என் மலர்
சினிமா செய்திகள்
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்தநாளான இன்று, பிரபல பாடகி ஒருவர் அவருக்கு பாட்டுப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ள இவர், கடந்தாண்டு செப்டம்பர் 25-ந் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல பின்னணி பாடகி சுவேதா மோகன், பாட்டுப்பாடி எஸ்.பி.பி.க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘பாடும் நிலாவே’ பாடலை பாடியுள்ள சுவேதா மோகன், எஸ்.பி.பி. குறித்து கூறியதாவது: “எஸ்.பி.பி. அவர்களுடைய குரலாலும், இசையாலும் நம்முடைய வாழ்க்கை என்றைக்கும் நிறைந்திருக்கும் என நான் நம்புகிறேன். அவர் நம்முடன் தான் இருக்கிறார் என நான் தீர்க்கமாக நம்புகிறேன். எஸ்.பி.பி. சார், நீங்க எங்க இருந்தாலும் உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Happy 75th Birthday dear #SPB Sir 🎂🎶 We miss you here on Earth 🙏🙏🙏#HappyBirthdaySPBpic.twitter.com/dgLePOxHv9
— Shweta Mohan (@_ShwetaMohan_) June 4, 2021
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஓவியா, தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
மலையாளத்தில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஓவியா 2010ல் களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, சிவாவுக்கு ஜோடியாக கலகலப்பு, விமலுக்கு ஜோடியாக களவாணி 2 ஆகிய படங்களில் நடித்தார்.
இதையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார் ஓவியா. அந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டதால், அவருக்கு தற்போது பட வாய்ப்பு குறைந்து வருகிறது.

இதனால் நடிகை ஓவியா வெப் தொடர் பக்கம் திரும்பி உள்ளார். மெர்லின் எனும் வெப் தொடரில் அவர் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் நாளை யூடியூப்பில் வெளியாக உள்ளது. ஏற்கனவே சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா போன்ற முன்னணி நடிகைகள் வெப் தொடரில் நடித்துள்ள நிலையில் தற்போது ஓவியாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். அவர் நடிக்கும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
44 வயதாகும் விக்ரம் பட நடிகை ஒருவர், 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளதாகவும், மாப்பிள்ளையை தேர்வு செய்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
தமிழில் சத்யராஜ் ஜோடியாக அழகேசன், விக்ரமுடன் கண்களின் வார்த்தைகள் மற்றும் தாயே புவனேஸ்வரி, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிரேமா. பெங்களூருவை சேர்ந்த இவர், கன்னடத்தில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தெலுங்கிலும் 28-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்த பிரின்ஸ் படம் பெரிய வெற்றி பெற்றது. சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசு விருதும் பெற்றுள்ளார்.
நடிகை பிரேமா, கடந்த 2006-ம் ஆண்டு ஜீவன் அப்பாச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து செய்து பிரிந்தனர்.

