என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி, சுதந்திர தினத்தில் புதிய ஆல்பத்தை வெளியிட இருக்கிறார்.
2012-ல் வெளிவந்த ‘ஹிப்ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்த ஆதி, மீசையை முறுக்கு படம் மூலம் நடிகரானார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவே நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் நடித்தார். தற்போது தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி வரும் சுதந்திர தினத்தன்று திரைப்படங்கள் சாராத சுதந்திர இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்’ (Naa oru Alien) என்ற ஆல்பத்தை வெளியிட இருக்கிறார். முதல் பாடல் ஆகஸ்ட் 6ம் தேதியும், முழு ஆல்பம் ஆகஸ்ட் 15ம் தேதியும் வெளியாக இருக்கிறது. இதற்கான போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
வெளிநாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை தனி விமானம் மூலம் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார்.
தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் சோனு சூட். படத்தில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் ஹீரோ என்று ஊரடங்கு நேரத்தில் நிரூபித்திருக்கிறார் சோனு சூட்.
இவர் முதலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கினார். பின்னர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல பஸ் வசதி செய்து கொடுத்து உதவினார். சமீபத்தில் குழந்தைகளின் படிப்புக்கு பசுமாட்டை விற்று செல்போன் வாங்கிய விவசாயிக்கு சோனு சூட் உதவி செய்தார்.

இந்நிலையில், வெளிநாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை, தனி விமானம் மூலம் சென்னை திரும்ப உதவி செய்துள்ளார் நடிகர் சோனு சூட். இதற்கு மாணவர்கள் பலரும் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்ததாக கூறியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா. இவரிடம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், வர்த்தக படங்கள் இந்த இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:-
“நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் பெயர் வரும். வர்த்தக படங்களில் நடித்தால் வளர்ச்சி வேறுமாதிரி இருக்கும் என்றெல்லாம் பிரித்து பார்த்து நான் கணக்கு போட்டது இல்லை. எதிர்பார்க்காமல் சினிமா துறைக்கு வந்து நடிகையானேன். அதிர்ஷ்டம் கூட சேர்ந்ததால் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கினேன்.

என்னை விட அழகானவர்கள். திறமையானவர்கள் எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களை மீறி முன்னுக்கு வந்து இருக்கிறேன். எதிர்பாராமல் இந்த தொழிலுக்கு வந்தாலும் இப்போது சினிமாதான் எனது வாழ்க்கை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு மீது காதலை வளர்த்துக்கொண்டேன். அதனால்தான் அந்தமாதிரி படம் இந்த மாதிரி படம் என்றெல்லாம் வேறுபடுத்தி பார்க்காமல் எல்லாவிதமான கதைகளிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.”
இவ்வாறு சமந்தா கூறினார்.
பிரபல காமெடி நடிகரின் மகன் சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 75-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
மத்திய அரசு துறைகளில் உள்ள பல்வேறு அதிகாரிகள் பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்பட 829 இடங்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல் நடைபெற்றது. இதன் முடிவுகளை யு.பி.எஸ்.சி நேற்று வெளியிட்டது.

இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில், தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சின்னி ஜெயந்த்தின் மகனும் தேர்ச்சி பெற்றுள்ளார். சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய், ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 75-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய முதல் முயற்சியிலேயே அவர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன், ஒரு முறையாவது இந்த இயக்குனருடன் ஒர்க் பண்ணனும் என தெரிவித்துள்ளார்.
தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டரில் வெளியாக இருக்கிறது.
நேற்று மாளவிகா மோகனன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக மாஸ்டர் படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து கூறி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் மாளவிகா மோகனன். இதில் ரசிகர் ஒருவர், “ஒரு முறையாவது நீங்கள் பணியாற்ற விரும்பும் கோலிவுட் இயக்குனர் யார்?” என கேள்வி எழுப்பினார். இதற்கு வெற்றிமாறன் என பதிலளித்த மாளவிகா மோகனன், அவரின் ரசிகை என்றும், அவரது படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறினார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன் குடும்பத்தினர், இயக்குனர் ராஜமவுலி, நடிகர் விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா என பலர் பாதிக்கப்பட்டனர். அந்தவகையில் பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் விட்டு விட்டு வந்தது, அதேபோல் சளியும் இருந்ததால், நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என வந்தது. இருப்பினும் அது பயப்படும் படியாக இல்லை, டாக்டர்கள் என்னை வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் நான் தான் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று கொள்வதாக கூறி இங்கு வந்தேன். மருத்துவர்கள் என்னை நல்ல முறையில் கவனிக்கிறார்கள். சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவேன். எனக்கு யாரும் தொலைபேசியில் அழைக்க வேண்டாம். நான் ஓய்வில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பதில்லை. என கூறியுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங், இறப்பதற்கு முன் கூகுளில் வலியில்லா மரணத்திற்கு வழி தேடியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் கடந்த ஜூன் மாதம், தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை, சுஷாந்தின் காதலி ரியா, தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், சுஷாந்த் இறப்பதற்கு முன் தனது பெயரை, கூகுளில் தேடி அது குறித்த கட்டுரைகளை படித்தாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்தும் படித்ததாக மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது மேலாளர் திஷா சாலியன், தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது பெயரையும், சுஷாந்த் கூகுளில் தேடியதாக மும்பை போலீசார் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி தான் இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு வலியில்லாமல் தற்கொலை செய்வது எப்படி என அவர் கூகுளில் தேடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகர் சுஷாந்த் சிங், பைபோலார் டிஸார்டர் எனும் மன அழுத்த நோய்க்கு, மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். சுஷாந்த்தின் வங்கி கணக்கிலிருந்து அவரது காதலி ரியா, ரூ.15 கோடி பண பறிமாற்றம் செய்ததாக கூறிய புகார் முற்றிலும் தவறு என்றும், மும்பை போலீசார் கூறியுள்ளனர்.
‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த விஜய்-அட்லீ கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி சேர்ந்த அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகிக்கிறார்.
இந்நிலையில், அட்லீ மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் விஜய்யிடம் அட்லீ சுருக்கமாக கதை சொன்னதாகவும், விஜய்க்கு அது பிடித்துப்போனதால் அதனை முழு ஸ்கிரிப்டாக ரெடி பண்ணுமாறு அட்லீயிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் 65-வது படத்தை முருகதாசும், 66-வது படத்தை வெற்றிமாறனும் இயக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த இரு படங்களுக்கு பிறகு விஜய் அட்லீயுடன் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்குக்கு பின் அட்லீ, தெறி படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குவார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதேபோல் பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடமும் கதை சொல்லி உள்ளார் அட்லீ. இந்த படம் குறித்த அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் பாடல் ஒன்றுக்கு பிகில் படத்தில் நடித்த நடிகை ஒருவர் சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குட்டி ஸ்டோரி பாடல் மட்டும் யூடியூப்பில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. இந்த பாடலுக்கு பல பிரபலங்களும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்கள். இந்நிலையில், விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து அணியில் நடித்த வினயா சேஷன் வெளிநாட்டில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.

இந்த வீடியோவை நடிகை வினயா சேஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
🌪️ When you groove to a Thalapathy @actorvijay song, you feel some verelevel swagger 🌪️
— Vinaya Seshan (@VinayaSeshanOff) August 3, 2020
Here's a glimplse of #Kuttistory from #showdown_uk ;) had a great deal of fun performing after ages ☺️ Hope you all like it ❤️ pic.twitter.com/l0pZ9B59V4
மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் என்று கூறியிருக்கிறார்.
தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டரில் வெளியாக இருக்கிறது.
இன்று மாளவிகா மோகனன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக மாஸ்டர் படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து கூறி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே கவனம் பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் மாளவிகா மோகனன். இதில் விஜய் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும் மாஸ்டர் படத்தில் உங்கள் பெயரென்ன என்று ரசிகர் ஒருவர் கேட்க, ''சி என்ற எழுத்தில் எனது பெயர் தொடங்கும். இதற்கு மேல் சொன்னால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார்'' என்று கூறியிருக்கிறார்.
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ஓ மை கடவுளே படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் காதலர் தினத்தன்று திரைக்கு வந்த படம் ‘ஓ மை கடவுளே’. காதல், பேண்டசி படமான இதை அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது.

இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஓ மை கடவுளே திரைப்படம் டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை திரையிடப்படும் என்று படக்குழுவினர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
பிரபல பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட சோனு சூட், ரசிகர்கள் வெளியிட்ட வீடியோவைக் கண்டு கண் கலங்கி இருக்கிறார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு செல்வதை பார்த்த நடிகர் சோனுசூட், அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பி வைத்து நாடு முழுவதும் கவனம் பெற்றார்.
வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் நாடு திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். வேலை இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் சோனு சூட் சமீபத்தில் கபில் சர்மா தொகுத்து வழங்கும் பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். விரைவில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் சோனு சூட் அவர்களால் உதவி பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் உருக்கமாக அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். இதை பார்க்கும் சோனு சூட் மேடையிலேயே கண் கலங்கி நிற்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






