என் மலர்
OTT
- மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான 'கள்ளியங்காடு நீலி' ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டுள்ளது.
- சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான 'கள்ளியங்காடு நீலி' ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டு டொமினிக் அருண் ஃபேன்டசி-ஆக்ஷன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. இதுவே இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது.
இந்த படத்தின் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்லேன், சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியான படம் 'பாம்'.
- ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் 'வார் 2'.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
ராம்போ:
அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ராம்போ' படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள "ராம்போ" நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன், அதிரடி, ஆக்சன் நிரம்பிய அழுத்தமான படமாக இப்படம் வெளிவரவுள்ளது. பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகி உள்ளார். மேலும் மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் முக்கியமான வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க நாளை முதல் 'ராம்போ' படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்த்து ரசியுங்கள்...
மிராய்
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான படம் 'மிராய்'. மனோஜ் மஞ்சு வில்லனாக நடித்துள்ள இப்படம் விதியும் தெய்வீகமும் மோதும் உலகில் அமைக்கப்பட்டுள்ள 'மிராய்', மனிதகுலத்திற்கு சமநிலையையும் நம்பிக்கையையும் மீட்டெடுக்க அனைத்து தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போர்வீரனின் கதையைச் சொல்கிறது.
அதிக விஎஃப்எக்ஸ் கலந்த கதையாக உருவான இப்படம் கடந்த மாதம் 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது. இந்த நிலையில், 'மிராய்' படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் நாளை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
வேடுவன்
தமிழில் மண்டேலா, குருதி ஆட்டம், கூலி, கைதி, லவ்வர் போன்ற படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் கண்ணா ரவி. இவர் தற்போது பவன் இயக்கத்தில் 'வேடுவன்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ராவினிதா, ஸ்ரீ காந்த், ஐஸ்வர்யா ரகுபதி, வினுஷா தேவி, லாவண்யா, ரேகா நாயர், பார்வதி, ஜீவா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜீ 5 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'வேடுவன்' வெப் தொடர் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த வெப் தொடர் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

வார் 2
ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் 'வார் 2'. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். படத்துக்கு ப்ரிதம் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், 'வார் 2' படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.
பாம்
விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியான படம் 'பாம்'. இதில் ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், நாசர், அபிராமி மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
உருட்டு உருட்டு
இயக்குனர் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் காமெடி கதைக்களத்தில் வெளியான படம் 'உருட்டு உருட்டு'. இதில் கதாநாயகனாக நாகேஷின் பேரன் கஜேஷ் நடித்துள்ளார். இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
திரிபநாதரி பார்பரிக்
மோகன் ஸ்ரீவத்சா இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவான படம் 'திரிபநாதரி பார்பரிக்'. இதில் சத்யராஜ், சத்யம் ராஜேஷ், உதய பானு மற்றும் சாஞ்சி ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாக உள்ளது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் நாளை வெளியாக உள்ளது.
- தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
- இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். 'இட்லி கடை' நேற்று முதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் வெளியான முதல் நாளிலே நல்ல வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் மேலும் வசூல் குவிக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, 'இட்லி கடை' திரைப்படம் எப்போது ஓ.டி.டி.யில் வெளியாகும் என ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில், இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, 'இட்லி கடை' படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை நெட்பிளிக்ஸ் தளம் பெற்றுள்ளதாகவும், நவம்பர் மாதம் இப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
- தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
- அக்டோபர் 1-ந்தேதி அன்று தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' வெளியாக உள்ளது.
'மெரினா' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் சிவகார்த்திகேயன். அதற்கடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'மனம் கொத்தி பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படங்களில் நடித்தாலும் மக்களிடையே கலவையான விமர்சனத்தை இப்படங்கள் பெற்றாலும் வணிக ரீதியாக பெரும் வசூல் செய்யவில்லை.
தனுஷ் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன், அனிருத், செண்ட்ராயன், ரோபோ சங்கர் முக்கியமானவர்கள்.
2013 ஆம் ஆண்டு வெளியான 'எதிர் நீச்சல்' திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தை தனுஷ் தயாரித்தார். அதையடுத்து நடந்த பல நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாக்களில் , சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக செல்வதும், பல நேர்காணல்களில் ஒன்றாக கலந்து கொள்வதுமாக இருந்தனர்.
