என் மலர்
கிறித்தவம்
குழுவாக நாம் செயல்பட ஆரம்பிக்கின்ற போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான செயல்களில் ஒன்று, சுறுசுறுப்பான மனிதர்களை நமது அருகில் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும்.
உலகில் நிகழ்த்தப்படுகின்ற சாதனைகளை பட்டியலிட்டு ஆய்வு செய்து பார்த்தால் அவற்றில் பெரும்பாலானவை கூட்டு முயற்சியால் விளைந்தவையே ஆகும். குழுவாக செயல்படும் போது ஏராளமான நன்மைகளை பெற முடியும். இன்றைய காலவேகத்தில் கூட்டாக பணிபுரிவது வெகுவாக அரிதான ஒன்றாக மாறிப்போய் விட்டது. எல்லோருமே தனித்தனி மரமாகவே காட்சியளிக்கிறார்கள். இதனை மாற்றுவதற்கும், முறையான பாதையில் பயணம் செய்வதற்கும் நாம் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்ய வேண்டும்.
நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் நார்மன் ஈ போர்லாக் என்பவருக்கு 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி டெல்லியில் விஞ்ஞான்பவனில் வைத்து இந்திய அரசு சார்பில் எம்.எஸ். சுவாமிநாதன் விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் பேராசிரியர், விஞ்ஞானிகள் அமர்ந்திருந்த இடத்தை பார்த்து இந்தியாவில் ஏற்பட்ட மாபெரும் மறுமலர்ச்சிக்கு அனைவரும் இணைந்து கூட்டாக செயலாற்றியதே என வியந்து பாராட்டினார். கூட்டாக செயலாற்றுதலே மாபெரும் சாதனைக்கு அச்சாரம் என்றார்.
இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் உலகத்தில் காணப்படும் பல்வேறு விதமான முரண்பாடுகளை களைந்தெறியவதற்கு நாம் ஒவ்வொருமே அழைக்கப்படுகின்றோம். தனித்தனி மனிதர்களாக அல்ல, மாறாக குழுவாக செயல்பட வேண்டும். குழுவாக நாம் செயல்பட ஆரம்பிக்கின்ற போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான செயல்களில் ஒன்று, சுறுசுறுப்பான மனிதர்களை நமது அருகில் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். அவர்களின் சுறுசுறுப்பு இன்னும் அதிக சக்தியுள்ள காரியங்களை செய்வதற்கு நமக்கு வழிகாட்டும். உங்களுக்கும், உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போன்றே உங்கள் அருகில் இருப்பவருக்கும் தொடர்பு உண்டு.
லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதனை அடைய வேண்டும் என்ற துடிப்போடு இயங்குகின்றவர்களை உடன் வைத்திருங்கள். உங்கள் அருகில் இருப்பவர்கள் பார்த்து நீங்கள் உற்சாகம் பெறுவதை போன்று உங்களை பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வாய்ப்பு உண்டு. பிறரோடு இணைந்து செயலாற்றி உலகம் உயிர்த்துடிப்போடு இயங்குவதற்கு வழிகாட்டுவோம்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் நார்மன் ஈ போர்லாக் என்பவருக்கு 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி டெல்லியில் விஞ்ஞான்பவனில் வைத்து இந்திய அரசு சார்பில் எம்.எஸ். சுவாமிநாதன் விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் பேராசிரியர், விஞ்ஞானிகள் அமர்ந்திருந்த இடத்தை பார்த்து இந்தியாவில் ஏற்பட்ட மாபெரும் மறுமலர்ச்சிக்கு அனைவரும் இணைந்து கூட்டாக செயலாற்றியதே என வியந்து பாராட்டினார். கூட்டாக செயலாற்றுதலே மாபெரும் சாதனைக்கு அச்சாரம் என்றார்.
இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் உலகத்தில் காணப்படும் பல்வேறு விதமான முரண்பாடுகளை களைந்தெறியவதற்கு நாம் ஒவ்வொருமே அழைக்கப்படுகின்றோம். தனித்தனி மனிதர்களாக அல்ல, மாறாக குழுவாக செயல்பட வேண்டும். குழுவாக நாம் செயல்பட ஆரம்பிக்கின்ற போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான செயல்களில் ஒன்று, சுறுசுறுப்பான மனிதர்களை நமது அருகில் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். அவர்களின் சுறுசுறுப்பு இன்னும் அதிக சக்தியுள்ள காரியங்களை செய்வதற்கு நமக்கு வழிகாட்டும். உங்களுக்கும், உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போன்றே உங்கள் அருகில் இருப்பவருக்கும் தொடர்பு உண்டு.
லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதனை அடைய வேண்டும் என்ற துடிப்போடு இயங்குகின்றவர்களை உடன் வைத்திருங்கள். உங்கள் அருகில் இருப்பவர்கள் பார்த்து நீங்கள் உற்சாகம் பெறுவதை போன்று உங்களை பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வாய்ப்பு உண்டு. பிறரோடு இணைந்து செயலாற்றி உலகம் உயிர்த்துடிப்போடு இயங்குவதற்கு வழிகாட்டுவோம்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவர் உங்களை செவ்வையான பாதைக்கு உங்களை வழி நடத்துவார், ஆமென்.
நாம் வாழும் இந்த பூமியில் ஒவ்வொருவருக்கும் தேவைகள் இருக்கும். குடும்பத்தின் தேவைகளை கணவனும், மனைவியும் இணைந்து ஆலோசித்து அவற்றை நிறைவாக பூர்த்தி செய்ய வேண்டும். கல்விக்கட்டணம், வீட்டு வாடகை, மாதாந்திர தவணைத் தொகை என்று அடிப்படை தேவைகளை மாத மாதம் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை வீட்டுத் தலைவனுக்கு உண்டு.
‘உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை’. (உபா 15:6).
தேவனாகிய கர்த்தர், ‘நீயோ கடன் வாங்குவதில்லை’ என்று சொல்லுகிறார். ‘இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லா கற்பனைகளையும், நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய் கேட்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்’. (உபா 15:4,5).
கடன் காரணமாக, மனிதன் சந்தோஷத்தை இழக்கிறான். குடும்பத்தில் சமாதானத்தை இழக் கிறான். அவன் வாழ்க்கையில் இருள் நிறைந்து காணப்படும். வாங்கிய கடனை அடைப்பதற்கு என்ன வழி? என்று பல எண்ணங்கள் கடன் வாங்கியவருக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.
‘ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான். கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை’. (நீதி 22:3).
கர்த்தர் இரக்கம் செய்யமாட்டாரோ? என் தேவைகளை சந்திக்க, என் குடும்பத்தை உயர்த்தமாட்டாரோ என்று புலம்புவதை காட்டிலும், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, ஆலயத்திற்கு சென்று, அவருடைய சத்தத்தைக் கேட்டு ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது கர்த்தர் ஞானத்தை தருவார். கடனைப் பூர்த்தி செய்வதற்கான வழியைத் காண்பிப்பார். அற்புதங்களையும், அடையாளங்களையும், உங்களுக்கு காண்பிப்பார். பரிசுத்தத்திற்கு ஏதுவான வழியை காண்பிப்பார். உங்கள் கடனை நீங்கள் விரைவாக, எளிதாக ஞானமாய் அடைப்பீர்கள்.
நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறீர்களானால், உங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருங்கள். வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படி கிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும், நடுக்கத்தோடும், கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்திருங்கள்.
எஜமான்களே, நீங்களும் வேலைக்காரருக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.
குடும்பத்தில் உங்கள் எளியவனான சகோதரரில் ஒருவன் இருந்தால், உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், அவனுக்கு தேவையானதைக் கொடுப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள். பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமானத்தை நிறைவேற்றுகிறான். இவ்வுலகத்தில் நாம் வாழும்வரை 10 கற்பனைகளையும் நியாய பிரமானத்தையும் தீவிரமாய், கவனமாக, ஒழுங்காக கடைப் பிடிக்க வேண்டும். அப்பொழுது கர்த்தர், இரட்சிப்பை அருளிச் செய்வார். கடன் பிரச்சினையில் இருந்து உங்களை விடுவிப்பார்.
