என் மலர்
அழகுக் குறிப்புகள்
- பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது பட்டு புடவைக்கு தான்.
- பட்டுப்புடவையில் இருக்கும் சின்ன சின்ன கறைகளை எப்படி சுலபமாக சுத்தப்படுத்துவது என்று பார்க்கலாம்.
நம் பாரம்பரிய உடையான புடவையிலே பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது இந்த பட்டு புடவைக்கு தான். பெண்கள் நகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, அதிகமாகவே இந்த பட்டுப் புடவைகளுக்கு கொடுப்பார்கள். அதிலும் கல்யாண பட்டு என்றால் அவர்கள் ஆயிசுக்கும் அதை பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். அப்படி பராமரித்து பாதுகாக்க வேண்டிய பட்டுப் புடவையில் கறை படிந்து விட்டால், அதை சுத்தம் செய்வது பெரும் வேலை.நம் வீட்டிலேயே சுலபமாக அந்த கறைகளை நீக்கிவிடலாம்.
பட்டுப்புடவையில் இருக்கும் சின்ன சின்ன கறைகளை எப்படி சுலபமாக சுத்தப்படுத்துவது என்று பார்க்கலாம்.
ஒரு பவுலில் குளிர்ந்த நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மையில்டான ஷாம்பு கலந்து பட்டுப் புடவையில் கறைகள் இருக்கும் இடத்தை மட்டும், இந்த பவுலில் இருக்கும் தண்ணீரில் முக்கி எடுத்து லேசாக கசக்கினாலே போதும் கறை நீங்கி விடும். இதனால் ஓரிடத்தில் இருக்கும் சாயம் மற்ற இடத்திற்கு மாறாது அதே நேரத்தில் துணியில் உள்ள கறையும் மாறாமல் இருக்கும்.
பட்டுப் புடவையை பராமரிப்பதில் உள்ள முக்கியமான பிரச்சனை புடவையில் பட்டு விடும் எண்ணெய் கறை தான். அந்த கறைகளை போக்க கறை இருக்கும் இடத்தில் முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை கொட்டி, ஒரு மெல்லிய காட்டன் துணி வைத்து லேசாக தேய்த்துக் கொடுங்கள். எண்ணெய் கறையை மொத்தமும் அந்த பவுடர் எடுத்துக் கொள்ளும். அதன் பிறகு புடவையில் அந்த பவுடரின் கறை தெரியும். அதற்கு குகுளிர்ந்த நீரில் காட்டன் துணியை நனைத்து பவுடர் கறை இருக்கும் இடத்தில் லேசாக துடைத்து விடுங்கள். காய்ந்த பிறகு புடவையில் எண்ணெய் கறையும் இருக்காது, பவுடர் கறையும் மறைந்து விடும்.
பட்டுப் புடவையில் விடாப்பிடியான கறைகள் இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். அதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கிளிசரின். பட்டுப்புடவையில் கறை இருக்கும் பகுதியின் அடியில் ஒரு வெள்ளை அட்டையை வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கறை இருக்கும் இடத்தில் மட்டும் இந்த கிளிசரனை பட்ஸ் வைத்து லேசாக தேய்த்து விடுங்கள். கறை இருக்கும் இடத்தில் மட்டும் தான் இந்த கிளிசரினை தடவ வேண்டும். துடைக்கும் போதே கறைகள் வந்து விடும் மிகவும் அழுத்தி துடைக்க கூடாது. கறை மொத்தமும் வந்த பிறகு, குளிர்ந்த தண்ணீரில் காட்டன் துணியை நனைத்து கிளிசரின் வைத்து துடைத்து இடத்தில் துடைத்து விட வேண்டும். இதுவும் கண்டிப்பாக செய்ய வேண்டும். கிளிசரணை மட்டும் வைத்து துடைத்து விட்டு விட்டால் கிளிசரின் கம் போல இருக்கும் அது புடவையில் பிடித்துக் கொண்டு புடவை பார்க்க நன்றாக இருக்காது. இந்த கிளிசரின் வைத்து துடைக்கும் முறையை மட்டும் கவனமாக செய்ய வேண்டும். இது அதிகமாகவும் சேர்த்து விடக் கூடாது அதே நேரத்தில் அதிகமாக சாயம் போக கூட புடவையில் இதை தேய்க்கும் முன்பு ஒரு முறை லேசாக தொட்டு பரிசோதித்து விட்டு அதன் பிறகு செய்து கொள்ளுங்கள்.
பட்டுப்புடவையில் எதிர்பாராமல் காபி, டீ, வேறு ஏதாவது கறை பட்டால் கவலைப்படவேண்டாம். பொராக்ஸ்பவுடரை தண்ணீரில் கரைத்து பட்டுப்புடவையை கொஞ்சநேரம் ஊறவைத்துவிட வேண்டும். பின்னர் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரில் துணியை அலசி பிழியாமல் புடவையிலுள்ள தண்ணீரை வடியவிட்டு காயவிட்டால் புடவையில் இருந்த கறை காணாமல் போய்விடும்.
- லேசர் சிகிச்சை என்பது என்னவென்று பலருக்கு தெரியவில்லை.
- நமது வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
நமது தினசரி உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை, நவீன தொழில்நுட்பங்கள் முதலியவை பலவிதமான தீமைகளை விளைவிக்கின்றது. இன்று பெரும்பாலான பெண்களின் முகம் மற்றும் சருமத்தில் அதிக முடிவளர்ச்சியோடு காணப்படுவதால், சமுதாயத்தில் தன்னம்பிக்கையை அவர்கள் இழந்து தங்களது சுயதிறமைகளை வெளியுலகத்திற்கு வெளிப்படுத்த இயலாமல் பின்னிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய முடிவளர்ச்சி ஹார்மோன் ஏற்றத்தாழ்வினால் தேவையற்ற முடிவளர்ச்சி பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனை தடுக்கலாமா?, குறைக்கலாமா? என்று சந்தேகமும், அச்சமும் பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆம்! நிச்சயமாக இதிலிருந்து ஒரு விடுதலை பெறமுடியும். டயோட் லேசர் சிகிச்சை எனப்படும் நவீன தொழில்நுட்பம் வாயிலாக தேவையற்ற முடியை அகற்ற முடியும்.
