என் மலர்
குழந்தை பராமரிப்பு
முதல் முதலாக உங்களது உலகத்தில் பிறந்திருக்கிறது உங்கள் குழந்தை. எவ்வளவு வேகமாக வளர போகிறது எனக் கவனியுங்கள். முதல் மாத குழந்தை என்னென்ன செய்யும் என்று பார்க்கலாம்.
பிறந்த முதல் மாதத்திலே குழந்தைகள் செய்வது இவைதான்.
உற்றுப் பார்ப்பது
சிரிப்பது
கண் சிமிட்டுதல்
தூங்குவது
அழுவது
பால் குடிப்பது
உடலை முறுக்குவது
வில் போல உடலை வளைப்பது
எனப் பல நிலைகளில் குழந்தைகள் உங்களை ஈர்க்கும்.
காது கேட்கும் திறன் அதிகமாக இருக்கும். மற்ற புலன்களைவிட காது கேட்பது மிகவும் கூர்மையாக இருக்கும். பழகியவர்களின் குரலை கேட்டால் குதிப்பது, கால் ஆட்டுவது போன்ற செயல்களை செய்யும். குறிப்பாக, அம்மா, பாட்டி குரல் பழகி இருக்கும்.
ஒரு அடி தூரத்துக்கு உட்பட்ட பொருட்களை குழந்தைகளாக லேசாகப் பார்க்க முடியும். அதாவது அருகில் உள்ளதை மட்டும் குழந்தைகளால் பார்க்க முடியும்.
பிரகாசமான ஒளி, மிக நெருக்கமான பிம்பங்கள் ஆகியவை நன்றாகத் தெரியும்.
அம்மாவின் முகத்தை குழந்தையால் அடையாளம் காண முடியும். அம்மாவின் குரல் கேட்டதும் அழுகையை நிறுத்தும்.
இரண்டு கைகளையும் விரித்து, முதுகை வில் போன்று குழந்தை வளைக்கும். நம் கவனத்தை ஈர்க்கும்.
தாய் சரியாக பால் கொடுக்காமல் இருந்தாலோ, மார்பு காம்பு நழுவும் போதோ குழந்தை கோபப்பட்டு உடலை வில் போல வளைக்கும்.
தாய்ப்பால் குடிக்கும் போது, குழந்தை தன் தாயின் மார்பகங்களில் கைகளை வைத்து வருடவும் செய்யும். கழுத்தில் செயின் இருந்தால் பிடிக்கவும் செய்யும்.
குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்துக்கு அனுபவம் மிக்க பெரியோர் உடன் இருப்பது நல்லது.
பெற்றோர் செய்ய வேண்டியவை
குழந்தையின் பாதங்களில் நெருடுதல் மூலம் குழந்தையின் கூச்சத்தை உணரலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.
எதிர் பக்கத்தில் வரும் சத்தத்தை குழந்தை அறிந்து கொள்கிறதா என செக் செய்ய, லேசாக கை தட்டுதல், சொடக்கு போடுதல் ஆகியவற்றை செய்யலாம். இதனால் சத்தம் வரும் இடம் நோக்கி குழந்தை பார்க்கும்.
மேற்சொன்னதை ஒவ்வொரு பெற்றோரும் முதல் மாதத்தில் அவசியம் செய்ய வேண்டும். இதனால் குழந்தை வளர்ச்சி சீராக இருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும்.
பிறந்த குழந்தைகளின் கண்கள் மாறு கண்கள் போல தெரியலாம். கண்களை சுற்றி உள்ள ‘ரெக்டஸ்’ தசைகள் வலுப் பெறும். சில நாட்களில் கண்கள் இயல்பான நிலைக்கு வரும்.
கண்கள் மஞ்சளாக இருந்தாலோ, பிசுபிசுப்பான பீளை வழிந்தாலோ மருத்துவரிடம் அவசியம் சொல்லுங்கள்.
பிறந்த குழந்தைகளின் உடலில் பால் போன்ற வெண்மை திட்டுக்கள் காணப்படும். இவற்றை அழுத்தித் துடைக்க கூடாது. தோலின் வறட்சியை சமன் செய்யவே இந்த திட்டுக்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய்த் தடவி வந்தால் விரைவில் சரியாகிவிடும்.
குழந்தையின் உடலில் கருமை அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் காணப்பட்டால் இவை பல்லாண்டுகள் நீடிக்கலாம். அல்லது குழந்தை வளர வளர சரியாகிவிடலாம்.
கர்ப்பக்காலத்தில் தாய் உண்ட இரும்பு சத்து மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள், மரபியல் முடி வளர்ச்சி இதன் அடிப்படையில் குழந்தைக்கு முடி வளரும்.
கருப்பையில் மிதமான வெப்பத்தில் இருந்த காலத்தால் குழந்தைக்கு முடி வளர்ச்சி அதிகமாக காணப்படும். குழந்தை பிறந்த பிறகு 1-2 மாதங்களில் உடலில் உள்ள முடி தானாக உதிரும்.
பிறந்த குழந்தை 16 மணி நேரமாவது அவசியம் தூங்க வேண்டும்.
பகலிலும் இரவிலும் தூங்கி கொண்டே இருக்கும்.
இரவில் 3-4 முறை, பகலில் தேவைப்படும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு 2 வாரம் முடிந்த உடனே, குழந்தையை கொஞ்சுவது, ஒலி எழுப்பி கூப்பிடுவது, குழந்தையிடம் பேசுவது போன்றவை செய்தால் குழந்தைக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
குழந்தை விழித்திருக்கும்போது, தாய் குழந்தையிடம் அவசியம் பேச வேண்டும்.
குழந்தை உறங்கும் இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தைகள் மூச்சு திணறி இறந்துவிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
பிறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டாம். ஹோட்டல், திரையரங்குகள், உயிர் நீத்தோர் இடத்துக்கு இப்படி எங்கும் செல்ல கூடாது. ஏனெனில் கிருமித்தொற்று ஏற்படலாம்.
உற்றுப் பார்ப்பது
சிரிப்பது
கண் சிமிட்டுதல்
தூங்குவது
அழுவது
பால் குடிப்பது
உடலை முறுக்குவது
வில் போல உடலை வளைப்பது
எனப் பல நிலைகளில் குழந்தைகள் உங்களை ஈர்க்கும்.
காது கேட்கும் திறன் அதிகமாக இருக்கும். மற்ற புலன்களைவிட காது கேட்பது மிகவும் கூர்மையாக இருக்கும். பழகியவர்களின் குரலை கேட்டால் குதிப்பது, கால் ஆட்டுவது போன்ற செயல்களை செய்யும். குறிப்பாக, அம்மா, பாட்டி குரல் பழகி இருக்கும்.
ஒரு அடி தூரத்துக்கு உட்பட்ட பொருட்களை குழந்தைகளாக லேசாகப் பார்க்க முடியும். அதாவது அருகில் உள்ளதை மட்டும் குழந்தைகளால் பார்க்க முடியும்.
பிரகாசமான ஒளி, மிக நெருக்கமான பிம்பங்கள் ஆகியவை நன்றாகத் தெரியும்.
அம்மாவின் முகத்தை குழந்தையால் அடையாளம் காண முடியும். அம்மாவின் குரல் கேட்டதும் அழுகையை நிறுத்தும்.
இரண்டு கைகளையும் விரித்து, முதுகை வில் போன்று குழந்தை வளைக்கும். நம் கவனத்தை ஈர்க்கும்.
தாய் சரியாக பால் கொடுக்காமல் இருந்தாலோ, மார்பு காம்பு நழுவும் போதோ குழந்தை கோபப்பட்டு உடலை வில் போல வளைக்கும்.
தாய்ப்பால் குடிக்கும் போது, குழந்தை தன் தாயின் மார்பகங்களில் கைகளை வைத்து வருடவும் செய்யும். கழுத்தில் செயின் இருந்தால் பிடிக்கவும் செய்யும்.
குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்துக்கு அனுபவம் மிக்க பெரியோர் உடன் இருப்பது நல்லது.
பெற்றோர் செய்ய வேண்டியவை
குழந்தையின் பாதங்களில் நெருடுதல் மூலம் குழந்தையின் கூச்சத்தை உணரலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.
எதிர் பக்கத்தில் வரும் சத்தத்தை குழந்தை அறிந்து கொள்கிறதா என செக் செய்ய, லேசாக கை தட்டுதல், சொடக்கு போடுதல் ஆகியவற்றை செய்யலாம். இதனால் சத்தம் வரும் இடம் நோக்கி குழந்தை பார்க்கும்.
மேற்சொன்னதை ஒவ்வொரு பெற்றோரும் முதல் மாதத்தில் அவசியம் செய்ய வேண்டும். இதனால் குழந்தை வளர்ச்சி சீராக இருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும்.
பிறந்த குழந்தைகளின் கண்கள் மாறு கண்கள் போல தெரியலாம். கண்களை சுற்றி உள்ள ‘ரெக்டஸ்’ தசைகள் வலுப் பெறும். சில நாட்களில் கண்கள் இயல்பான நிலைக்கு வரும்.
கண்கள் மஞ்சளாக இருந்தாலோ, பிசுபிசுப்பான பீளை வழிந்தாலோ மருத்துவரிடம் அவசியம் சொல்லுங்கள்.
பிறந்த குழந்தைகளின் உடலில் பால் போன்ற வெண்மை திட்டுக்கள் காணப்படும். இவற்றை அழுத்தித் துடைக்க கூடாது. தோலின் வறட்சியை சமன் செய்யவே இந்த திட்டுக்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய்த் தடவி வந்தால் விரைவில் சரியாகிவிடும்.
குழந்தையின் உடலில் கருமை அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் காணப்பட்டால் இவை பல்லாண்டுகள் நீடிக்கலாம். அல்லது குழந்தை வளர வளர சரியாகிவிடலாம்.
கர்ப்பக்காலத்தில் தாய் உண்ட இரும்பு சத்து மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள், மரபியல் முடி வளர்ச்சி இதன் அடிப்படையில் குழந்தைக்கு முடி வளரும்.
கருப்பையில் மிதமான வெப்பத்தில் இருந்த காலத்தால் குழந்தைக்கு முடி வளர்ச்சி அதிகமாக காணப்படும். குழந்தை பிறந்த பிறகு 1-2 மாதங்களில் உடலில் உள்ள முடி தானாக உதிரும்.
பிறந்த குழந்தை 16 மணி நேரமாவது அவசியம் தூங்க வேண்டும்.
பகலிலும் இரவிலும் தூங்கி கொண்டே இருக்கும்.
இரவில் 3-4 முறை, பகலில் தேவைப்படும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு 2 வாரம் முடிந்த உடனே, குழந்தையை கொஞ்சுவது, ஒலி எழுப்பி கூப்பிடுவது, குழந்தையிடம் பேசுவது போன்றவை செய்தால் குழந்தைக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
குழந்தை விழித்திருக்கும்போது, தாய் குழந்தையிடம் அவசியம் பேச வேண்டும்.
குழந்தை உறங்கும் இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தைகள் மூச்சு திணறி இறந்துவிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
பிறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டாம். ஹோட்டல், திரையரங்குகள், உயிர் நீத்தோர் இடத்துக்கு இப்படி எங்கும் செல்ல கூடாது. ஏனெனில் கிருமித்தொற்று ஏற்படலாம்.
கோடைக்கால விடுமுறையில் உங்கள் சுட்டிக் குழந்தையை எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வைத்துக் கொள்ளச் சுவாரசியமான பல்வேறு வழிகள் உள்ளன.
1.படம் வரைதல் (Drawing)
உங்கள் குழந்தைக்குப் படம் வரைவதில் ஆர்வம் இருக்கும். அவனுடன் அமர்ந்து நீங்களும் அவனுக்குச் சின்ன சின்னப் படங்களை வரையக் கற்றுக் கொடுக்கலாம். அப்படிச் செய்யும் போது மேலும் அவன் முறையாக கற்றுக் கொள்ளத் தொடங்குவான். இதனால் அவனது கற்பனைத் திறனும் அதிகரிக்கும்.