இப்படியாக சில வருடங்களுக்கு திரையுலகில் நல்ல நண்பர்களாக இருந்து வந்த இருவரும் சில மன கசப்புகளால் பிரிந்தனர். அதன் பிறகு இருவரும் எந்த நிகழ்விலும் ஒன்றாக கலந்துக் கொள்வதில்லை. இருவரும் பொதுவெளியில் அவர்களை பற்றி பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்.
இதற்கிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற 'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியது சர்ச்சையை எழுப்பியது. அவர் பேசுகையில், " நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன், ஏன்னென்றால் என்னை அப்படி பழக்கிவிட்டார்கள்" என பேசியது சர்ச்சையானது.
இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக 'மதராஸி' அமேசான் ஓ.டி.டி. தளத்தில் அக்டோபர் 3-ந்தேதி வெளியாகலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 1-ந்தேதியே வெளியாக உள்ளது.
அக்டோபர் 1-ந்தேதி அன்று தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' வெளியாக உள்ளது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் 'மதராஸி' படத்தை ஓ.டி.டி.யில் அன்றைய தினமே வெளியிட்டு நடிகர் தனுஷை குறி வைக்கிறாரா என பேச்சுகளும், கமெண்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.
- ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் உள்பட பலர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.
வட இந்தியாவில் துப்பாக்கிகளை தயாரித்து சென்னைக்கு கள்ளத்தனமாக கடத்த வில்லன் முயற்சிக்கிறார். இதுகுறித்து தகவலறியும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இதனை தடுக்கும் முயற்சி எடுக்கிறார்கள். லஞ்சம், ஊழல் மற்றும் சூழ்ச்சியால் தோல்வியை தழுவுகிறார்கள். ஆனால் நேர்மையான அதிகாரியோ, அநியாயத்தை கண்டு பொங்கும் நாயகனை கொண்டு இதனை தடுக்க நினைக்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் வில்லன் கும்பல் நாயகனின் காதலியை கடத்த அதன்பின்னர் நாயகன் மற்றும் வில்லனுடைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 'மதராஸி' திரைப்படம் வருகிற 1-ந்தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வருகிற 3-ந்தேதி 'மதராஸி' அமேசானில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளியாவது குறிப்பிடத்தக்கது.
- அனுஷ்கா நடிப்பில் க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'காட்டி'.
- நடிகர் மோகன்லாலின் 'ஹிருதயபூர்வம்' ஓணம் பண்டிகையையொட்டி வெளியானது.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
காட்டி
அனுஷ்கா நடிப்பில் க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'காட்டி'. இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோயினாக சோலோவாக அனுஷ்கா களமிறங்கினார். இப்படம் வெளிவந்து எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில் நாளை ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
சுமதி வளவு
கடந்த மாதம் 1 -ம் தேதி திரைக்கு வந்த சுமதி வளவு, மந்தமான விமர்சனங்களை பெற்ற போதிலும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படம் நாளை முதல் ஜீ5 தளத்தில் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
ஹிருதயபூர்வம்
நடிகர் மோகன்லாலின் 'ஹிருதயபூர்வம்' ஓணம் பண்டிகையையொட்டி வெளியானது. இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்ததாக படக்குழு தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் இப்படம் நாளை வெளியாக உள்ளது.
ஓடும் குதிர சாடும் குதிர
பகத் பாசில், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான மலையாள சினிமா. மரச்சாமான்கள் விற்கும் கடைக்காராக நாயகன் இருக்கிறார். நண்பருடன் இணைந்து ஒரு வீட்டிற்கு மரச்சாமான்கள் இறக்கி வைக்க செல்கிறார். அங்கு காதல் தோல்வியில் இருந்து மீண்டு வரும் நாயகியுடன் காதலில் விழுகிறார். நாயகனின் அர்ப்பணிப்பை கண்டு நாயகியும் காதல் கொள்கிறார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமணத்தன்று தனது கணவர் குதிரையில் வந்து இறங்கவேண்டும் என்ற ஆசையை நாயகி கொண்டிருக்கிறார். நாயகியின் ஆசையை நிறைவேற்ற திருமணநாளில் நாயகன் குதிரையில் செல்ல விபத்தில் காயமடைந்து 'கோமா' நிலைக்கு செல்கிறார். அதன்பின்னர் நாயகன்-நாயகியின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகள் தொடர்பான நகைச்சுவை சினிமா. நெட்பிளிக்சில் நாளை வெளியாகிற இதனை தமிழில் காணலாம்.
