என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    முன்பு செய்திருந்த பாவத்தின் பின்விளைவுக்காக துன்பங்கள் அனுமதிக்கப்படும்போது அது புரியாமல், துன்புறுத்துவோரை பதிலுக்கு நோகடிக்கும் வழிகளைத் தேடக் கூடாது.
    உலகத்தில் எல்லாருமே பலவகை துன்பங்களுக்கு ஆளாகியே கடந்து சென்று கொண்டிருக்கிறோம். பிறப்பு நிகழ்ந்து விட்டால் இறப்பும் அப்போதே உறுதிப்படுத்தப்பட்டு விடுவது போலத்தான், துன்பங்களை கடப்பதும் உறுதியாகிவிடுகிறது.

    துன்பத்தை ஏற்படுத்தியவனுக்கு பதிலுக்கு துன்பம் அளிக்கும் இயல்பான நிலை, மனித வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து இன்றளவுமாய் தொடர்கிறது. பதிலுக்கு துன்பம் அளிப்பதை நேரடியாக ஒருவனால் நிறைவேற்ற முடியவில்லை என்றால்கூட, புகார் கூறுதல், வழக்கு தொடர்தல், விசாரணைக்கு அழைத்தல் போன்ற சட்ட அங்கீகாரம் பெற்ற அம்சங்களை நாடு கிறான்.

    சிலர் சட்டம் அங்கீகரிக்காத வேறு பல வழிகளை நாடி, துன்பம் அளித்தவருக்கு பதில் செய்கின்றனர். இந்த இரண்டில், ஒருவன் எந்த வழியை தேர்வு செய்திருந்தாலும் அவனுக்குள் இருக்கும் நோக்கம், ‘பதிலுக்கு துன்பம் அளித்தாக வேண்டும்’ என்பதுதான்.

    பதிலுக்கு துன்புறுத்த முடியாத உயர்ந்த இடத்தில் இருப்பவனைக்கூட, துன்புறுத்துவது போல் மனதில் எழும் எண்ணங்களால் ஆட்கொள்ளப்படுகிறோம். ஆக மொத்தத்தில், எப்படியாவது பதிலுக்குப் பதில் செய்தாக வேண்டும் என்ற சூழ் நிலைக்குள் எந்த மனிதனும் வராமல் தப்பியது கிடையாது. சிலர் காத்திருந்து பதிலுக்கு துன்பம் அளிப்பதையும் அறிந்திருக்கிறோம்.

    உலக சட்டங்கள் ரீதியாக பதில் நட வடிக்கைகளை மேற்கொள்வதை உலகம் ஏற்றுக்கொள்கிறது. ஆதாரங்களை நோக்கும் அந்த சட்டங்கள், குற்றச்சாட்டின் நோக்கத்தை சீர்தூக்கிப் பார்ப்பதில்லை. ஆனால் நியாயத்தைக் கூறுவதில், உலகச் சட்டங்களில் இருந்து கிறிஸ்தவம் வேறுபடுகிறது. பதில் நடவடிக்கையாக மற்றவருக்கு துன்பம் இழைக்க வேண்டும் என்று ஒருவனுக்கு உள்நோக்கம் இருந்தால் அது பாவம் என்று கிறிஸ்தவ மார்க்கம் தீர்ப்பளிக்கிறது. ஏனென்றால், துன்புறுத்துவோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று இந்த மார்க்கம் வலியுறுத்துகிறது.

    துன்பம் பற்றி கிறிஸ்தவம் காட்டும் ஞானம் வேறு. ‘தலையில் இருந்து ஒரு முடி விழுவதும், ஒரு சிறு பறவை செத்து தரையில் விழுவதும் என்னை அறியாமல் நடக்காது’ என்று ஏற்கனவே மனித குலத்துக்கு இறைவன் உறுதியளித்துள்ளார் (மத்.10:29,30).

    அப்படி ஒவ்வொன்றையும் இறைவன் தனது எண்ணிக்கையில் வைத்திருக்கிறார். அப்படி இருக்கும்போது ஒருவனுக்கு இழப்பு, துன்பம் போன்றவை எப்படி இறைவன் அறியாமல் வரும்? இறைவனுக்கு தெரிந்துதான் துன்பன் அனுமதிக்கப்படுகிறது என்றால், எந்த பின்னணியில் அது அனுமதிக்கப்படுகிறது? என்பதை அறிவது, ஞானத்தின் ஒரு அம்சமாகும்.

    இதில் ஒரு பின்னணி மட்டும் யோபுவின் வாழ்க்கையின் மூலம் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. கி.மு. இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தன் யோபு. இறைவனின் கட்டளையின்படி நேர்மையாக வாழ்ந்து வந்த பக்தன் அவன். திடீரென்று ஒரு நாளில் அவனது அனைத்து மகன்கள் மற்றும் மகள்களும் வீடு இடிந்து விழுந்து இறந்து போனார்கள். சிறிது இடைவெளியில் அவனுக்கென்றிருந்த ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற சொத்துகள் கொள்ளையர்கள் மூலமாகவும் இயற்கை பேரிடர் மூலமாகவும் முற்றிலும் அழிந்து போயின.

    அடுத்ததாக, ஒரு நிமிடம் கூட தூங்க முடியாத அளவுக்கு யோபுவுக்கு உடல் முழுவதும் கட்டிகள் உட்பட சொறி நோய்கள் வந்தன. கொஞ்சம் தூங்கிவிட்டால், அதில் மகாபயங்கர கனவுகள் வந்து பயமுறுத்தின. மனைவியின் அன்பும் குறைந்தது. உடல்வலி மற்றும் மனவேதனையினால் ஒரு சில நாட்களுக்குள் யோபு உருக்குலைந்து, நண்பர்களாலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு சுருங்கிப்போனான். இந்த சம்பவத்தில் யோபுவுக்கும், அவனது நண்பர்களுக்கும் இடையே நடக்கும் உரையாடல்தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தேவைப்படும் ஞானத்தை அள்ளித்தருகிறது.

    இறைவன் அறியாமல் இந்த துன்பங்கள் தன்னை அண்டவில்லை என்பது யோபுவுக்கு நன்றாகத் தெரியும். அவற்றை இறைவன் கையினால் பெறும் தீமை என்று மனைவியிடமும், நண்பர்களிடமும் சொன்னான் (யோபு 9:24, 19:22). இந்த காலகட்டத்தில் யோபு எழுப்பிய சந்தேகத்தின் சுருக்கம் என்னவென்றால், ‘சின்னச்சின்ன மீறுதல்கள் என்னிடம் இருந்திருக்கலாம். அவற்றுக்கு ஏற்ப சிறுசிறு துன்பங்களைத்தானே பதிலுக்கு இறைவன் அனுமதிக்க வேண்டும்? ஆனால் இவ்வளவு மிகப் பெரிய இழப்பை சந்திக்கும் அளவுக்கு நான் பிறருக்கு என்ன செய்தேன்?’ என்பதுதான்.

