என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபித்தால் நல்ல புத்தியும், ஞானமும் கிடைக்கும்.
    முருகனுக்குரிய ஸ்கந்த காயத்ரியை தினமும் 108 முறை ஜெபித்தால் நல்ல புத்தியும், ஞானமும் கிடைக்கும். இதை செவ்வாயன்று சொல்வது கூடுதல் பலனை தரும்.

    ஓம் கார்த்திகேய வித்மஹே
    சக்தி ஹஸ்தாய தீமஹி தந்நோ
    ஸ்கந்த ப்ரசோதயாத்

    பொருள்: சக்தி என்னும் வேலாயுதத்தை கையில் ஏந்தி நிற்கும் கார்த்திகேயனே! நீ என் அறிவைப் பிரகாசமாக்கி நல்வழியில் நடத்து.
    துன்பங்களை போக்குபவளான ஸ்ரீதுர்க்கையை போற்றும் மங்கள சண்டிக ஸ்தோத்திரத்தை, ராகு காலத்தில் சொல்வதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
    துன்பங்களை போக்குபவளான ஸ்ரீதுர்க்கையை போற்றும் மங்கள சண்டிக ஸ்தோத்திரத்தை, செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் சொல்வதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

    ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
    ப்ரதி மங்களா தாரேச பூஜ்யே மங்கள சுகப்ரதே

    விளக்கம்: மங்களத்திற்கு ஆதாரமானவளே ! செவ்வாய்க்கிழமை தோறும் பூஜிக்கத் தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன்தாள் பணிகின்றேன்.

    தேவீம் ஷாடஸ வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்
    பிம்போஷ்டீம் ஸுதீதம் சுந்தரம் சரத் பத்ம நிபாநநாம்

    விளக்கம்: தேவியை என்றும் பதினாறு வயதுடைய நித்யயௌவன உருவமுடையவளாகவும், அழகிய உதடுகளில் அருள் வழியும் புன்னகையுடன் சரத் காலத்து நிலவொளியில் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாக தியானிக்கிறேன்.

    ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்லப லோசநாம்
    ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸந்வேப்ய : ஸர்வ சம்பதாம்

    விளக்கம்: காயாம்பு வண்ண மேனியுடன் நீலோத்பல மலர் போன்ற கண்களுடன் விளங்கும் அன்னை, உலகை ஈன்று சகல சௌபாக்கியங்களையும் அளிக்கின்றாள்.

    ஸ்ம்ஸார சாகரே கோரே ஜ்யோதிரூபாம் சதாபஜே
    தேவ்யாச்ச த்யான மித்யேவம் ஸ்தவ நம் ச்ருயதாம் முனே

    விளக்கம்: பயங்கரமான பிறவிப் பெருங்கடலைத் தாண்ட, மணி விளக்காய் வழிகாட்டும் தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும்.

    மங்கள மங்களார் ஹே ச சர்வ மங்கள மங்களே
    ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே

    விளக்கம்: மங்களத்தை தரும் மங்கள நாயகியே ! என்றென்றும் மங்கள வாழ்வை அளிப்பாயாக.

    பூஜ்ய மங்கள வாரே ச மங்களா பீஷ்ட தேவதே
    பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

    விளக்கம்: பூஜிக்க தக்க மங்கள நாயகியே ! சுபத்தை அளிக்கும் தேவியே! மனித வர்க்கத்திற்கு என்றும் நல்வாழ்வை நல்குவாயாக !

    மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களநாம்ச மங்களே
    ஸம்ஸார மங்களா தாரே மோக்ஷ மங்கள தாயினி

    விளக்கம்: மங்களத்தைத் தரும் அருள் நோக்கு உடையவளே! மங்களமே உருவானவளே உலகின் நல்வாழ்வுக்கு ஆதாரமானவளே மாந்தருக்கு மோட்சத்தை அளிப்பவளே !

    ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
    ப்ரதி மங்களா தாரேச பூஜ்ய மங்கள சுகப்ரதே

    விளக்கம்: மங்களத்திற்கு ஆதாரமானவளே மங்கள வாரம் தோறும் (செவ்வாய்கிழமை தோறும்) பூஜிக்கத்தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன் தாள் பணிகின்றேன்.
    தினமும் காலையில் குளித்து விட்டு ஆத்மசுத்தியுடன் மனதில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்ல வேண்டும்.
    தினமும் காலையில் குளித்து விட்டு ஆத்மசுத்தியுடன் மனதில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்ல வேண்டும்.

    ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரய
    க்ருத்யாம் க்ரூராம் வதுரமிவே
    ஹ்ராம்தாம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்ம
    ப்ரத்யக் கர்த்தாரம் ச்சது
    பகவானே! பக்தனாகிய நான், தங்களின் மகிமையை உணராமலும், அறியாமலும், ஆழமான அன்பினாலும், அசட்டையான அஜாக்கிரதையாலும், உன் மகிமை உணராமல், கிருஷ்ணனே, யாதவனே, நண்பனே என்றெல்லாம், நான் துடுக்குத்தனமாக உன்னை என் நாவால் உன்னை அழைத்து வரலானேன்.
    ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி!
    அஜாநா மஹிமாநம் தவேதம் மயா ப்ரமாதாத் ப்ரணயேந வாபி!!
    யச்சா வஹாஸார்த மஸத்க்ருதோஸி விஹார ஸய்யாஸந போஜநேஷு!
    ஏகோத வாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத்க்ஷாமயே த்வாமஹம ப்ரமேயம்!!

    பொருள்:

    பகவானே! பக்தனாகிய நான், தங்களின் மகிமையான பெருமையையும், ப்ரம்மாண்டத்தையும் உணராமலும், அறியாமலும், ஆழமான அன்பினாலும், அசட்டையான அஜாக்கிரதையாலும், உன் மகிமை உணராமல், கிருஷ்ணனே, யாதவனே, நண்பனே என்றெல்லாம், நான் துடுக்குத்தனமாக உன்னை என் நாவால் உன்னை அழைத்து வரலானேன்.

    அச்சுதனே! கேசவனே! உன் மகத்துவம் உணர்ந்தேன்! உன் பெருமை அறிந்து இன்புற்றேன்! எனது கேளிக்கையான பேச்சின் போதும், படுக்கையில் நான் கண் உறங்கும் நேரத்திலும், உட்கார்ந்திருக்கும் வேளையிலும், உண்ணும் நேரத்திலும், தனியாக இருக்கும் நேரங்களிலும், நண்பர்களின் முன்னிலையிலும், கேலியாக தங்களை அவமதித்தும் கூட நடந்திருப்பேன், கற்பனையிலும் கூட நினைத்துப் பார்க்க இயலாத மகிமை பெற்ற தங்களுக்கு நான் அறியாமையின் காரணமாக நான் இழைத்த குற்றங்கள், பெரும் குறைகளை தாங்கள் தயவு கூர்ந்து அருள் செய்யும் மனதுடன் பொறுத்து அருள வேண்டுக் கொள்கின்றேன்.
    நவக்கிரங்களை சுற்றி வலம் வருகையில், ஒன்பது முறை இந்த ஸ்லோகத்தை கூறிக் கொண்டே வலம் வந்தால், கவனம் சிதறுவதை தடுப்பதுடன், நவக்கிரங்களுக்கும் ஒன்பது முறை வந்தனம் செய்த பலன் கிடைக்கும்.
    சனிக்கிழமை தோறும் சிவன், பிள்ளையார் கோவிலுக்கு சென்று நவக்கிரகங்களை வலம் வருபவரா நீங்கள்? வெறும் வேண்டுதலோடு மட்டுமின்றி, நவக்கிரங்களை போற்றி துதிக்கும் ஸ்லோகத்துடன் வலம் வந்தால் மேலும் சிறப்பு.