என் பிரியமான சகோதரரே, தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து கொள்ளவில்லையா? (யாக் 2:5).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை நாம் நம்பிக்கையோடே பெருக்கிக் கொள்ள வேண்டும். இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும். அப்போது முன்னேற்றத்திற்கான ஆலோசனையையும், வழியையும், வாழ்க்கையின் உயர்வையும், கர்த்தர் ஜெபத்திலே வெளிப்படுத்துவார். ஆதலால் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். கவலைப்படாதிருங்கள். கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? ஆகவே கவலைப்படாதிருங்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, கிரியைகளை நடப்பிக்க ஆரம்பியுங்கள். கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கும். கிரியைகளினாலே நாம் நீதிமான்களாக்கப்பட வேண்டும். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கை பலிபீடத்தின் மேல் செலுத்த முற்பட்ட போது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?
ஆகவே, நாம் கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, இடைவிடாமல் ஜெபம் பண்ணி, அவருடைய சித்தம் இன்னதென்று அறிந்து, கிரியைகளை நடப்பிக்க வேண்டும். அப்போது கடன் பிரச்சினையிலிருந்து, கர்த்தர் உங்களை அற்புதமாய், அதிசயமாய் உங்களை ஆசீர்வதிப்பார்.
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவர் உங்களை செவ்வையான பாதைக்கு உங்களை வழி நடத்துவார், ஆமென்.
சகோ. ஷெர்லின் நாத், சென்னை-24.
‘உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை’. (உபா 15:6).
தேவனாகிய கர்த்தர், ‘நீயோ கடன் வாங்குவதில்லை’ என்று சொல்லுகிறார். ‘இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லா கற்பனைகளையும், நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய் கேட்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்’. (உபா 15:4,5).
கடன் காரணமாக, மனிதன் சந்தோஷத்தை இழக்கிறான். குடும்பத்தில் சமாதானத்தை இழக் கிறான். அவன் வாழ்க்கையில் இருள் நிறைந்து காணப்படும். வாங்கிய கடனை அடைப்பதற்கு என்ன வழி? என்று பல எண்ணங்கள் கடன் வாங்கியவருக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.
‘ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான். கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை’. (நீதி 22:3).
கர்த்தர் இரக்கம் செய்யமாட்டாரோ? என் தேவைகளை சந்திக்க, என் குடும்பத்தை உயர்த்தமாட்டாரோ என்று புலம்புவதை காட்டிலும், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, ஆலயத்திற்கு சென்று, அவருடைய சத்தத்தைக் கேட்டு ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது கர்த்தர் ஞானத்தை தருவார். கடனைப் பூர்த்தி செய்வதற்கான வழியைத் காண்பிப்பார். அற்புதங்களையும், அடையாளங்களையும், உங்களுக்கு காண்பிப்பார். பரிசுத்தத்திற்கு ஏதுவான வழியை காண்பிப்பார். உங்கள் கடனை நீங்கள் விரைவாக, எளிதாக ஞானமாய் அடைப்பீர்கள்.
நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறீர்களானால், உங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருங்கள். வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படி கிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும், நடுக்கத்தோடும், கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்திருங்கள்.
எஜமான்களே, நீங்களும் வேலைக்காரருக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.
குடும்பத்தில் உங்கள் எளியவனான சகோதரரில் ஒருவன் இருந்தால், உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், அவனுக்கு தேவையானதைக் கொடுப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள். பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமானத்தை நிறைவேற்றுகிறான். இவ்வுலகத்தில் நாம் வாழும்வரை 10 கற்பனைகளையும் நியாய பிரமானத்தையும் தீவிரமாய், கவனமாக, ஒழுங்காக கடைப் பிடிக்க வேண்டும். அப்பொழுது கர்த்தர், இரட்சிப்பை அருளிச் செய்வார். கடன் பிரச்சினையில் இருந்து உங்களை விடுவிப்பார்.
என் பிரியமான சகோதரரே, தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து கொள்ளவில்லையா? (யாக் 2:5).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை நாம் நம்பிக்கையோடே பெருக்கிக் கொள்ள வேண்டும். இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும். அப்போது முன்னேற்றத்திற்கான ஆலோசனையையும், வழியையும், வாழ்க்கையின் உயர்வையும், கர்த்தர் ஜெபத்திலே வெளிப்படுத்துவார். ஆதலால் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். கவலைப்படாதிருங்கள். கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? ஆகவே கவலைப்படாதிருங்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, கிரியைகளை நடப்பிக்க ஆரம்பியுங்கள். கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கும். கிரியைகளினாலே நாம் நீதிமான்களாக்கப்பட வேண்டும். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கை பலிபீடத்தின் மேல் செலுத்த முற்பட்ட போது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?
ஆகவே, நாம் கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, இடைவிடாமல் ஜெபம் பண்ணி, அவருடைய சித்தம் இன்னதென்று அறிந்து, கிரியைகளை நடப்பிக்க வேண்டும். அப்போது கடன் பிரச்சினையிலிருந்து, கர்த்தர் உங்களை அற்புதமாய், அதிசயமாய் உங்களை ஆசீர்வதிப்பார்.
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவர் உங்களை செவ்வையான பாதைக்கு உங்களை வழி நடத்துவார், ஆமென்.
சகோ. ஷெர்லின் நாத், சென்னை-24.
மற்ற இறைவாக்கு நூல்களுக்கும் அபக்கூக்கு நூலுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. மற்ற நூல்கள் பெரும்பாலும் இறைவன் சொல்கின்ற செய்தியை, மக்களுக்கு அறிவிப்பதாகவே இருக்கும்.
அபக்கூக்கு எனும் பெயரை “தழுவிக் கொள்ளும் மனிதர்” என மொழிபெயர்க்கலாம். பழைய மொழிபெயர்ப்புகளில் ‘ஆபகூக்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய இறைவாக்கினர்களில் ஒருவர் இவர். இந்த நூல் மூன்று அதிகாரங்களும், 56 வசனங்களும், 1476 வார்த்தைகளும் அடங்கிய ஒரு சிறிய நூல்.
மற்ற இறைவாக்கு நூல்களுக்கும் அபக்கூக்கு நூலுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. மற்ற நூல்கள் பெரும்பாலும் இறைவன் சொல்கின்ற செய்தியை, மக்களுக்கு அறிவிப்பதாகவே இருக்கும்.
ஆனால் இந்த நூலோ முழுக்க முழுக்க, அபக்கூக்கு இறைவனை நோக்கிக் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இறைவனும் பொறுமையாய்ப் பதில் சொல்கிறார். ‘வாழ்க்கையில் விளங்கிக் கொள்ள முடியாத கேள்விகள் எழும்போது மனிதர்களை நாடாமல், இறைவனை நோக்கி நமது கேள்விகளை நேரடியாக எழுப்பலாம்’ எனும் அடிப்படை சிந்தனையாகவும் இந்த நூலைப் புரிந்து கொள்ளலாம்.
“ஏன் தீயவர்கள் வாழ்கிறார்கள்?, ஏன் நல்லவர்கள் வீழ்கிறார்கள்” என காலம் காலமாக எழுப்பப்படுகின்ற கேள்வியையே இறைவனை நோக்கி நீட்டுகிறார் இறைவாக்கினர். ‘நல்லவர்கள் வாழும் காலம் வரும், தீயவர்கள் அழியும் காலம் வரும்’ என்கிறார் கடவுள்.
‘இறைவனின் மீட்புத் திட்டத்தில் நல்லவர்கள் இறைவனின் முடிவற்ற வாழ்விலும், தீயவர்கள் முடிவற்ற அழிவிலும் இணைவார்கள்’ என்பதன் நிழலாக இறைவனின் பதில் அமைந்துள்ளது.
இரண்டாவது அதிகாரத்தில், ‘அனைத்தையும் பலகையில் எழுதி வை’ என ஒரு வித்தியாசமான கட்டளையை இறைவன் கொடுக்கிறார். ‘எல்லோரும் படிக்கும்படி அது அமைய வேண்டும்’ என்கிறார் கடவுள்.
மூன்றாவது அதிகாரமோ சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு பாடலாக மாறிவிடுகிறது. ‘சிகயோன்’ எனும் பண்ணில் அவர் அந்தப் பாடலைப் பாடுகிறார்.
கி.மு. 607-களில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இறைவாக்கினர் செப்பனியாவுக்குப் பிறகு இருபது ஆண்டுகள் கழிந்து இவருடைய இறைவாக்குக் காலம் நிகழ்கிறது.