    துன்பங்கள் வருவதற்கான காரணங்கள் பற்றி யோபுவின் நண்பர்கள் கூறிய கருத்தில் தவறு இல்லை. ஆனால் யோபுவுக்கு ஏன் அப்படிப்பட்ட துன்பங்கள் வந்தன என்பதை அவர்கள் அறியாமல் பேசினர். இதை இறைவனும் கண்டித்தார். நண்பர் களுக்கு பதிலளித்த யோபு, ‘காரியத்தின் மூலம் எனக்குள் கண்டுபிடிக்கப்படுகையில், நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே’ என்றான் (யோபு 19:28).

    அதாவது, ‘யார் மூலமாவது துன்பம் வந்துவிட்டால், அதைத் தந்தவருக்கு பதிலுக்கு துன்பம் விளைவித்துவிடக் கூடாது. ஏனென்றால், அந்த துன்பம் வந்ததற்கான உண்மையான மூலகாரணம் எது என்பதை நாம் அறியும்போது, பதிலுக்கு துன்பம் அளித்ததற்காக வருந்த வேண்டியதிருக் கும்’ என்ற கருத்தை யோபு வெளிப் படுத்துகிறான்.

    அதாவது, ‘ஏதோ ஒரு காரணத்துக்காக நமக்கு இறைவனால் துன்பம் அனுமதிக்கப்படுகிறது. அதை அவர் படைத்த ஒரு மனிதன் மூலமாகவோ அல்லது காற்று, நீர், அக்னி போன்றவற்றின் மூலமாகவோ தருகிறார். துன்பத்தை இறைவன் அனுமதித்தது ஏன் என்பதற்கான மூலகாரணம் தெரியாத நிலையில், துன்புறுத்திய மனிதன் மீது கோபப்பட்டு பதிலுக்கு துன்பம் கொடுப்பது தவறு’ என்பதை யோபு கூறிய இந்த வசனம் வெளிப்படுத்துகிறது.

    இறைவன் அளித்த அனுமதியின் பேரில், யோபுவை துன் புறுத்துவதற்கு கொள்ளையர்களை சாத்தான் பயன்படுத்திக் கொண்டான். பெருங்காற்று, அக்னி, நோய்க்கிருமிகள் ஆகியவற்றையும் இறைவனின் அனுமதியின் பேரில் சாத்தான் யோபுவுக்கு எதிராக உபயோகித்தான்.

    ஆக, ஒரு பக்தனுக்கு துன்பம் வரும் விஷயத்தின் பின்னணியில் இறைவனின் அனுமதி இருப்பதால், அதற்காக பயன்படுத்தப்படும் மனிதர்களை (கொள்ளையன் என்றாலும்) பகைப்பது அஞ்ஞானம். எதற்காக துன்பம் அனுமதிக்கப்பட்டது என்பது ஒருவேளை உடனடியாக பக்தனுக்கு புரியாமல் இருக்கலாம். துன்புறுத்த பயன்படுத்தப்படுபவனுக்கும் அது தெரியாது. எனவேதான் யோபுவும் அது புரியாமல் புலம்பினான். இறைவன் மீது யோபு வைத்திருக்கும் விசுவாசத்துக்கான சோதனை அது. பிற் காலத்தில் யோபுவுக்கு அது தெரிந்திருக்கலாம்.

    எனவே பக்தர்களுக்கு இதுபோன்ற ஏதோ ஒரு சோதனைக்காகவோ அல்லது ஏற்கனவே முன்பு செய்திருந்த பாவத்தின் பின்விளைவுக்காகவோ துன்பங்கள் அனுமதிக்கப்படும்போது அது புரியாமல், துன்புறுத்துவோரை பதிலுக்கு நோகடிக்கும் வழிகளைத் தேடக் கூடாது. அதனால்தான் ‘துன்புறுத்துவோரையும் ஆசீர்வதியுங்கள்’ என்று இறைவன் கூறினார்.
    மனிதநேயமென்றால் நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் ஆகும் என அன்னை தெரசா கூறினார். அண்ணல் காந்தி, அன்னை தெரசா, டாக்டர் அப்துல்கலாம் ஆகியவர்கள் மனித நேயத்திற்கு உதாரண புருஷர்கள்.
    தவக்காலத்தின் நோக்கமே பழையன களைந்து புதுவாழ்வுக்கு மாறுவதாகும். நாம் வாழும் இன்றைய உலகம் மனித நேயமற்றது. ஆனாலும் மனித நேயத்தை ஆங்காங்கே, அவ்வப்போது காணமுடிகிறது. அதற்கு உதாரணம் தான் கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழையில், சாதி, இன, மொழி கடந்த உதவிக்கரத்திலே நாம் மனித நேயத்தை கண்டோம்.

    மனிதநேயமென்றால் நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் ஆகும் என அன்னை தெரசா கூறினார். அண்ணல் காந்தி, அன்னை தெரசா, டாக்டர் அப்துல்கலாம் ஆகியவர்கள் மனித நேயத்திற்கு உதாரண புருஷர்கள். பணத்தை கடனாகத்தராதே. மாறாக அன்பை கடனாக தா! அது உனக்கு வட்டியோடு அன்பை பெற்றுத்தரும் என்றார் அன்னை தெரசா.

    லூக்கா (16:19-31) ஒரு ஊரில் ஜஸ்வர்யவான் (பணக்காரன்) ஒருவன் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தான். அதே ஊரில் ஏழை ஒருவனும் வசித்தான். அந்த ஏழையின் பெயர் லாசர். இவன், பணக்காரன் வீட்டின் வாசல் அருகே கிடந்தான். அவனது உடல் முழுவதும் பருக்கள் இருந்தன. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்தான். ஆனால் பணக்காரனோ, லாசரை கண்டுகொள்ளவில்லை. அடுத்தவர் மீது அக்கறைப்படாதவனாக வாழ்ந்தான்.

    பணம் ஒரு மனிதனை சுயநலவாதியாக்கும். அடுத்தவர் நலனில் அக்கறைப்படவைக்காது. அந்த இருவருமே இறந்தனர். ஏழை லாசருக்கு பரலோகத்தில் ஆபிரகாமின் மடி இடம் கிடைத்தது. ஆனால் பணக்காரனோ நரகத்திற்கு தள்ளப்பட்டான். இந்த தண்டனை எதற்காக? அவனுடைய இரக்கமற்ற, மனித நேயமற்ற செயலுக்காகத்தான். உலகில் இருந்த போது லாசரை பற்றியே அவனுக்கு அக்கறையில்லை. அவன் உயிருடன் இருந்தபோது உருப்படியான காரியமே செய்யவில்லை.

    மாடு, உயிரோடு இருக்கையிலே பால், எருவை தருகிறது. உழவுக்கு பயன்படுகிறது. இறந்த பிறகு உணவாகிறது. உரமாகிறது. தோலாக பயன்படுகிறது. ஆனால் பன்றியோ உயிருடன் இருக்கையில் உதவாக்கரை. இறந்த பிறகே அது உணவாக பயன்படுகிறது. அதுபோல பணக்காரன், மாடாக அல்ல பன்றியாகவே வாழ்ந்தான்.