    ஆம்... ஒன்பது கிரங்களுக்கும் சேர்த்து ஒரே ஸ்லோகம். நவக்கிரங்களாகிய உங்களை துதித்து போற்றுகிறேன். என்னை காத்தருள்வீர்களாக என வேண்டும் இந்த ஸ்லோகத்தை, தினமும் காலை குளித்து முடித்த பின் சாமி படத்தின் முன் நின்று சொல்வதால், நவக்கிர தோஷம் விலகுவதோடு, அவர்களின் அருள் கடாக்ஷமும் கிடைக்கும் என்பது ஆன்மீக பெரியோர் வாக்கு.

    ஆதித்யாச சோமாய மங்களாய புதாயச
    குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமோ நமஹ:

    ஆதித்யநாகிய சூரியன், சோமன் என அழைக்கப்படும் சந்திரன், மங்களன் என அழைக்கப்படும் செவ்வாய், புத பகவான், குரு பகவான், சுக்கிரன் ஆகியோருடன், சனி பகவான் மற்றும் நிழல் கிரகங்களான ராகு, கேது ஆகிய நவக்கிரங்களையும் நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்பதே இதன் பொருள்.

    நவக்கிரங்களை சுற்றி வலம் வருகையில், ஒன்பது முறை இந்த ஸ்லோகத்தை கூறிக் கொண்டே வலம் வந்தால், கவனம் சிதறுவதை தடுப்பதுடன், நவக்கிரங்களுக்கும் ஒன்பது முறை வந்தனம் செய்த பலன் கிடைக்கும்.
    மகாசிவராத்திரியான இன்று விரதமிருந்து சிவ வழிபாடு செய்பவர்கள், கீழே உள்ள மந்திரங்களை கூறி சிவனருள் பெற்றிடுங்கள்.
    சிவ மந்திரம்:

    நமச்சிவாய வாழ்க!
    நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
    கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

    சிவா காயத்ரி மந்திரம் 1

    ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
    தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

    சிவா காயத்ரி மந்திரம் 2
    ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
    தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

    பிரதோஷ மந்திரம்

    ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
    அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ

    தரித்திரம் நீக்கும் மந்திரம் :

    ஓம் ருத்ராய ரோகநாஷாய
    அகச்சே சஹ் ரம் ஓம் நமஹ

    மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம் :

    ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
    உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

    சிவ மந்திரம்

    அஸ்வினி ஸ்ரீமதாத்மனே
    குணைகஸிந்தவே நம சிவாய
    தாமலேச தூதலோக
    பந்தவே நம சிவாயநாம
    சோஷிதா நமத்
    பவாந்தவே நம சிவாய
    பாமரேதர ப்ரதாத
    பாந்தவே நம சிவாய

    ருத்ர மந்திரம்

    நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
    மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
    த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய
    நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
    ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.
    சிங் சிங் சிவாய ஓம்

    மூல மந்திரம் ஓம் நம சிவாய

    சிவபெருமான் அஷ்டோத்திர சத நாமாவளி (சிவனின் 108 போற்றி)

    ஓம் சிவாய போற்றி
    ஓம் மஹேஸ்வராய போற்றி
    ஓம் சம்பவே போற்றி
    ஓம் பினாகினே போற்றி
    ஓம் சசிசேகராய போற்றி
    ஓம் வாம தேவாய போற்றி

    ஓம் விரூபக்ஷாய போற்றி
    ஓம் கபர்தினே போற்றி
    ஓம் நீலலோஹிதாய போற்றி
    ஓம் சங்கராய போற்றி
    ஓம் சூலபாணயே போற்றி
    ஓம் கட்வாங்கினே போற்றி

    ஓம் விஷ்ணுவல்லபாய போற்றி
    ஓம் சிபி விஷ்டாய போற்றி
    ஓம் அம்பிகா நாதாய போற்றி
    ஓம் ஸ்ரீ கண்டாய போற்றி
    ஓம் பக்த வத்ஸலாய போற்றி
    ஓம் பவாய போற்றி

