என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் 'Fan boy' ஆக மாறிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அமெரிக்காவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நடிகர் விஜய் டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் வெளியாகியுள்ள 'தி ஈக்வலைஸர் 3' (The Equalizer 3) படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துள்ளார். அதில் டென்ஸல் வாஷிங்டன் வரும் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் 'Fan boy' ஆக மாறி எழுந்து நின்று தன் கைகளை விரித்து கொண்டாடுவதை இயக்குனர் வெங்கட் பிரபு புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
- பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
- நெல்லூரை சேர்ந்த ரசிகர்கள் பவன் கல்யாணுக்கு அவரது உருவ சிலையை பரிசாக வழங்க முடிவு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினர்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லூரை சேர்ந்த அவரது ரசிகர்கள் பவன் கல்யாணுக்கு அவரது உருவ சிலையை பரிசாக வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி கேரளாவை சேர்ந்த 4 சிலை வடிவமைப்பு கலைஞர்கள் மூலம் சேலத்தில் 470 கிலோ எடையுள்ள வெள்ளி பவன் கல்யாண் சிலையை வடிவமைத்தனர். 40 அடி நீளம், 25 அடி அகலத்தில் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வெள்ளி சிலையை நெல்லூர் நகர தலைவர் சுஜய் பாபு, ஜனசேனா தலைவர்கள் சென்னா ரெட்டி, மனு கிராந்தி ரெட்டி ஆகியோர் நடிகர் பவன் கல்யாணிடம் வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.
- டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் புது இணைய தொடரை ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
- இதில் நடிகர் ஷாம், கிஷோர் மற்றும் நடிகை கனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், இயக்குநர் ஶ்ரீதர் கே இயக்கத்தில், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஒரிஜினல் வெப் சீரிசான "பாராசூட்" அறிவித்துள்ளது.
நடிகர் கிருஷ்ணா தயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிசைத் தயாரித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்காக தயாரிக்கும் இரண்டாவது சீரிஸ் இது ஆகும்.
பல சூப்பர்ஹிட் படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கிய நடிகர் ஷாம், பன்முக திறமை கொண்ட நடிகர் கிஷோர் மற்றும் நடிகை கனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த மூவருடன், திறமைவாய்ந்த குழந்தை நட்சத்திரங்களான சக்தி மற்றும் இயல் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன், பிரபல நடிகர்கள் VTV கணேஷ், பாவா செல்லதுரை முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த வெப் சீரிசுக்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக ரெமியன் பணியாற்ற, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை அமைக்கவுள்ளார்.
- கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்ணிவெடி என்ற படம் உருவாகி வருகிறது.
- பெயரிடப்படாத 2 திரைப்படங்களை இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.
தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிமிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நான்கு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கண்ணிவெடி' (தமிழ்), ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ரெயின்போ' (தெலுங்கு) உட்பட மேலும் இரண்டு பெயரிடப்படாத திரைப்படங்களை இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க உள்ளன.
புதிய கூட்டு முயற்சி குறித்து பேசிய இன்வேனியோ நிறுவனத் தலைவர் அலங்கார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற அனுபவமிக்கவர்களுடன் ஒரே குழுவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படைப்பாற்றல், தொழில்நுட்ப திறன் மற்றும் உயர்தர பொழுதுபோக்கை வழங்குவதற்காக எங்கள் இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ளது" என்று அலங்கார் கூறியுள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்சின் எஸ்.ஆர். பிரபு பேசுகையில், "இந்த புதிய பயணம் உற்சாகத்தைத் தருகிறது. இரண்டு நிறுவனங்களின் தனித்துவ சிறப்புகளும் எங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கும். எல்லைகள் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் நாங்கள் சொல்லப்போகும் கதைகள் வெள்ளித் திரையை உயிர்ப்பிக்கும்" என்று தெரிவித்தார்.
- நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
- ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை நேரில் சந்தித்து காசோலையை கொடுத்திருந்தார். தற்போது ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் வகையில் கலாநிதி மாறன், நெல்சனுக்கு புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக கொடுத்தார்.
