒரு காதில் மட்டும் தோடுகள் மற்றும் தொங்கட்டான்களை அணிந்து கொள்வது இன்றைய ஆண்மகன்களிடையே பிரபலமாக உள்ளது. சிலர் இரண்டு காதுகளிலும் கம்மல்களை அணிந்து கொள்கிறார்கள்.

    காது மடலிலிருந்து செல்லும் நரம்பானது நம் உடலின் சிறுநீரகம், மூளை மற்றும் கர்ப்பப்பை வாய் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை இணைக்கின்றன. இளவயதில் காது குத்தப்படுவதால் மூளை வளர்ச்சியானது மேம்படும் என்றும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என்றும், பெண்களின் மாதவிலக்கானது எந்தத் தடையுமின்றி ஆரோக்கியமானதாக இருக்குமென்றும், உயிரணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறதென்றும் வேதங்களில் குறிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    மூக்குத்திகள்: பெரும்பாலான இந்தியப் பெண்களின் மூக்கை அலங்கரிக்கும் மூக்குத்தியானது இந்தி மொழியில் நாத் அல்லது நாத்னி என்று அழைக்கப்படுகின்றது. வடஇந்தியப் பெண்கள் இடது மூக்கிலும், தென்னிந்திய பெண்கள் வலது மூக்கிலும் மூக்குத்தியை அணிந்து கொள்கிறார்கள். மூச்சு விடுவதைச் சீராக்குதல், காக்காய் வலிப்பு ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்ற மருத்துவ காரணங்களை மூக்கு குத்துவதால் ஏற்படும் நன்மைகளாகக் கூறுகின்றார்கள்.

    வளையல்கள்: வட்ட வடிவில் பெண்களின் கைககளை அலங்கரிக்கும் வளையல்கள் குறைந்தபட்சமாக ஒன்றிலிருந்து அதிகபட்சமாக டசன் கணக்கில் அணியப்படுகின்றன. கையின் மணிக்கட்டில் உடலின் துடிப்பு விதத்தை கூறும் நரம்பு ஒன்று உள்ளது. கைகளில் வளையல்கள் அணிவதால் அவை உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இந்தியப் பெண்கள் இரண்டு கைககளிலும் வளையல்கள் அணிவதற்கு இதுவும் ஒரு காரணமாக நம்பப்படுகின்றது.

    மோதிரங்கள்: ஆண், பெண் இருவருமே விரல்களில் மோதிரங்கள் அணிவதைப் பார்க்க முடியும். நம் உடலின் நரம்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவையாகும். நம் மோதிர விரலில் இருக்கும் நரம்பானது மூளை வழியாக இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த விரலில் உலோகத்தால் செய்யப்படும் மோதிரங்களை அணிவதால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் என்று நம்பப்படுகிறது.

    மாங்கல்யம்: திருமணத்தின் போது ஆண்கள், பெண்களின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டுவது இந்தியர்களிடையே வழக்கத்தில் உள்ள நிகழ்வாகும். மாங்கல்யமானது இதயத்திற்கு மேலே இருப்பதால் அவை உடலின் இரத்த ஓட்டத்தை நெறிப்படுத்த உதவுகின்றது. இந்தியத் திருமணங்களில் முக்கிய சடங்காக மாங்கல்யம் அணிவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

    கால் கொலுசுகள்: பெரும்பாலானவர்கள் வெள்ளியிலான கொலுசுகளையும், சிலர் தங்கத்தினாலான கொலுசுகளையும் அணிகிறார்கள். கணுக்கால்களில் அணியப்படும் கொலுசுகள் நடக்கும்பொழுது ஒலியை ஏற்படுத்துகின்றன. வெள்ளியானது ஒருநல்ல ஆற்றலை நம் உடலுக்குள் கடத்துகின்றது. குழந்தைகளின் கால்களில் அணியப்படும் கொலுசிலிருந்து எழும் ஒலியானது அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தும் எச்சரிக்கை மணியாகவும் விளங்குகிறது.

    மெட்டி: கால் விரல்களில் திருமணத்தின் அடையாளமாக பெண்கள் இவற்றை அணிகிறார்கள். கால் பாதத்தின் இரண்டாவது விரல்களில் பெரும்பாலும் மெட்டியானது அணியப்படுகின்றது. மெட்டியானது மாதவிடாய் சுழற்சியை வழக்கமானதாக்கி கருத்தரிக்கும் செயல்முறைக்கு உதவுகின்றது.