நடிகை பிரேமா
நடிகை பிரேமாவுக்கு தற்போது 44 வயது ஆகிறது. இந்த நிலையில், அவர் 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளதாகவும், மாப்பிள்ளையை தேர்வு செய்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனால் நடிகை பிரேமா இதனை உறுதிப்படுத்தவில்லை.
இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.
இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.
வாழ்க்கையை நாடகம் என்பார்கள். இளையராஜா வீட்டிலோ, `நாடகம்'தான் இந்த திருவிளையாடலை செய்து முடித்து விட்டது.அதுபற்றி இளையராஜாவே தொடருகிறார்:
"அப்பா இறந்த நேரத்தில், ஆறு குழந்தைகளோடு அம்மா ரொம்பவே சிரமப்பட்டார். அப்பா தானாக உருவாக்கிய
25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் அப்போது எங்கள் குடும்பத்தின் சொத்தாக இருந்தது. அத்துடன் குடியிருந்த வீடும் சொந்தமாக இருந்தது. பண்ணைபுரத்தின் மேற்கே இருந்த குளத்தை நிலமாக மாற்றியதில், மூன்று ஏக்கர் நிலம் கைக்கு வந்தது.
பாவலர் அண்ணனுக்கு கம்ïனிஸ்டு கட்சி மீது ஈடுபாடு ஏற்பட்ட நேரம் அது. கட்சிக்காக தன் சொந்த செலவில் நாடகம் எழுதி அரங்கேற்றினார். "இரு கொலைகள்'', "பாட்டாளியின் குரல்'' என்ற இந்த இரண்டு நாடகங்களுக்கும் அண்ணனே கதை, வசனம், பாடல்கள் எழுதினார். டைரக்ஷனும் அவரே. அதோடு நாடகத்தில் காமெடி நடிகர் வேஷத்தையும் அவரே செய்தார்.
இந்த நாடகத்தில் நடிக்க உள்ளூர், பக்கத்து ஊர் என்று சிலரை தேர்ந்தெடுத்தார். இன்னும் சில நடிகர் - நடிகைகளை, மதுரையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தேர்ந்தெடுத்தார்.
நாடக ஒத்திகை எங்கள் வீட்டில்தான் நடக்கும். இந்த ஒத்திகை மட்டுமே ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்தது. அத்தனை பேருக்கும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. அம்மாவும், அக்கா கமலமும் சமைத்துப்போட்டார்கள். தினமும் ஆடு, கோழி, மீன் என்று சமையல்
நாடகம் நடக்க வேண்டிய தினத்தில்தான் சோதனை. நாடகத்தை காண்ட்ராக்ட் எடுத்திருந்த அண்ணனின் நண்பர் ஒருவர், டிக்கெட்டில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு `எஸ்கேப்' ஆகிவிட்டார். நாடக மேடை மைக்கில், அவர் பெயரைச் சொல்லி "எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்'' என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்கள்.
ஓடியவர் ஓடியவர்தான். என்றாலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அண்ணன், தனக்கே உரிய கலை ஆர்வத்தில் நாடகத்தை நடத்தி முடித்து விட்டார்.
நாடகம் முடிந்த பிறகுதான் பிரச்சினை. நாடகம் போட்ட தியேட்டருக்கு பணம், மைக்செட், மதுரையில் இருந்து வந்த சீன் செட்டிங்ஸ் மேக்கப் மேன், டிரஸ், விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், டிக்கெட், நோட்டீஸ், பிரிண்டிங் சார்ஜ், விளம்பர வண்டிக்கு வாடகை, பேண்டு செட், பின்னணி இசை, ஆர்மோனியம், தபேலா, பாடகர் - பாடகி என இத்தனை பேருக்கும் பணம் பட்டுவாடா செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், அண்ணன் தனக்கே உரிய மன உறுதியுடன் பணத்தை குறிப்பிட்ட தினத்தில் தருவதாக எல்லோரிடமும் உறுதிமொழி கொடுத்தார். அவர்கள் அண்ணனை நம்பினார்கள்.
இதில் தியேட்டர் மட்டும்தான் பண்ணைபுரம் கிராமத்துக்கு சொந்தமானது. தியேட்டர் வாடகைக்கு மட்டும் கிராமத்தினரை அழைத்து விஷயம் சொல்லி சமாளித்தார்.
ஆனால் மற்றவர்களுக்கு? அத்தோடு நாடக சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஒரு மாதத்துக்கும் மேலாக சமைத்துப் போட்ட கடன்?
அண்ணனின் தர்ம சங்கடமான நிலையை அம்மா புரிந்து கொண்டார். அண்ணன், நாடகக்காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கத்தில் அப்பா சுயமாக சம்பாதித்து வைத்திருந்த ஏலக்காய் தோட்டத்தை விற்கும் முடிவுக்கு வந்தார்.
இன்று கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அந்த ஏலக்காய் தோட்டத்தை அன்று அம்மா விற்றது வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு. மகன் பட்ட கடனுக்காக சொத்தை விற்று பிரச்சினையை சரி செய்தார் அம்மா.
