என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகை சுபிக்‌ஷா, கொரோனாவால் உணவின்றி கஷ்டப்படும் சாலையோர மக்களுக்கு உதவி வருகிறார்.
    கொரோனா காலத்தில் நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தமிழில் கடுகு, கோலிசோடா 2, வேட்டை நாய் போன்ற படங்களில் நடித்த நடிகை சுபிக்‌ஷா கொரோனாவால், உணவின்றி கஷ்டப்படும் சாலையோர மக்கள், கால்நடைகள் ஆகியவற்றிற்கு உதவி வருகிறார்.

    பொது மக்களுக்கு உணவுகள், கால்நடைகளுக்கு பழங்கள் ஆகியவற்றை அவர்களுக்கு நேரில் சென்று கொடுத்து வருகிறார். தற்போது சுபிக்‌ஷா நடிப்பில் கன்னித்தீவு திரைப்படம் உருவாகி உள்ளது.

    கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், மகாராசன் என பல படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் மறைவிற்கு கமல் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். வயது மூப்பு காரணமாக ஜி.என்.ரங்கராஜன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 90. இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    தற்போது கமல் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் சினிமாவில் நுழைந்த காலம் தொட்டு இறக்கும் தறுவாய் வரை என் மீது மாறாத பிரியம் கொண்டவர் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன். கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கிக் கொண்டவர். இன்றும் விரும்பிப் பார்க்கப்படும் பல திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்குத் தந்தார். அவரது நீட்சியாக மகன் ஜி.என்.ஆர்.குமரவேலனும் சினிமாவில் தொடர்கிறார்.

    கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், மகாராசன் என என்னை வைத்து பல வெற்றிப் படங்களைத் தந்தவர். என் மீது கொண்ட மாறாத அன்பால், தான் கட்டிய வீட்டிற்கு 'கமல் இல்லம் என்று பெயர் வைத்தார். இன்று அந்த வீட்டிற்கு சற்றேறக்குறைய 30 வயதாகி இருக்கக் கூடும்.

    ஜி.என்.ரங்கராஜன்
    ஜி.என்.ரங்கராஜன்

    ஜி.என்.ஆர் தன் வீட்டில் இல்லையென்றால் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில்தான் இருப்பார் என்றே எங்களை அறிந்தவர்கள் சொல்வார்கள். சினிமாவில் மட்டுமல்ல, மக்கள் பணியிலும் என்னை வாழ்த்தியவர். எப்போதும் எங்கும் என் தரப்பாகவே இருந்தவர்.

    சில நாட்களுக்கு முன்பு கூட முகச்சவரம் செய்து பொலிவோடு இருக்க வேண்டும். கமல் பார்த்தால் திட்டுவார் என்று சொல்லி வந்தார் என கேள்வியுற்றேன். தான் ஆரோக்கியமாக இருப்பதையே நான் விரும்புவேன் என்பதை அறிந்தவர்.

    நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். அண்ணி ஜக்குபாய்க்கும், தம்பி இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலனுக்கும் குடும்பத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    நிஜார் இயக்கத்தில் ராம்குமார், வரலஷ்மி சரத்குமார், இனியா நடிப்பில் உருவாகி உள்ள கலர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
    "லைம் லைட் பிக்சர்ஸ்" தயாரிப்பில் திகில் கலந்த குடும்ப கதையம்சம் கொண்ட படமாக ‘கலர்ஸ்’ தயாராகி இருக்கிறது. நகர பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், இதுவரை நடித்திராத வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

    கலர்ஸ் படக்குழு

    இவர்களுடன் இனியா, திவ்யா பிள்ளை, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளனர். நிஜார் டைரக்டு செய்து இருக்கிறார். அஜி இட்டிகுலா தயாரித்துள்ளார். படம், கோட்டயம் மற்றும் சென்னையில் வளர்ந்துள்ளது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
    கே.ஜி.எப் படம் மூலம் பிரபலமான நடிகர் யாஷ், அடுத்ததாக ‘போக்கிரி’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர் யாஷ். கன்னட படமான இது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய  மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தை வருகிற ஜூலை 16-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    யாஷ், பூரி ஜெகன்நாத்
    யாஷ், பூரி ஜெகன்நாத்

    இந்நிலையில், நடிகர் யாஷ், அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கில் மகேஷ் பாபுவின் போக்கிரி, பிசினஸ்மேன் போன்ற படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத், யாஷின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் பூரி ஜெகன்நாத் தற்போது விஜய் தேவரகொண்டாவின் ‘லிகர்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்தபின் அவர் யாஷ் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
    ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கான 2 டன் உணவுப் பொருள்களை அரசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார் நடிகை வரலட்சுமி.
    ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடிப்பதால், இவருக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. 

    தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வரலட்சுமி, சேவ் சக்தி எனும் அமைப்பு மூலம் சமூக நலப் பணிகளையும் செய்து வருகிறார்.

    தற்போது இந்த அமைப்பு மூலம், ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கான 2 டன் உணவுப் பொருள்களை அரசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார் வரலட்சுமி. இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டுசேர்க்க அதன் விவரத்தை நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். 

    உதயநிதி ஸ்டாலினை நடிகை வரலட்சுமி சந்தித்தபோது எடுத்த புகைப்படம்
    உதயநிதி ஸ்டாலினை நடிகை வரலட்சுமி சந்தித்தபோது எடுத்த புகைப்படம்

    மேலும் கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்க்க ‘கோவிட் உதவிஎண்களையும்’ வரலட்சுமி உருவாக்கியுள்ளார். இந்த சேவையையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அது தொடர்பான விவரங்களை நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    கடந்த ஓராண்டாக ‘துப்பறிவாளன் 2’ குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்த விஷால், தற்போது அதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர். 