    நெத்திச்சுட்டி: பெண்களின் முன் நெற்றியை அலங்கரிக்கும் சுட்டிகள் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவுவதாக நம்பப்படுகின்றது.

    ஒட்டியாணம்: கர்தானி, கமர்பத் என்று அழைக்கப்படும் ஒட்டியாணங்கள் பெண்களின் இடுப்பை அலங்கரிக்கும் ஆபரணமாகும். வெள்ளியில் அணியப்படும் ஒட்டியாணங்கள் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுவதாக கூறப்படுகின்றது.

    வங்கிகள்: முழங்கைகளின் மேல் பகுதிகளில் உள்ள தசையை இறுக்கிப் பிடித்து வங்கிகள் அணியப்படுகின்றன. இவை கைகளின் இரத்த ஓட்டத்திற்கு உதவுவதோடு உடலின் எதிர்ப்பு சக்தியை சரியான அளவில் உருவாக்குவதற்கும் உதவுகின்றது. முன்பு பிரபலமாக இருந்த இந்த நகையானது இன்றைய பெண்களின் நாகரீக நகைகளில் ஒன்றாகி விட்டது.
    உடலுக்கு வெளியே தலைகளில் ஒட்டுண்ணி வகை பேன்களால் முடிகளுக்கு பாதிப்பு வந்தால், அதற்கான முறையான மருத்துவத்தை எடுத்து பிரச்சனையை சரி செய்யலாம்.
    முக்கியமாய் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள். இவர்களுக்கு தங்கள் முடியினை பராமரிக்கத் தெரியாது. அவர்கள் படிக்கும் பள்ளி மற்றும் பொது வெளிகளில் நெருங்கி அமர்ந்தே படிக்கவும், விளையாடவும் செய்வார்கள். குழுவாகவே இவர்கள் இருக்கும் காரணத்தால், பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாகவே இருக்கும்.

    முடி வளர்ச்சி அதிகமாக உள்ளவர்களுக்கும், கூந்தலை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கும் பேன் அதிகம் வரும் வாய்ப்புகள் உள்ளது. தலைமுடிகளில் ஈரம், பிசுபிசுப்பு, அழுக்கு போன்றவை சேர்ந்தால் கட்டாயமாக பேன் பரவும். நமது முடிகளில் அழுக்கு சேரச்சேர அந்த இடம் பேன்கள் வசிக்க ஏற்ற இடமாய் மிகவும் வசதியாய் பேன்களுக்கு அமைந்துவிடுகிறது.

    மேலும் ஒருவர் பயன்படுத்திய டவல், சீப்பு, ஹேர் பிரஷ் போன்றவற்றை எடுத்துப் பயன்படுத்தினாலும் அதன் வழியே பேன் ஒட்டிக்கொண்டு நமது முடிகளுக்குள் நுழைந்து விரைவாகப் பரவத் தொடங்குகிறது. ஒரே தலையணையில் அருகருகே தலை வைத்துப் படுப்பது, தலைகளை ஒட்டி வைத்து அருகருகே நெருங்கி அமருதல், ஒருவரின் ஹெட்போனை மற்றொருவர் பயன்படுத்துதல், ஒருவர் உடையினை மற்றொருவர் பயன்படுத்துதல், ஹேர் பேண்ட், ஹேர் க்ளிப். தலைப்பாகை, தொப்பி இவற்றின் வழியாகவும் பேன்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    பேன் தொல்லை அதிகமானால் சரிசெய்யும் முறை

    வயிற்றில் பூச்சியினால் பாதிப்பு வந்தால் நாம் மருந்து எடுத்துக்கொள்கிறோம். அதுபோல, உடலுக்கு வெளியே தலைகளில் ஒட்டுண்ணி வகை பேன்களால் முடிகளுக்கு பாதிப்பு வந்தால், அதற்கான முறையான மருத்துவத்தை எடுத்து பிரச்சனையை சரி செய்யலாம். இரண்டு வழிகளில் பேன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். பேன் தொல்லை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாக  இருந்தால் மருத்துவரை அணுகுவது. மற்றொன்று நாமாகவே இயற்கை முறையில் வீட்டில் மருத்துவம் செய்வது.