2.சிறு வீட்டுத் தோட்டம் அமைத்தல் (Gardening)
இன்று பெரும்பாலோனோர் அடுக்கு மாடிக் குடி இருப்பில் வசிக்கின்றனர். இதனால் தோட்டம் அமைக்கவோ, விளையாடவோ குழந்தைகளுக்குப் போதிய அளவு இடம் கிடைப்பதில்லை. இருந்தாலும், உங்கள் குழந்தைக்குச் செடி வளர்ப்பதில் ஆர்வத்தைத் தூண்ட உங்கள் வீட்டு மேல்மாடம் மற்றும் சமையல் அறையில் சிறு தொட்டிகளை வைத்து, செடிகளை வளர்க்க ஊக்குவியுங்கள். வெங்காயம், தக்காளி, வெந்தயம்,சில காய்கள்,பூச்செடிகள் ஆகியவற்றின் விதைகளை மண்ணில் விதைத்து அது எப்படி முளைத்து வளர்கின்றது என்று காட்டுங்கள். மேலும் அதற்கு அவனைத் தினமும் தண்ணீர் விடச் சொல்லி,இயற்கை மற்றும் விவசாயத்தின் அருமை பெருமைகளைப் பற்றிக் கூறிப் புரிய வையுங்கள். இதனால் அவன் இயற்கை மீது பற்று கொண்டவனாகவும், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவனாகவும் பின்னாளில் விளங்குவான்.
3.பறவைகளுக்கு உணவு தருதல் (Feed birds)
இந்த விடுமுறையில் வீட்டு மொட்டை மாடியில் பறவைகளுக்கென்று ஒரு தட்டில் உணவு மற்றும் தண்ணீர் வைப்பதை உங்கள் குழந்தையின் வாடிக்கையான பழக்கமாக மாற்றுங்கள். குறிப்பாக காகம், மைனா, புறா, சிட்டுக் குருவி போன்ற பல பறவைகள் சரியான உணவு கிடைக்காமல் பறந்து திரிந்து அலைகின்றன. ஆக ஓரிடத்திலேயே உணவு தினமும் கிடைக்கும் என்ற சூழலில்,அங்கு பறவைகள் வாடிக்கையாகத் தினமும் வரத் தொடங்கும். இதை உங்கள் குழந்தைக்குக் காட்டி உற்சாகப் படுத்துங்கள். பிற உயிர்களிடம் அவனுக்கு அன்பும், உதவும் நற்குணமும் இதனால் வளரும். மேலும் இது அனைவரது மனதிற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
4.கைவினைப் பொருட்கள் செய்தல் (Do craftworks)
உங்கள் குழந்தைக்குச் சிறு கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுக் கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய பொருட்களை வைத்து, குறிப்பாக அட்டைப் பெட்டி, பழைய டப்பாக்கள் என்பனவற்றை எப்படி உபயோகமான பொருட்களாக மாற்றுவது என்று கற்றுக் கொடுங்கள். இது அவனுக்குச் சிந்திக்கும் திறனை வளர்ப்பதோடு, சற்று சுவாரசியமான வேலையாகவும் அமையும்.
5.சமையலில் ஆர்வம் ஏற்படுத்துதல் (Cooking)
குழந்தைகள் விளையாடச் சிறு சொப்பு சாமான்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவை மரம், கல், நிலை வெள்ளி,நெகிழி முதலிய பல்வேறு பொருட்களில் செய்யப் பட்டு சந்தையில் கிடைக்கின்றன. எனினும் நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப, கற்கள் அல்லது மரத்தால் செய்த சொப்பு சாமான்கள் வைத்து உங்கள் குழந்தைக்குச் சமையல் செய்யும் விளையாட்டை கற்றுக் கொடுக்கலாம். உங்கள் குழந்தையை மேலும் ஊக்கப் படுத்த, சில காய், மற்றும் பழங்களைக் கொடுத்தோ அல்லது நீங்கள் சமைத்த உணவில் சிறிது கொடுத்தோ விளையாட ஊக்குவிக்கலாம். இதனால் உங்கள் குழந்தைக்குச் சிறு வயதிலேயே சமையற்கலையில் ஆர்வம் ஏற்படக்கூடும்.
6.பேச்சுத் திறனை ஊக்கப்படுத்துதல் (Improve speaking skill)
உங்கள் குழந்தை ஒரு நல்ல பேச்சாளனாக ஆகும் திறன் உள்ளது என்று நீங்கள் நினைத்தால், அவனுக்கு ஒரு சிறிய தலைப்பு கொடுத்து அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைப் பற்றிப் பேசச் சொல்லுங்கள். மேலும் அவனை ஊக்கவிக்கும் வகையில் அவனுக்கு நீங்கள் சில பொது அறிவு தகவல்களையும் சொல்லிக் கொடுங்கள்.
7.மூளைத் திறனை அதிகப்படுத்தும் வகையிலான கணக்குகள் (Doing sums)
இன்று குழந்தைகளின் மூளைத் திறன் அதிகப்படும் வகையில் சிறு சிறு உபயோகமான கணக்குப் பாடங்கள் அல்லது நுணுக்கமான வகையில் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் பல செயல் திறன் பாடங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சுவாரசியம் குறையாமல் கற்றுக் கொடுக்கலாம்.
8.நீச்சல் (Swimming)
இது ஒரு அற்புதமான தற்காப்புக் கலையாகும்.உங்கள் வீட்டில் தொட்டி அமைத்தோ அல்லது அருகில் உள்ள பாதுகாப்பான நீர்நிலைகளுக்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று நீச்சல் கற்றுக் கொடுக்கலாம்.வெயில் காலத்தில் தண்ணீரில் விளையாடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.நீச்சல் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இவை மட்டும் இல்லாமல், மேலும் பல கோடை விடுமுறைக்கால செயல் திறன்கள் உங்கள் குழந்தைக்காக உள்ளன. எனினும், அவனுக்கு நீங்கள் அதனைக் கற்றுக் கொடுக்கும் முன் அதைப் பற்றிய பல விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். உங்கள் குழந்தையை உறவினர்கள் வீடு, பூங்கா, கண்காட்சி, அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். இது மேலும் அவனது நேரத்தை உபயோகமான வழியில் செலவு செய்வதோடு, பல விசயங்களைக் கற்றுக் கொள்ள நல்ல சூழலையும் உருவாக்கும்.
உங்கள் குழந்தைக்குப் படம் வரைவதில் ஆர்வம் இருக்கும். அவனுடன் அமர்ந்து நீங்களும் அவனுக்குச் சின்ன சின்னப் படங்களை வரையக் கற்றுக் கொடுக்கலாம். அப்படிச் செய்யும் போது மேலும் அவன் முறையாக கற்றுக் கொள்ளத் தொடங்குவான். இதனால் அவனது கற்பனைத் திறனும் அதிகரிக்கும்.
2.சிறு வீட்டுத் தோட்டம் அமைத்தல் (Gardening)
இன்று பெரும்பாலோனோர் அடுக்கு மாடிக் குடி இருப்பில் வசிக்கின்றனர். இதனால் தோட்டம் அமைக்கவோ, விளையாடவோ குழந்தைகளுக்குப் போதிய அளவு இடம் கிடைப்பதில்லை. இருந்தாலும், உங்கள் குழந்தைக்குச் செடி வளர்ப்பதில் ஆர்வத்தைத் தூண்ட உங்கள் வீட்டு மேல்மாடம் மற்றும் சமையல் அறையில் சிறு தொட்டிகளை வைத்து, செடிகளை வளர்க்க ஊக்குவியுங்கள். வெங்காயம், தக்காளி, வெந்தயம்,சில காய்கள்,பூச்செடிகள் ஆகியவற்றின் விதைகளை மண்ணில் விதைத்து அது எப்படி முளைத்து வளர்கின்றது என்று காட்டுங்கள். மேலும் அதற்கு அவனைத் தினமும் தண்ணீர் விடச் சொல்லி,இயற்கை மற்றும் விவசாயத்தின் அருமை பெருமைகளைப் பற்றிக் கூறிப் புரிய வையுங்கள். இதனால் அவன் இயற்கை மீது பற்று கொண்டவனாகவும், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவனாகவும் பின்னாளில் விளங்குவான்.
3.பறவைகளுக்கு உணவு தருதல் (Feed birds)
இந்த விடுமுறையில் வீட்டு மொட்டை மாடியில் பறவைகளுக்கென்று ஒரு தட்டில் உணவு மற்றும் தண்ணீர் வைப்பதை உங்கள் குழந்தையின் வாடிக்கையான பழக்கமாக மாற்றுங்கள். குறிப்பாக காகம், மைனா, புறா, சிட்டுக் குருவி போன்ற பல பறவைகள் சரியான உணவு கிடைக்காமல் பறந்து திரிந்து அலைகின்றன. ஆக ஓரிடத்திலேயே உணவு தினமும் கிடைக்கும் என்ற சூழலில்,அங்கு பறவைகள் வாடிக்கையாகத் தினமும் வரத் தொடங்கும். இதை உங்கள் குழந்தைக்குக் காட்டி உற்சாகப் படுத்துங்கள். பிற உயிர்களிடம் அவனுக்கு அன்பும், உதவும் நற்குணமும் இதனால் வளரும். மேலும் இது அனைவரது மனதிற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
4.கைவினைப் பொருட்கள் செய்தல் (Do craftworks)
உங்கள் குழந்தைக்குச் சிறு கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுக் கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய பொருட்களை வைத்து, குறிப்பாக அட்டைப் பெட்டி, பழைய டப்பாக்கள் என்பனவற்றை எப்படி உபயோகமான பொருட்களாக மாற்றுவது என்று கற்றுக் கொடுங்கள். இது அவனுக்குச் சிந்திக்கும் திறனை வளர்ப்பதோடு, சற்று சுவாரசியமான வேலையாகவும் அமையும்.
5.சமையலில் ஆர்வம் ஏற்படுத்துதல் (Cooking)
குழந்தைகள் விளையாடச் சிறு சொப்பு சாமான்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவை மரம், கல், நிலை வெள்ளி,நெகிழி முதலிய பல்வேறு பொருட்களில் செய்யப் பட்டு சந்தையில் கிடைக்கின்றன. எனினும் நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப, கற்கள் அல்லது மரத்தால் செய்த சொப்பு சாமான்கள் வைத்து உங்கள் குழந்தைக்குச் சமையல் செய்யும் விளையாட்டை கற்றுக் கொடுக்கலாம். உங்கள் குழந்தையை மேலும் ஊக்கப் படுத்த, சில காய், மற்றும் பழங்களைக் கொடுத்தோ அல்லது நீங்கள் சமைத்த உணவில் சிறிது கொடுத்தோ விளையாட ஊக்குவிக்கலாம். இதனால் உங்கள் குழந்தைக்குச் சிறு வயதிலேயே சமையற்கலையில் ஆர்வம் ஏற்படக்கூடும்.
6.பேச்சுத் திறனை ஊக்கப்படுத்துதல் (Improve speaking skill)
உங்கள் குழந்தை ஒரு நல்ல பேச்சாளனாக ஆகும் திறன் உள்ளது என்று நீங்கள் நினைத்தால், அவனுக்கு ஒரு சிறிய தலைப்பு கொடுத்து அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைப் பற்றிப் பேசச் சொல்லுங்கள். மேலும் அவனை ஊக்கவிக்கும் வகையில் அவனுக்கு நீங்கள் சில பொது அறிவு தகவல்களையும் சொல்லிக் கொடுங்கள்.
7.மூளைத் திறனை அதிகப்படுத்தும் வகையிலான கணக்குகள் (Doing sums)
இன்று குழந்தைகளின் மூளைத் திறன் அதிகப்படும் வகையில் சிறு சிறு உபயோகமான கணக்குப் பாடங்கள் அல்லது நுணுக்கமான வகையில் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் பல செயல் திறன் பாடங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சுவாரசியம் குறையாமல் கற்றுக் கொடுக்கலாம்.