    இதன் இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமியும் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்தது. இதையடுத்து விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். 

    விஷால்

    இதனால் மீதிப் படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் கடந்தாண்டு அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து கடந்த ஓராண்டாக இப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனிடையே ‘துப்பறிவாளன் 2’ படத்தை நடிகர் விஷால் கிடப்பில் போட்டுவிட்டதாக தகவல் பரவி வந்தது.

    இந்நிலையில், ‘துப்பறிவாளன் 2’ படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் விஷால். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் எஞ்சியுள்ள காட்சிகளை எடுத்து முடிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் இயக்க உள்ள முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.
    சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்த படக்குழு, அந்த சமயத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணமடைந்ததால், அப்பாடல் வெளியீடை தள்ளிவைத்தனர். 

    யுவன் சங்கர் ராஜாவின் டுவிட்டர் பதிவு
    யுவன் சங்கர் ராஜாவின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட மாநாடு படத்தின் பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். மிக விரைவில் அப்பாடல் வெளியிடப்படும் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் மாநாடு படத்தின் முதல் பாடல் ஓரிரு வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘கல்யாணராமன்’ உள்பட பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் காலமானார்.
    கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். இது தவிர ‘முத்து எங்கள் சொத்து’, ‘அடுத்தாத்து ஆல்பர்ட்’, ‘மனக்கணக்கு’, ‘பல்லவி மீண்டும் பல்லவி’ போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

    ஜி.என்.ஆர்.குமரவேலன், ஜி.என்.ரங்கராஜன்
    ஜி.என்.ஆர்.குமரவேலன், ஜி.என்.ரங்கராஜன்

    இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஜி.என்.ரங்கராஜன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 90. ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    ‘ஜகமே தந்திரம்’ படத்துக்காக டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள எமோஜி
    ‘ஜகமே தந்திரம்’ படத்துக்காக டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள எமோஜி

    இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்திற்காக டுவிட்டரில் சிறப்பு எமோஜி வெளியிடப்பட்டு உள்ளது. தனுஷ் படத்திற்கு எமோஜி கிடைப்பது இதுவே முதன்முறை. ஜகமே தந்திரம் படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள எமோஜி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முன் ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல், பிகில், சூர்யாவின் என்.ஜி.கே போன்ற படங்களுக்கு டுவிட்டரில் எமோஜி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
    கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி வெளியே சுற்றிய பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் இந்திக்கு போனார்.

    தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. அண்மையில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். நடிகை திஷா பதானி, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை காதலித்து வருகிறார். 

    திஷா பதானி, டைகர் ஷெராப்
    திஷா பதானி, டைகர் ஷெராப்

    இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறியதாக இவர்கள் இருவர் மீதும் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் இருவரும் காரில் சுற்றியதாகவும், போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது சரியான காரணத்தை தெரிவிக்காததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    இயக்குனர் மணிரத்னம் தனது பிறந்தநாளன்று டுவிட்டரில் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவரது மனைவியும் நடிகையுமான சுஹாசினி விளக்கம் அளித்துள்ளார்.
    சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள். ரசிகர்களுடன் கலந்துரையாடுவதற்காகவும், தங்களது படங்கள் குறித்த அப்டேட்டை வெளியிடுவதற்காகவும் அவர்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே சினிமா பிரபலங்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் மணிரத்னம், அதனை முன்னிட்டு டுவிட்டரில் இணைவதாக குறிப்பிட்டு போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது. இதனைப் பலரும் உண்மை என நம்பி அந்த போலி டுவிட்டர் கணக்கை பின்தொடரத் தொடங்கினார்கள். 

    சுஹாசினி
    சுஹாசினி

    பின்னர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி, தனது டுவிட்டர் பதிவு வாயிலாக அதனை போலியான டுவிட்டர் கணக்கு என்பதை உறுதிப்படுத்தினார். இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    டோலிவுட்டில் மவுசு அதிகரித்து வருவதால், பிரபல தமிழ் இயக்குனர்களின் பார்வை தெலுங்கு படங்கள் பக்கம் திரும்பி உள்ளது.
    தென்னிந்திய திரையுலகில் தமிழ் படங்களுக்கு இணையாக தெலுங்கு படங்களுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். இதனால், பிரபல தமிழ் இயக்குனர்களின் பார்வை தெலுங்கு படங்கள் பக்கம் திரும்பி உள்ளது.

    இயக்குனர் ஷங்கர் முன்னணி தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2-ம் பாகத்தை முடிக்காமல், தெலுங்கு படத்தை அவர் இயக்க கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருக்கிறார் ஷங்கர்.

    ராம்போதினேனி, ராம்சரண்
    ராம்போதினேனி, ராம்சரண்

    அதேபோல் இயக்குனர் லிங்குசாமியும் தெலுங்கு படமொன்றை இயக்கி வருகிறார். இதில் ராம்போதினேனி கதாநாயகனாக நடிக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாசும் தெலுங்கு படம் இயக்க தயாராகிறார். அவர் இயக்கும் தெலுங்கு படத்தில் கதாநாயாகனாக ராம் போதினேனி நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இயக்குனர் முருகதாஸ் ஏற்கனவே மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் எனும் தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார். இவர்கள் தவிர மேலும் சில இயக்குனர்களும் தெலுங்கு படங்கள் இயக்க பேச்சுவார்த்தையில் உள்ளனர்.
    ×