என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த ஒரு காய்கறியாகும்.
    • அதிக சத்துக்கள் நிறைந்த காய்களிகளில் ஒன்று ப்ராக்கோலி.

    பச்சை பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த ஒரு காய்கறியாகும். உலகிலேயே அதிக சத்துக்கள் நிறைந்த காய்களிகளில் ஒன்றாக ப்ராக்கோலி கருதப்படுகிறது.

    ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துப் பொருட்கள் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன.

    ப்ராக்கோலியில் உயிர்வளியேற்ற எதிர்ப்பு பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன்கள் மற்றும் சியாசந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    நம் வயிற்றில் உள்ள செரிமான பாதைகளை சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. உயிர் வளியேற்ற எதிர்ப்பு பொருட்கள் அதிகம் இருப்பதும் இதற்கு காரணமாகும்.

    பெரும்பாலான காய்கறிகளில் கால்சியம் சத்து இருக்காது. அல்லது குறைவாக இருக்கும். ஆனால் ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சத்து எவ்வளவு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே.

    • டீ, காபி அடிக்கடி அருந்துவதைத் தவிர்த்தல் வேண்டும்.
    • மிளகாய் அளவோடு எடுக்க வேண்டும்.

    வயிற்றுப் புண்கள் பெரும்பாலும் சுகாதார மற்ற உணவில் உள்ள 'ஹெலிக்கோபேக்டர் பைலோரை என்ற பாக்டீரியா மூலம் வருகிறது. மனக்கவலை, மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற உணர்ச்சிகள் குடல் புண்களை உருவாக்க முக்கிய காரணமாக உள்ளது.

    தவறான உணவுப்பழக்க வழக்கங்கள், நேரம் கடந்து உணவு உண்பது, காரமான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக உண்பது, டீ, காபி அடிக்கடி குடிப்பது, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், தூக்கமின்மை, இரவு அதிக நேரம் கண் விழித்தல், உடல் சூடு போன்ற காரணங்களால் வயிற்றுப் புண்கள் வருகிறது.

    வயிற்றுப் புண் நோய் வராமல் தடுக்க உணவுப்பழக்கம்:

    * காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சரியான நேரங்களில் தவறாமல் உணவு உட்கொள்ளுதல் வேண்டும்.

    * டீ, காபி அடிக்கடி அருந்துவதைத் தவிர்த்தல் வேண்டும்.

    * மிளகாய் அளவோடு எடுக்க வேண்டும்.

    * உணவில் கட்டாயம் தயிர் சேர்க்க வேண்டும்.

    * பழைய சாதத்தில் மோர் சேர்த்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிடலாம்.

    * காய்கறிகளில் முட்டைக் கோசில் உள்ள குளூட்டமைன் வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை உடையது.

    * கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து ஜூசாக்கி குடித்து வர நோய் விரைவில் குணமாகும்.

    * சோற்றுக் கற்றாழையின் சதைப் பகுதியை தண்ணீர் விட்டு எழு முறை நன்கு கழுவி அதனுடன் சிறிதளவு இஞ்சி, புதினா சேர்த்து அரைந்து மோரில் கலந்து குடிக்கலாம்.

    * மணத்தக்காளி கீரை அல்லது சூப், பிரண்டைக் கீரை அல்லது பிரண்டை சூப் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

    * அகத்திக் கீரை, சீரகம், பூண்டு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம்.

    * நுங்கு, இளநீர் போன்றவற்றை அடிக்கடி பருகலாம்.

    * பழங்களில் ஆப்பிள், மாதுளம்பழம், முலாம்பழம் போன்றவை மிகச்சிறந்தது.

    * சீரகம், கொத்தமல்லி சேர்த்து ஊற வைத்த தண்ணீரை அடிக்கடி பருகி வர குடல் புண் விரைவில் குணமடையும்.

    * நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளான கோவைக்காய், புடலங்காய், சுரைக்காய், சவ்சவ், முள்ளங்கி, பூசணிக்காய், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய் போன்றவைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்."