இதுபற்றிய வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கும் நலையில், இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
- ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை நேரில் சந்தித்தார். மேலும் ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் வகையில், அவரிடம் காசோலை அளித்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
- சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'கங்குவா' படப்பிடிப்புதள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது, 'கங்குவா' படப்பிடிப்பு தளத்தில் நெருப்புக்கு நடுவே இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் படக்குழு கேமராவுடன் நிற்கும் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'ஜெயிலர்' திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 'ஜெயிலர்' வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாதிநிதி மாறன் BMW i7 மற்றும் BMW X7 மாடல் காரில் ஒன்றை ரஜினியை தேர்ந்தெடுக்க கூறினார். இதில் BMW X7 மாடல் காரை ரஜினி தேர்ந்தெடுத்தார். இதனை கலாநிதி மாறன், ரஜினிக்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பு கலாநிதி மாறன், நடிகர் ரஜினிக்கு காசோலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை அபர்ணா நாயர் கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
- தமிழில் எதுவும் நடக்கும் என்ற படத்திலும், தெலுங்கில் சின்னி சின்ன ஆசா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
கேரள மாநிலம் மலப்புரம் தென்ஹிபாலம் பகுதியை சேர்ந்த நடிகை அபர்ணா நாயர் (வயது31). இவர் மலையாளத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.
பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், மாடலிங் துறையில் இருந்துவந்தார். கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
நோட்புக், நிவேத்யம், மேகதீர்த்தம், எதுவும் நடக்கும், காக்டெய்ல், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், ஒரு குட்டி சோத்யம், அமைதி, நொடிகள், தெருவிளக்கு, பாலன் வக்கீல், கல்கி, தாமர, ஒருத்தி, உணர்தல் உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் எதுவும் நடக்கும் என்ற படத்திலும், தெலுங்கில் சின்னி சின்ன ஆசா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி சந்தனமாலை, ஆத்மசகி, மைதிலியும் வரும், தேவஸ்பர்ஷம் உள்ளிட்ட மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
தற்சமயம் திருவனந்தபுரம் கரமனாதலா பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் நடிகை அபர்ணா நாயர் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனைப்பார்த்த அவரது தாய் மற்றும் சகோதரி அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நடிகையை கொண்டு சென்றனர். அங்கு நடிகையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கரமனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், நடிகையின் உடல் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு நடிகையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நடிகை அபர்ணா நாயர் வீட்டில் இருந்த ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கியிருக்கிறார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் நடந்ததா? என்பது மர்மமாக உள்ளது. இதனால் நடிகை சாவு சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
பிரேத பரிசோதனை முடிவில் நடிகை எப்படி இறந்தார்? என்பது தெரிந்துவிடும் என்பதால் அதற்காக போலீசார் காத்திருக்கின்றனர். இருந்தபோதிலும் நடிகை சம்பந்தப்பட்ட அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அபர்ணா நாயர் தூக்கில் பிணமாக தொங்கியபோது அவரது தாய் மற்றும் சகோதரியே வீட்டில் இருந்துள்ளனர். ஆகவே நடிகை அபர்ணா நாயருக்கு பிரச்சினை எதுவும் இருந்ததா? என்று அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை அபர்ணா நாயருக்கு திருமணமாகி சஞ்சித் என்ற கணவரும், திராயா மற்றும் கிருத்திகா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் நடிகை தூக்கில் தொங்கியபோது வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் எங்கு சென்றார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகை மர்மமாக இறந்திருப்பது மலையாள திரைத்துறை யினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நடிகர் ராகவா லாரன்ஸ் ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் மீது ஆசை இல்லை என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ், "விஜய் சாருக்கு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் மீது ஆசை இல்லை. விஜய் அவராகவே ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர். நமக்கு நாம் தான் போட்டி என்று அவர் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். விஜய்யிடம் நான் எப்போது பேசினாலும் தலைவர் எப்படி இருக்கிறார் என்று கேட்பார்" என்று பேசினார்.
- நடிகர் பகத் பாசில், தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார்.
- இவர் நடிகை நஸ்ரியாவை கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் தன் தந்தை இயக்கிய 'கையெத்தும் தூரத்து' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். பின்னர், பிரைட், பெங்களூர் டேஸ், டிரான்ஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் தமிழில் 'வேலைக்காரன்', 'சூப்பர் டீலக்ஸ், விக்ரம் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இவர் நடித்திருந்த ரத்தினவேல் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

சொகுசு கார் வாங்கிய பகத் பாசில்
இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகர் பகத் பாசில் அவர்களது திருமண நாளையொட்டி கேரளாவில் முதல் சொகுசு காரான 'land rover defender 90' என்ற காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
- வெங்கட் பிரபுவின் பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி 68 குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு புகைப்படங்களை பகிர்ந்த அவர், "எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்" என்று நடிகர் விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தியை டேக்செய்து பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Welcome to the future!!! #Thalapathy68 @actorvijay @archanakalpathi pic.twitter.com/snWrqMEjfU
— venkat prabhu (@vp_offl) August 31, 2023






