search icon
என் மலர்tooltip icon

    தரவரிசை

    சாதி வேறுபாடு உள்ள ஒரு கிராமம். அங்கு மேல் வகுப்பு மக்கள், கீழ் வகுப்பு மக்கள் உயர்ந்து விட கூடாது என்று முனைப்போடு இருக்கிறார்கள். இந்நிலையில் அந்த கிராமத்தில் திருவிழா நடக்கிறது. இதில் மேல் வகுப்பு மக்களிடையே கோவில் மரியாதை செலுத்துவதில் பிரச்சனை ஏற்படுகிறது.


    இதே சமயம் கீழ் வகுப்பைச் சேர்ந்த நாயகன் பூசாரி வைத்திருக்கும் தட்டில் விபூதி எடுக்கும் நேரத்தில் தட்டு கீழே விழ, அங்கு கலவரம் வெடிக்கிறது.


    இறுதியில் கலவரம் என்ன ஆனது? கோவில் திருவிழா முறையாக நடைபெற்றதா? சாதி பிரிவினை நீங்கியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.


    படத்தில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, விக்ரம், சுருதி, பிரபு மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் புது முகங்கள் என்பதால் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை.


    உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜாஜி. ஆனால் திரைக்கதையில் தெளிவு இல்லாததால் பெரியதாக படம் ஒர்க்கவுட் ஆகவில்லை. காட்சிகள் ஒவ்வொன்றும் தொடர்ச்சி இல்லாமல் பயணிக்கிறது. சொல்ல வந்த கருத்து நியாயம் என்றாலும், எடுத்த விதம் நியாயம் இல்லாமல் இருக்கிறது.


    ஓ.மகேஷ் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆண்டணி தாசின் இசையில் பாடல்கள் ஓகே. ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு செட் ஆகவில்லை.

    • நடிகை ஜெனிலியா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.

    பாலிவுட் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஜெனிலியா. பின்னர், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.


    தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெனிலியா, இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகை ஜெனிலியா, தென்னிந்திய சினிமா குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் தென்னிந்திய படங்களில் நடித்த போது என்னை பாலிவுட் கைவிட்டது. அங்கேயே செல் என்று கூறியது. ஆனால், எனக்கு தென்னிந்திய சினிமாவை மிகவும் பிடிக்கும். எனக்கு நடிப்பின் மீது காதல் வர காரணமே தென்னிந்திய சினிமாதான். தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிக்க விருப்பம் உள்ளது என்று கூறியுள்ளார்.

    • இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
    • இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. விஜய் சேதுபதி நாயகனாக நடித்த இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில், லண்டனில் இருந்து கொடைக்கானலுக்கு தன் இசைக் குழுவுடன் வரும் "ஜெசி" என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றவர் மதுரா. தற்போது, ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான இவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்திருந்த சிறப்பு பேட்டியின் போது பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

    அதில், யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தை பற்றி உங்களது கருத்து என்ன என்ற கேள்விக்கு, என் அம்மாவின் பூர்வீகம் இலங்கை, யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் கதையோ ஈழத் தமிழர்களின் வலியையும் வேதனையையும் சொல்லும் கதை என்பதால் என்னால் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது, இந்தப் படம் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாகவே நான் பார்க்கிறேன். கண்டிப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும் இது நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாகவும் அமையும் என்று நான் கருதுகிறேன் என்று கூறினார்.



    நடிகர் விஜய் சேதுபதி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்ட போது, தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி. என் முதல் நாள் படப்பிடிப்பில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது என்னை பார்த்ததும் புரிந்துகொண்டு எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்து பதட்டத்தை போக்கி எனக்கு ஒரு ஆசனாக இருந்தார். அவருடன் இந்தப் படத்தில் பயணிக்க வாய்ப்பு தந்ததற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    விவேக் அவர்களைப் பற்றி உங்களின் கருத்து, நடிப்பின் மீது ஆர்வம் வந்த பிறகு அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு அவருடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு பேரானந்தம், படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பேசியது பழகியது அனைத்தும் இன்றும் எனக்கு ஞாபகம் வருகிறது.

    எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சிறிய இடைவேளை இருந்தது அப்போது பியானோ அங்கிருந்தது அதில் எனக்கு முதல்வன் படத்தில் இருந்து குறுக்கு சிறுத்தவளே என்ற பாடலை வாசிக்க கற்று கொடுத்தார், அதுமட்டுமல்ல நிறைய இளையராஜா பாடல்களை எங்களுக்கு வாசித்து காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அவரின் மறைவு எனக்கு மிகுந்த வேதனையை தந்தது, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரத்தை இழந்து விட்டோமே என்று.



    மேகா ஆகாஷுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து கேட்ட போது, என்னுடைய நடிப்பு பயணத்தில் முதல் நட்சத்திர நடிகையும் எனக்கு நல்ல தோழியும் ஆன மேகா ஆகாஷ் உடன் நடித்ததை நான் பெருமையாக நினைக்கிறேன். எங்களது நட்பு என்றும் நீடிக்கும்.

    சந்திரா ஆர்ட்ஸ் புரொடக்சன் பற்றியும் தயாரிப்பாளர் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் ஜெர்மனியில் இருந்து படப்பிடிப்புக்காக சென்னை வரும்போதெல்லாம் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அக்கரையாகவும் எனக்கு தேவையான வசதிகளையும் அனைத்தையும் ஒரு புதுமுக நடிகை என்று பார்க்காமல் தாய் வீட்டில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய சந்திரா ஆர்ட்ஸ் புரொடக்சனுக்கு மிக்க நன்றி.

    இயக்குனரைப் பற்றியும் அவரது பணியை பற்றியும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டதற்கு, தமிழ் திரை உலகில் எத்தனையோ கதைகள் இருந்தாலும் தன் முதல் படத்தில் ஈழத் தமிழனின் கதையை ஆழமாகவும் நேர்த்தியாகவும் அழகாக வடிவமைத்து அதில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை தந்ததற்கு என்னுடைய இயக்குனருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.


    அவரைப் பற்றியும் அவரின் குடும்பத்தை பற்றியும் பகிர்ந்துகொண்ட அவர், நான் ஜெர்மனி நாட்டில் பெர்லின் மாநகரில் பிறந்தேன் என்னுடைய அப்பா ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என்னுடைய தாயார் இலங்கையை யாழ்ப்பாண தமிழ் பெண், எனக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர், நான் ஜெர்மன் நாட்டில் வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பை முடித்து பயிற்சிப்பட்டறையில் கடமை ஆற்றுகின்றேன். என்னுடைய சிறு வயதிலிருந்து தமிழ் மொழி அதை சார்ந்த கலைகளான பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், மிருதங்கம் அனைத்தையும் கற்றுத் தெரிந்தேன் என் கல்லூரி நாட்களில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளும் வாங்கியுள்ளேன்.

    தமிழ் மொழியில் உயர்தர கல்வியை முடித்து ஜெர்மன் பிராங்பேர்ட் நகரில் உள்ள தமிழ் பாடசாலையில் ஆசிரியராகவும் தற்போது பணியாற்றுகிறேன். சுவிட்சர்லாந்து மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன், அது மட்டுமல்லாமல் ஜெர்மனில் மூன்று இசை வீடியோக்களில் நடித்துள்ளேன்

    யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திற்குள் எப்படி வந்தீர்கள் என்ற கேள்விக்கு, ஜெர்மனியில் நான் செய்த மாடலிங் வீடியோக்கள் மற்றும் நான் நடித்த மியூசிக் ஆல்பம் மூலமாக எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