8.நீச்சல் (Swimming)
இது ஒரு அற்புதமான தற்காப்புக் கலையாகும்.உங்கள் வீட்டில் தொட்டி அமைத்தோ அல்லது அருகில் உள்ள பாதுகாப்பான நீர்நிலைகளுக்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று நீச்சல் கற்றுக் கொடுக்கலாம்.வெயில் காலத்தில் தண்ணீரில் விளையாடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.நீச்சல் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இவை மட்டும் இல்லாமல், மேலும் பல கோடை விடுமுறைக்கால செயல் திறன்கள் உங்கள் குழந்தைக்காக உள்ளன. எனினும், அவனுக்கு நீங்கள் அதனைக் கற்றுக் கொடுக்கும் முன் அதைப் பற்றிய பல விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். உங்கள் குழந்தையை உறவினர்கள் வீடு, பூங்கா, கண்காட்சி, அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். இது மேலும் அவனது நேரத்தை உபயோகமான வழியில் செலவு செய்வதோடு, பல விசயங்களைக் கற்றுக் கொள்ள நல்ல சூழலையும் உருவாக்கும்.
இன்றைய குழந்தைகளிடம், பொதுவாக எதையும் வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்வதும், அட்வைஸ் செய்வதும் அபத்தமானது. எதையும் நேரடியாகப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கலாம்.
இன்றைய குழந்தைகளுக்கு 'அட்வைஸ்' என்பதே ஆகாத விஷயமாக இருக்கிறது. முந்தைய தலைமுறையினர், அடுத்த பத்தாண்டுகளுக்கு எப்படி வாழவேண்டும் என்பதைக் குறிக்கோள் அமைத்து வாழ்க்கை நடத்தியவர்கள். இன்றைய குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திட்டம் அமைகிறது. பிரச்னைகள் வந்தால், 'பார்த்துக்கொள்கிறேன்' என தைரியமாகச் சொல்ல முடிகிறது. புதிதாக வந்து இறங்கும் டெக்னாலஜி எல்லாம் ஓரிரு நாட்களில் அப்டேட் இல்லாததாகிவிடுகிறது. அடுத்த வருஷம் என்ன நடக்கும் என்றே சொல்ல முடிவதில்லை.
எதிலும் பர்ஃபெக்ட் பார்க்கவே கூடாது. எனக்கு பிடித்ததைச் செய்வேன். என்னால் முடிந்ததைச் செய்வேன் என்ற ஐடியாலஜியில் கண்கட்டவைக்கின்றனர். அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கும்போதே காதைப் பொத்திக்கொண்டு ஓட்டம் எடுக்கின்றனர். 'எதிர்காலம் பற்றிய எந்த இலக்குமே இல்லாமல் இருக்கானே' என்ற பதைபதைப்பு பெற்றோர் மனதில் உருவாகக் காரணமாக இருக்கும் குழந்தைகளை எப்படி வளர்த்தெடுக்கலாம்.
குழந்தைகளிடம் வார்த்தையால் பேசக் கூடாது. செயலால் பேச வேண்டும். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைகள் எழ வேண்டும் எனில், அதற்கு முன் பெற்றோர் எழுவதை வழக்கப்படுத்தவும்.
* எந்த ஒரு இடத்துக்குச் செல்லும்போதும் பெற்றோர் குறித்த நேரத்துக்குச் செல்வது நேரமேலாண்மையைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்.
* தன் பொருளாதார நிலை, குடும்ப நிலை என்ன, பெற்றோர் தங்களது கனவு என்ன, இன்னும் ஐந்து ஆண்டில் நான் என்னவாகப்போகிறேன். அதற்காக நான் இப்போது எப்படி உழைக்கிறேன் என்பதை அட்வைசாக இல்லாமல், தங்களது அனுபவத்தின் வழியே குழந்தைகளுக்குத் தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும். தனது கனவு என்ன என்று குழந்தைகளுக்குள் ஒரு தேடல் துவங்கும்.
* குழந்தைகளுக்கான குறிக்கோள், நோக்கம் என்பதை விளையாட்டின்மூலம் புரியவைக்கலாம். விளையாட்டில் அவர்கள் இலக்கை எட்டி வெற்றியின் ருசியைப் புரிந்துகொள்கின்றனர். 'ஐந்து ஆண்டுகளுக்கு பின் நீ எப்படி இருப்பாய்' என்ற கோல் சார்ட் தயார்செய்யச் சொல்லுங்கள். அதில் குழந்தைகளின் கனவுகள் படங்களாகவும், வண்ணங்களாகவும் இடம்பெறும். அதை, அவர்கள் பார்வையில் படும்படி மாட்டிவைக்கலாம். தினமும் அதைப் பார்க்கும்போது அந்தக் கனவுக்காகவும் உழைக்கத் துவங்குவார்கள்.
* வீட்டில், குழந்தைகள் முன் செய்தித்தாள் படிப்பது, புத்தகம் வாசிக்கும் பழக்கம் பெற்றோருக்கு வேண்டும். குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாதல் ஆகியவற்றை அவர்களுக்குப் புரிந்த மொழியில் விவாதிக்க வேண்டும். அதுபற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அந்தச் சமயத்தில் என்ன செய்திருக்கலாம் என்பதையும் கருத்துக் கேட்பதுபோல விழிப்புணர்வை உண்டாக்க முடியும்.
* மாதம் ஒரு முறை குழந்தைகளிடம் உள்ள தேவையற்ற பொருள்களைப் பட்டியலிடச் சொல்லுங்கள். அவற்றைப் பயன்படும் குழந்தைகளுக்குத் தர குழந்தை-அம்மாஊக்கப்படுத்தலாம். ஆதரவற்ற இல்லங்களுக்கு அழைத்துச்செல்வதன் வழியாக குழந்தைகள் நிலை குறித்து உணர்த்தலாம். ஆசைக்காகப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் மாறி, உதவும் எண்ணம் உருவாகும்.
* உணவை வீணாக்காதே என்று சொல்வதற்குப் பதிலாக உணவு உற்பத்திசெய்யப்படும் விவசாய நிலத்தைப் பார்வையிடச் செய்யலாம். உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வார்கள். இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சம், தண்ணீருக்கு மக்கள் படும் அவலத்தையும் உணர்த்துங்கள். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவார்கள்.
* ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைக் குழந்தைகள் விரும்பிக் கேட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள், அது தயாரிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள், அதில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்கள் நாளடைவில் ஏற்படுத்த இருக்கும் விளைவுகளையும் விளக்கலாம்.
* இன்றைய குழந்தைகளிடம், பொதுவாக எதையும் வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்வதும். அட்வைஸ் செய்வதும் அபத்தமானது. எதையும் நேரடியாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பளிக்கலாம். விளக்கமாகச் சொல்லிப் புரியவைக்கலாம். அந்தந்த விஷயங்கள் பற்றி அவர்களின் கருத்துகளையும் கேட்டுக்கொள்வது அவசியம்.
எதிலும் பர்ஃபெக்ட் பார்க்கவே கூடாது. எனக்கு பிடித்ததைச் செய்வேன். என்னால் முடிந்ததைச் செய்வேன் என்ற ஐடியாலஜியில் கண்கட்டவைக்கின்றனர். அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கும்போதே காதைப் பொத்திக்கொண்டு ஓட்டம் எடுக்கின்றனர். 'எதிர்காலம் பற்றிய எந்த இலக்குமே இல்லாமல் இருக்கானே' என்ற பதைபதைப்பு பெற்றோர் மனதில் உருவாகக் காரணமாக இருக்கும் குழந்தைகளை எப்படி வளர்த்தெடுக்கலாம்.
குழந்தைகளிடம் வார்த்தையால் பேசக் கூடாது. செயலால் பேச வேண்டும். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைகள் எழ வேண்டும் எனில், அதற்கு முன் பெற்றோர் எழுவதை வழக்கப்படுத்தவும்.
* எந்த ஒரு இடத்துக்குச் செல்லும்போதும் பெற்றோர் குறித்த நேரத்துக்குச் செல்வது நேரமேலாண்மையைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்.
* தன் பொருளாதார நிலை, குடும்ப நிலை என்ன, பெற்றோர் தங்களது கனவு என்ன, இன்னும் ஐந்து ஆண்டில் நான் என்னவாகப்போகிறேன். அதற்காக நான் இப்போது எப்படி உழைக்கிறேன் என்பதை அட்வைசாக இல்லாமல், தங்களது அனுபவத்தின் வழியே குழந்தைகளுக்குத் தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும். தனது கனவு என்ன என்று குழந்தைகளுக்குள் ஒரு தேடல் துவங்கும்.
* குழந்தைகளுக்கான குறிக்கோள், நோக்கம் என்பதை விளையாட்டின்மூலம் புரியவைக்கலாம். விளையாட்டில் அவர்கள் இலக்கை எட்டி வெற்றியின் ருசியைப் புரிந்துகொள்கின்றனர். 'ஐந்து ஆண்டுகளுக்கு பின் நீ எப்படி இருப்பாய்' என்ற கோல் சார்ட் தயார்செய்யச் சொல்லுங்கள். அதில் குழந்தைகளின் கனவுகள் படங்களாகவும், வண்ணங்களாகவும் இடம்பெறும். அதை, அவர்கள் பார்வையில் படும்படி மாட்டிவைக்கலாம். தினமும் அதைப் பார்க்கும்போது அந்தக் கனவுக்காகவும் உழைக்கத் துவங்குவார்கள்.
* வீட்டில், குழந்தைகள் முன் செய்தித்தாள் படிப்பது, புத்தகம் வாசிக்கும் பழக்கம் பெற்றோருக்கு வேண்டும். குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாதல் ஆகியவற்றை அவர்களுக்குப் புரிந்த மொழியில் விவாதிக்க வேண்டும். அதுபற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அந்தச் சமயத்தில் என்ன செய்திருக்கலாம் என்பதையும் கருத்துக் கேட்பதுபோல விழிப்புணர்வை உண்டாக்க முடியும்.
* மாதம் ஒரு முறை குழந்தைகளிடம் உள்ள தேவையற்ற பொருள்களைப் பட்டியலிடச் சொல்லுங்கள். அவற்றைப் பயன்படும் குழந்தைகளுக்குத் தர குழந்தை-அம்மாஊக்கப்படுத்தலாம். ஆதரவற்ற இல்லங்களுக்கு அழைத்துச்செல்வதன் வழியாக குழந்தைகள் நிலை குறித்து உணர்த்தலாம். ஆசைக்காகப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் மாறி, உதவும் எண்ணம் உருவாகும்.
* உணவை வீணாக்காதே என்று சொல்வதற்குப் பதிலாக உணவு உற்பத்திசெய்யப்படும் விவசாய நிலத்தைப் பார்வையிடச் செய்யலாம். உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வார்கள். இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சம், தண்ணீருக்கு மக்கள் படும் அவலத்தையும் உணர்த்துங்கள். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவார்கள்.
* ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைக் குழந்தைகள் விரும்பிக் கேட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள், அது தயாரிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள், அதில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்கள் நாளடைவில் ஏற்படுத்த இருக்கும் விளைவுகளையும் விளக்கலாம்.
* இன்றைய குழந்தைகளிடம், பொதுவாக எதையும் வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்வதும். அட்வைஸ் செய்வதும் அபத்தமானது. எதையும் நேரடியாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பளிக்கலாம். விளக்கமாகச் சொல்லிப் புரியவைக்கலாம். அந்தந்த விஷயங்கள் பற்றி அவர்களின் கருத்துகளையும் கேட்டுக்கொள்வது அவசியம்.
வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் பணி நேரம் முடியும் வரை குழந்தைகளை பராமரிக்கும் ‘டே கேர்’ வசதி கொண்ட பள்ளிகளை அணுகுகிறார்கள். அத்தகைய பள்ளிகளை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
குழந்தைகளை முதலில் மழலையர் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு பெரும்பாலான பெற்றோர் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் பணி நேரம் முடியும் வரை குழந்தைகளை பராமரிக்கும் ‘டே கேர்’ வசதி கொண்ட பள்ளிகளை அணுகுகிறார்கள். அத்தகைய பள்ளிகளை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
* நன்கு பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள்தான் குழந்தைகளின் எதிர் காலத்திற்கு வழிகாட்டியாக விளங்குகிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு அங்குள்ள ஆசிரியர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.
* குழந்தைகள் மீது ஆசிரியர்கள் அக்கறை கொண்டவர்களாகவும், நம்பகமானவர்களாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் எந்த அளவிற்கு குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்கிறார்களோ அந்த அளவிற்கு குழந்தைகள் கல்வி கற்கும் திறனும் சிறப்பாக இருக்கும்.
* குழந்தையை மழலையர் பள்ளியில் சேர்த்து சில நாட்கள் கடந்ததும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியருடன் எந்த அளவிற்கு குழந்தை நட்பு கொண்டிருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தை பேச தயங்கினால், அந்த தயக்கத்தை போக்க வழிவகை செய்யுமாறு ஆசிரியரிடம் கூற வேண்டும். ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிக்கொடுக்க வேண்டும். விளையாடுவதற்கும் ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளின் நல்ல செயல்களை பாராட்டி ஊக்குவிக்கவேண்டும். இத்தகைய நடைமுறைகள் பள்ளிக்கூடத்தில் பின்பற்றப்படுகிறதா என்பதை கேட்டறிவது அவசியம்.
* மழலையர் பள்ளிகள் சமூகம் சார்ந்த விஷயங்களை போதிக்கும் இடமாகவும், குழந்தைகளின் மன வளர்ச்சியை மேம்படுத்தும் இடமாகவும் விளங்க வேண்டும். ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும் பொறுமையாக குழந்தைகளுக்கு போதிக்கிறார்களா? என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
* விளையாட்டுடன் தொடர்புபடுத்தி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தால் விரைவாக புரிந்து கொள்வார்கள். அப்போது அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்களும் நினைவில் இருக்கும். அதனால் மழலையர் பள்ளியை தேர்ந் தெடுக்கும்போது விளையாட்டு சார்ந்த பயிற்சி இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
* நன்கு பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள்தான் குழந்தைகளின் எதிர் காலத்திற்கு வழிகாட்டியாக விளங்குகிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு அங்குள்ள ஆசிரியர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.
* குழந்தைகள் மீது ஆசிரியர்கள் அக்கறை கொண்டவர்களாகவும், நம்பகமானவர்களாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் எந்த அளவிற்கு குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்கிறார்களோ அந்த அளவிற்கு குழந்தைகள் கல்வி கற்கும் திறனும் சிறப்பாக இருக்கும்.
* குழந்தையை மழலையர் பள்ளியில் சேர்த்து சில நாட்கள் கடந்ததும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியருடன் எந்த அளவிற்கு குழந்தை நட்பு கொண்டிருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தை பேச தயங்கினால், அந்த தயக்கத்தை போக்க வழிவகை செய்யுமாறு ஆசிரியரிடம் கூற வேண்டும். ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிக்கொடுக்க வேண்டும். விளையாடுவதற்கும் ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளின் நல்ல செயல்களை பாராட்டி ஊக்குவிக்கவேண்டும். இத்தகைய நடைமுறைகள் பள்ளிக்கூடத்தில் பின்பற்றப்படுகிறதா என்பதை கேட்டறிவது அவசியம்.
* மழலையர் பள்ளிகள் சமூகம் சார்ந்த விஷயங்களை போதிக்கும் இடமாகவும், குழந்தைகளின் மன வளர்ச்சியை மேம்படுத்தும் இடமாகவும் விளங்க வேண்டும். ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும் பொறுமையாக குழந்தைகளுக்கு போதிக்கிறார்களா? என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
* விளையாட்டுடன் தொடர்புபடுத்தி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தால் விரைவாக புரிந்து கொள்வார்கள். அப்போது அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்களும் நினைவில் இருக்கும். அதனால் மழலையர் பள்ளியை தேர்ந் தெடுக்கும்போது விளையாட்டு சார்ந்த பயிற்சி இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
முதல் குழந்தை பெற்றவர்களுக்கு இது பல விதமான பயங்களை தரக்கூடும். குழந்தை வளர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
குழந்தை வளர்ப்பு என்பது ரசனையானது மட்டுமல்ல, கடினமானதும் பொறுப்புமிக்கதும் கூட. அதுவும் முதல் குழந்தை பெற்றவர்களுக்கு இது பல விதமான பயங்களை தரக்கூடும். குழந்தை வளர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
குழந்தைகள் பெரும்பாலும் தாயின் அணைப்பிலும், பாதுகாப்பிலும் இருப்பதையே விரும்புவார்கள். அந்த நிம்மதியே அவர்களின் மனவளர்ச்சிக்கு ஏதுவாக அமைகிறது.
குழந்தைகளுக்கு மிருதுவான பருத்தித்துணிகள் அணிவிப்பது ஆரோக்கிமானது. தடுப்பூசிகளை தவறாமல் போட்டுவிட வேண்டும்.
பிறந்த குழந்தையை எந்த காரணத்திற்காகவும் குலுக்குவது கூடாது. இது மிகவும் ஆபத்தான செயலாகும்.
குழந்தைகளுக்கு பிறந்த முதல் இரண்டு மாதங்களுக்கு ஒருநாளைக்கு 16 மணிநேர தூக்கம் அவசியம். ஒவ்வொரு தூக்க நேரமும் 2-4 மணிநேரங்கள் இருக்கும்.
குழந்தைகளின் நகங்கள் வேகமாக வளரக்கூடியவை. இதனால் குழந்தை கை, கால்களை அசைக்கும் போது கீறல்களை உண்டாக்கும் வாய்ப்பு உண்டு. அதனால் அடிக்கடி குழந்தையின் நகங்களை வெட்டி விட வேண்டியது அவசியம்.
பிறந்த மூன்று வாரங்கள் வரை மிருதுவான துணியால் குழந்தையின் உடம்பை துடைத்தால் போதும். ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இது போன்று செய்தால் போதுமானது. மிகவும் சூடான தண்ணீரிலோ அல்லது குளிர்ந்த தண்ணீரிலோ குழந்தைகளை குளிக்க வைக்க கூடாது.
பிறந்தது முதல் 6 மாதம் அவர்களுக்கு தாய்ப்பால் மிக அவசியமானது. தண்ணீர் கூட தேவையேயில்லை. குழந்தைகளை தொற்றுகளிலிருந்து பாதுகாக்க கூடியது தாய்ப்பாலே. அதில் தான் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது.
பிறந்த குழந்தையை தூக்கும் போது தலைக்கு கைகளை கொடுத்து தூக்க வேண்டியது மிக அவசியம்.
பிறந்து 2 வாரம் முடிந்த உடன், குழந்தையை கொஞ்சுவது ஒலி எழுப்பி கூப்பிடுவது குழந்தையிடம் பேசுவது போன்ற செயல்களை செய்தால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
6 மாதங்களுக்கு பின் தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கத்தொடங்கலாம். 2 வயதில் பெரியவர்கள் உண்ணும் உணவுகளை குழந்தையும் உண்ணும் வகையில் பழக்க வேண்டும்.
7-8 மாதத்தில் பேச ஆரம்பிக்கையில் அவர்களுடன் வீட்டிலுள்ளோர் அதிகம் பேச வேண்டும். அதே சமயம் இயற்கை உபாதைகள் வந்தால் பெற்றோர்களிடம் தெரிவிக்கும் முறையில் அவர்களை பழக்கிவிட வேண்டும்.
கவனமாக இருந்தால் குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே.
குழந்தைகள் பெரும்பாலும் தாயின் அணைப்பிலும், பாதுகாப்பிலும் இருப்பதையே விரும்புவார்கள். அந்த நிம்மதியே அவர்களின் மனவளர்ச்சிக்கு ஏதுவாக அமைகிறது.
குழந்தைகளுக்கு மிருதுவான பருத்தித்துணிகள் அணிவிப்பது ஆரோக்கிமானது. தடுப்பூசிகளை தவறாமல் போட்டுவிட வேண்டும்.
பிறந்த குழந்தையை எந்த காரணத்திற்காகவும் குலுக்குவது கூடாது. இது மிகவும் ஆபத்தான செயலாகும்.
குழந்தைகளுக்கு பிறந்த முதல் இரண்டு மாதங்களுக்கு ஒருநாளைக்கு 16 மணிநேர தூக்கம் அவசியம். ஒவ்வொரு தூக்க நேரமும் 2-4 மணிநேரங்கள் இருக்கும்.
குழந்தைகளின் நகங்கள் வேகமாக வளரக்கூடியவை. இதனால் குழந்தை கை, கால்களை அசைக்கும் போது கீறல்களை உண்டாக்கும் வாய்ப்பு உண்டு. அதனால் அடிக்கடி குழந்தையின் நகங்களை வெட்டி விட வேண்டியது அவசியம்.
பிறந்த மூன்று வாரங்கள் வரை மிருதுவான துணியால் குழந்தையின் உடம்பை துடைத்தால் போதும். ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இது போன்று செய்தால் போதுமானது. மிகவும் சூடான தண்ணீரிலோ அல்லது குளிர்ந்த தண்ணீரிலோ குழந்தைகளை குளிக்க வைக்க கூடாது.
பிறந்தது முதல் 6 மாதம் அவர்களுக்கு தாய்ப்பால் மிக அவசியமானது. தண்ணீர் கூட தேவையேயில்லை. குழந்தைகளை தொற்றுகளிலிருந்து பாதுகாக்க கூடியது தாய்ப்பாலே. அதில் தான் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது.
பிறந்த குழந்தையை தூக்கும் போது தலைக்கு கைகளை கொடுத்து தூக்க வேண்டியது மிக அவசியம்.
பிறந்து 2 வாரம் முடிந்த உடன், குழந்தையை கொஞ்சுவது ஒலி எழுப்பி கூப்பிடுவது குழந்தையிடம் பேசுவது போன்ற செயல்களை செய்தால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
6 மாதங்களுக்கு பின் தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கத்தொடங்கலாம். 2 வயதில் பெரியவர்கள் உண்ணும் உணவுகளை குழந்தையும் உண்ணும் வகையில் பழக்க வேண்டும்.
7-8 மாதத்தில் பேச ஆரம்பிக்கையில் அவர்களுடன் வீட்டிலுள்ளோர் அதிகம் பேச வேண்டும். அதே சமயம் இயற்கை உபாதைகள் வந்தால் பெற்றோர்களிடம் தெரிவிக்கும் முறையில் அவர்களை பழக்கிவிட வேண்டும்.
கவனமாக இருந்தால் குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே.
உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா. சுகாதார அமைப்பு கூறுகிறது.
இன்று நம்மை ஆட்டிப்படைக்கும் கொரோனா தாக்குதலில் இருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்துகிறது. கொரோனா காலம் மட்டுமல்ல எந்த காலத்திலேயும் கை சுத்தம் என்பது ஆரோக்கியத்தின் மிகப்பெரிய அடையாளம்.
சுகாதாரமற்ற குடிநீர், சுகாதார சீர்கேடு, தூய்மையின்மை போன்றவைதான் நோய்களுக்கு அடிப்படை. இவற்றின் மூலமே பலவிதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு பரவுகின்றன.
உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா. சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆண்டில் 170 கோடி பேரை பாதிக்கும் இந்த நோய்க்கு, 6 லட்சம் குழந்தைகள் பலியாகி விடுகிறார்கள்.