    * இரவில் ஆறு மணி நேரம் தொடர்ச்சியாகத் தூங்க வேண்டும். இரவு நேரத்தில் வேலை செய்பவர்கள் பகல் நேரத்தில் கட்டாயம் ஓய்வு எடுத்தல் வேண்டும். மனக்கவலை, சோர்வு இன்றி இருக்க வேண்டும்.

    சித்த மருத்துவத்தில் கீழே கூறப்பட்டுள்ள மருந்துகளை சிந்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.

    1) வில்வாதி லேகியம், சீரசு வில்வாதி லேகியம் இவைகளில் ஒன்றை காலை 5 கிராம். இரவு 5 கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

    2) பிரண்டை வடகம் காலை-இரவு தலா 1 முதல் 2 சாப்பிட நல்ல பலனை தரும்.

    3) குள்மகுடோரி மெழுகு ஒரு கிராம் வீதம் காலை, இரவு இரு வேளை சாப்பிட்டு வர வேண்டும்.

    4) ஏலாதி சூரணம் 1 கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி. வீதம் எடுத்து நெய்யில் கலந்து மூன்று வேளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

    5) வயிற்றுப்பொருமல் இருந்தால் சோம்பத்திதிர், ஓமத்திறி இவைகளில் ஒன்றை 5-10 மி.லி. தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

    • வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து அதிகம்.
    • இதயநோய் வராமல் தடுத்து இதயத்தை பலமாக்க உதவுகிறது.

    வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்கள் இருக்கின்றன. மேலும் இதில் தயோமின், ரிபோபிளேவின், நிக்கோடின் அமிலம், வைட்டமின்-ஏ போன்ற சத்துக்களும் உள்ளன.

    உடல் வெப்பத்தை தணிக்க தினமும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உடல் உஷ்ணத்தை குறைக்க உதவுகிறது.

    தினமும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் அதில் உள்ள எண்ணெய் பசை முடிகொட்டும் பிரச்சினையை சரிசெய்து முடி அடர்த்தியாக வளர உதவிசெய்கிறது.

    வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் இது இதயநோய் வராமல் தடுத்து இதயத்தை பலமாக வைக்க உதவுகிறது.

    வெந்தயத்தில் இருக்கும் கசப்புத்தன்மை சர்க்கை நோயயை கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.

    • ஆரஞ்சு, செலரி கீரை, பால் ஆகியவை எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
    • தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

    ஒவ்வொரு உடல் உறுப்புகளின் நலனை பாதுகாப்பதில் ஒரு சில குறிப்பிட்ட உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    * மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க சால்மன், டுனா, மத்தி போன்ற மீன் வகைகளை தவறாமல் உட்கொள்ளுங்கள். அக்ரூட் பருப்புகளையும் சாப்பிடுங்கள்.

    * தசைகள் பலவீனமடைந்திருக்கிறதா? அன்றாட உணவில் வாழைப்பழம், இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளை சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும்.

    * காற்று மாசுபாடுகளால் நுரையீரலுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க புரோக்கோலியை சாப்பிடுங்கள். இது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.

    * சரும ஆரோக்கியத்தை பேணுவதற்கு புளூபெர்ரி, சால்மன் மீன் சாப்பிடுங்கள். டீ, காபிக்கு மாற்றாக கிரீன் டீ பருகுங்கள்.

    * முடி உதிர்வு பிரச்சினைக்கு இடம் கொடுக்காமல் கூந்தல் முடி வலிமையாக இருப்பதற்கு பச்சை காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். பீன்ஸ் மற்றும் சால்மன் மீன்களை அதிகம் சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வைத் தடுக்கலாம்.

    * கண் பார்வையை மேம்படுத்துவதற்கு கேரட் மட்டுமின்றி முட்டை, மக்கா சோளம் போன்றவற்றையும் கட்டாயம் உட்கொள்ளுங்கள்.

    * தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அதனால் அன்றாட உணவில் இவை இரண்டும் இடம்பெற வேண்டும்.