    எனவே அவனுக்கு ஆபிரகாமின் மடியில் இடமில்லை. நரக நெருப்பே அவனுக்கு அடைக்கலம் தந்தது. இந்த தவக்காலத்தில் நாம் மாடாகவா? பன்றியாகவா? என எண்ணிப்பார்த்து பழையதை களைந்து புதியன உடுத்தி ஆண்டவரது உயிர்ப்பிலே பங்கெடுக்க நம்மையே நாம் தயாரிப்போமா?

    அருட்பணி. சூ.ஸ்டீபன்கஸ்பார், பங்குத்தந்தை, வேடசந்தூர். 
    புனித லூக்காவின் நற்செய்தியைப் படிப்பதில், வழக்கம் போல் ஆர்வம் கொள்ளும் நாம், இந்த நற்செய்தியையும் ஆர்வத்துடன் படிப்போம். தெளிவடைவோம்.
    புனித லூக்காவின் நற்செய்தியைப் படிப்பதில், வழக்கம் போல் ஆர்வம் கொள்ளும் நாம், இந்த நற்செய்தியையும் ஆர்வத்துடன் படிப்போம். தெளிவடைவோம்.

    அக்காலத்தில் இயேசு பிரான், கற்பித்துக் கொண்டிருந்தபோது, கலிலேயா, யூதேயா பகுதிகளில் உள்ள ஊர்களில் இருந்தும், எருசலேமில் இருந்தும் வந்திருந்த பரிசேயரும், திருச்சட்ட ஆசிரியர்களும் அங்கு அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

    நோயைப் போக்குவதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார். அப்பொழுது சில பேர், முடக்கு வாதத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒருவரைக் கட்டிலோடு சுமந்து கொண்டு வந்தனர். அவரைக் கூட்டத்திற்குள் கொண்டு போய், இயேசு பிரானின் முன் வைப்பதற்கு வழியைத் தேடினர். மக்கள் அதிகமாகத் திரண்டிருந்ததால், அவரை உள்ளே கொண்டு போக அவர்களால் முடியவில்லை.

    எனவே கூரை மேல் ஏறினார்கள். ஓடுகளைப் பிரித்து, அந்த வழியாக மக்களின் நடுவில், அவரைக் கட்டிலோடு, அவருக்கு முன் இறக்கி வைத்தார்கள்.

    அவர்களுடைய நம்பிக்கையையும், விசுவாசத்தையும் கண்ட இயேசு பிரான், அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று கூறினார்.

    இதைக் கேட்ட மறை நூல் அறிஞர்களும், பரிசேயர்களும், ‘கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் ஒருவரைத் தவிர, பாவங்களை மன்னிக்க யாரால் முடியும்?’ என்று தங்களுக்குள்ளே எண்ணிக் கொண்டனர். அவர்களுடைய எண்ணத்தை உணர்ந்து கொண்ட இயேசு பிரான், அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறது என்ன? உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா? அல்லது எழுந்து நட என்பதா? எது எளிமையானது? மண்ணுலகத்தில் பாவங்களை மன்னிக்க, மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

    உடனே அவர் முடக்கு வாதம் உள்ளவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன். நீர் எழுந்து, உம்முடைய கட்டிலைத் தூக்கிக் கொண்டு உமது இல்லத்துக்குப் போம்” என்றார்.

    உடனே அந்த முடக்குவாதக்காரர், அவர்களின் முன்பாக எழுந்து, தான் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக் கொண்டு, இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே, தனது இல்லத்திற்குப் போனார். இதை நேரே பார்த்த அனைவரும், தங்களை மறந்தவர்களாய் வியப்படைந்து, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அனைவரும் பயம் அடைந்தவர்களாய், ‘இன்று புதுமையானவற்றைக் கண்டோம்’ என்று பேசிக் கொண்டனர்.

    இந்த நற்செய்தியில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன? நம்பிக்கை மனிதனுக்கு அவசியம் என்பதை வெளிப்படுத்துகிறார். முடக்குவாதக்காரர் நலம் பெற்று, இல்லம் திரும்பி விடுவார் என்ற நம்பிக்கை, அவரைத் தூக்கி வந்தவர்களுக்கு இருந்தது.

    மிகுந்த துன்பத்தோடு, கூட்டத்தினருக்கு மத்தியில், அவரைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியாமல், கூரையைப் பிய்த்து, கீழே இறக்கி வைக்கின்றனர். கூரையைப் பிரித்து இறக்கி வைக்கும் அளவுக்கு நம்பிக்கை மேலோங்கியது.

    இயேசு பெருமகனாரைக் கடவுளின் மகன் என்று அறியாதவர்களாக, மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் இருந்தனர். இதனால், ‘உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்ற வார்த்தைகளை, அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்காகத்தான், இயேசு பெருமான் இப்படியொரு வினாவைத் தொடுக்கிறார். ‘உங்கள் உள்ளங்களில், நீங்கள் எண்ணுவது என்ன? உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா? எழுந்து நட என்பதா? எது எளிமையானது’ என்ற வினாவைத் தொடுத்து சிந்திக்க வைக்கிறார்.

    ‘மன்னுலகில் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் மானுட மகனுக்கு உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறார். இதைக் கட்டளையாகவே பிறப்பிக்கிறார்.

    இறைவன் மனிதனாகப் பிறந்தார் என்ற தத்துவம் சொல்லப்பட்டாலும், அவரைப் போல, நாமும் பிறரை மன்னிக்க தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தும் இங்கு புலப்படுகிறது.

    அவரைக் குணப்படுத்துமுன், அவர் சொல்கிற முதல் வார்த்தை, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதுதான். ஆம்! குணம் பெறும் செயலை விட, பாவத்தை மன்னிப்பது கடினமான ஒன்று. ஆகவே அவர் அக்கேள்வியை அவர்களிடம் கேட்கிறார்.

    நம்முடைய காலத்தில் வாழ்ந்த காந்தியடிகள்கூட ஓர் இடத்தில் குறிப்பிடுவதை, இவ்விடத்தில் கவனிக்கலாம்.

    ‘மன்னிப்புக் கேட்பது எளிது;

    மன்னிப்புக் கொடுப்பது கடினம்’ என்று கூறுவார்.

    இயேசு பெருமகனாரைப் பொறுத்தவரை, கட்டளையிடும் சில இடங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆகவே, ‘உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. உமக்கு நான் சொல்கிறேன், நீர் எழுந்து, உமது கட்டிலைத் தூக்கிக் கொண்டு, உமது இல்லத்துக்குப் போம்’ என்று கட்டளையிடுகிறார். ஒரே நேரத்தில் இரு செயல்கள் நடக்கின்றன. முதலில் அவரை ஏற்கத் தயங்கியவர்கள், இறுதியில் இறைவனைப் போற்றினர்; புகழ்ந்தனர். முடக்குவாதக்காரரும் நலம் பெற்றார்.

