என் மலர்tooltip icon

    சமையல்

    • மாட்டிறைச்சியில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • மாட்டிறைச்சியை கடையில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்: 

    பாசுமதி அரிசி - 1 கிலோ, 

    பீப் (மாட்டிறைச்சி) - 1 கிலோ, 

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, 

    வெங்காயம் - 500 கிராம், 

    பழுத்த தக்காளி - 500 கிராம், 

    பச்சை மிளகாய் - 5 

    கொத்தமல்லி, புதினா - தலா 1 கொத்து, 

    எண்ணெய் - 200 மில்லி, 

    நெய் - 50 மில்லி, 

    எலுமிச்சை -அரை பழம் 

    பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2, 

    பிரியாணி இலை - 2, 

    உப்பு தூள் - தேவையான அளவு 

    செய்முறை: 

    அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும்.

    பீப் (மாட்டிறைச்சி)  கொழுப்பெடுத்து கழுவி தண்ணீரை வடிக்க வேண்டும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தைசேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

    வெங்காயம் நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

    பிறகு புதினா, தயிர் சேர்க்கவேண்டும். 

    அடுத்து தக்காளி, கொத்தமல்லியை சேர்க்க வேண்டும். 

    அடுத்து உப்பு சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து பீப் (மாட்டிறைச்சி) சேர்த்து வேக விட வேண்டும்.

    பீப் (மாட்டிறைச்சி) வெந்து கிரேவி பதம் வரும் வரை வேக விட வேண்டும். 

    பீப் (மாட்டிறைச்சி)  அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்ற வேண்டும். 

    ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவேண்டும். 

    தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின்மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விட வேண்டும். 

    பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்க வேண்டும். 

    இப்போது சுவையான ஆம்பூர் பீப் (மாட்டிறைச்சி) பிரியாணி ரெடி.

    • மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
    • முட்டைகோஸில் உள்ள நார்சத்து செரிமான, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.

    தேவையான பொருட்கள்:

    முட்டைகோஸ் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    இஞ்சி - 1/2 இன்ச்

    பச்சை மிளகாய் - 2

    கறிவேப்பிலை - சிறிது

    புளி - சிறு துண்டு (நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்)

    துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் - 1

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    தாளிப்பதற்கு...

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    முட்டைகோஸ், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து பொன்னிறமாக தாளித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பிறகு அதனை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து, பின் அதில் புளிச்சாறு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், முட்டைகோஸ் சட்னி ரெடி!!!

    • காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
    • இதற்கு தொட்டுக்கொள்ள வேறு எதுவும் தேவையில்லை.

    தேவையான பொருட்கள் : 

    கோதுமை மாவு - 2 கப்,

    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    உப்பு - அரை டீஸ்பூன்,

    காய்கறிக்கலவை (பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்றவை) - ஒரு கப்,

    வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கப்,

    இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,

    புதினா, கொத்தமல்லித்தழை அரைத்தது - 2 டேபிள்ஸ்பூன்,

    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு,

    எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: 

    காய்கறிகளை அளவான தண்ணீரில் உப்பு சேர்த்து, வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதுகள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

    அதனுடன், மசித்த உருளைக்கிழங்கு, மசித்த காய்கறி கலவை, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். இதுதான் பூரணம்.

    கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள்.

    பிசைந்த மாவிலிருந்து, மெல்லிய சப்பாத்திகள் திரட்டி, இரு சப்பாத்திகளுக்கு நடுவே காய்கறி பூரணத்தை பரத்தி, ஓரங்களை ஒட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் இருபுறமும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சூப்பரான வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.

    • நாணை நாம் வீட்டில் செய்திருக்கமாட்டோம்.
    • இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா மாவு - 2 கப்

    ட்ரை ஈஸ்ட் - 1 டீஸ்பூன் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் 'டிரை ஈஸ்ட்' என்று கேட்டால் பாக்கெட்டாக கிடைக்கும்)

    வெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 2/3 கப்

    செய்முறை

    * முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் ட்ரை ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைய வைக்க வேண்டும்.

    * மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தயிர், பாதி வெண்ணெய் சேர்த்து கலந்து, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த நீரை ஊற்றி, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும்.

    * பிசைந்த மாவை 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது பார்த்தால், மாவு நன்கு உப்பியிருக்கும். அதனால் மீண்டும் அதனை ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திப் போன்று சற்று மொத்தமாக தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை குறைவில் வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ளதை வைக்க வேண்டும்.

    * நாணானது நன்கு உப்பி மேலே வரும் போது, அதன் மேல் வெண்ணெயை தடவி, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.

    * இப்போது சுவையான பட்டர் நாண் ரெடி!!!

    இதனை கிரேவியுடன் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    குறிப்பு: இதனை தோசைக்கல் அல்லது தவாவில் சாதாரண சப்பாத்தி போன்று வெண்ணெய் மட்டும் அதிகமாக தடவி, சுட்டு எடுக்க வேண்டும்.