நாட்டில் நடக்கின்ற கொடுமைகள் இறைவாக்கினரை ரொம்பவே பாதிக்கின்றன. ‘இறைவன் ஏன் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கிறார். எதுவும் செய்யவில்லையே?’ எனும் கவலை அவருக்கு எழுகிறது. எனவே தான் தனது கேள்விக் கணைகளை இறைவனை நோக்கி எய்கிறார்.
கடவுள் கல்தேயரின் படையெடுப்பு நிகழப் போவதைச் சொல்கிறார். அப்போது இறைவாக்கினருக்கு கடவுள் ரொம்பப் பெரிய தண்டனையைத் தரப் போகிறாரே எனும் புதிய பதற்றம் எழுகிறது. ‘கடவுள் ஒன்றும் செய்யவில்லை’ எனும் நிலையிலிருந்து, ‘கடவுள் மிகப்பெரிய தண்டனையை தருகிறாரே’ எனும் மனநிலைக்கு அவர் செல்கிறார். ‘தவறு செய்யும் மக்களை தண்டிக்க, அவர்களை விடக் கொடிய இனத்தை கொண்டு வருகிறாரே’ என்று அவரது மனம் பதறியது.
“யூதாவின் செயல்களை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன், அவர்களுக்கான தண்டனை வரும். அத்தகைய இடர்பாடுகளின் காலத்திலும் என்னை மிகவும் நம்பிக்கையுடன் தொடர்ந்து பற்றிக் கொண்டிருப்பவர்களை நான் விடுவிப்பேன்” எனும் இரக்கத்தின் நற்செய்தியையும் இறைவன் வழங்குகிறார். இது அபக்கூக்கை அமைதி யடையச் செய்கிறது.
அபக்கூக்கின் நூல் மிக அற்புதமான கவித்துவ வார்த்தைகளாலும், உவமைகளாலும் கட்டமைக்கப்பட்ட நூல். இந்த நூலிலுள்ள பல வசனங்கள் கிறிஸ்தவ வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவை.
உதாரணமாக, “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர் (விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்)” எனும் வசனம் மார்டின் லூத்தரின் புரட்டஸ்டன்ட் அறைகூவலுக்கு பேருதவியாய் இருந்தது.
‘தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும்’.
“ஆனால் ஆண்டவர் தம் புனித கோவிலில் வீற்றிருக்கின்றார்; அவர் திருமுன் மண்ணுலகெங்கும் மவுனம் காப்பதாக”
“சினமுற்றபோதும் உமது இரக்கத்தை நினைவு கூரும்”
“அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும், ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும், நான் ஆண்டவரில் களிகூர்வேன்; என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்”.
இது போன்றவையெல்லாம் அபக்கூக்கு நூலில் உள்ள அற்புதமான வசனங்களில் சில.
முதல் இரண்டு அதிகாரங்களிலும் இறைவனிடம் இறைவாக்கினர் எழும்பும் முறையீடும், அதற்கு இறைவன் அளிக்கும் பதிலும் இடம்பெற்றிருக்கின்றன. மூன்றாவது அதிகாரமோ முற்றிலும் வேறுபட்ட ஒரு மனநிலையை நமக்குச் சொல்கிறது.
கடவுளோடான போராட்டம், இறைவனில் கிடைக்கும் அமைதியாய் மாறுகிறது. பரிதாபகரமான சூழல் மகிழ்வின் சூழலாகிறது. கோபக்குரல், இனிய பாடலாகிறது. முறையீடு வாழ்த்தொலியாகிறது. பதற்றம் பொறுமையாகிறது. நீதிக்கான தாகம், இரக்கத்துக்கான கேள்வியாய் மாறுகிறது. பள்ளத்தாக்கின் நிலைமை, உயரங்களுக்கு இடம் பெயர்கிறது. இறைவன் இயங்கவில்லை எனும் சிந்தனை, இறைவனின் கட்டுப்பாட்டிலேயே காலங்கள் இருக்கின்றன எனும் புரிதலாக மாறுகிறது.
வாசிப்புக்கு சிலிர்ப்பும், வியப்பும் ஏற்படுத்தும் ஒரு நூல் இது என்பதில் சந்தேகமில்லை.
சேவியர்
மற்ற இறைவாக்கு நூல்களுக்கும் அபக்கூக்கு நூலுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. மற்ற நூல்கள் பெரும்பாலும் இறைவன் சொல்கின்ற செய்தியை, மக்களுக்கு அறிவிப்பதாகவே இருக்கும்.
ஆனால் இந்த நூலோ முழுக்க முழுக்க, அபக்கூக்கு இறைவனை நோக்கிக் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இறைவனும் பொறுமையாய்ப் பதில் சொல்கிறார். ‘வாழ்க்கையில் விளங்கிக் கொள்ள முடியாத கேள்விகள் எழும்போது மனிதர்களை நாடாமல், இறைவனை நோக்கி நமது கேள்விகளை நேரடியாக எழுப்பலாம்’ எனும் அடிப்படை சிந்தனையாகவும் இந்த நூலைப் புரிந்து கொள்ளலாம்.
“ஏன் தீயவர்கள் வாழ்கிறார்கள்?, ஏன் நல்லவர்கள் வீழ்கிறார்கள்” என காலம் காலமாக எழுப்பப்படுகின்ற கேள்வியையே இறைவனை நோக்கி நீட்டுகிறார் இறைவாக்கினர். ‘நல்லவர்கள் வாழும் காலம் வரும், தீயவர்கள் அழியும் காலம் வரும்’ என்கிறார் கடவுள்.
‘இறைவனின் மீட்புத் திட்டத்தில் நல்லவர்கள் இறைவனின் முடிவற்ற வாழ்விலும், தீயவர்கள் முடிவற்ற அழிவிலும் இணைவார்கள்’ என்பதன் நிழலாக இறைவனின் பதில் அமைந்துள்ளது.
இரண்டாவது அதிகாரத்தில், ‘அனைத்தையும் பலகையில் எழுதி வை’ என ஒரு வித்தியாசமான கட்டளையை இறைவன் கொடுக்கிறார். ‘எல்லோரும் படிக்கும்படி அது அமைய வேண்டும்’ என்கிறார் கடவுள்.
மூன்றாவது அதிகாரமோ சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு பாடலாக மாறிவிடுகிறது. ‘சிகயோன்’ எனும் பண்ணில் அவர் அந்தப் பாடலைப் பாடுகிறார்.
கி.மு. 607-களில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இறைவாக்கினர் செப்பனியாவுக்குப் பிறகு இருபது ஆண்டுகள் கழிந்து இவருடைய இறைவாக்குக் காலம் நிகழ்கிறது.
நாட்டில் நடக்கின்ற கொடுமைகள் இறைவாக்கினரை ரொம்பவே பாதிக்கின்றன. ‘இறைவன் ஏன் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கிறார். எதுவும் செய்யவில்லையே?’ எனும் கவலை அவருக்கு எழுகிறது. எனவே தான் தனது கேள்விக் கணைகளை இறைவனை நோக்கி எய்கிறார்.
கடவுள் கல்தேயரின் படையெடுப்பு நிகழப் போவதைச் சொல்கிறார். அப்போது இறைவாக்கினருக்கு கடவுள் ரொம்பப் பெரிய தண்டனையைத் தரப் போகிறாரே எனும் புதிய பதற்றம் எழுகிறது. ‘கடவுள் ஒன்றும் செய்யவில்லை’ எனும் நிலையிலிருந்து, ‘கடவுள் மிகப்பெரிய தண்டனையை தருகிறாரே’ எனும் மனநிலைக்கு அவர் செல்கிறார். ‘தவறு செய்யும் மக்களை தண்டிக்க, அவர்களை விடக் கொடிய இனத்தை கொண்டு வருகிறாரே’ என்று அவரது மனம் பதறியது.
“யூதாவின் செயல்களை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன், அவர்களுக்கான தண்டனை வரும். அத்தகைய இடர்பாடுகளின் காலத்திலும் என்னை மிகவும் நம்பிக்கையுடன் தொடர்ந்து பற்றிக் கொண்டிருப்பவர்களை நான் விடுவிப்பேன்” எனும் இரக்கத்தின் நற்செய்தியையும் இறைவன் வழங்குகிறார். இது அபக்கூக்கை அமைதி யடையச் செய்கிறது.
அபக்கூக்கின் நூல் மிக அற்புதமான கவித்துவ வார்த்தைகளாலும், உவமைகளாலும் கட்டமைக்கப்பட்ட நூல். இந்த நூலிலுள்ள பல வசனங்கள் கிறிஸ்தவ வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவை.