    நம்பிக்கையும், விடாமுயற்சியும் ஒருவரை எல்லா வகையிலும் குணப்படுத்தி விடும் என்பதற்கு இதுவே ஒரு சான்று. மன்னிப்புப் பெற்றதால் உள்ளமும் நலம் பெற்று, உடலும் நலம் அடைந்து முடக்குவாதக்காரரை முழு மனிதனாக்கி விட்டது.

    ஆகவே நாமும் நம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் செயல்படுவோம்.
    இயேசுவின் போதனைகள் அனைத்தும் எக்காலத்து மனிதனுக்கும் பொருந்தக்கூடியது ஆகும். அவரது அற்புத வார்த்தைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
    இயேசுவின் போதனைகள் அனைத்தும் எக்காலத்து மனிதனுக்கும் பொருந்தக்கூடியது ஆகும். அவரது அற்புத வார்த்தைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

    * தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

    * உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுக் கொடு.

    * ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

    * உன்னிடத்தில் கேட்கிறவனுக்கு கொடு. உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

    * உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள். உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படி செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்.

    * ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது.

    * துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்.

    * சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.

    * நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்.

    * இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

    * இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.

    * சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

    * நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது.
    வேளாங்கண்ணி பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏசு பிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் மற்றும் ஜெப வழிபாடுகள் நடந்தது.

    நாகை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. இது கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. அன்னை மரியின் புகழ் பரப்பும் புண்ணியதலமாகவும், வேளாங்கண்ணி விளங்குகிறது.

    கிறிஸ்தவ ஆலய கட்டிடக்கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். மேலும், வேளாங்கண்ணி பேராலயம் மோர்க்கார சிறுவனுக்கு அன்னை மரியாள் காட்சி தந்த தலமாகவும் விளங்குகிறது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஏசுகிறிஸ்து பிறந்தநாளான டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும். இதையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் மற்றும் ஜெப வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு திருப்பலியும், காலை 8 மணிக்கு கூட்டு திருப்பலியும் நடந்தது.

    ஒரு தெய்வம் தாமே முன்வந்து தம்மையே பாவ பரிகாரமாக கொடுக்க வந்தார். அவர் தான் இயேசு கிறிஸ்து. அவரது பிறப்பே உலகம் முழுமையும் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகும்.
    மனிதன் மகிழ்நிறை வாழ்வு வாழ ஆசை கொள்கிறான். ஆனால் அந்த ஆசை நிராசை ஆகிறது. அவனது வாழ்வில் ஏற்படும் சலனங்களும், தீமைகள் செய்வதால் வரும் விளைவுகளும், மனதின் மகிழ்ச்சியையும், அமைதியையும் கெடுத்து விடுகின்றன.

    தான் இழந்து போன சந்தோஷத்தையும், சமாதானத்தையும் பெற புண்ணிய காரியங்களையும், தான தர்மங்களையும், புனித பயணங்களையும் மேற்கொண்டு அந்நிறைவை பெற்றுக் கொள்ளலாம் என்று வாஞ்சிக்கிறான். அவ்விருப்பமோ நிறைவேறாமல் தடுமாற்றம் அடைகின்றான். அவைகளை போக்க பல வழிகளை கையாளுகின்றான். பயனில்லை. அப்படிப்பட்ட மனிதனும் புனித வாழ்வு பெற்று அகமும், முகமும் மலர ஆன்மிக பாடம் புகட்டுகின்றார் சாது சுந்தர்சிங்.

    அவர் ஒரு சமயம் கங்கை நதிக்கரைக்கு சென்றார். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் குளித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் தங்கள் இருதயத்தில் தூய்மையை பெற்றுக் கொள்ளவும், அந்த இருதயத்தை ஆளுகை செய்யும் பாவத்தின் தன்மையில் இருந்து விடுதலையை பெற்றுக் கொள்ளவும் அந்நதியில் நீராடிக் கொண்டு இருந்தனர். இருதயத்தின் இருள் போக்க அவர்களது அறியாமையின் செயல் கண்டு, சாது வருந்தினார். அவர்களோடு உரையாடினார், உறவாடினார்.

    அறியாமையில் மூழ்கி கிடக்கும் மக்கள் அவருக்கு செவி கொடுக்கவில்லை. இச்செயலை அவர்களுக்கு உணர்த்தி காட்டுவதற்காக, அவர்களுடன் தானும் சேர்ந்து நீராட நதியில் இறங்கினார். தன் கரத்தில் இருந்த பெட்டியை அவர்கள் முன் திறந்தார். பின் தனது அழுக்கு படிந்த ஆடைகளை அவர்கள் முன்பாகவே அந்த பெட்டிக்குள் வைத்து பூட்டினார். பின்னர் பெட்டியை தண்ணீருக்குள் முக்கி எடுத்து அதன் மேல் சோப்பு போட்டார். இதை பார்த்தவர்கள், அவரிடம் என்ன செய்கிறாய்? என்று கேட்டனர். நான் என் ஆடைகளை சுத்தப்படுத்துகிறேன் என்றார்.

    அதை கேட்டவர்கள் சத்தமாக சிரித்து விட்டனர். பெட்டிக்குள் இருக்கும் ஆடைகளுக்கு போடாமல், பெட்டிக்கு சோப்பு போட்டால் எப்படி அழுக்கு நீங்கும்? ஆடையில் அல்லவா சோப்பு போட வேண்டும் என்றனர். சாது அவர்களை பார்த்து பின்வருமாறு சொன்னார்.

    நீங்கள் உங்கள் பாவ பரிகாரத்துக்காக இந்த நதிக்குள் மூழ்கி நீராடுவது உங்கள் சரீர அழுக்கை போக்கும். ஆனால் உங்கள் ஆன்மிக அழுக்கை போக்காது. உங்கள் மாசு படித்த இதய அழுக்கை புனிதப்படுத்துவதற்கு ஒரு தெய்வம் உங்களுக்காக ரத்தம் சிந்தினார். அவர் தான் இயேசு கிறிஸ்து. அவரின் ரத்தத்தால் உங்கள் பாவங்கள் நீங்கி உள்ளம் புனிதமாகும். உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்பார்க்கும் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும் என்று கூறினார். அந்த நதிக்கரையில் அநேகர் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள்.

    ஒரு தெய்வம் தாமே முன்வந்து தம்மையே பாவ பரிகாரமாக கொடுக்க வந்தார். அவர் தான் இயேசு கிறிஸ்து. அவரது பிறப்பே உலகம் முழுமையும் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகும்.

