என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பதியில் நேற்று 58,561 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,401 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.01 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி கட்டண சேவைகளான ஆர்ஜித சேவைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கொரோனா குறைந்ததை அடுத்து ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

    கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்த ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை, மேல் சாட் வஸ்திரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகியவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

    இந்த கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை ஆர்ஜித பிரம்மோற்சவம் சகஸ்கர தீப அலங்கார உள்ளிட்ட சேவைகளை நேரடியாகவும், இணையதளம் மூலம் கலந்து கொள்ளும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

    அவர்களுக்கு பிரசாதம் வழங்குவதிலும் பழைய முறையே பின்பற்றப்படும். மேலும் ஆர்ஜித சேவைகள், உதயாஸ்தமன சேவை, விம்சதி வர்‌ஷ தர்ஷினி சேவை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் கொரோனா நிபந்தனைகளுடன் தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 58,561 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,401 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.01 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 16-ந்தேதி பால்குட திருவிழா நடக்கிறது.
    காரைக்குடி:

    காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் வரும் மாசி-பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இந்த விழா நேற்று காலை கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    முன்னதாக கடந்த 6-ந்தேதி மாலை சுமங்கலி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. அதன் பின்னர் அதிகாலை 6.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. இதை தொடர்ந்து அம்பாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பால்குடம் எடுக்கும் பக்தர்கள் கையில் காப்பு கட்டிக்கொண்ட காட்சி.


    இந்த காப்புக்கட்டும் நிகழ்ச்சியில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ள லட்சக்கணக்கான பக்தர்களும் காப்புக்கட்டி நேற்று முதல் விரதம் இருக்க தொடங்கி உள்ளனர். முன்னதாக நேற்று காலை காப்புக்கட்டுவதற்காக சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து காப்புக்கட்டி கொண்டனர். விழாவையொட்டி தொடர்ந்து தினந்தோறும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
    வருகிற 15-ந்தேதி மாலை கரகம், மதுக்குடம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி முத்தாலம்மன் கோவிலில் இருந்து நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட திருவிழா 16-ந்தேதி காலையில் நடக்கிறது. அன்றைய தினம் விரதம் இருக்கும் பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் அன்றைய தினம் நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக காணப்படுவார்கள். தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் கரகம் பருப்பூரணிக்கு கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சியும், 17-ந்தேதி இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முத்துமாரியம்மன் கோவில் பால்குட திருவிழாவையொட்டி நேற்று முதல் விரதம் இருக்கும் பக்தர்கள் காப்புக்கட்டி மஞ்சள் நிற ஆடையை அணிய தொடங்கியதால் காரைக்குடி நகர் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளித்தது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுமதி தலைமையில் கோவில் கணக்கர் பாண்டி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோவிலில் இன்றும் தரிசனம் செய்யலாம்.

    ஆதிசங்கராச்சாரியார், அத்வைதத்தின் உண்மையை உலகத்திற்கு நிரூபிக்க விரும்பினார். அதற்காக அவர் யாத்திரையை மேற்கொண்டிருந்தார். அப்படி ஒரு தலத்திற்கு வந்தபோது, அங்கிருந்த சிவலிங்கத்தில் இருந்து ஒரு கரம் நீண்டு, ‘சத்யம் அத்வைதம்’ என்று ஆசீர்வதித்தது. சிவலிங்கத்தில் இருந்து ஒரு கரம் வெளிப்பட்ட நிலையில் இருக்கும் அந்த சிவலிங்கத்தை, திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோவிலில் இன்றும் தரிசனம் செய்யலாம். தஞ்சாவூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்.
    தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருமலை:

    பங்குனி மாத பவுர்ணமியையொட்டி திருப்பதியில் வருடாந்திர தெப்ப உற்சவம் நடத்தப்படும்.

    மார்ச் 17-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 13-ந்தேதி தெப்ப உற்சவத்தை தேவஸ்தானம் தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து 5 நாட்கள் தெப்ப உற்சவம் விழா நடைபெறுகிறது.

    திருமலையில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. தெப்ப உற்சவத்தின் முதல் நாள் சீதா, லட்சுமண, ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ஊர்வலமும், 2-ம் நாள் ருக்குமணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் 3 சுற்றுகளாக ஊர்வலம் நடைபெறும்.

    3-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தெப்பத்தில் வலம் வர உள்ளனர். நிறைவு நாளன்று ஏழு சுற்றுகள் தெப்பத்தில் சுவாமிகள் வலம் வர உள்ளனர்.

    இந்த தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    மூவாயிரம் பாடல்கள் அடங்கிய இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம்.

    ஈசனையும், அவனை பற்றிக்கொண்டு முக்தியை அடையும் வழியையும், அன்பே சிவம் என்பதையும் பற்றி திருமூலரால் பாடப்பட்ட நூல்தான், திருமந்திரம். மூவாயிரம் பாடல்கள் அடங்கிய இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

    பாடல்:-

    அவமும் சிவமும் அறியார் அறியார்

    அவமும் சிவமும் அறிவார் அறிவார்

    அவமும் சிவமும் அருளால் அறிந்தால்

    அவமும் சிவமும் அவன் அருளாமே.