அந்த ஏலக்காய் தோட்டத்துக்கு அப்பா வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா? அசோகவனம்.''
இவ்வாறு குறிப்பிட்ட இளையராஜா, இசையில் தனக்கு ஆர்வம் ஏற்பட்ட நிகழ்ச்சி பற்றி கூறியதாவது:-
இன்றைக்கிருக்கும் "கரோக்கி'' சிஸ்டத்தை (திரை இசையுடன் சேர்ந்து பாடுவது) அந்தக் காலத்திலேயே பாவலர் அண்ணன் ஆரம்பித்து விட்டார். எனக்குத்தெரிய இந்த முறையைத் தொடங்கியவர் அண்ணனாகத்தான் இருக்கக்கூடும்.
ஒரு இசைத்தட்டை ஓடவிட்டதும் மிïசிக் தொடங்கும். அதில் பாடுகிற குரல் ஒலிக்கும் நேரத்தில் மைக்கில் அண்ணன் பாடுவார். இசைத் தட்டில் இருந்து எழுகிற வால்ïமை குறைத்து வைப்பார். இதில் என்னையும் பாட வைப்பார்.
"அமுதைப் பொழியும் நிலவே'', "உலவும் தென்றல் காற்றினிலே'', "திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்'' - இப்படி பல பாடல்களை நானும் பாடியிருக்கிறேன்.
ஊர்த் திருவிழாக்களில், அவ்வப்போது ஆர்மோனியம் - மிருதங்கம் சகிதம் கச்சேரி செய்ய ஆரம்பித்தார், அண்ணன். இதில் ஆர்மோனியம் வாசிக்க, சாக்ராபுரம் என்ற ஊரில் இருந்து சங்கரதாஸ் என்பவர் வருவார். வீட்டில் ஒத்திகை நடக்கும்.
அவருடைய வாசிப்பில் நானும், பாஸ்கரும் அதிகமாக ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்களாகவே மாறிப்போனோம்.
இப்படி இசையும், படிப்புமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் எட்டாவது வகுப்பு வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் அம்மா எங்கள் எல்லோருடைய ஜாதகங்களையும் பார்க்க விரும்பி, பழனிச்சாமி, சந்தானம் என்ற 2 ஜோதிடர்களை வரவழைத்திருந்தார்.
அந்த ஜோதிடர்களின் கணிப்பு தப்பியதே இல்லை. அத்தனை கச்சிதமாக இருக்கும்.
அந்த ஜோதிடர்கள் என் ஜாதகத்தை பார்க்கும்போது என்ன சொன்னார்கள் தெரியுமா? "இந்த ஜாதகன்தான் இந்த வீட்டுக்கு பெருவிரல் போல! ஆனால் இவன் எட்டாவதற்கு மேல் படிக்க முடியாது.''
அதிர்ந்தே போனேன். ஆனால் அதுதான் நடந்தது
வாழ்க்கையை நாடகம் என்பார்கள். இளையராஜா வீட்டிலோ, `நாடகம்'தான் இந்த திருவிளையாடலை செய்து முடித்து விட்டது.அதுபற்றி இளையராஜாவே தொடருகிறார்:
"அப்பா இறந்த நேரத்தில், ஆறு குழந்தைகளோடு அம்மா ரொம்பவே சிரமப்பட்டார். அப்பா தானாக உருவாக்கிய
25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் அப்போது எங்கள் குடும்பத்தின் சொத்தாக இருந்தது. அத்துடன் குடியிருந்த வீடும் சொந்தமாக இருந்தது. பண்ணைபுரத்தின் மேற்கே இருந்த குளத்தை நிலமாக மாற்றியதில், மூன்று ஏக்கர் நிலம் கைக்கு வந்தது.
பாவலர் அண்ணனுக்கு கம்ïனிஸ்டு கட்சி மீது ஈடுபாடு ஏற்பட்ட நேரம் அது. கட்சிக்காக தன் சொந்த செலவில் நாடகம் எழுதி அரங்கேற்றினார். "இரு கொலைகள்'', "பாட்டாளியின் குரல்'' என்ற இந்த இரண்டு நாடகங்களுக்கும் அண்ணனே கதை, வசனம், பாடல்கள் எழுதினார். டைரக்ஷனும் அவரே. அதோடு நாடகத்தில் காமெடி நடிகர் வேஷத்தையும் அவரே செய்தார்.
இந்த நாடகத்தில் நடிக்க உள்ளூர், பக்கத்து ஊர் என்று சிலரை தேர்ந்தெடுத்தார். இன்னும் சில நடிகர் - நடிகைகளை, மதுரையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தேர்ந்தெடுத்தார்.
நாடக ஒத்திகை எங்கள் வீட்டில்தான் நடக்கும். இந்த ஒத்திகை மட்டுமே ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்தது. அத்தனை பேருக்கும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. அம்மாவும், அக்கா கமலமும் சமைத்துப்போட்டார்கள். தினமும் ஆடு, கோழி, மீன் என்று சமையல்
நாடகம் நடக்க வேண்டிய தினத்தில்தான் சோதனை. நாடகத்தை காண்ட்ராக்ட் எடுத்திருந்த அண்ணனின் நண்பர் ஒருவர், டிக்கெட்டில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு `எஸ்கேப்' ஆகிவிட்டார். நாடக மேடை மைக்கில், அவர் பெயரைச் சொல்லி "எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்'' என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்கள்.
