என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    அதுமட்டுமல்லாமல், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், நேரிலும் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பகிர்ந்தார்.

    இந்நிலையில் ரஜினி குறித்து சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். அதில், "எல்லோரும் வியந்து நோக்கும் ஒருவரிடம் இருந்து மனமார்ந்த பாராட்டு பெறுவது என்பது கிடைத்தற்கரிய பேறு. எமது அருமைத் 'தலைவர்', சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இன்று நாம் அப்பேற்றைப் பெற்று அகமகிழ்ந்து, உளம் நெகிழ்ந்து நிற்கிறோம்.


    இப்பாராட்டு எம்மை மேன்மேலும் கடினமாக உழைக்கவும் இன்னும் சிறந்த படைப்புகளை உருவாக்கவும் உந்துதலாகவும் உறுதுணையாகவும் நிற்கின்றது. சொல்லப் போதுமான வார்த்தைகள் இல்லை, எனினும் சுருக்கமாகவும் உருக்கமாகவும் சொல்கிறோம், "நன்றிகள் கோடி, தலைவரே" என்று பதிவிட்டுள்ளார்.


    • பிரியா வாரியர் கண்களை சிமிட்டி வெளியிட்ட புகைப்படங்கள் இந்திய திரை உலகத்தையே இவரை திரும்பிப் பார்க்க வைத்தது.
    • இதையடுத்து பிரியா வாரியருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது.

    'அடர் லவ்' என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இந்த படம் வெளி வருவதற்கு முன்பே பிரியா வாரியர் தனது கண்களை சிமிட்டி வெளியிட்ட புகைப்படங்கள் மலையாள சினிமா மட்டும் இன்றி இந்திய திரை உலகத்தையே இவரை திரும்பிப் பார்க்க வைத்தது. இதையடுத்து அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது. முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவி பெயரில் தயாரான இந்தி படத்தில் பிரியா வாரியர் நடித்து வந்தார்.


    அந்தப் படத்தின் மீது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் படம் வெளியில் வராமல் முடங்கியது. இந்நிலையில் பிரியா வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்பட ங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.


    • ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
    • அட்லீ அடுத்து எந்த நடிகருடன் இணையவுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கினார்.

    இவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஜவான்'.நயன்தாரா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பான் இந்தியா படமாக உருவான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளியது. இதையடுத்து அட்லீ அடுத்தது எந்த நடிகருடன் இணையவுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், இயக்குனர் அட்லீ, அஜித்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அட்லீ, "ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாரா மூலமாக அஜித்தை சந்தித்தேன். அப்போது அவர் என்னை பார்த்ததும் பள்ளி படிப்பை முடித்துவிட்டாயா? என்று கேட்டார். என் கஷ்டமான நாட்களில் அவர் எனக்கு ஆறுதலாக இருந்தார். அஜித் சாருக்காக பயங்கரமான ஒரு கதையை ரெடி செய்துள்ளேன். அவர் ஓகே என்று சொல்லிவிட்டால் படப்பிடிப்பை தொடங்கிவிடலாம்" என்று பேசியதாக கூறப்படுகிறது.

    • ஹரி இயக்கத்தில் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே இன்று நடந்தது.


    இந்நிலையில், நடிகர் விஷால் படப்பிடிப்பு தளத்தில் விவசாயிகளை சந்தித்தார். அப்போது அவர்களுடன் வந்திருந்த பெண் ஒருவரை பார்த்து விஷால் சாப்டியாமா? என்று கேள்வி கேட்க அதற்கு அந்த பெண் இல்லை என்று பதிலளித்தார். பதற்றமடைந்த விஷால் அருகில் இருந்தவரை பார்த்து முதல்ல சாப்பாடு போடுங்க என்று காட்டமாக கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் 'உங்கள் ரசிகன் என்று சொல்ல பெருமையாக இருக்கிறது' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • முத்துராமன், கோபால்சாமியிடம் ரூ.3 கோடி தந்தால் தமிழ்நாடு அரசில் உயர்பதவி வாங்கி தருவதாக கூறி உள்ளார்.
    • அரசு முத்திரை, தேசிய கொடி ஆகியவற்றை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

    சேலத்தைச் சேர்ந்த கோபால்சாமி என்பவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் மற்றும் முபாரக் ஆகியோர் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பின் தேசிய தலைவர் என தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.