மகா அவதார் நரசிம்மா
கே.ஜி.எப்., காந்தாரா போன்ற பிரமாண்ட படங்களை தயாரித்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஹோம்பலே. தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் இதிகாச கதைகளை மையமாக வைத்து கார்ட்டூன் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் முதலாவதாக அரக்கன் இரண்யகசிபு மகன் பக்தன் பிரகலாதன் மற்றும் விஷ்ணு அவதாரங்களில் ஒன்றான நரசிம்மாவின் கதையை தழுவி கார்ட்டூன் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. அஸ்வின் குமார் இயக்கத்தில், சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரூ.320 கோடி வசூல் குவித்து இந்தியாவில் வெளியான கார்ட்டூன் படங்களிலேயே அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையை பிடித்துள்ளது. தற்போது நெட்பிளிக்சில் வெளியாகி உள்ள இதனை தமிழில் காணலாம்.
மதராஸி
சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் நடிப்பில் வெளியான படம். வட இந்தியாவில் துப்பாக்கிகளை தயாரித்து சென்னைக்கு கள்ளத்தனமாக கடத்த வில்லன் முயற்சிக்கிறார். இதுகுறித்து தகவலறியும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இதனை தடுக்கும் முயற்சி எடுக்கிறார்கள். லஞ்சம், ஊழல் மற்றும் சூழ்ச்சியால் தோல்வியை தழுவுகிறார்கள். ஆனால் நேர்மையான அதிகாரியோ, அநியாயத்தை கண்டு பொங்கும் நாயகனை கொண்டு இதனை தடுக்க நினைக்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் வில்லன் கும்பல் நாயகிகனின் காதலியை கடத்த அதன்பின்னர் நாயகன் மற்றும் வில்லனுடைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் தொடர்பான சினிமா. அனிருத் இசையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம். அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வருகிற 3-ந்தேதி வெளியாகிறது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் நாளை வெளியாக உள்ளது.
அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மகாவதார் நரசிம்மா சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.
திரைப்படம் இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பலரும் இப்படத்தை கடவுள் தரிசனமாக நினைத்து கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து படத்தை கொண்டாடினர். இந்தியாவில் தயாரித்த ஒரு அனிமேஷன் திரைப்படத்திற்கு இந்தளவு வசூல் பெற்ற படம் இதுவே என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
இந்நிலையில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது.
- ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளது.
- ரியான் கூக்லர் இயக்கி நடித்த இப்படத்தில் ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், மைல்ஸ் கேட்டன், ஜாக் ஓ'கானெல் ஆகியோர் நடித்துள்ளனர்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
இந்திரா
அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கத்தில் உருவான இந்திரா திரைப்படத்தில் வசந்த் ரவி மற்றும் மெஹ்ரீன் பிர்சதா இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர், சுமேஷ் மூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திடைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை (செப்டம்பர் 19) வெளியாக உள்ளது.
ஹவுஸ் மேட்ஸ்
டி.ராஜாவேல் இயக்கத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹவுஸ் மேட்ஸ் . ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக உருவான இதில் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா சந்தினி பைஜு, வினோதினீ, தீனா, அப்தூல் லீ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
சின்னர்ஸ்
உலகளவில் சுமார் 360 மில்லியன் டாலர்கள் வசூலித்த ஆங்கில திகில் படமான சின்னர்ஸ் இன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. ரியான் கூக்லர் இயக்கி நடித்த இப்படத்தில் ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், மைல்ஸ் கேட்டன், ஜாக் ஓ'கானெல் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஷ்ஷ்ஷ்
நடிகைகள் சோனியா அகர்வால், இனியா, , ஐஸ்வர்யா தத்தா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள ஷ்ஷ்ஷ் இணையத் தொடரின் இரண்டாம் பாகம் நாளை ஆகா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
'போலீஸ் போலீஸ்'
மிர்ச்சி செந்தில், ஜெயசீலன் தங்கவேல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் 'போலீஸ் போலீஸ்'. சுஜிதா தனுஷ், ஷபானா ஷாஜகான், சத்யா, வின்சென்ட் ராய் உள்பட பலர் இதில் நடித்துள்ளனர். இந்த தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இவை தவிர இந்தியில் கஜோல் நடிப்பில் ஹாட்ஸ்டார் தளத்தில் தி டிரயல் 2 வது சீசன் நாளை வெளியாகிறது.
எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதே கதையின் மையக் கரு..மிக வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள், கதைக்கு ஏற்ற நடிப்பும், அழுத்தமும் கொண்ட புது முகங்கள் இந்த படத்தின் வலுவாக விளங்குகின்றன. இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகவும், உணர்ச்சிகரமாகவும் படமாக்கியுள்ளார்..
நாகராஜன் கண்ணன், வாசன் எனும் கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். அவருடைய உணர்ச்சிபூர்வமான இயல்பான நடிப்பு பாராட்டத்தக்கது.
சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி, மு. ராமசாமி போன்றோரின் நடிப்பும், திரைப்படத்தின் உணர்வுப் பாசறையை மேம்படுத்துகிறது. மிக முக்கியமாக, பெண் இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன், தனது முதல் படத்திலேயே சித்திரவதை இல்லாமல், கதைக்கு தேவையான அந்தஸ்தில் இசையை கொடுத்திருக்கிறார். ஐந்து பாடல்களும் புதுமை, இனிமை மற்றும் உள்ளார்ந்த பொருள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
மாயக்கூத்து என்பது எதையும் நம்பாமல், தங்கள் கலையை மட்டுமே நம்பிக்கையுடன் பயணித்த ஒரு குழுவின் கனவு. மிகச் சிறிய பட்ஜெட்டிலும், மிகப்பெரிய உள்ளடக்கம் கொண்ட இந்த படம், தமிழ் சினிமாவில் அரிதாகக் காணப்படும் உண்மை முயற்சியின் உதாரணம். இது ஒரு வெறும் திரைப்படம் அல்ல, இது ஒவ்வொரு கலைஞனுக்கும் நம்பிக்கை தரும் ஒரு கலாச்சாரச் சின்னம்.
இது போன்ற சிறந்த படைப்புகளை மக்கள் மட்டும்தான் வாழ வைக்க முடியும். மாயக்கூத்து போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்கினால் தான், புதிய படைப்பாளிகளும், நல்ல சினிமாக்களும் வெளிவரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இப்படம் இன்று முதல் பிரைம் வீடியோ மற்றும் நாளை டெண்ட் கொட்டா ஓடிடி தளங்களில் வெளியாகிறது.
2024-ம் ஆண்டு வெளியான படம் 'ஒரு நொடி'. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான 'ஜென்ம நட்சத்திரம்' என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் செப் 11-ம் தேதி டெண்ட்கோட்டா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ தளங்களில் வெளியானது.
ஹாரர் த்ரில்லர் கதையாக 'ஜென்ம நட்சத்திரம்' உருவாகி இருக்கிறது. இதில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தின் கதைக்களம் தமன், மனைவி மால்வி மல்ஹோத்ராவுடன் வாழ்ந்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் மால்விக்கு அடிக்கடி கெட்ட கனவுகளும், சில உருவங்களும் கனவில் வந்து போகிறது. மறுபக்கம் அரசியல்வாதியின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார் காளி வெங்கட். இவரது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் பணம் தேவைப்படுகிறது. அப்போது தேர்தலுக்காக வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து யாருக்கும் தெரியாமல் காளி வெங்கட் ஒரு தொழிற்சாலையில் பதுக்கி வைக்கிறார். காளி வெங்கடை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது.பணம் இருக்கும் தகவலை தமன் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து விட்டு இறந்து போகிறார்.பணத்தை எடுப்பதற்காக தமன், மனைவி மால்வி மற்றும் நண்பர்கள் அந்த இடத்திற்கு செல்கிறார்கள். பணத்தை தேடும் நண்பர்கள் ஆபத்தில் சிக்குகிறார்கள்.
நண்பர்களை தமன் காப்பாற்றினாரா?, அவரது மனைவியின் கனவுக்கும், அந்த இடத்திற்கும் என்ன தொடர்பு? காளி வெங்கட்டின் மகளின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
பரபரப்பான இந்த திரைப்படத்தை இந்த வாரம் உங்கள் கண்களுக்கு விருந்தாக கண்டு களியுங்கள்.
ப்ரவீன் இயக்கத்தில் அனுபமா பரமேஷ்வரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பரதா திரைப்படம்.
ப்ரவீன் இதற்கு முன் சினிமா பண்டி மற்றும் சுபம் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. பரதா திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி முன்று வார இறுதியில் திரைப்படம் தற்பொழுது பிரைம் வீடியோ ஓடிடியில் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழியில் வெளியாகியுள்ளது.