லேசர் சிகிச்சை என்பது என்னவென்று பலருக்கு தெரியவில்லை. இந்த லேசர் கதிர் என்பது சருமத்தில் உள்ள மெலானின் எனப்படும் குறிப்பிட்ட க்ரோமாபோரிளை தாக்கி அதனை செயலிழக்க செய்கிறது. இதனால் முடிவளர்ச்சி மற்றும் புதிய முடி வளர்வதில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் சாதாரண திசுக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதனை எத்தனை அமர்வுகளில் சரி செய்யலாம் என பலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம். அது ஒவ்வொருவருக்கும் முடியின் தடிமனை பொருத்து வேறுபடலாம். சிலருக்கு 6 அமர்வுகளும், சிலருக்கு அதற்கு மேலும் மாறுபடலாம். சிகிச்சையின் நிறைவில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு நம் முடி வளர்ச்சியை கட்டுப்படுத்த நிச்சயமாக இயலும்.
அதே சமயம் நமது ஹார்மோன் குறைபாடுகளை மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்று சீராக கொண்டு செல்வது மிக இன்றியமையாதது. நமது வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவே உடல் நலத்திற்கு சிறந்தது என ஜெருஷ் மருத்துவமனை டாக்டர் பிளாட்பின் தெரிவித்தார்.
டாக்டர் பிளாட்பின், பெனிலா பிளாட்பின்
- முகப்பரு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
- முகப்பரு வந்தால் அதை கிள்ள கூடாது.
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் இளம் வயதினருக்கு அடிக்கடி முகத்தில் பருக்கள் தோன்றும். இதற்கு அதிகமாக நீரை குடிப்பது, சீரான உணவு பழக்கம் போன்றவற்றால் குணப்படுத்தலாம். மேலும் ஒரு பரு வந்தாலும் அதை கிள்ளி விட்டால் அது மேலும் மோசமாகி அதிக பருக்கள் தோன்றும். அதனால் முகப்பரு வந்தால் அதை கிள்ள கூடாது. சிலருக்கு மாத விடாய் காலத்தில் பரு வந்து, அது முடிந்ததும் மறைந்து விடும். ஆனால் சிலருக்கு அந்த தழும்புகள் முகத்தில் தோன்ற காரணம் அதை கிள்ளி விடுவதுதான். தவறான உணவு பழக்கவழக்கங்கள், அதிகப்படியான மன அழுத்தம், மாசுபட்ட சூழலில் வாழ்வது, மற்றும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் என முகப்பரு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
அனைவரும் மிக வேகமாக இயங்கி வரும் இந்த வாழ்க்கை முறையில் முகப்பரு வராமல் பாதுகாத்துக் கொள்ள அதுக்கென தனி நேரம் ஒதுக்கி நம் சருமத்தை பராமரிப்பது அனைவருக்கும் முடியாத செயல். இதனால் முகப்பரு ஏற்பட்டு மறைந்தாலும் கூட அந்த தழும்பு அப்படியே இருக்கும். இது போன்ற காரணங்களினால் முகப்பரு வராமல் தடுப்பது சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.
1. ஒருவருக்கு அடிக்கடி நெற்றியில் பரு வந்து போகிறது என்றால் அவருக்கு ஜீரண சக்தி சீரில்லாமல் இருக்கிறது என்று அர்த்தம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
2. உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் சரியாக வெளியேற்ற படாததாலும், நெற்றியில் முகப்பரு அடிக்கடி வரும் வாய்ப்புள்ளது.
3. பருக்கள் வராமல் தடுக்க நீங்கள் சாப்பிடக்கூடிய உணவு பண்டங்களில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.
4. முகத்தில் பருக்கள் வராமல் பாதுகாக்க நிறைய தண்ணீரை குடிப்பது அவசியம். குறிப்பாக நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் பழங்களை உட்கொள்ளலாம்.
5. அடிக்கடி ஆரஞ்சு பழம், மாதுளை பழம், சாத்துக்குடி, போன்ற பழங்களை சாப்பிடுவோருக்கு பருக்கள் வராது.
6. பருக்கள் வராமலிருக்க காய்கறிகளை அதிகமாக உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். குளிர்பானங்களை நீங்கள் குடிக்க கூடாது.
நம்முடைய கைகளில் பல வித கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் தோற்றி இருக்க கூடும். அதே கையோடு நம் முகத்தை தொடும்போது அதில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் முகத்தில் பரவி முகப்பருவை உண்டாக்குகின்றன.
எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதன் மூலம் அதிக அளவு எண்ணெய் மற்றும் சீபம் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் முகப்பருக்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
- பருக்கள் வருவது தடுக்கப்படும்.
- பருக்கள் வருவது தடுக்கப்படும்.
வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும்.
இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்து வரலாம்.
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ் பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.
வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.
வெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். பருக்கள் வருவது தடுக்கப்படும்.
வெயிலில் சருமத்தின் நிறம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். அதற்கு 1/2 கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம் கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
- குளிர்காலத்தில் இந்த அரிப்பு உடலில் பல பகுதிகளில் பரவுகிறது.
- தோளில் தடுப்புகள் மற்றும் முகப்பரு போன்ற சிறிய சிவப்பு புடைப்புகளை ஏற்படுத்தும்.
சருமத்தில் உள்ளநீர் மற்றும் இயற்கை எண்ணெய்களின் ஈரப்பதம் குறையும் போது அரிப்பு ஏற்படுகிறது. குளிர்ந்த வறண்ட காற்று மற்றும் வெப்பமாக்கல் போன்றவை சருமத்தின் ஈரப்பதம் குறைய முக்கிய காரணமாகும்.
பிற சுற்றுச்சூழல் காரணிகள், வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் சில மருத்துவ நிலைமைகள் ஆகியவற்றாலும் வறண்ட சருமத்தை உண்டாக்கி சருமத்தில் தடிப்புகளை ஏற்படுத்தும்.