தூய்மையின்மை காரணமாகவும், கை அசுத்தமாக இருப்பதும் நோய் தொற்று ஏற்பட வசதியாக உள்ளது. அதனால் தூய்மையை கடைபிடித்தாலே வாந்தி, பேதியை ஏற்படுத்தும் நோய் தொற்றுகளில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு மிகவும் எளிய வழி வெளியில் சென்று வந்த பிறகு, கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுவதுதான்.
பல குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன. மருத்துவமனையில் உள்ள குழந்தைகளையும் நோயாளிகளையும் கூட்டம் கூட்டமாக பார்க்கச் செல்லும் உறவினர்களும் இதற்கு ஒரு காரணம். எனவே கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கை கழுவுவதன் அவசியத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும்.
குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், பால் புகட்டும்போதும், உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகள், சிறுநீர், மலம் பட்ட துணிகளை கையாளும்போது கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும். அப்படி செய்தால் நோய் பாதிப்பின்றி, ஆரோக்கியமாக வாழலாம்.
கை கழுவுவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உலக கை கழுவும் நாள் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்காக இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது. ‘தூய்மையான கைகள்; பாதுகாப்பான வாழ்க்கை’ என்பதே இந்த நாள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம்.
சுகாதாரமற்ற குடிநீர், சுகாதார சீர்கேடு, தூய்மையின்மை போன்றவைதான் நோய்களுக்கு அடிப்படை. இவற்றின் மூலமே பலவிதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு பரவுகின்றன.
உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா. சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆண்டில் 170 கோடி பேரை பாதிக்கும் இந்த நோய்க்கு, 6 லட்சம் குழந்தைகள் பலியாகி விடுகிறார்கள்.
தூய்மையின்மை காரணமாகவும், கை அசுத்தமாக இருப்பதும் நோய் தொற்று ஏற்பட வசதியாக உள்ளது. அதனால் தூய்மையை கடைபிடித்தாலே வாந்தி, பேதியை ஏற்படுத்தும் நோய் தொற்றுகளில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு மிகவும் எளிய வழி வெளியில் சென்று வந்த பிறகு, கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுவதுதான்.
பல குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன. மருத்துவமனையில் உள்ள குழந்தைகளையும் நோயாளிகளையும் கூட்டம் கூட்டமாக பார்க்கச் செல்லும் உறவினர்களும் இதற்கு ஒரு காரணம். எனவே கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கை கழுவுவதன் அவசியத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும்.
குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், பால் புகட்டும்போதும், உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகள், சிறுநீர், மலம் பட்ட துணிகளை கையாளும்போது கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும். அப்படி செய்தால் நோய் பாதிப்பின்றி, ஆரோக்கியமாக வாழலாம்.
கை கழுவுவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உலக கை கழுவும் நாள் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்காக இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது. ‘தூய்மையான கைகள்; பாதுகாப்பான வாழ்க்கை’ என்பதே இந்த நாள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம்.
மொழிப் பாடங்களுக்கு சமீபகாலமாக வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அத்தகைய மொழிப்பாடங்களிலும், இலக்கியப்பட்டப் படிப்புகளிலும் உள்ளடங்கியிருக்கும் சாராம்சங்களை விரிவாக அலசலாம்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, அரபு, பிரெஞ்சு போன்ற மொழிப் பாடங்களுக்கு சமீபகாலமாக வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அத்தகைய மொழிப்பாடங்களிலும், இலக்கியப்பட்டப் படிப்புகளிலும் உள்ளடங்கியிருக்கும் சாராம்சங்களை விரிவாக அலசலாம்.
ஆசிரியர் துறையில் மொழிப்பாடம் படித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதிலும், முன்னுரிமைக்காகக் காத்திருக்காது, தகுதித் தேர்வை எழுதித் தனக்கான அரசுப் பணியை உறுதி செய்துகொள்ளும் இளம்வயதினர் அதிகரித்துள்ளனர். அரசுப் பணி மட்டுமல்ல, தனியார் துறையிலும் அதற்கு நிகரான ஊதியம் கிடைக்கும் என்பதால் மொழி, கலைப் படிப்புகளில் தகுதியை வளர்த்துக்கொள்ளலாம்.
ஆசிரியர் துறைக்கு நிகராக வேலை வாய்ப்புகள் கொண்டது ஊடகத் துறை. அச்சு, காட்சி, பண்பலை வானொலி, இணையம், விளம்பரத்துறை என பரந்து விரிந்திருக்கும் ஊடகத் துறையின் மீது ஆர்வமும், திறமையும் உள்ளவர்களுக்கு மென் பொருள் நிறுவனப் பணியாளர்களுக்கு இணையான ஊதிய வாய்ப்புகள் பொதிந்திருக்கின்றன.
அடிப்படையான பட்டப்படிப்புடன், மின் பதிப்புத் துறைக்கான கணினி சார்ந்த குறுகிய காலப் படிப்புகளை கூடுதலாக மேற்கொண்டால் ஊடகத்துறைக்குள் தடம் பதிப்பதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம். படைப்புகளை எழுத, சரிபார்க்க, பிழை திருத்த, செய்திகளைச் சேகரிக்க, தொகுத்து வழங்க... என காட்சி ஊடகங்களில் திரைக்கு முன்னேயும், பின்னேயும் வேலைவாய்ப்புகள் அதிகமுண்டு.
உலகம் திறந்த சந்தையான பிறகு மொழி பெயர்ப் பாளர்களுக்கு அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. எழுத்து சார்ந்து மட்டுமல்ல, தொலைக்காட்சி, திரைத்துறை எனப் படைப்பு சார்ந்த அனைத்து வகையிலும் மொழிபெயர்ப்பாளர்கள் கோலோச்சுகிறார்கள். இதற்கு இரண்டு மொழிகளில் புலமை அவசியம். இந்த வரிசையில் ஒப்பிலக்கியத் துறையிலும் வேலை வாய்ப்புகள் உண்டு.
பி.ஏ. பட்டப் படிப்போடு முதுநிலை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளில் திறமையை மெருக்கேற்றிக்கொள்பவர்களுக்கு அதற்கேற்ற தரமான வேலைவாய்ப்புகள் வாய்க்கும். முதுநிலையிலும் இதே மொழி அல்லது இலக்கியத்தைப் பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கல்வெட்டியியல், சுவடியியல், நாட்டுப்புறவியல், மகளிரியல், இதழியல்... எனத் தளங்களை மாற்றிக்கொள்ளலாம்.
குடிமைப்பணி மற்றும் இதர போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் மற்ற பட்டப்படிப்புகளோடு மொழி பட்டங்களை தேர்வு செய்வது சிறப்பு. குடிமைத் தேர்வில் விருப்ப பாடமாக தாய்மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்பதால், இதர பட்டம் முடிப்பவர்களும் தமிழை விரும்பி தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். இந்த வகையில் தமிழைப் பாடமாகப் படித்தால் தேர்வு மேலும் சுலபமாகும். அதுபோலவே அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகள் மற்றும் ரெயில்வே, வங்கித்துறை போட்டித்தேர்வுகளிலும் இவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து சிறப்பான எதிர்காலத்தைத் தீர்மானித்துக்கொள்ளலாம்.
பி.ஏ. ஆங்கிலம் படித்தவர்கள் பி.பி.ஓ., கே.பி.ஓ. போன்ற அவுட்சோர்ஸிங் துறைகளிலும், மார்க்கெட்டிங் துறைகளிலும் மிளிருகிறார்கள். டெக்னிக்கல் ரைட்டிங் எனப்படும் நுகர்வோர் உபயோகப் பொருட்களின் விவரக்குறிப்புகளை எழுதுவது, இணைய தளங்களை வடிவமைப்பது போன்றவற்றில் அத்துறை வல்லுநர்களுக்கு இணையாக ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப் படுகிறார்கள். அதிலும் மின்பதிப்புத் துறையில் ‘டிஜிட்டல் காப்பி ரைட்டர்’ பணிக்கு அதிகத் தேவை நிலவுகிறது.
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நிகராகப் பெருகி வரும் பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டம் ஆங்கிலத்தை சார்ந்திருப்பதால் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணிபெறலாம்.
வெளிநாடுகளுக்குப் படிக்க செல்லும் மாணவர்களுக்கான ஐ.ஈ.எல்.டி.எஸ். மற்றும் டி.ஓ.எப்.ஈ.எல். மையங் களின் தேவை அதிகமாக உள்ளது. ஆங்கிலப் பட்டம் முடித்தவர்கள் கூடுதலாக இதற்கென தனியாக பயிற்சியை முடித்தோ அதற்கான மையங்களின் அங்கீகாரம் பெற்ற கிளை பயிற்சி மையங்களை தொடங்கியோ சொந்தக்காலில் நிற்கலாம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புத்துறை தொடர்பான வழிகாட்டுதல் மையங்களை தொடங்கலாம். இதற்கு அத்துறை சார்ந்த நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்த அனுபவமே கைகொடுக்கும்.
இது தவிர, ஆங்கிலத்தில் சிறப்பாக பேச, எழுத தெரிவது என்பது பரவலான வேலை வாய்ப்புச்சந்தை. ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்பவர்கள் மற்றும் பணியில் இருப்பவர்கள் தங்களது ஆய்வறிக்கை அல்லது தொழில்சார் அறிக்கைகளை வடிவமைக்கும்போது மொழிசார் வல்லு நரின் உதவி அதிகமாகத் தேவைப்படும். வீட்டிலிருந்தபடி யும், வேறு பணியிலிருந்தபடியே பகுதி நேரமாகவும் சம்பாதிப்பவர்கள் அதிகரித்துள்ளனர். இது தவிர, இல்லத்தரசியாக இருந்தோ, பகுதி நேரப் பணியாகவோ இணையம் வாயிலாக ஆசிரியராக பணியாற்றி கணிசமாகச் சம்பாதிப்பவர்கள் நகர் பகுதிகளில் அதிகரித்திருக் கிறார்கள். அரசு மற்றும் தனியார் துறையில் மக்கள் தொடர்புத்துறை பணிகள், கொள்கை விளக்கங்கள், பிரசாரங்கள், பிரசுரங்களை உருவாக்குவது போன்ற வற்றிலும் கணிசமான வேலை வாய்ப்புகள் உண்டு. தற்போது முதுநிலை படிப்பாக சட்டம், மனிதவளத் துறை, மேலாண்மைத் துறை படிப்புகளை மேற்கொள்வதும் பரவலாகிவருகிறது.
ஆசிரியர் துறையில் மொழிப்பாடம் படித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதிலும், முன்னுரிமைக்காகக் காத்திருக்காது, தகுதித் தேர்வை எழுதித் தனக்கான அரசுப் பணியை உறுதி செய்துகொள்ளும் இளம்வயதினர் அதிகரித்துள்ளனர். அரசுப் பணி மட்டுமல்ல, தனியார் துறையிலும் அதற்கு நிகரான ஊதியம் கிடைக்கும் என்பதால் மொழி, கலைப் படிப்புகளில் தகுதியை வளர்த்துக்கொள்ளலாம்.
ஆசிரியர் துறைக்கு நிகராக வேலை வாய்ப்புகள் கொண்டது ஊடகத் துறை. அச்சு, காட்சி, பண்பலை வானொலி, இணையம், விளம்பரத்துறை என பரந்து விரிந்திருக்கும் ஊடகத் துறையின் மீது ஆர்வமும், திறமையும் உள்ளவர்களுக்கு மென் பொருள் நிறுவனப் பணியாளர்களுக்கு இணையான ஊதிய வாய்ப்புகள் பொதிந்திருக்கின்றன.