    அப்போது முத்துராமன், கோபால்சாமியிடம் ரூ.3 கோடி தந்தால் தமிழ்நாடு அரசில் உயர்பதவி வாங்கி தருவதாக கூறி உள்ளார். இதை உண்மை என்று நம்பி கோபால்சாமி 2 தவணைகளில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முத்துராமனின் நண்பர் துஷ்யந்த் யாதவ் என்பவரிடம் ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்று கொண்ட அவர்கள் அரசு பதவி வாங்கி தரவில்லை. இதையடுத்து கோபால்சாமி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். கடந்த வாரம் சேலத்தில் எம்.எஸ்.எம்.இ. புரொமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் அந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன், செயலாளரான துஷ்யந்த் யாதவ், தமிழக தலைவர் நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதுபற்றி தெரியவந்ததும் சூரமங்கலம் போலீசார் விரைந்து சென்று முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். மேலும் அரசு முத்திரை, தேசிய கொடி ஆகியவற்றை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே வீரேந்திர சவுத்ரி சேலம் போலீசாருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில் தனக்கு தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் விசாரணைக்கு வர முடியவில்லை. உடல்நிலை சரியானதும் விசாரணைக்கு ஆஜராக வருவதாக தெரிவித்து இருந்தார். இதற்கிடையே இந்த மோசடி வழக்கு சூரமங்கலம் போலீசில் இருந்து சேலம் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 'சீதா ராமம்' படத்தின் மூலம் மிருணாள் தாகூர் திரையுலகில் தனக்கான இடத்தை பெற்றார்.
    • தெலுங்கில் நானிக்கு ஜோடியாக 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    பாலிவுட் நடிகையான மிருணாள் தாகூர், இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர். பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் மிருணாள் தாகூர் திரையுலகில் தனக்கான இடத்தை பெற்றார். மேலும், இவருக்கு பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

    இவர் இப்போது, தெலுங்கில் நானிக்கு ஜோடியாக 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், விஜய் தேவரகொண்டாவுடன் 'ஃபேமிலி ஸ்டார்' படத்திலும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திலும் மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில் மிருணாள் தாகூர் பிரபல இந்தி ராப் பாடகரும் பாடலாசிரியருமான ஆதித்யா பிரதோக் சிங்கை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. அதாவது, நடிகை ஷில்பா ஷெட்டி நடத்திய தீபாவளி பார்ட்டியில், இருவரும் கைகோத்தபடி ஒன்றாக செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவி வந்தன.

    இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ஆதித்யா பிரதோக் சிங் , "இணைய நண்பர்களே, உங்களை ஏமாற்றியதற்கு மன்னியுங்கள். நீங்கள் நினைப்பது போல் எதுவுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    • விஷால் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே இன்று நடந்தது. படப்பிடிப்பில் நடிகர் விஷால், கதாநாயகி பிரியா பவானி சங்கர் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இதற்காக ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் போல செட் உருவாக்கப்பட்டு இருந்தது.


    படப்பிடிப்பு நடக்கும் இடம்

    கதாநாயகி பைக்கில் செல்வது போலவும் கைதிகளை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்வது போல காட்சிகள் இன்று படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு நடைபெறும் இடங்களை சுற்றிலும் பாதுகாவலர்கள் நிற்க வைக்கப்பட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ஏராளமானோர் குவிந்ததால் கோட்டை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 'கங்குவா' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், நடிகர் ரஜினி மும்பை சென்றுள்ளார். அதாவது, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

    • நடிகை கீர்த்தி சுரேஷ் பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
    • இந்தியில் ரீமேக்காகும் தெறி படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா பயணத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் குறிப்பிடத்தக்க கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடரி, ரெமோ, மாமன்னன் என பல படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். மேலும் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.



    நடிகை கீர்த்தி சுரேஷ் மார்க்கெட்டுக்காக மட்டுமல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் மிகவும் வரவேற்பை பெற்ற படம் நடிகையர் திலகம். இந்த படம் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் பெற்றார்.

    சைரன், ரகு தாதா, ரிவால்வர் ரீட்டா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், அட்லீ இயக்கத்தில் இந்தியில் ரீமேக்காகும் தெறி படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


    இப்படி பல பரிமாணங்களில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ் திரையுலகில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.
    • இந்த படத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    அதுமட்டுமல்லாமல், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புத படைப்பு. இந்நாளின் திரையுலக நடிகவேன் எஸ்.ஜே.சூர்யா. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருப்பதாக" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.


    இந்நிலையில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படக்குழுவினர் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி தலைவா.. உங்களுடனான ஒரு மணி நேர உரையாடல் எங்கள் படக்குழுவினருக்கு நேர்மறையான எண்ணத்தை கொடுத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
    • ஜிகர்தண்டா இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர்," 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புத படைப்பு. இந்நாளின் திரையுலக நடிகவேன் எஸ்.ஜே.சூர்யா. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருப்பதாக" நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார்.

    ×