search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    தஞ்சை பூக்காரத்தெருவில் திருஇருதய பேராலயம் உள்ளது. இந்த பேராலய ஆண்டு திருவிழா நேற்று மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தஞ்சை பூக்காரத்தெருவில் திருஇருதய பேராலயம் உள்ளது. இந்த பேராலய ஆண்டு திருவிழா நேற்று மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையில் பாடல்திருப்பலியும், மாலையில் நவநாள் ஜெபம், சிறுதேர்பவனி, மறையுரை மற்றும் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறுகிறது.

    இத்திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 6-ந் தேதி மாலை கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ்அக்குவினாஸ், 7-ந் தேதி சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆகியோர் தலைமையில் நற்கருணை பெருவிழாவும், தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் முன்னிலையில் கூட்டுப் பாடல் திருப்பலியும் நடக்கிறது. 7-ந் தேதி இரவு 8.30 மணியளவில் தேர்பவனி நடைபெறுகிறது.



    திருஇருதய பேராலயம் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பேராலய வளாகத்தில் புதிதாக 80 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    கொடியேற்ற விழாவுக்கு பேராலய பங்குத்தந்தை செபஸ்டின் பெரியண்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக புதிய கொடிகம்பத்துக்கு புனிதம் செய்யும் சடங்கு நடந்தது. தொடர்ந்து கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    ×