    * மலச்சிக்கல் பிரச்சினையை உணர்கிறீர்களா? சாப்பாட்டுடன் தவறாமல் தயிர் உட்கொள்ளுங்கள். பிளம்ஸ் பழமும் சாப்பிடுங்கள். அதிலும் உலர் பிளம்ஸ் சாப்பிடுவது சிறந்தது.

    * ஆரஞ்சு, செலரி கீரை, பால் போன்றவை எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

    • நாட்டு சர்க்கரை சேர்த்து லட்டு வடிவில் சுவைக்கலாம்.
    • சிறுதானிய பவுடர் மிக்ஸ்களை பார்க்க முடிகிறது.

    சிறுதானியங்களை அவித்தும், வேகவைத்தும் சாப்பிடலாம். அரைத்து மாவு வடிவில் மாற்றி, திரவ வடிவிலும் குடிக்கலாம். அல்லது மாவில் நாட்டு சர்க்கரை சேர்த்து லட்டு வடிவில் சுவைக்கலாம். சிலர், பல சிறுதானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்து, வெறும் மாவு வடிவிலும் சாப்பிடுகிறார்கள். உங்களுடைய விருப்பம்தான்... விருப்பமான உணவு வகைகளாக சாப்பிடலாம்.

    இன்று பலரது வீடுகளில், சிறுதானிய பவுடர் மிக்ஸ்களை பார்க்க முடிகிறது. தங்களது குழந்தைகளுக்கு பாலில் கலந்து குடிக்க கொடுக்கிறார்கள். அதேபோல, பலரது வீடுகளில் சிறுதானிய தின்பண்டங்களை பார்க்க முடிகிறது. லட்டு, பர்பி வகை இனிப்புகள்... என பல பதார்த்தங்களை, தயாரிக்கிறார்கள். இல்லையேல், என்னை போல, சிறுதானிய பதார்த்தம் தயாரித்து கொடுப்பவர்களிடம் வாங்கி உண்ண கொடுக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம்தான்.

    இன்று நிறைய வீடுகளில் அரிசியில் வெண் பொங்கல் சமைப்பதற்கு பதிலாக தினை பொங்கல், குதிரைவாலி பொங்கல் போன்றவையே தயாராகின்றன. மேலும் அரிசி சோறுக்கு மாற்றாக கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பாவில் தயாராகும் உணவுகளையும் சாப்பிட பழகிக்கொண்டிருக்கிறார்கள். இவை மட்டுமின்றி, குதிரைவாலி, கம்பு, பாரம்பரிய அரிசி ஆகியவற்றில் கஞ்சி தயாரித்து சாப்பிடுகிறார்கள்.

    இட்லி, அடை, நூடுல்ஸ் போன்ற உணவுகளும் சிறுதானியங்களில் தயாரிக்கப்படுகிறது.

    சிறுதானியங்களின் சிறப்பு

    கம்பு, கேழ்வரகு, சாமை, தினை... இப்படி வரிசைக்கட்டி நிற்கும் எல்லா சிறுதானியங்களிலும் பிரத்தியேக மருத்துவகுணம் நிறைந்திருக்கிறது. நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து உடலில் தங்கியிருக்கும் கெட்டக்கொழுப்புகளை அகற்றும் பணிகளை இவை செய்கின்றன. உடல் ஆரோக்கியம், உடல் எடை பராமரிப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

    ஒருசில சிறுதானியங்கள், உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றன. சிறுதானியங்களின் அவசியத்தை உலகறிய செய்யவே, 2023-ம் ஆண்டை, சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளனர்.

    சிறுதானிய உணவுகள், சுவையில் சிறப்பானதாக இருக்கும். தினை, கருப்பு கவுனி போன்றவை எல்லாம், சுவைகளில் சிறந்தவை. அதன் சுவையை, வேறு உணவுகளில் உணர முடியாது. அதேசமயம், குதிரைவாலி, மாப்பிள்ளை சம்பா, வரகு போன்ற சிறுதானியங்கள் எல்லாம், மருத்துவ குணம் கொண்டவை. இவற்றிலும், சுவையும் உண்டு. ஆரோக்கியமும் உண்டு.