    கலைத்துறையில் எப்படி ஆர்வம் வந்தது என்பது குறித்து பேசிய அவர், சிறு வயதிலிருந்தே எனக்கு நடிப்பின் மீதும் நடனத்தின் மீதும் ஈடுபாடு அதிகம் நடிப்பில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு ஆசையாக மாறி அதற்காக அனைத்தையும் கற்றுக் கொண்டேன் அதற்காக கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டிருந்தேன், என்னுடைய ஆசைக்கும் கனவுக்கும் துணையாக நின்ற அத்தனை பேருக்கும் முக்கியமாக என்னுடைய பெற்றோருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் தமிழ் படத்தின் மீது உங்களுக்கு உண்டான புரிதல் பற்றிய கேள்விக்கு, தமிழ் எனக்கு பிறப்பிலிருந்து ஊட்டப்பட்டது, நான் ஒரு தமிழ் பெண், சிறு வயதில் இருந்தே தமிழ் பேசி வளர்ந்ததால் தமிழ் திரைப்படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன், ஆனால் தமிழில் நடிக்கப் போகிறோம் என்றவுடன் தமிழில் எல்லா நடிகர், நடிகைகள் உடைய படத்தை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளவும் செய்தேன். ரஜினி சார் உடைய மாஸ், கமல் சார் உடைய நடிப்பு, விஜய் சேதுபதி அவர்களுடைய இயல்பான நடிப்பு அனைத்தையும் பார்த்து ரசித்திருக்கிறேன். நான் தமிழ் சினிமாவில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. படத்திற்கும் எனக்கும் ஆதரவு கொடுத்த என் ரசிகர்களுக்கும், தமிழ் மக்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • நடிகர் ரோபோ சங்கர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.


    ரோபோ ஷங்கர்

    சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். படத்திற்காக ரோபோ சங்கர் உடல் இடையை குறைத்தாரா? அல்லது உடல்நலக்குறைவால் அவர் இப்படி ஆனாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து அவரது மனைவி, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.


    ரோபோ ஷங்கர்

    இந்த நிலையில் ரசிகர்களின் சந்தேகத்தை தீர்க்கும் விதமாக தான் நடனமாடும் வீடியோ ஒன்றை ரோபோ சங்கர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'வாரணம் ஆயிரம்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரோபோ சங்கர் நடனமாடியுள்ளார்.  ரசிகர்கள் பலரும் ரோபோ சங்கரின் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் தன் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
    • இவர் தற்போது சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.


    பூஜா ஹெக்டே

    தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் பூஜா ஹக்டே தனக்கு அடிப்பட்டு விட்டதாக சமுக வலைதளத்தில் காலில் கட்டுடனான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    பூஜா ஹெக்டே 

    இந்நிலையில், இவர் தொடர்ந்து சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "இரண்டு வாரங்களுக்கு முன்பு.. நான் என் வாழ்வில் இரண்டாவது முறையாக நடக்க கற்றுக் கொண்டேன்.. இது மிகவும் வேடிக்கையானது" என்று பதிவிட்டுள்ளார்.


    பூஜா ஹெக்டே பதிவு

    இதற்கு முன்பும் தான் சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை பூஜா ஹெக்டே இணையத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'வணங்கான்'.
    • 'வணங்கான்' படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'வணங்கான்'. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை '2டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கிறது.


    வணங்கான்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் பாடல்கள் ரெக்கார்ட் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    'வணங்கான்' படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் 'வாடிவாசல்' திரைப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியாகி இருக்கும் விக்ரம் படத்தின் விமர்சனம்.
    காவல் துறையில் இருப்பவர்களை மாஸ்க் அணிந்த மர்ம கும்பல் கொலை செய்கிறது. இதில் காளிதாஸ் ஜெயராமும் கொல்லப்படுகிறார். அதுபோல் காவல் துறையில் சம்பந்தம் இல்லாமல் இருக்கும், காளிதாசனின் வளர்ப்பு அப்பா கமலும் கொல்லப்படுகிறார். மாஸ்க் மனிதர்களை கண்டுபிடிக்க, சீக்ரெட் ஏஜென்சிஸ் ஆக இருக்கும் பகத் பாசிலிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    மாஸ்க் மனிதர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பகத் பாசிலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் பகத் பாசில், மாஸ்க் மனிதர்களை கண்டுபிடித்தாரா? கமலை மாஸ்க் மனிதர்கள் கொலை செய்ய காரணம் என்ன? மாஸ்க் மனிதர்கள் காவல் துறையினரை கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கமல், முதல் பாதியில் கர்ணனாகவும், இரண்டாம் பாதியில் விக்ரமாகவும் நடித்திருக்கிறார். குடிகாரன், மகனை நினைத்து கவலைப்படும் பாசமான தந்தை. பேரனை நினைத்து ஏங்கும் தாத்தா என நடிப்பில் பளிச்சிடுகிறார். அதுபோல், நடனம், ஆக்ஷன், என ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். 