    * பேன் தொல்லை அதிகமாய் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு permethrin lotion எனும் ஆயின்மென்டையும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால் Phrethrins lotion எனும் ஆயின்மென்டையும் மருத்துவரின் ஆலோசனையில் மருந்துக்கடையில் வாங்கி  ஈரமுடியில் தடவி 10 நிமிடம் கழித்து அலசி சுத்தம் செய்ய வேண்டும்.

    * ஆலிவ் ஆயிலை முடிகளில் படுமாறு தடவி, காற்றுபுகா வண்ணம் பாத் கேப் கொண்டு(bath cap) கவர் செய்தால், முடியை விடாமல் இறுகப் பற்றி, ஒட்டியிருக்கும் முட்டைகளின் பிடிமானத்தை ஆலிவ் ஆயில் தளர்த்தி வெளியே கொண்டு வரும்.

    * எலுமிச்சைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் சம அளவில் எடுத்து, பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு தடவி பாத் கேப்பில் கவர் செய்துவிட்டால், அதன் வாடை தாங்காமல், முடியினை அலசும்போது பேன்கள் தானாகவே வெளியேறும்.

    * துளசி இலைப் பொடி, மருதாணி பூவின் பொடி, வசம்பு பொடி, வேப்பம்பூ பொடி, வேப்பங் கொட்டைப் பொடி, சீத்தாபழக் கொட்டை பொடி இவற்றில் ஏதாவது ஒன்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து முடிகளில் தடவி வெளியேற்றலாம்.

    * அதேபோல் வெள்ளை மிளகுடன் பால், காட்டு சீரகத்துடன் பால் இவற்றில் எளிதாய் கிடைக்கும் ஒன்றைத் தலையில் தடவி பாத் கேப் பயன்படுத்தி கவர் செய்து, ஒரு மணி நேரத்தில் அலசி சுத்தம் செய்து பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    * லிஸ்டரின் மவுத் வாஷ் கொஞ்சமாக எடுத்து தலையில் தடவி ஒரு மணி நேரத்தில், ஆப்பிள் சிடர் வினிகரை போட்டு முடியினை அலசினாலும் பேன் தொல்லை குறையும்.

    * ஹேர் டிரையரின் வெப்பத்திலும் பேன்கள் குறைய வாய்ப்பு உண்டு.

    பேன்களே வராமல் தடுப்பது எப்படி?

    * கூந்தல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் மட்டும் போதாது, சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

    * பேன் தொல்லை அதிகம் இருப்பவர்கள், மேலே குறிப்பிட்ட இயற்கை முறைகளில் ஏதாவது ஒன்றினை அடிக்கடியும், குறைவாக இருப்பவர்கள் மாதம் இருமுறையும் எடுப்பது நல்லது.

    * முடியினை அடிக்கடி பேன் சீப்பு கொண்டு சீவி சுத்தம் செய்தல் வேண்டும்.
    அதிக வெப்பம் கொண்ட காலத்தில் சருமம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. தேவையான அளவு தண்ணீர் பருகுவது, கோடைக்கேற்ற குளிர்ச்சியான உணவுமுறை, மிதமான உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
    பருவ கால மாற்றங்களின் போது உடலில் அதிக அளவு பாதிக்கப்படுவது சருமம் தான். அதிக வெப்பம் கொண்ட காலத்தில் சருமம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. தேவையான அளவு தண்ணீர் பருகுவது, கோடைக்கேற்ற குளிர்ச்சியான உணவுமுறை, மிதமான உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். அவை தவிர சருமத்தில் பூசப்படும்  பேஸ்பேக், மாஸ்க் பழங்களை கொண்டு பேஸ்பேக் தயாரித்து பயன்படுத்துவது நல்ல பலன்களை அளிக்கிறது. சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் சில குறிப்புகள்...

    வெள்ளிரி மற்றும் பால் பேக்

    ஒரு சிறிய அளவு வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிச்சியில் போட்டு அதனுடன் 50 மிலி பால் மற்றும் 1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த விழுதை முகத்தில் பூசி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

    வெள்ளிக்காயின் சாறு சரும பாதிப்புகளை குணமாக்குகிறது. மற்றும் வெயிலால் கருத்த சருமத்தை அதன் இயல்பு நிலைக்கு திரும்ப செய்கிறது. இந்த பேஸ்பேக் சருமத்துக்கு புத்துணர்வை அளித்து வறட்சி ஏற்படுத்தாமல் மென்மையாக பராமரிக்க உதவுகிறது.