உதாரணமாக, “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர் (விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்)” எனும் வசனம் மார்டின் லூத்தரின் புரட்டஸ்டன்ட் அறைகூவலுக்கு பேருதவியாய் இருந்தது.
‘தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும்’.
“ஆனால் ஆண்டவர் தம் புனித கோவிலில் வீற்றிருக்கின்றார்; அவர் திருமுன் மண்ணுலகெங்கும் மவுனம் காப்பதாக”
“சினமுற்றபோதும் உமது இரக்கத்தை நினைவு கூரும்”
“அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும், ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும், நான் ஆண்டவரில் களிகூர்வேன்; என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்”.
இது போன்றவையெல்லாம் அபக்கூக்கு நூலில் உள்ள அற்புதமான வசனங்களில் சில.
முதல் இரண்டு அதிகாரங்களிலும் இறைவனிடம் இறைவாக்கினர் எழும்பும் முறையீடும், அதற்கு இறைவன் அளிக்கும் பதிலும் இடம்பெற்றிருக்கின்றன. மூன்றாவது அதிகாரமோ முற்றிலும் வேறுபட்ட ஒரு மனநிலையை நமக்குச் சொல்கிறது.
கடவுளோடான போராட்டம், இறைவனில் கிடைக்கும் அமைதியாய் மாறுகிறது. பரிதாபகரமான சூழல் மகிழ்வின் சூழலாகிறது. கோபக்குரல், இனிய பாடலாகிறது. முறையீடு வாழ்த்தொலியாகிறது. பதற்றம் பொறுமையாகிறது. நீதிக்கான தாகம், இரக்கத்துக்கான கேள்வியாய் மாறுகிறது. பள்ளத்தாக்கின் நிலைமை, உயரங்களுக்கு இடம் பெயர்கிறது. இறைவன் இயங்கவில்லை எனும் சிந்தனை, இறைவனின் கட்டுப்பாட்டிலேயே காலங்கள் இருக்கின்றன எனும் புரிதலாக மாறுகிறது.
வாசிப்புக்கு சிலிர்ப்பும், வியப்பும் ஏற்படுத்தும் ஒரு நூல் இது என்பதில் சந்தேகமில்லை.
சேவியர்
செப்பனியா நூலுக்கும், திருவெளிப்பாடு நூலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டு நூலுமே கடவுளின் பிள்ளைகளுக்கான நியாயத் தீர்ப்பை முதலில் பேசுகிறது
செப்பனியா நூல் அளவில் மிகச்சிறிய நூல்களில் ஒன்று. வெறும் மூன்று அதிகாரங்களும், 56 வசனங்களும், 1476 வார்த்தைகளும் தான் இந்த நூலின் உள்ளடக்கம். சின்ன இறைவாக்கினர்கள் 12 பேரில் 9 ஆவதாக வருகிறார் இவர்.
‘செப்பனியா’ என்னும் பெயருக்கு “கடவுள் மறைத்து வைக்கிறார்” என்பது பொருள். இந்த நூலை எழுதியவர் இறைவாக்கினர் செப்பனியா. கி.மு. 640- க்கும் கி.மு. 612- க்கும் இடைப்பட்ட காலத்தில் இது எழுதப்பட்டதாய் நம்பப்படுகிறது.
செப்பனியா இறைவாக்கினரைப் பற்றி அதிக தகவல்களை விவிலியம் நமக்குச் சொல்லவில்லை. அதே நேரத்தில் முந்தைய மூன்று தலைமுறையின் பெயர்களைச் சொல்லி அறிமுகம் செய்து வைக்கப்படும் ஒரே இறைவாக்கினரும் இவர் தான். இவரது முந்தைய மூன்றாம் தலைமுறை மன்னர் எசேக்கியாவில் சென்று நிறைவடைகிறது. இதன் மூலம் இவர் அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வருகிறது.
அதற்குப் பின்பு வந்த மனாசே காலத்தில் அரச பரம்பரையினர் எல்லாம் கொல்லப்பட்ட போது செப்பனியா மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவருக்கு இந்த பெயர் வந்திருக்கலாம் என்பது சிலருடைய கருத்து.
மனாசேயின் காலம் பாவத்தின் கோரத்தாண்டவமாய் இருந்தது. அவரது 55 ஆண்டுகால ஆட்சிக்குப்பின் வந்த ஆமான் வலுவற்ற ஒரு மன்னன். அவரால் எதையும் நேராக்க முடியவில்லை. அவரது இரண்டு ஆண்டு ஆட்சிக்குப் பின் யோசியா தனது 8- வது வயதில் ஆட்சிக்கு வந்தார்.
சுமார் எழுபது ஆண்டுகாலம் இறைவனின் குரல் ஒலிக்காத தேசத்தில் செப்பனியா அனுப்பப்படுகிறார். “ஆண்டவரின் நாள்” வருகிறது எனும் குரலாக செப்பனியா அங்கே முழங்கினார். ‘கடவுளுடைய கோபம் உள்ளுக்குள்ளே கனன்று எரிகிறது, அது வெளிப்படும் நாளை யாரும் தாங்க முடியாது’ என்பதே அவருடைய எச்சரிக்கையின் தொனியாக இருந்தது.
செப்பனியா இறைவாக்கினரின் இறைவார்த்தைகளும் எச்சரிக்கைகளும், பிற இறைவாக்கினர்களின் எச்சரிக்கையைப் போன்றே அமைகிறது. வேற்று தெய்வ வழிபாடுகள் மீது கடவுளின் கோபம் கொழுந்து விட்டு எரிவதை அவரது வார்த்தைகள் விளக்கின. மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய தலைவர்கள் அதை விட்டு விட்டு மக்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வதை அவர் கண்டித்தார்.
ஆனாலும் மக்கள் மனம் மாறி இறைவனிடம் திரும்பினால் அழிவிலிருந்து தப்பலாம் எனும் விடுதலையின் செய்தியையும் அவர் அறிவிக்கிறார்.
செப்பனியாவின் எச்சரிக்கை யோசியா மன்னனின் மனதில் படிப்படியான மாற்றத்தைக் கொண்டு வந்தது. இரண்டு முக்கியமான சீர்திருத்தங்களை அவர் செய்தார். கி.மு. 628-ல் பாகாலின் பலிபீடங்களை உடைத்து, அசேராக் கம்பங்களை வெட்டி, போலி தீர்க்கத்தரிசிகளின் எலும்புகளை எரித்து, வேற்று தெய்வ ஓவியங்களை அழித்து ஒரு சீர்திருத்தம் செய்தார்.
இரண்டாவது சீர்திருத்தம், கி.மு. 622- ல் குரு இலக்கியா கடவுளின் புனித நூலைக் கண்டெடுத்தபோது நிகழ்ந்தது. திருச்சட்ட நூலை வாசித்த அவர் மக்கள் இறைவனின் வழியில் நடக்க வேண்டுமென சட்டம் இயற்றினார்.
ஆன்மிகத்தை சட்டமியற்றி செயல்படுத்த முடியாது என்பதை அவர் அறியவில்லை. மக்கள் இறைவனின் பக்கம் திரும்பவில்லை.
சாவுக்குப் பிறகு எல்லோருக்கும் நியாயத் தீர்ப்பு வரும். நியாயத் தீர்ப்பு முதலில் இறை மக்களுக்கும் பின்னர் பிற இன மக்களுக்கும் வரும் எனும் புதிய ஏற்பாட்டுச் சிந்தனைகளை செப்பனியா நூலில் காணலாம்.
யூதாவைச் சுற்றியிருந்த நாடுகள் அனைத்தையும் அவர் எச்சரித்தார். மேற்கே பெலிஸ்தியர், கிழக்கே மோவாபியர், தெற்கே எத்தியோப்பியர் மற்றும் வடக்கே அசீரியர் என அனைவருக்கும் அழிவின் எச்சரிக்கையை செப்பனியா உரைத்தார்.
செப்பனியா நூலுக்கும், திருவெளிப்பாடு நூலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டு நூலுமே கடவுளின் பிள்ளைகளுக்கான நியாயத் தீர்ப்பை முதலில் பேசுகிறது. இஸ்ரேலுக்கும், திருச்சபைக்கும் அந்த எச்சரிக்கை விழுகிறது. பின்னர் பிற தேசங்களுக்கான தீர்ப்பைப் பேசுகிறது. கடைசியில் நீதித் தீர்ப்பு நாளைப் பற்றிப் பேசுகிறது.