தோல் அலர்ஜி:
வறண்ட தோல் ஆனது உலர்ந்த அரிப்பு மற்றும் திட்டுகளை ஏற்படுத்தும். இது முறையற்ற செல் சுழற்சி (Inproper cell Turn over) அல்லது கடுமையான இரசாயனங்கள், ஒவ்வாமை அல்லது கிருமி தொற்று ஆகியவற்றால் ஏற்படலாம்.
ரோசாசியா இது ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இது தோளில் தடுப்புகள் மற்றும் முகப்பரு போன்ற சிறிய சிவப்பு புடைப்புகளை ஏற்படுத்தும்.
குளிர் அர்டிகேரியா
Cold Urticaria
குளிர்ச்சியின் வெளிப்பாட்டிற்கு பிறகு சருமத்தில் வீக்கம், அரிப்பு மற்றும் புடைப்புகள் உண்டாக்குகின்றது. சிலருக்கு குளிர்ந்த நீரில் நீந்திய பிறகு ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு குளிர்ந்த காற்றால் உண்டாகலாம். இதனால் ஏற்படும் அரிக்கும் உணர்வானது தற்காலிகமானது. ஒன்று முதல் இரண்டு மணி நேரம் நீட்டிக்கும்.
சொரியாசிஸ்:
இது ஒரு தன்னுடல் எதிர்ப்பு சக்தியால் ஏற்படுவதாகும். (Auto Immuno Disease) தடி மனான சிவப்பு செதில் போன்ற சரும திட்டுகளை ஏற்படுத்தும். மேலும் சருமத்தில் வெடிப்பு, எரிச்சல் மற்றும் மூட்டுகளில் விரைப்பு ஆகிய வற்றையும் ஏற்படுத்தும்.
Dermatitis / Eczema:
குளிர்காலத்தில் இந்த அரிப்பு உடலில் பல பகுதிகளில் பரவுகிறது. குளிர்ந்த வெப்பநிலைக்கு அதிகம் வெளிப்படும் கைகள் மற்றும் கால்களில் அதிகம் பாதிக்கலாம். இது சருமத்தில் சிவப்பு, அரிப்பு, கரடு முரடான செதில் திட்டுகள் அல்லது கொப்புளங்கள் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
Wind burn / Winter itch
குளிர்ந்த காற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை குறைக்கும் குளிர்காற்றில் வெளியில் செல்ல நேரும் போது கையுறை மற்றும் துணிகளால் கைகளை மற்றும் வெளிப்படும் தோலை மூடும் போது இந்த பாதிப்புகளை குறைக்கலாம்.
உலர்ந்த/வெடித்த உதடுகள்:
குளிர்ந்த காலத்தில் பெரும்பான்மையானோர் எதிர் கொள்ளும் ஒரு பிரச்சனை உலர்ந்த மற்றும் வெடித்து ரத்தம் வரும் உதடுகள் ஆகும். Lip balms with SPF கொண்ட களிம்புகளை உபயோகிக்கும் போது இதனை குறைக்கலாம்.
குளிர்காலத்தில் தோல் சிகிச்சையில் சருமத்தை மீண்டும் ஈரமாக்குவதிலும் எரிச்சலை தணிப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். சருமத்துக்கு மாய்ஸ்ரைஸர்கள், எண்ணைகள் மற்றும் கிரீம்களை பயன்படுத்தலாம்.
அதே நேரம் ரோசாசியா, சொரியாசிஸ், எக்ஸிமா, தெர்மோடைடுஸ் போன்ற சரும பாதிப்பை கொண்டவர்கள் தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.
Dr. TAMILARASISHANMUGANATHANMBBS., MD (Derm), Aesthetic medicine (AAAM-USA) Consultant Dermatologist.
- புடவை மட்டுமல்ல, லெஹங்கா போன்ற நவீன உடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.
- இதை அணிந்து புடவை கட்டும்போது, உடலும் புடவையும் பிட்டாக காட்சிதரும்.
நவீனமான உடைகள் எவ்வளவோ வந்தாலும், நம் பாரம்பரிய உடையான புடவைக்கு ஈடு இணையாகாது. பேஷன் டிரெண்டிற்கு ஏற்ப பட்டுப் புடவைகளும், ஜாக்கெட் வகைகளும் நவீனமாகிக் கொண்டே இருக்கிறது. அந்தவகையில், 'ஷேப்வியர்' துணிகள், புடவை பிரியர்களின் சவுகரியத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது, புடவை அணிபவர்களை கூடுதல் அழகாக்கி இருக்கிறது. அது என்ன ஷேப்வியர், இதன் பயன்கள் என்ன... போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், பேஷன் துறை வல்லுனரான புவனேஸ்வரி.
கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட இவர், இப்போது சென்னை ஆவடியில் வசிக்கிறார். இவர் பெண்களின் பேஷன் தேவைக்கு ஏற்ப, புதுமையான உடைகளை வடிவமைத்து, தயாரித்து அசத்துகிறார்.
இவர் 'ஷேப்வியர்' பற்றி பகிர்ந்து கொண்டவை...
''மார்டன் உடைகளை அணியும்போது, உடலை கட்டுக்கோப்பாக காட்டவும், உடலுக்கு ஒரு வடிவம் கொடுக்கவும் வெளிநாடுகளில் 'பாடிவியர்' என்ற உள்ளாடை பயன்படுத்தப்படும். இது கச்சிதமான தோற்றத்தையும், சவுகரியமான உணர்வையும் கொடுக்கும். அதே கான்செப்டில்தான், இந்த 'ஸேரி ஷேப்வியர்' உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது புடவை அணிபவர்களுக்கு, சிறப்பானதாக இருக்கும். புடவை மட்டுமல்ல, லெஹங்கா போன்ற நவீன உடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்'' என்றவர், இதன் பயன்பாட்டை விளக்கினார்.