    - பாஸ்கர் கனகராஜ்,

    சேகர ஆயர், சுவிசேஷபுரம்.
    இயேசுவின் பிறப்பு மனித இனத்திற்கே கிடைத்த மாபெரும் அதிசயம் ஆகும். அவர் கொண்டு வந்த அன்பையும், சமாதானத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
    ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு குடும்பத்திற்குக் கிடைக்கின்ற ஒரு அதிசயம். பாலன் இயேசுவின் பிறப்பு மனித இனத்திற்கே கிடைத்த மாபெரும் அதிசயம் ஆகும். அந்த அதிசயத்தையும் அவர் கொண்டு வந்த அன்பையும், சமாதானத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

    வரலாற்றில் வலம் வந்த எத்தனையோ பேர் இம்மண்ணிலிருந்து மறைந்து விட்டார்கள் ஏன்? மனித மனங்களிலிருந்தும் மறைந்து விட்டார்கள். ஆனால் உலகிற்கு ஒளியாக, வாழ்வுக்கு வழியாக, உண் மைக்கு சான்றாக, கன்னிமரியின் மகனாக இம்மண்ணில் பிறந்த இயேசு இன்றும் இம் மண்ணில், மனித மனங்களில் வாழ்ந்து வருகிறார். 

    “மடமை என உலகம் கருதுவதை, வலுவற்றது என உலகம் கருதுவதை, தாழ்ந்தது என உலகம் கருது வதை, இகழ்ந்தது என உலகம் தள்ளுவதைக் கடவுள் தேர்ந்து கொண்டார்” (1 கொரி. 1:27-29) ஆம் கடவுள் அடிமையின் வடிவை ஏற்று மனித உருவில் தோன்றிய நாள். மனிதர்களின் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விண்ணுலக வாழ்வைப்பெற வழி ஏற்படுத்திய நல்ல நாள். மனித உள்ளங்களில் தோன்றிய தீய எண்ணங்கள் ஒழிக்கப் பட்டு அமைதியும், சமாதானமும் விதைக்கப்பட்ட நாள். 

    உலக வரலாற்றிலே காலத்தை இரண்டாகப் பிரித்த நாள் (கி.மு., கி.பி.). இந்த நல்ல நாளிலே இந்த உலகில் வாழும் நாம், நம்மிடையே உள்ள அனைத்து தீய பாவச் செயல்களை விலக்கி, அன்பும், பாசமும், மன்னிப்பும், பகிர்வும் நிறைந்த அமைதியான உலகை உருவாக்க முயற்சிப்போம். இயேசு கிறிஸ்து ஒரு இனத்திற்கோ அல்லது ஒரு மதத்திற்கோ, அல்லது ஒரு பிரிவினருக்கோ சொந்தமானவர் என்ற வீண்விவாதத்தில் ஈடுபடாமல், முழு மனித இனத்தையும் மீட்க வந்தவர் என்ற எண்ணத்தோடு வாழ்வோம்.

    மனிதமும், புனிதமும் ஒன்றிணைந்த இந்த கிறிஸ்து பிறப்பு நன்நாளிலே மனிதர்களாகிய நாம் புனிதமான வாழ்வு வாழ இயேசு நம்மை அழைக்கிறார். நம் உள்ளத்தை தாழ்ச்சியும், எளிமையும் நிறைந்த இடமாக மாற்றுவோம். பாலன் இயேசுவை தம் உள்ளங்களில் வரவேற் போம். வானதூதர்களைப் போல ஆடிப்பாடி மகிழ்வோம், இன்பமாக வாழ்வோம்.

    அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு விழா நல்வாழ்த்துக்கள். பாலன் இயேசு கொண்டுவந்த அன்பும், அமைதியும், சமாதானமும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிறைவாக இருப்பதாக மலர விருக்கும் புத்தாண்டு ஒவ் வொருவரின் வாழ்விலும் புதிய உற்சாகத்தையும், புதிய வாய்ப்புகளையும், புதிய வளங்களையும் வாரி வழங்கும் புதிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

    அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும், ஆசீரும் உரித்தாகுக.

    அருட்பணி. மைக்கிள் S. மகிழன், பங்குத்தந்தை, காவல்கிணறு
    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் மாதம் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் மாதம் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பாலகனாய் பிறந்த உலக மீட்பரான இயேசுவை கண் குளிர காண்பது தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதன் நோக்கம் ஆகும்.

    உலக ஆரம்பத்தில் படைக்கப்பட்ட ஆதிமனிதர்களான ஆதாம், ஏவாள் கீழ்ப்படியாமை என்ற பாவம் செய்து இறைவனின் அன்பான அரவணைப்பையும், பாசமான பராமரிப்பையும் இழந்து மேன்மையான வாழ்வு நிலையில் இருந்து வெளியே தள்ளப்பட்டனர். பின்னர் அவர்கள் மீது கருணை கண் நோக்கிய கடவுள் அவர்கள் முதல் கொண்டு உலக மக்கள் அனைவரும் சுமந்த பாவங்களை நீக்கி மீட்பு அளிக்க தன் மகனை இவ்வுலகுக்கு அனுப்ப வாக்களித்தார். அவ்வாறு வாக்களிக்கப்பட்ட இறைமகன் இவ்வுலகில் குழந்தையாக பிறந்தார். அந்த இறை குழந்தையின் பிறப்பு நிகழ்ச்சி தான் கிறிஸ்துமஸ்.

    இயேசுவின் பிறப்பு வாழ்வு தர வந்த பிறப்பு. வரலாறு படைத்த பிறப்பு. வல்லமையான இறைவன் குழந்தையாய் வடிவமெடுத்த பிறப்பு. கர்த்தருடைய தூதன், மரியாளின் கணவனாகிய யோசேப்பின் சொப்பனத்தில் காணப்பட்டு, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனை பெறுவாள். குமாரனுக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. ஏனெனில் அவர் தனது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை ரட்சிப்பார் என்றான். மேலும் ஏசாயா தீர்க்கத்தரிசி, இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னார். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிக்கிறார் என்று அர்த்தமாம்.

    அந்த வாக்குகளின்படியே உலக மக்களை பாவங்களில் இருந்து மீட்டெடுக்க, யூதேயா தேசத்தில் உள்ள பெத்லகேம் ஊரில் கன்னி மரியாளிடத்தில் பாலகனாய் பிறந்தார் இயேசு. அவர் இம்மானுவேலராய் எப்போதும் நம்மோடு இருக்கிறார். வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களில் மட்டுமல்ல, துன்பங்கள், சோதனைகள், பாடுகள் வரும்போது எல்லாம் கூடவே வந்து தேற்றி பலப்படுத்துகிறார். நீதியின் சூரியனான அவரை உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளும்போது நம்மிடம் பாவ இருள் நீங்கி, பரிசுத்தமான ஒளி பிறக்கிறது.

    இயேசு குறித்து யோவான் தீர்க்கத்தரிசனமாக கூறுகையில், உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் என்றார். அந்த வாக்கின்படியே மெய்யான ஒளியான அவரை ஏற்றுக் கொள்ளும்போது நாம் அவருடைய பிள்ளைகள் ஆவோம். அவரோடு மகிழ்ந்து இருப்போம்.
    இறைமகன் இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி எழுதிய நற்செய்தியாளர்களின் வார்த்தைகளில், வரலாற்று நோக்கத்தை விடவும் இறையியல் கண்ணோட்டமே அதிகம் மிளிர்கிறது.
    இறைமகன் இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி எழுதிய நற்செய்தியாளர்களின் வார்த்தைகளில், வரலாற்று நோக்கத்தை விடவும் இறையியல் கண்ணோட்டமே அதிகம் மிளிர்கிறது. இருப்பினும், நற்செய்திகளில் வரலாற்றுத் தன்மையுடன் கூடிய பல தகவல்கள் உள்ளன என்பது உண்மை.