இறைவாக்கினர்கள் எரேமியா மற்று அபக்கூக்கு ஆகியோருடைய காலத்தில் வாழ்ந்தவர் செப்பனியா. யூதாவை எப்படியாவது மீட்க முடியுமா என கடைசி முயற்சியாக களமிறங்கிய இறைவாக்கினர் அவர்.
மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி;
இஸ்ரயேலே! ஆரவாரம் செய்;
மகளே எருசலேம்!
உன் முழு உள்ளத்தோடு
அகமகிழ்ந்து அக்களி.
ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத்
தள்ளிவிட்டார்;
உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;
இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர்
உன் நடுவில் இருக்கின்றார்;
நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
எனும் நம்பிக்கையின் வார்த்தைகளுடன் செப்பனியா நூல் நிறைவு பெறுகிறது.
‘செப்பனியா’ என்னும் பெயருக்கு “கடவுள் மறைத்து வைக்கிறார்” என்பது பொருள். இந்த நூலை எழுதியவர் இறைவாக்கினர் செப்பனியா. கி.மு. 640- க்கும் கி.மு. 612- க்கும் இடைப்பட்ட காலத்தில் இது எழுதப்பட்டதாய் நம்பப்படுகிறது.
செப்பனியா இறைவாக்கினரைப் பற்றி அதிக தகவல்களை விவிலியம் நமக்குச் சொல்லவில்லை. அதே நேரத்தில் முந்தைய மூன்று தலைமுறையின் பெயர்களைச் சொல்லி அறிமுகம் செய்து வைக்கப்படும் ஒரே இறைவாக்கினரும் இவர் தான். இவரது முந்தைய மூன்றாம் தலைமுறை மன்னர் எசேக்கியாவில் சென்று நிறைவடைகிறது. இதன் மூலம் இவர் அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வருகிறது.
அதற்குப் பின்பு வந்த மனாசே காலத்தில் அரச பரம்பரையினர் எல்லாம் கொல்லப்பட்ட போது செப்பனியா மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவருக்கு இந்த பெயர் வந்திருக்கலாம் என்பது சிலருடைய கருத்து.
மனாசேயின் காலம் பாவத்தின் கோரத்தாண்டவமாய் இருந்தது. அவரது 55 ஆண்டுகால ஆட்சிக்குப்பின் வந்த ஆமான் வலுவற்ற ஒரு மன்னன். அவரால் எதையும் நேராக்க முடியவில்லை. அவரது இரண்டு ஆண்டு ஆட்சிக்குப் பின் யோசியா தனது 8- வது வயதில் ஆட்சிக்கு வந்தார்.
சுமார் எழுபது ஆண்டுகாலம் இறைவனின் குரல் ஒலிக்காத தேசத்தில் செப்பனியா அனுப்பப்படுகிறார். “ஆண்டவரின் நாள்” வருகிறது எனும் குரலாக செப்பனியா அங்கே முழங்கினார். ‘கடவுளுடைய கோபம் உள்ளுக்குள்ளே கனன்று எரிகிறது, அது வெளிப்படும் நாளை யாரும் தாங்க முடியாது’ என்பதே அவருடைய எச்சரிக்கையின் தொனியாக இருந்தது.
செப்பனியா இறைவாக்கினரின் இறைவார்த்தைகளும் எச்சரிக்கைகளும், பிற இறைவாக்கினர்களின் எச்சரிக்கையைப் போன்றே அமைகிறது. வேற்று தெய்வ வழிபாடுகள் மீது கடவுளின் கோபம் கொழுந்து விட்டு எரிவதை அவரது வார்த்தைகள் விளக்கின. மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய தலைவர்கள் அதை விட்டு விட்டு மக்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வதை அவர் கண்டித்தார்.
ஆனாலும் மக்கள் மனம் மாறி இறைவனிடம் திரும்பினால் அழிவிலிருந்து தப்பலாம் எனும் விடுதலையின் செய்தியையும் அவர் அறிவிக்கிறார்.
செப்பனியாவின் எச்சரிக்கை யோசியா மன்னனின் மனதில் படிப்படியான மாற்றத்தைக் கொண்டு வந்தது. இரண்டு முக்கியமான சீர்திருத்தங்களை அவர் செய்தார். கி.மு. 628-ல் பாகாலின் பலிபீடங்களை உடைத்து, அசேராக் கம்பங்களை வெட்டி, போலி தீர்க்கத்தரிசிகளின் எலும்புகளை எரித்து, வேற்று தெய்வ ஓவியங்களை அழித்து ஒரு சீர்திருத்தம் செய்தார்.
இரண்டாவது சீர்திருத்தம், கி.மு. 622- ல் குரு இலக்கியா கடவுளின் புனித நூலைக் கண்டெடுத்தபோது நிகழ்ந்தது. திருச்சட்ட நூலை வாசித்த அவர் மக்கள் இறைவனின் வழியில் நடக்க வேண்டுமென சட்டம் இயற்றினார்.
ஆன்மிகத்தை சட்டமியற்றி செயல்படுத்த முடியாது என்பதை அவர் அறியவில்லை. மக்கள் இறைவனின் பக்கம் திரும்பவில்லை.
சாவுக்குப் பிறகு எல்லோருக்கும் நியாயத் தீர்ப்பு வரும். நியாயத் தீர்ப்பு முதலில் இறை மக்களுக்கும் பின்னர் பிற இன மக்களுக்கும் வரும் எனும் புதிய ஏற்பாட்டுச் சிந்தனைகளை செப்பனியா நூலில் காணலாம்.
யூதாவைச் சுற்றியிருந்த நாடுகள் அனைத்தையும் அவர் எச்சரித்தார். மேற்கே பெலிஸ்தியர், கிழக்கே மோவாபியர், தெற்கே எத்தியோப்பியர் மற்றும் வடக்கே அசீரியர் என அனைவருக்கும் அழிவின் எச்சரிக்கையை செப்பனியா உரைத்தார்.
செப்பனியா நூலுக்கும், திருவெளிப்பாடு நூலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டு நூலுமே கடவுளின் பிள்ளைகளுக்கான நியாயத் தீர்ப்பை முதலில் பேசுகிறது. இஸ்ரேலுக்கும், திருச்சபைக்கும் அந்த எச்சரிக்கை விழுகிறது. பின்னர் பிற தேசங்களுக்கான தீர்ப்பைப் பேசுகிறது. கடைசியில் நீதித் தீர்ப்பு நாளைப் பற்றிப் பேசுகிறது.
இறைவாக்கினர்கள் எரேமியா மற்று அபக்கூக்கு ஆகியோருடைய காலத்தில் வாழ்ந்தவர் செப்பனியா. யூதாவை எப்படியாவது மீட்க முடியுமா என கடைசி முயற்சியாக களமிறங்கிய இறைவாக்கினர் அவர்.
மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி;
இஸ்ரயேலே! ஆரவாரம் செய்;
மகளே எருசலேம்!
உன் முழு உள்ளத்தோடு
அகமகிழ்ந்து அக்களி.
ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத்
தள்ளிவிட்டார்;
உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;
இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர்
உன் நடுவில் இருக்கின்றார்;
நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
எனும் நம்பிக்கையின் வார்த்தைகளுடன் செப்பனியா நூல் நிறைவு பெறுகிறது.
வாடிப்பட்டியில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
தென்னகத்து வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 29-ந்தேதி பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் பால்ராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினசரி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய விழாவாக நேற்று முன்தினம் ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா, இறைவார்த்தை சபை 144-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவ ஊற்று இயேசுவின் அருமருந்து 19-வது ஆண்டு பிறப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது. மேலும் அன்றைய தினம் மாலை நற்கருணை ஆராதனையும், முப்பெரும் விழா கூட்டுத்திருப்பலியும் மதுரை உயர்மாவட்டம் முதன்மைகுரு ஜெயராஜ் தலைமையில் நடந்தது.