''புடவை அணியும்போது, உள்பாவாடை அணிவது வழக்கம். அப்படி அணியும்போது, உடல் வழக்கத்தைவிட கொஞ்சம் 'புஸ்ஸென' பருமனாக தோன்றும். அந்த அசவுகரியத்தை போக்கும் நோக்கில்தான், இந்த ஷேப்வியர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை அணிந்து புடவை கட்டும்போது, உடலும் புடவையும் பிட்டாக காட்சிதரும். நடப்பதற்கும், உட்காருவதற்கும் சவுகரியமாக இருக்கும். குறிப்பாக, இடுப்பில் கச்சிதமாக பொருந்திவிடும்'' என்றவர், இது நவீன கால பெண்களின் விருப்பமான உடையாக மாறியதை பகிர்ந்து கொண்டார்.
''முன்பெல்லாம், திருமண பெண்கள் மட்டுமே பட்டு புடவை அணியும்போது, இதை பயன்படுத்தினர். ஆனால் இப்போது அலுவலகத்திற்கு புடவை அணிந்து செல்லும் பெண்களும், இதை வழக்கமாக்கிக் கொண்டனர். இவை, மிக குறைந்த விலையில் இருந்தே ஆரம்பிப்பதால், பெரும்பாலான பெண்களின் விருப்பமான உடையாக மாறிவிட்டது'' என்றவர், இதை தேர்ந்தெடுத்து வாங்குவது குறித்து விளக்கினார்.
''ஷேப்வியர், நிறைய துணிகளில் தயாரிக்கப்படுகிறது. காற்றோட்டம் இல்லாத நைலான் கலந்த ஜெர்ஸி துணிகளிலும் இவை தயாரிக்கப்படுவதால், இதன் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும்.
முடிந்தவரை, காற்றோட்டமான 'ஸ்பாண்டெக்ஸ்' துணிவகைகளை தேர்வு செய்வது நல்லது. அதேபோல, உங்களது தேவைக்கு ஏற்ப, இதில் சில வடிவ அமைப்புகளும் உண்டு.
அதில் 'மெர்மைட் கட்' சிறப்பானதாக இருக்கும். மெர்மைட் கட் என்பது, மீன் வடிவத்தை கொண்டது. இடுப்பு பகுதியில் குறுகியும், தொடை பகுதியில் விரிவாகவும், மீண்டும் முட்டிப்பகுதியில் குறுகியும் இருக்கும். இதை பயன்படுத்தும்போது, எந்த அசவுரியமும் இல்லாமல் நடக்கலாம். மேலும் இடுப்பு பகுதியில், பிடிமானத்திற்கு ஏதுவாக நாடா இருக்கிறதா என்பதை பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துங்கள்'' என்றவர், இது புடவைக்கு பயனுள்ளதாக இருந்தாலும், ஒருசில நவ-நாகரிக மார்டன் உடைகளுக்கும் பயன்படுத்த முடியும் என்கிறார்.
''இந்த ஷேப்வியர் ஆடையில், முட்டி வரையில் மட்டுமே இருக்கக்கூடிய வகைகளும் உண்டு. அதை, மார்டன் உடைகளுக்குள்ளும் பயன்படுத்தலாம். ஆரம்பத்தில் நகர்புறங்களில் மட்டுமே பெரிதாக வரவேற்கப்பட்ட இவை, இப்போது கிராமப்புறங்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. ஒருகாலத்தில் லெக்கிங்ஸ் ரக ஆடைகள் பிரபலமானதை போல, இப்போது ஷேப்வியர் ரகங்களும், டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் படுஜோராக பரவி வருகிறது. உடை மட்டுமல்ல, இந்த உடை சார்பான வர்த்தகமும் பெருகிவிட்டது. கல்லூரி பெண்கள் மற்றும் இல்லத்தரிசிகளும், இதை சமூக வலைத்தளங்கள் வாயிலாக விற்பனை செய்கிறார்கள். தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பல பெண்கள், தொழில்முனைவோர்களாக மாறி இதுசார்ந்த தயாரிப்பு நிறுவனங்களையும் தொடங்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை போலவே, வெளிநாடுகளில் செட்டிலாகி இருக்கும் தமிழ்பெண்கள், இதை அதிகமாக விரும்புகிறார்கள். அவர்களுக்காக, ஏற்றுமதி தொழில்களும் சூடுபிடித்திருக்கிறது. கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், சுவீடன்... போன்ற உலக நாடுகளிலும், இது சார்ந்த வர்த்தகம் சூடுபிடித்திருக்கிறது'' என்றவர், இனி வருங்காலங்களில் இதன் தேவையும், உற்பத்தியும் அதிகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
- முதுமையைத் தடுப்பதற்கு வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம்.
- வாழைப்பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
வயதாக ஆரம்பித்தவுடன், முகத்தில் முதுமையின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும், அதாவது சுருக்கங்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் தோல் பராமரிப்பு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதுமையின் அறிகுறிகளைத் தடுக்க, இன்று உங்களுக்காக சில வீட்டு வைத்தியங்கள் குறித்த தகவல்களை அளிக்கிறோம்.
உங்கள் சருமப் பராமரிப்பில் இதை நீங்கள் பின்பற்றினால், அது உங்களை நீண்ட காலத்திற்கு அழகாகவும் இளமையாகவும் இருக்கலாம். இந்த உதவிக்குறிப்புகள் உங்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன. இது உங்கள் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கிறது மற்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.
இதற்கு வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் தோலுரித்து நன்றாக மசிக்கவும். பின்னர் இந்த வாழைப்பழ பேஸ்ட்டை சீராக முகத்தில் தடவவும். அதன் பிறகு, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க விட்டு உலர்த்த பிறகு சுத்தமான நீரினால் கழுவவும். இந்த வாழைப்பழ மாஸ்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினாலே, நீங்கள் நல்ல பலனைக் காணத் தொடங்குவீர்கள். வாழைப்பழத்தில் நல்ல அளவு வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி நிறைந்துள்ளதால், முகச் சுருக்கங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும். முதுமையைத் தடுப்பதற்கு ஃபேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம். வாழைப்பழத்தையும் வெண்ணெய்ப்பழத்தையும் ஒன்றாகப் பிசைந்து முகத்திலும் கழுத்திலும் மாஸ்க் போடவும். சுமார் 25 நிமிடங்கள் வரை காத்திருந்து, பிறகு கழுவவும்.
