என் மலர்
இது புதுசு
ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 என் லைன் மாடல் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஐ20 என் லைன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஐ20 என் லைன் மாடல் துவக்க விலை ரூ. 9.84 லட்சம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.75 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஐ20 என் லைன் மாடல் - என்6 ஐ.எம்.டி., என்8 ஐ.எம்.டி. மற்றும் என்8 டி.சி.டி. என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலில் 1 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 120 பி.எஸ். திறன் மற்றும் 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஐ.எம்.டி. யூனிட் வழங்கப்படுகிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிபெண்டர் மாடல் 90 மற்றும் 110 வெர்ஷன்களில் கிடைக்கிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சக்திவாய்ந்த, அதிவேகமான டிபெண்டர் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. புதிய டிபெண்டர் மாடல் விலை ரூ. 1.82 கோடி ஆகும்.
வி8 என்ஜின் கொண்ட டிபெண்டர் மாடல் தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் கார்பதியன் எடிஷன் வேரியண்ட்களில் கிடைக்கிறது. முன்னதாக இதே மாடல் பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய டிபெண்டர் மாடல் மூன்று மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 5 லிட்டர், வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 525 ஹெச்.பி. திறன், 625 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ளது.
இந்த எஸ்.யு.வி. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும்.
டுகாட்டி நிறுவனத்தின் புதிய சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் சூப்பர்ஸ்போர்ட் 950 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய மோட்டார்சைக்கிள் வெளியீட்டை டுகாட்டி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தெரிவித்து இருக்கிறது.
ஏற்கனவே யூரோ 5 / பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

இந்த மாடலில் 937சிசி, எல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 108.6 பி.ஹெச்.பி. திறன், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் யூனிட் வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு திட்டம் பற்றி அந்நிறுவனத்தின் இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வித திட்டமும் இல்லை என உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிர்வாக இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார்.
ட்விட்டரில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜாக் ஹாலிஸ், 'இந்தியாவுக்கு எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வருவோம். ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எப்போது வெளியாகும்,' என கூற முடியாது என தெரிவித்தார்.

இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் குறைந்தபட்சம் ஒரு எலெக்ட்ரிக் மாடலையாவது அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஸ்கோடாவின் இந்த அறிவிப்பு சந்தையில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐ20 என் லைன் மாடல் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐ20 என் லைன் ஹேட்ச்பேக் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருந்தது. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் என் பிராண்டு மாடல் ஆகும்.
புதிய ஐ20 என் லைன் மாடலில் 1.6 லிட்டர் டி-ஜிடிஐ டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் தற்போது விற்பனை செய்யப்படும் ஐ20 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கார் வெளிப்புறத்தில் மேம்பட்ட பம்ப்பர்கள், பிளாக்டு-அவுட் செய்யப்பட்ட கேஸ்கேடிங் கிரில், என் லைன் பேட்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் புதிய அலாய் வீல் டிசைன், டூயல் எக்சாஸ்ட்கள், பிரத்யேக 3 ஸ்போக் ஸ்டீரிங் டிசைன், டிஸ்க் பிரேக், வெஹிகில் ஸ்டேபிலிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம், இ.பி.எஸ். மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பன்ச் எனும் பெயரில் புது மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக ஹெச்.பி.எக்ஸ். அல்லது ஹான்பில் எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வந்த நிலையில், புது மைக்ரோ எஸ்.யு.வி. பன்ச் எனும் பெயரில் விற்பனைக்கு வருகிறது.
புதிய டாடா பன்ச் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொண்டு ஆல்பா-ஆர்க் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் நெக்சான் சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது. டாடா பன்ச் மாடல் இந்திய சந்தையில் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வருகிறது.

டாடா பன்ச் மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா பன்ச் மாடல் மாருதி சுசுகி இக்னிஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ இந்திய சந்தையில் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் புதிய பொலிரோ நியோ மாடலை ஜூலை மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பொலிரோ நியோ மாடல் என்4, என்8 மற்றும் என் 10 என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பொலிரோ நியோ என் 10 ஒ வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய பொலிரோ நியோ என் 10 ஒ மாடலில் மல்டி-டெரைன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் விலை ரூ. 10.69 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்தியாவில் மஹிந்திரா பொலிரோ நியோ மாடல்- ராக்கி பெய்க், மெஜஸ்டிக் சில்வர், ஹைவே ரெட், பியல் வைட் மற்றும் நபோலி பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

மேனுவல் லாக் தவிர பொலிரோ நியோ என் 10 ஒ மாடலின் அம்சங்கள் ஏற்கனவே அறிமுகமான என்10 வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. பொலிரோ நியோ என் 10 ஒ மாடலில் 1.5 லிட்டர் எம்ஹாக் 100 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. திறன், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதில் உள்ள இ.எஸ்.எஸ். மற்றும் இகோ மோட் சிறப்பான மைலேஜ் வழங்கும் என தெரிகிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு இந்த மாடல்களை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்த இருக்கிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் 2022 ஆண்டு புத்தம் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கம் முதலே எஸ்.யு.வி. மாடல்களில் அதிக கவனம் செலுத்தி வரும் வோக்ஸ்வேகன் அடுத்த ஆண்டு விர்டுஸ் பெயரில் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
புதிய விர்டுஸ் மாடலின் உற்பத்தி 2022 ஆண்டு துவக்கத்திலும், விற்பனை இரண்டாவது காலாண்டிலும் துவங்க இருக்கிறது. வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலின் பரிசோதனை ஏற்கனவே துவங்கிவிட்டது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களின்படி புதிய செடான் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் வென்டோ மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது.