    இயேசு கிறிஸ்து பிறந்த போது, இடையர்கள் வயல்வெளியில் ஆட்டுக்கிடையை காவல் காத்துக் கொண்டிருந்ததாக லூக்கா நற்செய்தி குறிப்பிடுகிறது. பாலஸ்தீன் நாட்டில், கோடை காலத்தில்தான் இடையர்கள் கிடையை காவல் காப்பது வழக்கம். ஆகவே, மார்ச் முதல் செப்டம்பர் மாதங்களுக்கு இடையேதான் இயேசு பிறந்திருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

    ஆனால், இடையர்கள் பற்றிய செய்தி இறையியல் கண்ணோட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. திருமுழுக்கு யோவானின் பிறப்பு குறித்து லூக்கா தரும் வரலாற்று தகவலின் பின்னணியிலேயே, கிறிஸ்து பிறப்பு விழா குளிர் காலமான டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுவதாக கிறிஸ்தவ அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்களது வார்த்தைகளை இங்கு காண்போம்.

    திருமுழுக்கு யோவானின் தந்தையான செக்கரியா, அபியா வகுப்பைச் சேர்ந்தவர் என்ற குறிப்பை லூக்கா தருகிறார். அவர் எருசலேம் கோவிலில் திருப்பணி செய்த காலத்திலேயே, யோவானின் பிறப்பு குறித்த அறிவிப்பை வானதூதர் கபிரியேலிடம் இருந்து பெறுகிறார். அதன்பிறகு, அவரது மனைவி எலிசபெத் கருவுற்று ஐந்து மாதம் பிறர் கண்ணில் படாமல் இருந்ததாக வாசிக்கிறோம்.

    தாவீது அரசரின் காலத்தில் இருந்தே, இஸ்ரயேலின் குருக்கள் பன்னிரு வகுப்புகளாக பிரிக்கப்பட்டு திருப்பணி செய்து வந்தனர். இதில் அபியா வகுப்புக்கு எட்டாவது இடம் கிடைத்தது. ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்த யூத குருக்களும் ஆண்டுக்கு இருமுறை திருப்பணி செய்தனர். அதன்படி, ‘யோம் கிப்பூர்’ எனப்படும் ‘பாவக் கழுவாய்’ விழாவையொட்டி செக்கரியா திருப்பணி செய்தார் என்று அறிகிறோம். இந்த விழா, செப்டம்பர் இறுதியில் கொண்டாடப்படுகிறது.

    ஆகவே, செப்டம்பர் இறுதியிலேயே எலிசபெத்தின் வயிற்றில் திருமுழுக்கு யோவான் கருவானார். பிறகு, ஆறாம் மாதத்தில் கன்னி மரியாவுக்கு ஆண்டவர் இயேசுவின் பிறப்பு பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. அதாவது மார்ச் மாதத்தில், கன்னி மரியா இயேசுவைக் கருத்தாங்கினார். ஒன்பது மாதங்கள் கழித்து இயேசு கிறிஸ்து பிறந்தார். ஆகவே, குளிர் காலமான டிசம்பரில் கிறிஸ்து மஸ் கொண்டாடுவது சரியே என்று கிறிஸ்தவ அறிஞர்கள் கூறுகின்றனர்.

    டே. ஆக்னல் ஜோஸ்
    “இறைமகன் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் மீட்படைந்து நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்வர்” என்பதே நற்செய்தியின் மையக்கருத்தாக உள்ளது.
    மனித குலத்தின் முதல் பெற்றோரான ஆதாம், ஏவாள் செய்த பாவத்தின் விளைவாகவே சாவு உலகில் நுழைந்ததாக கிறிஸ்தவர்களின் வேதமான பைபிள் கூறுகிறது. கடவுளின் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டதால் முதல் பெற்றோர் தங்கள் மீது சாவை வருவித்துக் கொண்டதாக காண்கிறோம். பைபிளின் தொடக்கத்தில் காணப்படும் இந்த கதை, கடவுளின் வார்த்தையைப் புறக்கணித்து மனிதர்கள் பாவம் செய்ததாலேயே சாவும் துன்பமும் உலகில் நுழைந்தன என்ற கருத்தை வலியுறுத்த உருவகமாக கூறப்பட்டது என்று கிறிஸ்தவ அறிஞர்கள் கூறுகின்றனர்.

    அழகிய தோட்டம் போன்ற உலகில் மனிதர்களை படைத்த கடவுள், தமது படைப்புகள் மீது ஆட்சி செலுத்தும் அதிகாரத்தை அவர்களுக்கு அளித்தார். ஆனால், அவர்களின் அதிகாரம் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாக இருந்ததை மனிதர்களால் ஏற்க முடியவில்லை. இயற்கை அனைத்தின் மீதும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சித்த மனிதர்கள், மனச்சான்றில் ஒலித்த கடவுளின் வார்த்தையை புறக்கணித்து தங்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் பாவம் உலகில் நுழைந்தது. கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படியாத மனிதர்களின் இந்த செயலையே, ஆதாம் ஏவாள் கதையாக பைபிள் எடுத்துரைக்கிறது.

    மனிதர்கள் பாவம் செய்ய காரணமாக இருந்தது சாத்தானின் தூண்டுதலே என்ற கருத்தையும், ஆதாம் ஏவாள் கதையில் காண்கிறோம். ஆகவே, சாத்தானை வென்று மக்கள் அனைவரையும் தம்மிடம் கொண்டு வரும் ஒரு மீட்பரை உலகிற்கு அனுப்ப கடவுள் திட்டமிடுகிறார். கடவுள் சாத்தானையும் பெண்ணையும் நோக்கி, “உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்”என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு, பெண்ணின் வித்தாக பிறக்க இருந்த உலக மீட்பர் குறித்த வாக்குறுதியை கடவுள் வழங்கியதாகவும் பைபிள் கூறுகிறது.

    மனிதகுல மீட்பரின் பிறப்புக் காக, கடவுளிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ஆபிரகாம் என்ற மனிதரை கடவுள் தேர்ந்தெடுத்தார். முதுமையிலும் குழந்தைப் பேறின்றி இருந்த ஆபிரகாமிடம், “அனைத்து இனத்தவரும் உன் வழி மரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக் கொள்வர்” என்ற வாக்குறுதியை கடவுள் வழங்கினார். இந்த வாக்குறுதியின் மகனாக பிறந்த ஈசாக்கிடம் இருந்தே, இஸ்ரயேல் மக்கள் தோன்றினர். இஸ்ரயேலர் நடுவே தோன்றிய இறைவாக்கினர்கள், உலக மீட்பரின் வருகைக்காக அவர்களை தயார் செய்தனர்.