வாழைப்பழத்தில் பன்னீர் சில துளிகள் விட்டுப் பிசைந்து அதனை ஃபேஸ் மாஸ்க்காகப் போட்டு அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் விட்டு பிறகு கழுவலாம்.
வாழைப்பழத்தைக் குழைத்து, ஃபேஸ் மாஸ்க்காகப் போடவும். 20-25 நிமிடங்கள் கழித்து கழுவவும். சருமம் வறண்டு போயிருந்தால், இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் முகப் பொலிவு பெற, ஒரு டீஸ்பூன் வைட்டமின் E (வைட்டமின் E காப்சூலை உடைத்து அப்படியே அதிலுள்ளவற்றை ஊற்றிக் கலக்கினால் போதும்) மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தயிரையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் பொட்டாசியமும் நீரும் நிறைந்திருப்பதால், சருமத்தில் நீர்ச்சத்தைத் தக்கவைத்து சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள வாழைப்பழம் உதவுகிறது.
உங்கள் முகத்திலோ முகப்பரு உள்ள பகுதிகளிலோ வாழைப்பழத் தோலின் உட்பகுதியை வைத்துத் தேய்த்தால் போதும். அழற்சியைக் குறைக்கிறது. பிசைந்த வாழைப்பழத்துடன் மஞ்சள் பொடி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தும் ஃபேஸ் மாஸ்க் போடலாம். அது முகப்பருக்களை ஒழிப்பது மட்டுமின்றி, சருமத்திற்கும் இயற்கையான பளபளப்பையும் பொலிவையும் கொடுக்கும்.
கரும்புள்ளிகளின்மீது வாழைப்பழத் தோலைத் தேய்த்தால் அல்லது பிசைந்த வாழைப்பழத்தையே தேய்த்தால் வயதாவதால் தோன்றும் புள்ளிகளும், கரும்புள்ளிகளும், முகப்பரு வடுக்களும் குறைகின்றன. விரைவில் பலன் பெற, இதை குறைந்தது வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.
- சிலருக்கு காலநிலை ஒவ்வாமையால் உதடுகள் கருத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
- உதட்டின் கருமைக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வுகள் உள்ளன.
பொதுவாக ஒருவரின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன.
அதிக குளிர், அதிக வெப்பம் காரணமாகவும் சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு காலநிலை ஒவ்வாமையால் உதடுகள் கருத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
இதனை கவனிக்கமால் விட்டால் இன்னும் கருப்பாக மாற்ற வாய்ப்பு இருக்கும். இதனை எளியமுறையில் கூட நீக்க முடியும்.
தற்போது உதட்டு கருமை நீக்க சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
இதற்கான மருத்துவம்: பீட்ரூட் சாறுடன், சிறிதளவு குங்குமப்பூ கரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு வெடிப்பு, கருப்பு நீங்கும். பாலாடையுடன், நெல்லிக்காய் சாறு கலந்து அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன், ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தாலும் வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். ரோஜா இதழ்களின் சாறு, கேரட் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடு கருப்பு நீங்கும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- சோர்ந்து, ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகை குறைக்கும்.
- கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள்.
நமது ஆளுமையை பிறரிடம் எடுத்துரைப்பது கண்கள்தான். நம்மில் எழும் கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு போன்ற உணர்வுகளை கண்கள் எளிதாகப் பிறருக்கு எடுத்துக்காட்டும். சோர்ந்து, ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகையும், தோற்றத்தின் பொலிவையும் குறைக்கும். எனவே கண்களின் அழகை மேம்படுத்திக்காட்டும் சில மேக்கப் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
டின்ட் மாய்ஸ்சுரைசர் மற்றும் ஐ கிரீம் கலவை: கண்களைச் சுற்றிலும் வறட்சி இன்றி ஈரப்பதத்துடன் காட்சியளிக்க, மாய்ஸ்சுரைசரை ஐ கிரீமுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள், இமை முடி, இமைகள் என அனைத்து பகுதியிலும் இந்தக் கலவையை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால், சோர்வடைந்த கண்கள் புத்துணர்வு பெறும்.
லைனருக்கு மாற்றாக ஷீர் ஷேடோ: கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள். இதற்குப் பதிலாக கண் இமைகள் மேல், வெளிர் பழுப்பு நிற ஷேடோவை மெலிதாகத் தடவலாம். பொடி போல் இருக்கும் இந்த ஷேடோவைத் தடவும் போது, கண்களின் இமைகள் பிரகாசமாகப் பிரதிபலிக்கும். கண்களின் தோற்றத்தை அழகாய் எடுத்துக் காட்டுவதுடன், சிறிய கண்களையும் பெரிதாக காட்டும். இதற்கு, சில நொடிகள் மட்டும் செலவிட்டாலே போதுமானது.
ஐ ஷேடோவை லைனராக பயன்படுத்தும் போது, அது நாள் முழுவதும் நீடித்து நிற்கும். கிரீம்களாக இல்லாமல், தூள் வடிவில் பயன்படுத்தும்போது நீண்ட காலம் நீடிக்கும்.
புருவத்தை உயர்த்திக்காட்ட: முகத்தையும், கண்களையும் அழகாய் காட்டுவதில் முக்கிய பங்கு புருவத்திற்கு உண்டு. கண்களின் வடிவத்திற்கு ஏற்ப புருவங்களை திருத்திக் கொள்ளலாம். சிறிய கண்கள் கொண்டவர்கள் புருவத்தை நீண்ட வளைவாக அமைக்கலாம். அகலமான கண்கள் இருந்தால், புருவங்களை மெல்லியதாக வடிவமைக்கலாம்.