அதன்பின்பு வண்ண விளக்குகள், மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பட்டாடை உடுத்தி குழந்தை ஏசுவை கையில் ஏந்தியபடி ஆரோக்கிய அன்னை எழுந்தருளினார். தொடர்ந்து தேர்பவனி புறப்பட்டு மதுரை-திண்டுக்கல் நகர்புற சாலை வழியாக கோர்ட்டு வரை சென்று திரும்பியது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
திருவிழாவில் நேற்று கொடியிறக்கம் நன்றி திருப்பலியுடன் பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை எஸ்.வி.டி. அதிபர் ஜோசப், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், எஸ்.வி.டி. உதவி பங்குத்தந்தை யூஜின்டென்சிங், அகஸ்டின்காரமல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய விழாவாக நேற்று முன்தினம் ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா, இறைவார்த்தை சபை 144-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவ ஊற்று இயேசுவின் அருமருந்து 19-வது ஆண்டு பிறப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது. மேலும் அன்றைய தினம் மாலை நற்கருணை ஆராதனையும், முப்பெரும் விழா கூட்டுத்திருப்பலியும் மதுரை உயர்மாவட்டம் முதன்மைகுரு ஜெயராஜ் தலைமையில் நடந்தது.
அதன்பின்பு வண்ண விளக்குகள், மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பட்டாடை உடுத்தி குழந்தை ஏசுவை கையில் ஏந்தியபடி ஆரோக்கிய அன்னை எழுந்தருளினார். தொடர்ந்து தேர்பவனி புறப்பட்டு மதுரை-திண்டுக்கல் நகர்புற சாலை வழியாக கோர்ட்டு வரை சென்று திரும்பியது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
திருவிழாவில் நேற்று கொடியிறக்கம் நன்றி திருப்பலியுடன் பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை எஸ்.வி.டி. அதிபர் ஜோசப், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், எஸ்.வி.டி. உதவி பங்குத்தந்தை யூஜின்டென்சிங், அகஸ்டின்காரமல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் நடைபெற்று வந்த ஆண்டு திருவிழா நிறைவடைந்தது. விழாவின் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற கொடி இறக்க நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று, மாதாவை தரிசனம் செய்தார்கள்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆரோக்கியமாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசனம் செய்வார்கள்.
திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஆரோக்கியமாதாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு, மாலை 6 மணியளவில் கொடி இறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. கொடி இறக்க நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தார்கள்.
கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கப்பட்ட கொடியை பேராலயத்துக்கு எடுத்து செல்லும்போது அதை பக்தர்கள் தொட்டு வணங்கினர். இதைத்தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி ஆகிய பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஆரோக்கியமாதாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு, மாலை 6 மணியளவில் கொடி இறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. கொடி இறக்க நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தார்கள்.
கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கப்பட்ட கொடியை பேராலயத்துக்கு எடுத்து செல்லும்போது அதை பக்தர்கள் தொட்டு வணங்கினர். இதைத்தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி ஆகிய பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
மும்பை பாந்திராவில் உள்ள மலைமாதா ஆலய திருவிழா தொடங்கியது. 15-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது.
மும்பை பாந்திராவில் பழமையான மலைமாதா ஆலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி நேற்று காலை 11.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து திருவிழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதில், இன்று (திங்கட்கிழமை) காலை 11.30 மணிக்கு நோயுற்றோர் மற்றும் வயதானவர்களுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது.
நாளை (செவ்வாய்க் கிழமை) கொங்கனிலும், 11-ந்தேதி மராத்தியிலும், 12-ந் தேதி தமிழிலும், 13-ந்தேதி மலையாளத்திலும், 14-ந்தேதி குஜராத்தியிலும் திருப்பலி காலை 11.30 மணிக்கு நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாளான 15-ந் தேதி காலை 11.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
இதையொட்டி நேற்று காலை 11.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து திருவிழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதில், இன்று (திங்கட்கிழமை) காலை 11.30 மணிக்கு நோயுற்றோர் மற்றும் வயதானவர்களுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது.
நாளை (செவ்வாய்க் கிழமை) கொங்கனிலும், 11-ந்தேதி மராத்தியிலும், 12-ந் தேதி தமிழிலும், 13-ந்தேதி மலையாளத்திலும், 14-ந்தேதி குஜராத்தியிலும் திருப்பலி காலை 11.30 மணிக்கு நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாளான 15-ந் தேதி காலை 11.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
வடுகர்பேட்டையில் ஆரோக்கியமாதா ஆலய தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கியமாதா ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, வேண்டுதல் சப்பர பவனி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி மற்றும் புள்ளம்பாடி மறைவட்ட குருக்கள் தலைமையில் திருவிழா ஆடம்பர திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இரவு 5 சப்பரங்களின் பவனி நடைபெற்றது. நேற்று காலை அருட்தந்தைகள் தெரஸ்நாதன், லியோடோமினிக், நல்லுஸ்ராஜா ஆகியோர் தலைமையிலும், பின்னர் புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு ஹென்றிபுஷ்பராஜ் தலைமையிலும் அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு மாதா சொரூபம் தாங்கிய தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று(திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஆலய பங்குதந்தை தங்கசாமி தலைமையில் கொடியிறக்கம் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி மற்றும் புள்ளம்பாடி மறைவட்ட குருக்கள் தலைமையில் திருவிழா ஆடம்பர திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இரவு 5 சப்பரங்களின் பவனி நடைபெற்றது. நேற்று காலை அருட்தந்தைகள் தெரஸ்நாதன், லியோடோமினிக், நல்லுஸ்ராஜா ஆகியோர் தலைமையிலும், பின்னர் புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு ஹென்றிபுஷ்பராஜ் தலைமையிலும் அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு மாதா சொரூபம் தாங்கிய தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று(திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஆலய பங்குதந்தை தங்கசாமி தலைமையில் கொடியிறக்கம் நடைபெறுகிறது.
பூண்டி மாதா பேராலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தில் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மாலையில் அன்னையின் சிறு தேர்பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்று வந்தன.
புனித அன்னை மரியாளின் பிறந்த நாளான நேற்று மாலை கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதாபேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஆரோக்கியராஜேஷ் விக்டர்லாரன்ஸ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித அன்னையின் பிறப்பு பெருவிழா அலங்கார தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த தேரில் புனித அன்னை மரியாளின் சொரூபம் வைக்கப்பட்டது. பின்னர் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார், தேரை புனிதம் செய்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேர்பவனியையொட்டி திருக்காட்டுப்பள்ளி பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
புனித அன்னை மரியாளின் பிறந்த நாளான நேற்று மாலை கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதாபேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஆரோக்கியராஜேஷ் விக்டர்லாரன்ஸ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித அன்னையின் பிறப்பு பெருவிழா அலங்கார தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த தேரில் புனித அன்னை மரியாளின் சொரூபம் வைக்கப்பட்டது. பின்னர் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார், தேரை புனிதம் செய்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேர்பவனியையொட்டி திருக்காட்டுப்பள்ளி பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
வேளாங்கண்ணியில் இன்று மாலை நடைபெறும் பெரிய தேர்பவனி நடைபெறுகிறது. இதற்காக 2500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், மராட்டி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது.
மேலும் சிலுவைப்பாதை வழிபாடு ஜெபமாலை, நவநாள், ஜெபம், மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை, ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தினமும் இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று (7-ந்தேதி) இரவு 7:30 மணி அளவில் நடைபெறுகிறது.
இன்று மாலை பேராலய கலையரங்கில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். பின்னர் இரவு 7 மணிக்கு ெபெரிய தேர்பவனி நடக்கிறது. புனித ஆரோக்கியமாதா பெரிய தேரில் எழுந்தருள தொடர்ந்து 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரியமாதா ஆகியோர் எழுந்தருள்வர்.
தேர் பேராலய முகப்பில் தொடங்கி கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக பேராலய முகப்பை வந்தடையும்.
திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று பெரிய தேர்பவனி வரை பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பஸ், ரெயில்கள் மூலமாகவும் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் கூட்டத்தால் தஞ்சை ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல தஞ்சை புது பஸ்நிலையத்திலும் வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
திருவிழாவையொட்டி தஞ்சையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் தஞ்சை வழியாக சிறப்பு ரெயிலும் இயக்கப்படுகிறது.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜீலு தலைமையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், எஸ்.பி.க்கள் ராஜசேகரன், துரை ஆகியோர் மேற்பார்வையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் காரைக்கால், நாகை, வேளாங்கண்ணி ஆகிய 3 ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் முகைதீன் உத்தரவின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சின்னசாமி மேற்பார்வையில் இன்ஸ் பெக்டர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 24 மணி நேரமும் கடற்கரையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறை வேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.