    கி.மு.8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைவாக்கினர் மீக்கா, “இஸ்ரயேலை ஆயராக ஆளும் மீட்பர் பெத்லகேமில் தோன்றுவார்” என்ற முன்னறிவிப்பை வழங்கினார். அதே காலத்தைச் சேர்ந்த இறைவாக்கினர் எசாயா, “உலக மீட்பராக தோன்ற இருப்பவர் கடவுளே” என்ற உண்மையை பறைசாற்றினார். மீட்பரின் பணி வாழ்வு, அவரது துன்பங்கள் குறித்த செய்திகளையும் இறைவாக்கினர்கள் எடுத்துரைத்தனர். ஆனால் பல்வேறு சமகால சூழ்நிலைகளால், மீட்பர் குறித்த இறைவாக்குகளை இஸ்ரயேல் மக்கள் புரிந்து கொள்ளவில்லை.

    உலக மீட்புக்காக கடவுள் குறித்த காலம் நெருங்கியதும், நாசரேத்தில் வாழ்ந்த கன்னி மரியாவின் மகனாகப் பிறக்க மகனாகிய கடவுள் விரும்பினார். இந்த செய்தியுடன் வந்த வானதூதரின் வார்த்தைகளுக்கு மரியா ஒப்புதல் அளித்ததால், கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறுவதற்கான வழி திறக்கப்பட்டது. இறைமகன் இயேசு, கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதரானார். அவரது வருகையால் இந்த உலகம் மீட்பை பெற்றுக் கொண்டது.

    மகனாகிய கடவுளை, ‘வார்த்தை’ என்ற பெயராலும் பைபிள் அழைக்கிறது. இயேசுவின் பிறப்பு பற்றி குறிப்பிடும் திருத்தூதர் யோவான், “தொடக்கத்தில் கடவுளோடு கடவுளாக இருந்த வார்த்தையானவர், மனித உடலெடுத்து நம்மிடையே குடிகொண்டார்” என்கிறார். “இறைமகன் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் மீட்படைந்து நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்வர்” என்பதே நற்செய்தியின் மையக்கருத்தாக உள்ளது. ஏனெனில், கடவுளின் வார்த்தையைப் புறக்கணித்ததால் பாவம் செய்து சாவுக்கு உட்பட்ட மனித குலம், அவரது வார்த்தையாகிய இறைமகனை நம்புவதால் வாழ்வுக்குரிய மீட்பை பெற்றுக்கொள்வது உறுதி.

    மானிடரின் மீட்புக்காக கடவுளே குழந்தையாய் பிறந்தார் என்பது நம் அனைவருக்கும் பெருமகிழ்ச்சி தரும் செய்தி அல்லவா! ஆகவேதான், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழா உலக மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் நற்செய்தியாக அமைந்துள்ளது. “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்ற வானதூதர்களின் வாழ்த்து, கிறிஸ்துமஸ் பெருவிழாவில் நம் நாட்டுக்கும் வீட்டுக்கும் மீட்பின் மகிழ்ச்சியை வழங்கட்டும்!

    டே. ஆக்னல் ஜோஸ்.
    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், இல்லங்களில் ஏசு கிறிஸ்து பிறந்த போது எந்த மாதிரியான சூழல் இருந்ததோ அதேபோன்று கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும்.
    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள் மற்றும் இல்லங்கள் தோறும் அழகிய கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். ஏசு கிறிஸ்து பிறந்த போது எந்த மாதிரியான சூழல் இருந்ததோ அதை அப்படி நம் கண்முன் கொண்டுவரும் வகையில் தத்ரூபமான மனித உருவங்கள், தொழுவத்தின் வடிவம் போன்றவை அழகுற அமைக்கப்படுகிறது. 

    இந்த கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது என்பது இத்தாலி, மால்டா மற்றும் தென் அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் கிறிஸ்துமஸ் அலங்காரத்தின் முக்கிய பங்காக விளங்குகிறது. இத்தாலியில் உள்ள நாப்லிஸ் நகரத்தில் தான் 1020-களில் முதல்முறையாக கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது என்பது ஆரம்பித்திருக்கிறது. இதன் பின்னரே உலகெங்கும் கிறிஸ்துமஸ் குடில் ஏற்படுத்தும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

    பெத்லகேமை நினைவூட்டும் கிறிஸ்துமஸ் குடில்

    பெத்லகேமில் இயேசு கிறிஸ்து பிறக்கும் போது இருந்த சூழலை அது போலவே தத்ரூபமாக சிறுசிறு மனித உருவங்கள், ஆடுகள், ஒட்டகம், புல் ஓலை குடில் அமைப்பு என அனைத்தும் அழகுற வடிவமைக்கப்படும். இவற்றில் வைக்கப்பட வேண்டிய பொருட்களும் குறைவான விலையில் ஆரம்பித்து விலை அதிகமான அளவிலும் கிடைக்கின்றன. 

    இவற்றை தனித்தனியே வாங்கி நாமே வீட்டின் முன் கிறிஸ்துமஸ் தொடங்கும் முன்னரே ஏற்படுத்தி விட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அதே மனித உருவங்களை கொண்டு சற்று மாறுபட்ட வித்தியாசமான அமைப்பிலும் அழகிய கிறிஸ்துமஸ் குடிலை ஏற்படுத்தி கொள்ளலாம். நாமே அழகுற வைக்கோல், காய்ந்த புல், களிமண், காகித அலங்கார பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி சிறப்புற குடிலை ஏற்படுத்தி விடலாம்.



    கிறிஸ்துமஸ் குடிலை ஏற்படுத்த வீட்டின் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து அதில் பாறை அமைப்புகள், குடிசை அமைப்பு, செடிகள், வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்கரித்திட வேண்டியதுதான். தற்போது கிறிஸ்துமஸ் குடிலை அழகுற ஏற்படுத்தி அலங்கரித்து தர தனிப்பட்ட நிறுவனங்கள் கூட உள்ளன. அவை நமக்கு ஏற்ற பட்ஜெட்டில் பல வித்தியாசமான வடிவமைப்புடன் கூடிய கிறிஸ்துமஸ் குடிலை ஏற்படுத்தி தருகின்றன.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் குடில் மிக முக்கிய பங்கு வகிப்பதால் இடவசதி இல்லாதோர் பெரிய கிறிஸ்துமஸ் குடில் வரைபடங்களை கூட மாட்டி வைத்து அதில் வண்ண விளக்கு அலங்காரம் செய்து கொள்ளலாம்.

    குழந்தைகளின் மகிழ்ச்சி கொண்டாட்டத்தின் ஊடே அவர்கள் கைவண்ணத்தில் ஐஸ்கிரீம் குச்சியில் குடில், வைக்கோல் குடில், களிமண் குடில், மரக்குடில் என பலவற்றை செய்து அசத்தலாம்.

    உயிரோட்டமான கிறிஸ்துமஸ் குடில்

    கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதை கண்டறிந்த இத்தாலி நாட்டில்தான் உயிரோட்டமான நாடக பாணியிலான கிறிஸ்துமஸ் குடில் நிகழ்வு நடத்தப்பட்டன. இதில் மேரிமாதா, ஏசு கிறிஸ்து, ஞானிகள், விலங்குகள், நடைபெறும் இடம் என அனைத்தும் உயிரோட்டத்துடன் அமையப்பெற்று நாடகம் போல் நடத்தப்படும்.