கருவளையத்தை நீக்குதல்: கண்களின் கீழ் இருக்கும் கருவளையத்தை மறைப்பதற்கு 'பீச்' டோன் கொண்ட கன்சீலரைப் பயன்படுத்தலாம். கண்களின் கீழ்ப் பகுதி, புருவத்திற்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட பகுதி, கண் ஓரங்களில் ஆங்கில எழுத்து 'வி' போன்ற அமைப்பில் தடவ வேண்டும். இதனால், கருவளையம் மறைந்து சரும நிறத்தோடு ஒத்துப்போகும்.
கறுப்பு நிற ஐ லைனரை தவிர்க்கவும்: கண்கள் சோர்வாக இருக்கும் போது, கறுப்பு நிறத்தில் ஐ லைனரைப் பயன்படுத்தினால் மேலும் சோர்வடைந்ததாகக் காட்டும். கறுப்பு நிறத்திற்கு மாற்றாக, பழுப்பு நிற ஐ லைனரை உபயோகிக்கலாம். வெண்கல அல்லது மிதமான பழுப்பு நிற ஐலைனர் அணியும்போது, கண்கள் அழகாக இருக்கும். இவை கண்களைப் பிரகாசமாக பிரதிபலிக்கும்.
ஐ லேஷஸ், மஸ்காரா: கண்களை அழகாக எடுத்துக்காட்ட ஐ லேஷஸ் உதவும். இவை நேராக இல்லாமல், வளைந்து இருக்கும்போது கண்கள் மிகவும் எடுப்பாகத் தெரியும். மஸ்காரா பலமுறை தடவினால் கண் இமை முடிகள் பெரியதாகத் தெரியும்.
- கஸ்டமைஸ்ட் என்பது, உங்களுக்காகவே உருவாக்கப்படும் பிரத்யேக ஆடை.
- கஸ்டமைஸ் உடைகளை பொறுத்தமட்டில், கட்டுப்பாடுகளே கிடையாது.
சென்னையை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவரான தாரணி கணேசன், கைத்தேர்ந்த பேஷன் டிசைனர். சினிமா மற்றும் சீரியல் பிரபலங்களுக்கு, செலிபிரிட்டி டிசைனராக திகழ்வதுடன், அவர்கள் விரும்பும் தனித்துவமான உடைகளை வடிவமைத்துக் கொடுக்கிறார். மேலும் 'கஸ்டமைஸ்ட்' எனப்படும் தனிநபருக்காக வடிவமைக்கப்படும் ஆடை வடிவமைப்பிலும், ஆபரணங்களை உடையோடு ஐக்கியப்படுத்தி தைக்கும் 'மஹம்' கலையிலும் கெட்டிக்காரர். இவரிடம் ''பாட்டி, அம்மா... காலத்து பழைய புடவைகளை வைத்து இப்போது என்ன செய்ய முடியும்..?'' என்ற கேள்வியை முன்வைத்தால், ''அனார்கலி தைக்கலாம், டாப் கவுன் தைக்கலாம். சுடிதார் தைக்கலாம். மேக்ஸி, அம்பர்லா கவுன் தைக்கலாம்'' என பலவிதமான பதில்களை முன்வைக்கிறார்.
ஆம்...! செலிபிரிட்டி டிசைனரான இவர், பழைய புடவைகளுக்கு மார்டன் டிரெண்டில், புது வடிவம் கொடுப்பதிலும் கில்லாடி. இவர், கஸ்டமைஸ்ட் ஆடை கலாசாரம் பற்றியும், செலிபிரிட்டி டிசைனர் அனுபவம் பற்றியும், பழைய புடவைகளுக்கு புத்துயிர் கொடுப்பது பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
* பேஷன் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?
நான் மைக்ரோ பயாலஜியில் எம்.பில் முடித்திருக்கிறேன். திருமணத்திற்கு பிறகான குடும்ப வாழ்க்கையில், கிடைத்த ஓய்வு நேரங்களை பேஷன் படிப்புகள் மூலம் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொண்டேன். அந்த காலகட்டத்தில்தான், 'கஸ்டமைஸ்ட்' ஆடை வடிவமைப்புகளும் பிரபலமாகின. என்னுடைய ஆர்வமும், சமூகத்தின் தேவையும்... 'பேஷன்' என்ற புள்ளியில் குவியவே, நான் பேஷன் டிசைனராகிவிட்டேன்.
* கஸ்டமைஸ்ட் ஆடைகள் பற்றி கூறுங்களேன்?
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பண்டிகைகளுக்கு நீங்கள் வாங்கி உடுத்தும் ஆடைகளை போலவே அதே வண்ணம், அதே டிசைனில் மற்றவர்களும் உடுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏனெனில் ஆடை சந்தையில், அதேபோன்ற உடைகள் நிறைய வந்திருக்கும். ஆனால் கஸ்டமைஸ்ட் என்பது, உங்களுக்காகவே உருவாக்கப்படும் பிரத்யேக ஆடை. அதேபோல மற்றொரு உடையை, வேறு எங்கும் வாங்க முடியாது. பார்க்கவும் முடியாது.
* என்னென்ன டிசைன்களில் எல்லாம் ஆடைகளை கஸ்டமைஸ் செய்யலாம்?
கஸ்டமைஸ் உடைகளை பொறுத்தமட்டில், கட்டுப்பாடுகளே கிடையாது. திரைப்பட காட்சிகளை நினைவூட்டும் உடைகளில் தொடங்கி, சிண்டர்லா, புரோஷன், மிக்கி மவுஸ்... இதுபோன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை மையப்படுத்தும் தீம் உடைகள் வரை தைக்கலாம். கூடவே, பெற்றோரின் பழைய கால நினைவுகளை மீட்டெடுக்கும் (ரீ-கிரியேட்டிங்) மாதிரியிலான உடைகளையும் வடிவமைக்கலாம்.
* பழைய புடவைகள் எப்படி புது வடிவம் பெறுகின்றன?