மேலும் சிலுவைப்பாதை வழிபாடு ஜெபமாலை, நவநாள், ஜெபம், மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை, ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தினமும் இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று (7-ந்தேதி) இரவு 7:30 மணி அளவில் நடைபெறுகிறது.
இன்று மாலை பேராலய கலையரங்கில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். பின்னர் இரவு 7 மணிக்கு ெபெரிய தேர்பவனி நடக்கிறது. புனித ஆரோக்கியமாதா பெரிய தேரில் எழுந்தருள தொடர்ந்து 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரியமாதா ஆகியோர் எழுந்தருள்வர்.
தேர் பேராலய முகப்பில் தொடங்கி கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக பேராலய முகப்பை வந்தடையும்.
திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று பெரிய தேர்பவனி வரை பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பஸ், ரெயில்கள் மூலமாகவும் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் கூட்டத்தால் தஞ்சை ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல தஞ்சை புது பஸ்நிலையத்திலும் வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
திருவிழாவையொட்டி தஞ்சையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் தஞ்சை வழியாக சிறப்பு ரெயிலும் இயக்கப்படுகிறது.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜீலு தலைமையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், எஸ்.பி.க்கள் ராஜசேகரன், துரை ஆகியோர் மேற்பார்வையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் காரைக்கால், நாகை, வேளாங்கண்ணி ஆகிய 3 ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் முகைதீன் உத்தரவின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சின்னசாமி மேற்பார்வையில் இன்ஸ் பெக்டர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 24 மணி நேரமும் கடற்கரையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறை வேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.
இயேசுவிடம் பன்னிரண்டு திருத்தூதர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் சீமோன் பேதுரு மற்றும் யூதாசு இஸ்காரியோத்து.யூதாசு பணத்தால் தோற்கடிக்கப்பட்டவர். பேதுரு பயத்தால் தோற்கடிக்கப்பட்டவர்.
இயேசுவிடம் பன்னிரண்டு திருத்தூதர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் சீமோன் பேதுரு மற்றும் யூதாசு இஸ்காரியோத்து.
இருவரும் இயேசுவால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள். இருவரும் இயேசுவின் பாரபட்சமற்ற அன்பைப் பெற்றவர்கள். ஆனால் இருவரும் இரு வேறு துருவங்கள்.
யூதாசு பணத்தால் தோற்கடிக்கப்பட்டவர். பேதுரு பயத்தால் தோற்கடிக்கப்பட்டவர்.
யூதாசு இயேசுவை ‘ரபி’ என அழைத்து, முப்பது வெள்ளிக்காசுக்காக அவரைக் காட்டிக்கொடுத்தவர்.
இயேசு தன் சீடர்களோடு இறுதி இரவுஉணவு உண்டு கொண்டிருக்கையில் தன் சீடரிடம், “உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.
அதிர்ச்சியடைந்த அனைவரும் அவரிடம், ‘போதகரே அது நானா?, அது நானா?’ என வினவத்தொடங்கினர்.
யூதாசும் தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்ள “அது நானா?” என கேட்க, “நீயே சொல்லிவிட்டாய் என இயேசு மறுமொழி கூறினார்” என மத்தேயு நற்செய்தி கூறுகிறது.
யூதாசு முப்பது வெள்ளிக்காசுகளை பெற்று அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தார்.
இயேசுவோ “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக்கொடுக்கிறாய்?” என வினவினார்.
மனக்கலக்கம் அடைந்த யூதாசு இயேசுவை விட்டு விலகிச் சென்றார். தான் செய்தது தவறு என்பதை யூதாஸ் உணர்ந்தார். குற்ற உணர்வு அவரைக் குத்திக் கிழித்தது. ஆனாலும் அவர் இயேசுவிடம் திரும்பவில்லை.
இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காகப் பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக்காசுகளையும் தந்தவர்களிடம் திருப்பிக் கொடுத்தான். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை ஆலயத்தில் எறிந்தான். ‘அந்தப் பணம் ரத்தத்துக்கான விலையாதலால் அதை உண்டியலில் போட முடியாது’ என்றனர் குருக்கள்.
யூதாசு, திருத்த முடியாத மாபெரும் தவறைச் செய்தான். அதன்பின் இறைவனிடம் திரும்பி வரவில்லை. இறைவனின் மன்னிப்பை உணரவில்லை. இது மன்னிக்க முடியாத பாவம் என தாமாகவே நினைத்துக் கொண்டான். சுயமாக முடிவெடுத்தான். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
யூதாஸின் பணம் அவனைக் காப்பாற்றவில்லை. இறைவனின் உண்டியலைக் கூட சென்று சேரவில்லை. எந்தத் தகுதியும் இல்லாமல் அது வீணானது.
“இயேசுவா?, அவரை எனக்குத் தெரியாதே” என அச்சத்தால் கூறிவிட்டு இயேசுவை விட்டு விலகியவர் பேதுரு.
இயேசு தனது காலம் நெருங்கி வந்துவிட்டது என உணர்ந்த பின், பேதுருவிடம் “இன்று கோழி கூவுவதற்கு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” எனக்கூறினார்.
பேதுருவோ “நான் உம்மோடு இறக்க நேரிட்டாலும் நான் உம்மை மறுதலிக்க மாட்டேன்” எனக் கூறினார்.
இயேசு கைது செய்யப்பட்டார், பேதுரு கலங்கினார். தலைமைக் குருவின் வீட்டின் முற்றம் வரை மறைவாக அவர்களைப் பின் தொடர்ந்து வந்தார்.
தான் இயேசுவின் சீடர் என அறிந்தால் தன்னையும் கொன்றுவிடுவார்கள் என அஞ்சி மூன்று முறை அவர் இயேசுவை மறுதலித்தார். அப்போது கோழி கூவிற்று.
பேதுருவும் யூதாசைப் போலவே தன் தவறை உணர்ந்தார். கோழி கூவியதையும், தான் இயேசுவை மறுதலித்ததையும், இயேசு தன்னிடம் கூறியதையும் எண்ணி மனம் நொந்து அழுதார்.
ஆனால் யூதாஸைப் போல தற்கொலையைத் தேர்ந்தெடுக்கவில்லை. இறைவனிடம் மன்னிப்பை வேண்டினார். இறைவனும் அவரின் தளராத நம்பிக்கையைக் கண்டு அவரை மன்னித்தார்.
விவிலியத்தில் பல இடங்களில் பேதுரு இயேசுவால் கண்டிக்கப்படுவதை நாம் காணலாம். எனினும், இயேசு தன் ஆட்சியிலும் தன் உள்ளத்திலும் மிக முக்கியமான ஒரு நபராக பேதுருவைத் தான் கொண்டிருந்தார். காரணம் பேதுரு இயேசுவை விடாமல் பற்றிக்கொண்டிருந்தது தான்.
பேதுருவும் இயேசுவின் மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்தார். அதனால் தான், தன்னை சிலுவையில் அறைந்து கொல்லப்போகிறார்கள் என அறிந்ததும், “இயேசுவை போல இறக்க தான் தகுதியற்றவன், என்னை தலைகீழாக சிலுவையில் அறையுங்கள்” என்று கூறி, அப்படியே உயிர்விட்டவர்.
ஒரு சாதாரண மீனவனை திருச்சபையின் முதல் திருத்தந்தையாக உயர்த்தினார் இறைவன். அந்த மீனவனின் கல்லறையின் மேல் தான் வத்திகன் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. உலகெங்கும் இறைவனின் அன்பு பரவ அந்த இடமே முக்கியப் பங்கு வகிக்கிறது.
இறைமதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டு நமது சுய விருப்பப்படி வாழும்போதும் நாமும் இயேசுவை மறுதலிக்கிறோம். இயேசுவை விட்டு விலகுவது மனிதனின் பலவீன இயல்பு. ஆனால் அவரை விட்டு விலகி சென்ற பின் திரும்பி வராமல் இருப்பதே ஆன்மிகத் தவறு.
நாம் அவரை விட்டு விலகும்போதெல்லாம் நம் முன்னால் இரண்டு கேள்விகள் எழவேண்டும். ‘நான் யூதாஸைப் போல என் வாழ்வை முடிவு செய்யப் போகிறேனா?, அல்லது பேதுருவைப் போல மீண்டும் இயேசுவை அண்டி வரப் போகிறேனா?’.
நமது பாவங்களை மன்னிக்க எப்போதும் இயேசு தயாராய் இருக்கிறார் என்பதை உணர்வோம். அவரிடம் சரணடைவோம்.