    மாம்பழ மற்றும் தயிர் பேக்

    நன்குபழுத்த மாம்பழத்தின் சதைப்பகுதியை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன்  2 டீஸ்பூன் கெட்டியான தயிர் சேர்த்து நன்கு குழைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை காத்திருந்த பின்னர் முகத்தை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

    மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ சத்துக்கள் புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தை காக்கின்றன. சருமத்தின் இயல்பான தன்மையை மீட்க உதவுகின்றன. முகப்பரு ஏற்படாமல் தடுக்கின்றன. தயிரிலுள்ள லாக்டிக் ஆசிட் சருமத்தை மென்மையாக்குகிறது.

    தக்காளி பேக்

    2 டீஸ்பூன் தக்காளி சாறுடன், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கெட்டியான கலவையாக தயார் செய்யவும். இந்த கலவையை முகத்தில் பூசிவிட்டு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவலாம்.

    தக்காளியில் நிறைய உயிர்சத்துக்களும், வைட்டமின் சியும் உள்ளன. அதிலுள்ள அஸ்கார்பிக் ஆசிட் எனும் ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தின் துளைகளுக்குள் பரவி சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.

    நெல்லிக்காய் தயிர் பேக்

    2 டீஸ்பூன் அரைத்த நெல்லிக்காய் விழுதுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும். இந்த கலவை நன்றாக உலர்ந்ததும் முகத்தை கழுவவும்.

    நெல்லிக்காய் சருமத்தில் கொலாஜின் உற்பத்தியை அதிகரித்து இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சருமத்தின் தளர்ச்சியை அகற்றி அதன் இயல்பான நிலைக்கு மாற்றவும் உதவுகிறது.
    கோடை வெயிலின் உக்கிரத்தில் இருந்து சருமத்தை காப்பதற்கு சன் ஸ்கிரீனை நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் ரசாயன கலப்பு இருக்கிறது. அதை விரும்பாதவர்களுக்கு இயற்கை சன்ஸ்கிரீனாக அமைந்திருக்கிறது, திராட்சை.
    கோடை வெயிலின் உக்கிரத்தில் இருந்து சருமத்தை காப்பதற்கு சன் ஸ்கிரீனை நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் ரசாயன கலப்பு இருக்கிறது. அதை விரும்பாதவர்களுக்கு இயற்கை சன்ஸ்கிரீனாக அமைந்திருக்கிறது, திராட்சை. சமீபத்திய ஆய்வில், புற ஊதாக்கதிர் வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு திராட்சை உதவும் என்பது தெரியவந்துள்ளது.

    பெரும்பாலும் திராட்சை ஒயின் தயாரிப்புக்குத்தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. திராட்சையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கனிமங்கள், வைட்டமின்கள் நிறைய இருக்கின்றன.

    தற்போது திராட்சையில் உள்ள வைட்டமின்கள், ‘ஆற்றல்மிக்க சன்ஸ்கிரீன் போன்று செயல்படுவதாக' கண்டறியப்பட்டுள்ளது. புற ஊதாக்கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாப்பதோடு சருமத்தில் இளமைத் தோற்றத்தை தக்கவைக்கவும் பயன்படுவதாக ஆய்வு கூறுகிறது.

    இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், திராட்சையில் இயற்கையான பாலிபினால்கள் அதிகம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அது சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் எதிர்ப்பு பண்புகளை கொண்டது என்கிறது அந்த ஆய்வு.

    இந்த ஆய்வு, பர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டிருக்கிறது. திராட்சையில் உள்ள பொருட்கள் புற ஊதா கதிர்கள் உமிழும் ஒளி சேதத்திற்கு எதிராக பாதுகாப்பு வழங்குமா? என்பதை மையப்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இறுதியில் திராட்சை பழத்தை உட்கொள்வதன் மூலம் புற ஊதா கதிர்கள் மூலம் ஏற்படும் வெளிப்புற சரும சேதத்தை குறைக்க முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.

    இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரி கிரேய்க் எல்மெட்ஸ் கூறுகையில் ‘‘திராட்சையில் ஒரு குறிப்பிடத்தக்க ஒளிச்சேர்க்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். மேலும் அதில் சருமத்திற்கு நன்மை சேர்க்கும் பலவிதமான மூலக்கூறுகள் இருப்பதையும் அடையாளம் கண்டிருக்கிறோம். திராட்சை நம்மால் உண்ணக்கூடிய சன்ஸ்கிரீனாக செயல்படும். எனவே சூரிய கதிர்களால் ஏற்படும் சரும சேதம் உள்ளிட்ட பல உடலியல் பிரச்சினைகளுக்கு திராட்சை பயனுள்ளதாக அமையும். அதனால் ஆரோக்கியத்தை விரும்புகிறவர்கள் திராட்சையை உண்ணலாம்’’ என்கிறார்.
    ஆண்கள் கோட்-ஷூட் அணிந்து கொள்வதைவிட இந்தியப் பாணியில் இருக்கும் ஷெர்வானிகளை அணிந்து கொள்வதில் மிகவும் விருப்பம் காட்டுகிறார்கள் என்றே சொல்லலாம்.
    வட இந்தியாவில் திருமணத்தன்று அணியும் ஷெர்வானிகளை தென்னிந்திய ஆண்கள் தங்களது வரவேற்பு நிகழ்ச்சியன்று அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். கோட்-ஷூட் அணிந்து கொள்வதைவிட இந்தியப் பாணியில் இருக்கும் ஷெர்வானிகளை அணிந்து கொள்வதில் மிகவும் விருப்பம் காட்டுகிறார்கள் என்றே சொல்லலாம்.

    ஆச்ச்கன் ஷெர்வானி

    பேஷன் உலகில் மிகச்சிறந்த பாணியாகத் திகழ்கின்ற ஆடைகளில் இவ்வகை ஷெர்வானியும் ஒன்று எனலாம். அதனால்தான், இவ்வளவு பிரபலமான ஆச்ச்கன் ஷெர்வானிகளை தங்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளின்போது அணிந்து கொள்ள ஆண்கள் விரும்புகிறார்கள். சுரிதார் ஃபேண்ட்கள், டோத்தி இவற்றுடன் ஷெர்வானியின் மேல் ஜாக்கெட்டும் அணிந்தால் அது மிகவும் அற்புதமான தோற்றத்தைத் தரும் பாணியாக இருக்கும்.

    சிப்கன் ஸ்டைல் ஷெர்வானி

    சமகால சகாப்தத்தில், ஒருவித ராஜ தோற்றத்தைப் பிரதிபலிக்கும் பாணியில் அமைந்த ஷெர்வானி இவை. முகலாய அரச மற்றும் ஆட்சியாளர்கள் அணிந்திருந்த ஆடையின் பிரதிபலிப்பு இவ்வகை ஷெர்வானி என்றும் சொல்லலாம். பெரிய மணிமாலைகள், ஹாரங்களுடன் டர்பனும் (தலைப்பாகை) அணிந்து கொண்டால் ராஜகளை என்பது அடுத்தவர் சொல்லாமலேயே வந்துவிடும்.

    அங்ரகா ஷெர்வானி

    உடலைப் பாதுகாப்பது என்ற பொருள்படும் இவ்வகை ஷெர்வானிகள். கட்டுமஸ்தான உடலமைப்பைப் பெற்றுள்ள ஆண்கள் தங்களது தோற்றத்தை முன்னிலைப்படுத்த விரும்பும்போது அவர்கள் தேர்ந்தெடுப்பது இவ்வகை அங்ரகா ஷெர்வானிகள் என்றே சொல்லலாம். கழுத்து, காலர் மற்றும் கை போன்ற இடங்களில் மணிகள் மற்றும் கண்ணாடிகளைக் கொண்டு சிறந்த வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இவ்வகை ஷெர்வானிகளை அணியும்பொழுது வேறு எந்த நகைகளையும் அணிய வேண்டிய அவசியம் இல்லை.