ஓடியவர் ஓடியவர்தான். என்றாலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அண்ணன், தனக்கே உரிய கலை ஆர்வத்தில் நாடகத்தை நடத்தி முடித்து விட்டார்.
நாடகம் முடிந்த பிறகுதான் பிரச்சினை. நாடகம் போட்ட தியேட்டருக்கு பணம், மைக்செட், மதுரையில் இருந்து வந்த சீன் செட்டிங்ஸ் மேக்கப் மேன், டிரஸ், விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், டிக்கெட், நோட்டீஸ், பிரிண்டிங் சார்ஜ், விளம்பர வண்டிக்கு வாடகை, பேண்டு செட், பின்னணி இசை, ஆர்மோனியம், தபேலா, பாடகர் - பாடகி என இத்தனை பேருக்கும் பணம் பட்டுவாடா செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், அண்ணன் தனக்கே உரிய மன உறுதியுடன் பணத்தை குறிப்பிட்ட தினத்தில் தருவதாக எல்லோரிடமும் உறுதிமொழி கொடுத்தார். அவர்கள் அண்ணனை நம்பினார்கள்.
இதில் தியேட்டர் மட்டும்தான் பண்ணைபுரம் கிராமத்துக்கு சொந்தமானது. தியேட்டர் வாடகைக்கு மட்டும் கிராமத்தினரை அழைத்து விஷயம் சொல்லி சமாளித்தார்.
ஆனால் மற்றவர்களுக்கு? அத்தோடு நாடக சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஒரு மாதத்துக்கும் மேலாக சமைத்துப் போட்ட கடன்?
அண்ணனின் தர்ம சங்கடமான நிலையை அம்மா புரிந்து கொண்டார். அண்ணன், நாடகக்காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கத்தில் அப்பா சுயமாக சம்பாதித்து வைத்திருந்த ஏலக்காய் தோட்டத்தை விற்கும் முடிவுக்கு வந்தார்.
இன்று கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அந்த ஏலக்காய் தோட்டத்தை அன்று அம்மா விற்றது வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு. மகன் பட்ட கடனுக்காக சொத்தை விற்று பிரச்சினையை சரி செய்தார் அம்மா.
அந்த ஏலக்காய் தோட்டத்துக்கு அப்பா வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா? அசோகவனம்.''
இவ்வாறு குறிப்பிட்ட இளையராஜா, இசையில் தனக்கு ஆர்வம் ஏற்பட்ட நிகழ்ச்சி பற்றி கூறியதாவது:-
இன்றைக்கிருக்கும் "கரோக்கி'' சிஸ்டத்தை (திரை இசையுடன் சேர்ந்து பாடுவது) அந்தக் காலத்திலேயே பாவலர் அண்ணன் ஆரம்பித்து விட்டார். எனக்குத்தெரிய இந்த முறையைத் தொடங்கியவர் அண்ணனாகத்தான் இருக்கக்கூடும்.
ஒரு இசைத்தட்டை ஓடவிட்டதும் மிïசிக் தொடங்கும். அதில் பாடுகிற குரல் ஒலிக்கும் நேரத்தில் மைக்கில் அண்ணன் பாடுவார். இசைத் தட்டில் இருந்து எழுகிற வால்ïமை குறைத்து வைப்பார். இதில் என்னையும் பாட வைப்பார்.
"அமுதைப் பொழியும் நிலவே'', "உலவும் தென்றல் காற்றினிலே'', "திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்'' - இப்படி பல பாடல்களை நானும் பாடியிருக்கிறேன்.
ஊர்த் திருவிழாக்களில், அவ்வப்போது ஆர்மோனியம் - மிருதங்கம் சகிதம் கச்சேரி செய்ய ஆரம்பித்தார், அண்ணன். இதில் ஆர்மோனியம் வாசிக்க, சாக்ராபுரம் என்ற ஊரில் இருந்து சங்கரதாஸ் என்பவர் வருவார். வீட்டில் ஒத்திகை நடக்கும்.
அவருடைய வாசிப்பில் நானும், பாஸ்கரும் அதிகமாக ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்களாகவே மாறிப்போனோம்.
இப்படி இசையும், படிப்புமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் எட்டாவது வகுப்பு வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் அம்மா எங்கள் எல்லோருடைய ஜாதகங்களையும் பார்க்க விரும்பி, பழனிச்சாமி, சந்தானம் என்ற 2 ஜோதிடர்களை வரவழைத்திருந்தார்.
அந்த ஜோதிடர்களின் கணிப்பு தப்பியதே இல்லை. அத்தனை கச்சிதமாக இருக்கும்.
அந்த ஜோதிடர்கள் என் ஜாதகத்தை பார்க்கும்போது என்ன சொன்னார்கள் தெரியுமா? "இந்த ஜாதகன்தான் இந்த வீட்டுக்கு பெருவிரல் போல! ஆனால் இவன் எட்டாவதற்கு மேல் படிக்க முடியாது.''
அதிர்ந்தே போனேன். ஆனால் அதுதான் நடந்தது
கொரோனா தடுப்பு பணிகளுக்கு நடிகர்கள் இயக்குனர்கள் பலரும் நிதியுதவி வழங்கி வரும் நிலையில் நடிகர் சூரி தன்னுடைய மகன், மகள் சார்பில் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா, லிங்குசாமி ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர்.