சகோ. ஆல்ஸ்டன் பெனிட்டோ வின்சென்ட், திருநெல்வேலி.
இருவரும் இயேசுவால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள். இருவரும் இயேசுவின் பாரபட்சமற்ற அன்பைப் பெற்றவர்கள். ஆனால் இருவரும் இரு வேறு துருவங்கள்.
யூதாசு பணத்தால் தோற்கடிக்கப்பட்டவர். பேதுரு பயத்தால் தோற்கடிக்கப்பட்டவர்.
யூதாசு இயேசுவை ‘ரபி’ என அழைத்து, முப்பது வெள்ளிக்காசுக்காக அவரைக் காட்டிக்கொடுத்தவர்.
இயேசு தன் சீடர்களோடு இறுதி இரவுஉணவு உண்டு கொண்டிருக்கையில் தன் சீடரிடம், “உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.
அதிர்ச்சியடைந்த அனைவரும் அவரிடம், ‘போதகரே அது நானா?, அது நானா?’ என வினவத்தொடங்கினர்.
யூதாசும் தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்ள “அது நானா?” என கேட்க, “நீயே சொல்லிவிட்டாய் என இயேசு மறுமொழி கூறினார்” என மத்தேயு நற்செய்தி கூறுகிறது.
யூதாசு முப்பது வெள்ளிக்காசுகளை பெற்று அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தார்.
இயேசுவோ “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக்கொடுக்கிறாய்?” என வினவினார்.
மனக்கலக்கம் அடைந்த யூதாசு இயேசுவை விட்டு விலகிச் சென்றார். தான் செய்தது தவறு என்பதை யூதாஸ் உணர்ந்தார். குற்ற உணர்வு அவரைக் குத்திக் கிழித்தது. ஆனாலும் அவர் இயேசுவிடம் திரும்பவில்லை.
இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காகப் பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக்காசுகளையும் தந்தவர்களிடம் திருப்பிக் கொடுத்தான். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை ஆலயத்தில் எறிந்தான். ‘அந்தப் பணம் ரத்தத்துக்கான விலையாதலால் அதை உண்டியலில் போட முடியாது’ என்றனர் குருக்கள்.
யூதாசு, திருத்த முடியாத மாபெரும் தவறைச் செய்தான். அதன்பின் இறைவனிடம் திரும்பி வரவில்லை. இறைவனின் மன்னிப்பை உணரவில்லை. இது மன்னிக்க முடியாத பாவம் என தாமாகவே நினைத்துக் கொண்டான். சுயமாக முடிவெடுத்தான். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
யூதாஸின் பணம் அவனைக் காப்பாற்றவில்லை. இறைவனின் உண்டியலைக் கூட சென்று சேரவில்லை. எந்தத் தகுதியும் இல்லாமல் அது வீணானது.
“இயேசுவா?, அவரை எனக்குத் தெரியாதே” என அச்சத்தால் கூறிவிட்டு இயேசுவை விட்டு விலகியவர் பேதுரு.
இயேசு தனது காலம் நெருங்கி வந்துவிட்டது என உணர்ந்த பின், பேதுருவிடம் “இன்று கோழி கூவுவதற்கு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” எனக்கூறினார்.
பேதுருவோ “நான் உம்மோடு இறக்க நேரிட்டாலும் நான் உம்மை மறுதலிக்க மாட்டேன்” எனக் கூறினார்.
இயேசு கைது செய்யப்பட்டார், பேதுரு கலங்கினார். தலைமைக் குருவின் வீட்டின் முற்றம் வரை மறைவாக அவர்களைப் பின் தொடர்ந்து வந்தார்.
தான் இயேசுவின் சீடர் என அறிந்தால் தன்னையும் கொன்றுவிடுவார்கள் என அஞ்சி மூன்று முறை அவர் இயேசுவை மறுதலித்தார். அப்போது கோழி கூவிற்று.
பேதுருவும் யூதாசைப் போலவே தன் தவறை உணர்ந்தார். கோழி கூவியதையும், தான் இயேசுவை மறுதலித்ததையும், இயேசு தன்னிடம் கூறியதையும் எண்ணி மனம் நொந்து அழுதார்.
ஆனால் யூதாஸைப் போல தற்கொலையைத் தேர்ந்தெடுக்கவில்லை. இறைவனிடம் மன்னிப்பை வேண்டினார். இறைவனும் அவரின் தளராத நம்பிக்கையைக் கண்டு அவரை மன்னித்தார்.
விவிலியத்தில் பல இடங்களில் பேதுரு இயேசுவால் கண்டிக்கப்படுவதை நாம் காணலாம். எனினும், இயேசு தன் ஆட்சியிலும் தன் உள்ளத்திலும் மிக முக்கியமான ஒரு நபராக பேதுருவைத் தான் கொண்டிருந்தார். காரணம் பேதுரு இயேசுவை விடாமல் பற்றிக்கொண்டிருந்தது தான்.
பேதுருவும் இயேசுவின் மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்தார். அதனால் தான், தன்னை சிலுவையில் அறைந்து கொல்லப்போகிறார்கள் என அறிந்ததும், “இயேசுவை போல இறக்க தான் தகுதியற்றவன், என்னை தலைகீழாக சிலுவையில் அறையுங்கள்” என்று கூறி, அப்படியே உயிர்விட்டவர்.
ஒரு சாதாரண மீனவனை திருச்சபையின் முதல் திருத்தந்தையாக உயர்த்தினார் இறைவன். அந்த மீனவனின் கல்லறையின் மேல் தான் வத்திகன் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. உலகெங்கும் இறைவனின் அன்பு பரவ அந்த இடமே முக்கியப் பங்கு வகிக்கிறது.
இறைமதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டு நமது சுய விருப்பப்படி வாழும்போதும் நாமும் இயேசுவை மறுதலிக்கிறோம். இயேசுவை விட்டு விலகுவது மனிதனின் பலவீன இயல்பு. ஆனால் அவரை விட்டு விலகி சென்ற பின் திரும்பி வராமல் இருப்பதே ஆன்மிகத் தவறு.
நாம் அவரை விட்டு விலகும்போதெல்லாம் நம் முன்னால் இரண்டு கேள்விகள் எழவேண்டும். ‘நான் யூதாஸைப் போல என் வாழ்வை முடிவு செய்யப் போகிறேனா?, அல்லது பேதுருவைப் போல மீண்டும் இயேசுவை அண்டி வரப் போகிறேனா?’.
நமது பாவங்களை மன்னிக்க எப்போதும் இயேசு தயாராய் இருக்கிறார் என்பதை உணர்வோம். அவரிடம் சரணடைவோம்.
சகோ. ஆல்ஸ்டன் பெனிட்டோ வின்சென்ட், திருநெல்வேலி.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி நாளை நடக்கிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாகவும் வேளாங்கண்ணி மாதா பேராலயம் திகழ்கிறது. மாதாவின் பிறந்தநாள் 10 நாட்கள் ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்று விழாவில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவிழா நாட்களில் பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய மேல்கோவில் மற்றும் கீழ்க்கோவில்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சிலுவை பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நாளை (சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. 8-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
தேர் பவனியில் கலந்து கொள்ள பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள். இதை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க காரைக்கால், நாகை, வேளாங்கண்ணி ஆகிய 3 ரெயில் நிலையங்களில் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் முகைதீன் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட ரெயில்வே கோட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், மோப்பநாய் மூலமும் சோதனை செய்து வருகின்றனர்.
இதேபோல திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பைபர் படகு மற்றும் நீச்சல் வீரர்கள் உள்பட பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு சின்னசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 24 மணி நேரமும் கடற்கரையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழா நாட்களில் பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய மேல்கோவில் மற்றும் கீழ்க்கோவில்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சிலுவை பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நாளை (சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. 8-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
தேர் பவனியில் கலந்து கொள்ள பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள். இதை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க காரைக்கால், நாகை, வேளாங்கண்ணி ஆகிய 3 ரெயில் நிலையங்களில் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் முகைதீன் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட ரெயில்வே கோட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், மோப்பநாய் மூலமும் சோதனை செய்து வருகின்றனர்.
இதேபோல திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பைபர் படகு மற்றும் நீச்சல் வீரர்கள் உள்பட பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு சின்னசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 24 மணி நேரமும் கடற்கரையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.