    விளக்கம்:-

    இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ‘அவம்’ என்ற சொல் ‘ஆணை’ என்ற பொருளைத் தருகிறது. அதன்படி ஆணையின் பிறப்பிடமே சிவத்தின் இருப்பிடம் என்பதை அறியாதவர்கள், எதையுமே அறியாதவர்கள்தான்.

    மாறாக ஆணையின் பிறப்பிடம் சிவனின் இருப்பிடம் என்பதை அறிந்து உணர்ந்தவர்கள், அனைத்தும் அறிந்தவர்கள் ஆவர். ஆணையும், அதைப்பிறப்பிக்கும் ஈசனும் ஒன்றென உணரும் அருள் அறிவானது, சிவபெருமானின் அருளைப் பெற்றால் மட்டுமே கிடைக்கும்.

    அந்த அருளைப் பெற்றவர்கள், ஒவ்வொரு ஆணையையும் சிவமாகவும், அவனின் கட்டளையுமாகவே இருப்பதை உணர்ந்துகொள்வார்கள்.
    பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு திருக்கோவில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தி கொடியினை ஏற்றினார்கள். இதனைத் தொடர்ந்து ஏலவார்குழலி அம்மனுக்கும் ஏகாம்பரநாதர் சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

    கொடியேற்ற விழாவில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், கோவில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், ஆய்வாளர் பிரித்திகா கோயில் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    விழாவினை முன்னிட்டு தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வருகின்றனர். இம்மாதம் 13ம் தேதி காலையில் அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வீதி உலாவும், இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. மறுநாள் 14ம் தேதி மகா ரதம் எனப்படும் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

    பதினெட்டாம் தேதி அதிகாலையில்  திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இரவு தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். இம்மாதம் 21ஆம் தேதி 108 கலசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ந‌.தியாகராஜன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    ஊட்டி மற்றும் மாவட்டத்தின் பிறகு பகுதிகள் மற்றும் கேரள, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கார், பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சோலூர் பொக்காபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் ஊட்டி, கூடலூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக தேர்த்திருவிழா எளிமையான முறையில் கொண்டு நடைபெற்றது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 5-ந் தேதி அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றல் மற்றும் அம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் கங்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    சிகர நிகழ்ச்சியான மாரியம்மன் திருத்தேர்விழா இன்று இரவு 10 மணிக்கு நடக்கிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று தேதை வடம் பிடித்து இழுக்கிறார்கள். இதனையொட்டி இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்கேயே தங்கி இரவில் நடக்கும் தேர்த்திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    ஊட்டி மற்றும் மாவட்டத்தின் பிறகு பகுதிகள் மற்றும் கேரள, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கார், பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்களின் வசதிக்காக ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக 6 சிறப்பு பஸ்களும், கூடலூரில் இருந்து 5 சிறப்பு பஸ்களும் இயகப்பட்டன. இந்த பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    தேரோட்ட நிகழ்ச்சி முடிந்ததும் நாளை காலை 8.45 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. நடக்கிறது.

    பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் சந்தைதோப்பு அருகில் அங்காளபரமேஸ்வரி பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரி விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    விழாவில் 7-ம் நாள் உற்சவமான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. தாண்டவராய சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தேரில் எழுந்தருளினர்கள்.

    பின்னர், அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. முன்னதாக, காலை 6:30 மணிக்கு தாண்டவராய சுவாமிக்கும் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கணபதி ஹோமத்துடன் கஜபூஜைகள் மற்றும் முதற் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை, இரண்டாம் கால யாக பூஜைகள், மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே என்.வைரவன்பட்டியில் சிதம்பர விநாயகர், பைரவ மூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் அரிபுரம் யோகி குல பண்டாரத்தார்கள் பாத்திகைக்கு உட்பட்ட நகரத்தார்கள், வைரவன்பட்டி கிராமத்தார்கள் உள்ளிட்டோர் இணைந்து கும்பாபிஷேக பணிகளை செய்து வந்தனர். இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் கஜபூஜைகள் மற்றும் முதற் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை, இரண்டாம் கால யாக பூஜைகள், மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது.

    நேற்று காலையில் நான்காம் கால யாக பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனையும், காலை 7.30 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்படாகி புனித நீர் அடங்கிய தீர்த்தக்குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து காலை 8.15 மணிக்கு மூலவர் விமானத்திற்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தலைமை குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தான அபிஷேகம் நடைபெற்றது. இதில், திருவாடுதுறை ஆதினம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, முன்னாள் எம்.எல்.ஏ., சுப்புராம், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன் மற்றும் நகர வைரவன்பட்டி, சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    மொரீசியஸ் தீவில் உள்ள ‘ஹரஹர தேவஸ்தானம்’ என்ற ஆலயத்தின் முகப்பில், 108 அடி உயர வெங்கடேசப் பெருமாள் சிலை நிறுவப்பட்டுள்ளது.
    மொரீசியஸ் தீவில் பாரஸ் சைட் என்ற இடத்தில் ‘ஹரஹர தேவஸ்தானம்’ என்ற பெயரில் இந்து ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. 2018-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் முகப்பில், 108 அடி உயர வெங்கடேசப் பெருமாள் சிலை நிறுவப்பட்டுள்ளது.