பரதா கட்டாயமாக அணியும் வழக்கத்தை வைத்திருக்கும் கிராமத்தில் இருந்து அனுபமா வருகிறார், அவர் ஒரு பயணத்தில் மற்ற பெண்களை மற்றும் உலகை புரிந்துக் கொள்ளும் காட்சிகளாக கதைக்களம் அமைந்துள்ளது.
படத்தின் இசையை கோபி சுந்தர் மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் தர்ஷனா ராஜேந்திரன், கவுதம் மேனன் மற்றும் ராஜேந்திர பிரசாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஓடிடி தளங்களில் சோனி லிவ் முக்கியமானதாகும். பல ஒரிஜினல் வெப் தொடர்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர். முக்கிய மலையாள திரைப்படங்களையும் சோனி லிவ் கைப்பற்றியுள்ளது.
சோனி லிவ் வெப் தொடர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான தி ஹண்ட், மாயசபா போன்ற வெப் தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் திரைப்படங்கள், வெப் தொடர்கள், ஷோக்கள் என அனைத்தையும் தெரிவிக்கும் வகையில் சோனி லிவ் ஓடிடி தளம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரசிகர்களுக்கு பிடித்த ஷோக்களின் அடுத்த சீசன்களின் அறிவிப்பு:
ஸ்காம் 1992 மற்றும் ஸ்காம் 2023 வெற்றி தொடர்களை தொடர்ந்து ஹன்சல் மேத்தா ஸ்காம் 2010 என அடுத்த சீசனை இயக்கியுள்ளார்.
மகாராணி சீசன் 4, ஃப்ரீடம் அட் மிட்நைட் சீசன் 2, குல்லாக் சீசன் 5 மற்றும் அந்தேகி சீசன் 4 வெளியாக இருக்கிறது.
தமிழில்
Sethurajan IPS
தமிழ் திரையுலகில் நடனக்கலைஞர், நடிகர் பிரபுதேவா, OTT-வில் முதல் முறையாக IPS அதிகாரி வேடத்தில் அறிமுகமாகிறார். இயக்குனர் ரஃபிக் இஸ்மாயில் இயக்கும் இந்த அரசியல் பின்புலக் கொலை மர்மத் திரில்லர், சமூக மற்றும் அரசியல் சதிகள் கலந்த கதை மாந்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Free Love
மிர்னாலினி ரவி நடிப்பில், இயக்குனர் அப்பாஸ் அஹ்மது இயக்கும் Free Love, சாதாரண காதலைத் தாண்டி சமூக நெறிமுறைகளுக்கு சவால் விடுக்கும் தனிச்சிறப்பான காதல் கதையை மையமாகக் உருவாகியுள்ளது.
Theevinai Pottru
சத்யராஜ் கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா லெக்ஷ்மி தனது முதல் தமிழ் OTT படமாகவும் வரும் Theevinai Pottru, ஊர் சூழலில் நடைபெறும் கொலை மர்மம் அடிப்படையிலான திரில்லராக உருவாகியுள்ளது
The Madras Mystery – Fall of a Superstar
நஸ்ரியா பாஹத் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த வரலாற்று குற்றப் படைப்பு, சினிமா சூப்பர்ஸ்டார் ஒருவரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது. ஹிஸ்டாரிக்கல் கிரைம் டிராமா பாணியில் வெளியாகும் இந்த வலைத் தொடர் அதிக கவனம் பெற்றுள்ளது.
Kuttram Purindhavan – The Guilty One
இயக்குனர் செல்வமணி இயக்கத்தில், பசுபதி நடிக்கும் Kuttram Purindhavan, குற்றம், தண்டனை மற்றும் உண்மையான குற்றவாளி யார்? என்ற கேள்வியைச் சுற்றி நகரும் திகில் திரில்லர். லக்ஷ்மிப்ரியா, சந்திரமௌளி மற்றும் விதார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Telugu OTT
Brinda Season 2
வெற்றி பெற்ற திரில்லர் Brinda வின் இரண்டாம் பாகத்தில், த்ரிஷா மீண்டும் வருகிறார். இயக்கம்: சூர்யா மனோஜ் வாங்களா.
Black and White – Rise of the Shadow
ஜகபதி பாபு முன்னணி கதாபாத்திரத்தில், திகில் கலந்த த்ரில்லர்-டிராமா.
இந்த வரப்போகும் வெளியிட்டால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.