    இந்த வருட தீபாவளி கொண்டாட்டங்களுக்கே, பல இடங்களில் சிறுதானிய உணவுகளை பார்க்க முடிகிறது. இந்த மாற்றம் ஆரோக்கியமானதுதான். அடுத்த வருட பண்டிகை கொண்டாட்டங்களில், நிச்சயம் சிறுதானிய இனிப்புகளை அதிகமாக சுவைக்க முடியும். குறிப்பாக, அல்வா, பால்கோவா, ஜாமூன் ஆகிய வடிவங்களில் சுவைத்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    • உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம்.
    • மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் ஆரஞ்சுக்கு இருக்கிறது.

    * உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு இருக்கிறது.

    * காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். அதில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் ஏராளம் நிறைந்திருக்கின்றன.

    * தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் மூளை உறைவு பிரச்சினைக்கான வாய்ப்பு 24 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாதம் வராமல் தடுக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் ஆரஞ்சுக்கு இருக்கிறது. அதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நேராமல் காக்க உதவும். ஆரஞ்சு சாறில் ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்திருக்கிறது. அது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். சுருக்கங்கள் நேராமல் தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும். விரைவில் முதுமை நெருங்காமல் தடுக்கும்.

    * கோடை காலங்களில் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருக வேண்டும். கதிர்வீச்சு பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க உதவும். ஆரஞ்சு ஜூஸில் கலோரி குறைவாகவே இருக்கிறது. அதில் கொழுப்பு துளியும் இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருகி வரவேண்டும்.

    * ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஆரஞ்சு பழத்தில் நரின்கைன், ஹெஸ்பிரிதின் போன்ற பிளாவோனாய்டுகள் இருக்கின்றன. அவை மூட்டு வலிக்கு நிவாரணம் தேடி தரும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரேட் அதிக செறிவு கொண்டவை. கால்சியம் ஆக்ஸலேட் எனும் கல் உருவாகுவதை தடுக்கும் தன்மை ஆரஞ்சுக்கு இருக்கிறது. ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

    • பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை உண்டாக்கும்.
    • ஈறு சம்பந்தமான நோய் அபாயமும் குறையும்.

    காலையில் மட்டுமல்ல, இரவிலும் பல் துலக்குவது கட்டாயம். அது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை உண்டாக்கும். அவை இதோ....

    * தினமும் காலையிலும், இரவிலும் பற்களைத் துலக்குவதால், வாய் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஈறு சம்பந்தமான நோய் அபாயமும் குறையும். ஏனெனில் இரவில் பற்களைத் துலக்கும் போது, பல்லில் உள்ள மஞ்சள் நிறம் அகன்று, ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, ஈறு நோய்களில் இருந்து விடுபடலாம்.

    * இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும். ஆகவே உங்கள் பற்கள் சொத்தையாகாமல் இருக்க வேண்டுமானால், இரவிலும் பற்களைத் துலக்குங்கள்.

    * இரவில் பற்களைத் துலக்காமல் இருந்தால், காலையில் வாய் மிகுந்த துர்நாற்றத்துடன் இருக்கும். உண்ட உணவுகள் பற்களின் இடுக்குகளில் தங்கி, பாக்டீரியாக்கள் பெருகிவிடும். எனவே இரவில் தவறாமல் பற்களைத் துலக்குங்கள்.

    * படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாய் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    * வாய் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டது. ஒருவரது வாய் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், பிளேக் உருவாக்கத்திற்கு காரணமான பாக்டீரியாக்கள் ரத்த நாளங்களில் நுழைந்து, ரத்த நாளங்களை பாதிக்கும். இதன் முடிவாக இதய நோயின் அபாயமும் அதிகரிக்கும்.

    • ரத்த கொழுப்பு அதிகமானால் இதயத்தில் அடைப்புகளை உண்டாக்கும்.
    • சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பின்பற்றுவது நல்லது.

    இதய அடைப்புக்கு முக்கியமான காரணம் கொழுப்பு தான். ஆரோக்கியமான உடலுக்கு கொழுப்பு கட்டாயம் தேவை. ஆனால் ரத்த கொழுப்பு அளவுக்கு அதிகமானால் இதயத்தில் அடைப்புகளை உண்டாக்கும்.