    • முட்டையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இது சப்பாத்தி, தோசைக்கு அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 5

    பட்டை - 1 இன்ச்

    பிரியாணி இலை - 1

    கிராம்பு - 2

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    பிரஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்

    ஹரியாலி மசாலாவிற்கு…

    கொத்தமல்லி - 1 கட்டு (பெரியது)

    புதினா - 1 கட்டு

    பச்சை மிளகாய் - 3

    வெங்காய மசாலாவிற்கு…

    வெங்காயம் - 1

    பூண்டு - 4 பல்

    இஞ்சி - 1 இன்ச்

    செய்முறை:

    * முட்டையை வேக வைத்து இரண்டாக வெட்டி கொள்ளவும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முதலில் ஹரியாலி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருளை மிக்சியில் போட்டு அதனுடன் அரை கப் நீரை ஊற்றி நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * அடுத்த வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டுகளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, சேர்த்து தாளித்த பின்னர், அரைத்த வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.

    * பின் அதில் அரைத்த ஹரியாலி மசாலா மற்றும் பிரஷ் க்ரீம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, வெட்டிய முட்டைகளை போட்டு மூடி வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், சுவையான ஹரியாலி முட்டை கிரேவி தயார்.

    • தோசையில் பல வகைகள் உள்ளன.
    • இன்று கார தோசையை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தோசை மாவு - தேவையான அளவு.

    அரைக்க

    பழுத்த தக்காளி - மூன்று,

    பெரிய வெங்காயம் - ஒன்று,

    பூண்டு பல் - 5,

    வர மிளகாய் - 10,

    உப்பு - தேவையான அளவிற்கு,

    நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

    செய்முறை

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி, பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசை வார்த்து சுற்றி எண்ணெய் ஊற்றி அதன் மீது அரைத்த கார சட்னியை தடவி, இரண்டாக மடித்து திருப்பி போடவும். இருபுறமும் மொரறுமொறு என்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.

    இந்த மதுரை ஸ்பெஷல் கார தோசை வேற லெவல்ல இருக்கும்.

    • இறாலில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    இறால் - 1/4 கிலோ,

    இஞ்சி - 1 துண்டு,

    பூண்டு - 5 பல்,

    பச்சைமிளகாய் - 5,

    சின்ன வெங்காயம் - 100 கிராம்,

    சோம்பு, சீரகம் - தலா 20 கிராம்,

    மஞ்சள் தூள்- 10 கிராம்,

    நல்லெண்ணெய் - 10 மி.லி.,

    எலுமிச்சை பழம் - 1,

    உப்பு,கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவைக்கு.

    செய்முறை

    இறாலை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த இறாலை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் அரைத்த இறாலை போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    இறால் வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு பிழிந்து புட்டு மாதிரி வரும்வரை கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான இறால் புட்டு ரெடி.

    • காய்ச்சல், உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை குடிக்கலாம்.
    • இந்த ரசத்தை சூப்பாகவும் குடிக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    நல்லி எலும்பு - கால் கிலோ

    வெங்காயம் - 2

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

    சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்

    மஞ்சள் - 1/4 ஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க :

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்

    கொத்தமல்லி - கையளவு.

    மிளகு - தேவைக்கு ஏற்ப

    செய்முறை

    நல்லி எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போட்டு தண்ணீர் ஊற்றி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, சிறிது கொத்தமல்லி தழை, மிளகு தூள், வெங்காயம், சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலந்து குக்கரை மூடி அடுப்பில் குறைவான தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும்.

    இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

    இப்போது காரசாரமான நல்லி எலும்பு ரசம் தயார்.

    • மோமோஸ் சீனர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக இருக்கிறது.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 1 கப்

    பெரிய வெங்காயம் - 1

    குடை மிளகாய் - 1

    கேரட் - 2

    பீன்ஸ் - 6

    முட்டைகோஸ் (சின்னது) - 1/2

    பூண்டு பல் - 3

    இஞ்சி - 1 துண்டு

    மிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி

    வினிகர் - 1 மேஜைக்கரண்டி

    சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * வெங்காயம், குடை மிளகாய், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லி பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, 2 மேஜைக்கரண்டி எண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி போட்டு மூடி 40 லிருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

    * அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    * இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ், மற்றும் பீன்ஸை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வதக்கவும்.

    * பின்பு அதில் மிளகாய் தூள், வினிகர், சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும்.

    * கடைசியாக கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்.

    * மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    * உருண்டையை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை வைக்கவும்.

    * ஸ்டப்பிங்கை வைத்த பின் அவரவருக்கு பிடித்தமான வடிவில் மோமோஸ்ஸை மடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    * இட்லி தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி இந்த மோமோஸ்ஸை வைத்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    * 10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து மோமோஸ்ஸை எடுத்து சுட சுட பரிமாறவும்.

    * இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெஜ் மோமோஸ் தயார்.

    • வாந்தி, உடல் சோர்வு நீக்கும்.
    • ரத்த சோகை வராமல் தடுக்கும்.