    நவீன பிரிண்ட் ஷெர்வானி

    பல்வேறு வடிவங்கள் மற்றும் கலைப்படைப்புகளுடன் சமகால வடிவமைப்புகளின் சரியான கலவை இவ்வகை அச்சிடப்பட்ட ஷெர்வானிகளாகும். உடுத்தும் ஆடையில் செழிப்பான தோற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் இவ்வகை ஷெர்வானிகளை நிச்சயம் விரும்புவார்கள். அச்சிடப்படும் உருவத்தின் சரியான தோற்றத்தை வெளிப்படுத்த மிகவும் தரமான பொருட்களைப் பயன்படுத்துவது இவ்வகை ஷெர்வானிகளின் மற்றொரு சிறப்பம்சம் எனலாம்.

    பாகிஸ்தானி ஷெர்வானி

    இந்தியத் திருமணங்களில் ஒரு தனித்துவமான இடத்தை இவ்வகை ஷெர்வானிகள் பிடித்துள்ளன. அழகு, கச்சு வேலை மற்றும் கண்களைக் கவரும் நிறம் இவற்றிற்காகவே இவ்வகை ஷெர்வானிகள் மணமகன் மட்டுமல்லாமல் பிற ஆண்களும் பல்வேறு விழாக்களுக்கும் அணிந்து கொள்ள பெரிதும் விரும்புகிறார்கள்.

    ஜோத்பூரி ஷெர்வானி

    இன்றளவும் இந்திய அரச குடும்பத் திருமணங்களில் இவ்வகை ஷெர்வானிகள் கட்டாயம் அணியப்படுகின்றன. இவ்வகை ஷெர்வானிகளை வடிவமைப்பவர்கள் மிகுந்த அனுபவம் வாய்ந்தவராகவே இருக்க முடியும். இவ்வகை ஷெர்வானிகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் மிகக் குறைந்த அளவிலேயே இவை தயாரிக்கப்படுகின்றன.

    ஜாக்கெட் பாணி ஷெர்வானி

    டஸ்ஸர், பட்டு மற்றும் பனாரஸ் துணிகளில் பழங்காலத் தோற்றத்தைத் தரும் வகையில் தங்கப்பூச்சு மற்றும் ஜிகினா வேலைப்பாடுகளுடன் ஒரு இளவரசர் போன்ற தோற்றத்தைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டவை இவ்வகை ஷெர்வானிகள்.

    அனார்கலி ஷெர்வானி

    இந்தியாவின் கடுஞ் சிக்கலான வேலைப்பாட்டிற்கு மிகச்சிறந்ததாக அமைந்த மற்றொரு உதாரணம் இவ்வகை ஷெர்வானிகள். சுல்தான் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் ஷெர்வானிகள் இவை.

    இந்தோ-வெஸ்டர்ன் ஷெர்வானி

    இந்திய-மேற்று பாணியின் கலவையாக நவீனத்துவத்தின் தொடுதலுடன் சமநிலையில் இருக்கும் இளைஞர்களின் விருப்பத்தைத் தோற்றுவிக்கும் புதுவிதமான ஷெர்வானி இவை எனலாம்.

    ஷெர்வானி இல்லாமல் திருமண நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள் முழுமையடையாது என்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் நாம்.
    தினமும் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவுவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள். முகத்தை சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் பேஸ் வாஷ் கிரீம் பயன்படுத்துவது நல்லதல்ல.
    ‘‘அடிக்கடி முகம் கழுவுவது நல்லதல்ல’’ என்கிறார்கள் சரும நோய் மருத்துவர்கள். சருமம் எண்ணெய்த்தன்மை கொண்டதாக இருந்தால் தினமும் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவுவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள். காலையில் எழுந்ததும் பற்களை சுத்தம் செய்த பிறகு முகத்தை தண்ணீரில் கழுவுவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. அது அவசியமானது. சரும துளைகளை சுத்தம் செய்து புத்துணர்ச்சியை கொடுக்கும்.

    எண்ணெய் மயமான சருமத்தை கொண்டவர்கள் பிற்பகலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அது புத்துணர்வை கொடுக்கும். மேலும் முகத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய்பசையை நீக்கவும் உதவும். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் முகத்தை கழுவ வேண்டியதும் அவசியம். அது சோர்வை நீக்கி முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும்.