    கீழ்க்கண்ட சித்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பின்பற்றுவது நல்லது.

    1) பூண்டு 5 பல், சிறிதளவு கொள்ளு, ஒரு சிட்டிகை பெருங்காயம் இவைகளை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்து மாலை நேரங்களில் சாப்பிடலாம்.

    2) இலவங்கப்பட்டை, ஏலம், செம்பருத்தி பூ, வெந்தயம் இவைகளை பொடி செய்து அதில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீர் போல குடிக்கலாம்.

    3) கோடம் புளி சிறிதளவு எடுத்து சீரகத்துடன் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

    4) ஏலாதிச் சூரணத்துடன் குங்கிலியப் பற்பம் கலந்து, வெந்நீரில் காலை, இரவு என இருவேளை குடித்து வந்தால் கொழுப்பின் அளவு குறையும்.

    5) இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்க பூண்டு சாறு, புதினா சாறு, எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு இவைகளை சம அளவில் எடுத்து சூடாக்கி, ஆற வைத்து அதனுடன் சம அளவு ஆப்பிள் வினிகர் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் தினசரி காலை 5 மி.லி. எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

    6) வெண்தாமரை மலர் இதழ், செம்பருத்தி மலர் இதழ், மருத மரப்பட்டை, சீரகம், இலவங்கப்பட்டை இவைகளை பொடித்து அதில் ஒரு கிராம் வீதம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர வேண்டும்.

    தடுப்பு முறைகள்:

    சின்ன வெங்காயம், பூண்டு இவை கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மையுடையதால் இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, சைக்கிளிங், நடைப்பயிற்சி, நீச்சல், பேட்மிண்டன் போன்ற ஏதாவதொரு பயிற்சியை உங்கள் உடல் திறனுக்கு ஏற்ப செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிட வேண்டும். மூன்று வெள்ளைகளை அளவுடன் எடுத்தால் வாழ்நாள் அளவு கூடும். அவை, தீட்டிய வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, உப்பு.

    • கிளைகளில் முட்கள் நிறைந்து காணப்படும்.
    • வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படும்.

    மர வகையை சேர்ந்தது இலந்தை மரம். கிளைகளில் முட்கள் நிறைந்து காணப்படும். வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை 9 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. இலந்தை பழம் சிவப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும். இதன் சுவை புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் இருக்கும். இதன் இலை, பழம், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது.

    இலந்தை இலை மற்றும் பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கை, கால் குடைச்சல், வலி நீங்கும். வாந்தியை கட்டுப்படுத்தும். நாவறட்சி, அதிக தாகம், இருமல், உடல் உள் உறுப்பு புண்ணை குணப்படுத்தும்.

    இலந்தை பழத்தில் வைட்டமின் -சி சத்து நிறைந்து இருக்கிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. பிளவனாய்டு, பீமால், சப்போனின் போன்ற சத்துக்களும் அதிகம். இவை சிறந்த ஆன்டி ஆக்டிடன்ட்டாக செயல்படும்.

    இலந்தை பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும். கெட்ட கொழுப்பு குறையும். நன்றாக பசிக்கும். முகத்தில் சுருக்கங்கள் நீங்கும். இளமை தோற்றம் கிடைக்கும்.

    உடல் உஷ்ணத்தால் அவதிப்படுவோர் இலந்தை பழம் சாப்பிடலாம். உடலில் நீர்ச்சத்து இழப்பை சரிசெய்ய முடியும். ஞாபக சக்தியை தரும். சீன பாரம்பரிய மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் இலந்தை பழத்தின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

    பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

    பசியில்லாமல் அவதிப்படுபவர்கள், செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்கள் இலந்தை பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

    • கண்களில் வரும் பிரஷர் ஒன்று இருப்பதை அறிவீர்களா?
    • பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே க்ளாக்கோமா.