    முன்பு முன்னோர்கள் கைவைத்திய முறையில் மசக்கை வாந்தியை தவிர்க்காமல் கட்டுப்படுத்தவும் செய்வார்கள். சித்த மருத்துவத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மசக்கையை கட்டுப்படுத்த முதல் மூன்று மாதங்கள் வரை மாதுளை மணப்பாகு எடுத்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மாதுளை மணப்பாகு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வீட்டிலேயே சுத்தமான முறையில் மாதுளை மணப்பாகு தயாரிக்கவும் செய்யலாம்.

    தயாரிக்கும் முறை

    மாதுளம்பழம் - 5 பெரிய பழமாக பெரிய முத்துகளாக எடுத்துகொள்ள வேண்டும்.

    பனைவெல்லம், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு - ருசிக்கேற்ப

    சுத்தமான தேன் - அரை கப்,

    ஏலக்காய் - 4

    பன்னீர் - 1 தேக்கரண்டி

    செய்முறை

    மாதுளை முத்துக்களிலிருந்து சாறு பிழிந்து தனியாக வைக்கவும்.

    இப்போது இனிப்புக்கு சேர்க்கப்படும் பனைவெல்லம், நாட்டுசர்க்கரை அல்லது பனங்கற்கண்டு எதுவாக இருந்தாலும் அதை பாகு காய்ச்ச வேண்டும். பாகு தயாரானதும் மாதுளை சாறை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். பிறகு பன்னீர் சேர்த்து ஏலத்தை பொடித்து கலந்து இறக்கும் போது தேன் சேர்த்து இறக்கவும்.

    இவை நன்றாக சேர்ந்து அடர்த்தியாக மாறியிருக்கும்.

    இப்போது ஆறவைத்து கண்ணாடி ஜாரில் ஊற்றி வைக்கவும்.

    இதுதான் மாதுளை மணப்பாகு என்றழைக்கப்படுகீறது.

    தினமும் காலையிலும் இரவிலும் 2 டீஸ்பூன் அளவு இதை குடித்துவந்தால் போதும். கர்ப்பக்கால மசக்கை நீங்கும். வாந்தி, உடல் சோர்வு நீக்கும். ரத்த சோகை வராமல் தடுக்கும் அளவு சத்து கொண்டது. கர்ப்பக்காலம் முழுவதுமே மசக்கை பிரச்சனை இல்லாமல் இருக்க இதை சாப்பிடலாம். கருப்பையில் இருக்கும் கருவின் வளர்ச்சியை ஆரோக்கியமாகவே உறுதி செய்யகூடியது இந்த மாதுளை மணப்பாகு.

    சுவையிலும் ருசியிலும் மட்டும் அல்ல சத்திலும் முதன்மையானது இது.

    • கிரீன் சிக்கன் டிக்கா சூப்பராக இருக்கும்.
    • இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ

    பச்சை மிளகாய் - 4

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

    புதினா - 2 கைப்பிடி

    கொத்தமல்லி - 1 கைப்பிடி

    எலுமிச்சை சாறு - பாதி

    மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்

    நெய் - 2 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி அனைத்தையும் விழுதாக அரைக்கவும்.

    * சிக்கனுடன் அரைத்த விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஊற வைக்கவும்.

    * ஊறிய சிக்கனை மைக்ரோவேவ் ஓவனில் கிரில் செய்து எடுக்கவும்.

    * மைக்ரோவேவ் ஓவன் இல்லையெனில், பேனில் நெய் விட்டு, மிதமான சூட்டில் சிக்கனை போட்டு வேக விட்டு எடுக்கவும்.

    * சுவையான கிரீன் சிக்கன் டிக்கா ரெடி.

    • வித விதமான உணவு வகைகளையே அனைவரும் விரும்புவர்.
    • சைவ உணவில் வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    வாழைக்காய் - 1

    சேனைக்கிழங்கு -1/2

    மிளகு - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி

    தேங்காய் துருவல் - 1 கப்

    மிளகாய் வற்றல் - 2

    சீரகம் - 1/4 தேக்கரண்டி

    கடுகு - 1/4 தேக்கரண்டி

    உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வாழைக்காய் மற்றும் சேனைக்கிழங்கை தோல் நீக்கி நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் மற்றும் மிளகு தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.

    முக்கால் கப் தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    நன்கு வெந்து வந்த சேனை மற்றும் வாழைக்காயில், அரைத்த விழுதுகளை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

    தேங்காய் கலவை மற்றும் காய்கள் ஒன்றோடு ஒன்று நன்கு சேருமாறு வரும் வரையில் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

    பிறகு, ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் மீதமுள்ள தேங்காய் துருவலை சேர்த்து கொண்டு சிவக்க வறுக்க வேண்டும்.

    வறுத்தெடுத்த இந்த தாளிப்பு கலவையை குழம்பு உடன் சேர்த்து கொள்ளவும்.

    பிறகு நன்றாக கிளறி கொண்டு அடுப்பை அணைத்து விடவும்.

    தற்போது சுவையான வாழைக்காய் சேனைக்கிழங்கு எரிசேரி தயார்.

    ×