அடிப்படையான பட்டப்படிப்புடன், மின் பதிப்புத் துறைக்கான கணினி சார்ந்த குறுகிய காலப் படிப்புகளை கூடுதலாக மேற்கொண்டால் ஊடகத்துறைக்குள் தடம் பதிப்பதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம். படைப்புகளை எழுத, சரிபார்க்க, பிழை திருத்த, செய்திகளைச் சேகரிக்க, தொகுத்து வழங்க... என காட்சி ஊடகங்களில் திரைக்கு முன்னேயும், பின்னேயும் வேலைவாய்ப்புகள் அதிகமுண்டு.
உலகம் திறந்த சந்தையான பிறகு மொழி பெயர்ப் பாளர்களுக்கு அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. எழுத்து சார்ந்து மட்டுமல்ல, தொலைக்காட்சி, திரைத்துறை எனப் படைப்பு சார்ந்த அனைத்து வகையிலும் மொழிபெயர்ப்பாளர்கள் கோலோச்சுகிறார்கள். இதற்கு இரண்டு மொழிகளில் புலமை அவசியம். இந்த வரிசையில் ஒப்பிலக்கியத் துறையிலும் வேலை வாய்ப்புகள் உண்டு.
பி.ஏ. பட்டப் படிப்போடு முதுநிலை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளில் திறமையை மெருக்கேற்றிக்கொள்பவர்களுக்கு அதற்கேற்ற தரமான வேலைவாய்ப்புகள் வாய்க்கும். முதுநிலையிலும் இதே மொழி அல்லது இலக்கியத்தைப் பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கல்வெட்டியியல், சுவடியியல், நாட்டுப்புறவியல், மகளிரியல், இதழியல்... எனத் தளங்களை மாற்றிக்கொள்ளலாம்.
குடிமைப்பணி மற்றும் இதர போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் மற்ற பட்டப்படிப்புகளோடு மொழி பட்டங்களை தேர்வு செய்வது சிறப்பு. குடிமைத் தேர்வில் விருப்ப பாடமாக தாய்மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்பதால், இதர பட்டம் முடிப்பவர்களும் தமிழை விரும்பி தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். இந்த வகையில் தமிழைப் பாடமாகப் படித்தால் தேர்வு மேலும் சுலபமாகும். அதுபோலவே அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகள் மற்றும் ரெயில்வே, வங்கித்துறை போட்டித்தேர்வுகளிலும் இவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து சிறப்பான எதிர்காலத்தைத் தீர்மானித்துக்கொள்ளலாம்.
பி.ஏ. ஆங்கிலம் படித்தவர்கள் பி.பி.ஓ., கே.பி.ஓ. போன்ற அவுட்சோர்ஸிங் துறைகளிலும், மார்க்கெட்டிங் துறைகளிலும் மிளிருகிறார்கள். டெக்னிக்கல் ரைட்டிங் எனப்படும் நுகர்வோர் உபயோகப் பொருட்களின் விவரக்குறிப்புகளை எழுதுவது, இணைய தளங்களை வடிவமைப்பது போன்றவற்றில் அத்துறை வல்லுநர்களுக்கு இணையாக ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப் படுகிறார்கள். அதிலும் மின்பதிப்புத் துறையில் ‘டிஜிட்டல் காப்பி ரைட்டர்’ பணிக்கு அதிகத் தேவை நிலவுகிறது.
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நிகராகப் பெருகி வரும் பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டம் ஆங்கிலத்தை சார்ந்திருப்பதால் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணிபெறலாம்.
வெளிநாடுகளுக்குப் படிக்க செல்லும் மாணவர்களுக்கான ஐ.ஈ.எல்.டி.எஸ். மற்றும் டி.ஓ.எப்.ஈ.எல். மையங் களின் தேவை அதிகமாக உள்ளது. ஆங்கிலப் பட்டம் முடித்தவர்கள் கூடுதலாக இதற்கென தனியாக பயிற்சியை முடித்தோ அதற்கான மையங்களின் அங்கீகாரம் பெற்ற கிளை பயிற்சி மையங்களை தொடங்கியோ சொந்தக்காலில் நிற்கலாம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புத்துறை தொடர்பான வழிகாட்டுதல் மையங்களை தொடங்கலாம். இதற்கு அத்துறை சார்ந்த நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்த அனுபவமே கைகொடுக்கும்.
இது தவிர, ஆங்கிலத்தில் சிறப்பாக பேச, எழுத தெரிவது என்பது பரவலான வேலை வாய்ப்புச்சந்தை. ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்பவர்கள் மற்றும் பணியில் இருப்பவர்கள் தங்களது ஆய்வறிக்கை அல்லது தொழில்சார் அறிக்கைகளை வடிவமைக்கும்போது மொழிசார் வல்லு நரின் உதவி அதிகமாகத் தேவைப்படும். வீட்டிலிருந்தபடி யும், வேறு பணியிலிருந்தபடியே பகுதி நேரமாகவும் சம்பாதிப்பவர்கள் அதிகரித்துள்ளனர். இது தவிர, இல்லத்தரசியாக இருந்தோ, பகுதி நேரப் பணியாகவோ இணையம் வாயிலாக ஆசிரியராக பணியாற்றி கணிசமாகச் சம்பாதிப்பவர்கள் நகர் பகுதிகளில் அதிகரித்திருக் கிறார்கள். அரசு மற்றும் தனியார் துறையில் மக்கள் தொடர்புத்துறை பணிகள், கொள்கை விளக்கங்கள், பிரசாரங்கள், பிரசுரங்களை உருவாக்குவது போன்ற வற்றிலும் கணிசமான வேலை வாய்ப்புகள் உண்டு. தற்போது முதுநிலை படிப்பாக சட்டம், மனிதவளத் துறை, மேலாண்மைத் துறை படிப்புகளை மேற்கொள்வதும் பரவலாகிவருகிறது.
நீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாக போகிறீர்கள் அல்லது குழந்தைகளின் தாயாக இருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு குழந்தைகளோடு சேர்ந்து நீங்களும் வளர உதவியாக அமையும்,
குழந்தைகளை பரிவோடு பார்த்து பார்த்து வளர்ப்பதில் அம்மாக்களின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது. தாயின் அன்பு கிடைக்காத குழந்தைகள் முழுமையடைவதில்லை. பேசக்கூட தெரியாத குழந்தையின் அழுகுரலில் எது பசி எது வலி என்பதை ஒரு பிரியமுள்ள தாய் உடனடியாக உணர்கிறாள். இது அவளுக்கு மட்டுமே கிடைத்த தனிப்பட்ட சக்தி.
ஒரு குழந்தை வெறும் குழந்தை மட்டும்தானா. இல்லை. நல்ல மனிதனாக அது வளர வேண்டும் என்றால் அம்மாவின் பங்கு இங்கே அவசியம் தேவை. உங்கள் குழந்தையை அருகில் இருக்கும் வளரும் குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் குழந்தை கொண்டுள்ள நல்ல குணங்களை பாராட்டுங்கள். தவறு செய்கையில் அது தவறு என்பதை அதன் மொழியில் புரிய வையுங்கள்.
குழந்தைகள் தவறு செய்ததை நீங்கள் அறிந்தால் நிச்சயம் கண்டிக்க வேண்டும். கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. கண்டிப்பு என்பது அதற்கு புரியும் வகையில் கண்டிக்க வேண்டும். அம்மா ஏன் நம்மோடு பேசவில்லை என்பதை அவர்கள் உணர்வது அவசியம்.
முரட்டுத்தனமான குழந்தைகளை அப்படியே விடக்கூடாது. பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். அல்லது குழந்தை நல ஆலோசகரின் உதவி உங்களுக்கு அவசியம் தேவைப்படும். கோபம் வந்தால் பொருள்களை உடைப்பது, வீசி எறிவது, அடிப்பது போன்ற காரியங்கள் குழந்தைகளை செய்ய அனுமதிக்காதீர்கள். கொஞ்ச நேரம் வீட்டிற்கு வெளியே நிற்க வையுங்கள். தனிமை அவர்களுக்கு பயத்தை கொடுக்கும். கொஞ்சம் முரட்டுத்தனம் குறையும்.
குழந்தைகள் அவர்கள் சூழலை அனுசரித்துதான் தங்கள் நடவடிக்கைகளை செய்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நீங்கள் கத்துவது சண்டையிடுவது போன்றவற்றை செய்யாதீர்கள். முக்கியமாக குடும்ப சண்டைகளை அவர்கள் முன்னிலையில் தவிருங்கள். அதனால் அவர்கள் மனம் உடையும் வாய்ப்பு அதிகம்.
மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்கு சிறு வயதிலேயே பழக்குங்கள். அதே போல மற்ற குழந்தைகள் உங்கள் குழந்தையால் காயப்படா வண்ணம் பார்த்து கொள்ளுங்கள். விளையாட்டாக குழந்தைகள் பொய் சொல்வார்கள். அதனை ஆதரிக்காதீர்கள். அது தவறு என்று கூறுங்கள். மற்றவரை மரியாதையை இல்லாமல் குழந்தை பேசினால் உடனே கண்டியுங்கள். நாம் கண்டிக்காவிட்டால் அதனையே அது வெளியிலும் போய் பேசும்படி ஆகி விடும்.
குழந்தை வளர்ப்பில் ஆண் பெண் பாகுபாடுகள் வேண்டாம். ஒரு பெண்ணாகிய நீங்களே இந்த கொடுமைக்கு துணை போகாதீர்கள். குழந்தைகள் எது விரும்புகிறார்களோ அதற்கான விஷயங்களை தேடி அலசி ஆராய்ந்து அது பற்றி அவர்களுக்கு புரிய வைத்து பின்னர் அதில் ஈடுபட வையுங்கள்.
மனமார பாராட்டுங்கள். உங்கள் பாராட்டுக்கள் அவர்களை மேலும் நன்றாக வளர உதவி செய்யும். நன்மைகள் தீமைகள் பற்றிய தெளிவை அவர்களுக்கு சொல்லி கொடுங்கள். கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. நிறைய அக்கறை என்கிற விகிதத்தில் அவர்களை நீங்கள் வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
ஒரு குழந்தை வெறும் குழந்தை மட்டும்தானா. இல்லை. நல்ல மனிதனாக அது வளர வேண்டும் என்றால் அம்மாவின் பங்கு இங்கே அவசியம் தேவை. உங்கள் குழந்தையை அருகில் இருக்கும் வளரும் குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் குழந்தை கொண்டுள்ள நல்ல குணங்களை பாராட்டுங்கள். தவறு செய்கையில் அது தவறு என்பதை அதன் மொழியில் புரிய வையுங்கள்.
குழந்தைகள் தவறு செய்ததை நீங்கள் அறிந்தால் நிச்சயம் கண்டிக்க வேண்டும். கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. கண்டிப்பு என்பது அதற்கு புரியும் வகையில் கண்டிக்க வேண்டும். அம்மா ஏன் நம்மோடு பேசவில்லை என்பதை அவர்கள் உணர்வது அவசியம்.
முரட்டுத்தனமான குழந்தைகளை அப்படியே விடக்கூடாது. பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். அல்லது குழந்தை நல ஆலோசகரின் உதவி உங்களுக்கு அவசியம் தேவைப்படும். கோபம் வந்தால் பொருள்களை உடைப்பது, வீசி எறிவது, அடிப்பது போன்ற காரியங்கள் குழந்தைகளை செய்ய அனுமதிக்காதீர்கள். கொஞ்ச நேரம் வீட்டிற்கு வெளியே நிற்க வையுங்கள். தனிமை அவர்களுக்கு பயத்தை கொடுக்கும். கொஞ்சம் முரட்டுத்தனம் குறையும்.
குழந்தைகள் அவர்கள் சூழலை அனுசரித்துதான் தங்கள் நடவடிக்கைகளை செய்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நீங்கள் கத்துவது சண்டையிடுவது போன்றவற்றை செய்யாதீர்கள். முக்கியமாக குடும்ப சண்டைகளை அவர்கள் முன்னிலையில் தவிருங்கள். அதனால் அவர்கள் மனம் உடையும் வாய்ப்பு அதிகம்.
மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்கு சிறு வயதிலேயே பழக்குங்கள். அதே போல மற்ற குழந்தைகள் உங்கள் குழந்தையால் காயப்படா வண்ணம் பார்த்து கொள்ளுங்கள். விளையாட்டாக குழந்தைகள் பொய் சொல்வார்கள். அதனை ஆதரிக்காதீர்கள். அது தவறு என்று கூறுங்கள். மற்றவரை மரியாதையை இல்லாமல் குழந்தை பேசினால் உடனே கண்டியுங்கள். நாம் கண்டிக்காவிட்டால் அதனையே அது வெளியிலும் போய் பேசும்படி ஆகி விடும்.
குழந்தை வளர்ப்பில் ஆண் பெண் பாகுபாடுகள் வேண்டாம். ஒரு பெண்ணாகிய நீங்களே இந்த கொடுமைக்கு துணை போகாதீர்கள். குழந்தைகள் எது விரும்புகிறார்களோ அதற்கான விஷயங்களை தேடி அலசி ஆராய்ந்து அது பற்றி அவர்களுக்கு புரிய வைத்து பின்னர் அதில் ஈடுபட வையுங்கள்.
மனமார பாராட்டுங்கள். உங்கள் பாராட்டுக்கள் அவர்களை மேலும் நன்றாக வளர உதவி செய்யும். நன்மைகள் தீமைகள் பற்றிய தெளிவை அவர்களுக்கு சொல்லி கொடுங்கள். கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. நிறைய அக்கறை என்கிற விகிதத்தில் அவர்களை நீங்கள் வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
கோடைகாலம் வந்து விட்டது. எனவே குழந்தைகளுக்கு கோடையில் ஏற்படும் நோய் பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.
குழந்தைகளுக்கு கோடையில் வரும் அம்மை நோயை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். உயர் சத்து இழப்பை சரிசெய்ய பழச்சாறு தேவை. எனவே கோடையில் ஏற்படும் நோய் பாதிப்புகளை தவிர்க்கவும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.
2-12 வயது குழந்தைகள் நிறைய தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பாலே போதுமானது. அதில் போதிய அளவு நீர் உள்ளது.
6 மாதத்திற்குப் பின்னர் தாய்ப்பாலுடன் இணை உணவு தரும் போது போதிய நீர் தர வேண்டும். போதிய அளவு நீர் குடிக்காத நிலையில் சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் கடுப்பு ஏற்படும். இதனால் வலி தாங்காமல் குழந்தைகள் அழும். 2-12 வயது குழந்தைகள் விளையாடி விட்டு வரும் போது அந்த குழந்தைகளை அழுக்கு போகும் வகையில் குளிப்பாட்ட வேண்டும். அந்தக் குழந்தைகள் 8-10 டம்ளர் தண்ணீரை தினமும் குடிக்கச் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு காபி டீ தருவதைவிட எலுமிச்சை, ஆரஞ்சு பழ சாற்றினை தரலாம்.
குளோரைடு இல்லாமல் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் குழந்தைகளுக்கு கண் உள்ளே இழுத்துக் கொண்டவாறு இருக்கும். சோடியம், பொட்டாசியம் குளோரைடு ஆகியவை முக்கியமானவை. இதில் இழப்பு ஏற்படுவதை சரி செய்ய உரிய செயல்பாடு மேற்கொள்ள வேண்டும். இந்த பாதிப்புகளை சரி செய்ய இளநீர் குடிக்கலாம்.
அதில் சோடியம், பொட்டாசியம், குளோரைடு உள்ளது. தினமும் குளிக்க வேண்டும். குழந்தைகளை தினமும் குளிப்பாட்டுவதால் வியர்வை துவாரத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படும். கோடையில் அம்மை நோய் வர வாய்ப்புள்ளது. எனவே அதற்கான தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. வருமுன் காப்போம். உரிய தற்காப்பு முறைகளை மேற்கொண்டு குழந்தைகளின் ஆரோக்கிய நலனில் துணை நிற்போம்.
குழந்தைகள் நல டாக்டர் பா.அமுதா ராஜேஸ்வரி, வடமலையான் மருத்துவமனை
2-12 வயது குழந்தைகள் நிறைய தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பாலே போதுமானது. அதில் போதிய அளவு நீர் உள்ளது.
6 மாதத்திற்குப் பின்னர் தாய்ப்பாலுடன் இணை உணவு தரும் போது போதிய நீர் தர வேண்டும். போதிய அளவு நீர் குடிக்காத நிலையில் சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் கடுப்பு ஏற்படும். இதனால் வலி தாங்காமல் குழந்தைகள் அழும். 2-12 வயது குழந்தைகள் விளையாடி விட்டு வரும் போது அந்த குழந்தைகளை அழுக்கு போகும் வகையில் குளிப்பாட்ட வேண்டும். அந்தக் குழந்தைகள் 8-10 டம்ளர் தண்ணீரை தினமும் குடிக்கச் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு காபி டீ தருவதைவிட எலுமிச்சை, ஆரஞ்சு பழ சாற்றினை தரலாம்.
குளோரைடு இல்லாமல் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் குழந்தைகளுக்கு கண் உள்ளே இழுத்துக் கொண்டவாறு இருக்கும். சோடியம், பொட்டாசியம் குளோரைடு ஆகியவை முக்கியமானவை. இதில் இழப்பு ஏற்படுவதை சரி செய்ய உரிய செயல்பாடு மேற்கொள்ள வேண்டும். இந்த பாதிப்புகளை சரி செய்ய இளநீர் குடிக்கலாம்.
அதில் சோடியம், பொட்டாசியம், குளோரைடு உள்ளது. தினமும் குளிக்க வேண்டும். குழந்தைகளை தினமும் குளிப்பாட்டுவதால் வியர்வை துவாரத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படும். கோடையில் அம்மை நோய் வர வாய்ப்புள்ளது. எனவே அதற்கான தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. வருமுன் காப்போம். உரிய தற்காப்பு முறைகளை மேற்கொண்டு குழந்தைகளின் ஆரோக்கிய நலனில் துணை நிற்போம்.
குழந்தைகள் நல டாக்டர் பா.அமுதா ராஜேஸ்வரி, வடமலையான் மருத்துவமனை
தற்போதைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு முறையில் அதிக கவனம் செலுத்துவது அத்தியாவசியமான ஒன்று. அப்படி செய்தால் மட்டுமே நாளைய சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்க முடியும்.
தற்போதுள்ள காலகட்டத்தில் பெற்றோர்களின் தலையாய கடமையாக கருதப்படுவது குழந்தை வளர்ப்பு முறை.
நாம் வளர்ந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பிற்கென்று தனிக்கவனம் செலுத்தப்படாதற்கு காரணம் நாம் கூட்டு குடும்ப அமைப்பில் வளர்ந்ததே. தாய் தந்தை தவிர நம்மை அரவணைக்க வீட்டில் மற்ற உறவினர்களும் இருந்ததால் அதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் தற்போது கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக மாறியிருக்கின்றன. அதிலும் தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்வதாலும் ஒற்றை பெற்றோர்களின் நிலை பெருகி வருவதாலும், குழந்தை நிலை கேள்விக் குறியாகியுள்ளது. மேலும் தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சியால் குழந்தைகளை நாம் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய கட்டாயமும் அதிகரித்துள்ளது.
எனவே தற்போதைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு முறையில் அதிக கவனம் செலுத்துவது அத்தியாவசியமான ஒன்று. அப்படி செய்தால் மட்டுமே நாளைய சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்க முடியும்.
அதனால் பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவாக அவர்களிடம் பேசிவிடுவது சிறந்தது. மேலும் முந்தைய தலைமுறையில் இதை செய்யாதே என பெற்றோர் சொன்னால் அதை அப்படியே பின்பற்றி நடந்த குழந்தைகள் தான் அதிகம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு, காரணங்கள் தேவைப்படுகிறது.
எனவே இதை செய்யாதே எனக்கூறாமல் இதை செய்தால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்காரணத்தோடு கூறினால் அவர்கள் அதை எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். தவறான குழந்தை வளர்ப்புமுறை ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்றும் சொல்கிறார்.
நாம் வளர்ந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பிற்கென்று தனிக்கவனம் செலுத்தப்படாதற்கு காரணம் நாம் கூட்டு குடும்ப அமைப்பில் வளர்ந்ததே. தாய் தந்தை தவிர நம்மை அரவணைக்க வீட்டில் மற்ற உறவினர்களும் இருந்ததால் அதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் தற்போது கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக மாறியிருக்கின்றன. அதிலும் தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்வதாலும் ஒற்றை பெற்றோர்களின் நிலை பெருகி வருவதாலும், குழந்தை நிலை கேள்விக் குறியாகியுள்ளது. மேலும் தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சியால் குழந்தைகளை நாம் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய கட்டாயமும் அதிகரித்துள்ளது.
எனவே தற்போதைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு முறையில் அதிக கவனம் செலுத்துவது அத்தியாவசியமான ஒன்று. அப்படி செய்தால் மட்டுமே நாளைய சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்க முடியும்.
அதனால் பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவாக அவர்களிடம் பேசிவிடுவது சிறந்தது. மேலும் முந்தைய தலைமுறையில் இதை செய்யாதே என பெற்றோர் சொன்னால் அதை அப்படியே பின்பற்றி நடந்த குழந்தைகள் தான் அதிகம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு, காரணங்கள் தேவைப்படுகிறது.
எனவே இதை செய்யாதே எனக்கூறாமல் இதை செய்தால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்காரணத்தோடு கூறினால் அவர்கள் அதை எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். தவறான குழந்தை வளர்ப்புமுறை ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்றும் சொல்கிறார்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். குறிப்பிட்ட வயதில் வரையறுக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளை தவறாமல் போடுவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு சரியான காலகட்டத்தில் தடுப்பூசி போடுவது அவசியம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் எளிதில் நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகக்கூடும். குறிப்பிட்ட வயதில் வரையறுக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளை தவறாமல் போடுவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 26 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. இது மிக அதிகமான எண்ணிக்கையாகும். அதே நேரத்தில் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடப்படுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து வழங்குவதிலும், சுற்றி இருப்பவர்களிடம் இருந்து பாதுகாப்பு கவசமாக செயல்படுவதிலும் தடுப்பூசிகளின் பங்களிப்பு இன்றியமையாதது.
குழந்தை பிறந்த முதல் நான்கு மாதங்களுக்குள் முதன்மை தடுப்பூசிகளை தவறாமல் செலுத்தியாக வேண்டும். தடுப்பூசிக்கான அட்டவணையை தயாரித்து குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசி போடுவதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். டி.பி.டி. எச்.ஐ.பி., போலியோ, ஹெபாடைடிஸ், நியூமோகோகல், ரோடா வைரஸ் தடுப்பூசிகள் இன்றியமையாதவை.
பொதுவாக குழந்தை பிறந்த 5 வாரத்தில் இருந்து 14 வாரங்களுக்குள் தடுப்பூசி செலுத்தியாகவேண்டும். கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசித்து தேவையான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவேண்டும். இந்திய அரசாங்கமும் உலக சுகாதார அமைப்பும் குழந்தை பருவ தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
உலக அளவில் கிட்டத்தட்ட 1 மில்லியன் குழந்தைகள் ஐந்து வயதை நிறைவு செய்வதற்குள்ளாகவே துரதிருஷ்டவசமாக இறந்துபோகிறார்கள். நான்கில் ஒருவர் வயிற்று போக்கு, நிமோனியா காரணமாக மரணத்தை தழுவுகிறார்கள். நோய் எதிர்ப்பு தன்மை இல்லாததே இதற்கு காரணம்.
குழந்தைகளுக்கு மிக முக்கியமான ஐந்து தடுப்பூசிகள் என்னென்ன தெரியுமா?