    இத்தாலியன் நேப்பல் நகரம் தான் உலகின் மிகப்பெரிய உயிரோட்டமான கிறிஸ்துமஸ் குடில் காட்சியை நிகழ்த்தி காட்டியது. சுமார் 162 நாட்கள், 80 விலங்குகள், தேவதைகள், 450க்கு மேற்பட்ட சிறு உருவங்கள் என்றவாறு இணைத்து உயிரோட்டமான கிறிஸ்துமஸ் குடில் காட்சி அரங்கேற்றப்பட்டன. புனித பிரான்ஸிஸ் அசிசி என்பவர் தான் உயிரோட்டமான மற்றும் கிறிஸ்துமஸ் குடில் நிகழ்வுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியவராக திகழ்கிறார். இத்தனை சிறப்பு வாய்ந்த கிறிஸ்துமஸ் குடில் காட்சியை தேவாலயங்களும், கிறிஸ்துவ இல்லங்களும் ஆண்டுக்கு ஆண்டு புதிய உத்வேகத்துடன் கூடுதல் பொலிவுடன் அரங்கேற்றுகின்றன.
    முந்தைய நாளில் பசுமையான பச்சைநிற கிறிஸ்துமஸ் மரங்கள் நிற்க வைத்து அதில் அழகுற சில தொங்கும் பொருட்கள், விளக்குகள் சேர்ந்து அலங்கரிக்கப்படும்.
    உலகெங்கும் மகிழ்ச்சி வெள்ளத்துடன் ஆனந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வீடுகளிளும், தேவாலயங்களும் அழகுடன் அலங்கரிக்கப்படுகின்றன. வீடுகள் மற்றும் தேவாலயங்களின் அலங்கார அணிவகுப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் மாறுபட்டவாறு கூடுதல் பொலிவும், அதிக பரவசத்துடன் காண செய்யும் வகையில் புதுமையுடன் உருவாக்கப்படுகின்றன. உலகெங்கும் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யவே பெரியதோர் சந்தை உள்ளன. ஆயினும் அப்பொருட்களில் எவை நமது எண்ணத்திற்கு ஏற்ப அழகுடன் காட்சிதருகின்றன என்பதை தேர்வு செய்வதில் நமக்கு முக்கிய பங்கு உள்ளது.

    வெவ்வேறு வண்ண சாயல்களுடன் கிறிஸ்துமஸ் மரங்கள் :

    முந்தைய நாளில் பசுமையான பச்சைநிற கிறிஸ்துமஸ் மரங்கள் நிற்க வைத்து அதில் அழகுற சில தொங்கும் பொருட்கள், விளக்குகள் சேர்ந்து அலங்கரிக்கப்படும். தற்போது புதிய எண்ணம், வடிவங்களின் வெளிபாடாய் வெவ்வேறு வண்ணசாயல் மற்றும் வேறு உபகரணங்களில் தயார் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் அழகுற உருவாக்கம் பெறுகின்றன. கிறிஸ்துமஸ் மரங்கள் தான் கிறிஸ்துமஸ் அலங்காரத்தின் உயிர்மூச்சாக திகழ்கிறது. எனவே அதனை உச்சபட்ச அழகுடன், பிரமிப்புடன் உருவாக்குவதில் ஆர்வத்துடன் உள்ளனர்.

    பனிபடர்ந்த சூழலில் அழகிய வெண்பனி பூச்சுடன் உயர்ந்த கிறிஸ்துமஸ் மரமும், அதில் வெண்ணிற பூக்களும், வெண்ணிற பந்துகளும் தொங்கவிடப்படுகின்றன. குளிர்பிரதேச கிறிஸ்துமஸ் மரத்தை நினைவூட்டும் வகையில் பசுமை ஊசியிலையின் மேல் சில்வர் நிற பனி சூழல் அழகுடன் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    வெண்ணிற கூம்பு வடிவ கிறிஸ்துமஸ் மர வடிவத்தின் மீது பல வண்ண பந்துகள், வளையங்கள், நட்சத்திரம், வண்ண காகித சுருள்கள் இடைவெளி இன்றி மாட்டப்பட்டு வெள்ளை பின்னணியில் பல வண்ண ஜொலிப்புடன் அழகிய கிறிஸ்துமஸ் மரம்.



    தங்கநிற ஜொலிக்கும் கூம்பு வடிவிலான கிறிஸ்துமஸ் மரம். இதில் கிளைகள் கம்பிகளால் செய்யப்பட்டு அதன் மீது ஜொலிக்கும் தங்க நிறம் மற்றும் சில்வர் நிற சுருள்கள் சுற்றப்பட்டு உள்ளன. இதனை ஓர் குடுவையில் சொருகி அழகுற நிறுத்தி விடலாம். அதன் மேல் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிற பந்துகள், நட்சத்திரம் தொங்கவிடப்பட்டுள்ளன. செய்வது சுலபம், அழகோ அற்புதம்.

    சுவைமிகு சாக்லெட் கிறிஸ்துமஸ் மரம் :

    விதவிதமான கிறிஸ்துமஸ் மரங்களில் புதிய சாக்லெட் கிறிஸ்துமஸ் சற்று வித்தியாசமானது. கம்பியிலான கூம்பு வடிவத்தின் மீது பல வண்ண பூக்கள், நூல் வடிவங்கள், மான் கொம்புகள் போன்றவை மாட்டப்பட்டு உள்ளது. அத்துடன் பல சுவைமிகு பெரிய சுருள் வடிவ சாக்லெட், பல வண்ண மிட்டாய்கள் தொங்கவிடப்பட்டு மிக இனிப்பான கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கம் பெற்றுள்ளது.

    வாசலில் பசுமை தோரணங்கள்:

    ஆங்கிலேய நாடுகளுக்கு இணையான அதே பசுமை தழைகள் இந்தியாவிலும் கிடைக்கின்றன. அவற்றை அழகிய பசுமை வளையங்கள், தொங்கல்கள் செய்து வாசலில் வரவேற்கும் விதமாக அலங்கரிக்கலாம். வண்ண மின் விளக்குகளுடன், காதித மற்றும் இயற்கையான வாடா மலர்கள் கொண்டு அழகிய பதாகைகள் அமைத்து அலங்கரிக்கலாம். நட்சத்திர தொங்கும் விளக்குகள் பல விதமான புதிய வடிவமைப்புடன் விற்பனைக்கு வருகின்றன. அவற்றினை அழகுற வித்தியாசமான வடிவமைப்பு வரிசையுடன் அலங்கரிப்பு செய்யலாம். நவீன எலக்ட்ரிக் பூச்செடி நிறம் விளக்குகளும் கிடைக்கின்றன. அவற்றினை வாசல்களின் ஓரப்பகுதியில் வைத்து விருந்தினர் வருகையின் போது ஒளிர விடலாம்.
    ×