    இந்த பிரமாண்ட சிலையின் அடியில் கோவில் இருப்பதுபோல் தோற்றம் அளிக்கிறது.

    பெருமாளின் 108 திவ்ய தேசங்களை குறிப்பிடும் வகையில், இந்த சிலை 108 அடி உயரம் கொண்டதாக நிறுவப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த ஆலயத்திற்குள், 11 அடி உயர சிவலிங்கம், 22 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலைகள் போன்றவையும் பிரமாண்டத்தின் உச்சமாய் இருக்கின்றன.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தீப, தூபங்கள் இல்லாமல் பள்ளியறை பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர்.
    பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். அம்பிகை, சிவனை வழிபட காவிரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்து வழிபட்டார். இதனால் இவர் ஜம்புகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார் என்பது வரலாறு. அகிலம் ஆண்ட நாயகி அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம் திருவானைக்கோவில் ஆகும்.

    இக்கோவில், 18 ஏக்கர் நிலப்பரப்பளவில் நீண்ட உயரமான மதில்களும், நான்கு திசைகளில் கோபுரங்கள் மற்றும் ஐந்து பிரகாரங்கள் கொண்டது. அம்மன் அகிலாண்டேஸ்வரி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சன்னதியில் கிழக்கு நோக்கியவாது அகிலாண்டேஸ்வரி காட்சி தருகிறார். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள்பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளி உள்ளார்.

    இக்கோவிலில் தினந்தோறும் காலை, உச்சி, மாலை, இரவு ஆகிய நான்கு காலங்களிலும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இக்கோவிலில் உள்ள ஜம்புகேஸ்வரருக்கு தினமும் இரவு அர்த்தஜாம தீபாராதனை நடைபெறும். பின்னர் உற்சவர், சன்னதியில் இருந்து சொக்கர் பல்லக்கில் புறப்பட்டு சாமரம், தூபம், தீவட்டி, மேளதாளத்துடன் ஓதுவாருடன் அம்மன் சன்னதியை வந்தடைவார். அங்கு சொக்கரை பள்ளிஅறையில் எழுந்தருள செய்து வாசனை பூக்களால் அலங்கரித்து தூபம், தீபங்கள் காண்பிக்கப்பட்டு அப்பம், பால், பழம் கொண்டு நெய் வேத்தியம் நடைபெறும். பின்னர் பஞ்சஆரத்தியுடன் ஓதுவார் பாடலுடன் பள்ளியறை பூஜை நடைபெறும்.

    ஆனால், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்த்தலமாகவும். அகிலம் ஆண்ட நாயகி அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமான இக்கோவிலில் தற்போது பள்ளிஅறையில் ஒரு சிறிய விளக்கு கூட இல்லாமலும் இருண்ட நிலையில் காணப்படுகின்றன. மேலும் தீப, தூபங்கள் கூட சரிவர காட்டப்படாமலும் பள்ளி அறை பூஜைகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள், சிவனடியார்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், பள்ளியறையில் சிறிய விளக்கு கூட ஏற்றப்படாமல் இருட்டறையிலேயே பூஜைகள் நடைபெறுகின்றன. சுவாமிகளுக்கு பஞ்ச தீபங்கள் காட்டப்படுவதில்லை.

    தற்போது இந்துசமய அறநிலையத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்நிலையில் இக்கோவிலில் பூஜைகள் முறைப்படி நடைபெறுகின்றனவா? என்பதை உரிய அதிகாரிகளை கொண்டு கண்காணித்து பூஜைகள் முறைப்படி நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    அரியாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் இந்திர விமானம், காமதேனு, அன்னம், ரிஷபம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது.
    அரியாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மாத மயானக் கொள்ளை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து விசேஷ அலங்காரத்தில் மகா தீபாரானை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவில், சூரிய பிரபை அலங்காரத்த்தில் விநாயகர், முருகன் மற்றும் சிவசக்தி சாமிகள் வீதியுலா நடந்தது.

    விழா நாட்களில் இந்திர விமானம், காமதேனு, அன்னம், ரிஷபம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது. வருகிற 9-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7 மணியளவில் ரணகளிப்பும் அதனை தொடர்ந்து சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை தேரோட்டம், மயானக் கொள்ளை உற்சவம் நடக்கிறது.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேரோட்டத்தினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். விழாவின் நிறைவாக 11-ந் தேதி காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.
    ×