    கமலுக்கு அடுத்தபடியாக பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறார் பகத் பாசில். முதல் பாதி முழுவதும் திரைக்கதையை தன் வசப்படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிக்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அலட்டல் இல்லாத இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காயத்ரி, மைனா, சிவானி, மகேஷ்வரி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். தனக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் நரேன். சூர்யாவின் மாஸ் சீன் தியேட்டரில் விசில் பறக்கிறது.

    விமர்சனம்

    போதை பொருளை மையமாக வைத்து ஆக்ஷன், சென்டிமென்ட், பழிக்கு பழி என திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர். 

    அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். கிரீஸ் கங்காதரனின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் 'விக்ரம்' வின்னர்.
    ஜோசப் கொசின்ஸ்கி இயக்கத்தில் டாம் க்ரூஸ், ஜெனிபர் கான்னெலி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டாப் கன் மேவ்ரிக்’ படத்தின் விமர்சனம்.
    அமெரிக்க கடற்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருக்கும் விமானியான டாம் க்ரூஸ், ஒரு அதிரடி தாக்குதல் திட்டத்திற்காக இளம் திறமைசாலிகள் அடங்கிய போர் விமானிகள் குழுவுக்கு பயிற்சி அளிக்க அழைக்கப்படுகிறார். அங்கு அவரது நெருங்கிய நண்பரான மறைந்த கூஸ்--ன் மகன் பிராட்லி பிராட்ஷாவை (மைல்ஸ் டெல்லர்) சந்திக்கிறார். 

    தன் நண்பரை போல் பிராட்லிக்கும் எதுவும் ஆக கூடாது என்பதற்காக தாக்குதல் திட்டத்திற்கு அவரை சேர்க்க டாம் க்ரூஸ் தடுமாறுகிறார். இந்த சூழ்நிலையில் டாக் க்ரூஸ் எதிரிகளுடான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    டோனி ஸ்கார் இயக்கத்தில், டாம் க்ரூஸ், நடித்த டாப் கன் திரைப்படம் 1986ம் ஆண்டில் வெளிவந்தது. அப்படத்தின் தொடர்ச்சியாக 36 ஆண்டுகள் கழித்து 'டாப் கன் - மேவ்ரிக்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஆனால், இப்படத்தை ஜோசப் கொசின்ஸ்கி இயக்கி இருக்கிறார்.

    டாம் க்ரூஸ் படங்களில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இந்த படத்தில் இல்லை என்றாலும், விமான சாகங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஒரு பக்கம் ஆக்‌ஷனின் ஸ்கோர் செய்தாலும், மறுபக்கம் செண்டிமெண்ட் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கான்னெல்லி, ஜான் ஹாம், க்ளென் பவல், லூயிஸ் புல்மேன், எட் ஹாரிஸ், வால் கில்மர், மோனிகா பார்பரோ ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    ஹாலிவுட் படங்களுக்கு குண்டான மெதுவாக தொடங்கும் திரைக்கதை, போக போக வேகம் எடுக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள், விமான சாகச காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக, மலை மீது விமானம் ஏறும் போது, பார்ப்பவர்கள் அதை உணரும் விதத்தில் படமாக்கியது சிறப்பு. 

    கிளாடியோ மிராண்டாவின் ஒளிப்பதிவும் ஹரோல்ட் ஃபால்டர்மேயர், லேடி காகா, ஹான்ஸ் ஜிம்மர், லோர்ன் பால்ஃப் ஆகியோரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘டாப் கன் மேவ்ரிக்’ டாப்.
    பிரவீன் இயக்கி நடித்து ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் போத்தனூர் தபால் நிலையம் படத்தின் விமர்சனம்.
    1990களில் படத்தின் கதை நகர்கிறது. நாயகன் பிரவீன் சொந்தமாக பிசினஸ் ஆரம்பிப்பதற்காக வங்கி லோனுக்காக காத்திருக்கிறார். இவருடைய தந்தை போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார்.