    ரத்த அழுத்தத்தைக் குறிக்கும் பிளட் பிரஷர் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி கண்களில் வரும் பிரஷர் ஒன்று இருப்பதை அறிவீர்களா? அதன் பெயர் `க்ளாக்கோமா' கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே க்ளாக்கோமா. கண்ணின் முன்பகுதிக்குள் ஆக்குவஸ் ஹியூமர் என்ற திரவம் சுற்றி வரும். இது அளவுக்கதிகமாக உற்பத்தியானாலோ, வெளியேறாமல் இருந்தாலோ கண்களில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு க்ளாக்கோமா பிரச்னை ஏற்படும்.

    கண்களில் ஏற்படும் இந்த அழுத்தம் எந்த வயதினருக்கும் வரலாம். பிறந்த குழந்தைக்கு வரும் கண் அழுத்தத்தை கொங்கனிடல் Glaucoma என்கிறோம். இதனால் பாதிக்கப்படும் குழந்தைக்கு முதலில் கண்கள் அழகாக இருக்கும். பிறகு, கண்கள் பெரிதாகிக்கொண்டேபோய், ஒரு கட்டத்தில் ரொம்பவும் பெரிதாகிவிடும். கருவிழிகள் நீலநிறமாகி, பிறகு வெள்ளையாக மாறிவிடும். கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.

    கண்களில் பிரஷர் வருவதற்கு கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் காரணமல்ல. இந்நோயை கண் நீர் அழுத்த நோய் (குளுக்கோமா) என்று கூறுவார்கள். ரத்த அழுத்தம் இருப்பதால் கண் நீர் அழுத்த நோய் வராது.

    கண் நீர் அழுத்த நோய் வருவதற்கான காரணங்கள்:

    பரம்பரை, உயர் கிட்டப்பார்வை, கண்ணில் அடிபடுதல், நீரிழிவு நோய், ஸ்டிராய்டு மருந்து அதிகம் உபயோகித்தல் மற்றும் கண்ணீர் போகும் பாதை குறுகி இருத்தல் ஆகிய காரணங்களால் கண் நீர் அழுத்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கண்ணீர் போகும் பாதை குறுகி இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் கண் நீர் அழுத்த நோய் வராமல் தடுக்கலாம்.

    • படிகாரத்தில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன.
    • சரும பிரச்சினை, கிருமித்தொற்று போன்றவற்றுக்கு சிறந்த மருந்து.

    சில தலைமுறைகளுக்கு முன்பு வீட்டின் முகப்பில் கற்றாழை, மஞ்சள், எலுமிச்சை ஆகியவற்றுடன் படிகாரத்தையும் சேர்த்து கட்டி தொங்கவிட்டு இருப்பார்கள். கண் திருஷ்டியை போக்குவதற்காக இவ்வாறு கட்டுகிறார்கள் என்று பலர் கூறினாலும், இதற்கு பின்னால் மருத்துவ ரீதியான காரணம் ஒன்றும் இருந்தது.

    இப்போது இருப்பது போல உடனடி மருத்துவ வசதிகள் இல்லாத அந்த காலத்தில், முதலுதவி சிகிச்சைக்கு கை மருந்தாக பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு கட்டியிருந்தார்கள். படிகாரத்தில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன. சரும பிரச்சினைகள், கிருமித்தொற்று போன்றவற்றுக்கு இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

    படிகாரத்தின் பயன்கள்

    * சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் வறட்சியை போக்குவதற்கு படிகாரம் உதவும். சிறிதளவு படிகாரத்தூளுடன் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து மூகத்தில் பூசவும். வாரத்தில் 3 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் வறட்சி நீங்கி சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

    * முகப்பரு மற்றும் அதன் மூலம் ஏற்படும் தழும்புகளை நீக்குவதற்கு படிகாரம் சிறந்த தேர்வாக அமையும். ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு படிகாரத்தூளைப் போட்டு நன்றாகக் கலக்கவும்.

    * இந்த தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவவும். இவ்வாறு சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு மற்றும் தழும்புகள் நீங்கும்.