    ஓம் சர்வாய போற்றி
    ஓம் திரிலோகேசாய போற்றி
    ஓம் சிதிகண்டாய போற்றி
    ஓம் சிவாப்ரியாய போற்றி
    ஓம் உக்ராய போற்றி
    ஓம் கபாலினே போற்றி

    ஓம் காமாரயே போற்றி
    ஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி
    ஓம் கங்காதராய போற்றி
    ஓம் லலாடாக்ஷாய போற்றி
    ஓம் காலகாளாய போற்றி
    ஓம் க்ருபாநிதயே போற்றி

    ஓம் பீமாய போற்றி
    ஓம் பரசுஹஸ்தாய போற்றி
    ஓம் ம்ருகபாணயே போற்றி
    ஓம் ஜடாதராய போற்றி
    ஓம் கைலாஸவாஸிநே போற்றி
    ஓம் கவசிநே போற்றி

    ஓம் கடோராய போற்றி
    ஓம் திரிபுராந்தகாய போற்றி
    ஓம் வ்ருஷாங்காய போற்றி
    ஓம் வ்ருஷபாரூடாய போற்றி
    ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி
    ஓம் ஸாமப்ரியாய போற்றி

    ஓம் ஸ்வரமயாய போற்றி
    ஓம் த்ரயீமூர்த்தயே போற்றி
    ஓம் அநீச்வராய போற்றி
    ஓம் ஸர்வஜ்ஞாய போற்றி
    ஓம் பரமாத்மநே போற்றி
    ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி

    ஓம் ஹவிஷே போற்றி
    ஓம் யக்ஞ மயாய போற்றி
    ஓம் ஸோமாய போற்றி
    ஓம் பஞ்வக்த்ராய போற்றி
    ஓம் ஸதாசிவாய போற்றி
    ஓம் விச்வேச்வராய போற்றி

    ஓம் வீரபத்ராய போற்றி
    ஓம் கணநாதாய போற்றி
    ஓம் ப்ரஜாபதயே போற்றி
    ஓம் ஹிரண்ய ரேதஸே போற்றி
    ஓம் துர்தர்ஷாய போற்றி
    ஓம் கிரீசாய போற்றி

    ஓம் கிரிசாய போற்றி
    ஓம் அநகாய போற்றி
    ஓம் புஜங்கபூஷணாய போற்றி
    ஓம் பர்க்காய போற்றி
    ஓம் கிரிதன்வநே போற்றி

    ஓம் கிரிப்ரியாய போற்றி
    ஓம் க்ருத்தி வாஸஸே போற்றி
    ஓம் புராராதயே போற்றி
    ஓம் மகவதே போற்றி
    ஓம் ப்ரமதாதிபாய போற்றி
    ஓம் ம்ருத்யுஞ்ஜயாய போற்றி

    ஓம் ஸூக்ஷ்மதனவே போற்றி
    ஓம் ஜகத்வ் யாபினே போற்றி
    ஓம் ஜகத் குரவே போற்றி
    ஓம் வ்யோமகேசாய போற்றி
    ஓம் மஹா ஸேன ஜனகயா போற்றி
    ஓம் சாருவிக்ரமாய போற்றி

    ஓம் ருத்ராய போற்றி
    ஓம் பூதபூதயே போற்றி
    ஓம் ஸ்தாணவே போற்றி
    ஓம் அஹிர் புதன்யாய போற்றி
    ஓம் திகம்பராய போற்றி
    ஓம் அஷ்டமூர்த்தயே போற்றி

    ஓம் அநேகாத்மநே போற்றி
    ஓம் ஸாத்விகாய போற்றி
    ஓம் சுத்த விக்ரஹாய போற்றி
    ஓம் சாச்வதாய போற்றி
    ஓம் கண்டபரசவே போற்றி