    ஒரு நாள் தபால் நிலையத்தில் டெபாசிட் ஆக வந்த பணத்தை, வங்கியில் செலுத்தாமல் விட்டுவிடுகிறார் கேஷியர். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தபால் நிலையத்தில் அந்தப் பணம் இருந்தால் பாதுகாப்பில்லை என கருதிப் போஸ்ட் மாஸ்டர் அந்த பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் அந்தப் பணத்தை யாரோ திருடி விடுகிறார்கள்.

    விமர்சனம்

    திங்கக்கிழமை காலைக்குள் அந்த பணத்தை தபால் நிலையத்தில் வைக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் போஸ்ட் மாஸ்டர் மகன் பிரவீன், காணாமல் போன பணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் பணம் கிடைத்ததா? கொள்ளையடித்தவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் பிரவீன், இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். 1990 கால கட்டத்தில் திரைக்கதை நகர்வதால் அதற்கு ஏற்றார் போல் சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தி இருக்கிறார்கள். புதுமுக நடிகர் என்பதால் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனால், இயக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போக போக விறுவிறுப்பாக நகர்கிறது.

    விமர்சனம்

    நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி ராவ், அமைதியாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக ஒரு சண்டைக்காட்சியில் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். போஸ்ட் மாஸ்டர், பிரவீனின் நண்பர் ஆகியோர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர் 90களின் காலகட்டத்தை அழகாக நம் கண்முன்னே நிறுத்தியுள்ளார். டென்மாவின் இசை திரைக்கதை ஓட்டத்துடன் ஒன்றி பயணித்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘போத்தனூர் தபால் நிலையம்’ சிறப்பு.
    வி இயக்கத்தில் சைத்ரா ரெட்டி, அனிக்கா விக்ரமன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘விஷமக்காரன்’ படத்தின் விமர்சனம்.
    வாழ்வில் ஏற்படும் குழப்பங்களுக்கு உளவியல் ரீதியில் தீர்வுகள் காண கவுன்சிலிங் தருபவர் டாக்டர் அக்னி. இவரும் தரங்கிணி என்ற பெண்ணும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கிறார் தரங்கிணி. அக்னியால் தரங்கிணியின் விருப்பம் நிறைவேறாமல் போகிறது. இதனால் அக்னியை விட்டு தரங்கிணி பிரிந்து சென்று விடுகிறார்.

    சில ஆண்டுகள் கழித்து அக்னி, ஐகிரி என்ற பெண் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்துக் கொள்கிறார். இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தரங்கிணியை சந்திக்கிறார் அக்னி. இருவரும் மீண்டும் பழக ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் பழக்கத்தை அக்னியின் மனைவி ஐகிரி சந்தேகப்படுகிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.

    விமர்சனம்

    இறுதியில் அக்னி, மனைவி ஐகிரியுடன் வாழ்ந்தாரா? காதலியுடன் வாழ்ந்தாரா? அக்னியின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் அக்னி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வி, இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். முக்கோண காதல் கதையை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பலவீனம். ஆனால், கடைசி 20 நிமிடம் ரசிக்க வைத்திருக்கிறார். தரங்கிணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சைத்ரா ரெட்டி, மாடர்ன் பெண்ணாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். அதுபோல், ஐகிரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனிக்கா விக்ரமன் குடும்ப பெண்ணாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

    விமர்சனம்

    படத்தில் அக்னி, தரங்கிணி, ஐகிரி என்னும் 3 கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். இவர்களை சுற்றியே திரைக்கதை நகர்வதால், ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதே சமயம் மூன்று கதாபாத்திரங்களும் பேசுகிறார்கள்.... பேசுகிறார்கள்... பேசிக்கிட்டே இருக்கிறார்கள். அதிக வசனங்களை தவிர்த்திருக்கலாம். 

    கல்யாணின் ஒளிப்பதிவையும், கவின், ஆதித்யா இருவரின் இசையையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. 

    மொத்தத்தில் ‘விஷமக்காரன்’ கிளைமாக்சில் மட்டும் சிறந்தவன்.
    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தன்யா, ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தின் விமர்சனம்.
    சாதி வேறுபாடுகள் அதிகமாக இருக்கும் ஊருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார் ஐபிஎஸ் அதிகாரியான உதயநிதி. இந்த ஊரில் 2 இளம் பெண்கள் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்படுகிறார்கள். மேலும் ஒரு பெண் காணாமல் போகிறார். 