    * மாதுளம் பூ மற்றும் மாதுளம் பட்டையை சிறிதளவு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் சிறிதளவு படிகாரத்தூள் சேர்த்து கலக்கவும். இந்த கரைசலைக் கொண்டு காலை, மாலை இரண்டு வேளையும் வாய் கொப்பளித்து வந்தால், தொண்டைப் புண் விரைவிலேயே குணமாகும்.

    * சிறிதளவு படிகாரத்தூளை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்துக் கலக்கவும். மெல்லிய பருத்தித் துணியை அதில் தோய்த்து, கண்களின் மேல் பற்று போட்டால் கண் வலி உடனே குறையும்.

    * தினமும் குளித்து முடித்தவுடன் படிகாரத்தை உடலில் தேய்த்துக் கொண்டால் வியர்வை நாற்றம் நீங்கும்.

    * படிகாரத்தூளை தண்ணீர் சேர்த்து பசை போல குழைக்கவும். இதை விரல்களில் நகச்சுற்று உள்ள இடத்தில் பூசி வந்தால் விரைவிலேயே குணமாகும்.

    * குதிகால் வெடிப்பு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள். தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு படிகாரத்தை பாதத்தில் நன்றாக தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.

    • முதுகெலும்பு நமது உடலின் தண்டுவடத்தை பாதுகாப்பாக வைக்கிறது.
    • நமது உடல் நேராக நிற்கவும், வளையவும், அமரவும் உதவுகின்றன.

    நமது உடல் நேராக நிமிர்ந்து நிற்பதற்கு காரணமாக அமைவது முதுகெலும்பு ஆகும். கழுத்து முதல் இடுப்பு வரை வரிசையாக, சற்று வளைந்து அமைந்துள்ள 33 எலும்புகளை நாம் `முதுகெலும்பு' என்கிறோம்.

    கழுத்துப்பகுதியில் 7 எலும்புகளும், நெஞ்சுக்கூட்டிற்கு பின்புறமாக 12 எலும்புகளும், இடுப்புப்பகுதியில் 5 எலும்புகளும் மற்றும் கீழ் இடுப்புப் பகுதியில் 9 எலும்புகளுமாக இவை அமைந்துள்ளன. இந்த எலும்புகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நமது உடல் நேராக நிற்கவும், வளையவும், அமரவும் காரணமாக அமைகின்றன.

    இந்த முதுகெலும்பு நமது உடலின் முக்கிய பகுதியான தண்டுவடத்தை பாதுகாப்பாக வைக்கிறது. முதுகெலும்பு பாதிப்பு ஏற்படுவதற்கு பல காரணிகள் உள்ளன. உடல் எடை அதிகரிப்பது, கம்ப்யூட்டர் முன்பாக எப்போதும் குனிந்து உட்கார்ந்து கொண்டு வேலை செய்வது, முதுகில் அதிக எடை கொண்ட பொருட்களை சுமப்பது, நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்வது, வளைந்த இருக்கை அமைப்பு கொண்ட வாகனங்களை நீண்ட நேரம் ஓட்டுவது, எலும்புகளின் அடர்த்தி குறைவது, முதுகுத்தண்டின் மீது அதிகமான அழுத்தத்தை உருவாக்குவது போன்ற உடல் ரீதியான காரணிகளும், மன இறுக்கம், மனச்சோர்வு, அதீத கவலை போன்ற உளவியல் சார்ந்த காரணிகளும் இவற்றில் முக்கியமானவை.

    முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த பால் பொருட்கள், முட்டைக்கோஸ், புரோக்கோலி, கீரை, இஞ்சி, துளசி மற்றும் லவங்கப்பட்டை மற்றும் கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து உண்ண வேண்டும். சத்தான உணவுகளை உட்கொள்வது, முதுகு தொடர்பான எளிய உடற்பயிற்சி களை செய்வது, நிமிர்ந்த நிலையில் உட்காருவது உள்ளிட்ட செயல்முறைகளை கடைப்பிடித்தால் முதுகெலும்பு தொடர்பான சிக்கல்களில் இருந்து விடுபடுவதுடன், ஆரோக்கியமாக வீறு நடைபோடலாம்.

    ×