புதிய செடான் மாடல் எம்.கியூ.பி. ஏ.ஒ. ஐ.என். பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த மாடலில் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய வோக்ஸ்வேகன் செடான் மாடல் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் ஸ்கோடா ஸ்லேவியா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிபி200எக்ஸ் மோட்டார்சைக்கிள் ஹார்னெட் 2.0 மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சாகச மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹோண்டா சிபி200எக்ஸ் மாடல் விலை ரூ. 1.44 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஹார்னெட் 2.0 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.
புதிய மாடலின் என்ஜின் மற்றும் பிளாட்பார்ம் ஹார்னெட் 2.0 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மற்றும் ஹீரோ எக்ஸ்-பல்ஸ் 200 மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளில் 184சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 17 பி.ஹெச்.பி. திறன், 16 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புதிய ஹோண்டா சிபி200எக்ஸ் மாடல்- பியல் நைட்ஸ்டார் பிளாக், மேட் செலின் சில்வர் மெட்டாலிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடல் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடல் விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய டிகோர் இ.வி. சிப்டிரான் மாடல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
வெளியீட்டுக்கு முன் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட டாடா விற்பனை மையங்களில் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும்.

சிப்டிரான் தொழில்நுட்பம் பயன்படுத்தும் இரண்டாவது கார் மாடல் டிகோர் இ.வி. ஆகும். இதில் உள்ள சிப்டிரான் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய மாடலில் 55 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார், 26kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது.
இவை 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. காரை முழுமையாக சார்ஜ் செய்ய 8.5 மணி நேரம் ஆகும். பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தினால் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 1 மணி நேரம் ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறிய எஸ்.யு.வி. மாடல் விரைவில் அந்த பெயரில் வெளியாக இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. ஹான்பில் என அழைக்கப்படுகிறது. இந்திய சந்தையில் டாடா நிறுவனத்தின் மிகச் சிறிய எஸ்.யு.வி. மாடலாக ஹான்பில் உருவாகி இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஹான்பில் மைக்ரோ எஸ்.யு.வி. இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
“இந்த ஆண்டில் ஏற்கனவே நான்கு மாதங்கள் கழிந்துவிட்டன. தற்போது சந்தையில் டாடா மோட்டார்ஸ் பங்கு 10.3 சதவீதமாக இருக்கிறது. மேலும், ஹான்பில் உள்பட இரண்டு பெரிய வெளியீடுகளுக்கு திட்டமிட்டுள்ளோம்.” என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார்.

மஹிந்திரா கே.யு.வி. 100 மற்றும் மாருதி சுசுகி இக்னிஸ் மாடல்கள் அடங்கிய மிட்-லெவல் பி பிரிவில் ஹான்பில் மாடல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹான்பில் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடல் ஹெச்.பி.எக்ஸ். கான்செப்ட் எனும் பெயரில் காட்சிப்படுத்தப்பட்டது.
டாடா ஹான்பில் அந்நிறுவனத்தின் ஆல்பா பிளாட்பார்மில் உருவாகும் இரண்டாவது கார் ஆகும். முன்னதாக அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் மாடல் ஆல்பா பிளாட்பார்மின் முதல் மாடலாக இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது.
சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1,09,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இது ஒற்றை வேரியண்ட் மற்றும் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
சிம்பிள் ஒன் மாடலில் கூர்மையான தோற்றம், முக்கோண வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் மற்றும் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. டெயில் லேம்ப், ஒற்றை இருக்கை, அலாய் வீல்கள், பின்புறம் கிராப் ரெயில்கள் உள்ளன.

சிம்பிள் ஒன் மாடலில் 4.8 kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 4.5kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 201 கிலோமீட்டர் வரை செல்லும். தரமான சாலைகளில் இந்த ஸ்கூட்டர் 236 கிலோமீட்டர் வரை செல்லும்.
இந்த ஸ்கூட்டருடன் சிம்பிள் லூப் பெயரில் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. சிம்பிள் லூப் கொண்டு 60 நொடிகள் சார்ஜ் செய்தால் 2.5 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். வரும் மாதங்களில் நாடு முழுக்க சுமார் 300-க்கும் அதிக இடங்களில் பாஸ்ட் சார்ஜர்களை நிறுவ சிம்பிள் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. வீட்டில் சார்ஜ் செய்து கொள்ளவும் சிம்பிள் லூப் வழங்கப்படுகிறது.