    ஓம் அஜாய போற்றி
    ஓம் பாசவிமோசகாய போற்றி
    ஓம் ம்ருடாய போற்றி
    ஓம் பசுபதயே போற்றி
    ஓம் தேவாய போற்றி
    ஓம் மஹாதேவாய போற்றி

    ஓம் அவ்யயாயே போற்றி
    ஓம் ஹரயே போற்றி
    ஓம் பூஷதந்தபிதே போற்றி
    ஓம் அவ்யக்ராய போற்றி
    ஓம் பகதேத்ரபிதே போற்றி
    ஓம் தக்ஷாத்வரஹராய போற்றி

    ஓம் ஹராய போற்றி
    ஓம் அவ்யக்தாய போற்றி
    ஓம் ஹஸஸ்ராக்ஷாய போற்றி
    ஓம் ஸஹஸ்ரபதே போற்றி
    ஓம் அபவர்க்கப்ரதாய போற்றி
    ஓம் அனந்தாய போற்றி
    ஓம் தாரகாய போற்றி
    ஓம் பரமேஸ்வராய போற்றி 
    எங்கேனும் பயணம் மேற்கொள்ளும் இந்த ஸ்லோகத்தை ஜபித்துவிட்டுச் சென்றால் பயணம் வெற்றியடையும்; பயணத்தின்போது எந்த இடையூறும் ஏற்படாது.
    வைந்யம் ப்ருதும் ஹைஹயமர்ஜுநஞ்ச
    ஸாகுந்தளேயம் பரதம் நளஞ்ச
    ஏதான் ந்ருபான் ய: ஸ்மரதி ப்ரயாணே
    தஸ்யார்த்தஸித்தி: புநராகமஸ்ச

    பொதுப் பொருள்: நன்மைகள் அளிக்கும் ப்ருதுவே, கார்த்த வீர்யார்ஜுனரே நமஸ்காரம். அரசர்களான சகுந்தலையின் மகன், பரதனே, நளசக்ரவர்த்தியே நமஸ்காரம்.
    இந்த மகத்தான துதியை தினமும் துதித்தால் நோய்கள் நீங்கும், கடன்கள் தீரும். வராகமூர்த்தியின் திருவருள் கிட்டும்.
    ஊர்த்வ ப்ரஸாரி பரிதூம்ர விதூதரோமா
    ப்ரோக்ஷிப்த வாலதி: அவாங்க்முக கோர கோண:
    தூர்ண ப்ரதீர்ண ஜலத: பரிகூர்ண தக்ஷ்ணா
    ஸ்தோத்ரூந் முநீந் சிசிரயந் அவதேரித த்வம்

    - நாராயணீயம் தசகம் 12(7)

    பொதுப்பொருள்: குருவாயூரப்பா! நீ வராக அவதாரம் எடுத்தபோது உன் திருவுருவம் எப்படி இருந்தது தெரியுமா? உனது ரோமங்கள் மேல் நோக்கியும் கருப்பும் சிவப்பும்  வண்ணம் கொண்டு அசைந்தன. உனது வால் உயரமாகத் தூக்கியிருந்தது. உனது மூக்கு கீழ் நோக்கியபடி பயங்கரமாக இருந்தது. மேகக்கூட்டத்தை நீ பிளந்தாய், உன்னை  துதித்துக் கொண்டிருந்த முனிவர்களுக்கு உன் திருக்கண்களால் ஆசி வழங்கிக் கொண்டே பூமியை மீட்க கடலினுள் இறங்கினாய் அல்லவா? அத்தகைய பராக்கிரமம்  கொண்ட நீ எனது துயரை எல்லாம் தீர்த்து வைப்பாயாக. (இத்துதியை நாராயணபட்டத்திரி பாடியபோது அந்த வராகமூர்த்தியின் தோற்றத்தை குருவாயூரப்பன் அவருக்கு காட்டியருளியதாக நம்பிக்கை.