    முகத்தை சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் பேஸ் வாஷ் கிரீம் பயன்படுத்துவது நல்லதல்ல. அதில் இருக்கும் ரசாயன பொருட்கள் சருமத்தின் மென்மையையும், இயற்கையான பளபளப்பையும் நீக்கிவிடும். முகம் எண்ணெய் பசைமிக்கதாக இருந்தால் டோனர் பயன்படுத்தி முகத்தை கழுவலாம். சென்சிட்டிவ்வான சருமமாக இருந்தால் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பையும் பயன்படுத்தலாம். முகத்தை அதிக நேரம் கழுவவோ, துடைக்கவோ கூடாது.
    மாய்ஸ்சுரைசர் சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. இருப்பினும் மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.
    பெரும்பாலானோர் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்வதற்காக மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துகிறார்கள். அவை சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. இருப்பினும் மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.

    மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தும்போது அவை சருமத்தில் முழுமையாக உறிஞ்சப்பட வேண்டும். சருமத்திற்குள் ஊடுருவுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளவும் கூடாது. மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது உருவாகும் கூடுதல் ஈரப்பதம் சருமத்திற்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக சரும செல்கள் பலவீனமடையும். சரும துளைகள் முழுவதும் அடைபடும் அபாயமும் உண்டாகும். அதனால் முகப்பரு மற்றும் வறண்ட சரும பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடலாம்.

    மேலும் தேவைக்கு அதிகமாக மாய்ஸ்சுரைசரை உபயோகிக்கும்போது சருமம் புத்துணர்ச்சியை இழந்துவிடும். சோர்வு எட்டிப்பார்க்கும். சருமத்தில் தென்படும் ஒருசில அறிகுறிகளை கொண்டே மாய்ஸ்சுரைசரை அதிகம் தடவி இருப்பதை அறிந்து கொள்ளலாம். சருமத்தில் கருப்பு புள்ளிகள் தென்படுவது, சரும துளைகள் அடைப்பட்டிருப்பது, அதிக எண்ணெய் பசைத்தன்மை தென்படுவது, சருமத்தில் புள்ளிகள், தடிப்புகள் எட்டிப்பார்ப்பது, இறந்த செல்கள் வெளிப்படையாக தெரிவது போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். மாய்ஸ்சுரைசரை அதிகம் தடவும்போது சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்களும் தோன்றும். அதனை பயன்படுத்திய பிறகு முகத்தில் ஏதேனும் மேக்கப் பொருட்களை பயன்படுத்தினால் அது சருமத்தில் ஒட்டிக்கொள்ளாது.

    மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது அதில் இருக்கும் அதிக ஈரப்பதம் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரித்துவிடும். மேலும் முகத்தின் இயற்கையான அழகை குறைத்துவிடும். ஒப்பனை செய்யும்போது அது சரியாக சருமத்தில் கலப்பதற்கும் அனுமதிக்காது. முகத்தில் புள்ளிகள், திட்டுகளை ஏற்படுத்தும். மாய்ஸ்சுரைசரை சரியான அளவில் பயன்படுத்தினால் மட்டுமே குளிர்காலத்தில் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க முடியும். மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கான சரியான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

    * பட்டாணி அளவிலோ அல்லது அதை விட சற்று அதிகமாகவோ மாய்ஸ்சுரைசரை எடுத்து உள்ளங்கையில் நன்றாக தேய்த்து கைகளை சூடாக்க வேண்டும். பின்பு கன்னங்களில் வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். பிறகு நெற்றி, தாடை பகுதியில் தடவ வேண்டும். கழுத்தில் தேய்க்கும்போது கீழிருந்து மேல்நோக்கி தடவ வேண்டும்.

    * காலையில் எழுந்ததும் முகம் கழுவிய பிறகு லேசாக டவலில் துடைத்துவிட்டு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே சருமம் ஈரப்பதமாக இருப்பதால் அதிக அளவில் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு அது வழிவகுக்கும்.

    * இரவில் தூங்க செல்வதற்கு முன்பும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண் டும். அது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும்.

    * சருமம் ஏற்கனவே வறண்டு போய் இருந்தால் அதற்கேற்ப மாய்ஸ்சுரைசரை சற்று அதிகமாக பயன்படுத்தலாம். ஆனால் சருமம் எண்ணெய் தன்மையுடன் இருந்தால் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

    * வாரத்திற்கு ஒரு முறை இறந்த செல்களை அகற்றவும் வேண்டும். இதனால் சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு மாய்ஸ்சுரைசரை சரியாக செயல்பட வைக்கும். இதன் மூலம் தேவையற்ற சரும பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
    ×