பி.சி.ஜி எனப்படும் பேசிலஸ் கால்மெட் குயரின் தடுப்பூசி: இது காச நோய்க்கான கட்டாய தடுப்பூசி. இந்த தடுப்பூசி போடாதவர்கள் காசநோய் பாதிப்புக்குள்ளாவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த தடுப்பூசியின் தாக்கம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும். அதுவரை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது.
டி.பி.டி தடுப்பூசி: இது ஒருவகை ஆன்டிஜென் தடுப்பூசி. கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும். இது டிப்தீரியா, பெர்டுசிஸ் மற்றும் டெட்டனஸ் என மூன்று வகையான தடுப்பூசி தன்மைகளை கொண்டது. குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை போடுவது அவசியம்.
போலியோ: இது வாய் வழியாக வழங்கப்படுகிறது. நாட்டில் செயல்படுத்தப்படும் தடுப்பூசி திட்டங்களில் மிக முக்கியமான அங்கம் வகிக்கும் இது, முகாம்கள் வழியாக குழந்தைகளை எளிதில் சென்றடைகிறது. போலியோவுக்கு எதிராக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
ஹெபாடைடிஸ் பி தடுப்பூசி: ஹெபாடைடிஸ் என்பது கல்லீரலை தாக்கும் வைரசாகும். தாய்க்கு ஹெபாடைடிஸ் பாதிப்பு இருந்தால் எளிதில் குழந்தைக்கும் பரவி விடக்கூடும். அதனால் குழந்தை பிறந்த உடனே தடுப்பூசி போட வேண்டிய சூழல் ஏற்படும். தாய்க்கு ஏதும் பாதிப்பு இல்லை என்றால் சில வாரங்கள் கழித்து குழந்தைக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
எம்.எம்.ஆர். தடுப்பூசி: தட்டம்மை, ரூபெல்லா, புழுக்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு வழங்க இந்த தடுப்பூசி கட்டாயமானதாக கருதப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 26 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. இது மிக அதிகமான எண்ணிக்கையாகும். அதே நேரத்தில் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடப்படுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து வழங்குவதிலும், சுற்றி இருப்பவர்களிடம் இருந்து பாதுகாப்பு கவசமாக செயல்படுவதிலும் தடுப்பூசிகளின் பங்களிப்பு இன்றியமையாதது.
குழந்தை பிறந்த முதல் நான்கு மாதங்களுக்குள் முதன்மை தடுப்பூசிகளை தவறாமல் செலுத்தியாக வேண்டும். தடுப்பூசிக்கான அட்டவணையை தயாரித்து குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசி போடுவதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். டி.பி.டி. எச்.ஐ.பி., போலியோ, ஹெபாடைடிஸ், நியூமோகோகல், ரோடா வைரஸ் தடுப்பூசிகள் இன்றியமையாதவை.
பொதுவாக குழந்தை பிறந்த 5 வாரத்தில் இருந்து 14 வாரங்களுக்குள் தடுப்பூசி செலுத்தியாகவேண்டும். கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசித்து தேவையான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவேண்டும். இந்திய அரசாங்கமும் உலக சுகாதார அமைப்பும் குழந்தை பருவ தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
உலக அளவில் கிட்டத்தட்ட 1 மில்லியன் குழந்தைகள் ஐந்து வயதை நிறைவு செய்வதற்குள்ளாகவே துரதிருஷ்டவசமாக இறந்துபோகிறார்கள். நான்கில் ஒருவர் வயிற்று போக்கு, நிமோனியா காரணமாக மரணத்தை தழுவுகிறார்கள். நோய் எதிர்ப்பு தன்மை இல்லாததே இதற்கு காரணம்.
குழந்தைகளுக்கு மிக முக்கியமான ஐந்து தடுப்பூசிகள் என்னென்ன தெரியுமா?
பி.சி.ஜி எனப்படும் பேசிலஸ் கால்மெட் குயரின் தடுப்பூசி: இது காச நோய்க்கான கட்டாய தடுப்பூசி. இந்த தடுப்பூசி போடாதவர்கள் காசநோய் பாதிப்புக்குள்ளாவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த தடுப்பூசியின் தாக்கம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும். அதுவரை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது.
டி.பி.டி தடுப்பூசி: இது ஒருவகை ஆன்டிஜென் தடுப்பூசி. கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும். இது டிப்தீரியா, பெர்டுசிஸ் மற்றும் டெட்டனஸ் என மூன்று வகையான தடுப்பூசி தன்மைகளை கொண்டது. குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை போடுவது அவசியம்.
போலியோ: இது வாய் வழியாக வழங்கப்படுகிறது. நாட்டில் செயல்படுத்தப்படும் தடுப்பூசி திட்டங்களில் மிக முக்கியமான அங்கம் வகிக்கும் இது, முகாம்கள் வழியாக குழந்தைகளை எளிதில் சென்றடைகிறது. போலியோவுக்கு எதிராக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
ஹெபாடைடிஸ் பி தடுப்பூசி: ஹெபாடைடிஸ் என்பது கல்லீரலை தாக்கும் வைரசாகும். தாய்க்கு ஹெபாடைடிஸ் பாதிப்பு இருந்தால் எளிதில் குழந்தைக்கும் பரவி விடக்கூடும். அதனால் குழந்தை பிறந்த உடனே தடுப்பூசி போட வேண்டிய சூழல் ஏற்படும். தாய்க்கு ஏதும் பாதிப்பு இல்லை என்றால் சில வாரங்கள் கழித்து குழந்தைக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
எம்.எம்.ஆர். தடுப்பூசி: தட்டம்மை, ரூபெல்லா, புழுக்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு வழங்க இந்த தடுப்பூசி கட்டாயமானதாக கருதப்படுகிறது.
குழந்தைகளுக்கு எண்ணெயுடன் மசாஜ் செய்வது அவர்களின் எடை அதிகரிப்பை மேம்படுத்தும். மேலும் பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
குழந்தைக்கு மசாஜ் செய்வது புதிய தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிறகான மன அழுத்தத்திலிருந்து வெளியேற உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன, ஏனெனில் இது குழந்தையுடன் ஒரு வலுவான பிணைப்பு, கண்ணுக்கு-கண் தொடர்பு ஆகியவற்றை உருவாக்குகிறது.
குழந்தைகளுக்கு எண்ணெயுடன் மசாஜ் செய்வது அவர்களின் எடை அதிகரிப்பை மேம்படுத்தும். வயிறு உட்பட உடலின் பிற முக்கிய உறுப்புகளுடன் மூளையை இணைக்கும் ஒரு முக்கிய நரம்பு – வேகஸ் நரம்பு தூண்டுகிறது என்பதால் இது எடை குறைந்த, முன்கூட்டி பிறந்த குழந்தைகளுக்கு அதிசயங்களைச் செய்கிறது. இது புதிதாகப் பிறந்தவர்களில் செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது, எடை அதிகரிக்க உதவுகிறது.
ஒரு நல்ல மசாஜ் தொடர்ந்து உங்கள் குழந்தைக்கு நல்ல தூக்கத்தைப் பெற உதவும். இது உறுப்புகளை ஒழுங்குபடுத்துவதில் நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது மற்றும் முன்கூட்டி பிறந்த குழந்தையின் இதயத் துடிப்பை சீரான வேகத்தில் வைத்திருக்க உதவுகிறது.
குழந்தைகளின் முழங்கால்களைப் பிடித்து, வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு தடவைகள் வயிற்றுக்குள் மெதுவாகத் தள்ளுவது குழந்தைக்கு அமைதியான நிலையை கொடுக்கும். பல தொந்தரவுக்கு இது சிறந்தது.
குழந்தைக்கு மசாஜ் செய்யும் போது குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் அல்லது பெரியவர்கள் தங்கள் சிறப்பு நேரத்தைப் பெறுகிறார்கள், மேலும் இது ஒரு அழகான பிணைப்பை உறுதிப்படுத்த வழிவகுக்கிறது. மசாஜ் குழந்தையின் உடல் மற்றும் மூளை செயல்பாட்டின் வளர்ச்சியை வளர்க்க உதவுகிறது.
மசாஜ் செய்வது எப்படி ?
ஒரு வசதியான நிலையில் உட்கார்ந்து உங்கள் குழந்தையை கால்களில் அல்லது மென்மையான பாயில் படுக்க வைக்கவும்.
மசாஜ் செய்ய எண்ணெய்கள் அல்லது குழந்தை மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துங்கள்.
இந்தியாவில், எள் எண்ணெய் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கான முதல் தேர்வாகும், ஏனெனில் இது தசைகள் மற்றும் எலும்புகளுக்கு போதுமான பலத்தை அளிக்கிறது.
ஆலிவ் எண்ணெய் மற்றொரு சிறந்த தேர்வாகும். உங்கள் குழந்தைக்கு எது பொருத்தமானது என்பதை அறிய குழந்தை மருத்துவரிடம் பேசுங்கள்.
படுக்கை நேரத்திற்கு முன் பிசுபிசுப்பு இல்லாத மாய்ஸ்சுரைசரை கொண்டு மசாஜ் செய்வது உங்கள் குழந்தை நன்றாக தூங்க உதவும்.
குழந்தைகளுக்கு எண்ணெயுடன் மசாஜ் செய்வது அவர்களின் எடை அதிகரிப்பை மேம்படுத்தும். வயிறு உட்பட உடலின் பிற முக்கிய உறுப்புகளுடன் மூளையை இணைக்கும் ஒரு முக்கிய நரம்பு – வேகஸ் நரம்பு தூண்டுகிறது என்பதால் இது எடை குறைந்த, முன்கூட்டி பிறந்த குழந்தைகளுக்கு அதிசயங்களைச் செய்கிறது. இது புதிதாகப் பிறந்தவர்களில் செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது, எடை அதிகரிக்க உதவுகிறது.
ஒரு நல்ல மசாஜ் தொடர்ந்து உங்கள் குழந்தைக்கு நல்ல தூக்கத்தைப் பெற உதவும். இது உறுப்புகளை ஒழுங்குபடுத்துவதில் நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது மற்றும் முன்கூட்டி பிறந்த குழந்தையின் இதயத் துடிப்பை சீரான வேகத்தில் வைத்திருக்க உதவுகிறது.
குழந்தைகளின் முழங்கால்களைப் பிடித்து, வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு தடவைகள் வயிற்றுக்குள் மெதுவாகத் தள்ளுவது குழந்தைக்கு அமைதியான நிலையை கொடுக்கும். பல தொந்தரவுக்கு இது சிறந்தது.
குழந்தைக்கு மசாஜ் செய்யும் போது குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் அல்லது பெரியவர்கள் தங்கள் சிறப்பு நேரத்தைப் பெறுகிறார்கள், மேலும் இது ஒரு அழகான பிணைப்பை உறுதிப்படுத்த வழிவகுக்கிறது. மசாஜ் குழந்தையின் உடல் மற்றும் மூளை செயல்பாட்டின் வளர்ச்சியை வளர்க்க உதவுகிறது.
மசாஜ் செய்வது எப்படி ?
ஒரு வசதியான நிலையில் உட்கார்ந்து உங்கள் குழந்தையை கால்களில் அல்லது மென்மையான பாயில் படுக்க வைக்கவும்.
மசாஜ் செய்ய எண்ணெய்கள் அல்லது குழந்தை மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துங்கள்.
இந்தியாவில், எள் எண்ணெய் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கான முதல் தேர்வாகும், ஏனெனில் இது தசைகள் மற்றும் எலும்புகளுக்கு போதுமான பலத்தை அளிக்கிறது.
ஆலிவ் எண்ணெய் மற்றொரு சிறந்த தேர்வாகும். உங்கள் குழந்தைக்கு எது பொருத்தமானது என்பதை அறிய குழந்தை மருத்துவரிடம் பேசுங்கள்.
படுக்கை நேரத்திற்கு முன் பிசுபிசுப்பு இல்லாத மாய்ஸ்சுரைசரை கொண்டு மசாஜ் செய்வது உங்கள் குழந்தை நன்றாக தூங்க உதவும்.