உதயநிதியிடம் காசோலை வழங்கும் சூரி
இந்நிலையில் நடிகர் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், மேலும் தன் மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் தி பேமிலி மேன் 2 வெப் தொடர் திடீரென்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி பேமிலி மேன் 2’. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்தது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக அரசும் இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்த சர்ச்சைகள் குறித்து நடிகை சமந்தா, எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

தி பேமிலி மேன் 2 போஸ்டர்
இந்நிலையில் இந்த வெப் தொடர் திடீரென்று ஓடிடி தளத்தில் ரிலீசாகி உள்ளது. இந்த வெப் தொடரை தடை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில் திடீரென்று ரிலீசாகி இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட்டான ஐயா படத்தில் கதாநாயகி வேடத்தை தவறவிட்டதாக பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐயா. இப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். மேலும் நெப்போலியன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.


நவ்யா நாயர்
இந்த படத்தில் முதலில் கதாநாயகி வேடத்திற்கு தேர்வானவர் நவ்யா நாயர். இதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நவ்யா நாயர் கூறியிருக்கிறார். ஐயா படத்தை ஏன் நிராகரித்தார் என்று கேட்டதற்கு, மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வந்ததுதான் முக்கிய காரணம் என்று கூறி இருக்கிறார். இதேபோல் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி படத்திலும் தனக்கு வந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான படம் ஒன்றின் தமிழ் ரீமேக்கில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’பீர்பால்’. இந்தப் படம் தெலுங்கில் ‘திம்மரசு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் ஜனவரி மாதம் ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ’பீர்பால்’ படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் இந்த படத்தின் நாயகனாக சாந்தனு நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

சாந்தனு
நடிகர் சாந்தனு ஏற்கனவே ’முருங்கைக்காய் சிப்ஸ்’, ‘ராவண கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் மகன் சஞ்சயின் வீடியோ ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்து வந்தார். விரைவில் தமிழ் திரையுலகில் இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ அறிமுகம் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய்யின் 14 நொடி வீடியோ ஒன்று திடீரென சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சஞ்சய் காரில் சென்று கொண்டிருப்பது போன்றும், இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இரவில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
My videos are out 😍#SanjayVijay#ThalapathyVijaypic.twitter.com/hBn6SUgUld
— Sanjay Vijay (@IamJasonSanjay) June 2, 2021
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா தம்பதிகள் இருவரும் தங்களது 48 ஆவது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை ஜெயாவிற்கு கடந்த 1973 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுவேதா என்ற மகளும் அபிஷேக் எனும் மகனும் உள்ளனர். இதில் அபிஷேக் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.


மனைவியுடன் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப் பச்சன் தனது 48 ஆவது திருமண நாளை கொண்டாடும் விதமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்தின் இசை பணியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி இருக்கிறார்.
சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கவுள்ள இந்த படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற திரைப்படத்தின் ரீமேக்காகும்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல் பதிவுக்கான வேலைகளை தொடங்கி விட்டதாகவும், 2 பாடல்களை முடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் கிருஷ்ணா இணைந்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டான நிலையில் அதே போன்று இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் பிரபலமான நடிகை, பட வாய்ப்பு இல்லாததால் மீண்டும் குத்துச் சண்டை பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரித்திகா சிங், தேசிய குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிச்சுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை விட்டு முழு நேர நடிகை ஆனார்.

ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு பதிப்பான குரு படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை.

தற்போது புதிய பட வாய்ப்புகளும், கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகளும் இல்லாததால் மீண்டும் குத்துச் சண்டைக்கே திரும்ப ரித்திகா சிங் முடிவு செய்து இருக்கிறார். தனி பயிற்சியாளரை நியமித்து வீட்டிலேயே குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.