புதுமைகள்தான், பேஷன் துறையின் அடிநாதம். அதில் உருவானதுதான், இந்த டெக்னிக். எல்லோர் வீட்டிலும், அம்மா, பாட்டிகளின் நினைவுகளை தாங்கிய பழைய புடவைகள் இருக்கும். அதை இப்போது உடுத்துபவர்களும் உண்டு. பழைய டிசைன் என்ற தயக்கத்தினால், உடுத்த தயங்குபவர்களும் உண்டு. அப்படி தயங்கு பவர்களுக்காகவே, இந்த முயற்சி. பழைய புடவையை புடவையாகத்தான் அணியவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு பிடித்த வகையில், சுடிதாராக அணியலாம். இல்லையென்றால் அனார்கலி, கவுன், லாங் பிராக், நீல் ஸ்கர்ட், அம்பர்லா கவுன், குர்த்தி... இதுபோன்ற பேஷன் வடிவங்களுக்கும் மாற்றிக்கொள்ளலாம்.
சில பெண்கள், அவர்களது அம்மா புடவையில் தங்களுக்கும், மகளுக்கும் ஒரே டிசைனில் உடை தைத்து அணிகிறார்கள். ஏதோ ஒரு வகையில், முன்னோர்களுக்கும், அவர்களுக்குமான பந்தத்தை உடை வடிவில் தொடர விரும்புகிறார்கள்.
* கிழிந்த புடவைகளையும், பேஷன் உடைகளாக மாற்றமுடியுமா?
நிச்சயமாக மாற்றலாம். புடவையின் கிழிந்த பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் மற்ற புடவை துணிகளிலும், நவ-நாகரிக உடைகளை தைக்கலாம். அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப, ஆரி வேலைப்பாடுகள் செய்து, புடவை ஆடைகளை அழகாக்கலாம்.
* நீங்கள் சின்னத்திரை பிரபலங்களுக்கும் காஸ்டியூம் டிசைனராக இருப்பதை பற்றி கூறுங்கள்?
சினிமா மற்றும் சீரியல்களில் பிசியாக நடிக்கும் ரேஷ்மா பசுபுலெட்டிக்கு நான் செலிபிரிட்டி டிசைனராக இருக்கிறேன். அவரது விஷேச நிகழ்ச்சிக்காக அணுகியபோது ஏற்பட்ட பழக்கம் இப்போது வரையிலும் தொடர்கிறது. அவரை தொடர்ந்து, சில விஜய் டி.வி. பிரபலங்களுக்கும், ஜெயா டி.வி.யின் வாலு பசங்க நிகழ்ச்சிக்கும் உடைகள் வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். ஆன்லைன் மீடியா நிகழ்ச்சி தொகுப்பாளினி நிக்கி என்பவருக்கும், ஆடை வடிவமைத்து வருகிறேன்.
* உங்களது ஸ்பெஷல் என்ன?
ஆடை வடிவமைப்பில், படைப்பாற்றல் மிகவும் அவசியம். அதுவும் டிரெண்டிங்கிற்கு ஏற்ப நமது படைப்பாற்றல் மற்றும் சிந்தனைகளை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அந்தவகையில், என்னுடைய கிரியேட்டிவிட்டியை, மேம்படுத்திக்கொண்டே இருப்பது என்னுடைய ஸ்பெஷல் என நினைக்கிறேன்.
* பேஷன் ஆர்வத்தில், ஆடை வடிவமைப்பாளராக உருமாற நினைக்கும் இளம் பெண்களுக்கு உங்களது அறிவுரை?
ஆடை வடிவமைப்பில், உங்களுக்கு எல்லா வேலைகளும் தெரிந்திருக்க வேண்டும். எந்த ஒருவேலைக்கு மற்றவர்களை அதிகம் சார்ந்திருக்கக்கூடாது. கட்டிங், ஸ்ட்ரிச்சிங், ஆரி வேலை, எம்ராய்டரி, ஹோக்... இப்படி எல்லா வேலைகளையும் தெரிந்து வைத்திருந்தால், 'சீசன்' இல்லாத காலங்களிலும் 'பொட்டிக்' கடையை சமாளித்து நடத்திவிடலாம்.
* பேஷன் மற்றும் பொட்டிக்கில் நல்ல எதிர்காலம் இருக்கிறதா?
நிச்சயமாக. இன்றைய டீன் ஏஜ் வயதினரின் பேஷன் ஆர்வத்திற்கு, வீதிதோறும் பொட்டிக் கடைகள் திறந்தாலும் நிச்சயம் சிறப்பாகவே இயங்கும். இன்றைய கால இளைஞர்களும் இளம்பெண்களும், ஆடைகளுக்கும் செலவு செய்வதில் கணக்கு பார்ப்பதே இல்லை.
* நீங்கள் முயன்ற புதுமைகளை கூறுங்கள்?
தையல் கலையில், நிறைய கட்டிங் வேலைகள் இருக்கும். நிறைய துண்டு துணிகள் சேர்ந்து கொண்டே இருக்கும். அதை குப்பைக் கழிவாக தூக்கி எறிபவர்களும் உண்டு. அதில் புதுமை படைப்பவர்களும் உண்டு. அந்தவகையில், கழிவாக சேரும் பிட்டு துணிகளை கலர்கலராக சேர்த்து குழந்தைகளுக்கான ஹேர் பேண்ட், மேஜை அலங்கார விரிப்புகள், காபி மேட்... என நிறைய உபயோகமுள்ள பொருட்களை தயாரிக்கிறோம். இதுவும், மறுசுழற்சி பொருட்கள் பட்டியலில்தான் வரும்.
* சமீபகாலமாக, 'கஸ்டமைஸ்ட் ஆடைகள்' ரொம்ப பிரபலமாக இருப்பது ஏன்?
ஆம்...! ஒருகாலத்தில் திருமண வரவேற்புக்கு மட்டுமே 'கஸ்டமைஸ்ட்' ஆடைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. நிச்சயதார்த்தத்தில் தொடங்கி, திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோஷூட்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், ஹனிமூன் பயணங்கள், கர்ப்பகால போட்டோஷூட், குழந்தை பிறப்பு, குழந் தையின் முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்டம்... இப்படி எல்லா விஷேசங்களுக்கும், அவர்களுக்கு பிடித்த மாதிரியில், பிடித்த நிறங்களில், பிடித்த தீம் (கருப்பொருளில்) ஆடைகளை வடிவமைத்து அணிகிறார்கள். இது, இன்றைய டீன்-ஏஜ் வயதினரின் தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது.
