search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மனதை கவரும் வளையல்கள்
    X
    மனதை கவரும் வளையல்கள்

    வளையோசை கல கலவென.... மனதை கவரும் வளையல்கள்....

    வளையல்கள் வட்ட வடிவமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லாமல் பல அற்புதமான வடிவங்களில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட வளையல்களை பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.
    பெண்களால் விரும்பி அணியப்படும் அணிகலன்களில் முக்கியமான இடத்தை பிடிப்பவை வளையல்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வளையல்கள் வட்ட வடிவமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லாமல் பல அற்புதமான வடிவங்களில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட வளையல்களை பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள். பதினெட்டு, இருபத்திரெண்டு மற்றும் இருபத்தி நான்கு கேரட் தங்கத்தில் வளையல்கள் தயாரிக்கப்படுகின்றன.

    * கடாஸ்:- இவ்வகை வளையல்கள் மிகவும் சிக்கலான வடிவம் மற்றும் பாணியில் மிகவும் அழுத்தமாகவும், உறுதியாகவும் இருப்பது போல் தயாரிக்கப்படுகின்றன. இவை முழுவதுமே தங்கத்தால் மட்டுமல்லாம் வைரம், ரூபி, புஷ்பராகம், முத்து மற்றும் எமரால்டு போன்ற விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு பார்வைக்கு கம்பீரமான தோற்றத்தை தருவதாகவும் பாரம்பரிய மற்றும் நவநாகரீக பாணியின் கலவையாகவும் காட்சியளிக்கின்றன.

    * பழங்கால வளையல்கள்:- இவ்வகை வளையல்கள் அணிவதையே பெருமையாகவும் கெளரவமாகவும் நினைக்கும் பெண்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. பழங்கால ஆன்டிக் வளையல்களின் விலையானது மிக மிக அதிகம் என்பதால் அதைப்போலவே ஆன்டிக் வளையல்களை மிகவும் திறமையான பொன்நகை கைவினைக்கலைஞர்களை கொண்டு இப்பொழுது மிகப்பெரிய நகைக்கடைகள் தயாரித்து விற்பனை செய்கின்றன. பழங்கால வளையல்களின் வடிவமைப்பு வேலைப்பாடு மற்றும் அதில் பதித்திருக்கும் விலையுயர்ந்த கற்கள் இவற்றை கருத்தில் கொண்டு அவை உண்மையான ஆன்டிக் நகைகளா என்பதை அத்துறையில் பல வருடங்கள் அனுபவம் மிக்க நிபுணர்களால் மட்டுமே கண்டறிய முடியும்.

    * பாரம்பரிய வளையல்கள்:- திருமணங்கள், விழாக்கள் என்று வந்து விட்டால் பாரம்பரிய வடிவங்களில் வரும் வளையல்களையே பெண்கள் அணிந்து கொள்கிறார்கள். இவை நேர்த்தியான தோற்றத்தை தருகின்றன. வளையல் முழுவதும் பெரிய பெரிய ஒற்றை கற்களைப் பதித்தும், சிறிய கற்கள் இரண்டு மூன்று வரிசைகளாக பதித்தது போன்றும், ரூபி மற்றும் மரகத கற்கள் பதித்து பூக்கள் டிசைனிலும், வளைவு டிசைன்களிலும் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. மயில்கள் இரண்டு இணைந்தும் அன்னப்பறவைகள் இரண்டு இணைவது போலவும் வரும் வளையல்கள் இன்றளவும் பெண்களிடையே விரும்பி வாங்கப்படும் பாரம்பரிய வளையல்களாகும்.

    * கங்கணங்கள்:- இன்றளவும் யார் கையில் அணிந்திருந்தாலும் ஒரு நிமிடம் அவர்கள் கைகளை திரும்பி பார்க்கத் தூண்டுபவை கங்கன்கள் என்று சொல்லலாம். மணிக்கட்டில் அழகாகப் பொருத்தி பெரும்பாலும் திருகு கொண்டு இரண்டு முனைகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

    கம்பி வளையல்கள், பட்டை வளையல்கள், மெஷின் கட்டிங் வளையல்கள், கெட்டி வளையல்கள், முழுவதும் வைரம், ரூபி மற்றும் மரகதக்கற்கள் பதிக்கப்பட்ட வளையல்கள் முழுவதும் ரூபி மட்டுமே பதிக்கப்பட்ட வளையல்கள் முழுவதும் பச்சை மற்றும் வெள்ளைக்கற்கள் பதிக்கப்பட்ட வளையல்கள், முத்து வளையல்கள், பவள வளையல்கள், நவரத்தினம் பதித்த வளையல்கள், விலையுயர்ந்த வண்ணக்கற்கள் பதித்த வளையல்கள், அலுவலகம் செல்லும் பெண்கள் அணிவதற்கென்றே பிரத்யேகமாக வந்திருக்கும் வளையல்கள், சிமெட்ரிகல் வடிவ வளையல்கள் என்று வளையல் வகைகளை சொல்லி கொண்டே போகலாம்.

    இது போன்ற நகைகளை வாங்கும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய குறிப்புகள்:

    * நகையின் தரத்தை பரிசோதித்த பின்பு வாங்குவது சிறந்தது.

    * நகை வாங்கும் கடையானது நம்பிக்கையான கடையாகவும், மக்களின் நம்பிக்கையை பெற்ற கடையாகவும் இருக்க வேண்டும்.

    * ஹால்மார்க் நகைதானா என்பதை கடைக்காரரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள்.

    * அதே போல் வாங்கும் நகைகளை உபயோகப்படுத்தியபின் அதற்குரிய பெட்டிகளில் வைத்து எடுத்தால் அவை உடைந்து, வளைந்து போகாமல் வைத்து கொள்ள முடியும். குளிக்கும் பொழுது விலையுயர்ந்த நகைகளை கழற்றி வைத்து விட்டு குளித்தால் எண்ணெய், சோப்பு போன்றவை படியாமல் வைத்திருக்க முடியும். ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நகைகளை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
    Next Story
    ×