    இத்துதியை கண்ணனின் திருவுருமுன் பக்தியுடன் படித்தால் மழலை வரம் வேண்டி ஏங்குவோருக்கு அந்த வரம் கிட்டும்; குடும்பத்தில் நன்மைகள் பெருகும்.
    கதம்பஸூனகுண்டலம் ஸுசாருகண்டமண்டலம்
    வ்ரஜாங்கனைகவல்லபம் நமாமி க்ருஷ்ண துர்லபம்
    யசோதயா ஸமோதயா ஸகோபயா ஸநந்தயா
    யுதம் ஸுகைகதாயகம் நமாமி கோபநாயகம்

    ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாஷ்டகம்

    பொதுப் பொருள்:

    கதம்பப் பூக்களை காதில் குண்டலமாக தரித்தவனே... செழுமிய கன்னங்கள் ஒளிர காட்சி தரும் பேரழகனே... கோபியர்களுக்கு என்றென்றும் நாயகனாக விளங்குபவனே... கிடைத்தற்கரிய பெறும் பேறான இனிய கண்ணனே நமஸ்காரம். நந்தகோபன் யசோதை கோபியர் என்று அனைவருக்கும் பேரானந்தத்தை அருளிய கண்ணா உன் பிஞ்சுத் திருவடிகளுக்கு என் நமஸ்காரம்.

    இத்துதியை கண்ணனின் திருவுருமுன் பக்தியுடன் படித்தால் மழலை வரம் வேண்டி ஏங்குவோருக்கு அந்த வரம் கிட்டும்; குடும்பத்தில் நன்மைகள் பெருகும்.
    சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.
    சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும். தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும்.

    ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய
    ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
    மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
    ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
    ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
    தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன
    கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

    விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்
    சிலருக்கு எந்த தொழில் தொடங்கினாலும் அதில் தொடர் நஷ்டம் ஏற்படும். அவர்கள் தினமும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால், செய்யும் தொழிலில் விருத்தியும், லாபமும் அடையலாம்.
    சிலருக்கு எந்த தொழில் தொடங்கினாலும் அதில் தொடர் நஷ்டம் ஏற்படும். அவர்கள் தினமும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால், செய்யும் தொழிலில் விருத்தியும், லாபமும் அடையலாம்.

    கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர:
    சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்
    யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ
    நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம்

    பொருள்:

    தன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுத்த அசுரனின் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தியருளும் மகாதேவியே, காளியே, நமஸ்காரம். பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தோற்றம் கொண்டவளே, நமஸ்காரம்.
    காலை கண்விழித்தது முதல் இரவு தூங்கும் வரையிலான பொழுதுகள் அனைத்திலும் ஈசனின் அருள் நமக்கு கிடைக்க இந்த துதிகளை பாராயணம் செய்யலாம்.
    அவனின்றி ஒரு அணுவும் இந்த உலகில் அசைவது இல்லை. காலை கண்விழித்தது முதல் இரவு தூங்கும் வரையிலான பொழுதுகள் அனைத்திலும் ஈசனின் அருள் நமக்கு கிடைக்க இந்த துதிகளை பாராயணம் செய்யலாம்.

    காலையில் எழுந்திருக்கும் போது

    அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி

    குளிக்கும் போது

    சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

    கோபுர தரிசனம் காணும் போது

    தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது

    காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

    நண்பரைக் காணும் போது

    தோழா போற்றி துணைவா போற்றி

    கடை திறக்கும் போது

    வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

    நிலத்தில் அமரும் போது

    பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

    நீர் அருந்தும் போது

    நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

    அடுப்பு பற்ற வைக்கும் போது

    தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

    உணவு உண்ணும் போது

    தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

    இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

    மனதில் அச்சம் ஏற்படும் போது

    அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

    உறங்கும் போது

    ஆடக மதுரை அரசே போற்றி

    கூடல் இலங்கு குருமணி போற்றி
    ×