- திறந்தவெளியில் வைப்பது நகையின் பொலிவை குறைக்கக்கூடும்.
- வாசனை திரவியங்கள் தங்க நகைகளின் பொலிவை குறைக்கக்கூடும்.
தங்க ஆபரணங்களை விரும்பாத பெண்கள் எவருமில்லை. அதன் பொலிவை தக்க வைக்க முறையாக பாராமரிக்க வேண்டும். அழுக்கு, அழகு சாதனப் பொருட்கள், ரசாயனங்கள் உள்பட ஏராளமான அம்சங்கள் தங்கத்தின் பொலிவு குறைவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. நீங்கள் எவ்வளவு நேரம் அணிகிறீர்களோ அந்த அளவுக்கு தங்கத்தின் பளபளப்பும், மினுமினுப்பும் குறையக்கூடும்.
வாசனை திரவியங்கள், மாய்ஸ்சுரைசர்கள் கூட தங்க நகைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அவற்றின் பொலிவையும் குறைக்கக்கூடும். நெக்லஸ்கள், காதணிகள், வளையல்கள் பொலிவை இழக்க தொடங்கும்போது, ஒவ்வொரு முறையும் நகைக்கடைக்கு செல்ல வேண்டும் என்றில்லை. சில எளிய வழிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே சுத்தம் செய்துவிடலாம்.
அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக்கொள்ளுங்கள். அந்த நீர் அதிக சூடாகவோ, குளிர்ச்சியாகவோ இருக்கக்கூடாது. இளஞ்சூட்டுடன் இருக்க வேண்டும். அதில் துணி துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் மென்மை தன்மை கொண்ட டிடர்ஜெண்ட் ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது சமையல் பாத்திரங்களை துலக்க பயன்படுத்தும் 'டிஸ்வாஷ்' ஒரு டேபிள்ஸ்பூன் கலக்க வேண்டும்.
இந்த கரைசலில் தங்க நகைகளை ஊற வைக்க வேண்டும். நகைகள் அனைத்தும் நீரில் நன்கு மூழ்கி இருக்க வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் கழித்த பிறகு நகைகளை வெளியே எடுத்து, பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பிரஷ் மென்மை (சாப்ட்) தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். நகைகளின் இடுக்குகளில் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். அப்போது பிரஷை கொண்டு நகைகளை கடினமாக துடைக்கக்கூடாது. அப்படி செய்தால் நகைகளில் கீறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நகைகளை சுத்தம் செய்வதற்கு ஷாம்புவும் பயன்படுத்தலாம்.
நகைகளை பிரஷ் கொண்டு சுத்தம் செய்து தண்ணீரில் அலசிய பின்னர் டிஷ்யூ பேப்பர், பேப்பர் டவல் மீது வைப்பதை தவிர்க்க வேண்டும். அவையும் நகைகளில் சேதம் ஏற்படுத்தக்கூடும். பருத்தித் துணி மீது நகைகளை உலரவைப்பதுதான் சரியானது. பின்பு பருத்தி துணிகளை கொண்டு நகைகளை துடைத்தெடுத்து விடலாம். நகைகளை அதற்குரிய பெட்டிகளில்தான் பாதுகாப்பாக வைக்க வேண்டும். திறந்தவெளியில் வைப்பது நகையின் பொலிவை குறைக்கக்கூடும்.
- வாரத்திற்கு 2 முறைக்கு மேல் ஷாம்பு தேய்த்து தலைக்கு குளிக்க கூடாது.
- சூடான நீரில் தலைமுடியை அலச வேண்டாம்.
ஹேர் கலரிங் என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் ஸ்டைலுக்காக செய்தது போலவே தோன்றும். ஆனால் உண்மையில் இளம் தலைமுறையினர் பலரும் இளம் நரைமுடியை மறைக்கவும் தற்போது ஹேர் கலரிங் முறையை கையில் எடுத்து விட்டனர். பல்வேறு காரணங்களால் விரைவில் நரைமுடி பிரச்சனை எட்டி பார்க்கிறது. சிலர், இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை கொடுக்க தொடங்கி விடுவார்கள்.
சிலர் இதை கவனிக்க தவறுவதால் தலை முடி முழுவதும் நரை முடியாக மாறிய பின்பு அதை மறைக்க முயற்சிகள் எடுக்கின்றனர். அந்த வகையில் அவர்கள் முதலில் மேற்கொள்ளும் முயற்சி ஹேர் கலரிங். சலூன் ஸ்டலில் ஹேர் கலரிங் செய்வது தற்போது ட்ரெண்டாக இருந்தாலும், இது நரை முடியை மறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
அந்த வகையில் இந்த பதிவில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எப்படி? சலூன் ஸ்டைலில் ஹேர் கலரிங் செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மருதாணி தூள் - 1 கப்
காபி தூள் - 2 டீஸ்பூன்
கேரட் சாறு - 1 டீஸ்பூன்
ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மருதாணி தூள் மற்றும் காபி தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
பின்னர் அதில் கேரட் சாறு, ஆப்பிள் வினிகர் சேர்க்கவும்.
இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து எடுத்து கொள்ளவும்.
இப்போது ஹேர் கலரிங் செய்ய தேவைப்படும் பேஸ்ட் தயார்.
முதலில் முடியை விரித்து விடவும்.
பின்பு பிரஷ் உதவியுடன் தயார் செய்த பேஸ்ட்டை முடியில் பக்குவமாய் தடவவும்.
தேவைப்படும் முடியில் மட்டும் கூட தேய்த்து கொள்ளலாம்.
இதை சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை அப்படியே தலையில் ஊற விடவும்.
உங்கள் தலைமுடிக்கு இயற்கையான முறையில் கலரிங் செய்து இருந்தால் ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
சூடான அல்லது வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டாம்.
வாரத்திற்கு 2 முறைக்கு மேல் ஷாம்பு தேய்த்து தலைக்கு குளிக்க கூடாது.