    இந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் உதயநிதிக்கு பல தடங்கல்கள் வருகிறது. தடங்கல்களை கடந்து கொலைக்கான காரணத்தையும் காணாமல் போன பெண்ணையும் உதயநிதி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக விஜயராகவன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து இருக்கிறது. தேவையான இடங்களில் மட்டும் கோபத்தை வெளிக்காட்டும் அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், உதயநிதிக்கு ஊக்குவிக்கும் கதாபாத்திரம். இதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். குமரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆரியின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். குறைசொல்ல முடியாத நடிப்பை கொடுத்திருக்கிறார். காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் சுரேஷ் சக்ரவரத்தியின் வில்லத்தனம் கலந்த நடிப்பு கவனிக்க வைத்திருக்கிறது. ஷிவானி ராஜ் சேகர், இளவரசு, மயில்சாமி, ரமேஷ் திலக், ராட்சசன் சரவணன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

    விமர்சனம்

    இந்தியில் வெளியான 'ஆர்டிக்கிள் 15' படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழுக்காக ஒரு சில காட்சிகளை சேர்த்தும், சிலவற்றை நீக்கியும் படமாக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ். சத்துணவு சமைக்கும் பெண் ஒருவர் பட்டிலியன சாதி என்பதால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தியது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பெரியார், அம்பேத்கர் சிலைகள், உண்மைச் சம்பவங்களை ஆங்காங்கே காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. கதாபாத்திரங்கள் இடையே அருமையாக வேலை வாங்கியிருக்கிறார். 

    இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பின்னணி இசை, ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது. திரையில் தோன்றும் காட்சிகளின் உணர்வுகளுக்கு உயிரூட்டுகிறது அவரது இசை. அங்காங்கே வரும் பாடல்கள் கவனிக்க வைக்கின்றது. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

    மொத்தத்தில் 'நெஞ்சுக்கு நீதி' வெல்லும்.
    சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் டான் படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் வாழும் சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், சிவகார்த்திகேயன் மகனாக பிறக்கிறார். தான் படும் கஷ்டம் தன் மகனுக்கு வர கூடாது என்று நினைத்து, சிவகார்த்திகேயனை படித்து பெரிய ஆளாக்க நினைக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால், சிவகார்த்திகேயனோ படிக்காமல் பெரிய ஆளாக மாற நினைக்கிறார்.  

    அதன்பின் இன்ஜினியரிங் காலேஜில் படிக்கிறார் சிவகார்த்திகேயன். அங்கு ஆசிரியராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. சிவகார்த்திகேயனை இன்ஜினியரிங் டிகிரி வாங்க விடாமல் தடுக்கிறார். 

    விமர்சனம்

    இறுதியில் எஸ்.ஜே.சூர்யாவின் தடைகளை தாண்டி, சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் முடித்தாரா? வாழ்க்கையில் சாதித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். நடனம், காமெடி, சென்டிமென்ட், காதல் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக நடனம் மற்றும் பள்ளி பருவ காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். தற்போது படிக்கும் மாணவர்களின் பிரதிபலிப்பாக ஜொலித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இறுதியில் கண்கலங்க வைத்திருக்கிறார்.

    விமர்சனம்

    நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் இருவரின் கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. படத்திற்கு பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. பல இடங்களில் சாதாரணமாக நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். கண்டிப்பான அப்பாவாக மனதில் பதிந்திருக்கிறார் சமுத்திரக்கனி. ராதாரவி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா, சிவாங்கி, ஆர்ஜே.விஜய் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    மாணவர்களின் கல்லூரி படிப்பு, அப்பா மகன் பாசம், இளம் இயக்குனர்களின் உணர்வை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முதல் பட இயக்குனர் என்று சொல்ல முடியாத அளவிற்கு படத்தை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் உணர்வுபூர்வமாக இயக்கி இருக்கிறார்.

    விமர்சனம்

    அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசை சிறப்பு. பாஸ்கரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

    மொத்தத்தில் 'டான்' டாப்.
    ×